Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:50:47 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5960
#KOTW5960
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 11, 2011
ஐ.ஐ.எம். நிர்வாகத்திடம் அதிமுக, திமுக வேட்பாளர்கள் ஆதரவு கோரினர்! நகர்நலக் கோரிக்கைகள் முன்வைப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3930 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 13 அன்று நடைபெற உள்ளது. இறுதிகட்ட பிரசாரத்தில் அனைத்து வேட்பாளர்களும் தற்சமயம் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 09.04.2011 அன்று அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.மனோகரன் சார்பில் அவரது சகோதரர் பி.ஆர்.ஹரிஹரன் குழுவினர் காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தினரை ஐ.ஐ.எம். வளாகத்தில் சந்தித்து ஆதரவு கோரினர். இந்நிகழ்ச்சிக்கு ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர் முன்னிலை வகித்தார்.

அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ வரவேற்றுப் பேச, நகர்நலக் கோரிக்கைகளை பொறியாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் முன்வைத்து, கோரிக்கை மனுவை அதிமுக வேட்பாளர் பி.ஆர்.மனோகரனின் சகோதரர் ஹரிஹரனிடம் சமர்ப்பித்தார்.





பின்னர் உரையாற்றிய ஹரிஹரன், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மிகுந்த கவனத்துடன் கேட்டுக்கொண்டதாகவும், தன் சகோதரரும், அதிமுக வேட்பாளருமான பி.ஆர்.மனோகரனிடம் கோரிக்கை மனுவை அளித்து, அவை நிறைவேற்றப்பட ஆவன செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், முருகேசன், அருண்குமார், வக்கீல் அஷோக், கண்ணன், தீன், யூசுஃப், ம.ம.க. நகர நிர்வாகி ஜாகிர் ஹுஸைன் உட்பட பலர் உடனிருந்தனர். பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.



மறுநாள் 10.04.2011 அன்று தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஐ.ஐ.எம். நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தினரை ஐ.ஐ.எம். வளாகத்தில் சந்தித்து ஆதரவு கோரினார்.

ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையிலும், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ வரவேற்றுப் பேச, நகர்நலக் கோரிக்கைகளை பொறியாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் முன்வைத்து, கோரிக்கை மனுவை திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தார்.



பின்னர் உரையாற்றிய அனிதா, முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை மேற்கோள் காட்டி விளக்கமளித்துப் பேசினார்.



நகரில், தொழிற்சாலைக் கழிவுகளால் புற்றுநோய் பரவல் அதிகமிருப்பதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இதுவரை இவ்வளவு அழுத்தமாக தன்னிடம் யாரும் தெரிவித்ததில்லை என்று தெரிவித்த அவர், தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்தால், தாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து இக்கோரிக்கை மீது உரிய நடவடிக்கை நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இரண்டாவது பைப்லைன் குடிநீர் திட்டம் கிட்டத்தட்ட கிடைத்துவிட்டதாகவும், தேர்தல் முடிவுற்றதும் அத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்த அவர், நகரின் மின்சாரத் தேவையை திருப்திகரமாகப் பூர்த்தி செய்திடுவதற்காக துணை மின் நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் கிடைத்துவிட்டதாகவும், தகுந்த இடம் கிடைக்கப்பெறாததால் அத்திட்டம் தாமதமடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

துணை மின் நிலையம் அமைப்பதற்காக தேவைப்படும் இடத்தில் புறம்போக்கு நிலங்கள் இருப்பதாகவும், அதனைப் பயன்படுத்த ஆவன செய்யுமாறும் அப்போது அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் கட்டப்பட்டு வரும் 169 சுனாமி குடியிருப்பு வீடுகள் திட்டம் குறித்து பேசிய அவர், நியாயமான அனைத்து ஒத்துழைப்புகளையும் தான் தொடர்ந்து அளித்து வருவதாகவும், அது குறித்த விபரங்களை நகர பெரியவர்களிடம் கேட்டறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தி.மு.க. நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோர் உடனிருந்தனர். பொதுமக்கள் திரளாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



ஐ.ஐ.எம். சார்பில் இரு கட்சி வேட்பாளர்களிடமும் முன்வைக்கப்பட்ட நகர்நலக் கோரிக்கைகள் பின்வருமாறு:-

ஐயா,

உங்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டுமாக! வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களின் ஆதரவை நாடி வந்துள்ள உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

முக்கியம் எங்களுடைய ஜமாஅத் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து எங்கள் ஊரின் நலன் கருதி மட்டும் அவசியம் நிறைவேற்றபட வேண்டிய கீழ்க்காணும் அத்தியாவசிய கோரிக்கைகளை முன்னிறுத்தியே நாங்கள் வாக்களிப்பது என்று உறுதியாக தீர்மானித்துள்ளோம்.

அதனடிப்படையில் கீழ்க்காணும் கோரிக்கைகளை நிறைவேற்று முகமாக உறுதியான வாக்குறுதியளித்து, அதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாகவும் வைத்து, அவைகளை செவ்வனே நிறைவேற்றும் கட்சிக்குதான் எங்கள் ஆதரவு என்பது எங்களின் நிலைபாடு என்பதால் தாங்களும் இக்கோரிக்கைகளின் அவசியத்தைப் புரிந்து கொண்டு அவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

1. தொழிற்சாலை மீது நடவடிக்கை:
எங்கள் ஊரில், பெரும் உயிர்க்கொல்லி நோயான புற்றநோய் (கேன்சர்) என்னும் கொடிய நோய் பரவி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இக்கொடிய புற்றுநோயினால் மரணமடைந்தோர் பலர். இந்நோய்க்கான முக்கியக் காரணங்களுள் ஒன்று அருகிலுள்ள டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் கழிவுகள் என்பது நாடறிந்த உண்மை. எனவே தங்கள் கட்சி ஆட்சிக்கு வரும் வேளையில் மேற்படி தொழிற்சாலையின் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் ஊரில் தொடரும் உயிர்ச்சேதங்களை தடுக்க ஆவன செய்யவேண்டும் என்பதை முதல் கோரிக்கையாக வைக்கிறோம்.

2. சுனாமி குடியிருப்பு தொகுப்பு வீடுகள் கட்டுமானம்:
எங்கள் ஊரில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சுமார் ஆறு கோடி ரூபாய் செலவில் 169 சுனாமி வீடுகளை கட்டியிருகின்றனர். எமதூரைச் சார்ந்த எத்தனையோ ஏழைகள் குடிசை வீடுகளில் வசிக்கும் நிலையில் பிற ஊர்வாசிகளை குடியமர்த்த வீடுகட்டுவது என்பது எங்கள் ஊரின் ஒட்டமொத்த மக்களும் ஜிரணிக்க இயலாத விஷயம். எனவே தாங்கள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மேற்படி குடியிருப்புகளை உடனே தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கைகள் செய்யவேண்டும் என்று மிகவும் வலியுறுத்துகிறோம்.

3. இரண்டாவது பைப்லைன் குடிநீர் திட்டம்:
எங்கள் ஊரின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகவும், ஊருக்கு சுத்தமான குடிநீரை வழங்கவும் கடந்த 30 வருடங்களாக இடண்டாவது பைப் லைனுக்காக போராடி வருகிறோம். வெறும் கோரிக்கை என்ற நிலையிலேயே இருக்கும் இத்திட்டத்தை நிறைவேற்றி எங்கள் ஊரின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்பதையும் உறுதியாக கேட்டுக்கொள்கிறோம்.

4. துணை மின் நிலையம் அமைத்தல்:
எங்கள் ஊரின் மின்சார தேவையை அறிந்து துணை மின் நிலையம் அமைப்பது அவசியத்திலும் மிக அவசியமாக உள்ளது. எனவே உபரியாக உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் மேற்படி துணைமின்நிலையம் அமைத்து எங்கள் ஊரின் மின்சார தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என்றும் கோருகிறோம்.

தாங்கள் மேற்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் வருகின்ற சட்டமன்ற தோ;தலில் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.


மேற்கண்டவாறு அக்கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏப்ரல் 08ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளியின் குத்பா பிரசங்கத்தில், வரும் தேர்தலில் எவ்வாறு வேட்பாளர்களைத் தேர்வு செய்யவேண்டும் என்பது குறித்து பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ உரை நிகழ்த்தினார்.

உரையின் ஒலிப்பதிவைக் கேட்க இங்கு அழுத்தவும்

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியிலும், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதிலும் பொதுமக்களிடம் ஆதரவு கோரினார்.

தகவல்:
எம்.என்.அஹ்மத் ஸாஹிப்,
தைக்கா தெரு, காயல்பட்டினம்.

படங்கள்:
எஸ்.அப்துல் வாஹித்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கட்சிகளே வேண்டாம் - MAKKAL POTHUM
posted by MUTHU ISMAIL (kayalpatnam ) [11 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3883

D C W visiyathai MAKKAL than sari pana mudiyumea thavira ARASIYAL VATHI yarum sari pani thara mattargal - MAKKAL THAN PORADA VANDUM - ARASIYAL VATHI UNNUM SEIYA MATTAN (D C W MATER MAKKAL NINAITHAL SARI SEIYALAM)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சிறந்த அணுகுமுறை!
posted by கவிமகன் எம்.எஸ்.ஏ.காதர். (துபாய்) [11 April 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3886

சுய விருப்பு,வெறுப்பு எதுவுமின்றி நகர்நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு செயல்படும் IIM உடைய அணுகுமுறை எல்லாப் பேரவைகளுக்கும் ஒரு முன்னுதாரணமாகும். ஒட்டு மொத்த காயலர்களின் அதிமுக்கிய பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இரண்டு வேட்பாளர்களிடமும் வைக்கப்பட்டிருக்கின்றது. பாரபட்சமின்றி இருவரையும் வரவேற்று சரியான முறையில் வைக்கப்பட்டுள்ள நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புவோமாக! எல்லாம் அறிந்தவன் இறைவன் ஒருவனே!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Welldone on put-forth of our essential demands
posted by Mohamed Abdul Kader (Al Khobar) (Al Khobar) [11 April 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3887

Well done on put forth the fundamental demand to the election candidates.

Everything is useless after the life. Fundamental & essential commodity to save the life from cancer by putting more control on DCW factory.

Our People understand well to avoid establishing any further towers in our native & to liquidate the established towers.

The highest rent for tower means putting the pin inside banana to eat. This should be avoided.

Research revealed that bird will not fly near to the towers. We have human six sense but we are keeping the towers with us.

Make more awareness ro our native to take healthy food.

Our municipalty to keep our native as Green Kayal by removing the dirty at once.

Allah saves our people from the cancer diseases. Allah gives us Shifa for those affected in cancer. Ameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Best Bargaining Mode by IIM !!
posted by Arabi Haja (Hong Kong ) [11 April 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 3891

Congrates to IIM leadership to better use the occasion of electioneering by drawing the attention of the prime political party of TN to our long cherished or pending issues and seek their co-operation in resolving it expeditiously if they elected to legislative assembly.

Instead of taking side (supportive of one party) of rival political combine, IIM has set a role model of any social conscience organization who intends to save the community from civil disorders and health hazards.

Let us wish and pray the winning candidate of the constituency will uphold their solemn promise and help resolve the issues of public concerns put forth by IIM for the entire people of the town.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. May Allah make these 4 points easy
posted by Nowshad Ibrahim (Chennai) [11 April 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 3897

Let us believe these 4 points mentioned/requested to both parties will get success either by anyone of them. Good approach IIM. Masha Allah!

Regards

Nowshad Ibrahim


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நம்மில் ஒற்றுமை
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [11 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3899

ஐ.ஐ.எம். நிர்வாகத்திக்ற்கு பாராட்டுக்கள். மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது இதுவும் கூடத்தான். அனைத்து கோரிக்கைகளும் மிக மிக சரியான கோரிக்கைகள், சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

சரி நல்லது.இருவரிடமும் கோரிக்கை மனுவை கொடுத்தாகி விட்டது. இருவருமே சரி என்று தலையை ஆட்டி சென்றுள்ளார்கள். BJP வேட்பாளர் வந்தாலும் இது மாதிரி மனுவை வாங்கி சரி என்று தான் சொல்லுவார்.

தாங்கள் மக்களுக்கு சொல்லவரும் செய்தி என்ன? யாருக்கு ஓட்டு போட?

.நம்மில் பலர் யாருக்கும் ஓட்டு இல்லை என, 49-O ஐ பயன் படுத்துங்கள், உடனே இது தேர்தல் ஆணையத்தையும், அரசாங்கத்தையும் நம் ஊர் மேல் பார்வையை திருப்பும், உடனே நம் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி விடுவார்கள் என்று கூறுபவர்களும் உண்டு.

பாப்பாரபட்டி, கீறிப்பட்டி போன்ற ஊர்களில் தேர்தலே நடத்த முடியாமல், கொலை,கலவரம் என்று நாட்டையே.. இல்லை.. இல்லை உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்கள். அங்கு தற்போது நிலைமை என்ன? பாலாறு, தேனாறு ஓடுகிறதா? இன்னும் அவர்கள் மோசமான நிலைமையில் தான் உள்ளார்கள்.

ஆகவே, நான் கருத்து கூறும் அளவு வளரவும் இல்லை, கருத்து கூறும் நேரமும் இது இல்லை. நான் என் பல பதிவுகளில் கூறுவது ஒன்று மட்டும் தான், "நம்மில் ஒற்றுமை","நம்மில் ஒற்றுமை","நம்மில் ஒற்றுமை" தான்.இந்த ஒன்னு மட்டும் நம்மிடம் இருந்தால் குறைந்தது 43 தொகுதியில் நாம் தான் MLA .

இந்த தேர்தல் பரப்புரையில் (சென்ற தேர்தல் வரை பிரச்சாரம்), நம் மக்கள், நம் மக்களையே திட்டி தீர்ப்பது, ஒருவர் அடுத்தவரை தோற்கடிப்பதற்கு காட்டும் முனைப்பு எல்லாம் மனதை புன்படுத்துவதாக தான் உள்ளது.

இன்ஷா அல்லாஹ் நடப்பவைகள் நன்மையாக அமையட்டும்.

சாளை S.I.ஜியாவுதீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. IIM - A role model in dealing with political parties
posted by Ismail (Dammam) [11 April 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3900

Wonderful move by IIM..

IIM has set a good model in dealing with political parties especially during election time. The request 'Votes against Solving burning issues of the town' gives us atleast some lead to push our future MLA accountable.

Let us hope our kayal organisations would bring the Best from our next MLA (by their consistent and untired efforts in resolving the issues), insha Allah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Election
posted by Meera Sahib (Kayalpatnam) [12 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3909

Assalamu alaikkum

Weldone IIM! You have done the right thing. Without any party allegience you have placed peoples aspirations before both the candidates.

Let Aiykkiya Peravai take a lesson from this instead of going behind the politicians and get involved in unnecessary contraversy and condemnations.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. election
posted by mohamed faiz (jeddah) [12 April 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3917

assalamu alaikum...,

well done iim , i am very proud about our IIM.. MUYARCHI UDAIYAAR IGALCHI ADAIYAR... Insha allah we will close that damm DCW. AAMEEN AAMEEN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. உங்கள் நிலை என்ன?
posted by salih (Hongkong) [12 April 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 3922

யாருக்கு ஓட்டு போடுவது என்பதை தெரிவிக்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணகட்டுதே!!
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [12 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3925

சகோ. ஷாலிஹ் அவர்களே, காலம் கடந்து விட்டது, பரப்புரை முடிந்து விட்டது, இனி யாரும் யாருக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ எதுவும் சொல்லக்கூடாது. அப்புறம் ஆப்பு தான்.

ரிசல்ட் வர இன்னும் ஒரு மாதமாமே.. ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணகட்டுதே!!

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஏப்.12 அன்று நல்ல மழை!  (13/4/2011) [Views - 2422; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved