Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:36:31 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6136
#KOTW6136
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 10, 2011
இட்லி, தோசை பாக்கெட் மாவுகளின் தரம்! தினமணி நாளிதழ் தலையங்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 7509 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடைகளில் விற்கப்படும் இட்லி, தோசை பாக்கெட் மாவுகளின் தரம் குறித்த சந்தேகங்கள் இன்றைய தினமணி நாளிதழில் தலையங்கமாக பின்வருமாறு:-

தமிழகம் முழுவதிலும் சுகாதாரத் துறை அதிகாரிகள், இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், ஆய்வு முடிவுகள் பத்திரிகைகள் சொல்லும் அளவுக்கு மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்கெட்டுகளில் விற்கப்படும் இட்லி, தோசை மாவுகள் தரம் குறைந்து காணப்படுவது குறித்தும், இதில் உணவு தயாரித்து உண்ணும் குடும்ப அங்கத்தினர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர் என்றும் சில மாதங்களுக்கு முன் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது. இந்த மாவுகளைத் தன்னார்வ அமைப்புகள் சோதனை செய்து பார்த்ததில் இதில், கடுமையான நோய்களை ஏற்படுத்தும் "இ-கோலி' என்ற பாக்டீரியா இருப்பதாக அந்த அமைப்பு ஆய்வு முடிவை வெளியிட்டிருந்தது. இப்போது தமிழகப் பொதுச் சுகாதாரத் துறை நடத்திய ஆய்வுகளின் முடிவு, பத்திரிகைகளில் கூறப்பட்டதைப் போன்று அத்தனை மோசமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆய்வு, முறைப்படி செய்யப்பட்டதாக இல்லை என்பதால் இதனை ஏற்றுக்கொள்வதில் நமக்குத் தயக்கம் ஏற்படுகிறது. ஏனென்றால், தமிழகம் முழுவதிலும் வெறும் 340 அரிசி மாவு பாக்கெட்டுகள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையின் அளவை வைத்து சென்னை பெருநகரில்கூட முழுமையான ஆய்வுசெய்ய முடியாது. ஏனென்றால், அந்த அளவுக்கு இட்லி மாவு, தோசை மாவு பாக்கெட்டுகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இவர்கள் மாதிரி (சாம்பிள்) எடுத்த எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமான எண்ணிக்கையில் பாக்கெட் இட்லி, தோசை மாவு தயாரிப்போர் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.

இந்த நிலைமையில், இவர்கள் வெறும் 340 பாக்கெட்டுகளை மட்டுமே சோதித்திருப்பது சரியான ஆய்வு முடிவாக அமையாது.

வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர, வேறு உணவு உண்ணாத ஒரு சமூகம் வாழ்ந்து மறைந்தது. அடுத்ததாக, ஓட்டல் நாகரிகம் வந்தபோது, மெல்லமெல்ல ஒரு நாளின் ஒரு வேளை உணவை ஓட்டல்களில் உண்கிற வழக்கம் தலையெடுத்தது. இப்போது ஒரு குடும்பத்தின் தலைவன் தலைவி இருவருமே உழைக்க வேண்டியது அவசியமாகிப் போனதாலும், டி.வி. பார்ப்பதைத் தவிர வேறு வேலையே இல்லை என்றாகிவிட்டதாலும், அரைத்து விற்கப்படும் இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளை வாங்கிவைத்து, பசிக்கிறபோது இட்லி, தோசை ஊற்றிச் சாப்பிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொழிலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் ரேஷன் அரிசியை நம்பியிருக்கிறார்கள். மேலும், இந்த அரிசியை ஊறவைக்கும்போது, அந்த நீரின் தூய்மை குறித்து அதிக கவனம் செலுத்துவதும் இல்லை. இதனால்தான் "இ-கோலி' போன்ற கிருமிகளுக்குப் புகலிடமாகிவிடுகிறது. மக்காச்சோளம், வேகவைத்த வேர்க்கடலை ஆகியவற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட, குளோரின் சேர்க்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தப்படுவதில்லை.

இட்லி, தோசை மாவு புளிப்பேறுவது என்பது அதில் உள்ள நீரின் தூய்மையைப் பொறுத்தது. சிலரது கைகளில் சுரக்கும் வியர்வை, தூய்மையின்மை ஆகியவற்றால், அந்தக் கைகள் பட்டால் மாவு விரைவில் புளிப்பேறி கெட்டுப்போகும்.

ஆனால், இப்போதோ கடைகளில் விற்கப்படும் இந்த பாக்கெட் மாவு விரைவில் புளித்துப்போகக்கூடாது என்பதற்காக ரசாயனங்களைச் சேர்க்கும் வணிகத் தந்திரங்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர். இது நிச்சயமாக உடல் நலனுக்குத் தீங்கானது. இந்த மாவு என்றைக்கு அரைக்கப்பட்டது என்பதற்கான தேதி இல்லாமல் விற்கப்படுவதே பெரும்பாலும் நிகழ்கிறது. எல்லோரும் இன்றைக்குத்தான் அரைத்த மாவு என்றே விற்கிறார்கள்.

வீட்டுத் தொழிலாகச் செய்வோர் இதைச் செய்துகொண்டிருக்க, பெரும் நிறுவனங்கள் இதைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன், உலர் மாவாகப் பாக்கெட்டுகளில் விற்கின்றன. இவற்றில் நீங்கள் தூய்மையான தண்ணீரைக் கலந்து, பயன்படுத்தி, ரவா இட்லி, தோசை தயாரித்துக் கொள்ள முடியும். ஆனால் அத்தகைய தொழில்நுட்பத்தில் இந்த மாவு தயாரிக்க அதிக முதலீடு தேவை.

ஆனால், இன்றைய உயிரி-தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி) வளர்ந்து இருக்கும் நிலையில், இந்த மாவுகளை எத்தகைய தண்ணீரில் எவ்வாறு தூய்மையாகத் தயாரிக்க முடியும், இந்த மாவைப் பாக்கெட்டில் அடைக்கும் முன்பாக இதன் தூய்மை, புளிப்புத்தன்மையை எவ்வாறு தாங்களே சோதிக்க முடியும் என்பதையெல்லாம் எளிமைப்படுத்த வழியுள்ளது. இந்த அறிவியல் நுட்பங்களைச் சொல்லித் தரவும், இந்தப் பயிற்சியில் சான்று பெற்றவர்கள் மட்டுமே இட்லி, மாவு தோசை மாவு தயாரிக்க முடியும் என்கிற நிபந்தனையை உருவாக்கவும் அரசால் முடியும்.

மேலும், இந்த மாவு எப்போது தயாரிக்கப்பட்டது என்கிற விவரத்தையும் முத்திரையிட வகை செய்ய வேண்டும். மேலும், இத்தகைய மாவுகளைப் பரிசோதிக்கும் ஆய்வுக்கூடங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட வேண்டும். எல்லா மாதிரிகளையும் சென்னைக்குக் கொண்டுசென்று ஆய்வு செய்தல் நடைமுறைக்கு ஒத்துவராது.

வெறும் 30 ரூபாய்க்கு மாவு வாங்கினால்போதும், குடும்பத்தினர் அனைவரும் தோசை அல்லது இட்லி சாப்பிட்டுவிட முடியும் என்பதாலும், அரிசி உளுந்து ஊற வைக்கும் வேலை, அதை அரைக்கும் வேலை மிச்சம் என்பதாலும் நகர்ப்புறங்களில் இத்தகைய மாவு பாக்கெட் விற்பனை அதிகமாக இருக்கிறது. உணவுப் பொருள் சட்டத்தின் எந்த விதிமுறைகளையும் இந்த மாவு தயாரிப்பவர்கள் பின்பற்றுவதில்லை.

"கஞ்சி குடிப்பதற்கு இல்லார் - அதன் காரணம் இவை எனும் அறிவும் இல்லார்' என்பார் பாரதி. கஞ்சி குடிக்க வசதி இருந்தும்கூட, சோம்பலால், இத்தகைய மாவுகளை வாங்கிச் சாப்பிட்டு, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதன் காரணம் இதுவெனும் அறிவும் இல்லாமல் இருக்கிறோம் என்பதுதான் வேதனைக்குரியது.

சுகாதாரத்தைப் பொருத்த வரை, மக்கள் தவறு செய்தாலும் அதைத் தடுத்து சுகாதாரக் கேடுகள் அரங்கேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அதனால் தான் சுகாதாரத் துறையை நாம் மக்கள் நல்வாழ்வுத்துறை என்று அழைக்கிறோம். பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் இந்தப் பிரச்னையில் அரசு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தாமல் போனால், தொற்றுநோய் பரவிப் பேரிழப்புகளை நாம் சந்திக்க நேரிடக்கூடும்.


இவ்வாறு தினமணி நாளிதழின் இன்றைய தலையங்க கட்டுரையில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இலவச ஆலோசனை
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [10 May 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4363

என்னத்தை எழுதுறது..

வீட்டில் இருக்கும் மாவு அரைக்கும் இயந்திரம் எல்லாம் பரணில் தூங்குகிறது. (இவ்வளவு வெயிட் ஆனதை எப்படி தான் பரணில் வைத்தார்களோ).

கையால் அரைத்தால் கஷ்டம் என்றுதான் இந்த மாதிரி மிச்சி,கிரைண்டர் என்று வாங்கிக்கொடுத்தோம். நோ யூஸ். (இதில் வேறு இலவசமாக கொடுக்கப் போகிறார்களாம்..)

அரைத்த தேங்காய், அரைத்த இஞ்சிப்பூண்டு, அரைத்த தோசை மாவு எல்லாம் கிடைத்ததும் கொஞ்சம் நஞ்சம் செய்துக் கொண்டு இருந்த உடல் உழைப்பிலும் ஆப்பு.

வேலைக்காரி இடம் கொஞ்சம் இஞ்சிப்பூண்டு அரைத்துக் கேட்டாள் உடனே அவள் "எங்க வீட்டுக்கே கடையில் அரைத்த இஞ்சிபூண்டு வாங்கி வைத்திருக்கிறேன்,வேண்டும் என்றால் இதை வைத்துக்கோங்க.." என்று நமக்கு இலவச ஆலோசனை.

அப்புறம் உடல் நலம் இல்லை என்று டாக்டர் இடம் சென்று அவரின் அட்வைஸ் படி அதிகாலை நடைப்பயிற்சி.

(அதிகாலை இருட்டில் பலர் நாயை மிதித்து,அது அவர்களை விரட்டி, நடைப்பயிற்சி ஓட்டப்பயிற்சி ஆகி, கால் பிசகி அத்துடன் நடைபயிற்சிக்கு குட் பை)

ஆகவே, கொஞ்சம் வீட்டில் வேலை செய்து, ஆரோக்யமான உணவு தயாரித்து, உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்கு வேலை கொடுத்து, நிம்மதியான வாழ்வு வாழலாமே.

சாளை S.I.ஜியாவுதீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எல்லாம் ஒரு அனுபவம் தான்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [11 May 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4376

சரியாச் சொன்னீங்க சாளை-ஜியாவுத்தீன், அத்தனையும் உண்மையே! வேறு கருத்து சொல்வதற்கு வேலையே இல்லாமல் போயிடுச்சு!

குசும்பு:
அதெப்படி இவ்வளவு கன கச்சிதம்மா சொல்லுறீங்க? எல்லாம் ஒரு அனுபவம்தான்!என்ன? இருட்டுலெ நாயை மிதிச்ச கதையை நெனச்சு நெனச்சு சிரிச்சேன் போங்க! மிதிச்சவங்களெப் பார்த்து அது மிரள அதெப் பார்த்து இவங்க அலற... கொளரல் சத்தம் கோரஸா கேட்டிருக்கும்! தேங்க்ஸ்! பிரதர் ரெம்ப நாள் கழிச்சு மனம் விட்டு சிரிச்சேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved