Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:02:55 AM
ஞாயிறு | 28 ஜுலை 2024 | துல்ஹஜ் 1823, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:39மறைவு12:20
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0119:2719:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6216
#KOTW6216
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 16, 2011
ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3445 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா இன்று (மே 16) மதியம் 12.15 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது. தமிழக முதல்வராக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். சென்னை பல்கலைக்கழக விழா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மதியம் 12.10 மணிக்கு விழா அரங்குக்கு ஜெயலலிதா வந்தார். அவரை தலைமை செயலாளர் மாலதி பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த ஜெயலலிதா பிறகு விழா மேடைக்கு சென்று அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து புதிய அமைச்சராக பதவி ஏற்க இருந்தவர்கள் மேடைக்கு சென்று தங்களுக்கு உரிய இருக்கைகளில் அமர்ந்தனர்.

12.40 மணிக்கு கவர்னர் பர்னாலா வந்தார். அவரை ஜெயலலிதா மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். கவர்னர் பர்னாலாவுக்கு புதிய அமைச்சர்களாக பொறுப்பு ஏற்க இருந்த 33 பேரையும் ஜெயலலிதா அறிமுகம் செய்தார். இதையடுத்து பதவி ஏற்பு விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

அதன் பிறகு முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ள வருமாறு ஜெயலலிதாவை தலைமை செயலாளர் மாலதி அழைத்தார். இதை தொடர்ந்து ஜெயலலிதா, முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் செய்து வைத்தார்.



அதன் பிறகு 12.52 மணிக்கு அமைச்சர்கள் பதவி ஏற்றனர். முதலில் ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். பின்னர் அமைச்சர்கள் ஒவ்வொருவராக வந்து பதவி ஏற்றுச் சென்றனர்.

ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் ஆர்.விசுவநாதன், கே.பி.முனுசாமி, சி.சண்முகவேலு, ஆர். வைத்திலிங்கம், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. சொ.கருப்பசாமி, பி.பழனியப்பன், சி.வி.சண்முகம், செல்லூர் கே.ராஜு, கே.டி.பச்சமால், எடிப்பாடி கே.பழனிச்சாமி, எஸ்.பி.சண்முகநாதன், கே.வி.ராமலிங்கம், எஸ்.பி. வேலுமணி. கே.டி.எம்.சின்னைய்யா, எம்.சி.சம்பத், பி.தங்கமணி, ஜி.செந்தமிழன், எஸ்.கோகுலஇந்தி, செல்வி ராமஜெயம், பி.வி.ரமணா, ஆர்.பி.உதயகுமார், என்.சுப்பிரமணியன், வி.செந்தில் பாலாஜி, என்.மரியம் பிச்சை. கே.ஏ.ஜெயபால், இ.சுப்பையா, புத்திசந்திரன், எஸ்.டி.செல்லபாண்டியன், வி.எஸ்.விஜய், என்.ஆர்.சிவபதி ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

பதவி ஏற்று முடித்ததும் அவர்கள் கவர்னர் பர்னாலாவுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் வணக்கம் தெரிவித்தனர். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு கவர்னர் பர்னாலாவுடன், புதிய அமைச்சர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



பதவியேற்பு விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அ.தி.மு.க. தோழமை கட்சிகளின் தலைவர்களான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்டு தேசியச் செயலாளர் ஏ.பி. பரதன், தா.பாண்டியன், நல்லக்கண்ணு, ஜி.ராம கிருஷ்ணன், எழுத்தாளர் சோ ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

சுமார் 12.45 மணிக்கு தொடங்கிய பதவியேற்பு நிகழ்ச்சி 1.45 மணிக்கு முடிவடைந்தது.

தகவல்:
www.chennaionline.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கைமாறியது
posted by MUTHU ISMAIL (kayalpatnam ) [16 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4485

கலைஞரின் குடும்பத்திடமிருந்து சசிகலாவின் குடும்பத்திற்கு கைமாறியது - தமிழ்நாடு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நரேந்திர மோடி
posted by Thaika Sahib MSS (Riyadh, KSA) [16 May 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4486

நரேந்திர மோடி வருகை - ஆரம்பமே சரியில்லையே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஒரு முஸ்லிமும் இல்லை
posted by Mohudoom (Kuwait) [16 May 2011]
IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 4489

முப்பத்தி மூணு அமைச்சர்களில் ஒரு முஸ்லிம் கூட இல்லை, அதோடு மோடியும் விழாவில் பங்கேற்பு, அம்மணியின் முஸ்லிம் விரோத போக்கு ஆரம்பம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Muslim minister
posted by Husain Noorudeen (Abu Dhabi) [17 May 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4492

சகோதரர் மொஹுதூம் அவர்களின் கவலையை போக்கும் விதமாக செல்வி தன் அமைச்சரவையில் மரியம் பிச்சை என்ற ஒரு பெயர் தாங்கி முஸ்லிமுக்கு பதவி வழங்கி உள்ளார்.பெயரில் கூட அவர் முஸ்லிம் என்று அறிய முடியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நாய் வாலை நிமிர்த்த முடியாது !!!.
posted by zubair (riyadh) [17 May 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4496

நரேதிர மோடியின் தமிழக வருகை..... உடன் பிறவா தங்கையின் பதவி ஏற்ப்பை கண்டு கழிக்க மட்டும் அல்ல. உல் நோக்கம் கொண்டதாக இருக்கும். தமிழக சட்ட பேரவை மீண்டும் பழைய இடம் பெயர்வதும் ஜெ வின் பழைய குணம் மாறாததை பிரதி பலிக்கிறது. நரேதிர மோடியின் வருகையின் தாக்கம்..... போக,போக பார்ப்போம் தமிழ் நாட்டின் முஸ்லிம்களின் நிலையை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. முஸ்லிம் அமைச்சர்
posted by mak.jainulabdeen (kayalpatnam) [17 May 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 4502

அஸ்ஸலாமு அலைக்கும், கடந்த ஆட்சியில் இருந்த மந்திரிசபையில் இரு அமைச்சர்களும் பெயர்தாங்கிகளாகதான் இருந்தார்கள். இதுவரை இருந்த தமிழக அரசில் யார்தான் உண்மையான முஸ்லிம் மந்திரியாக இருந்திரிக்கிறார்கள். அதனால் இவரை மட்டும் பெயர்தாங்கி என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. யாராக இருந்தாலும் அந்த வார்த்தையை நாம் உபயோகப்படுத்துவது உண்மையான முஸ்லிம்களுக்கு அழகில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. யார் அந்த கறுப்பாடு?
posted by kavimagan kader (dubai) [17 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4504

அம்மா அவர்களின் பதவி ஏற்பு விழாவிற்கு, நரேந்த்ரமோடி வருகை குறித்த நண்பர்களின் ஆதங்கம் மற்றும் கவலையில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலைக்கு காரணமான மோடி, வெகு விரைவில் சட்டப்படி தண்டிக்கப்படுவான் என்று நம்புகிறேன்.

ஆனால் ஒரு விஷயத்தை நண்பர்களிடம் வினவ விரும்புகிறேன். நரேந்திர மோடிக்கு எதிரான தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது, அந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து மோடியைக் காப்பாற்றியது யார்? ஜெயாவா? கருணாவா?

விழாவிற்கு அழைத்து விருந்தளிப்பது முஸ்லிம் விரோதப்போக்கா? அல்லது பாராளுமன்றத்தில் துணைநிற்பதா?

இனத்துரோகிகளை அடையாளம் கண்டுகொண்ட சமுதாயம், முதன்முறையாக அண்ணா.தி.மு.க.விற்கு பெரும்பகுதி வாக்குகளை வாரி வழங்கி இருக்கிறது என்ற ஊடக செய்திகள், இறையருளால் இனி இந்த சமூகத்திற்கு நன்மையையே தரும் என்று நம்புவோமாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மோடிக்கு அங்கீகாரம் - மறுக்கமுடியாது
posted by abu (saudiarabia) [18 May 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4509

விழாவிற்கு அழைத்து விருந்தளிப்பது முஸ்லிம் விரோதப்போக்கா? என்றால் மோடி போன்றவர்கள் திமிராக அழைத்தது சமுதாய துரோகம் என்பது பாலருக்கும் தெரியும். இதை சமாளிப்பதருக்கு உப்பு சப்பா சும்மா கண்டிக்கிறோம் என்று சும்மா சொன்னால் எப்படி? குஜராத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? ADMK பிஜேபி கூட்டணியிலா இருந்தாது. அல்லது மோடி சிறந்த மனிதரா? விழாவிற்கு அழைத்து விருந்தளிப்பது முஸ்லிம் விரோதப்போக்கா? என்று கேள்வி எழுப்புவதே தவறு. இதுவே மோடியை ஜெயா அங்கீகாரம் செய்வதுதானே? அவர் செய்தாரே இவர் செய்தாரே என்பதை விட பொதுவாக சிந்திக்கவும்.

Moderator:Dear Br.Abu, pls provide your full name.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved