Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:06:42 PM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6446
#KOTW6446
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 12, 2011
MYO நூலக அலுவலக இடத்தில் சர்ச்சை! 10ஆம் தேதியன்று நண்பகலில் பரபரப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3194 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை - தீவுத்தெரு சந்திப்பின் கீழ்முனையில் அமைந்துள்ளது முஹம்மதிய்யா இளைஞர் பேரவை - Muhammadiyya Youths’ Organisation (MYO). 1975ஆம் ஆண்டு துவக்கம் கண்ட இப்பேரவையில் ஆண்டுதோறும் ரபீஉல் அவ்வல் மாதத்தில் 12 நாட்கள் மீலாத் விழா நடத்தப்பட்டு, அந்நாட்களில் இரவில் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்டு வந்தது. குறிப்பிடப்பட்ட நேரத்தில் ஒரு நிமிடம் கூட முந்தாது பிந்தாது நிகழ்ச்சிகளைத் துவக்குவது இந்நிர்வாகத்தினரின் தனிச்சிறப்பாக இருந்தது.

காலஞ்சென்ற மு.க.செய்யித் இப்றாஹீம் ஆலிம் முஃப்தீ, சாவன்னா ஷாஹுல் ஹமீத் ஆலிம், எஸ்.எம்.ஐதுரூஸ் ஆலிம், கலீல் அஹ்மத் கீரனூரி ஆகிய மார்க்க அறிஞர்களும், இலங்கை - கண்டியைச் சார்ந்த ஸலாஹுத்தீன் பாரீ எனும் கண்டி ஆலிம் உள்ளிட்டோரும் இங்கு நடைபெறும் மீலாது விழாவில் சன்மார்க்க சொற்பொழிவாற்றிச் சென்றுள்ளனர்.

இங்கு தினமும் செயல்பட்டு வந்த வாசகசாலை, நகரில் நூலக செயல்பாடுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றுணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. அன்றாட நாளிதழ்கள், அரிய நூற்களைக் கொண்ட இவ்வாசகசாலையில் விளையாட்டுப் பருவத்திலுள்ள சிறுவர்களுக்கு அனுமதி கிடையாது.

நேர்த்தியாக நடைபெற்று வந்த இந்நிறுவனம், கடந்த பல ஆண்டுகளாக செயலிழந்துள்ளது. பராமரிப்பின்றி இருந்த இக்கட்டிட வளாகத்தில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து அதன் உட்பகுதி புதர் போன்று காட்சியளிக்கிறது.



இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று நண்பகல் 01.45 மணிக்கு இக்கட்டிடத்தின் முன் பெரும் மக்கள் திரள் காணப்பட்டது.



அருகில் சென்று பார்த்தபோது, அந்நூலகத்தின் அலுவலகம் அமைந்திருந்த இடத்தின் வெளிச்சுவற்றுக்கு உட்புறத்தில் ஹாலோ ப்ளாக் கற்களைக் கொண்டு அறை கட்டப்ப்பட்டிருந்ததைக் கண்ணுற்ற அப்பகுதியைச் சார்ந்த ஹாஜி பிரபு சுல்தான் ஜமாலுத்தீன், ஹாஜி எஸ்.ஏ.ஃபாரூக், மவ்லவீ கே.எஸ்.கிழுறு முஹம்மத், ஹாஜி கே.எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், சுலைமானிய்யா செய்கு சுலைமான் உள்ளிட்டோர் கட்டிடம் எழுப்பியது குறித்து கடும் ஆட்சேபனை செய்தனர்.





இதுகுறித்து கட்டிடத்தை எழுப்பியதாகக் கருதப்பட்ட தீவுத்தெருவைச் சார்ந்த முஹம்மத் அலீ என்பவர், MYO அலுவலகம் அமைந்துள்ள இவ்விடம் தீவுத்தெருவைச் சார்ந்த தன் சகோதரியான ராபியத்துல் அதவிய்யாவுக்குச் சொந்தமானது என்றும், தன் தாயார் இருந்த காலத்தில் இந்நூலகம் துவக்கப்பட்டபோது, அலுவலகத்திற்கு அவ்விடத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டதாகவும், தாயாரும் அதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், அலுவலகத்திற்காக சர்ச்சைக்குரிய அவ்விடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி மட்டுமே தன் தாயாரால் கொடுக்கப்பட்டதாகவும், உரிமையை தாயாரே வைத்திருந்ததாகவும், தம் தரப்புக்கு அவ்விடத்தில் உரிமையுள்ளது என்பதை நிரூபிக்க 1953ஆம் ஆண்டின் பத்திரமும், 1972ஆம் ஆண்டின் பத்திரமும் இருப்பதாகவும், தற்போது தன் சகோதரிக்கு அவ்விடம் தேவைப்படுவதால் அங்கு அறை எழுப்பியதாகவும் தெரிவித்தார்.


சர்ச்சைக்குரிய இடம் வட்டமிடப்பட்டுள்ளது.

பல நாட்கள் ஹாஜி பிரபு சுல்தான் இடம் முறையிட்டதாகவும், எவ்வித பேச்சுவார்த்தைக்கும் தம்மை அழைக்காமல் காலம் தாழ்த்தியதாலேயே கட்டிடத்தை எழுப்பியதாகவும், தம் தரப்புக்குப் பாத்தியப்பட்ட இடத்தில் கட்டிடம் எழுப்புவதில் எந்தத் தவறுமில்லை என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

எவ்வித முன்னறிவிப்புமின்றி பொது நிறுவனம் நடைபெற்ற இடத்தில் திடீரென கட்டிடம் எழுப்புவது தவறான செயல் என்றும், அதுவும் சாலையோர வெளிச்சுவற்றை அப்படியே வைத்துவிட்டு, உட்பகுதியில் ரகசியமாக கட்டிடம் எழுப்பத் தேவையில்லை என்றும், இந்நிறுவனம் தொடர்பான பெரியவர்கள் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்ட பின்னரே எதுவும் செய்திருக்க வேண்டும் என்றும் ஆட்சேபித்தவர்கள் தெரிவித்தனர்.

இறுதியில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு வருவதாக சம்மதிக்க, அவ்விடத்தில் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அல்லாஹ் துணை.
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [12 June 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 5194

நீயாயம் உள்ளவர் பக்கம் அல்லாஹ் துணை நிற்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பேசி தீர்த்துக்கோங்க..
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [12 June 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5196

ஒரு பிரச்சனையும் இல்லை. உடனே அலஹாபாத் உயர்நீதி மன்றத்தில் ஒரு கேஸ் பைல் பண்ணுங்க. குறைந்தது 15 வருடம் கழித்து, பாபர் மசூதி தீர்ப்பு மாதிரி ஆளுக்கு ஒரு துண்டு இடம் கிடைக்கும்.

பேசி தீர்த்துக்கோங்க.. மாத்தி பண்ணிவிடாதீர்கள்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Sad
posted by Ahamed mustafa (Dubai) [12 June 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5198

MYO, used to be a very good & useful reading room in our earlier days. Too nostalgic. Sad to note that it became yet another fighting spot. Wish the authorities put this great place in to use again as a reading Library.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஆண்டவா எங்களுக்கு தண்டனை கொடுத்து விடாதே!மன்னித்து ஹிதாயத் அருள்வாயாக.
posted by T.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 043692808526) [13 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5203

அஸ்ஸலாமு அலைக்கும்!

நம்ம்ரூர் அதுதான் கயல்படனம். இந்த ஊர் சரித்திரத்திலே நாம் தெரிந்தவரையில் சமூக சேவையில் எ 1 person என்றால் மர்ஹூம் L.K லெப்பை தம்பி மாமா வைகூறலாம. அவர்கள் சொன்ன வைர மொழி "இந்த ஊரில் தற்போது இஸ்லாம் போன்ற ஒன்றுதான் இருக்கிறது. இஸ்லாம் என்றால் ஏன்னா என்றும் யார்தான் அதன்படி நடக்கிற? என்று சொல்லுங்கோ" என்று கூறுமளவுக்கு அன்று 1953-1970 ல் இருந்தது என்றால் இன்று என்ன சொல்வார்களோ?
அவர்கள் வாயில் சீனி என்ன சீனிமாவே போடலாம்.

ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:
49:9 وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا ۖ فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَىٰ فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّىٰ تَفِيءَ إِلَىٰ أَمْرِ اللَّهِ ۚ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا ۖ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ

49:9. முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். ஊரில் ஜும்ஆ. மற்றும் பள்ளி விவகாரம், தனியார் வியாபாரம், கொடுக்கல் வாங்கல்களில் என்ன நடக்குது?

யோசியுங்கள் முஸ்லிமாக வாழ்வோம்.

வஸ்ஸலாம் tmr/kpm

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. திருசெந்தூர் தொழுகை பள்ளிக்கு சொந்தமான இடத்தில்
posted by MUTHU ISMAIL (KAYALPATNAM) [13 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5205

அந்த சர்ச்சைக்குரிய MYO நூலக அலுவலக இடம் யாருக்கு சொந்தம் வல்ல அல்லாஹ் அறிவான்...

Moderator:Rest of the comment edited since not connected to current news!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved