Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:25:22 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6532
#KOTW6532
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுன் 20, 2011
சமச்சீர் புத்தகத்தில் கலைஞர் "டிவி' சின்னம் பக்கத்தை கிழிக்கும் பணியில் ஆசிரியர்கள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4296 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடங்களில், கலைஞர் "டிவி' சின்னம் போல் இடம்பெற்ற சூரியன் படம், சென்னை சங்கமம் போன்ற வாசகங்களை நீக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்த பகுதிகள் நீக்கப்பட்ட பின், மாணவ, மாணவியருக்கு புத்தகம் வழங்கப்பட உள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், புதிதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு, "சமச்சீர் பாடத்திட்டம் தரமானதாக இல்லை. திருத்தம் செய்த பின் அத்திட்டம் அமலுக்கு வரும்' என, கூறி நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட், இடைக்கால தடை விதித்தது.

தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. "பாட நூல்களின் தரம் ஆராய தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைத்து, ஜூலை 6ம் தேதி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குனரகம் அனுப்பியுள்ள உத்தரவில், "நடப்பு கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகத்தின் பின்பக்க அட்டையில் உள்ள செம்மொழி சின்னத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்த பின்னும், ஆறாம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி புத்தகங்களில் குறிப்பிட்ட பகுதிகள் நீக்கம் செய்து, மாணவர்களுக்கு வினியோகம் செய்யுமாறு, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, திருச்சிக்கு வந்த சமச்சீர் கல்வி புத்தகங்களில் முதல் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில், 69, 70, 79, 80, ஆங்கிலம் பாடப்புத்தகத்தில், 53, 54 ஆகிய பக்கங்கள் கிழிக்கப்பட்டன. ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், 56ஆம் பக்கம் அப்துல் ரகுமான் எழுதிய கவிதை பக்கத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. "தைத்தமிழ் புத்தாண்டே வருகை' என்ற வாசகம் இடம்பெற்றுள்ள, 129, 130ஆம் பக்கம் கிழிக்கப்பட்டது. ஆங்கில புத்தகத்தில், 2ஆம் பக்கம் சென்னை சங்கமம் பற்றி இடம் பெற்ற வரிகளை, "மார்க்கர்' பேனாவால் அழிக்கப்பட்டது. அறிவியல் பாடத்தில், 81ஆம் பக்கத்தில் இடம் பெற்ற, "சட்ட காந்தம்' படம் ஸ்டிக்கர் மூலம் ஒட்டப்பட்டது. அதேபோல், ஆங்கில வழி அறிவியல் புத்தகத்திலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

தமிழ் வழி சமூக அறிவியல் புத்தகத்தில், "ஏழை எளியோருக்கான மருத்துவக் காப்பீடு திட்டம்' குறிப்பிட்ட, 11ஆம் பக்கம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. 12ஆம் பக்கத்தில், "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்' வரியை நிரந்தர, "மார்க்கர்' பேனா வைத்து அழிக்கப்பட்டது. 17ஆம் பக்கத்தில், "அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மார்க்கர் பேனா மூலம் அழிக்கப்பட்டது.

24ஆம் பக்கத்தில், "நல்ல திட்டங்களை அறிவித்து வருபவர் தமிழக முதல்வர் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது' என்ற வரியும், 35ஆம் பக்கத்தில், கலைஞர் "டிவி' சின்னம் போல் உள்ள சூரியனும், 82ஆம் பக்கத்தில், "தமிழக முதல்வர் கலைஞரின் கருத்தை ஏற்று கடந்த 2004ஆம் ஆண்டு மத்திய அரசு, தமிழ் ஒரு செம்மொழி என அறிவித்துள்ளது. இதிலிருந்து தமிழின் இணையற்ற சிறப்பு விளங்கும்' என்பவை மார்க்கர் பேனாவால் ஆசிரியர்கள் அழித்தனர். இப்பணி, புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் காலை முதல் நடந்தது. 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். பள்ளிக் கல்வித் துறை உத்தரவில் குறிப்பிட்டது போல் அகற்றப்பட்ட சமச்சீர் கல்வி புத்தகம் இன்று, ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:
தினமலர் (20.06.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1.
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார். ) [20 June 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5430

"இவரு ரெம்போ படிச்சு கிழிச்சிட்டாறு" என்று நக்கல் அடிப்பது நம் வழமை. "படிக்காமல் கிழிப்பது" இதுதானோ - இந்த செய்தி நமக்கு உணர்த்துவது.

இன்னும் நல்ல பாருங்க... வேறு எந்த பக்கமாவது கிழிக்க வேண்டியது உள்ளதா என்று..

அப்படியே கிழித்துக்கொண்டு போனால் இரண்டு அட்டை மட்டும் தான் மிச்சம் வரும். பசங்களுக்கு கொண்டாட்டம்தான், அட்டை டு அட்டை ஒரு நாளிலே படித்து முடித்து விடுவார்கள். அனைவர்களும் 100/100 தான்.

எங்க காலத்தில் அம்மா ஆட்சி செய்யவில்லையே என்ற மனக்குறை உள்ளது. எதுக்கு என்று புரியவில்லையா... 100/100 வாங்கத்தான்.

வாழ்க தமிழகம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அம்மா
posted by Seyed Ibrahim S.R. (Dubai) [20 June 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5434

Jiaudeen, when you were studying M.C.A. 1st Year in JMC, AMMA was the C.M. Hope you remember.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Equalization
posted by A.M. Syed Ahmed - Riyadh (Riyadh) [20 June 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5436

இறைவன் காப்பற்றினான் இல்லை என்றால் நாமிதா போட்டோவை கூட கலைஞர் போட்டு இருப்பார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பூனை கண்னடைதால் உலகம் இருண்டது என்ற நினைப்பு..!
posted by zubair (riyadh) [20 June 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5437

தமிழக முதல்வர் இந்த திட்டத்தை அதன் போக்குக்கு விட்டிருந்தால் நல்ல பெயரும், பாட புத்தகம்கள் இந்த அளவுக்கு மகிமையும் பெற்றிருக்காது. ஆனால் இப்போது மாணவர்கள் கையில் புத்தகம் கிடைக்கும் முன்பே.... சமச்சீர் கல்வி புத்தகம் மாணவர் மட்டும் அல்லாமல் நாம் எல்லோரும் படிக்கும் அளவுக்கு ஒன்றாம் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை என்ன உள்ளது என்று அறிகிறோம். கலைஞரின் புகழ் திலங்க வைக்கும் அம்மாக்கு ஓராயிரம் நன்றிகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. படிச்சு கிழிக்க தான்
posted by Lebbai (Riyadh) [20 June 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5439

மாணவர்கள் பள்ளி கூடம் போறதே படிச்சு கிழிக்க தான்!!!! இதையே அரசு செய்துவிட்டால் இனி மாணவர்களுக்கு அந்த வேலையும் இல்லை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஆசிரியர்களே..... இது நியாயம் தானா.?
posted by s.s.md meerasahib (riyadh) [20 June 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5442

ஆசிரியர்களே..... இது நியாயம் தானா.? நாங்கள் பாடபுத்தகம்களை கிழித்தால்.... வெயிலில் சுடுமணலில் முட்டு போடவைத்த நீங்கள் இன்று என்ன செய்கிறீர்கள்? அம்மா சொல்லை தட்டாதே என்பதாலா? அது இந்த அம்மா அல்ல. உங்களை பெற்றெடுத்த அம்மா. ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாடம் சொல்லும் அளவுக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பாவம் ஆசிரியர்கள்
posted by M.S.K. SULTHAN (Deira, duabi) [20 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5445

ஒவ்வொரு புக்கிலும் பக்கத்தை கிழித்து கொண்டே போனால் எப்பொழுது முடியும் அதற்கு பதிலாக கரையானை விட்டால் அதன் வேலையை ஈசியாக முடித்து விடும். இது படித்த முதல்வருக்கு தெரியவில்லையே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. சரா மட்டார்கள் ,வடிகாட்டா முட்டாள்கள்
posted by T.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 04369280548) [20 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5446

ரண்டு பேரையும் அல்லாஹ் நிக்க வச்சு கேட்பான்.ஏனென்றால் அரசாங்க சொத்தில் கட்சி கொள்கை பற்றியது, இநோன்று அரசாங்க சொத்தை அனாவஷ்ய படுத்தியது' சிலவேளை ரண்டு பேருக்கும 2006 லும் 2011 லும் வோட்டு போட்டு துக்ளக் ஆட்சியை கொண்டு வந்த நமக்கும்தான் . துக்ளக் ஆடச்சி பற்றி யாராவது கட்டுரை எழுதுங்களேன். . வானாம வானாம் அதுதான் இப்போ நடக்குதே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. காலத்தின் கடமை!
posted by kavimagan kader (dubai) [20 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5449

ஒட்டுமொத்த தமிழகத்தையும் சூறையாடிய ஒருவர், தனது சொந்தக்கதை, சோகக்கதையோடு விட்டுவிடாமல், 214 கோடி கலைஞர் டி.வி.க்காக லஞ்சம் வாங்கிய குர்ற்றச்சாட்டில் திஹார் சிறையில் கம்பி எண்ணும் அருமைப்புதல்வி, மக்கள் பணத்தில் கொட்டமடித்தத சங்கமம் நிகழ்ச்சி வரை, வேண்டாத குப்பைகளை எல்லாம் பாடப்புத்தகத்தில் சேர்த்து வைத்திருப்பதை எண்ணி ஆதங்கப்படாத நண்பர்கள், எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் பாஸ் என்ற, உபயோகமான ஆனால் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டத்தையும் அம்மா கொண்டு வந்ததாக அடிக்கடி ஆதங்கப்படும் ஜியா காக்கா, இன்னும் இந்த விஷயத்தை விவாதிக்கும் நண்பர்களுக்கு!

இரண்டுமுறை அம்மா அவர்கள் ஆண்டபோதும் தமிழகத்தின் கல்வித்தரம் இரண்டு இரண்டு நிலைகள் உயர்ந்தது என்ற புள்ளிவிவரத்தை தயவுசெய்து மறந்து விடாதீர்கள்.

இரண்டு லட்சம் கோடிகள் கடன் சுமையை நம்மீது சுமத்திச் சென்றிருக்கும் ஒரு மோசமான அரசை ஐந்தாண்டுகாலம் பொறுத்துக்கொண்ட நீங்கள், ஒரு புதிய அரசு என்னதான் செய்கிறது? அதன் முடிவு நன்மையிலா? தீமையிலா? என்பதை எல்லாம் ஒரு மூன்று மாத காலமெனும் பொறுத்திருந்து விமர்சனம் செய்தால் அது நியாயம்.

முள்மரத்தை வெட்டும்போது, நல்ல சில மூலிகை செடிகளும் பலியாகிவிடுவது இயற்கை! அந்த வகையில் அம்மாவின் நடவடிக்கைகள் காலத்தின் கடமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....
posted by zubair (riyadh) [20 June 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5456

தற்போதைய முதல்வர் நமக்கொண்டும் புதிய முகம் இல்லை. கீழே நண்பர் ஒருவர் குறிப்பிட்டு இருப்பது ஏதும் அவர் ஆட்சி காலத்தில் நடக்காததும் இல்லை. ஆகையால் முள் மரத்தை வெட்டும்போது நல்ல சில மூலிகை மரம்கள் பழியாவதுண்டு என்று குறிப்பிட்டிருந்தார்! பல குற்றவாளிகள் தப்பிச்சாலும் ஒரு நிரபராதி தண்டிக்க படகூடாது என்பதுதான் சட்டத்தின் முதல் படி.... இப்படி இருக்க சீர் திருத்தம் என்ற பெயரில் அம்மா செய்யும் அனைத்தும் மக்கள் வரிப்பணம் நாசம், மாணவர்களின் கல்வி தாமதம், மேலும் பல, பலவற்றால் மக்கள் பாதிக்கப் (தண்டிக்க) படுகின்றனர்.

அம்மாவால் வெட்டப்படும் செடிகள் அனைத்தும் வெறும் முள்செடி அல்ல. ரோஜா செடிகள், கண்டகத்தரி செடிகள், கத்தால செடிகள் இப்படி பலவகையில் சொல்லலாம். எல்லாமே முள் உள்ளவை, நல் குணம் நிறைந்தவை அதற்காக வேண்டி மேலே குறிப்பிட்ட செடிகளை சிதைப்பதா புத்திசாலித்தனம்? நம் புதிய முதல்வரின் ஒரிஜினல் கலரை பதவி பிரமாண்டத்தின்போது பார்க்கதானே செய்தோம்? அதன் பிறகும் ஒரு முஸ்லிமுக்கு நல்லது இல்லை. அதற்காக வேண்டி கலைஞசரை புகழ்த்த சொல்லவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Uniform Education System..
posted by Cnash (Makkah ) [20 June 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5457

இதை எல்லாம் பாக்கும் பொது இந்த தரம் கெட்ட சமசீர் கல்வி திட்டத்தை தள்ளி வச்சதில் தப்பே இல்லை.... உதயசூரியன் படம், கலைஞர் டிவி, தன் பெருமையை காட்ட, தேர்தலுக்காக, தன் மகள் புகழ்பாட நடத்தப்பட்ட கேவலமான செம்மொழி மாநாடு பற்றி பாடம், அவர் பல காப்பியங்களில் இருந்து காப்பி அடிச்சி எழுதிய செம்மொழி கவிதை....

அதை விட கேவலம்... 6 ஆம் வகுப்பு படத்தில் கம்பரில் கவி வாரிசு.... திஹார் நாயகி கனிமொழியில் கவிதை வேறு.... இதை கருமத்தை எல்லாம் நம் பிள்ளைகள் படிக்க வேணுமா..... கவிதை ஆசிரியர் குறிப்பு கேட்டால் பிள்ளைகள்.... திஹார் ஜெயிலில் ஜாமீன் கிடைக்காமல் இருக்கிறார் என்ற எழுத வென்றும்..

உங்கள் அரசியலை கலக்காமல் சமச்சீர் பாடத்தை கொண்டு வந்து இருந்தால் அது இன்று நடைமுறை ஆகி இருக்கும். கல்வி முலம் தனது கவிதை என்று வளரும் தமிழரை கொல்வது...... இந்த அறிவு முன்னமே இருந்தா உங்கள் குடும்ப புராணம் எல்லாத்தையும் சேர்க்காமல் அச்சுக்கு கொடுத்து இருக்கலாமே...

பல கோடி ரூபாய்க்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வீணாகிவிட்டனவே என்று வேதனைப்படுவதை விட, பிஞ்சு மனங்களில் விஷ விதைகள் தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சி அடைவதுதான் சரி...200 கோடி 2G Scam லே வாங்குன கமிஷன் லே இருந்து திருப்பி கொடுத்த.... வீணாக அச்சடிச்ச கணக்கு tally ஆகும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. சமசீர் கல்வி
posted by M.A.SEYED ALI (ABUDHABI) [20 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5460

இதில் யாரையும் குற்றம் சொல்லி பயனில்லை. நம்மைத்தான் நாம் நொந்து கொள்ள வேண்டும். நாம் ஒழுங்காக இருந்தால் நம்மை ஆள வருபவர்களும் ஒழுங்காக இருப்பார்கள். கருணாநிதியோ ஜெயலலிதாவோ இந்த இருவருக்குமே நாம் நம் சுய தேவைகளுக்காக கூழுக்கு பாடிகளாகவே இதுவரை காலம் தள்ளிவிட்டோம். இந்தக்கூளுக்குப்படிகளிடம் ஏனப்பா இவரை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்டால் என் காரியம் இவரால்தான் நிறைவேறியது என்று சொல்வார். மொத்த மாநிலத்தின் காரியங்களிலெல்லாம் எனக்கு அக்கறை இல்லை என்றுதான் அதன் பொருள். பெரும்பாலான தமிழர்களுக்கும் இதே மனோநிலைதான். எங்கே நாம் உருப்படப்போகிறோம். ஜெயலலிதாவிடம் பிளஸ் பாயிண்ட் உறுதி, நிர்வாகத் திறன், தன்னம்பிக்கை. மைனஸ் பாயிண்ட், அகங்காரம், சசிகலா கூட்டம். பொறுத்திருந்து பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. welcome to cnash
posted by kavimagan kader (dubai) [20 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5463

பாய்! என்ன பாய் இடைக்காலத்துல உங்களை ஆளைக்காணோம். ரொம்ப மிஸ் பன்னிட்டேன். ஆட்டம் இனிமே களைகட்டும்னு நினைக்கிறேன். வெல்கம் டு தி கேம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. அறிவை வளப்படுத்த தரத்தைக் குறைப்பதா?
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [20 June 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5466

கிராமப்புற மாணவர்களின் அறிவை வளப்படுத்துகிறோம் என்ற அடிப்படையில், செய்யப்பட்ட இந்த மாற்றத்திற்கு மெட்ரிக் உட்பட பிற கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வித்திட்டத்தில் உள்ள குறைகளை விளக்கி கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. பத்திரிகைகளிலும் தொடர் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. ஆனால் அப்போதைய அரசோ இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், தான் எடுத்த முடிவே சரியானது என்ற கருத்தில் சமச்சீர் கல்வியை அமல் செய்தது. அதுவும் படிப்படியாக கொண்டு வராமல் ஒரே ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல் செய்வதாக அதிரடியாக அறிவித்தது.

மாணவர் அறிவை விசாலமாக்க நினைக்கும் பெற்றோரும் சமச்சீர் கல்வித் திட்டத்தை வரவேற்கவில்லை. அறிவுதாகம் கொண்ட மாணவர்கள் என்ன பாவம் செய்தனர்? அவர்களின் ஆர்வத்தை அரசு ஏன் குறைக்க வேண்டும்? கல்வித் தரத்தை உயர்த்த வேண்டுமெனில் பாடம் கற்கும், கற்பிக்கும் சூழ்நிலையை, பாடத்திட்டத்தை, மனனம் செய்யும் முறையில் இருந்து செயல்முறை சார்ந்ததாகவோ, தொழில் அடிப்படையிலானதாகவோ மாற்றலாம். அதைவிடுத்து ஒரு திட்டத்தின் தரத்தை குறைப்பது தேவையற்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. தவறு யார் செய்தாலும் சுற்றிக்காட்டுவது நம் கடமை
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [20 June 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5469

அன்பு தம்பி கவிமகனுக்கு,

என்னுடைய ஆதங்கம் எல்லாம் நம்முடைய கல்விக்கொள்கை இப்படி இருக்கின்றதே என்று தானே தவிர, வேறு யார் மீதும் கோபம் இல்லை.( 8 வரை ஆல் பாஸ் என்பது மத்தியில் உள்ள கொள்கை என்பது யாம் அறிந்ததே...ஆனால் என் மகனுக்கு தெரியாதே...அவனுக்கு தெரிந்தது படித்தாலும்,படிக்காவிட்டாலும் பாஸ் என்பது மட்டுமே.)

இந்த நடவடிக்கை தான் கூடாது என்று சொல்லுகிறேன்(அதாவது உதயசூரியன் போன்று இருப்பதால் கிழிக்கப்படுகிறது).

திரும்பவும் ஆட்சி மாறினால் அவர்களும் இது மாதிரி கிழிக்க ஆரம்பித்தால் அப்புறம் BOTONY (தாவரவியல்) புக்கே இருக்காது, அனைத்து பக்கத்திலும் இரட்டை இலை இருக்கின்றது.

ஆகவே தங்கஊசியாக இருந்தால் பல் குத்த பயன் படுத்தலாமே தவிர வேறு எங்கும் குத்தக்கூடாது. தவறு யார் செய்தாலும் சுற்றிக்காட்டுவது நம் கடமை இல்லையா.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. பொறியியல் படிப்பு
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [20 June 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 5471

அட போங்க ஜியா காக்கா.. நாங்கள்லாம் பொறியியல் பல்கலை தேர்வுக்கு படிக்கும் பொது ஒரு இரவு படிச்சி அடுத்த நாள் தேர்வு எழுதுவோம். ஆறு மாதம் இந்த பேராசிரியர்கள் முக்கி முக்கி எடுத்த பாடத்தை ஒரு இரவு படிச்சி முடிச்சிருவோம். அட்டை இருந்த என்ன இல்லாட்டி என்ன?

இவங்களுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன.

கவலைய விடுங்க குட்டீஸ். என்ஜாய். நீங்களும் வருங்கால பொறியியல் வல்லுனர்கள் மற்றும் டாக்டர் தான்.

கலைஞர் டாக்டர் பட்டம் வாங்கும் பொது, நீங்க வாங்க மாட்டிங்களா என்ன?

ஆனா கடைசில ஏதாவது படிச்சு எழுதிருங்கப்பா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. பக்கத்திற்கு பக்கம் பரவசம்
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [20 June 2011]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5472

"கற்றலின் கேட்டல் நன்று" என்ற வாகியத்துக்கிணங்க, புத்தகங்களை எல்லாம் ஒதுக்கி விட்டு, பழங்கால செவிவழி கல்வி ஆரம்பிக்கலாம்.

"பக்கத்திற்கு பக்கம் பரவசம்" என்பதுபோல கிழிக்கப்பட்ட பக்கத்தில் அப்படி என்னதான் இருக்குனு படிக்க ஆசை அதிகமாகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. எதுப்பா எது
posted by சாளை நவாஸ் (Singapore) [21 June 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 5491

இனிமேலே சார், "நீங்கலாம் என்னத்த படிச்சி கிழிக்க போறீங்கன்னு" கேட்டா, நீங்க கிழிச்சிட்டு படிச்சி கொடுக்கும் போது நாங்க படிச்சி கிழிக்க கூடாதான்னு பசங்க கேட்டாலும் கேட்பாங்க. கல்வி தரம் இப்படி ஆச்சே!!!!

இன்னும் போனால் தமிழ் நாட்டில் சூரியனே உதிக்க கூடாதுன்னு சொன்னாலும் சொல்லும். சூரியன் கிழக்கே உதிக்கும், அதை எப்படி ஆசிரியர்கள் எப்படி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பார்கள்? அது கிழக்கே உதிக்கும் என்றா? எதுப்பா எது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. சூரியன் இருக்கும் இடம் அறிவாலயம்
posted by Cnash (Makkah) [21 June 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5507

நவாஸ், சூரியன் உதிக்கும் இடம் கிழக்குனு சொல்லி கொடுத்தா தப்பில்லை... ஆனா இந்த கேடு கேட்ட கருணா பாடத்திட்டத்தில் சூரியன் இருக்கும் இடம் அறிவாலயம் என்று சொல்லி கொடுக்க முயற்சி செய்றார்..

இன்னும் எந்த ஆட்சி தொடர்து இருந்தால், அவருடைய மனைவி, துணைவி, இணைவி எல்லாம் அன்னை தெரசாவாகவும், கலவானி கனிமொழி நவீன சுதந்திர போராட்ட தியாகியாகவும் மாறி இருப்பார்!... இவர் என்ன கலிபா ஆட்சியா நடத்துனாரு நம்ப புள்ளைங்க படிச்சி படிப்பினை பெற!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. கோடம் பாக்கம் குப்பையை கொட்டுகிறது.
posted by ismail (chennai) [22 June 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5523

அம்மா ஒன்றும் சுவிஸ் கட்டி 999.9 ல் வார்த்து எடுக்கப்பட்டது அல்ல. காதில் பூ வைதவர்களிடம் போயி சொல்லு உன் அரசியலை. கோடம் பாக்கம் எப்படி புண்ணிய பூமிக்கு போனது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved