Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:32:51 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6592
#KOTW6592
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 29, 2011
தம்மாம் கா.ந.மன்றத்தின் 18ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 59ஆவது பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2868 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 18ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 59ஆவது பொதுக்குழுக் கூட்டம் 24.06.2011 அன்று நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் பதினெட்டாம் ஆண்டு துவக்க விழாவும், 59ஆவது பொதுக்குழுவும் ஜனாப்.பாலப்பா அவர்கள் இல்லத்து நீண்ட வரவேற்பு அரங்கில் 24/06/2011 வெள்ளியன்று மாலை ஏழு மணிக்கு நடைபெற்றது.



ஜனாப் .அப்துல்காதர் சூபி அவர்கள் இனிமையான குரலில் இறைமறை ஓதி துவங்கி வைத்தார்..அடுத்து இளைய தலைமுறையின் பிரதிநிதியான யூசுப் சாஹிப் (பாலப்பா அவர்களின் பாலகன்) வெகு நேர்த்தியாக ஆழ்ந்த கருத்துக்களுடன் அழகான முறையில் வந்தோரை வரவேற்றுப் பேசினார்.



தலைவர் முன்னுரை:
அடுத்து தலைவர் முன்னுரையில் டாக்டர் இத்ரீஸ் அவர்கள் பதினெட்டு ஆண்டு கால நெடிய சமுதாயப்பணியில் தம்மோடு கைகோர்த்த நிர்வாகக் குழுவினருக்கும் பேரன்புக்குரிய மன்றத்து உறுப்பினர் யாவருக்கும் தன நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து, இவ்வாண்டு தாம் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பல்வேறு கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விளக்கமாக உரையாற்றினார். அத்துடன் மன்றத்து நிர்வாகத்தின் துணையோடு தாம் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.



பொதுச்செயலாளர் உரை:
அடுத்து உரையாற்றிய பொதுச்செயலாளர் அஹமது ரபீக் அவர்கள் கடந்த பதினேழு ஆண்டுகளில் மன்றம் ஆற்றிய பணிகள் குறித்து விரிவாய் எடுத்துரைத்தார் .அத்துடன் மன்றத்தின் முக்கிய பொறுப்புகளில் புதிய இளைஞர்கள் பதவியேற்று பணியாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் கூறினார்.



தொடர்ந்து, மன்ற உறுப்பினர்கள் பின்வருமாறு கருத்துரை வழங்கினர்:-

சகோதரர் சதக்கத்துல்லாஹ்:
நம் மாணவர்களின் SPOKEN ENGLISH SKILL (ஆங்கில உரையாடல் திறன்) வளர்வதற்காக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் VETA PROGRAMME பற்றி விவரமாகவும் விளக்கமாகவும் எல்லோருக்கும் புரியும்படியும் எடுத்துரைத்தார்.



சகோதரர் சாளை ஜியாவுதீன்:
ஆங்கிலக்கல்வியின் முக்கியத்துவமும் ஆங்கிலத்தில் பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமும் குறித்து வெகு திறனோடும் தெளிவோடும் தனக்கே உரிய நகைச்சுவையையும் இடைச்செருகல்களையும் கலந்து எல்லோரும் ரசிக்கும் வண்ணம் உரை நிகழ்த்தினார்.

ஜனாப் நூஹு ஆலிம் அவர்கள்:
இறை மறையில் என்னென்ன நற்காரியங்களுக்கு எத்தனை எத்தனை நன்மைகள் ..மற்றும் ஏழை மக்களின் நலன் காப்போருக்கு இறைவன் அளிக்கும் எண்ணற்ற பரிசுகளும் பலன்களும் குறித்து அழகாகவும் தெளிவாகவும் உரை நிகழ்த்தியது நெஞ்சத்தில் நிம்மதியையும் நெகிழ்வையும் உண்டாக்கியது .

சகோதரர் செய்யது ஹசன்:
நம் மன்ற முக்கிய உறுப்பினர்கள் மட்டும் பண முதலீடு செய்து ஒரு குழுவாக (மன்றத்தின் பெயரில்) நடத்தி வரும் “ சிறப்பு திட்டங்கள்“ (special projects) பற்றிய முழு விவரங்களைக் கூறி, இதுநாள வரை நிறைவேற்றப்பட்ட கல்வி மேம்பாட்டு திட்டம், ஏழைகளுக்கு வீடு பழுது நீக்கி வழங்கும் திட்டம், மருத்துவ திட்டம் (விலை மிகுந்த தடுப்பூசியான ஈரல அழற்சி நோய் HEPATITIS B..VACCINATION முழுமையான மூன்று தடுப்பூசி முகாம்களையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தது) அத்துடன் சமீபத்தில் நடத்திமுடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கான நோட்டுப்புத்தகம் வழங்கல் அடங்கலாக எல்லா விவரங்களையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.





அடுத்து..... மன்றம் துவங்கி இந்நாள வரை வேகாத வெயிலிலும் வெடவெடக்கும் குளிரிலும் தன் உடல்நலனையும் வருத்தி உறுப்பினர்களையும் உலுப்பி சந்தா வசூலில் சாதனைகள் நிகழ்த்திய மேன்மைக்குரிய மேற்பார்வையாளர் (SUPERVISOR) சகோதரர் செய்யது இப்ராஹீம் அவர்கள் வெகு தெளிவாகவும் ஆட்டம் இல்லாமலும் உரையாற்றிய பின்பு.. .அன்னாரின் நீண்டகால தொண்டினை வாழ்த்தி ஒரு நினைவுப் பரிசு கண்ணியமிக்க நூஹு ஆலிம் அவர்கள் கரத்தால் வழங்கப்பட்டது. இப்பரிசு சகோதரர் செய்யது ஹசன் ஜாபர் மனமுவந்து அளித்ததாகும்.



பொதுக்குழுவின் முக்கிய அம்சமாக இக்ரா கல்வி நிறுவனத்துக்கு ஆண்டு உறுப்பினர் மற்றும் ஆயுட்கால உறுப்பினர் சேர்க்கும் பணி சகோதரர் முஹம்மது இப்ராஹீம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவரும் மின்னல் வேகத்தில் அந்த இடத்திலேயே உந்துதலோடும் உற்சாகத்தோடும் தம் பணியைத் துவங்கினார்.





தேநீர் சிற்றுண்டிகள் கறிக்கஞ்சி வழங்கப்பட்ட பின்..பொதுச்செயலாளர் தன் நன்றியுரையில் விழாவுக்கு இடம் அளித்தும் தேநீர் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்தும் பேராதரவு அளித்த சகோதரர் பாலப்பா அவர்களுக்கும் மகனுக்கு ஊக்கமளித்து வியப்பூட்டும் வகையில் வரவேற்புரை தயார் செய்து கொடுத்து, பாராட்டும் வகையில் பணிபுரிந்த மகளிர் அணியைச் சேர்ந்த திருமதி பாலாமினா அவர்களுக்கும், எல்லாக்காலங்களிலும் மன்றத்து விழாக்களில் உவகையுடன் கலந்த தன் உற்சாக உழைப்பை நல்கிடும் சகோதரர் அப்துல் கரீம் மற்றும் அன்னாருடன் ஒத்துழைத்து உறுதுணையாய் நின்ற சகோதரர்கள் மரைக்கார், எம்.எம்.முஹம்மது ஹசன், முத்துவாப்பா, அப்துல் அஜீஸ் , சாஹிப் நவாஸ், முஹிய்யித்தீன் அப்துல் காதர் ஆகியோர் அடங்கிய விழாக்குழுவினருக்கும் நிர்வாகக்குழுவின் சார்பில் தன் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இறையருள் துஆவுடன் இரவு உணவும் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
M.M.முஹம்மது ஹசன்
மற்றும்
B.A.முத்துவாப்பா
தகவல் தொடர்பாளர்கள் ,
காயல் நற்பணி மன்றம்,
தம்மாம், சஊதி அரபிய்யா.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. திணறி விட்டது வயிறு.. மனதும் கூடத்தான்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [29 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5660

மாஷாஹ் அல்லாஹ்..

மனநிறைவான நிகழ்வு. அனைத்து நண்பர்களையும், சொந்தங்களையும் ஒன்றாக பார்த்ததில் ஒரு பூஸ்ட் அடித்த மாதிரி இருந்தது..

குடும்பங்களை பிரிந்து வாழ்ந்தும், வேலை பளுவில் டென்ஷன் உடன் இருக்கும் எங்களுக்கு, இந்த மாதிரி ஒன்றுகூடுதல்தான் ஒரு பலமே. சும்மா ஒன்று கூடாமல் நம் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்யணும் என்ற நோக்கத்தில் கூடுவதுதான் சந்தோசத்திலும் பெரிய சந்தோசம்...

சரிங்க.. இந்த செய்தியை தொகுத்து எழுதியது யாருங்க? புதிய எழுத்தாளர் உதயமாகி உள்ளார் போல உள்ளதே.. வாழ்த்துக்கள்...

இந்த பதிவில் ஒரு வார்த்தை புரிந்தும் புரியாமலும் இருக்கின்றதே.. அதாவது

" சகோதரர் செய்யது இப்ராஹீம் அவர்கள் வெகு தெளிவாகவும் ஆட்டம் இல்லாமலும் உரையாற்றிய பின்பு.. "

இதில் ஆட்டம் என்ற சொல்லுதான் புரியவில்லை..
ஆட்டநாயகனோ..?

பல சமூசாக்கள், டீ, ஐஸ்கிரீம், புல் சைஸ்யில் காயல் கறிக்கஞ்சி, இத்துடன் பிரியாணி பார்சல்.. திணறி விட்டது வயிறு.. மனதும் கூடத்தான்... அல்ஹம்து லில்லாஹ்..

அப்புறம் பல சகோதரர்கள் நான் யார் என்று மெயில் அனுப்பி இருந்தார்கள். இந்த பதிவில் என்னுடைய போட்டோவும் உள்ளது. ஒரு சூப்ப்பர் அழகுடன் இருக்கும் ஒரு சிறுமியுடன் (மாஷாஹ் அல்லாஹ்), ஒரு சுமாரான அழகுடன் இருப்பது நான் தாங்க..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நம் காயல் மன்றகளின் தாயாக
posted by A.R.Refaye (ABUDHABI) [29 June 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5661

நானும் ஒரு முன்னால் மாணவன்(1990-1993) வரை இம்மாம் மன்றதின் உறுப்பினராக இருந்த காலத்தை நினைக்கும் போது உண்மையில் பெருமையாக இருக்கிறது. உலகில் உதித்த நம் காயல் மன்றகளின் தாயாக பீடு நடை போடும் இம்மன்றதின் சமுதாயப் பணிகள் சிறக்க என் உள்ளம் நிறைந்த நல வாழ்த்துக்கள்,

அன்றைய இதுபோல் நெட் வசதிகள் இல்லாத காலத்தில் உறுப்பினராக இனைய அங்கத்தினர்கள் எடுத்துக்கொண்ட சிரமங்கள் அனைத்துக்கும் எல்லாம் வல்ல அல்லாஹுவின் கருணை உண்டாகட்டும். அன்பின் தலைவர் டாக்டர் இத்ரீஸ் அவர்களுக்கும் சமுதாயப்பணியில் தம்மோடு கைகோர்த்த நிர்வாகக் குழுவினருக்கும், பேரன்புக்குரிய மன்றத்து உறுப்பினர் யாவருக்கும் வாழ்த்துக்கள். மேலும் மேற்கொள்ளவிருக்கும் சமுதாயப் பணிகள் மென் மேலும் சிறக்க அல்லாஹு போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கத்துனா குத்திடுவேன்....
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [29 June 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5663

மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான சந்திப்பு. நமதூர் மக்கள் அனைவரையும் ஒன்றாக சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. காயலர்கள் என்றாலே அங்கு சாப்பாடு கலைகட்டும் அதுமட்டுமல்லாமல் 17வது ஆண்டு நிறைவு விழா வேற... அப்படின்னா சும்மா கேட்டா பார்க்கணும் டீ, சமூசா, கஞ்சி, ஐஸ் கிரீம் அப்படின்னு புல் கட்டு கட்டிட்டு மூச்சு விட முடியாம இருக்கும்போது (என்னோட போட்டாவ பார்த்தாலே தெரியும்)கையில பிரியாணி பார்சல் வேற.. வேறென்ன பண்ண பிரியாணிய பிரிட்ஜில வச்சு அடுத்த நாள் சாப்பிட்டவங்கதான் அதிகம்.

இப்படி பல அருமையானா நிகழ்வுகள் அன்று நடந்தாலும்.. அன்று கூட்டம் நடப்பதற்கு முன் நடந்த ஒரு சம்பவம் அனைவரின் மனதிலும் ஒரு வடுவாகவே உள்ளது. கூட்டத்திற்கு வந்து கொண்டிருந்த நம் மன்ற சகோதர்கள் இருவரிடம் கருப்பு அரபிகள் அவர்களது கழுத்தில் கத்தியை வைத்து அவர்கள் கூட்ட நிகழ்ச்சிகளை படம் பிடிக்க வைத்திருந்த கேமரா மற்றும் அவர்களது பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்ற சம்பம் அணைவரையும் வேதனை அடைய செய்தது. இது பற்றிய விரிவான செய்தியை எனது இணையதளத்தில் கொடுத்துள்ளேன் சொடுக்கி பார்க்கவும்

http://kulkusma.blogspot.com/2011/06/1.html


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved