Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:25:46 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6931
#KOTW6931
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011
முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு அதிகரிக்க வேண்டும்: சட்டசபையில் ஜவாஹிருல்லா கோரிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3691 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

2011-12க்கான திருத்திய நிதி நிலை அறிக்கை, இம்மாதம் (ஆகஸ்ட்) 4 ஆம் தேதியன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து நடந்த விவாதத்தில் நேற்று பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அளவை குறைந்தது 5 விழுக்காடாகவோ அல்லது அதற்கு மேலோ உயர்த்துவதற்கு உடனடியாக ஆவணச் செய்ய வேண்டுமென கோரினார்.

வக்ப் வாரியம் குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும் பேராசிரியர் பேசியவைகளின் சாராம்சம் வருமாறு:-

வக்ப் வாரியத்திற்கு மானியம்

உலமாக்களுக்கு முதன் முதலாக ஓய்வுதியம் அளிக்கப்பட வேண்டும் என்ற திட்டம் டாக்டர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் என்பதை நான் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன். இது போல் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைமையகம் தற்போது அமைந்துள்ள சென்னை ஜாபர் சாரங் தெருவில் உள்ள இடத்தை வாங்கியதும் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான். அதே போல் அந்த இடத்தில் வக்ப் வாரியத்திற்கு சிறந்த வசதிகளுடன் கட்டடம் கட்டுவதற்காக 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதும் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும் தற்போதைய முதல்வர் தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில் தான்.

இதைப் பற்றி மறைந்த இந்திய தேசிய லீக் கட்சித் தலைவரும் முன்னாள் வக்பு வாரியத் தலைவருமான அப்துல் லத்தீப் ஒரு முறை குறிப்பிடும் போது திமுக ஆட்சியாளர்களிடம் நான் பல முறை முறையிட்டும் வக்ப் வாரியத்திற்கு கட்டடம் கட்டுவதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆனால் ஒரு முறை முறையிட்டதும் அதிமுக முதலமைச்சர் பணத்தை ஒதுக்கி கட்டடமும் கட்டி கொடுத்து விட்டார் என்று பெரிதும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

கடந்த திமுக ஆட்சியாளர்களின் பாரமுகத்தின் காரணமாக கடும் நிதி பற்றாக்குறையால் தட்டு தடுமாறி செயல்படும் நிலை வக்பு வாரியத்திற்கு ஏற்பட்டது. இதன் விளைவாக மாண்புமிகு நிதி அமைச்சர் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்டது போல் வாரியம் தனது ஒய்வுதியதாரர்களுக்கு ஓய்வுதிய நிலுவைத் தொகை மற்றும் இதர பயன்களை அளிப்பதற்கு இயலாத நிலையில் உள்ளது. இந்த அவல நிலையை போக்க தமிழ்நாடு வக்பு வாரியத்தின் வரலாற்றில் முதன் முறையாக இந்த அரசு ஒரு முறை மானியமாக மூன்று கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்னது நிச்சயமாக வரலாற்றுச் சிறப்புமிக்கது தான்.

இது மட்டுமின்றி சென்ற திமுக ஆட்சியை போல் கருமியாக இல்லாமல் ஆண்டு தோறும் நிர்வாக மானியமாக வழங்கப்பட்டு வரும் 45 இலட்ச ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்ற மாண்புமிகு முதல்வரின் உத்தரவையும் நெஞ்சாரப் பாராட்டுகிறேன். வக்ப் வாரியத்தை சீரமைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை மனமாற வரவேற்கிறேன். கருணையுள்ளம் நிறைந்த மாண்புமிகு முதல்வர் அவர்கள் பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான மராமத்து பணிகளுக்கு அரசு தற்போது வழங்கி வரும் மாணியமான 60 லட்சத்தை உயர்த்த வேண்டும் என்றும் சிறிய மராமத்து பணிகள் மற்றும் பள்ளிவாசல், அடக்கத்தலங்களுக்கான சுற்று சுவர் எழுப்புவதற்கு அரசு தற்போது அளித்து வரும் மாணியமான ரூ10 லட்சத்தையும் உயர்த்தித் தர வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு

அரசு பணிகளில் மதவழி சிறுபான்மை மக்களுக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடு அளி்க்க வேண்டும் இதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான ஆணையம் கடந்த மே 21. 2007ல் பரிந்துரையை அளித்தப் போதினும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சிறுபான்மை மக்களை வஞ்சித்து வருகின்றது.

ஆனால் நமது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீடு அளவை கடைபிடிக்க வழிவகைச் செய்து சமூக நீதியை காத்த மாபெரும் வீராங்கனையாக நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விளங்குகிறார். சமூக நீதியை காத்து வாழ்வின் விளிம்பில் உள்ள மக்களை உயர்த்துவதற்கு ஆட்சியில் உள்ளவர்களுக்கு நமது முதலைமைச்சருக்கு இருப்பது போல் மனவலிமையும் துணிச்சலும் தேவை.

இந்த மனவலிமையும் துணிச்சலும் டெல்லியை ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ்,திமுக உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இல்லை ஆனால் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசுக்கு அந்த மனவலிமை நிரம்பவே உண்டு. சமூக நீதயை நிலைநாட்டுவதிலும் சிறுபான்மை நலனில் அளப்பரிய அக்கறையுள்ள தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்களித்தது போல் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அளவை குறைந்தது 5 விழுக்காடாகவோ அல்லது அதற்கு மேலோ உயர்த்துவதற்கு உடனடியாக ஆவணச் செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதே போல் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை கண்காணிக்க அரசு அலுவலர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் இடம் பெறும் அமைக்கப்பட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வின் முழு உரை காண இங்கு அழுத்தவும்.

தகவல்:
பி.எம்.எஸ். சதக்கத்துல்லாஹ்,
தம்மாம், சவுதி அரேபியா
.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by Abdul Majeed (Mumbai) [12 August 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6816

சூப்பர் ஜால்ரா . ஆந்த்ராவில் கொடுத்த இட ஒதுக்கீடு மோசமான முன்னுதாரணம் என்று அம்மா சொல்லியது பேராசிரியருக்கு மறந்து விட்டது போலும்.ஆடுற மாட்டை ஆடி கறக்கனும் என்பது போல இந்த ஜல்ராவின் மூலமாக எதாவது கறந்தால் சரிதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Noteworthy & Kudos
posted by Ahamed mustafa (Dubai) [12 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6819

Dear All,

The continuous cry for the Reservations for Muslims made by TMMK is commendable & of high concerns. The 3.5% reservations we have as BC Muslims made life simpler & helped each & every one of us in getting the required seats in colleges, which would have been otherwise quite tougher. Let every one of us join in supporting this cause which the TMMK have put forth on our behalf & am sure these guys can make this happen as they have done before, inshallah !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாழ்க ஜால்ராக்கள்!
posted by kavimagan (dubai) [12 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6822

வக்ப் பராமரிப்பு நிதி உயர்வு, ஓய்வு பெற்ற உலமாக்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றை பாராட்டுவதும், முஸ்லிம்களின் வாழ்வியல் ஆதாரமான இடஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோருவதும் சூப்பர் ஜால்ரா என்றால்,தொடரட்டும் ஜால்ராக்கள்!

பேராசிரியர் அவர்களே! இந்த சமுதாயம் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை,இதுபோன்ற விமர்சனங்கள் தகர்த்து விட முடியாது. வாழ்க உங்கள் ஜால்ராப்பணி! அதன் மூலம் பயனடையப் போவது இந்த சமூகம்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by Cnash (Makkah ) [13 August 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6823

40 வருட காலமா 2 சீட்டுக்கும் ஒரு வக்ப் வாரிய பதவிக்கும் கருணாநிதியை பாராட்டியது வாழ்த்தியது எல்லாம் இந்த கருணா பக்தர்கள் காதில் தேனாய் இனித்தது, இன்று சமூக நலம் வேண்டி இடஒதுக்கீடு கேட்பது, ஜால்ரா சத்தமாக கேட்கிறது!! இங்க ஜால்ரா அடிச்சா எதாவது சமூகத்திற்கு கிடைக்கும் என்று நம்பலாம்!! கருணாநிதி போல் வாய்ச்சொல் வீரர் ஏமாற்று காரர் இல்லை இந்த ஜெயா!! 15 வயதில் பிறை கொடி பிடித்தவன், முஸ்லிம்களில் காவலன் என்று கருணா போல் சந்தர்பவாத அரசியல் நடத்த!! வாழ்க நம் கலைஞர் பக்தி!! வளர்க திமுக திருப்பணி!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கட்டிங் வாங்காத இராமநாதபுரம் எம்.எல்.ஏ
posted by saburudeen (dubai) [13 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6826

"ராமநாதபுரம் மாவட்டத்துல பொது பணித்துறை மூலம் பணிகள் மேற்கொள்ள அஞ்சு கோடி ஒதுக்கியிருக்கா... டெண்டர் எடுத்தவா... வழக்கம் போல் அதிகாரிகள், ஆளும்கட்சி நிர்வாகிகளுக்கு தகுதி வாரியா, "கட்டிங்' தொகையை தந்திருக்கா... தொகுதி எம்.எல்.ஏ.,ங்கற முறையில, ராமநாதபுரம் தொகுதி ம.ம.க., எம்.எல்.ஏ.,விற்கும், "கட்டிங்' கொடுக்க போயிருக்கா... "இந்த பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது'ன்னு எம்.எல்.ஏ., திருப்பி அனுப்பிட்டார் ஓய்... அந்த தொகையையும் ஆளும்கட்சிக்காரர் ஒருத்தர், "லவட்டி' கொண்டு போயிட்டார்...'' என, கடைசி மேட்டரை நேரடியாக சொல்லிவிட்டு எழுந்தார் குப்பண்ணா பெஞ்ச் அமைதியானது.

தினமலரின் டீக்கடை பெஞ்ச்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பாராட்ட மனம் இல்லையா..சும்மா கம்முன்னு இருங்க
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [13 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6829

பேரா. டாக்டர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்...

இப்படி நம்முடைய குறைகள், வேண்டுகோள்கள் அல்லது ஜால்ராக்களை சட்டமன்றத்தில் இவ்வளவு நேரம் பேசி, பதிவு செய்வது என்பதே பெரிய விஷயம். இதற்க்கு முக்கிய காரணம் நாம் நம் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு அங்கு சென்ற காரணம் தான்.

ஒருவர் செய்ததை நன்றியுடன் சொல்லிக்காட்டுவது ஜால்ரா, ஐஸ் என்றால் அதை சொல்லுவதில் தவறு இல்லையே. காரியம் நடந்தால் சரிதான்.

சாப்பிடாத குழந்தையை கூட தாய் கண்ணு, சமத்து என்று ஐஸ் வைத்து தான் சாப்பிட கொடுக்க முடிகிறது.

அது கூட வேண்டாம், தெருவில் செல்லும் ஒரு சிறுவனிடம் கடையில் ஒரு சாமான் வாங்க சொல்லுங்க, முடியாது, டியூஷன் போகணும் என்பான். அவனையே நல்ல பையன்லோ, என்று சிறிது ஜால்ரா அடியுங்க.. டியூஷன் ஆவது மண்ணாவது.. உடனே செய்வான்.. காரணம் ஜால்ரா..

காரியம் நடக்குதா.அது தான் நமக்கு முக்கியம்.

பாராட்ட மனம் இல்லையா..சும்மா கம்முன்னு இருங்க..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. காலணாக்கு புரோஜனம் இல்லாதவர்களுக்கு ...
posted by குல்குஸ்மா முத்துவாப்பா... (அல்-கோபர்) [13 August 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6830

காலரா மாதிரி தி.மு.க வோடு தொற்றிக் கொண்டு
காலணாக்கு புரோஜனம் இல்லாதவர்களுக்கு ...
இட ஒதுக்கீடு தொடர்பாக இவர்கள் குரல் கொடுப்பது
ஜால்ராவாக தான் தெரியும் ....
மஞ்சள் காமாலை காரனுக்கு தான் - எடுத்ததெல்லாம்
மஞ்சளாக தெரியும் ...
மஞ்சள் துண்டு கட்சியை சார்ந்தவர்களுக்குமா ...??
பெயரளவில் முஸ்லிம் தலைவர்களாக சட்டமன்றத்தில்
இருந்தவர்கள் மத்தியில் ... முஸ்லிம்களின் பெயர்கள்
இட ஒதுக்கீட்டில் அதிகரிக்க வேண்டும் என்று குரல்
கொடுத்த தலைவரை வாயை திறந்து பாராட்டாவிட்டாலும்
குறைந்தது வாயை மூடி அமைதியாகவாது இருங்கள் .

குல்குஸ்மா முத்துவாப்பா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by SyedAhmed (HK) [13 August 2011]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 6833

வாத்தியார் ஜால்ரா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் equal ஜால்ரா போடுவார் அதனால கோரி சொல்ல முடியாது.

என்ன ஜால்ரா போட்டாலும் வேலை நடந்த நல்லது தானே

ஆனா கேள்வியா கேட்டிருக்கலாம் ஏதாவது முதல்வர் வாயிலேர்ந்து பதில் வந்து இருக்கும் கோரிக்கையா சொன்ன அமைதியா தான் இருப்பாங்க.

அடுத்த தரவை சீட் கொரன்சிரும்னுபயன்துட்டரோ என்னவோ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [13 August 2011]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6835

அம்மையாரின் கடந்த காலம்....
காயலில் கலவரம் ? யாருடைய ஆட்சி?
பதவி ஏற்புக்கு ? நரேந்திர மோடி அழைப்பு ? செய்தது யார்?
ஆந்திர இட ஒதுக்கீடு? எதிர்த்து குரல் கொடுத்தது யார்???

அதேநேரம் அய்யாவும் இதற்க்கு சளைத்தவர் இல்லை....
பதினைந்து வயதில் பிறை கொடி பிடித்தாராம்?
ஆனால் எழுபது வயதில் காவி கொடி அல்லவா பிடித்தார்?
இந்தி எதிர்ப்பு மொழி போராட்டம் என்று நம்மை தேசிய மொழி
கற்காமல் தடையாக இருந்தவர் அல்லவா மஞ்சள் துண்டு காரர்?

பேரா. ஜவாஹிருல்லா அவர்களின் கோரிக்கையை ஜால்ரா என்று சொல்லி முயற்சி செய்பவர்களை இழிவு படுத்தாதீர்கள். முயற்சி செய்பவர் யார்; எந்த இயக்கம் என்று பாராமல், அவர்களின் முயற்ச்சிக்கு வெற்றி கிடைக்க பிராத்தனை செய்யுங்கள்.

கொடுப்பதும், எடுப்பதும் படைத்தவன் ஒருவனே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by A.W.S. (Kayalpatnam) [13 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6836

ஆங்கிலயேர் காலத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவீத இட ஒதிக்கீடு இருந்தது. காமராஜர் முதலமைச்சராக வந்த பிறகு இட ஒதிகீட்டை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். கருணாநிதிக்கும் எம். ஜி. ஆருக்கும் மாறி மாறி ஜால்ரா அடித்துகொண்டிருந்த ஒரு முஸ்லிம் கட்சியினரால் முடியாத காரியத்தை TMMK மற்றும் TNTJ போராடி 3.5 % இட ஒதிக்கீடு பெற்று தந்துள்ளது. இதில் பேராசிரியரின் பங்கு முக்கியமானதாகும்.

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று".


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by Mohmed Younus (Chennai) [13 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6839

மோடி நர பலி ஆடியபோது மத்தியில் பி.ஜெ.பி. ஆட்சி. அதை முட்டு கொடுத்து தாங்கியது திருவாலரின் தி.மு.க. ஆந்திராவில் கொடுத்த இட ஒதுக்கீடை அம்மா எதிர்த்து உண்மைதான். ஆனால்,அந்த அம்மாவை தான், தான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடை அதிகரிப்பேன் என்று கூற வைத்ததும் த.மு.மு.க என்பதை மறந்து விடாதீர்கள்.

முஸ்லிம் லீகை தவிர,எந்த ஒரு அரசியல் அமைப்பும் இல்லாத காலம், இட ஒதுக்கீடு என்றால் அர்த்தம் என்ன என்று கேட்கும் காலம். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்த பிறகு கூட இந்த தி.மு. கவின் சிறுபான்மை அமைப்பு எந்த ஒரு சிறு துரும்பை எடுத்து போடாத காலம்.

இந்த நிலையில் தான்,தொடங்கப்பற்ற த.மு.மு.க தன் வீரிய போராட்டத்தின் மூலம் இட ஒதுக்கீடை பெற்று தந்தது.

முஸ்லிம்களுக்கு சீட்டு, முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு, முஸ்லிம்களின் நலன் என்று பேசப்பட்ட தேர்தல் இந்த தேர்தல் தான் என்பதை நினைவில் வையுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by SyedAhmed (HK) [13 August 2011]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 6841

சகோதரர் தைக்க சாஹிப் அவர்களே

இந்தியை தேசிய மொழி என்று சொல்லி இருக்கிறீர்கள். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தி தேசிய மொழி கிடையாது.

இந்தியாவில் அதிகம் பேர் பேசும் மொழி என்று வேண்டால் சொல்லலாம்.

கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியங்களை கொண்டது தமிழ் மொழி. 50 000 வருடம் தொன்மை வாய்ந்த மூத்த மொழி. இந்தியாவில் non - sanskrit எழுத்து முறையை கொண்ட ஒரே மொழி. அரசியல் ஆதரதிர்காக இருந்தாலும் ஆரிய மொழியை நம் மொழி மீது திணிக்க முற்பட்ட மத்திய அரசை DMK எதிர்த்து சரியே.

மொழி எந்த வயதிலும் கற்று கொள்ளலாம், நமக்கு அவசியமாக இருப்பின் 80 வயதிலும் இந்தி கற்று கொள்ளலாம். அதற்காக நம் மொழி மீது ஆதிக்கம் செலுத்தி பல மாநில மொழிகளை கொன்றது போல் இந்தி நம் மொழியையும் கொள்வதை ஏற்க முடியாது.

இந்தியை foreigh language ஆக படிக்கலாம் தேவைப்பட்டால்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. பையத்தின்றால் பனையையும் திண்ணலாம்.
posted by zubair (riyadh) [13 August 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6847

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு பேராசிரியர் அவர்களே.... முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு அதிகரிக்க வேண்டும் என்று சட்டசபையில் தாங்கள் கோரிக்கை வைத்தது சந்தோசத்தையும், பெரிமிதத்தையும் தருகிறது நன்றிகளும், வாழ்த்துகளும். மேலும் தாங்கள் இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்கும் வரை போராடி பெறவும். அடிக்க அடிக்கதான் அம்மியும் நகரும். அனால்....... அம்மா ஆட்டு உரல் கவனம்.

zubair என்ற s.s.md meerasahib,
riyadh.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. வாழ்க வாழ்க என யாவரையும் வாயார ,மனதார வாழ்த்துவோம் நாமும் வாழுவோமாக.
posted by சட்னி .எஸ்.எ .கே .செய்யது மீரான் (காயல் பட்டினம்) [13 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6857

மரியாதைக்குரிய பேராசிரியர் பெருமகனாருக்கு இனிய அஸ்ஸலாமு அலைக்கும்

இட ஒதுக்கிடு எதோ காக்கை உட்கார பனம்பழம் விழுந்த மாதிரியான சம்பவம் இல்லை என்பதை நீங்களும் உணர்விர்கள்,இதற்காக வேண்டி நீண்ட நெடிய காலம் குரல் கொடுத்த தலைவர்களும், தொண்டர்களும்,உண்மை விரும்பும் அல்லாஹ்வின் நல்லடியார்களும் அறிவார்கள்.

எல்லாம் அறிந்தவன் வல்ல அல்லாஹ் ஒருவனே இந்த இடஒதுக்கிட்டின் நன்மையினை என் மகனை இவ்வாண்டு பொறியியல் கல்லூரியில் சேர்க்கும் பொழுது கடந்த மாதம் நானும் பெற்றேன்.அல்ஹம்துலில்லாஹ்

இந்த நல்ல காரியத்திற்காக உழைத்த,குரல் கொடுத்த அனைத்து நல்லவர்களுக்கும் அல்லாஹ் இரு உலகிலும் நல்லதோர் பலனை தந்தருள்வானக .ஆமீன். என் அன்பினும் இனிய நண்பர்கள் ,சகோதரர்கள் நாம் ஒருவரை வாழ்த்துகின்ற பொழுது , சம்பந்தமில்லாது மற்ற நம் சகோதரர்களை தரம் தாழ்த்தி விமர்சிப்பதை எந்த காலமும் ,அதுவும் புண்ணியம் பூத்து குலுங்கும் புனித ரமலானில் ஆவது தவிர்ப்போமாக .

நாம் வாழ்த்துகின்ற இந்த மரியாதைக்குரிய பேராசிரியர் அவர்கள் என்றும் விரும்பாத செயல் இது . வாழ்க வாழ்க என யாவரையும் வாயார ,மனதார வாழ்த்துவோம் நாமும் வாழுவோமாக. அனைவரும் நலமாய்,வளமாய்,மேலும் ஒற்றுமையாய் வாழ புண்ணியம் பூத்து குலுங்கும் புனித ரமலானில் , எங்கள் உயிருனும் மேலான பூமான் நபிகளின் பொருட்டாலும் வான்,புவி படைத்தாலும் வல்லோன் அல்லாஹ் நல்லருள் புரிவானாக .ஆமீன்

என்றும் மாறாத அன்புடன் வேண்டி வாழ்த்தும்

சட்னி .எஸ்.எ .கே .செய்யது மீரான்
காயல் பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by SyedAhmed (HK) [14 August 2011]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 6864

வாத்தியார் அவர்களே அம்மாவிடம் (கம்மாவிடம்) இதை கோரிக்கையாக வைக்காமல் கேள்வியாக கேளுங்கள்.

இட ஒதுக்கீட்டில் அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்று?

புதிய செய்தியாக இருந்தால் தான் கோரிக்கை வைக்கவேண்டும். ஏற்கனவே நாம் வாய்த்த கோரிக்கை அம்மாவும் அய்யாவும் செய்வேன் என்று சொன்னார்கள், எப்போ செய்வீர்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டால் எதாவது பதில் வரும், மீண்டும் கோரிக்கை வைத்தால் பதில் சொல்லாமல் இழுத்து அடிப்பார்கள்.

கொஞ்சம் அவங்க வை பிடுங்குற வேலையை செய்யுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [15 August 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6871

அஸ்ஸலாமு அழைக்கும்,

சகோ. செய்து அஹமது,

ஹிந்தி தேசிய மொழியா இல்லையா என்று விவாதிக்க வில்லை நான், ஆனால் "The principal official language of the Republic of India is Standard Hindi, while English is the secondary official language.[" என்று வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளதே? http://en.wikipedia.org/wiki/Languages_of_India இது தவறு என்று தாங்கள் கருதினால் அதற்கு உண்டான விளக்கங்கள் தரும் பட்சத்தில் என்னிலையை மாற்றி கொள்வேன் (நான் சொன்னதுதான் தான் சரி என்ற நிலைபாட்டில் உள்ளவன் நான் இல்லை)

தமிழ் மொழி மட்டும் கற்கும் தாங்கள் இந்தியாவின் மற்ற பகுதிக்கு செல்வீர்களே ஆனால் தாங்கள் எந்த மொழி பேசுவீர்கள்?

நான் HK -இல் இருக்கின்றேன் நான் ஆங்கிலம் பயின்றுள்ளேன் எனக்கு தொழில்/வேலை செய்ய எந்த ஒரு சிரமமும் இல்லை என்று தாங்கள் கூறுவீர்கள்? ஆனால் ஒன்றை நினைவு கூறுங்கள், ஹிந்தி எதிர்ப்பு என்று கூறி கொண்டு, நம்மை அடிமை படுத்தி ஆட்சி புரிந்த ஆங்கிலேயரின் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என் ஹிந்திக்கு கொடுக்க வில்லை தாங்கள்?

தமிழ் மொழி எங்கு வளர்ந்துள்ளது, தமிழகத்தில் எந்த மூளைக்கு சென்றாலும் ஆங்கிலம் தானே ஆட்சி புரிகின்றது? தமிழ் மொழியை காப்பாற்ற நினைத்தவர்கள், ஆங்கிலம் வளர்ந்து வரும்போது என்ன செய்தார்கள்?

இருந்தபோதிலும், அனைவர் மனதிலும், நாம் ஹிந்தி கற்க வில்லையே என்கின்ற ஆதங்கமும், நம்மை கற்கவிடாமல் தடுத்த அரசியல் வாதிகளின் மேல் கோபமும் கண்டிப்பாக இருக்கும். பல அரபு நாடுகளில் அரேபியர்களுக்கு ஆங்கிலம் தெரிகிறதோ இல்லையோ, அவர்கள் ஹிந்தி பேசுவார்கள்..... அரபு நாடுகளில் பணிபுரியும் நம் சகோதரர்கள் ஹிந்தி தெரியாமல் எவ்வாறெல்லாம் பாடு படுகின்றனர் என்று கேட்டு பாருங்கள்.

(இந்த செய்திக்கு இது சம்பந்தம் இல்லாத விவாதம் என்று தெரியும், இருப்பினும் சகோதரரின் சிறு விளக்கத்திற்கு எனது பதில் விளக்கம்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. இடஓதுக்கீடு என்பது அரசியல் வாதிகளின் சொல்லில் தான் இருக்குதே தவிர !
posted by நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [15 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6872

முஸ்லிம்களுக்கு 3.5/. சத வீத இடஓதுக்கீடு என்பது அரசியல் வாதிகளின் சொல்லில் தான் இருக்குதே தவிர ! நடை முறையில் முஸ்லிம்களுக்கு 3.5/. சத வீத இடஓதுக்கீடு வேலையில் இல்லை என்பதே நமக்கு வேதனை தரும் செய்தி...

நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. இந்தி தேசிய மொழி அல்ல
posted by SyedAhmed (HK) [15 August 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 6873

சகோதரர் தைக்கா சாஹிப் அவர்களே

இந்தி தேசிய மொழி அல்ல என்று இந்திய உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது
http://www.thehindu.com/news/national/article94695.ece

National language என்பதற்கும் official language என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளது. இந்தியா Federal System என்று சொல்லக்கூடிய மாநில சுயாட்சி கொண்ட நாடு. இதில் தேசிய மொழி என்று ஒன்று இருந்தால் அது மாநிலங்களின் மொழி உரிமையை பறிக்கும் செயலாகும்.

இந்தியை ஒரு மொழியாக படிப்பதில் எந்த தவறும் இல்லை, நம் மீது திணிப்பது தவறாகும். தமிழக பாட திட்டத்தில் இந்தி, உருது, அரபி போன்ற மொழிகளை second language ஆக படிக்க முடியும்.

நம்மில் பலர் அரபியை second language ஆக எடுத்து படித்தவர்கள் தான். பள்ளிகள் இந்தியை ஒரு பாடமாக வைத்தால் அதை அரசு எதிர்காது. அரசு உதவி பெரும் பள்ளியாக இருப்பின் சம்பளமும் கொடுக்கும். இந்தியை கட்டயமக்குவது சங்க பரிவார் கொள்கையான இந்தி இந்து இந்துஸ்தான் என்பதை ஆதரிக்கும் செயல் என்பதால் திராவிட கட்சிகள் அதை எதிர்த்தன.

எல்லா மொழிகளையும் படிப்பது போல் இந்தியையும் படிக்க வேண்டும், இந்தியை நம் மீது திணிப்பதை அனுமதிக்க கூடாது என்பது டான் என்னுடைய தாழ்மையான கருத்து.

நான் அறிந்து பல அரபிகள் ஹிந்தி பேசுகிறார்கள் அதை அவர்கள் பள்ளியில் சென்று கற்பதில்லை, ஹிந்தி உருது பேசும் மக்களிடம் பேசி பழகிக்கொள்கிறார்கள். நம்மில் ஆர்வம் உள்ளவர்கள் அது போல் பழகுவதில் என்ன தவறு இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by Zubair Rahman (Bengaluru) [15 August 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 6876

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஒருவர், மற்றொருவரை புகழ்ந்து அதன் மூலம் ஒரு சமுதாயாமே வரும் காலங்களில் நன்மை பெறப்போகிறது என்றால் புகழ் பாடுவதில் தவறே இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by N.A. Thymiah (Chennai) [15 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6877

அஸ்ஸலாமு அலைக்கும்....

முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் வரையில் சட்டமன்றட்டிலும், மக்கள் மன்றட்டிலும் மனித நேய மக்கள் கட்சி தொடர்ந்து போராடும் (இன்ஷா அல்லாஹ்). நாங்கள் ம ம க உறுப்பினர் ( அ தி மு க உறுப்பினர் அல்ல ) , இதற்க்கு முன் இருந்தவர்கள் தி மு க உறுப்பினராக இருந்தனர். மனித நேய மக்கள் கட்சி இல் முஸ்லிம்கள் இணைந்து பணியாற்றினால் கண்டிப்பாக நமது அனைத்து கோரிக்கையும் நிறைவேறும் இன்ஷா அல்லாஹ். எங்கள் பணி தேர்தல் களம் மட்டும் அல்ல. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இரத்த தான சேவை, தமிழகம் முழுவதும் 95 ஆம்புலன்ஸ் சேவை, கல்வி உதவி, மருத்துவ உதவி, தனி மனித பிரச்சனைகளுக்கான தீர்வுகள், இஸ்லாமிய அழைப்பு பணி, சமுதாய உரிமை மீட்பு போராட்டங்கள், த மு மு க வின் இலவச மருத்துவமனைகள் ஆகிய பணிகளும் உள்ளன,

N .A Thymiah
த மு மு க & ம ம க
மாநில செயற்குழு உறுப்பினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [15 August 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6882

ஆங்கிலம் தினிக்கபடுகின்றதே? தமிழ் வழி கல்வி கற்பதை தரம் தாழ்த்தி தானே இன்றைய சமுதாயம் கருதுகிறது? தமிழை பாதுகாக்க தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்றால்.... இன்று தமிழை தாண்டி ஆங்கிலம் அல்லவே தமிழகத்தில் தலை தூக்கி நிற்கின்றது?

மஞ்சள் துண்டு காரரின் உறவினர்கள் என்ன தமிழ் வழி கல்வியா பயின்றார்கள்? தன்னுடைய சுய அரசியல் லாபத்திற்காக இதுபோன்ற அரசியல்வாதிகள் செய்யும் செயல் பாதிப்பது நம்மை போன்ற அடித்தட்டு மக்களை தான்.

அவர்களை விடுங்கள்.. இன்று நான் தமிழன்.... நான் தமிழன்.... என்று பறை அடித்து கொள்பவர்கள் வீட்டில் சென்று பாருங்கள் அவர்கள் பிள்ளைகள் ஆங்கில வழி கல்வி தான் பயில்வார்கள்.... ஆக தாங்கள் சொன்ன மொழி திணிப்பு (ஆங்கிலம்) இங்கு நடைபெறுகின்றதே?

தங்களின் கருத்து படியும், ஹிந்தி ஒழிப்பு போராட்டம் நடத்தியவர்களின் கூற்று படியும் பார்த்தல், இதே வலை தளத்தில் கோரிக்கை வைத்தார்களே "நான் எதிர்பார்க்கும் நகர்மன்றம்" என்கின்ற தலைப்பில் கட்டுரை எழுத, அப்படியானால், இந்த பகுதிக்கு 1000 -க்கும் அதிகமான கட்டுரை அல்லவா வந்திருக்க வேண்டும், இதே வேலையில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுத சொல்லுங்கள் நம் மக்கள் பக்கம் பக்கமாக எழுதி சமர்பிப்பார்கள் (இதில் நானும் அடங்குவேன்) ஆகா தங்கள் சொன்ன மொழி திணிப்பு மற்றும் மாநிலங்களின் மொழி உரிமையை பறிக்கும் செயல் இல்லையா? (ஆங்கிலம் என்ற மொழி மூலம்?)

ஆக இவர்கள் நடத்திய போராட்டம், தமிழை பாதுகாக்கவா? இல்லை ஹிந்தியை ஒழிக்கவா?
தமிழ் மொழி பாதுகாக்க படவில்லை; ஆங்கிலம் வளர்ந்து வருகின்றது....

என்னுடைய கூற்று, நம் தாய்மொழி தமிழுக்கு அடுத்ததாக ஹிந்தி பயில வேண்டும் என்பதே......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [15 August 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6884

N .A Thymiah அவர்களுக்கு, தங்களின் இயக்கத்தின் சீரிய முயற்ச்சிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

(இப்படி வாழ்த்து செய்தி அனுப்பினாலே நீயும் அந்த இயக்கமானு கேக்குறாங்கப்பா.... வாழ்த்து செய்தி சொல்லவே ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கு)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by SyedAhmed (HK) [16 August 2011]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 6927

சகோதரர் N A தைமியாஹ் அவர்களே

மனிதேநேய மக்கள் கட்சி இதனை சேவை செய்கிறது என்று எழுதி இருக்கிறீர்கள்.

இஸ்லாமிய மற்றும் மனித குல விரோதிகள் விடுதலை புலிகளின் தமிழக பிரதிநிகளோடு ஒன்று இனைந்து நிற்பது எதற்காக, காத்தான் குடியில் தொழுகையில் இருந்த முஸ்லிம்களை கொன்ற இவர்களை பற்றி உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

http://www.youtube.com/watch?v=aXH7XUKTqR0

அவசர ஊர்தி அணைத்து மக்களுக்கும் என்று சொல்லி விட்டு மெகா தொடருக்கு வாடகைக்கு விட்டது எதனால்?

http://www.youtube.com/watch?v=74iA7TvT1r4

அட்மின் இந்த கேள்விகள் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டு எழுதப்பட்டது அல்ல. இவை சமுதாய மக்களின் நியாயமான கேள்விகள் , சேவைகளின் பட்டியல் அனுப்பிய சகோதரரின் கருத்து உரிமைக்கு மதிப்பு அளித்ததுபோல் எனது கருத்திற்கும் மதிப்பு அளிப்பீர்கள் என்று எண்ணுகிறேன்

Administrator: செய்தியுடன் இணைந்த கருத்துக்கள் பகுதியை செய்தி குறித்த கருத்துக்கள் தெரிவிக்க மட்டும் பயன்படுத்தவும். செய்திக்கு தொடர்பு இல்லாத புது விவாதத்தை துவக்குவதை தவிர்க்கவும். கருத்து பரிமாற்றங்களுக்கு என்று புது வசதி - இன்ஷா அல்லாஹ் - விரைவில் அறிமுகம் படுத்தப்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by N.A. Thymiah (Chennai) [17 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6940

அன்புள்ள சகோதரர் syed Ahmed அவர்களுக்கு, அஸ்ஸலாமு அழைக்கும் ...

1) நாங்கள் ஆம்புலன்சை சீரியலுக்காக வாடகைக்கு விடவில்லை. உண்மை என்னவெனில் , ஒரு நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்கு அனுப்பி இருந்தோம், அவர்கள் தான் அதை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 95 ஆம்புலன்சுகளை இயக்கி மக்கள் பணியாற்றுகிற எங்களை கொச்சை படுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

2 ) விடுதலை புலிகளை நாங்கள் எங்கே ஆதரித்தோம். நீங்கள் நிரூபிக்க தயாரா ? . முஸ்லிம்களை படுகொலை செய்த விடுதலை புலியை கண்டித்து பல பொதுக்கூட்டங்களில் கண்டித்து பேசியிருக்கிறோம். உலகத்தில் யார் பாதிக்கபட்டாலும் குரல் கொடுக்கும் இயக்கம் த மு மு க, அதன் அடிப்படையில் தான் இலங்கை அப்பாவி தமிழர்கள் அநியாயமாக பாதிக்கப்படும்போது குரல் கொடுத்துள்ளோம், இது தவறா?.

இலங்கை ராணுவம் அங்குள்ள முஸ்லிம் பெண்களை ஆபாசமான நடவடிக்கைகளில் நடந்து கொண்டு வருகிறது. முஸ்லிம்களை துன்புருத்துகிறது. (இது தற்போதைய செய்தி ) - மேலும் தகவல் அறிய இலங்கை மௌலவி முபாரக் மதனி யை தொடர்புகொள்ளவும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by seyed mohamed (bengaluru) [17 August 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6941

தமுமுக ஒன்று தான் சுத்தமான் கட்சி என்று ennatheerkal. கலைஞ்சர் இட ஒதுக்கீடு கொடுத்ததும் ஆகா ஓகோ என்று புகழ்ந்து பாராட்டு விழா நடத்தி ஜெயாவை அவர்முன் திட்டி தீர்ப்பதும், கூட்டணி மாறியதும் ஜெயாமுன், ஜெயாவை புகழ்த்து கருணாவை திட்டி தீர்ப்பதும் வாடிக்கை. இந்த இரண்டு கட்சியும் தான் ஒரு சமயத்தில் அரசியலுக்காக பிஜேபி யை ஆதரித்தால், இந்த சமுதாய katchimattum என்னவாம் பிஜேபி ஆதரித்த பிறகு ஏன் ஒட்டி உறவாடனும்? அல்லது வாய்க்கு வந்த்தபடி மாறி மாறி பேசாமல் காரியம் சாதிக்க பார்க்கணும்.இப்போது எதோ கருணா இடஒதுக்கீடு தந்தார் என்றல், இந்த ஜெயாவிடம் அதிர்கரிக்க பார்க்கவேண்டுமே ஒழிய, சும்மா தந்தவரை ஜெயாவின் ஆசைக்காக திட்டக்கூடாது. அல்லாஹ் பெரியவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீ...
posted by SyedAhmed (HK) [19 August 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 7022

அஸ்ஸலாமு அழைக்கும் சகோதர தைமியா

அவசர ஊர்தியை பாதுகாப்புக்கு அனுப்பினார்கள் என்று சொல்லுவது புரியவில்லை, நடவடிக்கை எடுத்தாக சொல்கிறீகள் - பாராட்டுக்கள் எடுத்த நடவடிக்கை என்ன என்று மக்கள் மண்டத்தில் வைதகிவிட்டதா?

விடுத்தலை புலிகளை கடுமையாக சகோதரர் அன்சாரி எதிர்ப்பதை(???) நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் http://www.youtube.com/watch?v=RV0ZnPF4eKQ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved