Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:33:55 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7608
#KOTW7608
Increase Font Size Decrease Font Size
வியாழன், நவம்பர் 24, 2011
மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்பவர்கள் தங்களது கால்களை சுத்தம் செய்த பின்னர் உள்ளே இறங்க வேண்டும்! வெள்ளச்சேதம் மற்றும் நிவாரணப் பணிகள் கண்காணிப்பு அதிகாரி உத்தரவு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3559 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மேல்நிலை தொட்டிகளை சுத்தம் செய்பவர்கள் தங்களது கால்களை சுத்தமாக கழுவிய பின்பு தான் குடிநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மழை வெள்ள சேதம் மற்றும் நிவாரண பணிகள் கண்காணிப்பு சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹர்மந்தர்சிங் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளச் சேதம் மற்றும் நிவாரண பணிகள் கண்காணிப்பு அலுவலராக மாநில சிறுபான்மையினர் நல ஆணையர் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹர்மந்தர்சிங்கை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஹர்மந்தர்சிங் நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்தார். மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.



வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இது சம்பந்தமான அதிகாரிகள் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் ஹர்மந்தர்சிங் பேசியதாவது;-

*** வடகிழக்கு பருவமழையால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். கட்டுப்பாடு அறைகளில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து அங்கு பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

*** மழைக்காலத்தில் ஏற்படக் கூடிய சுகாதார கேடுகளை தவிர்ப்பதற்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்...

*** மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்யப்படும் போது சுத்தம் செய்பவர்கள் கால்களை சுத்தமாக கழுவிய பின்பு தான் குடிநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய வேண்டும்...

*** சுத்தம் செய்ய புதிய துடைப்பான்களை பயன்படுத்த வேண்டும்...

*** திறந்த நிலையில் உள்ள தொட்டிகளை மூட வேண்டும்...

*** சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்...

*** சுத்தம் செய்த தேதியையும், யாரால் சுத்தம் செய்யப்பட்டது என்பதையும் அதில் குறிப்பிட வேண்டும்...

*** இனி மழை இருக்காது என்று அலுவலர்கள் அலட்சியமாக இருக்க கூடாது. மழைக்காலம் முடியும் வரை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களாக இருந்தாலும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக பணிக்கு வரும் வகையில் தயாராக இருக்க வேண்டும்...

*** மழைக்காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்கு ஜே.சி.பி போன்ற இயந்திரங்கள் எங்கெங்கு உள்ளது, தனியாரிடம் அவைகள் இருந்தாலும் அவசர காலங்களில் அவற்றை பெறுவதற்கு வசதியாக அவர்களுடைய டெலிபோன் எண்கள், முகவரி போன்றவற்றை அந்தந்த மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், தாசில்தார்கள், பி.டி.ஓ, டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி வைத்திருக்க வேண்டும்...

*** ஆஸ்பத்திரிகளை குப்பைகள் இல்லாமலும், சுற்றியுள்ள இடங்களை நீர் தேங்காமலும் பார்த்து கொள்ள வேண்டும்...

*** குப்பைகள் மற்றும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்...

*** எங்கும் மழைநீர் தேங்காமல் வடிகால்கள் தூர்வாரப்பட வேண்டும்...

*** அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை சுத்தம் செய்து மழைக்காலத்தில் நிலத்தடி நீர் உயர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்...


இவ்வாறு ஹர்மந்தர்சிங் பேசினார். கலெக்டர் ஆஷீஷ்குமார் மாவட்டத்தில் மழைக்கு முன் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழை வந்த பின் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், வழங்கப்பட்ட நிவாரண உதவிகள், மழைகாலம் முடியும் வரை பாதிப்பு ஏற்பட்டால் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விளக்கினார்.

டி.ஆர்.ஓ அமிர்தஜோதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருண்மணி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி:
தினமலர் (24.11.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சுத்தம்....
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (jeddah- K.S.A.) [24 November 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13738

கலெக்டர்...சொன்னது போல பனியாலேர்கள்...கண்டிப்பாக... சுத்தத்தை...கடைபிடிக்க வேண்டும்..... இவர்களின்...சுத்தம்...மற்றும் பொறுப்புகளை... அல்லாஹு..ஒருவனே...நன்கு...அறிந்தவன்... என்னமோ.... நம் மக்களுக்கு...இதனால்...எந்த பிணீயும்... வராமல்....அல்லாஹு...பாதுகாக்க வேண்டும்... சம்பந்த...பட்ட... வார்டு...தலைவர்... மற்றும்...மக்கள்....இவர்களின்...சுத்தம்...சம்பந்தமாக...கொஞ்சம்..கண்டிப்புடன்... நடை படுத்த...வேண்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:மேல்நிலை தொட்டிகளை சுத்தம...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [24 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13739

HELO.

இந்த அதிகாரிகள் ஆய்வு கூட்டதில் நமது மாவட்ட கலெக்டர் தலைமயில்.MR.ஹர்மந்தர்சிங் அவர்கள் பேசியது>>>>அருமையானது.

நமது ஊர் பஞ்சாயத்து அதிகாரிகள் கூட முழு மனதோட செயல் பட்டால் மாஷா அல்லாஹ் அருமையாக இருக்கும்.

நமதூர் பஞ்சாயத் உறுபினர்களும் & அதிகாரிகள் சேர்ந்து செயல் பட்டால் ரொம்ப மகிழ்சி தான். +++++++ சுத்தம் செய்பவர்கள் கால்களை சுத்தமா இருப்பது அவசியம் & புதிய துடைப்பான்களை பயன்படுத்த வேண்டும் & அதிகாரிகள் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்... >>>>...... பாருங்கள் என்ன அருமையா SUPER வாசகம்.>>>>>>>

இது போல் நமதூர் அதிகாரிகள் செயல்பட்டால் இன்ஷா அல்லாஹ் நமதுருகு நல்லது . நோய்கள் வராமல் இருக்கும்.>>>..( குறையும் )

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மேல்நிலை தொட்டிகளை சுத்தம...
posted by SMS, NOOHU (tanzania) [24 November 2011]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 13740

சுத்தமாக இருந்தால்தான் சுகாதாரமாக வாழ முடியும்,
சுத்தம் ஈமானின் பாதியாகும் (நபி மொழி).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மேல்நிலை தொட்டிகளை சுத்தம...
posted by sulaiman N.T. YANBU (YANBU) [24 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13750

சுத்தம் ஈமானில் பாதி ===== சுத்தம் சுகம் தரும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. தொட்டி
posted by Noonu T (Maana Paana) [25 November 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 13756

ரொம்ப சுத்தம்.......இவ்வளவு நாலா காலை கழுவமலா இறங்கி இருக்காங்க?

இனியாவது நல்ல சோப்பு போட்டு குளிச்சிவிட்டு இறங்குங்கப்பா

தண்ணி அடிசிவிட்டு தண்ணி தொட்டியில் இறங்காம இருந்த சரி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:மேல்நிலை தொட்டிகளை சுத்தம...
posted by hasbullah mackie (dubai) [25 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13761

நபி சொன்னது போல வீட்டை சுத்தமாக வையுங்கள் .சுற்றுபுறத்தை சுத்தமாக வையுங்கள் ....அதே போன்று ஊரையும் சுத்தமாக வையுங்கள் ......நாட்டையும் சுத்தமாக வையுங்கள்........ மக்களுக்கு இடர்கள் தரக்கூடிய விதமாக தெருவில் முள் அல்லது கல் கிடந்தால் கூட அதை ஓரமாக எடுத்து போடுபவருக்கு கூலி உண்டு என்ற நபியின் வாக்குக்கு இணங்க நடந்து கொள்ளுங்கள்...Insha Allah சுகாதாரமான காயலை பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:மேல்நிலை தொட்டிகளை சுத்தம...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [25 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13769

எல்லாம் சரிதான், துப்புரவு செய்பவர் காலை கழுவுகிறாரா என்பதை கவனிக்கும் முன்பு, அவருக்கு காலில் புண்கள், அரிப்புகள், சேற்றுப் புண்கள் போன்ற அம்சங்கள் இல்லாமல் உள்ளாரா என்பதை முதலில் கவனியுங்கள்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:மேல்நிலை தொட்டிகளை சுத்தம...
posted by Habeeb Mohamed Nizar (Jeddah - K.S.A.) [26 November 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13785

சாலை ZIYAUDEEN அவர்கள்...கூறுவதை...பார்த்தால்....தண்ணீர்...குடிக்கவே....மனசு....வராது.....தலைஎழுத்து.....அவர்....சொல்வதும்.....உண்மையாக...இருக்க வாய்ப்பு இர்ருக்கிறது.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இரவு முதல் தொடர்மழை!  (25/11/2011) [Views - 2768; Comments - 0]
இரவு நேரங்களில் சிறுமழை!  (24/11/2011) [Views - 2638; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved