Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:21:28 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7616
#KOTW7616
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 26, 2011
நள்ளிரவு முதல் கனமழை! வீதிகளெங்கும் மழை நீர் தேக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3568 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் நேற்று (25.11.2011) முதல் மழை பெய்து வருகிறது. சாரல், தூறல் என நேற்று பகல் நேரம் முழுக்க பெய்த மழை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழியையடுத்து, இரவில் கனமழையாக உருவெடுத்தது.



நள்ளிரவு முழுக்க கொட்டிய கனமழை, காலை 09.30 மணியளவில் ஓய்ந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நகரில் சூரிய ஒளி படர்ந்து, தற்போது நல்ல வெயில் அடிக்கிறது. இந்நிலையில், இன்று காலை 05.30 மணிக்கு பதிவான செயற்கைக்கோள் படத்தின்படி, காயல்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை தொடரும் என்றே தெரிகிறது. மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



நேற்றிரவு பெய்த கனமழையால் நகரின் அனைத்து தாழ்வுப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. சிமெண்ட் சாலைகள் ஏற்கனவே போடப்பட்ட வீதிகளிலும், புதிதாக போடப்பட்ட வீதிகளிலும், சந்துகளில் நீர் தேங்கி, பொதுமக்கள் தம் வீடுகளுக்குள் செல்வதற்கு பெரும் சிரமத்தை உருவாக்கியுள்ளது. தெரு முனைகளில் நிறுவப்பட்டிருக்கும் நகராட்சி குடிநீர் வினியோகத் திறப்புக் குழாய் தொட்டிகள் வழமை போல தண்ணீர் தேங்கிய நிலையில் காணப்படுகிறது.

நீர்த்தேக்கக் காட்சிகள் பின்வருமாறு:-


























Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நள்ளிரவு முதல் கனமழை! வீத...
posted by T.M.RAHMATHULLAH (72) (KAYALPATNAM 04639 280852) [26 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13798

அஸ்ஸலாமு அலைக்கும்!

தெருக்காளில் 2,3 தெருக்கள் தவிர மற்றவை அடையாளம் காணுவது குயிஸ் போட்டாப்ல தான். இனி பெயர் போடுங்கள். அடுத்து;..மழை தேவைபடாது என்று எண்ணினால் அதற்கும் நமது நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு துஆ வை கற்றுத்தந்து தானே இருக்கிறார்கள் அதாவது :

"அல்லாஹும்ம ஹவா லைனா வலா அலைனா =அல்லாஹும்ம அலல் ஆக்காமி, வல் ஆஜாமீ ,வல் அவதியத்தி வழ் ழிராப்பி , வ மணாபித்திஷ் ஷஜர்"

பொருள் மஸ்நுன் துஆவில் பார்க்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. உறுப்பினர்கள் தலையிட்டு உடனே நடவடிக்கை .............
posted by N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) [26 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13801

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

காயல்பட்டணம் சுற்றுவட்டாரத்தில் நல்ல மழைப் பெய்து கொண்டிருக்கிறது - அதுவும் இரவு நேரங்களில் மழை பொழிந்த வண்ணமே இருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வுடைய அருள் மழை வருவது நமக்கு நன்மைதான் - இருந்த போதிலும் வல்ல அல்லாஹ்! நமக்கு தேவையான அளவு மழையை பொழியச்செய்து நமது தேவையை பூர்த்தி செய்வானாக ஆமீன்.
----------------------------------------------------
நகராட்சி நிர்வாகமே!

நகர் வீதிகளெங்கும் மழை நீர் தேக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது - இதில் நகராட்சி நிர்வாகம் உடனே தலையிட்டு இந்த மழை நீரை அப்புறப்படுத்தி மக்களுக்கு உதவிட வேண்டுகிறேன்.

தாமதமானால் கொசுக்களின் ஆதிக்கம் அதிகமாகி மலேரியா மக்களை தாக்கக்கூடும்.........

தேங்கியிருக்கும் நீரினால் துர்நாற்றம் ஏற்பட்டு பல நோய்களும் உருவாகும்..........

நடப்பதற்கு இடையூறாகி மக்கள் அவதியுறுவர் ..............

வாகனங்களின் போக்குவரத்திற்கும் இடையூறாகும்...............

சிறுவர்களும் தேங்கி இருக்கும் நீரில் விளையாடி பல விளைவுகளும் ஏற்படக்கூடும் ...........

மேலும் சொல்லொண்ணா பல துயரங்களும் உருவாகக்கூடும் - ஆகையால் நகர் மன்ற உறுப்பினர்கள் இதில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுத்து மக்களுக்கு உதவிட வேண்டுகிறேன். ---------------------------------------------------
மக்களே!

இது மழைக்காலம் தொடராக மழைப்பெய்து கொண்டிருக்கிறது - இந்த நேரத்தில் நாம்தான் நம்மை, நம் குடும்பத்தை நோய்களிலிருந்தும் , மற்ற ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்ற வேண்டும்.

எனவே சிறுபிள்ளைகளை தேங்கி நிற்கும் மழை நீரில் விளையாட விடாது பாதுகாத்துக்கொள்ளுங்கள்............

வீட்டினருகில் தேங்கி நிற்கும் நீரின் மேல் முடிந்தவரை மண்ணை போட்டு மூடுங்கள் கொசு தொல்லையிலிருந்தும், அசுத்த வாடையிலிருந்தும் உங்கள் வீட்டில் உள்ளவர்களை காப்பாற்றலாம்....................

மிக,மிக முக்கியமான வேண்டுகோள்! எல்லோரும் எப்போதும் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து ஆரிய பின்பு குடிக்கவும்..........

நன்றாக கொதிக்கவிட வேண்டும் இல்லையேல் பிரயோசனமில்லை.

இதையெல்லாம் கடைபிடித்தால் சுகமாக, சுபிட்சமாக நீங்கள் வாழலாம் - இல்லையேல் டாக்டர்கள் சுகமாக வாழ்வார்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மழை நம் ஊருக்கு பத்தாது..
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [26 November 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13807

தற்போது பொழிந்துள்ள மழை நம் ஊருக்கு பத்தாது.

இன்னும் நிலத்தடி நீர் உயரவில்லை. கிணறுகளில் இரண்டு உரை கூட தண்ணீர் அதிகரிக்கவில்லையாம். ஆகவே மழை போதும் என்று துஆ கேட்டு விடாதீர்கள்.

சகோதரர் காமில் அருகில் இருக்கும் மரணக் குழிகள் பல நம்மூரில் உண்டு. குறிப்பாக ஜாமிஉல் அஸ்ஹர் அருகில் இரண்டு, நகராட்சி அருகில் மூன்று, இப்படி பல இடங்களில் உண்டு. இதற்க்கு மூடியோ, பாதுகாப்போ ஒன்றும் கிடையாது. வலை தளங்களில் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டும் இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை.

அதில் விழுந்து அடிப்பட்டு, (சிறுவர்கள் விழுந்தால் நிலைமை மோசம்தான்), பின்பு லபோ.. திபோ.. என்று கத்தி பிரயோசனம் இல்லை. நகராட்சியே கொஞ்சம் கவனம் செலுத்தவும்.

விபத்துக்கள் வந்த பின்பு நடவடிக்கை எடுப்பதை விட, வரும் முன் நடவடிக்கை எடுப்பது தான் புத்திசாலித்தனம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:துவா கேட்பதிலும் ஒற்றுமை வேண்டும்.
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [27 November 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 13814

"யா அல்லாஹ் , எங்களுக்கு நல்ல பயனுள்ள மழையை தந்தருள்வாயாக ,எங்களுக்கு போதும் என்று நீ அறிந்தால் அதை நிருத்திகொள்வாயக, போதாது என்று நீ அறிந்தால் அதை எங்களுக்கு ஆபத்தில்லாத சுபிட்சமான மழையாக ஆக்கித்தருவாயாக" என நாம் எல்லோரும் துவா கேட்போமாக .

மழை வேண்டும் என்று ஒரு கூட்டமும் , மழை வேண்டாம் என்று மற்றொரு கூட்டமுமாக நாம் இதிலும் பிரிந்து நிற்க வேண்டாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நள்ளிரவு முதல் கனமழை! வீத...
posted by M.S.ABDULAZEEZ (G Z) [27 November 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 13815

சதக்தம்பி காக்கா உங்கள் கருத்து SUPER UP அல்லாஹு உங்கள் துஆ வை கபூல் செய்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நள்ளிரவு முதல் கனமழை! வீத...
posted by ALS maama (Kayalpatnam) [27 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13822

அஸ்ஸலாமு அலைக்கும்,

Nov-26 இல் பெய்த மழையில் ஊரின் தெருக்களில் தேங்கிய மழை நீர் வடியாமல் குளம்போல் காட்சி தருவதும், மக்களும் வாகனங்களும் அவதிப்படுவதை கண்டேன்.

மழை பெய்தாலே போதும் மழை விட்டாலும் மழைநீர் நம் தெருக்களை விட்டு செல்லமுடியாமல், வழியில்லாமல் அடிமைபோல் அங்கே பல நாள் கிடக்கிறது. தெருவில் உள்ள சிறுவர்கள் இந்த மழைநீரில் விளையாடுவதால் பலநேரம் அவர்களுக்கு ஜலதோஷம், காய்ச்சலும் வருகிறது. பல வீதிகளில் வாகனங்கள் செல்லும் பொது இட வசதி இல்லாமல் வீடு கட்டுவோர் மணலையும், ஜல்லிக் கற்களையும் குவித்து வைத்திருக்கிறார்கள், இதனால் வாகன ஓட்டிகளை குறை சொல்ல முடியவில்லை.

இருக்கும் வீதியில் நுழைந்து வேகமாக செல்வதால் பாதசாரிகள் ஒதிங்கிச்செல்ல வழியில்லை அதனால் நமது ஆடைகளில் மழை நீர் சகதிகள் மாடர்ன் ஆர்ட் போல் ஆகிவிடுகிறது. இப்படி மழை நீர் தேங்கும்போது அப்பகுதி கவுன்சிலர்கள் உடனடியாக நகராட்சிகளுடன் தொடர்பு கொண்டு தண்ணீர் உறிஞ்சும் வாகனம் மூலம் தண்ணீரை எடுத்துச்செல்லலாம். (காலப்போக்கில் எல்லா தெருக்களிலும் வடிகால் வசதி செய்யலாம். இதற்க்கு நகராட்சி பொதுப் பணி துறை மூலம் அரசுடன் கலந்து ஆவன செய்ய வேண்டுகிறேன்.) மழைகாலம் வந்தால் நீர்தேங்காமல், கொசுப்பண்ணை ஏற்ப்படாமல் இருந்தால் நமதூர் மக்கள் நலமாக வாழமுடியும்.

N.S.E. மஹ்மூது அவர்கள் எழுதிய மற்ற கருத்துகள் அனைத்தும் நான் மீண்டும் எழுதி உங்களின் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. N.S.E. மஹ்மூது அவர்களின் கருத்துக்கு நன்றி.

எழுத்தாளர், பொதுசேவை,
ALS மாமா,
K.T.M தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இரவு முதல் தொடர்மழை!  (25/11/2011) [Views - 2780; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved