Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:09:24 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8796
#KOTW8796
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 28, 2012
மாட்டிறைச்சி விலையேற்றம்! கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரிப்பு!! ஒரு வருடத்தில் மட்டும் 40 ரூபாய் விலையேற்றம்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6109 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் மாட்டிறைச்சி விலையேற்றம் கண்டுள்ளது. ரூ.140க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ மாட்டிறைச்சி, 24.06.2010 தேதி முதல் ரூ.160 என விலையேற்றம் செய்யப்பட்டது. இறைச்சி வணிகர்களே தன்னிச்சையாக இதுபோன்று விலையேற்றம் செய்வதைத் தடுப்பது, ஆட்டோ கட்டணங்களை முறைப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் 30.07.2010 அன்று, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இறைச்சி வணிகர்கள் தன்னிச்சையாக விலையேற்றம் செய்யக்கூடாது என்றும், இன்னும் பல கருத்துக்களும் அக்கூட்டத்தில் பேசப்பட்டது. இது ஒருபுறமிருக்க, கடந்த 01.02.2012 அன்று ரூ.20 ஏற்றப்பட்டு, கிலோவுக்கு ரூ.180 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

விலையேற்றம் செய்யப்பட்டு நான்கு மாதங்களே நிறைவுற்ற நிலையில், கடந்த 06.06.2012 அன்று மீண்டும் ரூ.20 விலையேற்றப்பட்டு, தற்போது ஒரு கிலோ மாட்டிறைச்சி ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



அதிகளவில் பணம் கொடுத்தே மாடுகளை தாங்கள் கொள்முதல் செய்வதால், இந்த விலையேற்றம் தவிர்க்க இயலாதது என்று மாட்டிறைச்சி வணிகர்களால் தெரிவிக்கப்பட்டாலும், நடுத்தர மற்றும் ஏழை பொதுமக்கள் மலிவு விலையைக் கருத்திற்கொண்டு மாட்டிறைச்சியையே பெரிதும் விரும்பி வாங்கும் நிலையிருக்க, இதுபோன்று நினைத்த நேரத்தில் விலையேற்றம் செய்து வருவது மாட்டிறைச்சி வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. விலை ஏற்றம் என்பது இப்போது எல்லாவற்றிலும் உள்ளதே
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [28 July 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20219

விலை ஏற்றம் என்பது இப்போது எல்லாவற்றிலும் உள்ளதே. இருந்தாலும் இது அதிகம் தான்.

தமிழகத்தில் இருந்து கொண்டு வரக்கூடிய மாடுகளையே அறுத்து இங்கு கேரளத்தில் அதிகமாக விற்பனை செய்கிறார்கள். ஆனால் இங்குள்ள விலை: ஒரு கிலோவுக்கு 120 வும், முள் போடாமல் 150 வும் ஆகவே உள்ளது.

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எப்போதான் இதுக்கு விடிவுகாலம் வருமோ?
posted by AbdulKader ThaikaSahib (Riyadh, KSA) [28 July 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20221

எத்தனை நூறுகள் ஏற்றினாலும் வாங்கி தின்ன நாம் இருக்கும் போது வியாபாரிகளுக்கு என்ன கவலை?????

எப்போதான் இதுக்கு விடிவுகாலம் வருமோ?

அடுத்த Vacation-க்கு ஊருக்கு வரும்போது ரூ. 300 ஆனாலும் ஆச்சரியம் இல்லை.

சகோ. ஆதில் அவர்களே, நீங்க கேர்ளா விலையெல்லாம் பார்க்கவேணாம். நம்ம அடுத்த ஊரு, ஆத்தூருக்கு போய் பாருங்க.......

கலரி சாப்பாடுல 60 - 40 கலந்தாங்க, இப்போ அதுக்கும் ஆப்பு...... இனிமே சாம்பார் சாதம்தான் போடணும்... கல்யாணத்துல....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மாட்டிறைச்சி விலையேற்றம்!...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [28 July 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 20223

"What goes up must come down". Vegetables, chicken, pulses, cement, sand, steel, and all other commodities go up at a regular interval when there is an extensive demand and or less supply, but they all come down a little when the production increases and supply stables. But two things never come down. One is Auto fare and the second is meat (Mutton & beef) price.

Recently Oil marketing companies increase the petrol price nearly 10% (Rs 7 per litre). Immediately local Auto drivers increases the fare from Rs 25/- to Rs 30/- (an increase of 20%). Two days later Oil marketing companies reduced the price by Rs 2.50 paise and two weeks later they reduced another 3 rupees. Lately they reduced another 0.70 paise again. In total they have reduced Rs 6.20 paise out of Rs 7/- they hiked. Nevertheless Auto drivers did not bother to reduce the price. No one dare to ask them.

It will not affect the rich and they will be hardly bothered by the price increase. Middle class?. Yes it affect them, but still they can afford. They will not do anything. What about the poor ?

Unless until we (people) regardless of our economic status stand against these reckless people, they will reign for sure. Can we stand against them ? Yes we can! How ?. By boycotting their products and service for two weeks , we can bring them to their knee.

The phrase goes, "Unite we stand, divide we fall". In this case "Unite we stand, divide they stand".


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மாட்டிறைச்சி விலையேற்றம்!...
posted by Muzammil (Dubai) [28 July 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20224

Assalamu Alaikkum

Yes i agree with brother Thaika Sahib comments. There should be proper steps to be taken as soon as possible through Kayal unified association.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:மாட்டிறைச்சி விலையேற்றம்!...
posted by mackie noohuthambi (kayalpatnam) [28 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20226

மாட்டிறைச்சி தின்பது சமூகத்தில் ஏளனமாக கருதப்பட்ட காலங்கள் உண்டு. கிலோ 40 ரூபாய்க்கு விற்ற காலத்தில் அதை வாங்கி செல்லும்போது அடுத்தவர் பார்த்தால் குறையாக நினைப்பார்களே என்று ஒதுக்கமாக சென்ற காலங்கள் நினைவுக்கு வருகின்றன.

இப்போது ஆட்டிறைச்சியின் விலையின் தாக்கத்திலிருந்து விடுபட மாட்டிறைச்சி வாங்கும் காலம். அதுவும் இப்படி ஏறி கொண்டுபோகிறது. வளர்ந்து வரும் பொருளாதார மாற்றத்தில் இது தவிர்க்க முடியாதது என்றாலும் விலைகளை கட்டுப்பாடாக வைத்திருக்க ஒரு சமூக கட்டுப்பாடு தேவைதான்.

அதை நமதூரில் அமுல்படுத்த முடியுமா எனபது கேள்விக்குறிதான். மற்ற ஊர்களில் ஊர் கட்டுப்பாடு என்று வைத்தால் அனைவரும் அதற்கு மதிப்பளித்து கட்டுப்படுவார்கள்.நாம்?............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:மாட்டிறைச்சி விலையேற்றம்!...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [28 July 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20227

நான் சிறுவனாக இருந்த காலத்தில் மாட்டுக்கறி வாங்குவது என்பது ஒரு கவுரவக்குறைச்சலாக கருதப்பட்டது. அன்று ஒன்று அல்லது இரண்டு கடைகள்தான் இருக்கும்.

இன்று அப்படி இல்லை. அனைவர்களும் விரும்பும் உணவாக ஆகிவிட்டது. காயல்பட்டினம் என்றாலே, விலை என்பது அனைத்துக்கும் அதிகம்தான்.

எங்கள் பகுதியில் சில காலங்களுக்கு முன்பு, ஒரு முதியவர் மேலப்பாளையத்திலிருந்து அருமையான மாட்டுக்கறி மிகக்குறைந்த விலையில், வீடு வீடாக விற்பனை செய்து வந்தார். இன்னும் ஓர் பெண்மணியும் இது மாதிரி விற்பனை செய்தார்கள்.

தற்போது அவர்கள் வருவது இல்லை. விசாரித்ததில் லோக்கல் ஆட்கள் அவர்களை மிரட்டி, இங்கு விற்பனை செய்யக்கூடாது என்று முதியவரை அடித்ததாகவும் அறிய முடிந்தது.

சகோ. ஆதில் அவர்கள் கூறியது போல, தமிழகத்தில் இருந்து லாரிகள் மூலம் அதிக விலை கொடுத்து வாங்கிய மாட்டை, அவர்கள் குறைந்த விலையில் கறி விற்பனை செய்கின்றார்கள் என்றால், லாபம் இல்லாமலா வியாபாரம் செய்கின்றார்கள். நம் ஆட்கள் சொல்லுவது புரியவில்லை..??

யார் மணி கட்டப்போகிறார்கள், புரியவில்லை.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:மாட்டிறைச்சி விலையேற்றம்!...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [28 July 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20228

அஸ்ஸலாமு அலைக்கும்

ஐயோ ....என்னப்பா ...இது. தங்கம் விலையை விட இந்த மாட்டிறைச்சி விலையேற்றம் படு ஸ்பீடாக எறுகிறதே.... சேர் மார்கெட்டில் விட வேண்டியதுதான் போல் தெரிகிறது ( தமாஸ் ) ...... நம் ஊர் ஏழை & நடுத்தர மக்களின் நிலைமைதான் என்ன ? பாவம் வாரத்தில் ஒரு நாள் மட்டும் ''' மாட்டிறைச்சி சாப்பிட்டு வருபவர்களின் நிலைதான் என்ன ......அதோ கதிதானோ .....

இந்த விலையேற்றதை பார்க்கும் போது நமக்கு எல்லாம் நெஞ்சு படபட வென்று அடிக்கிறது. நம் பக்கத்துக்கு ஊருக்கும் / நம் ஊருக்கும் ஏன் விலையில் இப்படி வித்யாசம் வருகிறது ????

நம் ஊர் ஐக்கிய பேரவை கூடிய கூட்டத்தில் எடுத்த தீர்மானதின் முடிவு தான் என்ன ?

நம் ஊர் ஐக்கிய பேரவை மூலம்தான் இந்த நம் ஊர் முக்கியமான பிரச்சனைகளை ( ஆட்டோவின் தாறு மாறான போக்குவரத்துக்கு விலை ஏற்றம் / மீன் வில்லை ஏற்றம் / கிடா கறி & மாட்டு கறி விலை ஏற்றம் இவைகளை ) கண்டிப்பாக ஒரு நல்ல லவலுக்கு கொண்டு வர முடியும் + நம் ஊர் பொதுமக்களும் கண்டிப்பாக இந்த ஐக்கிய பேரவையோடு முழுமையான நல்ல ஒத்துளைப்பு கொடுக்க வேணும். அப்பத்தான் காரியங்கள் இன்ஷா அல்லாஹ் வெற்றி அடையும். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Curse of Kayal
posted by Riyath (HongKong) [28 July 2012]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 20230

Cost of living is growing up in our Kayal irrespective of any economic factor. Due to the demand, the meat price is always high in kayal compare to anywhere.

The curse of kayal is though we are located near by ocean, the fish rate is high in kayal compare to neighbor villages. The reason sales man saying is that people in kayal are ready to buy for any rate because they are earning money from foreign. Their thought corrupted by our rich people and they do not know "who ever in foreign country lost many to earn money and how about other than rich people".

To avoid this kind of unreasonable hike only by introducing income tax to these small scale business. People should ask receipt for their (atleast >100) payment. This income tax method will bring business to think about society while increasing rate.

**Wasslam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:மாட்டிறைச்சி விலையேற்றம்!...
posted by P.S.ABDUL KADER (jeddah) [28 July 2012]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 20233

அப்படி ஒரு பெரிய விலைஏற்டம் இல்லை. செத்தமாட்டை அறுத்து விக்காமல் இருந்தால் சரி.

நம்மவர் மாட்டிறைச்சி விலையேற்றம் கிலோவுக்கு 20 என்ற புலம்பலை விட்டுவிட்டு, எப்படிப்பட்ட மாட்டை அறுத்து கடை வீதிக்கு கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள் என்பதை கவனித்து பார்க்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:மாட்டிறைச்சி விலையேற்றம்!...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [28 July 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 20237

ரெண்டு நாளைக்கு பேசுவாங்க அப்புறம் வழக்கம்போல..... ?நாளைக்கு அந்த கடையில் காகா எனக்கு முதல தாங்க நான் அவசரமா போகணும்....இப்படி பட்ட பேச்சுக்களுக்கு நடுவில் வியாபரம் படு ஜோரா நடக்கும் ( கடைகாரர் முகத்த பாருங்க போட்டோல சும்மா சூப்பரா சரிப்பு ) நாம்தான் இங்க கருத்து பகுதில சொல்றோம் ஆனா நமஊருல அதல கண்டுகுற மாதிரி தெரியல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:மாட்டிறைச்சி விலையேற்றம்!...
posted by sulaiman (abudhabi) [28 July 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20239

அஸ்ஸலாமு அழைக்கும், ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்கபடும்போது அது கிடைப்பது பற்றாகுறை ஏற்படுகிறது. இப்படி பற்றாகுறை ஏற்படும்போது அந்த பொருளுக்கு மவுசு அதிகரிக்கிறது. இதன் காரணமாக விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. இது பொதுவான விதி.

ஆனால் நமது ஊரை பொறுத்த மாத்திரம் இந்த பொதுவான விதிகளையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு. ஆளுக்கு ஒரு சங்கங்களை வைத்துகொண்டு தங்கள் இஷ்டத்துக்கு விலையேற்றம் செய்கிறார்கள் நமது ஊரு வியாபாரிகள். நமது சுற்று வட்டாரங்களில் எல்லாம் மாட்டு இறைச்சி குறைவான விலையில் விற்கப்படும்போது. நமது ஊர் மாட்டு இறைச்சி வியாபாரிகள் மட்டும் அதிக விலையில் கொள்முதல் செய்கிறோம் என்ற காரணம் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை.

இதுபோன்ற நியாயம் இல்லாத விலையேற்றங்கள் தடுக்க படவேண்ட்டும். இதை தடுபதற்கான சரியான செயல் திட்டங்களை ஏற்படுத்தி நடைமுறை படுத்த வேண்ட்டும். தற்காலிகமாக இந்த அநியாயமான விலையேற்றத்தில் இருந்து நமது பொருளாதரத்தை ஈடு செய்வதற்கு நாம் வாங்கும் அளவை குறைத்துக்கொள்ள வேண்ட்டும்( உதரணத்துக்கு; ஒரு கிலோ வாங்குகிறதுக்கு பதிலாக 800 கிலோகிராம் வாங்கிபயன்படுத்துவது)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:மாட்டிறைச்சி விலையேற்றம்!...
posted by Shahul Hameed (Hong Kong) [28 July 2012]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 20241

பேசாமே 2 - 3 கடையை திறந்து நய விலைக்கு விக்க ஆரம்பித்தால் வழிக்கு வருவான்வோ போல.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:மாட்டிறைச்சி விலையேற்றம்!...
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [29 July 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20252

ஃபோட்டோவைப் பாருங்க...! கறி விற்பவர் கிலோ ரூ,200 என எழுதப்பட்ட சிலேட்டைப் பார்த்து என்ன ஒரு சிரிப்பு...?

பொதுவாக மீனாகட்டும், காய்கனியாகட்டும், காடை, கவுதாரியாகட்டும் காயல்பட்டினத்தில் ஒரு விலை, பிற ஊர்களில் ஒரு விலை! இது எழுதப்படாத ஓர் சட்டமாகவே வாழையடி வாழையாக இருந்து வருகின்றது.

தின்று கெட்டான் _ _க்கன்னு சும்மாவா சொன்னாங்க? இப்படியே விலையை ஏத்திக்கிட்டேப் போங்க இனி மாட்டிறைச்சியை நாங்களும் தொங்க விட்ட நிலையிலேயேப் பார்த்து திருப்தி பட்டுக்கொள்கிறோம். என்ன? கிலோக் கணக்கிலெ வாங்கினவங்க இனி கிராம் கனக்கிலெ வாங்கப் போறாங்க அவ்ளோதான்!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:மாட்டிறைச்சி விலையேற்றம்!...
posted by vilack sma (saigon, vietnam) [29 July 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 20283

ஈரல் , பல்குத்தி , மீன் சினை , காடை , கவுதாரி இவைகளை தங்கத்திற்கு நிகராக விலை வைத்து வாங்கும் நாம் என்று இதில் இருந்து திருந்துகிறோமோ அன்றுதான் எல்லா விலைவாசிகளும் குறையும் . அருகில் இருக்கும் ஆருமுகநேரிக்காரனை ஏளனமாகப்பார்க்கும் கெளதாரிக்காரன் நமதூர் மக்களை Bill Gates என்றும், Ambani என்றும் நினைக்கிறான். நாமும் அப்படித்தானே இருக்கிறோம். வெளிநாட்டில் சம்பாதித்து, ஊரில் பொருட்கள் வாங்குவது நமக்கு ஒரு ´´ துக்கடா ´´ தான் .

பொதுவாக விலையேற்றத்தால் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள் மட்டுமே . வசதி உள்ளவனுக்கு எந்த பொருளையும் , என்ன விலை கொடுத்தாலும் வாங்கும் சக்தி . ஏழைகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்கும் சக்தி இல்லை என்றாலும் , மிக மிக மலிவானவற்றை வாங்கி உண்பார்கள் . இங்கே அந்தஸ்து என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல . ஆனால் நடுத்தர வர்க்கம் பாவம் , அதிக விலை கொடுத்து அவர்களால் வாங்க முடியாது , அதேசமயம் மிகவும் மலிவான பொருட்களை வாங்க அவர்களின் அந்தஸ்து தடையாய் நிற்கும்.

நமதூரை பொறுத்தவரை ஏழைகள் குறைவுதான் , நடுத்தர வர்க்கம்தான் அதிகம் .

AWS காக்கா சொன்னதுபோல 2 வாரத்திற்கு கறி வாங்காமல் கடைகாரர்களை விலை குறைக்க நிர்பந்தம் செய்யலாம் . ஆனால் நமதூர் மக்கள் அதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள் .

ஐக்கிய பேரவையோ , வேறு எந்த சங்கங்களோ , யார் சொன்னாலும் நமதூர் மக்கள் கேட்கப்போவதில்லை . அவர்களாகவே திருந்தினால்தான் உண்டு .

vilack sma , saigon , vietnam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. மாட்டுக்கு தெரியுமா!!!!?
posted by shahul hameed sak (malaysia) [29 July 2012]
IP: 49.*.*.* Malaysia | Comment Reference Number: 20294

விலையை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைக்க!! வஹ்ஹாப் காக்கா பாக்கட்டோடு சேர்த்து நெஞ்சில் கைய்யை வைத்திருக்கிறார் குதூகலத்தோடு!!!

லாரி வாடகை மற்றும் கூலி அதிகம் கொடுத்து சில நூறு கிலோமீட்டர் அப்பால் கொண்டு சென்று விலை குறைவாக விற்கும்போது, இவர்களுக்கும் மட்டும் ஏன் இந்த விலை ஏற்றம், மாட்டுக்கு யார் லாடம் அடிப்பது,(அதாங்க விலையை கட்டு படுத்துவது)

உள்ளூரில் நாம் விலை மதிப்பாக உள்ளோம் என்பது அந்த மாடுகளுக்கு தெரியுமா?

உள்ளூர் மாடு உள்ளூரில் விலை போகாது என்ற பழமொழியை மாற்றுங்க!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:மாட்டிறைச்சி விலையேற்றம்!...
posted by ஹத்தாத் (திரிச்சூர்) [30 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20300

மாட்டுக்கறி தின்பதை ஏளனம் செய்வது அந்தகாலம், மாட்டுக்கறியை பெட்டியில் போட்டு கடைகாரர் கொடுத்தால் அதை பட்டைஇல் கட்டி கட்டி தாருங்கள் என்று கேட்டதும் அந்தகாலம்.

தற்போது விலை எரிவிட்டது என்று புலம்புவது இந்த காலம். காலம் பதில் சொல்லியகவேண்டிய கட்டாய கடமை..............

ஹத்தாத்-திரிச்சூர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved