Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:52:48 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8788
#KOTW8788
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுலை 26, 2012
சிறந்த நகராட்சிகளுக்கு ரொக்க பரிசு: ஜெயலலிதா அறிவிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3640 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சிகள் மத்தியில் ஆக்க பூர்வ போட்டியினை உருவாக்க சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு - ஆண்டுதோறும் பரிசுகள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:

சென்னை மற்றும் சென்னை நகரைச் சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிக அமைப்புகள் அதிகரித்து வருவதன் விளைவாக, மக்கள் தொகை அதிகரித்து, அதன் காரணமாக தனி வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி வருவதற்கேற்ப கழிவுநீர் அகற்றல் அமைப்பு அமைக்கப்பட வேண்டும்; நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் வழிப் பாதைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், சென்னை நகரில் உள்ள நீர் வழிப்பாதைகளில் கழிவு நீர் கலக்கக் கூடிய கூவம் ஆற்றில் 105 இடங்கள், பக்கிங்காம் கால்வாயில் 183 இடங்கள், அடையாறு ஆற்றில் 49 இடங்கள் என மொத்தம் 337 இடங்களில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய 300 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் நிறைவேற்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக 150 கோடி ரூபாயை தவணை முறையில் சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு விடுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதன்படி, பிரதானக் கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், சிறிய அளவிலான குழாய்களை அகற்றி, அதிக விட்டம் கொண்ட கழிவு நீர் உந்து குழாய்கள் அமைத்தல், சாலையோரம் சிறிய கழிவுநீரேற்றும் நிலையங்கள் அமைத்தல், ஏற்கெனவே உள்ள கழிவுநீரேற்றும் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் ஏற்கெனவே உள்ள சிறிய அளவிலான கழிவுநீர் குழாய்களை, பெரிய குழாய்கள் கொண்டு மாற்றி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சென்னை நகரில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் ஆறுகளுடன் கலப்பது தடுத்து நிறுத்தப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சேவை தரம் உயர, அவைகளுக்கிடையே ஆக்கப்பூர்வ போட்டி அவசியம் என்பதால் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், சிறந்த சேவைகள் செய்யும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் என்றும், சிறந்த ஒரு மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாயும், சிறந்த முதல் மூன்று நகராட்சிகளுக்கு முறையே 15 லட்சம், 10 லட்சம் மற்றும் 5 லட்சம் ரூபாயும், முதல் மூன்று பேரூராட்சிகளுக்கு முறையே 10 லட்சம், 5 லட்சம் மற்றும் 3 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும், பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

இதனைச் செயல்படுத்தும் விதமாக சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை தேர்வு செய்ய, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களை தலைவராகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், நகர்மன்ற தலைவர்களின் பேரவைத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகவும், நகராட்சி நிர்வாக இயக்குநரை உறுப்பினர்-செயலாளராகவும் கொண்ட ஒரு உயர்மட்ட குழுவினை நியமித்தும், இதற்கென 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்தக் குழு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் திரட்டப்படும் வருவாய், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள், சாலை மேம்பாடு, மின்சார பயன்பாட்டில் சிக்கனம் மற்றும் தெருவிளக்குகளை தேவையான நேரங்களில் மட்டும் எரியச் செய்தல், திறம்பட்ட நிதி மேலாண்மை, சேவை மையங்களின் செயல்பாடுகள் மற்றும் பிற சேவைகளின் மேம்பாடு, சிறப்பு முயற்சிகள் ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் விருதுக்கான சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை உயர்மட்ட குழு தேர்வு செய்யும்.

இதன் மூலம் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிடையே ஆக்க பூர்வ போட்டி ஏற்பட்டு அவைகளின் பணித் தரம் உயர்வடையும்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:சிறந்த நகராட்சிகளுக்கு ரொ...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [27 July 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 20189

நம்ம ஊரு நகராட்சிக்கு முதல் பரிசு கிடைக்க வாய்புகள் மிக அதிகம் உள்ளது??? ஏன் தெர்யுமா ? தமிழ் நாட்டுலய நம்ம நகராட்சி உறுப்பினர்கள் மடும்தன் அதிகமாக வெளிநடப்பு செய்து சாதனை புரிந்து இருக்கிறார்கள். அப்படினா நம்ம நகராட்சிக்கு கண்டிப்பாக.............??????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:சிறந்த நகராட்சிகளுக்கு ரொ...
posted by Abdul Majeed (Chennai) [27 July 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 20191

ஒன்லி அம்மா கட்சி காரங்க இருக்ற நகரட்சிகுத்தான் கொடுப்பாங்க


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:சிறந்த நகராட்சிகளுக்கு ரொ...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [27 July 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 20196

அஸ்ஸலாமு அலைக்கும்

அம்மாவின் இந்த சிறப்பு திட்டம் அருமையானதுதான் ....அப்பத்தான் தமிழ் நாட்டில் நகராட்சிகளின் செயல் பாடு நன்றாகவும் இருக்கும் + சீர் அடையும்.

அது சரி இந்த "" சிறந்த நகராட்சிகளுகாண ரொக்க பரிசு ''' நம் ஊர் நகராட்சிக்கு கிடைக்குமா ?? கிடைக்கும் போல் தான் நமக்கு தெரிகிறது. காரணம் ....நம் தலைவி அவர்களும் + நம் அருமை நகராட்சி உறுபினர்களும் தற்போது இணைத்து ஒற்றுமையுடன் செயல் ஆற்ற போவதாக கேள்வி பட்டோம். ரொம்பவும் மகிழ்சியாக இருக்கிறது. அல்லாஹ் இந்த ஒற்றுமையை மேலும் சிறப்பாகி அருள் வானாகவும் ஆமீன்.

நம் தமிழக முதல்வரின் இந்த சிறப்பு ஊக்க பரிசுக்கு நம் ஊர் நகர் மன்றத்தை முன் உதாரணமாக்கி ..... நம் தலைவியும் & நம் நகர் மன்ற உறுபினர்களும் .... காட்டுவார்கள் என்றே நாம் நம்புகிறோம்..... இன்ஷா அல்லாஹ் .... நடக்கும்.

நம் யாவர்களின் எதிர் பார்ப்பு கண்டிப்பாக நிறைவேறும். வினாகாது.... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:சிறந்த நகராட்சிகளுக்கு ரொ...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [27 July 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20212

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,நமதூர் நகராச்சி நடவடிக்கைகளை உன்னிப்புடன் கவனித்தவண்ணம் இருக்கிறார்கள், உறுபினர்களின் வெளிநடப்பு, உறுப்பினர்கள் தலைவிக்கு ஒற்றுமையாக செயளிடுவதை பார்த்து ரொக்க பரிசாக நமதூர் நகரமன்றதை கலைக்க தயங்கமாட்டார் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:சிறந்த நகராட்சிகளுக்கு ரொ...
posted by Vilack SMA (saigon , vietnam .) [27 July 2012]
IP: 180.*.*.* Vietnam | Comment Reference Number: 20213

ஒருவேளை இந்த ஊக்கப்பரிசு நமது நகராட்சிக்கு கிடைத்து , தலைவி அதை அப்படியே மன்ற உறுப்பினர்களுக்கு " பெருநாள் பரிசு " என்று கொடுத்தால் , அடுத்த பெருநாள் வரை வெளிநடப்பு செய்ய மாட்டார்கள் .

vilack sma , saigon , vietnam .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:சிறந்த நகராட்சிகளுக்கு ரொ...
posted by M.Jahangir (Kayalpatnam) [28 July 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 20218

அப்போ விளக்கு காக்கா அவர்களே! உறுப்பினர்கள் அனைவரும் பணத்திற்காகத்தான் வெளிநடப்பு செய்கிறார்கள் என்று கூற வருகின்றீர்களா?

M.ஜஹாங்கிர்.
5-வது வார்டு உறுப்பினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:சிறந்த நகராட்சிகளுக்கு ரொ...
posted by Shahul Hameed (Hong Kong) [28 July 2012]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 20222

ஜஹாங்கிர் அவர்களே!

V .S .M . காக்கா அவர்களின் ஆசை சிறந்த நகராட்சிகளுக்கு ரொக்க பரிசு நம் நகர் மன்றதிருக்கு கிடைக்க வேண்டும் என்பது தான். அதை அவர்களின் ஸ்டைலில் சொல்லி இருக்கிறார்கள் அவ்வளவே! தப்பாக எடுக்க வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Where is our town stands now?
posted by Riyath (HongKong) [28 July 2012]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 20225

This is the good approach by our state government to motivate municipalities to do their duties with competition rewards. Not tough if we do our duties with fulfillment. CM of TN clearly declared the scale for measuring duties of Municipalities to award best three places with reasonable money for improving town to the next level.

I hope - our councilors will practically talk about these items in August month meeting that where we are now, what needs to be done, why lag in progress, how prioritize the items, which part is more important, etc

அளவுகோல்கள்:::

நகராட்சிகளின் வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் திரட்டப்படும் வருவாய்,
திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம்,
திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள்,
சாலை மேம்பாடு,
மின்சார பயன்பாட்டில் சிக்கனம் மற்றும் தெருவிளக்குகளை தேவையான நேரங்களில் மட்டும் எரியச் செய்தல், திறம்பட்ட நிதி மேலாண்மை,
சேவை மையங்களின் செயல்பாடுகள் மற்றும் பிற சேவைகளின் மேம்பாடு,
சிறப்பு முயற்சிகள்.

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:சிறந்த நகராட்சிகளுக்கு ரொ...
posted by mackie noohuthambi (kayalpatnam) [28 July 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20232

நமதூருக்கு பரிசு கிடைக்க வேண்டும் என்பதற்காகவாவது வெளிநடப்புகள் கருத்து மோதல்களை கொஞ்ச நாளைக்கு ஒத்திவைப்பார்களா நம்மவர்கள்.

அண்ணா நாமம் வாழ்க புரட்சி தலைவர் நாமம் வாழ்க, தங்கத்தாரகை புரட்சி தலைவி அவர்கள் வாழ்க என்று விளம்பரங்கள் வைத்தால் பதாதைகள் தெருவெங்கும் வைத்தால் கிடைக்குமா எனபது பற்றி ரத்ததின் ரததங்களுக்குதான் தெரியும்.

எல்லாமே அரசியல் மயமாகி விட்ட பிறகு இதை எல்லாம் நம்பி நாம் நமது வழக்கமான அடிபுடிகளை நிற்பாட்ட முடியுமா என்று உறுப்பினர்கள் கேட்பது விளங்குகிறது.

சரித்திர புகழ் பெற்ற காயல்பட்டினதுக்கு இந்த பரிசு எப்போதோ கிடைத்திருக்க வேண்டும். எல்கே எம்கேடி காலம் தொடுத்து நாம் இப்படித்தான் பிரிந்து நின்று மக்கள் பணியாற்றுகிறோம். என்ன செய்வது, நாய் வாலை மட்டை வைத்து நிமிர்த்த முடியுமா.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:சிறந்த நகராட்சிகளுக்கு ரொ...
posted by SEYED ALI (ABUDHABI) [28 July 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20234

ஊருக்கு மொத்தமாக பரிசு கிடைத்தால் தன்னலத்திர்க்காகவே கவுன்சிலர்களாகி வந்தவர்களுக்கு என்ன நன்மை. பிறவிக் குணத்தை மாற்றிவிட முடியுமா? சம்பாதிப்பதே குறிக்கோள். அதற்க்கு அரசியல் பண்ண வேண்டும். அரசியல் பண்ண ஊழல் பண்ணியே ஆக வேண்டும். இது நம்மூருக்கென்ன நம் மாநிலதிர்க்கேன்றே ஆண்டவன் விதித்த தலை எழுத்து


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:சிறந்த நகராட்சிகளுக்கு ரொ...
posted by syedahmed (GZ, China) [28 July 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 20235

Contribution awards of these special scheme provided by our CM cause to make the municipality corporation services to be as standard level that has to rendered as a right way of right administration. There is no doubt to perform the efficiency in morale with aduquate structure. Neat and legible leadership governed only by our CM is highly appreciated , and we are all to profound our esteemed gratitude for the greatest attention with hope of anticipating features at all.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved