Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:12:18 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8892
#KOTW8892
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 13, 2012
காயல்பட்டினத்திற்கு தினசரி வழங்கப்படும் தண்ணீர் 11 லட்ச லிட்டர் என குறைக்கப்பட்டது! பாபநாசம் அணையில் இன்று 1 மில்லிமீட்டர் மழை பதிவு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2433 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்திற்கு - மேல ஆத்தூரில் அமைந்துள்ள நீர்தேக்கத்தில் இருந்து குடிநீர் தினசரி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பராமரிக்கும் இந்த நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

சாதாரண காலங்களில் தினசரி 20 லட்சம் லிட்டர் - காயல்பட்டினத்திற்கு வழங்கப்படுவது உண்டு. தற்போது - தென் மேற்கு பருவ மழை பெரும் அளவில் பெய்யாததால் - பாபநாசம் அணையில் உள்ள தண்ணீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. 143 அடி வரை நீரினை தேக்கும் திறன்கொண்ட இந்த அணையில் - தற்போது 33.15 அடிக்கு மட்டுமே நீர் உள்ளது. இதனால் - காயல்பட்டினத்திற்கு வழங்கப்படும் தண்ணீர் அளவு தினசரி 15 லட்ச லிட்டர் என குறைக்கப்பட்டது. மழை பெய்யாத சூழல் தொடர்ந்தால் - இந்த அளவு, மேலும் குறைக்கப்படும் என்று அண்மையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய - துணை பொறியாளர் பாலசுப்ரமணியம், காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு தெரிவித்திருந்தார்.

இன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் உரையாடிய துணை பொறியாளர் - காயல்பட்டினத்திற்கு வழங்கப்படும் தண்ணீர் மேலும் குறைக்கப்பட்டு, இன்று முதல் 11 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த நிலை அடுத்த 10 நாட்களுக்கு தொடரும் என்றும், மழை பெய்யாவிட்டால் - அதன் பிறகு மேல ஆத்தூரில் இருந்து தண்ணீர் வழங்குவது முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

நிலைமையை சமாளிக்க நிலத்தடி நீர் மூலம் - குடிநீர் வழங்க பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. குரும்பூர் அருகே ஓர் இடத்தில இதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த இடத்தில் எடுக்கப்பட்ட தண்ணீரை பரிசோதித்ததில் - க்ளோரைட் அளவு சற்று கூடுதலாக இருந்ததாக தெரிகிறது. இது குறித்து கருத்து கூறிய குடிநீர் வடிகால் வாரிய துணை பொறியாளர், பல நாட்களாக அந்த நிலத்தில் நீர் எடுக்காததால் க்ளோரைட் அளவு கூடியிருக்கலாம் என்றும், சில மணி நேரம் நீரினை வெளியேற்றிவிட்டு மீண்டும் பயன்படுத்தினால் - க்ளோரைட் அளவு குறைந்து காணப்படும் என்றும் தெரிவித்தார். இந்த இடத்தில இருந்து இரு பம்புகள் மூலம் தினசரி 5 லட்சம் லிட்டர் வரை நீர் எடுக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.



இதற்கிடையில் - இன்று பாபநாசம் அணையில் 1 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணைக்கான நீர்வரத்து 201 cusecs அளவில் உள்ளது. (நேற்று நீர்வரத்து அளவு 226 cusecs அளவில் இருந்தது. ஆகஸ்ட் 11 அன்று இது 166 cusecs அளவில் இருந்தது.) அணையில் இருந்து நீர் வெளியேற்றம் - கடந்த சில நாட்களாக 205 cusecs அளவில், பராமரிக்கப்பட்டு வருகிறது.

தென் மேற்கு பருவ மழையின் இரண்டாம் பாதியில் - மழை தீவிரம் அடைந்தால் - குடிநீர் பிரச்சனை ஓர் அளவு மேம்படும் என தெரிகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:.அல்லாஹ்விடம் கை ஏந்துவோம் ....
posted by ceylon fancy KAZHI. (jeddah,Saudi Arabia.) [13 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21244

தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைய அல்லாஹ்விடம் கை ஏந்தி து ஆ செய்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [13 August 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21249

வல்ல ரஹ்மான் அவனின் கருணையான மழையை பொழிவித்து, வறட்சியையும் பஞ்சத்தையும் போக்குவானாக.

அப்புறம், நமக்கு வழங்கப்படும் தண்ணீர் சரியாக நமக்கு வந்து அடைகின்றதா? ஆத்தூரில் இருந்து வரும் வழியில் ஏதாவது நீர் யானையால் உரிஞ்சப்படுகிறதா? என்ற ஐயப்பாடு பலருக்கு உள்ளது.

என்றைக்கு மீட்ட்டர் வைக்கப்போகின்றீர்கள், என்றைக்கு நீர் யானையை பிடிக்கப்போகின்றீர்கள்?

வல்ல ரஹ்மான் அனைத்தையும் நன்கு அறிந்தவன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
என்று நோன்பு பெருநாள் (1433)?  (13/8/2012) [Views - 3330; Comments - 12]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved