Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:55:58 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8889
#KOTW8889
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 13, 2012
ரமழான் 1433: காயல்பட்டினத்தில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பங்கேற்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3474 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தீவுத்தெரு - பிரபு ஹாஜியார் கோட்டையில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்துகொண்டார். இதுகுறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான - அதிமுக தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் தெரிவித்த விபரம் பின்வருமாறு:-

காயல்பட்டினம் தீவுத்தெரு - பிரபு ஹாஜியார் கோட்டையில், 12.08.2012 அன்று (நேற்று) மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். குருவித்துறைப் பள்ளியின் செயலர் ஹாஜி எஸ்.எம்.கபீர், ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், ஹாஜி கே.எஸ்.முஹம்மத் நூஹ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.





இந்நிகழ்ச்சியில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடன், அதிமுக காயல்பட்டினம் நகர செயலாளர் செய்யது காசிம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஹாஜி எல்.எஸ்.அன்வர், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் விஜயகுமார். இளைஞர் - இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.ஆர்.மனோகரன், அதிமுக ஒன்றிய செயலாளர்களான ராமச்சந்திரன், ஏரல் ரமேஷ் மற்றும் நகர நிர்வாகிகளான என்.எம்.அஹ்மத், எம்.இ.எல்.புகாரீ, ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை,

நகர ப்ரமுகர்களான ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற சொளுக்கு முத்து ஹாஜி, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், துணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், குருவித்துறைப்பள்ளி இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.இஸ்மாஈல், மருத்துவர் பாவநாசகுமார், கம்பல்பக்ஷ் ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத், எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப், எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் பி.மீராசா, மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஹாஜி முஹம்மத் நூஹ், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, எம்.என்.காமில், எம்.ஜெ.ஸிராஜுத்தீன்,

காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், உறுப்பினர்களான ஹாஜி ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, ஹாஜி எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும், பொதுமக்கள் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.













சிறப்பு விருந்திரான தமிழக அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நோன்புக் கஞ்சி பருகி இஃப்தார் - நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.





இந்நிகழ்ச்சியில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், கறி கஞ்சி, பனிக்கூழ், கேக், ரோல்ஸ், வடை, தேனீர் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.

இந்த இஃப்தார் நிகழ்ச்சியின்போது, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும், பொது நல அமைப்பினரும், சிறப்பு விருந்தினரான தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.



இந்நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா அனுசரணையளித்திருந்தார்.


இவ்வாறு, அதிமுக தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் தெரிவித்தார்.

[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 15:48/17.08.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Seyed Mohamed Sayna (Bangkok) [13 August 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 21239

அஸ்ஸலாமு அழைக்கும்

விழ நன்றாக இருந்தது , படம் சூப்பரா இருக்குது அதுலையும் புரட்சி தலைவர் பாவனைஇல் ஒருவர் அழகாக இருந்தார்கள் , புரட்சி தலைவரை நியாபக படித்திய தற்கு நன்றி

இந்த விழாவில் ஒருசாரர் தான் வந்து இருகிறார்கள் நம் காயல் எபொழுது தான் ஒற்றுமையாக எல்லோரும் ஒன்று கூடி வரபோகிரர்களோ

இப்படிக்கு
Seyed Mohamed (Seyna)
Kayal Ikiya Mandram
Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மதநல்லிணக்கதிற்கு மற்றுமோர் சான்று
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [13 August 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21246

மதநல்லிணக்கதிற்கு மற்றுமோர் சான்றாக இந்த நோன்பு திறப்பு விருந்து நிகழ்ச்சியை பார்க்க,பார்க்க பரவசம் ஊட்டுகிறது.

அமைச்சர் அவர்கள் நம்மூர் மக்களோடு ஒரண் டன கலந்திருக்கும் இது போன்ற நிகழ்சிகளை சாதகமாக்கி நம்மூருக்கு தேவையான காரியங்களை அரசாங்கத்தின் மூலமாக பெற்றுதரகூடிய முயற்சியை எடுத்துகொள்ளவும்.

சகோதரர் அன்வர், சகோதரர் செய்து இப்ராஹீம் போன்றவர்கள் நமதூருக்கு நன்மைசெய்யும் காரியங்களில் முன்னோடியாக செயல்படுவார்கள் என்பதை நேரில் கண்டவனாகையால், அப்படிப்பட்ட துடிப்புடையவர்களின் துணையுடனும் மற்றும் ஆளும்கட்சி அன்பர்களின் ஆதரவுடனும் நமககுறிய காரியத்தை இறைவன் கிருபையால் பெறலாம் என்று நம்புகிறேன்.

புகைப்படங்களை பார்க்க பெருமையாக இருக்கிறது.புன்னகையை பூக்கும் அருமை நண்பர் முஹம்மதலியின் முழுநிலவு முகத்தையும் ,முழுமூச்சாக பந்தி பறிமாறுவதில் முனைப்புடன் இருக்கும் அருமை நண்பர் செய்து இப்ராகினின் அருமைதோற்றமும் அருகில் பார்ப்பதுபோன்ற உணர்வால் அங்கமெல்லாம் குளிர்கிறது!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:றமழானை சஙகை படுத்துவோம்....
posted by T,M,RAHMATHULLAH (KAYALPATNAM 04639 280852) [14 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21252

அஸ்ஸலாமு அலைக்கும் !

நாட்டில் இதுபோன்ற பல நிகழ்சிகள் பல நடப்பது பலரின் மன வேதனைக்குரியதாக இருக்கிறது . காரணம விழாவை இகுலாஸாக பிஸ்மி சொல்லி ஆரம்பம் செய்யும் மந்திரியாகவாவது இருந்தால் நோன்பும் றமழானும் நமக்கு துஆ செய்யும். இல்லாவிட்டால்? யோசிக்கவேண்டிய விஷயம். அல்லாஹுத் தஆலா விழாவில் கண்ட மந்திரியை பிஸ்மியுடன் இகுலாஸாக எல்லா காரியங்களையும் ஆரம்பம் செய்யும் மனிதனாக ஆக்குவானாகவும்.

நாட்டு மக்கள் கொஞ்சம் மஷூறா செய்து தேவையான இந்த சமூக நேய விழாக்களை றமழானல்லாத நாட்களிலோ பெருநாட்களின் “கெட் டுக்கதெர்” எனும் முறைகளில் ஈத் கேதெரிங் போன்ற விழாக்களாக ஏற்பாடு செய்யலாம். அல்லாஹ் மக்க்ளுக்கு ஹிதாயத் அருள்வானாக.! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by M.E.Solukku..Syed Md SAhib (qatar) [14 August 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 21254

அஸ்ஸலாமுஅலைக்கும். லக்கும் தீனுக்கும் ஒலியதீன் .சகோதரர் ரஹுமதுல்லா அவர்கள் வாசகம் அறியாமையின் வெளிபாடு. இது ஏன்? மற்ற ஆட்சி காலங்களில் வெளியாவதில்லை. மந்த்ரிக்கு குரான் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த நிகழ்ச்சி சகோதரத்தின், சமாதானத்தின், வெளிபாடு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
என்று நோன்பு பெருநாள் (1433)?  (13/8/2012) [Views - 3332; Comments - 12]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved