Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:41:22 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8885
#KOTW8885
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 13, 2012
என்று நோன்பு பெருநாள் (1433)?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3330 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



ஷவ்வால் (1433) மாத அமாவாசை ஆகஸ்ட் 17 வெள்ளிக்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி மாலை 3:55 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் இரவு 9:25 மணி.

ஆகஸ்ட் 17 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:33 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:13. அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மறைந்தப்பின்னரே அமாவாசை நிகழ்கிறது. மேலும் அன்று உலகின் எந்தப்பகுதியிலும் வெறுங்கண்கள் கொண்டு பிறையை காண இயலாது.



ஆகஸ்ட் 18 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:33 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:59. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 21 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 26 நிமிடம் பிறை இருந்தாலும் - அன்று காயல்பட்டணத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு காண்பது கடினம்.



மேலும் தென் அமெரிக்காவிலும், தென் ஆப்ரிக்காவிலும் வெறுங்கண்கள் கொண்டு எளிதாகவும், மத்திய அமெரிக்கா மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் - வானிலை சூழல் தெளிவாக இருந்தால் - வெறுங்கண்கள் கொண்டும், வட அமெரிக்காவின் மத்திய பகுதியிலும், ஆப்ரிக்காவின் இதர பகுதிகளிலும், தென் இந்தியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காணலாம்.



ஆகஸ்ட் 19 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:32 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:45. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 45 மணி நேரம். அன்று காயல்பட்டணத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு எளிதாக காணலாம்.



பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு (Hijra Committee, Kerala) ஆகஸ்ட் 18 - ஷவ்வால் 1 ஆகும்.

உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஆகஸ்ட் 17 (அமாவாசை) அன்று ரமழான் 29 பூர்த்தி ஆகிறது. உலகில் அன்று எங்கும் பிறையை காண வாய்ப்பில்லை. ஆகவே - அவர்கள் ஆகஸ்ட் 18 அன்று ரமழான் 30 பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 19 அன்று நோன்பு பெருநாள் (ஷவ்வால் 1) கொண்டாடுவர்.

அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 17 (அமாவாசை) அன்று ரமழான் 28 பூர்த்தி ஆகிறது. ஆகஸ்ட் 18 அன்று ரமழான் 29 பூர்த்தி ஆகிறது. ஆகஸ்ட் 18 அன்று காயல்பட்டணத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு காண்பது கடினம். ஆகவே - ஆகஸ்ட் 19 அன்று ரமழான் 30 பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 20 அன்று நோன்பு பெருநாள் (ஷவ்வால் 1) கொண்டாடுவர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பெருநாள்
posted by A.M. seyed Ahmed (Riyadh) [12 August 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21219

அப்ப மூணு பெருநாள் வாழ்த்துக்களா? 18-19-20 (உம்மாக்கு - வாப்பாக்கு - மகளுக்கு) FLIGHT தப்பினாலும் - பெருநாள் தப்பாது என்று முன்னமே சொல்லிவிட்டீர்கள்...

"கறிக்கடைகாரன் தாங்கமாட்டான்"

ஆலிம்களே கூடுங்கள், பேசுங்கள், நல்லமுடிவு எடுங்கள் மார்க்க அடிப்படையில் ஒற்றுமையாக ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவோம்.....

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...யாருக்கு நோன்பு பெருநாள் என்று தலைப்பை மாற்றினால்,
posted by OMER ANAS (DOHA QATAR.) [12 August 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 21220

உண்மையில் என்று நோன்பு பெருநாள் என்ற தலைப்பை மாற்றி யாருக்கு நோன்பு பெருநாள் என்று வைத்தால் நன்றாக இருக்கும்!காரணம், உண்மையிலேயே இறைச்சி கடை காரங்களுக்குத்தான் moonறு நோன்பு பெருநாள்!

காலத்துக்கு ஏற்ற மாதிரி பெட்ரோல் விலை ஏறுதோ இல்லையோ அதைவிட வேகமாக எகுருவது இறைச்சிக் கடை விலை ஏற்றம்தான்! இந்த வேகமான விலைஏ ற்றத்தை யார் கட்டுப்படுத்துவது? நம் பஞ்சாயத்தா........? இல்லை நம் தமிழ் நாடு அரசா.........? இல்லை நம் ஐக்கிய ஜமாத்தா......? உண்மையை சொல்லுங்கள் காயல் மக்களே நாம் யாருக்கு சரியான டிக் மார்க் போடுவது என்று!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Gunagzhou) [13 August 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 21222

என்றாக இருந்தாலும் ஒன்றாக இருந்தால் . நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by syedahmed (GZ, China) [13 August 2012]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 21223

ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிப்பிடித்தால் இதுமாதிரி வேற்றுமை குழப்பங்கள் உண்டாகாது. வல்ல அல்லாஹ் நமக்கிடையில் பாகுபாடின்றி வலுவான ஒற்றுமையை தருவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Muzammil (Dubai) [13 August 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21224

மூன்று பெருநாட்கள்? 18-19-20 FLIGHT தப்பினாலும் பெருநாள் தப்பாது .

கறிக்கடைகாரனுக்கு சக்கை போடு .

ஆலிம்களே கூடுங்கள், பேசுங்கள், நல்லமுடிவு எடுங்கள் மார்க்க அடிப்படையில் ஒற்றுமையாக ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவோம். கூடி பெருநாள் கொண்டாடும் நாள் எப்ப வருமோ? அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [13 August 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21233

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆகா.... என்னப்பா ..... செம தமாஷாகவும்...சிரிப்பாகவும் இருக்கிறது. ஏன் நம் இஸ்லாமிய மத தலைவர்கள் எல்லாம் தனித் தனியான குருப்பாக இயங்கி வருகிறார்கள் ?? ஒன்றாக சேர்ந்து ஆலிம்கள் செயல் பட்டால் தான் என்னவாம் ?? இவர்களின் பிரிவனைக்கு காரணம் தான் என்னவாம் ?? இவர்களின் இந்த செயலால் நம் பொது மக்கள் தான் விசையமே தெரியாமல் கொழம்பி போய் இருக்கிறோம்.

ஆமா பிறை என்பது ஓன்று தானே?

ஒரே நாட்டில் மூன்று நாள் நோன்பு பெருநாளா?? கண்டிப்பாக நம் ஊரில் மூன்று நாள் நோன்பு பெருநாள் தான் சந்தேகமே இல்லை.... வெளி நாட்டில் வாழும் நம் ஊர் மக்கள்.அவர்கள் இருக்கும் வெளி நாட்டில் சிறப்பாக நோன்பு பெருநாள் கொண்டாடி விட்டு... தாய் நாடு வந்து தம் குடும்பத்துடன் சந்தோஷமான முறையில் மேலும் இரண்டு நோன்பு பெருநாள் கொண்டாடலாம் அல்லவா .....

சூப்பரோ .......சூப்பர்..... தான் .....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [13 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21234

விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி இது. வானிலை ஆராய்ச்சி மழை பெய்யும் செய்திகள் சொல்லி அவை பொய்த்தும் இருக்கின்றன.

29 முடிந்ததும் பிறை கண்டால் பெருநாள். மேக மூட்டமாக இருந்தால் அதை முப்பதாக நிறைவு செய்து கொள்ளுங்கள் என்ற நபிவழியை லேசாக பின்பற்றினால் இதை பற்றியெல்லாம் கவலைப்பட தேவை இல்லை. அல்லாஹ்வே சொல்லிவிட்டான் " உங்களுக்கு அல்லாஹ் லேசை நாடுகிறானே தவிர உங்களுக்கு கஷ்டத்தை நாட வில்லை"

சில காலங்களுக்கு முன் சர்வதேச பிறையை சரி கண்டவர்கள் பின்பு தங்கள் நிலையை மாற்றிக்கொண்டார்கள்.எனவே பிறை கண்டு பிடிப்போம் பிறை கண்டு விடுவோம் அந்த நபிவழியில் உறுதியாக நிற்போம். நோன்புக்கு கூலி கொடுப்பவன் அல்லாஹ் ஒருவன்தான்..எனவே இதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்களுடன் நாம் உடன்படா விட்டால் நாம் ஒதுங்கி நிற்போம். நமக்குள் சண்டைகள் சச்சரவுகள் தேவை இல்லை.

மீதி உள்ள நாட்களையும் பெருநாள் இரவையும் அல்லாஹ்வுக்கு பிரியமான நல அமல்கள் செய்து வழியனுப்பிவைப்போம் அவரவர்களுக்கு தெரியும் அவரவர்கள் செய்யும் அமல்கள் எப்படிப்பட்டது. எல்லாவற்றையும் நிறுத்து பார்த்து வல்ல அல்லாஹ் கூலி கொடுக்கும்போது நாம் பின்தங்கி விடக்கூடாது என்று ஒவ்வொருவரும் அவரவர்கள் அமலை நினைத்து.கவலைப்படுவோம்.

ஒருவரின் பாவ சுமையை இன்னொருவர் சுமக்க மாட்டார்.VALAA THAZIROO VAAZIRATHUN VIZRA UKHRAA.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...சிறப்பான பெருநாளை நாம் சிரிப்பாக்க வேண்டுமா
posted by s.s.jahufer sadik (Jeddah - K.S.A) [13 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21237

எல்லோரும் விரும்பி படிக்கும் நம் வலைதளம் இது போன்ற செய்திகளை வெளியிட வேண்டுமா? தவிர்த்துக்கொண்டால் நல்லதல்லவா?

நமது ஒற்றுமையை மற்றவர்களும் கண்டு சிரிக்கவா?

இனி வரும் பெருநாட்களிலாவது இது போன்ற செய்திகளை தவிர்த்து கொள்ள முயற்சிக்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Haddadh (Thrissur) [13 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21245

இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. அது மனிதர்களூக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும் பொய்யை விட்டு உண்மையை பிரிதுக்காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிராறோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும் . நோயாளியாகவோ, பயணத்திளோ இருப்பவர் வேரு நாட்களில் கணக்கிட்டு கொள்ள்லாம்.....குர்ஆன்: 2:185

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிராறோ.......... இதில் இருந்தே ஒரு சாரார் அம் மாதத்தை அடைந்திருக்கும் போது மற்றோரு சாரார் அடையமாட்டார் ஒருவர் ரமளானை அடைந்திருக்கும் போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார் என்பது தெளிவாகிறது.

இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாறோ என்று கூற முடியும் அனைவரும் ஒரே நேரத்தில் ரமளானை அடைகிறார்கள் என்று வைதுக்கொள்வோம். எல்லோரூமே அடைந்த்ருக்கும் போது உங்களில் யார் அடைகிறாறோ எனக் கூறுவது வீணான வார்தைப் பிரயோகமாக அமைந்து விடும். இந்த அடிப்படையில் தான் மேலே நாம் எடுதுக்காட்டிய வசனத்தையும் ஆராய வேண்டும். அல்லாஹ்வின் வேதத்தில் தேவையில்லாத ஒரு வார்தை கூட இருக்காது என்பதை நென்ஜிலிருந்து ஆராய வேண்டும்

அதை, பிறையை நீங்கள் கானும்போது நோன்பு பிடியுங்கள். அதை மரு பிறையை நீங்கள் கானும்போது நோன்பை விடுங்கள். உங்களூக்கு மேக மூட்டம் எற்பட்டால் சஹ்பான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைபடுதுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் கூறீனார்கள். அறீவிப்பவர்: ஆபூஹூரைரா, நூல்: புஹாரி: 1909

மார்க்கம் நிரைஉற்றது அதில் கடுகளவு கூட்டவோ குரைக்கவோ யாருக்கும் அதிகாரம் கிடையது, அரஃஃபா மைதானத்தில் நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் கூறீனார்கள் இன்ற்றைய தினம் உங்களூடைய மார்க்கம் பரிபூரணமாக்கப்பட்டு விட்டது இதற்க்கு அல்லாஹ் சாட்சி என்று வானத்தை நோக்கி ஆட்காட்டி விரலால் கான்பித்தார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:..மார்க்க விவாதங்ககள்.தவிர்க்கபடவேண்டும்
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [13 August 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21247

Jaafarsadiq சகோதரர் ஜித்தாவிலிருந்து எழுதிய கருத்தோடு நான் முழு மனதோடு ஒருங்கினைகிறேன். மார்க்க விஷியங்களின் கருத்து பரிமாற்றங்கள் சில கசப்பான முடிவுகளை உண்டாக்கும் என்பதை ஏற்கனவே சென்றுவிட்ட காலம் நமக்கு பலதடவை உணர்த்தி இருக்கிறது.

ஆகவே அன்பு இணயதள உரிமையாளர்களே, இச் சிறியோனின் வேண்டுகோளை சற்று சிந்தனைக்கு எடுத்து, இதுபோன்ற மார்க்க விவாதங்ககள் வரக்கூடிய செய்திகளை கூடியவரை தவிர்க்குமாறு வேண்டுகிறேன்! அலாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. .ஒரு திருத்தம் மற்றும் ஒரேமுடிவு
posted by T,M,RAHMATHHULLAHr (KAYALPATNAM 04639 280852) [14 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21251

அஸ்ஸலாமு அலைக்கும்!

மொடெரெட்டர் அறிவது,இந்த செய்தியில் ஐ டீ #8885 ல் 45 மணி என்பதை 45 நிமிடம் என்று போடலாமா?.

செய்தி களிலும், கமண்ஸ் களிலும் காணும் மனதுக்கு சங்கடமான நிலைக்கு காரணம் நமது ஈமான் பலஹீனம், ஈமான் பலஹீனம், ஈமான் பல ஹீனமே, தவிர வேறொன்றும் கூறத்தெரிவில்லை. அதனை கூவ்வத்தாக்க நாம் பாடுபட்டால் ஒழிய வேறு வழி கிடைக்கவே கிடைக்காது. அதனை பற்றி மஷூறா செய்தால் இன்ஷ அல்லாஹ் நமதூருக்கு எல்லா வற்றிலும் ஒற்றுமை தானாகவே வரும். அல்லாஹ் நாடுவானாக. வ்மா தஷாவூன இல்லா அன் யஷா அல்லாஹ். யா அல்லாஹ் எங்கள்பால் இவ்விஷயத்தில் கருனை செய்வாயாக.

Administrator: 45 மணி நேரம் (45 Hours) தான், நிமிடங்கள் அல்ல


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...அல்லாஹ்வின் karuththu
posted by T,M,RAHMATHHULLAH (73)yr (KAYALPATNAM 04639 280852) [14 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21256

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
8:46 وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
8:46. இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

திருக் குற் ஆனிலிருந்து கம்மண்ஸ் எடுத்து எழுதியவர்க்கும். அதனை நெட்டில் போட்டு குற் ஆன் கருத்தை பரப்பியவர்க்கும்ன் அல்லாஹ் றஹ்மத்துன் செய்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved