Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:45:15 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8877
#KOTW8877
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 11, 2012
ரமழான் 1433: மலபார் கா.ந.மன்றத்தின் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி! களை கட்டியது காயலர் சங்கமம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3556 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மலபார் காயல் நல மன்றம் (MKWA) சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் காயலர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றுள்ளனர். கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் செய்யது ஐதுரூஸ் (SEENA) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

மக்கள் வெள்ளத்தில் மக்வா:
எல்லாம்வல்ல ஏக இறைவன் திருவருளால், எமது மலபார் காயல் நல மன்றத்தின் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி, 05.08.2012 ஞாயிற்றுக்கிழமை மாலையில், கேரள மாநிலம் - கோழிக்கோடு - கே.எம்.ஏ. அரங்கில் நடைபெற்றது.



கோழிக்கோடு மற்றும் மலபார் வட்டாரத்தில்லுள்ள மஞ்சேரி, கொடுவள்ளி, படகர, தலிஷேரி, கண்ணனூர், பையனூர், இருட்டி போன்ற - கோழிக்கோடு நகர சுற்றுவட்டாரத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வந்து அன்று மாலை 05.45 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் அனைவரும் குடும்பத்துடன் சங்கமித்தனர். கூட்டத்தைக் கண்ட மகிழ்ச்சியில் சிலர் "மக்கள் வெள்ளத்தில் மக்வா" என்றும் கூறினார். மேலும் அல்லாஹ்வின் உதவியால் மலபார்வாழ் அனைத்து காயலர்களையும் ஒரே இடத்தில ஒன்று கூட்டி தங்கள் நண்பர்களையும், உற்றார் - உறவினர்களையும் பார்த்து மகிழவைத்த மக்வாவுக்கு நன்றியும் பாராட்டும் கூறி மகிழ்தனர்.



துவக்க நிகழ்வுகள்:
துவக்கமாக அரங்க நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் ஜனாப் மஸ்ஊத் தலைமை தாங்கினார். மன்றத்தின் துணைத் தலைவர் ஜனாப் ரஃபீக், துணைச் செயலாளர் ஜனாப் முஹ்யித்தீன் அப்துல் காதர், செயலாளர் ஜனாப் ஹைதுரூஸ் ஆதில் அவர்களின் தந்தை ஜனாப் முஹம்மது அப்துல் காதர் என்ற சாளப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எஸ்.எம்.பி.முஹம்மத் முஹ்யித்தீன் - அவருக்கே உண்டான இனிமையான குரலில் இறைமறையை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

வரவேற்புரை:
அடுத்து, மன்றத்தின் துணை செயலாளர் ஜனாப் முஹ்யித்தீன் அப்துல் காதர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். MKWAவின் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் இத்தனை பேர் கலந்துகொண்டுள்ளதைப் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்த அவர், இதுபோன்று MKWAவின் அனைத்து நிகழ்சிகளிலும் தவறாமல் பங்குபெற்று, மன்றத்தின் நகர்நலப் பணிகள் சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

மேலும் மன்றத்தின் வரவு - செலவு பற்றியும், பல்வேறு தேவைகளுக்காக பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள காயலர்களிடமிருந்து உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பற்றியும், அவை முறையாக பரிசீலிக்கப்படும் விதம் பற்றியும் விரிவாக அவர் தனதுரையில் எடுத்துரைத்தார்.

மேலும் நடப்பு நிர்வாகத்தின் காலவரையறை நிறைவுபெற 6 மாதங்களே உள்ளதாகத் தெரிவித்த அவர், அமைப்புக்கு புதிதாக 15 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்த்தேடுக்க அனைவரும் ஆயத்தமாக வேண்டும் என்று கூறியதோடு, நகர்நலனுக்காக மன்றப் பணிகளைப் பொறுப்பேற்று செய்திட அனைவரும் ஆர்வப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மன்றத்தின் செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் உம்ரா சென்றுள்ளதாகவும், அவருடைய உம்ரா இறைவனிடம் கபூலாக்கபட்ட அமலாக அமைய நாம் அனைவரும் அவருக்காக துஆ செய்ய வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



சிறப்புரை:
பின்னர், கூட்டத் தலைவரும் - மன்றத் தலைவருமான ஜனாப் மஸ்ஊத் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி காயலர்களின் ஒற்றுமையைப் பறை சாற்றும் ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த அவர், ரமழானில் முக்கிய தினங்களாகக் கருதப்படும் பத்ருப்போர் நடைபெற்ற தினம் மற்றும் லைலத்துல் கத்ர் ஆகியவற்றின் வரலாற்றுச் சிறப்புகளை சுருக்கமாக எடுத்துக் கூறினார்.

மன்றத்தின் செயற்பாடுகள் அனைவரின் ஒத்துழைப்போடும் சிறப்புற நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அவர், நகர்நலப் பணிகள் தொய்வின்றி நடைபெற மன்றத்திற்கென சொந்த அலுவலகக் கட்டிடம் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்ற அடிப்படையில், அதற்கான தேடுதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இத்திட்டத்திற்கு உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துஐழப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உம்றா கிரியைகளை நிறைவேற்ற புனித மக்கா நகருக்குச் சென்றுள்ள மன்றச் செயலாளர் ஹைதுரூஸ் ஆதில், அங்கிருந்தபோதிலும் நம் மன்றத்தின் நினைவால் கைபேசியில் தன்னைத் தொடர்புகொண்டு, கூட்ட ஏற்பாடுகள் - மக்களின் ஆர்வம் குறித்து விரிவாக விசாரித்தறிந்ததாகவும், அனைவருக்கும் ரமழான் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும், தனது உம்றா கிரியைகள் இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட அனைவரும் துஆ செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.



இஃப்தார் - நோன்பு துறப்பு:
கூட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, அரங்கின் மேல் தளத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிக்கு அனைவரும் சென்றனர். அங்கு காயல் கஞ்சி, சாலாவடை, குளிர்பானங்கள், பழ வகைகள் என பலவிதமான உணவுப் பதார்த்தங்கள் இந்நிகழ்ச்சியின் உணவு ஏற்பாட்டுக் குழுவினரால் விமரிசையாகவம், சுவைபடவும் ஆயத்தம் செய்யப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.





மஃரிப் தொழுகை:
இஃப்தார் நிறைவுக்குப் பின் மஃரிப் தொழுகை அங்கேயே கூட்டாக (ஜமாஅத்தாக) நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் இரண்டாம் அமர்வு அரங்கின் கீழ் தளத்தில் நடைபெற்றது. துவக்கமாக அனைவருக்கும் சுவையான தேனீர் வழங்கப்பட்டது.



அரங்கத்தை அதிர வைத்த குட்டீஸ்:
மைக் முன் நின்று கொண்டு அரங்கமே அதிரும் அளவுக்கு உரை நிகழ்த்தியும், இறைமறையை தஜ்வீத் முறைப்படி ஓதியும் அசத்திய குழந்தைகளை கூட்டத்திற்கு வந்த அனைவரும் பாராட்டி, அவர்களுக்காக துஆ செய்தனர்.

உரை நிகழ்த்திய குழந்தைகளின் பெயர்:
1. மன்றத்தின் துணைத் தலைவர் முஹம்மத் ரஃபீக் KRS அவர்களுடைய மகள் ஜஹரா

2. மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் சேட் மஹ்மூது அவர்களுடைய மகன் முஹம்மது இபுராஹீம்

இறைமறையை தஜ்வீத் முறைப்படி ஓதிய குழந்தையின் பெயர்:
1. மன்றத்தின் செயலாளர் ஹைதுரூஸ் ஆதில் அவர்களுடைய மகன் அப்துல் ரகீப்



வாழ்த்துரை:
பின்னர், மன்றப் பொருளாளர் ஜனாப் உதுமான் அப்துர் ராஜிக் அவர்கள் உரையாற்றினார். “நாம் நம் வீடு என்று இல்லாமல் நம் ஊர் மக்களின் நலனுக்காகவும் நம் நகரின் நலனுக்காகவும் செயல்படுவது அவசியம் என அவர் தனதுரையில் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர் ஜனாப் சிராஜுதீன் அவர்கள் உரையாற்றினார். “அன்று வளர் பிறையாக இருந்த இந்த மாமன்றம் இன்று பூர்ண சந்திரனாக மாறி இருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்த அவர், மன்றத்தின் மூன்றாண்டு கால சாதனையை பட்டியலிட்டு விளக்கிப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து மன்றத்தின் துணைத் தலைவர் முஹம்மத் ரஃபீக் KRS உரையாற்றினார். மன்றத்தால் இதுவரை நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே இன்றுதான் முதன்முதலாக அரங்கு நிறைந்த இவ்வளவு பெரிய மக்கள் திரளைக் காண்பதாகத் தனதுரையில் வியப்பு தெரிவித்த அவர், இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தி, அனைவரையும் மட்டில்லா மகிழ்ச்சியடையச் செய்த மக்வாவை வெகுவாகப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

நன்கொடை:
இந்த கூட்டத்திற்கு வந்த ஆண்கள் மற்றும் பெண்களுமாக சேர்ந்து மக்வாவிற்கு நன்கொடையாக மொத்தம் 30,000 ரூபாய் வரை வாரி வழங்கினர் அல்ஹம்துலில்லாஹ்!

நன்றியுரை:
நிறைவாக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் சேட் மஹ்மூது அவர்களின் நன்றியுரைக்கு பின் - கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

விருந்துதோம்பல்:
பின்னர், இரவு உணவுக்காக அனைவரும் மீண்டும் மேல் தளத்திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு, இடியாப்பம், கேரளா நைஸ் பத்திரி, காயலருக்கே உண்டான பாணியில் களறிக்கறி என சுவையான உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.









அனைத்து நிகழ்வுகளிலும், ஆண்கள் - பெண்கள் - குழந்தைகள் என மொத்தம் சுமார் 300 பேர் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர் உதுமான் லிம்ரா தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.











இந்த இஃப்தார் நிகழ்வுகளின் அனைத்து படங்களையும் தொடர்காட்சியாகப் பார்வையிட, மன்றத்தால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள https://picasaweb.google.com/107093273045987051953/MKWA05082012?authuser=0&feat=directlink என்ற இணைப்பில் சொடுக்குக!


இவ்வாறு மலபார் காயல் நல மன்றம் சார்பில், அதன் செய்தித் தொடர்பாளர் எஸ்.இ.செய்யித் ஐதுரூஸ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

[செய்தி திருத்தப்பட்டது @ 20:16/11.08.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [11 August 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21193

இந்த நிகழ்சிகளை பார்த்து நானும் அங்கு இல்லை என்ற ஆதங்கம். ஒரு காலத்தில் நானும் அங்கு இருந்தவன்தான். பழைய நண்பர்கள் லெப்பை மகன் சலீம் காக்க, கோஸ் முஹம்மத், ரபீக், அமீன்&கோ சாகுல் இன்னும் நிறைய நண்பர்களை பார்த்து வியாபாரத்துக்கு அங்கு வந்து காயல் நற்பணி மன்றத்தில் இணைந்து நாமும் ஊருக்கு நன்மை புரியலாம் என்ற ஆதங்கம் அந்த நிகழ்ச்சியல் கலந்த மாதிரி சந்தோசம்.

இறைவன் உங்கள் அனைவர்க்கும் நல அருள்புரிவானாக அமீன் .

முன்னாள் மலபார் நண்பன்
பீனா அப்துல்றஷீத்
(ஆறாம் பள்ளி ஸ்ட்ரீட்)
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. காயல் கடல் அலை
posted by Salai Sheikh Saleem (Dubai) [11 August 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21199

மாஷா அல்லாஹ் ! மிகவும் சிறப்பான ஒன்றுகூடல். கேரளாவில் நமதூர் வாசிகள் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் எனபது எல்லோரும் அறிந்த ஒன்றே. ஆனால் ஒரு திருமண வைபவம் போல் நம்மவர்கள் திரளாக ஒற்றுமையுடன் கூடி இருந்து தாம் பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்க்க ஓரணியில் நிற்கும் இந்த அறிய கண்கொள்ளாக் காட்சி காண்பதற்கு பெரும் சந்தோசம். உங்களின் சீரிய ஊர் பணிகள் சிறக்க எல்லாம் வல்லோனை உங்களுடன் இறைஞ்சிகிறேன். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...நண்பர் மிஸ்ஸிங்..
posted by Soofi (Riyadh) [12 August 2012]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 21206

அஸ்ஸலாமு அலைக்கும்,

அனைத்து செய்திகளையும், போட்டோகளையும் பார்த்து ரொம்ப சந்தோஷம், அதிலும் எங்கள் KMK தெரு நண்பர்களையும் சொந்தங்களையும் பார்த்ததில் மிக்க சந்தோஷம்.

ஆனால் எனது அன்டை வீட்டுக்கார நண்பன் சலீம் காக்கா மகனார் சித்தீக் மட்டும் missing என்று தோன்றுகிறது. என்ன வேலையோ? ok.

அனைவரும் ஒற்றுமையோடு வாழ இறைவன் உதவி செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்

Soofi from ரியாத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சொந்தங்களை கண்டத்தில் மட்டற்ற மிகழ்ச்சி!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [12 August 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21211

அஸ்ஸலாமு அழைக்கும்.

எனது தாய்மாமா ஜனாப் நோனா N.S. காதர் மூஸா நைனா, சகோதரர் சேட் மகம்மூது, மச்சான் மரைக்கா ஆகியோர்களை கண்டத்தில் மன மகிழ்ச்சி.

M.E. முகியதீன் அப்துல் காதர்.
அபுதாபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [12 August 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21215

அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ்....இந்த மலபார் கா.ந.மன்றத்தின் இஃப்தார்- நோன்பு துறப்பு நிகழ்ச்சி உண்மையில் தலைப்பு வாசகத்தை போன்று ....அடடா ....களைக்கட்டியது காயலர்களின் கூட்டம் தான் இதில் எந்த ஒரு சந்தேகம் ஐயா... தங்களின் """" மலபார் காயல் நல மன்றம்""" மிகவும் சிறப்புடன் செயல் பட்டு நம் ஊருக்கா ஒற்றுமையான முறையில் பல நல்ல காரியங்கள் வெற்றியுடன் செய்து வர வல்ல கிருபையாளன் அருள் புரிவானாகவும் ஆமீன்.

முக்கியமான ஒரு நிகழ்வு என்றால் அது இந்த சூப்பர் குட்டீஸ் தாங்கோ.... யார் சார் சொன்னது ...அரங்கத்தை அதிரவைத்த குட்டீஸ் .....என்று ...ஐயோ இந்த நம் செல்வங்கள் மாஷா அல்லாஹ் எங்கள் யாவர்களின் மனதையும் அல்லவா அதிரவைத்த விட்டார்கள் .....

போட்டோவை பார்த்ததுமே நம் ஊர் கல்யாண விழா கோலம் போல அல்லவா சூப்பராக இருந்தது.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
என்று நோன்பு பெருநாள் (1433)?  (13/8/2012) [Views - 3320; Comments - 12]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved