Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:43:23 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9532
#KOTW9532
Increase Font Size Decrease Font Size
வியாழன், நவம்பர் 1, 2012
ஹஜ் பெருநாள் 1433: சிங்கை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்! நகர்நலனுக்காக ரூ.1 லட்சம் பெருநாள் நிதி சேகரிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4458 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சிங்கப்பூரில் 26.10.2012 வெள்ளிக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளை முன்னிட்டு, வழமை போல சிங்கப்பூர் காயல் நல மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் காயலர் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மஃரிப் தொழுகைக்கான நேரம் நெருங்குகையில் காயலர்கள் சிற்சிலராக தம் குடும்பத்தினருடன் நிகழ்விடம் வந்தடைந்தனர். துவக்கமாக, மஃரிப் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்பட்டது.







கால இடைவெளிக்குப் பின் சந்தித்துக்கொண்ட காயலர்கள் ஒருவருக்கொருவர், கட்டித் தழுவி - கைலாகு செய்து, மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

பின்னர், துவங்கிய சாதாரண கூட்டத்தை, ஹாஃபிழ் எஸ்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் ஃபாழில் ஜமாலீ சிறப்புரையாற்றினார்.



ஒற்றுமையைின் அவசியம், இதுபோன்ற பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வுகளால் கிடைக்கப்பெறும் நற்பலன்கள் குறித்து திருமறை குர்ஆன் - நபிகளாரின் பொன்மொழிகளிலிருந்து சான்றுகளுடன் விளக்கிப் பேசிய அவர், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உறுப்பினர்கள் - கொள்கை மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, நகர்நலன் என்ற ஒரே குறிக்கோளில் ஒன்றுபட்டு செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

பரபரப்பு மிகுந்த சிங்கை நாட்டில் - பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையிலும் - ஒவ்வொரு பெருநாளையொட்டியும் இதுபோன்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் ஏற்பாடு செய்யும் - மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களுக்கு மனதார நன்றி தெரிவிப்பதாக அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

அடுத்து உரையாற்றிய சிறப்பு விருந்தினர் ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், சஊதி அரபிய்யா - ஜித்தாவில் தாம் பணியாற்றிய காலத்தி்ல் - அங்குள்ள காயல் ஹவுஸில் இதுபோன்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்திய நிகழ்வுகளை தனதுரையில் நினைவுகூர்ந்ததுடன், சிங்கப்பூரில் நடக்கும் இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பங்கேற்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், இதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

ஒன்றுகூடல் நிகழ்ச்சியையொட்டி - வழமை போல அனைவருக்கும் வெற்றுரை (Blank envelope) வழங்கப்பட்டது. அதில் மன்ற உறுப்பினர்கள் தாராள மனதுடன் அளித்த நன்கொடையால் இந்திய ரூபாய் ஒரு லட்சம் சேகரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கொழும்புவில் வசிக்கும் ஹாஜி இஸ்மத் ஷாஜஹான், சென்னையில் வசிக்கும் ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், மலேஷியாவில் வசிக்கும் ஷாஹுல் ஹமீத், வியட்நாமில் வசிக்கும் ஹாஜி அப்துர்ரஹ்மான் ஆகிய காயலர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அதுபோல, சிங்கப்பூர் மஸ்ஜித் பெங்கூலன், மஸ்ஜித் ஹாஜ்ஜா ஃபாத்திமா ஆகிய பள்ளிவாசல்களின் இமாம்கள் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.











அனைவருக்கும் - பல்வேறு உணவுப் பதார்த்தங்களை உள்ளடக்கி - பஃபே முறையில் பெருநாள் இரவுணவு பரிமாறப்பட்டது. அனைவரும் இணைந்தமர்ந்து விருந்துண்டனர்.







இந்த ஒன்றுகூடலில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக அனைவரும் மன்ற ஆலோசகருக்கு நன்றி தெரிவித்ததுடன் - அவரது நீடித்த ஆயுளுக்கும், நிறைவான வளத்திற்கும் பிரார்த்தித்தவாறு விடைபெற்றுச் சென்றனர்.

தகவல்:
மொகுதூம் முஹம்மத்
செயலாளர், சிங்கை காயல் நல மன்றம்

படங்கள்:
முஷ்தாக்


[செய்தியில் கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 10:33 / 01.11.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [01 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23354

சிங்கை காயலர்கள் அனைவருக்கும் ஈதுல் அல்ஹா முபாரக் !!!

வவு தசிமூ பிஹப்லில்லாஹி ஜமீஅன் வ லா த பர்ரகூ '' என்ற வான் மறை வசனத்திர்கு ஒப்ப பார்ப்பதற்கே இந்த ஈது ஒன்று கூடல் சந்தோஷமாக இருக்கிறது .இது போல் என்றென்றும் சந்தோஷ மாக வாழ வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ஈத் முபாரக்....
posted by ceylon fancy KAZHI. (jeddah,Saudi Arabia.) [01 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23357

>>>>> எங்கள் அன்பு சிங்கை சகோதரர்கள் ....அனைவர்களுக்கும் என் இனிய ஹஜ்ஜு பெரு நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ....... கூடவே , மலேசியா சகோதரர் சாகுல் ஹமீது S .A .K .அவர்களுக்கும் ...

சிலோன் பேன்சி காழி ,
ஜித்தாஹ் ,
சவுதி அரேபியா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [01 November 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23358

இவர்களை பாராட்டனும் என்றாலே மனதுக்கு சந்தோசமாக இருக்கின்றது.

எந்த ஒன்று கூடலாக இருந்தாலும், அதை ஒரு பிரயோஜன நிகழ்வாக நிகழ்த்தி காட்டி விடுகிறார்கள். ஒன்று கூடினோமா, நன்றாக விருந்து உண்டோமா என்று இருக்காமல், மக்களின் நலனுக்காக நிதி சேகரித்து அதுவும் 1 லட்சம் ரூபாய் சேகரித்து, உதவும் உங்களின் மனதை பாராட்ட சந்தோசம் வராதா. ஸ்பெஷல் பாராட்டுக்கள் டு பாளையம் ஹசன் காக்கா.

* யாருங்க அது.. ஒரு சகோதரர் மதுரைக்காரங்க ஸ்டைலில், "கொண்..ண்.. டேடே.. புடுவேன்.." (மதுரை தமிழில் படிக்கவும்), என்று கையைக்காட்டி மிரட்டுகிறார்.

* என் மச்சான் ஜனாப். மரியாதைக்குரிய மொஹுதூம் முஹம்மத்-செயலாளர், அவர்களை காணவில்லையே. ஏன் இவ்வளவு மரியாதை என்று பார்க்கின்றீர்களா..! தங்கையை கொடுத்து இருக்குல்லே.

** நான் சிறுவனாக இருந்த காலம் முதல் பலர் கூற நான் அறிவேன், பாளையம் ஹபீப் காக்கா அவர்களின் நற்குணங்களை.

அவர்கள் ஜித்தாவில் பணி புரிந்த காலங்களில், நம் சகோதரர்கள் சங்கமிக்கும், அடைக்கலம் போகும் இடம் அவர்கள் வீடு தானாம். எப்போதும் அடுப்பு ஏரிந்துக்கொண்டே இருக்குமாம். ஹஜ் சீசன் என்றால் கூடுதல். ஹாஜிகளுக்கு பணிவிடை செய்யவே, காலில் சக்கரம் கட்டிக்கொண்டு இருப்பார்களாம். என் தந்தை அவர்களும் கூறுவது உண்டு. உங்களின் சேவைகளை அல்லாஹ் அங்கீகரிப்பானாக.

** இன்று முதல் ஒரு குறிக்கோள் வைத்து உள்ளேன். இனி மேல் காயல் நல மன்றங்களின் செய்திகளை பசி நேரத்தில் பார்க்கக் கூடாது என்று.

இப்படி நெய்யும் நெருப்புமாக சாப்பாட்டு ஐட்டங்களை போட்டோ பிடித்து போட்டால்...? கடுப்பை கிளப்புகிறாங்க சார். எம்புட்டு ஐட்டங்கள்..!!!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [01 November 2012]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23359

கண்ணைக்கவரும் புகைப்படங்கள் . மனதைக்கவரும் உணவுகள் . அமீரகத்திற்கு இணையாக சிங்கையிலும் இத்தனை காயலர்களா? சந்தோசமாக உள்ளது . சிறப்பு அழைப்பாளர் வியட்நாம் அப்துல் ரஹ்மான் ஹாஜியாரையும் பேச வைத்திருக்கலாம் . எதையாவது பேசி கூடுதல் வசூல் பண்ணியிருப்பார் .

அமீரகத்திற்கு ஒரு விளக்கு தாவூத் ஹாஜியார் போன்று சிங்கையில் பாளையம் ஹசன் ஹாஜியார் . தூய்மையான எண்ணங்களை கொண்ட இவர்களுக்கு அல்லாஹ் அதிக பரக்கத்து செய்வானாக . ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [01 November 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 23364

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>> எங்கள் அன்பு மரியாதைக்குரிய சகோதரர்கள் ....அனைவர்களுக்கும் என் இனிய ஹஜ்ஜு பெரு நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .......

தாங்கள் யாவர்களும் இந்த மிக சிறப்பான நல் நாளில் எல்லா நற் பலன்களும் பெற்று நீடித்த ஆயுளுடன் சந்தோஷமான முறையில் ....+ ....ஒற்றுமையான முறையில் சகோதர பாசத்துடன் வாழ்ந்து வர கிருபை செய்து அருள் வானகவும் ஆமீன்................

நம் ஊர் பள்ளிகளில் தொழுகை நடப்பது போன்று ........மாஷா அல்லாஹ்.... ரொம்பவும் ஜோராகவே இருக்கிறது ....நம் ஊர் மக்கள் யாவர்களுக்கும் சொந்த ஊரில் இருப்பது போன்று அல்லவா மனதில் தோன்றி இருக்கும் .............

நம் ஊர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட நம் பாசத்துக்குரிய . ஜனாப் . ஹாஜி பாளையம் ஹபீப் அவர்கள் பேசுகையில். ''' தாம் ஜித்தாவில் பணிபுரியும்போது அங்கும் இதுபோன்ற ஒன்றுகூடல் "மக்கா ஹவுஸ்" என்றழைக்கப்படும் தம் இல்லத்தில் நடந்தவைகளை நினைவு கூறியது...............ரொம்பவும் பொருத்தமான இடதில் தான் ஹாஜி பாளையம் ஹபீப் காக்கா அவர்கள் கூறி உள்ளார்கள் ...உண்மையில் "மக்கா ஹவுஸ்" என்கிற பேர் ...இன்று நாள் வரை ....ஜித்தாவில் காக்கா பேர் சொல்கிறது ..... ஹாஜி பாளையம் ஹபீப் அவர்கள் சொன்னது போன்று '''ஒற்றுமையாக திறம்பட நகர் நலன் கருதி இயங்கும் '''' போது தான் நம் ஊரின் நலமும் + பலமும் உள்ளது ...வல்ல இறைவன் நம் ஊர் மக்களின் ஒற்றுமையில் எப்போதும் உரு துணையாக ....நம்மோடு ஒன்றாக நிர்பானாகவும் ஆமீன்.

ஜெட்டாவில் ஹாஜி பாளையம் ஹபீப் காக்கா அவர்கள் வீட்டுக்கு யார் எப்போது போனாலும் சாப்பாட்டுக்கும் / மிக கண்ணியமாக நடத்துவதற்கும் ... பஞ்சமே இருக்காது ...அது போல்தான் ஜனாப் . ஹாஜி பாளையம் ஹசன் காக்கா அவர்களும் ...இவர்களில் யார் '' கண்ணியத்தில் '' உயர்ந்தவர் '' என்று யாராலுமே கண்டிப்பாக கணிக்கவே முடியாது ....வல்ல இறைவன் இவர்களுக்கும் ...இவர்களின் குடும்பத்தார்களுக்கும் நீடித்த ஆயுளை ..இவர்கள் யாவர்களையும் என்றென்றும் சிறப்பாக்கி அருள்வானகவும் ஆமீன்....

சிங்கப்பூர் காயல் நற்பணி மன்றத்தின் நற்சேவை அனைத்தும் தொடர்ந்து செயல் ஆற்றிடவும் வல்ல இறைவனிடம் துவா செய்து ......சிறப்பான ஹஜ்ஜு பெரு நாள் வாழ்த்தினை கூறிகொள்கிறேன்...............

வஸ்ஸலாம்.

K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...ஒன்று கூடல்
posted by NIZAR (kayalpatnam) [01 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 23372

அரபுநாடுகளில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் வழமையாக இருக்கும்,அனால் சிங்கையில் இப்படி ஒரு இனிய ஒன்றுகூடல் என்பது உண்மையிலே நெஞ்சை தொடும் நிகழ்வாக இருக்கிறது.சாப்பாடு வகைகளை பார்த்தால் தலை சுற்றிடும் போல் இருக்கிறது,இப்படியா படம்போட்டு வாய நனைக்கிறது எத்தணை வகைகள் அதுவும் படத்தில் பார்க்கும்போதே அவ்வளவு டேஸ்டாக இருக்கும் என்பதை அறியமுடிகிறது,இப்படிப்பட்ட ஏற்பாடுகளை செய்த ஹசன் காக்காவுக்கும் மற்ற காயல் சகோதர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறேன்.இப்படி நிகழ்சிகள் தொடர்ந்தால் ஊரு போர் அடிதுரும்,சிங்கை இனித்திடும்.

YOURS,
NIZAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஈத் முபாரக் !
posted by M.S.Kaja Mahlari (Singapore) [01 November 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 23373

அஸ்ஸலாமு அலைக்கும். அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஈத்-பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த அருமையான "பெருநாள் ஒன்று கூடலில்" சில தவிர்க்கமுடியாத காரணத்தால் நான் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன். நாம் சந்தோசம் அடையும் இந்நேரத்திலும் நமது மக்களும் இந்த மகிழ்ச்சியில் இணைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நமதூர் மக்களுக்காக ஒரு இலட்சம் பெருநாள் வசூலாக அளித்திருப்பது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

தியாக திருநாளில் நம்மால் முடிந்த பிறருக்காக செய்யும இந்த ஒரு உதவியும் ஒரு வகை தியாகமாகும். பொதுவாக என் போன்ற உலமாக்கள் யார் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அங்கு அவர்களிடம் ஒரு கவர் கொடுக்கப்படும்.

அதில் அவர்களால் முடிந்த தொகையை சீக்கிரட்டாக வைத்து சீக்கிரமாக கொடுத்து விட வேண்டும். நான் கூட சில சமயத்தில் தமாசாக சொல்வதுண்டு ! ஆலிம்களுக்கு கவர் கொடுப்பார்கள் ! ஆலிம்களிடம் கவர் கேட்கிறீர்களே ? என்பேன் ! இங்கு இதுதான் ஸ்டைல் ! என்பார்கள்!

அந்த அளவுக்கு அனைவரும் அவர் அவர்களின் பங்குக்கு உதவுவதை நினைத்து சந்தோசம் அடைகிறோம். ஜித்தாவில் ஒரு ஹபீப் ஹாஜியை போன்று,(தற்போது சென்னையில் ) சிங்கையில் ஒரு ஹசன் ஹாஜியை போன்று நமதூர் மக்கள் எங்கெல்லாம் பரந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் பல ஹபீப்களும், ஹசன்களும் தோன்றவேண்டும்.வாழ்வாங்கு வாழ வேண்டும். வாழ வைக்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது மக்களுக்காக பொது சேவையில் ஈடுபடும் அத்துணைப் பேர்களுக்கும் எல்லா வளங்களையும் ,நலன்களையும் வாரி ,வாரி வழங்குவானாக ! ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பப்பாத்து!!! (?!)  (2/11/2012) [Views - 3312; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved