Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:47:44 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9541
#KOTW9541
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 2, 2012
காயல்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்! நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து உரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2874 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பெண்களிடம் பாலியல் வன்கொடுமையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காயல்பட்டினத்தில் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



மின்வெட்டிருந்ததால் அரிக்கேன் லைட் வெளிச்சத்தில் காயல்பட்டினம் பேரூந்து நிலையத்தின் முன்பாக நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாதர் சங்க தலைவி டி.கலைச்செல்வி தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.



தான் மாதர் சங்க நிர்வாகி என்பதால் காயல்பட்டினம் நகராட்சியின் பெண் தலைவருக்கு எதிரான சதிச்செயல்களையும் இனங்காட்ட கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நகராட்சிக்கு நல்ல - நேர்மையான தலைமை கிடைத்தும், உறுப்பினர்கள் பலரின் ஒத்துழைப்பின்மையால் நிர்வாகம் சீர்கெட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நகராட்சிக்குச் சொந்தமான ஆவணம் இல்லாத வாகனத்தைப் பழுது நீக்கி பயன்படுத்துவதற்கு நிறைவேற்றப்பட்ட நகர்மன்றத் தீர்மானத்திற்காக தலைவியை தொடர்ந்து குற்றஞ்சாட்டும் உறுப்பினர்கள், கடந்த 20 ஆண்டுகளாக இதே வாகனம் இயக்கப்பட்டபோது என்ன செய்தார்கள் என்று கேள்வியெழுப்பினார். கடந்த நகர்மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் சிலரும் இந்த நகர்மன்றத்திலும் உறுப்பினர்களாக இருந்துகொண்டு - அன்று சொல்லாத குற்றச்சாட்டை இன்று சொல்வது உள்நோக்கம் கொண்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளருமான திருத்துவராஜ் உரையாற்றினார்.



காயல்பட்டினத்திற்கு தற்போது 21 லட்சம் லிட்டர் தண்ணீர் - ஆத்தூரிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் அனுப்பப்படுவதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலும், 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதால், ஒருவேளை அருகிலுள்ள தொழிற்சாலைக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்து பேசிய அவர், நகர்மன்றத் தலைவர் மிகவும் நேர்மையாகவும், களத்தில் இறங்கி முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துவிட்டு, இப்படிப்பட்ட நேர்மையான தலைவருக்கு எதிராக உறுப்பினர்கள் களமிறங்குவது வேதனைக்குரியது என்றார்.

தலைவர் - உறுப்பினர்கள் பிரச்சினையால், நகராட்சி அதிகாரிகள் தங்கள் சட்டைப்பைகளை நிரப்பிக்கொள்வர் என்று தெரிவித்த அவர், இவர்களின் கருத்து வேறுபாடுகளால் ஊர் நலன் பாதிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் அதனால் தவறான முறையில் பயனடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

காயல்பட்டினம் நகராட்சியில் அதிகாரப்பூர்வமாக 8,000க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளது ஒருபுறமிருக்க, திருட்டுத் தனமாகவும் சுமார் 8000 குடிநீர் இணைப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தெருவிளக்கு பராமரிப்பைப் பொருத்த வரை இந்த நகராட்சி நிர்வாகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், தான் சார்ந்துள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் - தனது பகுதியான அருணாச்சலபுரம், அதனையடுத்த கொம்புத்துறை (கடையக்குடி) பகுதிகளில் எட்டிக்கூட பார்ப்பதில்லையென்றும், இதுவே கடந்த நகர்மன்றத்தின்போது இதே வார்டில் தான் உறுப்பினராக இருக்கையில், தெரு வேறுபாடுகளின்றி - வார்டின் அனைத்து தெருக்களுக்கும் சென்று இயன்றளவு குறைகளைத் தீர்த்துக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக மாவட்ட ஆட்சியரகம், காயல்பட்டினம் நகராட்சி உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் தொடர்ந்து மக்களுக்கு அறிவுரை வழங்கி வரும் நிலையிலும், இன்றளவும் யாராவது கையில் துணிப்பையுடன் கடைகளுக்குச் சென்றதுண்டா என்று கேள்வியெழுப்பினார். நகராட்சியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே தன் கண் முன் கடையில் வாங்கிய பொருளை ப்ளாஸ்டிக் கேரி பையில் போட்டுக் கேட்டது வேதனையானது என்று தெரிவித்தார்.

மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஊதியம் வாங்குவோர் கூட ஊர் சுற்ற நேரமின்றி இருக்கையில், வெறும் 2000 ரூபாய் அளவில் ஊதியம் பெறும் நகராட்சியின் ஊழியர் தினமும் மோட்டார் பைக்கில் கவலையின்றி ஊர் சுற்றுவதைப் பார்க்கும்போது தனக்கு மிகவும் வியப்பளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனிடமிருந்து, நகரில் தெருவிளக்கு பொருத்துவதற்காக பெறப்பட்ட சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கொண்டு எத்தனை தெருவிளக்கு வாங்கினார்கள்... அவற்றில் எத்தனை விளக்குகளைப் பொருத்தினார்கள்... அதற்கான கணக்கு வழக்குகள் என்னென்ன என்பன போன்ற - மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டிய அனைத்து விபரங்களும் மூடி மறைக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

நேர்மை - நாணயம் - ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் ஆகிய குறிக்கோள்களுடன் செயல்பட்டு வரும் நகர்மன்றத் தலைவிக்கு தமது கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்த அவர், தலைவியும் அனைத்து விஷயங்களிலுமே கறாராக இருக்காமல் - அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொண்டு நிர்வாகத்தை சீராக்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காயல்பட்டினம் மின்வாரிய அலுவலகத்திலுள்ள துணைப்பொறியாளரின் நிர்வாகக் குறைபாடுகள் குறித்தும் பேசினார். மின்வாரியத்தில் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் கையெழுத்திட்டு நடவடிக்கையெடுக்கும் விஷயத்தில் அவர் மந்தப் போக்கில் செயல்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு அனுதினமும் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

திருச்செந்தூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் எஸ்.பன்னீர் செல்வம், மாவட்ட குழு உறுப்பினர் செ.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் லட்சுமி புரம் கிளை செயலாளர் டி.ஜான் ஸ்டான்லி, ஆறுமுகனேரி நகர கிளை செயலாளர் ஜெயபாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் பி.கே.கல்யாணசுந்தரம், ச.கண்ணன், ஏ.துரைராஜ், சிவதாணுதாஸ், ஓ.எம்.எஸ். ஆண்டி, காந்தி நகர் கிளை செயலாளர் சி.ராமலட்சுமி, நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இது தேவையா?
posted by Muthu Magdoom VSH (Jeddah) [02 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23393

இப்பதான் எல்லாம் சரி ஆயிட்டுதே. எல்லாமே நல்லா போயிட்டு இருக்கும்போது இது தேவையா? வந்துட்டாங்க சும்மா வேலை இல்லாம. பிரச்னை இருக்கும்போது இவங்கல்லாம் தூங்கிட்டா இருந்தாங்க?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. WATER METER
posted by JAHIR HUSSAIN VENA (BAHRAIN) [02 November 2012]
IP: 188.*.*.* Bahrain | Comment Reference Number: 23401

//காயல்பட்டினத்திற்கு தற்போது 21 லட்சம் ..ஒருவேளை அருகிலுள்ள தொழிற்சாலைக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்//

COPY AND PASTE

என்னத்த எழுத .....இது பற்றி நிறைய கமெண்ட்ஸ் போட்டாச்சு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாங்கய்யா...வாங்க சின்னைய்யா வந்திருக்காக...சித்தி வந்திருக்காக...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [02 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23405

காலதாமதமாக வந்தாலும் கரெக்ட்டான பாயிண்ட்லெ தான் பேசியிருக்காங்க...! இப்படி பல அமைப்புகள் தட்டிக்கேட்கும் போது தான் நிர்வாக குழப்பங்கள் நிவர்த்தி செய்யப்படும். இல்லை எனில் கம்பெடுத்தவன் வேட்டைக்காரன் எனும் நிலைக்கு ஆளாகி நகர்மன்றம் எடுப்பார் கைப்பிள்ளை போல் ஆகிவிடும். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. துணை தலைவர் காசோலை மோசடி...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (KAYALPATNAM ) [03 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23412

கடந்த நகர்மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் சிலரும் இந்த நகர்மன்றத்திலும் உறுப்பினர்களாக இருந்துகொண்டு - அன்று சொல்லாத குற்றச்சாட்டை இன்று சொல்வது உள்நோக்கம் கொண்டது என்ற உண்மை மதி கொண்ட மக்களுக்கு தெரியும்...

அன்று கடந்த நகர்மன்றத்தில் உறுப்பினர்களுக்கு (துணை தலைவர் காசோலை மோசடி உட்பட) தாராளமயமாக இருந்தது...! இன்றோ நகர்மன்றத்தில் தாராளமயம் தடை செய்யப்பட்டுள்ளது...! தலைவி (தடுப்பு சுவர்) போட்டுள்ளார்கள் போலும் -

நினைவுக்கு வருகிறது - வள்ளுவனின் சொல் பொய்யாவது அல்ல..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பப்பாத்து!!! (?!)  (2/11/2012) [Views - 3312; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved