Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:19:51 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9568
#KOTW9568
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 6, 2012
டீக்கடைக்காரர்கள் ஜா...........க்கிரதை!!! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5076 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தேயிலைத் தூளில் கலப்படம் செய்து விற்பனை செய்யும் தேயிலைத் தூள் வணிகர்கள், தேனீர் கடை வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-

டீ தூளில் கலப்படம் செய்தால் 7 ஆண்டு சிறைத்தண்டனை!

ஏழை - எளியவர்கள் முதல் பண வசதி படைத்தோர் வரை அனைவரும் அன்றாடம் பருகும் தேனீர் தயாரிக்க பயன்படும் டீ தூளில் அண்மைக்காலமாக கலப்படங்கள் அதிகரித்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறையினரால் அறியப்பட்டுள்ளது மட்டுமின்றி, இதுகுறித்த புகார்களும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் ஆலோசனை பெறப்பட்டதன் பேரில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மருத்துவர் எம்.ஜெகதீஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளதாவது:-

அன்றாம் மிகுதியாகப் பயன்படுத்தப்படும் தேயிலையில் லாப நோக்கம் கருதி கலப்படம் செய்வது அதிகரித்து வருகிறது.

பயன்படுத்தப்பட்ட தேயிலைத்தூள், மட்டரகமான தேயிலை ஆகியவற்றுடன் முந்திரி தோல், புளியங்கொட்டை ஆகியவற்றின் தூளை கலப்படம் செய்து, செயற்கையான வாசனைப் பொருட்களும், அபாயகரமான கரி தாரின் சாயத்தையும் கலந்து, போலி தேயிலைத்தூள் தயாரிக்கப்படுகிறது.

இவ்வகையான போலி தேயிலைத்தூளை குளிர்ந்த நீரில் கலந்தவுடன் மிகுதியான ஆரஞ்சு கலந்த சிவப்பு வண்ணத்தை உமிழ்வதிலிருந்து அதிலுள்ள கலப்படத்தை அறியலாம்.

இந்தப் போலி தேயிலையிலிருந்து தயாரிக்கப்படும் தேனீரை அருந்துவதால், குடல் - கல்லீரல் ஆகியன பாதிப்படையும். குடல் புண் (அல்சர்) தோன்றும். நாளடைவில் அபாயகரமான புற்றுநோயையும் உருவாக்கும்.

இந்தியாவின் தேசிய பானமாகத் திகழும் தேனீரில் இவ்வளவு அபாயத்தை உருவாக்கும் கலப்படத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவது வேதனையானதும், தவிர்க்கப்பட வேண்டியதுமாகும். ஆகையால், உணவு பாதுகாப்புத் துறையினரால் மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வுகளில், கலப்படமானது என சந்தேகிக்கப்பட்ட போலி தேயிலையின் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு எடுத்தனுப்பப்பட்டுள்ளது.

தேயிலையில் எவ்வித சாயப்பொருளும் கலக்க அனுமதியில்லாத நிலையில், பகுப்பாய்வு அறிக்கையில் டீ தூளில் சாயப்பொருட்கள் கலக்கப்பட்டிருப்பது நிரூபணமானால், கலப்படம் செய்த குற்றவாளிக்கு ரூ.10 லட்சம் வரை அபராதமும், ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் உறுதியாக வழங்கப்படும்.

ஆகையால், தேயிலை மற்றும் தேனீர் வணிகர்கள் தரமான மற்றும் பாதுகாப்பான விற்பனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும், இது தொடர்பான புகார்களை பொதுமக்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கி வரும் உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் அவர்களின் அலுவலகத்தில் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவரது தொலைபேசி எண்: +91 461 2340699.


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 21:32 / 06.11.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஒரு சின்ன எழுத்து பிழை
posted by AHAMED THAHIR (NEW DELHI) [06 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 23530

அட்மின் அவர்களே.. இந்த செய்தியில் ஒரு சின்ன எழுத்து பிழை இருப்பதை தங்கள் கவனத்திற்கு தெரிய படுத்துகிறோம். அதுவானது, ஏழு வருட சிறை தண்டனை என்பதற்கு பதிலாக '' ஏழு சிறை தண்டனை '' என்றுள்ளது. கவனிக்கவும்..

Moderator: திருத்தப்பட்டது. நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வேண்டாம் கலப்படம்!
posted by M.S.Kaja Mahlari (Singapore) [06 November 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 23533

அருமையான சட்டங்கள்! இது உண்மையிலேயே அமுல் செய்யப்பட்டால் கலப்படக்காரர்கள் கலவரப்படுவார்கள் கலப்படம் செய்ய பயப்படுவார்கள் !

(قال رسول الله صلي الله عليه وسلم :من غش فليس منا )
கலப்படம்,மோசடி மூலம் வியாபாரம் செய்பவர்கள் நம்மை சார்தவறில்லை என்பது நபிமொழி )

கலப்படம் என்கின்றபோது பத்திரிக்கையில் படித்த செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது!

(உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஒரு நோயாளியை அவசர, அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தார்கள் ! மருத்துவர் அவரை பரிசோதித்து உடனே உயிர்காக்கும் மருந்து ஒன்றை ஊசியின் மூலம் நோயாளிக்கு உடலில் செலுத்தினார். மறுகணமே நோயாளி மரணமடைந்தார் ! காரணம் "உயிர்காக்கும் " மருந்தில் கலப்படம் !

வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஒருவர் கடும் விஷம் நிறைந்த பூச்சி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டார் ! குறிப்பிட்ட நேரத்தில் உயிர் பிழைத்துக் கொண்டார் ! காரணம் விசமருந்தில் கலப்படம்!

இதுதான் இன்றைய உலகத்தின் நிலை !

எது எப்படியோ ! முஸ்லிம் வியாபாரிகள் அல்லாஹ்,ரசூலுக்கு பயந்து கலப்படம் போன்ற மோசடியில் இறங்காமல் நடக்க வேண்டும் .அல்லாஹ் அதற்கு துணை செய்ய வேண்டும் ! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [06 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23536

வியாபாரிகள் எல்லாம் நாளை மறுமை இலே பாவிகளாக எழுப்ப படுவார்கள் . இறைவனை பயந்து வியாபாரம் செய்த வியாபாரிகளைத் தவிர ..........., வியாபாரத்தில் மோசடி செய்ததால் தான் ஸுஐபு நபி அவர்களுடைய கூட்ட தினர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள்? என்பதை சிந்தித்து நல்லுணர்வு பெறுங்கள் அன்பார்ந்த வியாபாரிகளே ! உங்களை நாடிவரும் வாடிக்கை யாளர்களின் உயிரை துச்சம் என கருதாது ,மனித உயிர் விலை மதிப்பற்றது என எண்ணி பய பக்தியோடு வியாபாரம் செய்யுங்கள் . வியாபாரத்தில் பரக்கத்தை நிச்சயம் பெறுவீர்கள்.......இன்ஷா அல்லாஹ் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [06 November 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23540

அட்ரா சக்கை .. அட்ரா சக்கை...!

அருமையான நடவடிக்கை... மிக அருமையான சட்டம்.

நம் நாட்டில் சட்டத்திற்கா பஞ்சம். அது பண்ணினால் இத்தனை ஆண்டு ஜெயில், இதை பண்ணினால் இத்தனை ஆண்டு ஜெயில் என்று சட்ட புத்தத்தை புரட்டினால் அதிசயமாக இருக்கும். ஆனால், நடைமுறை படுத்த முடிகிறதா.??!!..!!

இந்த கலப்பட டீ-யை குடித்தால் அல்சர் வரும், ஈரல் பாதிப்பு அடையும் சரிதான்.

நீங்க ஏறியாவிற்கு ஏறியா டாஸ்மாக் கடையை திறந்து, ஊத்திக் கொடுக்கின்றீர்களே..! அதனால் ஒரு பாதிப்பும் இல்லையோ. கவலைதான் மிஞ்சுகிறது.

* தற்போது அரசாங்கத்தின் குறிக்கோள் என்ன தெரியுமா ?

- மாநிலத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆகணும் என்பதா?
- வறுமையை போக்கணும் என்பதா?
- மின்சார தட்டுப்பாடே இல்லாத மாநிலமாக ஆகணும் என்பதா?
அல்லது
-வரும் தீபாவளி அன்று டாஸ்மாக்கின் விற்பனையை 40% (நாற்பது சதவீதம் ) அதிகரிக்கணும் என்பதா?

அட.. சரியாக சொல்லிவிட்டேர்களே..! சபாஷ்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...ஜாக்கிரதை
posted by NIZAR AL (kayalpatnam) [06 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 23550

டீ தூளில் கலப்படம் செய்தால் 7 ஆண்டு சிறைத்தண்டனை என்ற இந்த செய்தியை படிப்பவர்கள் தயவுசெய்து டீ கடைக்காரர்களுக்கு எடுத்து சொல்லவும்.

டீ கடை வைத்திருப்பவர்கள் பொதுவாக நல்ல அடிக்கட்டும் பால் எதுவோ அதை தான் வாங்குவார்கள். அதைபோல் குறைந்த விலையில் எது உடனே சிவக்குமோ அந்த தேயிலையை வாங்குவார்கள்.

மற்றபடி இது நல்ல பால்தானா? இந்த தேயிலை தூள் நல்லதுதானா என்பதெல்லாம் அவர்கள் கவனிப்பதில்லை. இதுதான் எதார்த்தம்.

நம்ம ஊரு மக்களை சொல்லவா வேணும் திருப்பி திருப்பி டீ கடையை சுற்றி வருவதும் டீ குடிப்பதும் வழமை. எத்தனை டீ குடித்தாலும் அசர மாட்டார்கள்.

எனவே டீ கடை வைத்திருப்பவர்கள் நல்ல பிராண்ட் தேயிலை தூளை வாங்குங்கள். பெரும்பாலும் லூசில் விற்கும் தேயிலை தூளை தவிர்ப்பது நல்லது. தயவு செய்து வியாபாரத்தனமா இல்லாமல் மக்கள் நலனிலும் வியாபாரிகள் அக்கறை செலுத்துவது தங்கள் கடமை என்பதை உணரவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஏழு வருஷம்டா...எழவு கொடுத்தவனே...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (புனித மக்கா.) [07 November 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23555

ஒரு டீ கடைக்காரரின் அலறல்....!

எவண்டா அவன்? கலக்டர் ஆபீஸுக்கு டீ அனுப்பாதேன்னு ஆயிரம் தடவை அடிச்சு சொன்னாலும் மண்டையிலெ ஏற மாட்டென்ங்குது உங்களுக்கு... இப்ப பாரு எல்லாருக்கும் வச்சுட்டாங்க ஆப்பு...! மாட்டுனா ஏழு வருஷம்டா...எழவு கொடுத்தவனே...! டீத்தூளெ மாத்தி தொலைங்கடா...!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [07 November 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23564

காயல். காம் நன்றி உனக்கு இங்கு ஒரு கார்கோவில் ஊருக்கு பொருள்கள் அனுபினால் 1/2 kg டீத்துள் தந்தார்கள் பாலை கொதிக்க வைத்து டீயை போட்டால் லைட் சிவப்பு நிறம் வந்தது ருசியும் இல்லை. இங்கு இப்படி என்றால் ஊரில் சொல்லவா வேண்டும். இங்கு உள்ளவர்கள் கவனம் கவனம் kkkkkkkkkkkkkkkkknnam உசார். நன்றி மீண்டும்

இவன்
பீனா அப்துல் ரஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மீண்டும் கனமழை துவக்கம்!  (8/11/2012) [Views - 2751; Comments - 1]
சொரணையத்துப் போச்சி! (?!)  (7/11/2012) [Views - 3611; Comments - 13]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved