Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:13:16 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9831
#KOTW9831
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 21, 2012
நகைக்கடை உட்பட - நகரில் பல இடங்களில் திருடர்கள் கைவரிசை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4006 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் நேற்று ஒரு நகைக்கடையில் திருட்டும், பல இடங்களில் திருட முயற்சியும் நடந்துள்ளது.

காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் அமைந்துள்ளது ஏ.கே.எம்.ஜுவல்லர்ஸ் நகைக்கடை. 20.12.2012 வியாழக்கிழமையன்று (நேற்று) காலை 08.00 மணியளவில், அருகிலுள்ள பலசரக்கு கடை அதிபர் தனது கடையைத் திறக்க வந்தபோது, நகைக்கடையின் ஷட்டர் கதவு உடைத்து திறக்கப்பட்டிருந்ததைக் கண்டுள்ளார்.. உடனடியாக கடை உரிமையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் தெரிவித்ததையடுத்து, கடை அதிபர்களான ஒய்.எம்.முஹம்மத் தம்பி, எஸ்.ஐ.செய்யது மொகுதூம் ஆகியோர் கடைக்கு விரைந்து சென்று பார்த்தபோது, கடையின் ஷட்டர் கதவு திறக்கப்பட்டு, உள்ளே பொருட்கள் சிதறடிக்கப்பட்டு கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.





சுமார் 350 கிராம் வெள்ளி நகைகளும், பணமும் திருடப்பட்டுள்ளதாக பின்னர் கண்டறியப்பட்டது. இத்திருட்டு குறித்து உடனடியாக காவல்துறையிடம் முறையிடப்பட்டதன் பேரில், திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஞானசேகரன், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன், துணை ஆய்வாளர் ஷ்யாம் சுந்தர், விரல் ரேகை நிபுணர் பிரம்மநாயகம் உள்ளிட்ட காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.



இந்நிகழ்வு காரணமாக, நேற்று காலையில் எல்.கே.லெப்பைத்தம்பி சாலை பரபரப்புடன் காணப்பட்டது.



கடந்த சில நாட்களில் மட்டும் காயல்பட்டினத்தில் - பள்ளிவாசல், இறைச்சிக்கடை என பல இடங்களில் திருட்டு முயற்சி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.



இதுபோன்ற திருட்டு நிகழ்வுகளின்போது - அது சிறியதோ, பெரியதோ, உடனடியாக காவல்துறையிடம் முறையிடப்பட்டால்தான், குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடிக்க இயலும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தகவல் உதவி & படங்கள்:
A.K.இம்ரான்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இரவு நேரத்தில் விழித்திருக்கா விட்டாலும் விழிப்புடன் இருக்க வேண்டும்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [21 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24708

இது ஓர் துணிகரத் திருட்டு! சாமர்த்தியமாக பல நாட்கள் வேவு பார்த்து வேலையைத் துவங்கியுள்ளனர். பள்ளி வாசல் பம்பு செட்டைக்கூட விட்டு வைக்கவில்லை எனக் கேள்விப்பட்டேன். கோழிக்கடை முதல் நகைக்கடைகள் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது என்ன காயல்பட்டினமா? இல்லை சம்பல் பள்ளத்தாக்கா? இவ்வளவு துணிச்சல் வெளியூர்களிலிருந்து திருட வருபவர்களுக்கு இருக்க சாத்தியமில்லை. உள்ளூரைச் சார்ந்த ஏதேனும் திருடர்கள் ஒத்துழைப்பு இன்றி இச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை!

காவல்துறையினர் தனிப்படை அமைத்து கூடிய விரைவில் கொள்ளயர்களை பிடித்து கூண்டில் ஏற்றி பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டும். ஊர்க்காவல், கூர்கா போன்றோரை பணியில் அமர்த்தி இரவு நேர பதுகாப்புக்கு நமதூர் பொதுநல அமைப்புக்கள் முன்வந்து உதவ வேண்டும். பொதுமக்களாகிய நாமும் இரவு நேரத்தில் விழித்திருக்கா விட்டாலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:..
posted by M.S.ABDULAZEEZ (Gz) [21 December 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 24710

இரவு கடைகள் மூடிய பின் akm வாசல் படியில் பெரிய மீசை வைத்து கையில் டார்ச் லைட்டுடன் காக்கி உடை அணிந்த ஒரு காவல்காரர் (வாட்ச்மன்) இருப்பார் பலமுறை நான் கண்டது. தற்போது அவர் இலையோ...?

நமதூரில் தற்போது ஏதும் வட மாநிலத்தவர்கள் வியாபார நோக்கத்துடன் வந்து இருகிறார்களா என்று கவனிக்கவும். இது போன்றவைகலில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [21 December 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24712

அஸ்ஸலாமு அலைக்கும்

என்னப்பா ....இது நம் ஊர் தானா?? என்று நமக்கே சங்கடமாகவும் ....பயமாகவும் உள்ளது .இது நம் ஊரின் முக்கிய பகுதி வேறு....எப்படி இருப்பினும் பொது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி .....ஆதலால் நமக்கே வியப்பாகவே இருக்கிறது. இது ரொம்பவும் கைதேர்ந்த ஒரு சாமர்த்திய சாலி ரொம்பவும் துணிச்சலாக தான் இந்த காரியத்தை செய்து இருக்கவேணும் ......ஒரே நாளில் இத்தனை இடத்தில் ''' கள்ள பய ''' தன் கைவரிசையை காட்டி இருக்கிறான் என்றால் ....இது ஒரு கூட்டம் போல் தான் தெரிகிறது .......

நம் வீட்டு பெண்களை நாம் கவனமாக இருக்க சொல்லணும் .....மேலைக்கு இது போன்ற செயல் பாடுகள் நடக்காமல் இருக்க நாம் துரிதமாகவே செயல் பட்டு. இந்த '' கள்ள பயலை '' கண்டு பிடித்து கூண்டில் ஏற்றி தக்க தண்டனையை வாங்கி கொடுத்தே ஆகணும் ........

நம் தமிழக காவல் துரை அதிகாரிகள். மிகவும் திறமை வாய்ந்தவர்கள் ....நிச்சயம் கண்டு பிடித்து விடுவார்கள் ... இந்தியாவிலேயே நம் தமிழக ''காவல் துறை தான் ....மிகவும் கெட்டிக்காரர்கள்.......கூடிய சீக்கிரத்தில் நம் ஊர் பொது மக்களின் பயத்தை நம் காவல் துரை ஆடிகரிகள் நீக்குவார்கள்....இங்கிர முழு நம்பிக்கை நமக்கு உண்டு ...........

முன்போல் நாம் . நம் ஊரில் சந்தேகத்துக்கு குரிய நபர்கள் இருப்பின் ...நாம் நம் காவல் துறைக்கு தெரிய படுத்தி கொள்வது சால சிறந்தது................வெளி மாநிலத்தவர்களின் நடமாட்டத்தையும் நாம் கண்காணிக்க வேணும் . இது ரொம்பவும் அவசியம். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [21 December 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24725

அன்று ஒரு காலம் இருந்தது, ஊரே ஒரு கட்டுப்பாட்டில்.

நாமே வேஷ்டியை கொஞ்சம் தூக்கி நடந்ததால், உடனே ஒரு பெரியவர் நம்மை கூப்பிட்டு, " நீ யார் வீட்டு பையன்.. இப்படி காடையன் மாதிரி வேஷ்டியை தூக்கிகிட்டு போகிறாய்." என்று ஒரு கண்டிப்பும், மண்டையில் கொட்டும் விழும்.

முடுக்குகளில் நம் ஆண்களே சென்றாலும், ஒரு பெரிய அம்மணியிடம் இருந்து ஒரு குரல் வரும் " வாப்பா. இது உங்களுக்கு பாத்தியப்பட்ட முடுக்கு கிடையாது.. வடக்கு பக்க முடுக்கை புழங்குங்கோ.." என்று.

இன்றோ, ஊர் யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்றே தெரியவில்லை. காய்கறி, பழம் விற்பவர் முதல் காலி செண்டு பாட்டில் வாங்குபவர் வரை சர்வ சாதரணமாக முடுக்குகளில் புகுந்து விளையாடுகிறார்கள். ஒன்னுக்கு கூட தெருவில் அடிக்க முடியாது என்று முடுக்குக்கு சென்று கைலியை தூக்கி அடித்து விட்டு செல்லுகிறார்கள். கண்டாலும் கண்டிக்க நாதி இல்லை.

ஆட்டோ ஓட்டும் அதிகமான ஆட்கள் யார், எந்த ஊர் என்றே தெரிவது இல்லை. பஞ்சு மிட்டாய் விற்பவன் முதல் குல்பி ஐஸ் விற்பவன் வரை எந்த நாட்டுக்காரன் என்றே புரியவில்லை. விலை எம்புட்டு என்று கேட்டால், மாலும் நாயீ என்கிறான்.

ஊரில் கட்டுமானம் கட்டும் ஆட்களில் பலர் எந்த தேசம் என்றே அறிய முடியவில்லை. இவர்களை எல்லாம் இங்கு இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஒரு கட்டுப்பாடு, ஒரு பிடிமானம் இல்லையே என்ற ஆதங்கம்தான்.

இங்கு கைவரிசை காட்டிய திருடன் கண்டிப்பாக உள்ளூர் ஆட்களாக இருப்பது சந்தேகம்தான். காரணம் உள்ளூர் திருடன் கோழி கடையையும், மாட்டுக் கறிக்கடையையும், பள்ளிவாசலையும் கைவைக்க மாட்டான். பழைய தகர பெட்டியை உடைக்க மாட்டான். காய்ந்த மாடு கம்பங் கொல்லைக்குள் நுழைந்த மாதிரி தெரிகின்றது. ஆக கூடுதல் கவனம் வேறு திசையில் இருந்தால் நல்லது.

வல்ல அல்லாஹ் நம்மையும், நம் ஊரையையும் தீங்குகளில் இருந்து காப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mohammed Noohu (jeddah) [21 December 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24726

அஸ்ஸலாமு அழைக்கும். நமதூர் காயல்பட்டணத்தில் அண்மையில் கடந்த இரண்டு மாதங்களாக வீடுகளில் நுழைந்து கேஸ் சிலிண்டர் திருடுவது, தெருக்களில் மோட்டார் பைக்கிலிருந்து பெட்ரோல் உறிஞ்சி எடுப்பது, வீடுகளில் ஆட்கள் இல்லாத நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு நுழைந்து நகை, பணம் மற்றும் வீட்டில் வளர்க்க கூடிய சாதாரண கோழி, ஆடு, புறா போன்ற பல திருட்டுகள் தொடர்ந்து பரவலாக நடக்கின்றன.

இப்போது நடந்த நகைக்கடையில் கணிசமான ஆபரணங்களையும், பணங்களையும் திருடியது, இன்னும் சுமார் பத்து இடங்களில் கையாடல் செய்ய முயற்சி செய்தது நம் அனைவரையும், வியாபாரிகளையும் பயங்கரமான அச்சத்தை ஏற்படுத்தியது.

இவை நிச்சயமாக ஒரு மிகப்பெரிய கொள்ளை கூட்டமும் ,அதன் பின்னணியின் பல சதித்திட்டங்களும் இருக்கலாம் என்று நினைக்கக்கூடிய அளவிற்கு அமைந்துள்ளது.

எனவே ஊர் பொதுமக்கள் தங்களின் வீடுகளையும், கடைகளையும், பொருள்களையும், முறையாக பாதுகாத்து வெளியில் செல்லும்போது பாதுகாப்புடன் பெண்கள் செல்லவேண்டும்.

முக்கியமாக ஆட்டோவில் செல்லும் போது (அது அடுத்த தெருவுக்கு செல்வதாக இருந்தாலும் சரியே! தூரமாக செல்வதாக இருந்தாலும் சரியே!) தனிமையில் பயணிப்பதை முற்றிலும் தவிர்த்து துணையுடன் செல்லவேண்டும்.

அதைப்போன்று தெருக்களில் வந்து வியாபாரம் செய்யக்கூடிய வியாபாரிகளிடம் அவசியம் இல்லாத பேச்சுகளை தவிர, தன் குடும்பத்தை பற்றியோ அல்லது தன் கணவரின் தொழில் பற்றியோ பேசக்கூடாது.

மேலும் மொபைலில் அல்லது வீட்டு தொலைபேசியில் அறியாத நம்பரிலிருந்து கால் வரும்போது தவிர்ப்பது நல்லது. இருந்தாலும் மீறி எடுத்து பேசினால் அறியாத நபராக இருப்பின் உரத்த சப்தத்துடன் தவறான நம்பர் என்று சொல்லி துண்டித்து விடவேண்டும்.

ஆகவே இவை அனைத்தையும் பேணி நடந்தால் ஓரளவிற்கு திருட்டுகள் குறையலாம் இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ் மிக அறிந்தவன். அவனே அனைத்தையும் பாதுகாப்பதற்கு போதுமானவன். நன்றி

M.M.நூஹு (ஜித்தா)
காயல்பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Mohamed Abdul Cader (Saudi Arabi) [22 December 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24727

நம் காயல்பட்டினம் முன் போன்ற ஒரு கட்டுப்பாட்டுடன் இல்லை என்பது உறுதியாக கூற முடியும்.

முந்தய காலத்தில் ஊருக்கு புதியதாக யார் வந்தாலும் தெரிந்து விடும். இப்போதெல்லாம் எவன் எவனோ ஊருக்கு பிழைக்க வருகிறான். அப்படியே ஊருக்கு மத்தியில் வீட்டையும் வாங்கி காயல்பட்டணத்து காரனாகவே மாறி விடுகிறான். வந்தோரை வாழ வைக்கும் இந்த காயல் பட்டினத்தில் மண்ணின் மைந்தர்கள் நாடோடியாக திரிகிறோம். இதற்கு நல்ல தீர்வு வர வேண்டுமானால் நம்மில் ஒற்றுமை ஒன்றே அவசியம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...உள்ளூர் பொடிப் பசங்களின் வேலையே!
posted by OMER ANAS (DOHA QATAR.) [22 December 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24730

இங்கே நான்கு கருத்துக்களை கண்டேன். இவர்களின் யூகம் தவறில்லை. இப்படியும் நடந்திருக்கலாம்!

ஆனால் உண்மை 90(%) விழுக்காடு உள்ளூர் பொடிப்பயல்கள் (ஏரியாவை நான் இப்ப கோர விரும்பவில்லை.) கைகாட்ட, ஒரு கொள்ளை கும்பல் நமதூரில் தலை காட்ட துவங்கியுள்ளது என்பது மட்டும் நிச்சயம் எனக்குப் புரிகிறது.

கருப்பு உடையார் பள்ளிதான் இவர்கள் முகல்லா!
உடை மரங்கள்தான் இவர்கள் பட்டாளம்.
பள்ளிக்கு ஆப்பு கொடுத்து விட்டு திரியும் இந்த சின்னஞ்சிறு பூனைக் கூட்டமே நாளை நேரடி வேட்டைக்கு ( புலியாக) கிளம்பும் முன், நாம் சரியான ஆட்களை இதற்காக நியமித்து தடுக்கவில்லை என்றால் நமது ஊர் நிலைமை ?விக் குறியாகிவிடும்! மக்களே இனியாவது கொஞ்சம் உசாரா இருங்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...நகைக்கடை உட்பட - நகரில் பல இடங்களில் திருடர்கள் கைவரிசை!
posted by M.S.Kaja Mahlari (Singapore) [22 December 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24733

(அஸ்ஸலாமு அலைக்கும்)

இங்கு பலரும் பலவித கருத்துக்களை பரிமாறியுள்ளார்கள்!

ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்கப்படவேண்டியவை !

பொதுவாக வீடுகளில் வேலைசெய்ய வரும் வேலையாட்களிடம் நாம் மிகவும் கவனமாக நடந்துக்கொள்வது கடமையாகும் !

குறிப்பாக ஆண்கள் இல்லாத வீடுகளில் தகுதியான பெண்கள் மாத்திரமே இருக்கும் வீட்டில் பெண்கள் இன்னும் அதிகமான கவனமாக செயல்படுவது அவசியமாகும் !

வீட்டு வேலைக்காக வரும் (பிளம்பர், பெய்ண்டர்,எலக்ரீசியன் ,கொத்தனார், ஆசாரி, ரீடிங் எடுப்பவன், எக்ஸ்ச்செங்ஜிகாரன், ரிப்பேர் பார்ப்பவன் என ) நபர்களை அவர்களின் முகவரி, விபரங்கள் இவைகளை தெரிந்துக் கொள்ளவேண்டும் !

அவர்கள் வேலை செய்யும் இடத்தை தனியாக ஒதுக்கி வைக்கவேண்டும் !

ஏனைய பகுதிகளை அவர்களின் பார்வைக்கோ, பாவனைக்கோ இல்லாமல் ஆக்கிக்கொள்ளவேண்டும் !

பீரோல் சாவி, நகைகள், பணங்கள், பேங்க்புக், பாஸ்போர்ட் ,ஏடிஎம் கார்ட் ,போன்றவைகளை வேலைசெய்யும் இடங்களை விட்டும் அப்புறப்படுத்திவிட வேண்டும் !

ஆண்கள், உறவினர்கள், வயதான ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களோ இவர்களை கண்காணிக்க வேண்டும்!

கண்டிப்பாக இளம்பெண்கள் (மாத்திரம்) தனிமையாக இருக்கக் கூடாது !

அவர்களிடம் வீட்டு விசயங்கள், குடும்ப இரகசியங்கள் ,கணவனின் வருமானம், சொத்து போன்ற விசயங்களை பேசக்கூடாது !

வீட்டு வேலைக்காரியாக இருந்தாலும் அவளிடமும் தனது பர்தா முறையை பேணிக்கொள்ள வேண்டும் !

பெண்கள் பேண வேண்டிய பர்தா முறைகள் நான்கு என நமது பிக்ஹ் மார்க்க சட்டங்கள் தெளிவாக கூறுகிறது !

1. வெளியில் செல்லும் போது பேணவேண்டிய முறை.
2 . தொழுகையில் பேண வேண்டிய முறை .
3. தனது மஹ்ரமான உறவினர்கள் முன் பேணவேண்டிய முறைகள் .
4. அந்நிய மத பெண்கள் (வேலைக்காரிகள்) மத்தியில் பேண வேண்டிய முறை

. வேலைக்காரியிடம் தனது அழகு, அலங்காரம், நகைகள் இவைகள் வெளியில் தெரியும்படி நடந்துக்கொள்ளக் கூடாது !

காரணம் அவள் தனது கணவனிடமோ, உறவினர்களிடமோ "எங்கள் எஜமானி அம்மா மிகவும் அழகாக இருப்பார்கள், நல்ல நகைகள் எல்லாம் அணிந்து இருப்பார்கள் என வர்ணிப்பால்!

அதனை அவர்கள் ரசித்து ,அதனால் தேவைற்ற சிந்தனை ஏற்பட்டு கூடாத விபரீதங்கள் ஏற்பற்றுவிடும் !

ஆகவே ! வேலையாட்களுக்கு தேவையான உதவிகளை மாத்திரம் செய்துகொள்ள வேண்டும் !

அவசியமற்ற பேச்சுக்களையோ ,தேவையற்ற விஷயங்களையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும் !

ஆகவே ! நமது வீட்டில், கடையில் ,மற்றைய இடங்களில் திருட்டுக்கள் நடப்பதுக்கு நாமும் ஒரு விடத்தில் காரணமாகி விடுகிறோம்.

எனவே ! இவைகளை ஆண்களும் ,குறிப்பாக பெண்களும் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும் !

எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் அனைவரும் கவனமாக சிந்தித்து செயல் பட நல்லருள் புரிவானாக ! ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved