Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:37:41 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10050
#KOTW10050
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 28, 2013
கடற்கரை மாவட்டங்களில் கடற்கரை கால்பந்து, கடற்கரை கையுந்து பந்து மற்றும் கடற்கரை கபாடி விளையாட்டுப் போட்டிகளை நடத்திட தமிழக முதல்வர் ஆணை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2802 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடற்கரை மாவட்டங்களில் விளையாட்டினை மேம்படுத்தும் பொருட்டு, தமிழகத்தின் பத்து கடற்கரை மாவட்டங்களில் கடற்கரை கால்பந்து, கடற்கரை கையுந்து பந்து மற்றும் கடற்கரை கபாடி விளையாட்டுப் போட்டிகளை நடத்திட தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இது வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:

கல்வியில் மேன்மை, விளையாட்டுப் போட்டிகளில் திறமை ஆகிய இரண்டும் இளைஞர் சமுதாயத்திற்கு இன்றியமையாதது. கல்வியின் மேன்மை அறிவாற்றலை வளர்க்கும். விளையாட்டுத் திறமை உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும். அறிவார்ந்த மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டும் இன்றியமையாதது என்பதால், இவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

விளையாட்டு விடுதிகள் துவக்குதல், தினப் பயிற்சி திட்டத்தின் மூலம் வீரர்களுக்கு முழுமையான பயிற்சி அளித்தல், பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதற்காக பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத் தொகை வழங்குதல், உள்விளையாட்டு அரங்கங்களை அமைத்தல், கிராம விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவித்தல், பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துதல், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 100 இடங்களை 500 ஆக உயர்த்தியது போன்ற எண்ணற்ற திட்டங்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத் திறனாளிகளிடையே உள்ள விளையாட்டுத் திறனை வெளிக் கொணரும் வகையில், 2012 – 2013 ஆம் ஆண்டு முதல் மாற்றுத் திறனாளிகளிடையே மாநில அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுத் தொகை வழங்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ரூ.30.00 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கிட ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.

இந்த போட்டிகளில் கலந்து கொண்டு முதல் இடம் பெறும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.5,000/-, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.3,000/-, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2,000/- மற்றும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படும்.

தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் நிலவும் சுற்றுச் சூழ்நிலை நிலைமைக்கு ஏற்ப, விளையாட்டுப் போட்டிகள் நடத்திட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில் 2012 – 2013 ஆம் ஆண்டு முதல் கடற்கரை மாவட்டங்களில் விளையாட்டினை மேம்படுத்தும் பொருட்டு, தமிழகத்தின் பத்து கடற்கரை மாவட்டங்களில் கடற்கரை கால்பந்து, கடற்கரை கையுந்து பந்து மற்றும் கடற்கரை கபாடி விளையாட்டுப் போட்டிகளை நடத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, பத்து கடற்கரை மாவட்டங்களில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தொடரா மானியமாக ரூ.20.00 லட்சமும் தொடர் மானியமாக ரூ. 5.00 லட்சமும் ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

மேலும், இதில் கலந்து கொண்டு முதல் இடம் பெறும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.3,000/- இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2,000/- மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.1,000/- மற்றும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படும்.

சென்னை ஓப்பன் டென்னிஸ் மற்றும் சென்னை ஓப்பன் ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டிகளைப் போன்று 2013 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சென்னை ஓப்பன் சூப்பர் இறகுப்பந்து விளையாட்டு போட்டிகளையும் நடத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார்கள். இப்போட்டிகளை நடத்திட தொடர் மானியமாக ரூ.1.00 கோடி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் முந்தைய ஆட்சிக் காலத்தில் சென்னை ஜவஹர்லால் நேரு பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் பல்வேறு நவீன வசதிகளுடன், 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்டது. அச்சமயம் அங்கு நிறுவப்பட்ட குளிர்சாதன வசதிகள் மற்றும் ஒளிவிளக்கு வசதிகள், காலத்தினால் பழமையடைந்து விட்டதால், இவைகளை மாற்றியமைக்கவும், உலகத்தரம் வாய்ந்த ஒலியமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், உரிய நடவடிக்கை எடுக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இவ்வசதிகளை ஏற்படுத்திட ரூ.5.00 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved