Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:44:43 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10361
#KOTW10361
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 5, 2013
வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதிக்கு பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் நிதி வரவேற்கப்படுகிறது: தமிழ்நாடு வக்ஃப் வாரியம் அறிவிப்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2761 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதிக்கு பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் நிதி வரவேற்கப்படுகிறது என தமிழ்நாடு வக்ஃப் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து செய்தி குறிப்பு வருமாறு:

பள்ளிவாசல்கள், தர்காக்கள், மத்ரசாக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு மற்றும் மறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அரசு, ‘வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதி’ ஏற்படுத்தி 2012-2013ஆம் ஆண்டுக்கு நலிந்த வக்ஃப் நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக மூன்று கோடி ரூபாய் ஒப்பளிப்பு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக 5.3.2013 அன்று நடைபெற்ற வக்ஃப் வாரிய கூட்டத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் திரு.அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாரிய உறுப்பினர்கள் ஜனாப்.S.அப்துல் ரஹீம், M.L.A., ஜனாப். S.A.பாரூக், ஜனாப்.M.K.கான், ஜனாபா.A.S.பீ பீ ஜான், ஜனாப்.சலாவுதீன் முஹம்மது அயூப் மற்றும் ஜனாப்.குலாம் முஹம்மது மெஹ்தி கான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிதி குறித்து வாரியத் தலைவர் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதிக்கு பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் அளிக்கும் நிதியுடன் இத்திட்டத்தை தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மூலமாக அரசு செயல்படுத்த உள்ளது. பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் அளிக்கும் நிதியைப் பெற்றுக் கொள்ள தமிழ் நாடு வக்ஃப் வாரிய முதன்மைச் செயல் அலுவலருக்கு (அரசாணை எண்.2 பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள் 07.01.2013 மூலம்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமைச் செயலக கிளையில் தனியாக ஒரு சேமிப்புக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. கொடையளிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் ‘TAMIL NADU WAKF INSTITUTIONS DEVELOPMENT FUND’ என்ற பெயரில் கொடை தொகைக்கு சென்னை மாற்றத்தக்க வங்கி வரைவோலை எடுத்து

முதன்மை செயல் அலுவலர்,
தமிழ்நாடு வக்ஃப் வாரியம்,
எண்.1. ஜாபர் சிராங் தெரு,
வள்ளல் சீதக்காதி நகர்,
சென்னை-600 001.

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

உரிய பரிசீலனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் கொடை தொகை, நிதி தேவையுள்ள வக்ஃப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். மேலும் பெரும் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதித் தேவையுள்ள வக்ஃப் நிறுவனங்கள் உரிய திட்ட மதிப்பீடு, வரைபடம், புகைப்படம் போன்ற விபரங்களுடன் மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வக்ஃப் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் இத்திட்டத்திற்கு தாராளமாக நிதி வழங்கிட இஸ்லாமிய செல்வந்தர்கள், பொதுமக்கள் மற்றும் கொடையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட செய்தியை தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் மாண்புமிகு அ.தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

தலைவர்,
தமிழ்நாடு வக்ஃப் வாரியம்,
சென்னை-1.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்
posted by mackie noohuthambi (kayalpatnam) [05 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26028

வக்ப் வாரியம் பொது மக்களிடமிருந்தும் கொடையாளர்கள் இடமிருந்தும் நிதிகளை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

வக்ப் சொத்துக்கள் பல கோடி பெறுமதியான நிலங்கள் தனி நபர்கள் ஆதிக்கத்தில் இருப்பதாகவும் அதை மீட்டு எடுத்தால் அதைக் கொண்டு பள்ளிவாசல்களுக்கு சிதிலமடைந்த பாளிவாசல்களை புனர் நிர்மாணம் செய்வதற்கு நிதி அளிக்க முடியும் என்று கடந்த காலங்களில் வக்ப் போர்டு வாரிய தலைவராக இருந்த ஹைதர் அலி அவர்கள் கூட்டங்களில் பேசிய ஞாபகம் உள்ளது.

அரசின் சட்ட திட்டங்களுக்கு பயப்படுவது ஒருபுறம் இருக்கட்டும், ஏக தெய்வ கொள்கையில் இருப்பவர்கள், அல்லாஹ்வுக்கு பயப்பட வேண்டும். மறுமை நாளில் நமது வரவு செலவுகள் அவற்றை ஈட்டிய முறைகள் வழிகள், செலவு செய்த வழிகள் எல்லா வற்றைபற்றியும் கேள்வி கணக்கு கேட்கப்படுவோம் என்ற திடமான நம்பிக்கை உள்ளவர்களே இந்த வக்ப் சொத்துக்களில் கை வைத்து லாபம் சம்பாதிக்கிறார்கள் என்ற கசப்பான உண்மைகள் உள்ளத்தை ரணமாக்குகிறது. இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழ் மகன் முயற்சி எடுக்கலாமே. மேலும் முதல்வர் அவர்களும் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள்.

பள்ளிவாசல்களில் வரும் வருமானத்தை மட்டும் கவனமாக கணக்கு கேட்கும் வக்ப் வாரியம் பள்ளிவாசல் செலவினங்களுக்கு உதவுவதற்கு முன் வரவேண்டும். ஆட்சி எனபது ஒரு வழிப் பாதை அல்ல, அது இருவழி பாதை. மக்களிடமிருந்து வசூல் செய்யவும் வேண்டும் வசூல் செய்த பணத்தை அந்த மக்களுக்காக செலவு செய்யவும் வேண்டும்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சியில் கஜானா நிரம்பி வழியும் அதே நேரம் அடுத்த நாள் அது வெறுமையாகி விடுமாம்.அவர்களிடம் இதுபற்றி கேட்கப்பட்டபோது, மக்களுக்காகத்தானே வரி அறவிடுகிறோம். அதை கஜானாவில் வைத்து பாதுகாப்பதா, மக்களுக்கு செலவு செய்வதா என்று கேட்பார்களாம்.

தமிழ் மகன் உசேன் அவர்கள் ஒரு வித்தியாசமான வக்ப் வாரிய தலைவராக, மாற்றி யோசிக்க கூடிய ஒரு தலைவராக இருக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் ஆசைப்படுகிறார்கள். எத்தனை ஆண்டு காலம் இந்த பொறுப்பில் இருந்தோம் என்ற வருட எண்ணிக்கை அவர்களுக்கு புகழ் தேடி தராது. தான் அந்த உயர்ந்த பொறுப்பில் இருந்தபோது இந்த முஸ்லிம் சமுதாயத்துக்கு எவ்வளவு சிறப்பாக சேவை செய்தோம் என்ற சேவை எண்ணிக்கைதான் அவர்கள் பெயரை உயர்த்தி பிடிக்கும் என்பதை மிக பணிவுடனும் கனிவுடனும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நமது சமுதாயமே
posted by M.S.Kaja Mahlari (Singapore) [06 March 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26037

வக்ப் சொத்துக்கள் அனைத்தையும் முறைப்படி நிர்வகித்தால் அதைக்கொண்டே அனைத்து "வக்ப் வாரிய வேலைகளை " திறம்பட செய்துக்கொள்ளலாம். அதனை விட்டு விட்டு , அந்த வாரியம் ஏதோ கஜானா காலியாகிவிட்டது போல் பொதுமக்களிடம் இருந்து "நன்கொடைகள்" மூலம் வசூல் செய்ய நினைப்பது கொஞ்சம் கூட நியாயமாக தெரியவில்லை.

ஒருவேளை இதற்கு முன்பு "வக்ப் வாரியத்தில் இருந்தவர்கள் வக்ப் சொத்துக்களை வேறு எங்கும் தெரியாமல் "வக்ப் " செய்து விட்டார்களோ, என்னோவோ தெரியவில்லை!

மொத்தத்தில் நமது சமுதாயமே " இளிச்ச வாயனாக " ஆகி விட்டது! அல்லாஹ் போதுமானவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. முன்னோர்கள் வக்ஃப் செய்த பல கோடி பெறுமதி உள்ள சொத்துக்களை கையக படுத்துங்கள்
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [06 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26039

பல முன்னோர்கள் முன்பு வக்ஃப் செய்த சொத்துக்களை தனி நபர்கள் ஆக்கிரைமிப்பில் இருந்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு தீய என்னமுடையவர்களின் கையில் இருக்கும் வக்ஃப் சொத்துக்கள் மீட்டு எடுக்க தமிழ்நாடு வக்ஃப் வாரியம் தீவிர முயற்சிகள் எடுத்தாலே போதும்....!

தமிழ்நாடு வக்ஃப் வாரியம் வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதிக்கு பொதுமக்கள் மற்றும் கொடையாளர்களிடம் நிதி எதிர்பார்ப்பது சரியில்லை... முதலில் முன்னோர்கள் வக்ஃப் செய்த பல கோடி பெறுமதி உள்ள சொத்துக்களை கையக படுத்துங்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மல நீர்...? (?!)  (5/3/2013) [Views - 2833; Comments - 7]
இன்றைய மழை காட்சிகள்!  (5/3/2013) [Views - 3240; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved