Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:21:23 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12061
#KOTW12061
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 12, 2013
நகராட்சி அவசரக் கூட்டம்: ஒருவழிப்பாதையில் புதிய சாலை, குப்பை கொட்ட, உயிரி எரிவாயு மையம் அமைக்க நிலம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்! அசைபடப் பதிவுடன்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3224 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் இம்மாதம் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 03.30 மணிக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.



கலந்துகொண்டோர்:

இக்கூட்டத்தில்,
12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு,
பதவி விலகல் கடிதம் அளித்துள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான்
ஆகியோரைத் தவிர இதர உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

கூட்டப் பொருட்கள்:

காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைப்பதற்கு கோரப்பட்டுள்ள ஒப்பந்தப் புள்ளிக்கு அங்கீகாரம் அளித்தல்,
நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கும், தமிழக அரசால் வழங்கப்படும் உயிரி எரிவாயு (பயோகேஸ்) மையத்தை அமைப்பதற்குமான இடம் தேர்வு செய்தல்
உள்ளிட்ட கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒருவழிப்பாதையில் புதிய சாலை:

துவக்கமாக, ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை அங்கீகரிப்பது தொடர்பான கூட்டப் பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.



இதே பணிக்காக, கடைசியாகக் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிக்கு இதே ஒப்பந்தக்காரர் கோரிய தொகை விட, சுமார் 1 லட்சம் ரூபாய் கூடுதலாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், அதுகுறித்து ஒப்பந்தக்காரருடன் பேச்சுவார்த்தை (Negotiation) நடத்தப்பட வேண்டுமென்று கூறினார்.

“அவ்வாறு செய்வதால், இன்னும் காலதாமதமாகுமா?” என, 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் கேட்க, “பேச்சுவார்த்தையை ஒப்பந்தக்காரர் ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை என்றும், அவர் அதை ஏற்கவில்லையெனில் மீண்டும் புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வேண்டும் என்றும், அதற்கு இன்னும் சில கால அவகாசம் எடுக்கும் என்றும் பணி மேற்பார்வையாளர் செல்வமணி கூறினார்.

இந்த ஒப்பந்தப்புள்ளியைக் கோரியுள்ள ஏர்வாடி நாகூர் மீரான் என்ற ஒப்பந்தக்காரர், இதுவரை காயல்பட்டினம் நகராட்சியில் பல ஒப்பந்தப்புள்ளிகளைப் பெற்றும், எதுவும் செய்யவில்லை என்றும், எனவே, அவர் ஒப்பந்தப்புள்ளி பெற்ற அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றித் தரவும், ஒப்பந்தக்காரர் தொய்வின்றி பணிகளை நிறைவேற்றச் செய்வதற்குத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டுமெனவும், 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்றத் துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கூறினர்.

உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள ஆவன செய்யப்படும் என நகராட்சி பணி மேற்பார்வையாளர் செல்வமணி கூறியதையடுத்து, இப்பொருளை அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க, தீர்மானம் நிறைவேறியது.

குப்பை கொட்ட, உயிரி எரிவாயு மையம் அமைக்க இடம்:

அடுத்து, நகராட்சிப் பகுதியில் அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகளை ஓரிடத்தில் கொட்டவும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உயிரி எரிவாயு மையம் அமைவதற்கான இடத்தைத் தேர்வு செய்திடவும் மேசைப் பொருளாக (Table Agenda) கூட்டப் பொருள் விவாதிக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் காயல்பட்டினம் நகராட்சிக்கு வந்ததுடன், மேற்படி பணிக்கான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதன் அடிப்படையில், 3 இடங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

(1) சர்வே எண் 392/5:



காயல்பட்டினம் 18ஆவது வார்டுக்குட்பட்ட - 392/5 என்ற சர்வே எண்ணைக் கொண்ட நிலம் குறித்து துவக்கமாக விவாதிக்கப்பட்டது.

அவ்விடத்தில் பல ஜாதிகளைச் சேர்ந்த மக்கள் இறந்தவர்களின் உடலை அடக்கவும், எரிக்கவும் பயன்படுத்தி வருவதாகவும், அவ்விடத்தில் வேறு திட்டங்களைக் கொண்டு வருவதை தானோ, தன் வார்டு பகுதி மக்களோ ஆதரிக்க முடியாது என்றும் 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கூறினார். அவ்விடத்தில் மயானம் அமைக்கவும், திடக்கழிவுக்காகவும் இடங்களை ஒதுக்கி, 1958ஆம் ஆண்டில் - அப்போதைய பஞ்சாயத்து போர்டு தலைவர் எம்.கே.டி.அபூபக்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது, முத்து நாடார் என்ற 01ஆவது வார்டு உறுப்பினர் முன்வைத்த பிரேணனை அடிப்படையில், விவாதித்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ள தகவலை, தீர்மான நகலைக் காண்பித்து நகர்மன்றத் தலைவர் வெளியிட்டார்.

முன்னோர் அனைவரின் ஒப்புதலோடு அன்றே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் கருத்திற்கொண்டு இவ்விடத்தைத் தேர்வு செய்யலாமே என நகர்மன்றத் தலைவர் கேட்டார்.

இதுகுறித்த விவாதத்தின் முடிவில், இந்த இடத்தைத் தேர்வு செய்ய பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளிக்கவில்லை.

அந்த சர்வே எண் நிலத்தில், மயானத்திற்காக நகராட்சி ஒதுக்கும் இடம் தவிர இதர புறம்போக்கு இடங்கள் அனைத்தையும் முறையாக நகராட்சி கையிலெடுத்து, தனியார் யாரும் அதை சொந்தம் கொண்டாட விடாமல் காப்பாற்ற வேண்டியது நகராட்சி நிர்வாகத்தின் கடமை என 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் கூறினார்.

(2) சர்வே எண் 334/1, 334/2, 334/12, 334/15:



காயல்பட்டினம் அருணாச்சலபுரம் பகுதி நுழைவு எல்லைக்கருகிலேயே உள்ள சர்வே எண் 334/1, 334/2, 334/12, 334/15 ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.

நான்கு மாதங்களுக்கு முன் பெறப்பட்ட அரசு ஆவணத்தின் படியும், இதர ஆவணங்கள் படியும், அரசு புறம்போக்கு நிலமே என மாவட்ட ஆட்சியர் வருகையின்போது உறுதி செய்யப்பட்டதாகவும், அந்த இடத்தில், எரிவாயு மையம் அமைக்க பரிசீலிக்கலாமா என்றும் நகர்மன்றத் தலைவர் கேள்வியெழுப்பினார்.



இந்த இடத்திற்கும் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளிக்கவில்லை.

(3) சர்வே எண் 278:



முன்னாள் நகர்மன்றத் தலைவர் தருவதாகச் சொன்ன - சர்வே எண் 278 என்ற பகுதிக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லை என்றும், மின்விளக்கு ஏற்பாடுகள் எதுவுமில்லை என்றும், இவையனைத்தையும் செய்திட பல லட்சங்கள் மக்கள் பணத்தைச் செலவழிக்க வேண்டியது வரும் என்றும், அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் இருக்க, இச்செலவு தேவையற்றது என்றும் கூறிய நகர்மன்றத் தலைவர், நகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இவ்விடத்தைத் தேர்வு செய்யலாம் என்றும், உயிரி எரிவாயு மையம் அமைக்க, சர்வே எண் 392/5, 334/1, 334/2 ஆகிய இடங்களுள் ஒன்றைத் தேர்வு செய்யலாமே என்றும் கூறினார்.

“ஐக்கியப் பேரவையோ, முன்னாள் நகர்மன்றத் தலைவரோ உங்களுக்குப் பிடிக்காது என்பதால், இவ்விடத்தை நீங்கள் ஏற்கப்போவதில்லை” என்று 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் ஆகியோர் கூறினர்.

“அவ்வாறு ஏற்கக்கூடாது என்ற நிலை எனக்கு இருக்குமானால், குப்பை கொட்டுவதற்கு இந்த இடத்தைத் தேர்வு செய்ய நான் கூற வேண்டிய அவசியமில்லையே?” என நகர்மன்றத் தலைவர் கேட்டார்.

“பெரும்பான்மை உறுப்பினர்களாகிய தாங்கள் 278 என்ற - முன்னாள் நகர்மன்றத் தலைவர் தரும் இடத்தையே குப்பை கொட்டவும், உயிரி எரிவாயு மையம் அமைக்கவும் தேர்ந்தெடுக்கக் கூறுவதாகவும், பெரும்பான்மை அடிப்படையிலேயே தீர்மானம் இயற்ற வேண்டும்” என்றும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கூறினார்.

CRZ பகுதியில் அவ்விடம் உள்ளதாக முந்தைய நகர்மன்றத்தின்போதே ஆட்சேபணை பெறப்பட்டுள்ளதாகவும், CRZ தவிர்த்து இதர இடங்களைத் தேர்ந்தெடுப்பதாயின், முன்னாள் நகர்மன்றத் தலைவருக்குச் சேராத 3 சர்வே எண்களும் உள்ளதாகவும், அவர்களிடமெல்லாம் பேசி, தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதற்குள், தமிழக அரசால் காயல்பட்டினம் நகராட்சிக்குத் தரப்பட்டுள்ள உயிரி எரிவாயு மையம் அமைக்கும் திட்டம் கை நழுவிப் போய்விடும் என்றும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.

பெரும்பான்மை உறுப்பினர்கள் கூறுவதையே தீர்மானமாக எழுதுமாறு உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து கூறவே, CRZ தவிர்த்து இதர இடங்களை - நகராட்சியின் குப்பைகளைக் கொட்டுவதற்கும், உயிரி எரிவாயு அமைப்பதற்கும் தேர்வு செய்ய தீர்மானம் இயற்றப்பட்டது.

மாலை 06.15 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் காயல்பட்டினம் தாயிம்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சிலர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.



நடைபெற்ற இக்கூட்டத்தின் முழு அசைபடப் பதிவைக் காண http://www.youtube.com/watch?v=rjKjzIiGhjo&list=PL7DVrd7wQwL9R9qbs83Ehp1CoT9xianyM என்ற இணைப்பில் சொடுக்குக.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அன்னாரின் பதவி காலத்தில் நிறைவேறிய 392/5 என்ற சர்வே எண்ணைக் கொண்ட அவ்விடத்தில் தீர்மானத்தை செயல் வடிவம் பெற முயற்சி எடுக்கலாமே.
posted by syed ahamed (chennai ) [12 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30681

1958ஆம் ஆண்டில் - அப்போதைய பஞ்சாயத்து போர்டு தலைவர் மரியாதைக்குரிய மர்ஹூம் எம்.கே.டி.அபூபக்கர் அப்பா அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்று தீர்மானம் இயற்றப்பட்டுள்ள 392/5 என்ற சர்வே எண்ணைக் கொண்ட அவ்விடத்தில் மயானம் அமைக்கவும், திடக்கழிவுக்காகவும் இடங்களை ஒதுக்கி கொடுத்த மரியாதைக்குரிய மர்ஹூம் வள்ளல் எம்.கே.டி.அபூபக்கர் அப்பா அவர்களின் (வாக்கு ஒசியத்) தீர்மானம் இந்த தலைமுறையால் பெரும்பான்மையான நமது உறுப்பினர்களால் அது நிறைவேறட்டுமே. தயவு செய்து நிறைவேற்றுங்கள்.

அவ்விடத்தில் வேறு திட்டங்களைக் கொண்டு வருவதை தானோ, தன் வார்டு பகுதி மக்களோ ஆதரிக்க முடியாது என்று 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி எதிர்ப்பு தெரிவிப்பது எதோ உள்நோக்கம் கொண்டவையாகவே இருக்கும் என நான் சந்தேகிக்கின்றேன்.

மரியாதைக்குரிய மர்ஹூம் வள்ளல் எம்.கே.டி.அபூபக்கர் அப்பா ஒதுக்கி கொடுத்த 392/5 என்ற சர்வே எண்ணைக் கொண்ட அவ்விடத்தில் தற்போது தனிநபரால் ஆக்கிரமிப்பு ஏதும் உள்ளதா அது முதலில் அறிய பட வேண்டும்.

முக்கியமாக மரியாதைக்குரிய மர்ஹூம் வள்ளல் எம்.கே.டி.அபூபக்கர் அப்பா திடக்கழிவுக்காக ஒதுக்கி கொடுத்த நிலம் இன்றாவது அது நிறைவேற வேண்டும். இல்லையனில் மரியாதைக்குரிய மர்ஹூம் வள்ளல் எம்.கே.டி.அபூபக்கர் அப்பா அவர்களுக்கு நாம் செய்யும் நம்பிக்கை துரோகமாகும். அணைத்து பொது நல அமைப்புளும் இணைந்து அன்னாரின் பதவி காலத்தில் நிறைவேறிய தீர்மானத்தை இன்றைய நகர்மன்றத்தில் அது செயல் வடிவம் பெற முயற்சி எடுக்கலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தடைபோட முயன்றார். முடியவில்லை.
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [12 October 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 30693

பயோ காஸ் திட்டம் - இடம் அடையாளம் காண்பது. : சர்வே எண் 278: முன்னாள் தலைவர் ஹாஜி WSAR அவர்கள் சலுகை விலையில் நமக்கு கொடுக்கும் இடம். காழ்புணர்ச்சியின் காரணமாக தலைவி அவர்கள் எவ்வளவோ முட்டுக்கட்டை போட்டுப் பார்த்தார்.. முடியவில்லை. இறுதியில் உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியது. இதை எப்போதோ செய்திருக்க வேண்டியது. ஏன்தான் இந்த பழிஉணர்ச்சியோ ! இதோடு தலைவி நிற்கமாட்டார். இன்னும் எப்படியெல்லாம் தடைபோட முடியுமோ அவ்வழிகளிலும் தடைபோட இவர் முயற்சிப்பார்.

நகர் மன்ற நடவடிக்கைகளில் உறுப்பினர் ஜகாங்கிரின் வாதத்திறமை மெருகேறி இருக்கிறது.. வீடியோபதிவை வெளியிட்ட வலைதளத்திற்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தர்மம் வெல்லும்....அதர்மம் அழியும்
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [13 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30703

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
ஆனால் மறுபடியும் தர்மம் வெல்லும் !!!
-இது பழமொழி.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
ஆனால் மறுபடியும் தர்மம் மண்ணைக் கவ்வும்!!!
-இதான் இந்த காலத்துக்கு ஏற்ற புதுமொழி.

நன்றி! லாக்கு டோல் டப்பிமா முகநூல் பக்கத்திலிருந்து.

-ராபியா மணாளன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. எண் 278 நிலம் பற்றிய இதன் உண்மை நிலவரம்
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [13 October 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 30706

சர்வே எண் 278: முன்னாள் தலைவர் ஹாஜி WSAR அவர்கள் சலுகை விலையில் நமக்கு கொடுக்கும் இடம். (CP)

சகோதரர் V D சதக் தம்பி அவர்கள் சர்வே எண் 278 நிலம் பற்றிய இதன் உண்மை நிலவரம் அறியவில்லை போல் விளங்குகிறது...

முன்னாள் தலைவர் ஹாஜி WSAR அவர்கள் பதவி வகித்த காலத்திலேயே எண் 278 சர்வே நிலத்தை தீர்மானம் போட்டு குப்பை கிடங்கு அமைக்க ஒதுக்கபட்டது.. அன்றைய தலைவரால் சர்வே எண் 278 நிலம் நகராட்சியின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிந்ததா...?

அன்றைய உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறிய சர்வே எண் 278 நிலம் அன்றைய தலைவராலும் திட்டத்தை கொண்டுவர முடியவில்லை...! அன்றைய துணை தலைவராலும் திட்டத்தை கொண்டுவர முடியவில்லை...! அது அப்போதே CRZ பகுதி என பிற அரசு துறையால் அறிவிக்கப்பட்டு விட்ட பழைய புராணம்...! அந்த பழைய புராணத்தை புதிய புராணமாக மக்கள் மத்தியில் வெளியில் மேக்கப் செய்து CRZ பகுதியான சர்வே எண் 278ன் தொடரை இப்போது இந்த தலைவி ஆபிதா அவர்கள் மூலமா நிறைவேற்றிட முடியும்..?

அன்று முன்னாள் தலைவர் ஹாஜி WSAR அவர்கள் பதவி வகித்த காலத்தில் செய்து இருக்கலாமே...! ஏன் முடியவில்லை...? சாதித்து இருக்கலாமே...! சகோதரர் V D சதக் தம்பி அவர்கள் சர்வே எண் 278 நிலம் பற்றிய இதன் உண்மை நிலவரம் அறியவில்லை போல் விளங்குகிறது...

முன்னாள் தலைவர் ஹாஜி WSAR அவர்கள் சர்வே எண் 278 நிலம் சலுகை விலையில் தந்தாலும் சரி... இலவசமா தந்தாலும் சரி... சர்வே எண் 278 அந்நிலத்தை வைத்து நகராட்சிக்கு அந்த பயனுமில்லை...!

நம் நகர்மக்களை (புறநகர் மக்கள் உட்பட) பொறுத்த வரை கடந்த காலத்தை விட தற்போது எல்லா விடையங்களிலும் மிக... மிக தெளிவாக இருக்கிறார்கள்.. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு..!

CC - https://www.facebook.com/kayalontheweb?ref=br_tf


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. குப்பை கொட்ட, உயிரி எரிவாயு மையம் அமைக்க நிலம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்!
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [13 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30709

ஒருவழியாக தலைவி எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு 2 திட்டங்களுக்கும் ஒரே இடத்தில் அமைக்க நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சந்தோஷம். ஆனால் இதற்கு அரசு ஒப்புதலும் கிடைக்க வேண்டும்.

உறுப்பினர்கள் ஒற்றைபிடியாக முன்னாள் தலைவர் அவர்கள் அரசு விலைக்கு தருவதாக சொன்ன இடத்தில்தான் 2 திட்டங்களும் அமையவேண்டும் என்று வக்காலத்து வாங்குகிறார்கள்.

தலைவி அவர்கள் "போதிய சாலை வசதி இல்லை என்றும், மின்விளக்கு ஏற்பாடுகள் எதுவுமில்லை என்றும், இவையனைத்தையும் செய்திட பல லட்சங்கள் மக்கள் பணத்தைச் செலவழிக்க வேண்டியது வரும் என்றும், அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் இருக்க, இச்செலவு தேவையற்றது என்றும் கூறிய நகர்மன்றத் தலைவர், நகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இவ்விடத்தைத் தேர்வு செய்யலாம் என்றும், உயிரி எரிவாயு மையம் அமைக்க, சர்வே எண் 392/5, 334/1, 334/2 ஆகிய இடங்களுள் ஒன்றைத் தேர்வு செய்யலாமே என்றும் கூறினார்" (C&P)

தலைவி குறிப்பிடுவது 2 திட்டங்களும் வெவ்வேறு இடத்தில் இருக்க வேண்டும் என்று. 2 திட்டங்களும் வெவ்வேறு இடத்தில் இருந்தால், நீண்டகால திட்டத்தில் என்ன செலவு & சிக்கல் வரும்?

என்னுடைய முந்தய கமெண்ட் #30606-க்கு பதில் பதிவு செய்த சகோதரர் ஹமீத் ரிபாய் அவர்கள், 2 திட்டங்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அப்படி 2 திட்டங்களும் வெவ்வேறு இடங்களில் இருப்பதனால் operation cost அதிகம் பிரச்சனை எல்லாம் இதில் கிடையாது என்று பதிவு செய்திருந்தார்.

2 திட்டங்களும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் போது, மக்கும் குப்பையை எவ்வாறு பிரிப்பார்கள்? நம் மக்கள் இப்போது ஒரு வாளி வைத்து அதை கொட்டவே சோம்பல், அலட்சியம் படும்போது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து தருவார்களா? நாம், நம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களும் பிரித்து தந்தால், ஒரே குப்பை வண்டியில் 2 பிரிவு (chamber) வைத்து சேகரித்து, மக்கும் குப்பையை ஊருக்கு அருகிலுள்ள bio-gas plant- ல் கொட்டிவிட்டு மீதியை ஊருக்கு வெளியில் உள்ள உரக்கிடங்குக்கு தினமும் கொட்டும் போது, அதற்கான transportation cost, (on long run) எவ்வளவு ஆகும்?

குப்பை கொட்டுவதற்கு மட்டும் முன்னாள் தலைவரின் இடத்தை தேர்வு செய்தால், அப்போது சாலை மற்றும் மின்விளக்கு அமைக்க தேவை இல்லையா?

(18ஆவது வார்டுக்குட்பட்ட - 392/5 என்ற சர்வே எண்ணைக் கொண்ட நிலம் குறித்து துவக்கமாக விவாதிக்கப்பட்டது. அவ்விடத்தில் மயானம் அமைக்கவும், திடக்கழிவுக்காகவும் இடங்களை ஒதுக்கி, 1958ஆம் ஆண்டில் - அப்போதைய பஞ்சாயத்து போர்டு தலைவர் எம்.கே.டி.அபூபக்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போது, முத்து நாடார் என்ற 01ஆவது வார்டு உறுப்பினர் முன்வைத்த பிரேணனை அடிப்படையில், விவாதித்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ள தகவலை, தீர்மான நகலைக் காண்பித்து நகர்மன்றத் தலைவர் வெளியிட்டார்.

முன்னோர் அனைவரின் ஒப்புதலோடு அன்றே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் கருத்திற்கொண்டு இவ்விடத்தைத் தேர்வு செய்யலாமே என நகர்மன்றத் தலைவர் கேட்டார்.) (C&P)

MKT அப்பா அவர்கள் தலைமயில் தீர்மானம் போட்டது 1958. நாம் இப்போது இருப்பது 2013. வருடங்கள் 55 கழிந்து விட்டது. அப்போது நம் நகரின் மக்கள் தொகை என்ன? இப்போதைய மக்கள் தொகை என்ன? மேலும் அப்போது அது வராந்திர காடு. ஆனால் தற்போது அந்த நிலையிலா இருக்கிறது? அப்போது போட்ட தீர்மானம் திடக்கழிவுக்கு (குப்பை கொட்ட). இப்போது அங்கே குப்பை கொட்டலாமா?

சகோதரர் செய்யத் அஹ்மத் அவர்களே உங்கள் கருத்து பதிவுக்கும் சேர்த்துதான் என் கருத்து பதிவு.

தயவு செய்து இரு சாராரும் (தலைவி & உறுப்பினர்கள்) உங்களின் ego- வை ஓரம் வைத்து விட்டு, எந்த prejudice -ம் இல்லாமல் ஊர் நலனுக்காக ஒன்றுபடுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் ஹலாலான முயற்சியில் வெற்றியை தருவான். ஆமீன்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சர்வே எண் 278-ம் CRZ பகுதியும்
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [13 October 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 30710

நான் ரியல் எஸ்ட்டே வியாபாரம் செய்பவன் அல்ல. சகோதரர் முத்து இஸ்மாயீல் அவர்களே, CRZ பகுதி மற்றும் சர்வே எண் 278 சம்பந்தமாக சில விளக்கங்கள் ஆவண சான்றுடன் (documentary evidence) தந்தால், நான், சதக் தம்பி காக்கா, உட்பட பாமரர்கள் விளக்கம் பெறுவார்கள்.

CRZ பகுதி என்பது எவ்வாறு நிர்ணயிக்க படுகிறது? தற்போதைய அரசு வழிகாட்டல்படி, நம் காயல்பட்டணம் CRZ எந்த zone -ல் வருகிறது? அந்த zone படி கடலில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தால் அது CRZ பகுதி என்று அழைக்கப்படும்? CRZ பகுதியில் கட்டிடம் கட்டுவதற்கு மட்டும் தடையா? அல்லது குப்பை கொட்டவும் தடையா?

சர்வே எண் 278-இல் மொத்தம் 25 ஏக்கர் உள்ளது. அது மொத்தமும் CRZ எல்கையில் வருகிறதா? அல்லது எத்தனை ஏக்கர் CRZ -க்கு உள்ளே வருகிறது? அதில் 5 ஏக்கர் கூட CRZ-க்கு வெளியே இல்லையா?

இன்றைய தேதி வரை, அந்த சர்வே நிலத்தை சர்வேயரை கொண்டு அளந்து, அந்த சர்வே எண்ணில் உள்ள மொத்த 25 ஏக்கரும் CRZ எல்கைக்குள் தான் வருகிறது என்று ஆதாரத்தோடு இந்த இணையதளத்தின் மூலாமாக தெரிவித்தால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

தயவு கூர்ந்து இதை வெகுவிரைவில் வெளியிட்டால் இன்னும் காலதாமதம் ஆவதை தவிர்க்கலாம். நிச்சயம் செய்வீர்கள்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved