Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:34:59 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13271
#KOTW13271
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 17, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: காயல்பட்டினத்தில் திருமண விழாவில் துவங்கியது திமுக கூட்டணியின் தேர்தல் பரப்புரை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3163 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கொச்சியார் தெருவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவுடன் துவங்கியுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பரப்புரை. விரிவான விபரம் வருமாறு:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர மாணவரணி முன்னாள் அமைப்பாளரும், சென்னை மாணவரணியின் முக்கிய உறுப்பினருமான ஹாஃபிழ் கே.ஜெ.ஆர்.அப்துல் ஹக் ஃபைஸலின் திருமணம், இம்மாதம் 16ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) காலையில், கொச்சியார் தெருவில் நடைபெற்றது.



இவ்விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில அமைப்பாளர் கே.எம்.நிஜாமுத்தீன், மாணவரணி (எம்.எஸ்.எஃப்.) மாநில அமைப்பாளர் செய்யது பட்டாணி, மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ உட்பட, அக்கட்சியின் மாநில - மாவட்ட - நகர நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசியதாவது:-



காயல்பட்டினத்தில் ஆலிம் எனும் மார்க்க அறிஞர்களும், ஹாஃபிழ் எனும் திருமறை குர்ஆனை மனனம் செய்துள்ளவர்களும் ஏராளமாக உள்ளனர். மணமக்களின் குடும்பத்தின் மூத்தவரான மாதிஹுல் கவ்த் நூஹ் ஆலிம் அவர்கள், ஷாஃபிஈ மத்ஹப் சட்ட நூற்களை எளிய தமிழில் இச்சமுதாயத்திற்கு அளித்தவர். அதன் நடையே - காயல்பட்டினத்தின் பாரம்பரியத்தை இதழ் முழுக்க உணர்த்தும் வகையில் இருந்தது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியை எல்லோரும் இறக்கிய காலத்தில், இந்த காயல்பட்டினத்தில் நம் கொடியை ஏற்றி மகிழ்ந்தனர். அந்தளவுக்கு இந்த இயக்கத்தை முன்னின்று பாதுகாத்தவர்கள் இங்குள்ள முஸ்லிம்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது, இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக காயிதேமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் துவக்கப்பட்டது. இக்கட்சிக்கென இந்திய வரலாற்றில் பெரிய இடமுண்டு. இதனைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. அந்தப் பணியைத்தான் நாங்களும் செய்கிறோம். நீங்களும் செய்ய வேண்டுமென விரும்புகிறோம்.

இந்த நாடு இஸ்லாமிய நாடாக இருந்தால், இந்தி யூனியன் முஸ்லிம் லீக் இயங்குவதற்கு அவசியமிருக்காது. ஆனால், இது சுமார் 3000க்கும் மேற்பட்ட வகுப்பினரைக் கொண்ட - மதச்சார்பற்ற - ஜனநாயக நாடு. அவரவரின் தனித்தன்மைகளையும், அடையாளங்களையும் பாதுகாத்திட இந்திய அரசியல் சாசனம் வழிவகை செய்துள்ளது. அந்த அடிப்படையில், இங்குள்ள முஸ்லிம்களுக்கும் தனித்துவம் உள்ளது.

இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள இந்த உரிமைகளையும். சலுகைகளையும் இல்லாமலாக்கிட, மதச்சார்பு நிலையாலும், ஆதிக்க உணர்வாலும் பலர் முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், அவற்றை விட்டும் முஸ்லிம் சமுதாயத்தைப் பாதுகாத்து, அவர்களுக்கு அரணாக நிற்கும் பணியை இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் இன்றளவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்து வந்துகொண்டிருக்கிறது.

அதுபோல, தமிழகத்திற்கென தனித்தன்மைகள் உள்ளன. இந்த மாநிலம் திராவிட பாரம்பரியத்தைக் கொண்டதாகும். “யாதும் ஊரே; யாவரும் கேளிர்”, “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” ஆகியவற்றை முதன்மை முழக்கங்களாகக் கொண்டு இயங்குவது திராவிட பாரம்பரியம். இந்த மாநிலத்தில் எல்லா மதத்தினரும், ஜாதியினரும் அண்ணன் - தம்பிகளாகப் பழகி வரும் நிலை தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அதனால்தான், மதக்கலவரங்கள் பல இந்திய முழுக்க தூண்டப்பட்டபோது தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது.

இந்த முழக்கங்களைக் கொள்கையாகக் கொண்டதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். நாம் அவர்களின் கொள்கைகளைப் புரிந்து அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அவர்களும் நம் கொள்கைகளைப் புரிந்துகொண்டு நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆக, கொள்கை அடிப்படையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து பணியாற்றுகிறது.

இது அரசியல் மேடையல்ல. திருமண மேடை. என்றாலும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நான் உங்களை வேண்டிக்கொள்வதெல்லாம், நம் சமுதாயப் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரிக்கும் திமுகவின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், அதன் மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார். அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை ஒட்டுமொத்தமாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.

அடுத்த சில நிமிடங்களில், திமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரிய சாமி, அவரது மகனும், தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான என்.பி.ஜெகன் ஆகியோர் திருமண மேடைக்கு வந்து, அனைவருக்கும் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.





திருமண நிகழ்ச்சியின் நிறைவில், அங்கிருந்த பொதுமக்களிடம் அவர்கள் ஆதரவு கோரியவாறு விடைபெற்றுச் சென்றனர்.

இத்திருமண நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், திமுக நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...valthukkal
posted by drnoodeen (muscat ) [17 March 2014]
IP: 85.*.*.* Oman | Comment Reference Number: 33763

சாலிஹ் ஹாஜி மாமாமக்களுக்கு என் ஸலாத்தினை தெரிவிக்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...கழகமேடையான கல்யாணமேடை
posted by J.A.JALEEL. (HONGKONG) [17 March 2014]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 33766

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.கானாஅப்பா வீட்டு கல்யாணமேடை கழகத்தின் பிரச்சாரமேடையா னதில் நம் காயலுக்கு நன்மைகள் விளையுமெனில் டபுள் சந்தோசமே ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [17 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33768

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல காயல் வாசிகளே. இந்திய வளர்ச்சிக்கான தேர்தல். ஊழல் ஆட்சியை உதறிவிட்டு ஊழலற்ற மக்களாட்சி அமையவும், 2ஜி ஸ்பெக்டரம் மூலம் கோடிகளில் ஊழல் செய்தவர்களை தூக்கியெறியவும், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு மகத்தான அதிக இடத்தை தாருங்கள்.

மத்திய வலுவான ஆட்சி அமைய புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் கரத்தை வலுப்படுத்துங்கள். 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற அதிமுகவுக்கு வாக்களியுங்கள் உங்கள் சின்னம் இரட்டை இல்லை.உங்கள் வேட்பாளர் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [17 March 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 33769

அஸ்ஸலாமு அலைக்கும்

ஊர் பொது மக்களுக்கு எந்த ஒரு தகவல் தெரிவிக்காமல் ஊருக்கு வரும் நமது தலைகளுக்கு எந்த ஒரு பயனும் அமைய போவது இல்லை தகவலுடன் வரும் தலைகளுக்கே பலன் உண்டு ......இல்லையேல் ??

அரசியல் கட்சி தலைவர்கள் தற்போதைய தேர்தல் நேரத்தில் ... பணம் படைத்தவர்கள் வீட்டு வைபவங்களில் கலந்து கொள்வதால் தேர்தல் காலத்தில் தேர்தலில் நிற்கும் தலைவர்களுக்கு கண்டிப்பாக ஒட்டு வங்கி நிரம்பாது....நடுத்தர & ஏழை பொது மக்கள் இவர்களை நேரில் சந்திப்பதால் தான் ...இவர்களின் வெற்றி கணிக்கபடும் .....இதை தலைவர்கள் கண்டிப்பாகவே உணர வேணும்.....

நமது தொகுதி முன்னாள் MP நம் ஊர் பக்கம் இந்த 5 வருடத்தில் எத்தனை தடவைகள் வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .....ஆனால் நம் ஊர் MLA அனிதா அண்ணாச்சி அவர்களை குறிப்பிடும் போது சொல்லவே தேவை இல்லை ....தொகுதி + தொகுதி மக்கள் என்றே முழுக்கவே ஒன்றாக மக்களோடு இணைந்து உள்ளார்கள் .....நாம் அண்ணாச்சி போன்று மக்களோடு ஒன்றாக இணைந்து செயல் பட கூடிய ஒருவரை தான் கண்டிப்பாக MP யாக தேர்வு செய்ய வேணும் ....இதை நாம் ஒவ்வொருவர்களும் மனதில் கொள்ள வேணும்............

நமது இந்திய முஸ்லிம் லீக் கட்சி மாநில தலைவர் நம் மரியாதைக்குரிய ஜனாப் .காதர் மெய்தீன் அவர்களுக்கு என்று ஒரு மரியாதை நம் ஊரில் உண்டு என்பதை யாவர்களும் நன்கு அறிந்ததே .....அவர்களின் சொல்லில் '' தன்மையும் '' உண்மையும் '' இருக்கும் ....அவர்களை நம்பி நாம் ஒட்டு போடலாம் என்பது குறிப்பிடத்தக்கது ...........

ஊரின் உள்ளே வளம் வரும் நமது தலைகளுக்கு தான் ஒட்டு வங்கி நிரப்பபடும் என்பது யாவர்களும் அறிந்ததே

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அந்த 49 நாட்கள்!  (17/3/2014) [Views - 2707; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved