Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:01:57 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13273
#KOTW13273
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 17, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: முஸ்லிம் லீக் - திமுக கூட்டணி கொள்கையை அடிப்படையாகக் கொண்டது! தூ-டி மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில் திமுக வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3889 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கொள்கை மற்றும் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது என, முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயல்வீரர் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசியுள்ளார்.

கூட்ட நிகழ்வுகள் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

செயல்வீரர் கூட்டம்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயல்வீரர் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம், இம்மாதம் 16ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில், தூத்துக்குடியிலுள்ள ஹோட்டல் கீதா இன்டர்நேஷனல் கூட்டரங்கில் நடைபெற்றது.





மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, தலைமையுரையாற்றினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் ஏ.முஹம்மத் உவைஸ் வரவேற்றுப் பேசினார்.

வேட்பாளருக்கு வரவேற்பு:

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். அவர்களை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தி வரவேற்றனர்.



என்.பெரியசாமி உரை:

கூட்டத்தில் பேசிய என்.பெரிய சாமி, திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு முஸ்லிம் லீக் ஆதரவளித்து களப்பணியாற்றவுள்ளதற்கும், காயல்பட்டினத்தில் திருமண விழாவோடு தேர்தல் பரப்புரையைத் துவக்கித் தந்ததற்கும் நன்றி தெரிவித்தார்.



வேட்பாளர் என்.பி.ஜெகன் உரை:

அடுத்து பேசிய தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன், தான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், முஸ்லிம் சமுதாயத்தின் நலன்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கப் போவதாகவும், காயல்பட்டினத்தின் வழியே கிழக்கு கடற்கரை சாலை அமைவதற்கும், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் தேவைப்படும் அனைத்து அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகளுக்கும் உறுதுணையாக இருக்கப்போவதாகவும் கூறினார்.



முஸ்லிம் லீக் மாவட்ட, கிளை நிர்வாகிகள் உரை:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், எட்டையபுரம் நடுவப்பட்டி பள்ளிவாசல் இமாம் ஜுபைருத்தீன், சாத்தான் குளம் பேருராட்சியின் முஸ்லிம் லீக் உறுப்பினர் முஹம்மத் இஸ்மாஈல், முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் கோவில்பட்டி திவான் பாஷா, கயத்தார் முஹ்யித்தீன், கலியாவூர் பஷீர், பட்டினமருதூர் சீனி முஹம்மத், முத்தையாபுரம் ஜமாஅத் தலைவர் முஸ்தஃபா, கேம்பலாபாத் அப்துல் ஹஸன், காயல்பட்டினம் நகர முஸ்லிம் லீக் தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மாவட்ட வணிகரணி அமைப்பாளர் எம்.எஸ்.எஃப்.ரஹ்மான், வடமலை சமுத்திரம் ஜமாஅத் செயலாளர் என்.அப்துல் ரஹ்மான், காயல்பட்டினம் முஸ்லிம் லீக் துணைச் செயலாளர் என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், கோவில்பட்டி அய்யாகோட்டை நஸ்ருத்தீன், அரியநாயகிபுரம் ஜமாஅத் தலைவர் முத்து இப்றாஹீம், அரியநாயகிபுரம் பாஷா, ஆத்தூர் அப்பாஸ் உட்பட - முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட அனைத்துக் கிளை நிர்வாகிகள், ஜமாஅத் நிர்வாகிகள் கருத்துரையாற்றினர்.





மாநில நிர்வாகிகள் உரை:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணி (எம்.எஸ்.எஃப்.) மாநில அமைப்பாளர் செய்யது பட்டாணி, சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில அமைப்பாளர் கே.எம்.நிஜாமுத்தீன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், சென்னை ஆலந்தூர் மேத்தப்பிள்ளை மரைக்காயர் ஆகியோர், நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்ட செய்யப்பட வேண்டிய களப்பணிகள் குறித்தும், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்கான வியூகங்கள் குறித்தும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.



மாநில பொதுச் செயலாளர் உரை:

தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-



திமுக கூட்டணி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன், கூட்டணி வேட்பாளர்கள் பலர் சென்னையிலுள்ள முஸ்லிம் லீக் தலைமை நிலையத்திற்கு வருகை தந்து, தலைவர் பேராசிரியரைச் சந்தித்து வாழ்த்து பெற்றுச் சென்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் அவர்களின் தேர்தல் பரப்புரை தூத்துக்குடி தொகுதியிலிருந்துதான் துவங்கியுள்ளது. இன்று (மார்ச் 16) காலையில், காயல்பட்டினத்தில் நடைபெற்ற திருமண விழாவுடன் அவர் தனது தேர்தல் பரப்புரைப் பணிகளைத் துவக்கியுள்ளார். பரப்புரை நிறைவு நாள் வரை, தலைவரும், கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் மாநிலம் முழுக்க தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளோம்.

முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரிப்பதையும், இந்துக்களின் வாக்குகளை - தவறான நம்பிக்கைகளையூட்டி சேர்ப்பதையும் முக்கிய திட்டமாகக் கொண்டுள்ளது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. அதன் ஆதரவு பெற்ற வேட்பாளராகத்தான் இத்தேர்தலில் நரேந்திர மோடி களம் இறக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக கூட்டணியில் இதுவரை தொகுதிப் பங்கீடே நிறைவுறாத நிலையிலும், நாள்தோறும் ஊடகங்களில் பாஜக குறித்தும், நரேந்திர மோடி குறித்தும் வரிந்துகட்டிக்கொண்டு செய்திகள் வெளியாவது, பெரும்பான்மை ஊடகங்களும் ஒருசார்பு நிலையில் உள்ளதை உணர்த்துவதாகவே உள்ளது.

இந்நேரத்தில் முஸ்லிம் சமுதாய மக்களின் மேலான கவனத்திற்கு ஒன்றை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான விவகாரங்களில் மஹல்லா ஜமாஅத் ஒற்றுமை, மார்க்க அறிஞர்களின் வழிகாட்டல் அடிப்படையிலேயே முஸ்லிம்களின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். இதை சமுதாயத்தின் எந்தவோர் இயக்கமும் பேசுவதேயில்லை. ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றும் அதைத் தெளிவாகப் பேசி வருகிறது.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுவதால், அதிமுகவின் ஆதரவு வாக்குகள் பிரியும். அது திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன் அவர்களின் வெற்றிக்குச் சாதகமாக அமையும்.

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், ஒவ்வொரு கட்சியிலும் அந்தந்தக் கட்சியின் தலைவர்கள் முன்னின்று போட்டியிடும் நிலையில், தான் போட்டியிடாமல் தன் மாணவரான எம்.அப்துல் ரஹ்மானைக் களத்தில் இறக்கியிருப்பது பேராசிரியர் அவர்களுக்கே உரிய பெருந்தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

தூத்துக்குடி தொகுதியில், நம் கட்சியின் மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர் அவர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது. ஏதோ கூடினோம், பேசினோம், கலைந்தோம் என்றில்லாமல், இன்று முதல் முஸ்லிம் லீகினர் தீவிர தேர்தல் களப்பணியாற்ற வேண்டும். நாளை (மார்ச் 17) திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பரப்புரையாற்ற வருகை தரவுள்ளார். அப்போது, பச்சிளம் பிறைக்கொடியுடன் நம் கட்சியினர் பெருந்திரளாக அவருடன் இணைந்து செல்ல வேண்டும்.

வேலூர் தொகுதியில் நமது ஏணி சின்னமும், தமிழகத்தின் இதர அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் அனைத்து சின்னங்களும் வெற்றிபெற அயராது உழைப்பதுடன், அல்லாஹ்விடம் துஆவும் செய்ய வேண்டும்.


இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரை:

அடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-



நாடாளுமன்றத் தேர்தலில் களப்பணியாற்றுவது குறித்து கலந்தாலோசிப்பதற்காக கூட்டங்கள் கூட்டப்படுவது வழமைதான். ஆனாலும், இன்று தூத்துக்குடியில் கூட்டப்பட்டுள்ள இக்கூட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நம் ஆதரவுடன் தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு இங்கிருந்து விடைபெற்றுச் சென்றுள்ளார் இத்தொகுதியின் திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன். இக்கூட்டம் ஆரம்பம் மட்டுமே; முடிவல்ல.

பெரிய கட்சிகள் என்று கருதப்படும் கட்சிகளுக்கு இணையாக இத்தேர்தலில் களப்பணியாற்றி, நம் கட்சியை மீண்டும் பெரிய கட்சியாக மாற்றுவது சமுதாய மக்களாகிய உங்கள் கரங்களில் உள்ளது.

‘கொற்கை’ என்றழைக்கப்பட்ட காயல்பட்டினத்திலிருந்து தேர்தல் பரப்புரை துவங்கியுள்ளது. எப்படி அந்த கொற்கையிலிருந்து இஸ்லாம் இந்தியாவெங்கும் பரவியதோ, அதுபோல இத்தேர்தல் பரப்புரையும் அமையும். தூத்துக்குடி மக்கள் ஆழ்கடலுக்குச் சென்று முத்து எடுத்து வருபவர்கள். அரிய முத்துக்களையே ஆழ்கடலுக்குச் சென்று எடுத்து வரும் இவர்களுக்கு, இத்தேர்தலில் வெற்றிக்கனியைப் பறிப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல.

திமுக தலைமையிலான நம் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வலிமையானதும், தனிச்சிறப்பு வாய்ந்ததுமாகும். என்றாலும், அதைச் சொல்லிக்கொண்டே நாட்களைக் கடத்தி, களப்பணியாற்றாமல் இருந்துவிடக் கூடாது. இது ஒரு போர்க்களம். இப்போரில் திமுக கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபடுவது நம் யாவர் மீதும் கடமை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் தொகுதியிலும், திமுக கூட்டணியின் இதர கட்சிகள் 39 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. நம் கட்சியினரைப் பொருத்த வரை, 40 தொகுதிகளிலும் நாம்தான் போட்டியிடுகிறோம் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். திமுக தலைவர் கலைஞர் சொன்னது போல, மத நல்லிணக்கத்தை உருவாக்குவதும், மதச்சார்பற்ற தன்மையை நிலைக்கச் செய்வதும் நம் அனைவரின் கடமையாகும். அது நடைபெற நம் தீவிர களப்பணி மிகவும் அவசியம்.

இந்திய அரசியல் சாசனம், இந்தியாவின் அனைத்து மதத்தினருக்கும், வகுப்பினருக்கும் சில தனித்தன்மைகளை வழங்கியிருக்கிறது. அவை, அந்தந்த வகுப்பினரின் பாரம்பரிய அடையாளம். அந்த அடிப்படையில், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்க இந்த நாட்டில் யாருக்கும் உரிமையில்லை. “சாரே ஜஹான் ஸே அச்சா; ஹிந்துஸ்தான் ஹமாரா” என்று நாம் சொல்லிக்கொண்டிருக்க, தான் சார்ந்த மதத்தையும், ஆதிக்கத்தையும் நமக்குள் திணிக்க தீய சக்திகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அவற்றை முறியடிக்க வேண்டியது நம் கடமை.

நாம் எதிர்பார்க்கும் ஆட்சி அமைந்தால், இந்த நாட்டில் அனைத்து மதத்தினர் - வகுப்பினரின் பாரம்பரியம் பாதுகாக்கப்படும். ஆனால், மற்றவர்கள் விரும்பும் ஆட்சியமைந்தால் அந்த பாரம்பரியம் இல்லாமல் போய்விடும்.

இத்தேர்தலில் களப்பணியாற்றவுள்ள நம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கத்தினருக்கு நான் ஒன்றை அறிவுரையாகச் சொல்ல விரும்புகிறேன். நம் மார்க்கம் புனிதமானது. அது நமக்குக் கற்றுத்தந்துள்ள ஒழுக்க நெறி பிற சமுதாயத்தவராலும் மதிக்கத்தக்கது. அப்படிப்பட்ட நிலைக்குச் சொந்தக்காரர்களான நாம், இத்தேர்தலில் நம் கொள்கைகளைச் சொல்ல வேண்டும். அதுபோல, மாற்றுக் கொள்கைகளில் நமக்கு ஏன் உடன்பாடில்லை என்பதை மட்டுமே விளக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தனிநபர் தாக்குதலில் யாரும் இறங்கக் கூடாது. அது ஜெயலலிதா அம்மையாராகட்டும்; நரேந்திர மோடியாகட்டும். யாரையும் நாம் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத் தேவையேயில்லை.

நாளை (மார்ச் 17) தூத்துக்குடி தொகுதிக்கு வருகை தரும் தமிழக முன்னாள் துணை முதல்வரும், திமுகவின் மாநில பொருளாளருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உற்சாக வரவேற்பளித்து, இணைந்து களப்பணியாற்ற உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில், திமுகவிற்கு அடுத்து உங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான் இரண்டாவது கட்சியாக இடம்பெற்றுள்ளது. இந்தச் சிறப்புக்கு சொந்தக்காரர்கள் நீங்கள்தான்.

“இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இல்லையென்றால் நமது வெற்றி இல்லாமல் போயிருக்கும்” என நாளை வெற்றிவிழாவின்போது திமுக வேட்பாளர் அவர்கள் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு நம் களப்பணி இருக்க வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கத்தினராகிய நாம், அல்லாஹ்வும், அவனது தூதரும் வகுத்துத் தந்த பாதையில் பயணிப்பதால் அவனது உதவி நம் அனைத்து செயல்பாடுகளிலும் நிச்சயமாக இருக்கும். வேகம் வேண்டுமானால் குறையலாம். ஆனால், தோல்வி இல்லை.


இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாநகர இளைஞரணி செயலாளர் எம்.கே.இம்ரான் கான் நன்றி கூற, காயல்பட்டினம் கிளை செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

பங்கேற்றோர்:

இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட மூத்த தலைவர் அப்துல் கனி, தூத்துக்குடி மாநகர நிர்வாகிகள், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், காயல்பட்டினம் நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்டத்தின் அனைத்துக் கிளை நிர்வாகிகள், அனைத்து ஜமாஅத்துகளின் நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [17 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33770

காயலர்களின் ஓட்டு வாக்குக்கு மட்டுமே அணுகுகின்ற தி.மு.க ., 2 முறை இந்த பகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஓட்டை வாங்கிவிட்டு என்ன நன்மை செய்தார்?

முஸ்லீம் லீக் அன்றைய தலைவர்கள் வேறு, இன்று ஆளும் பொறுப்புள்ளவர்கள் அனைவரும் திராவிட இயக்கத்தின் ஒரு பிரிவுதான். இந்த தலைவர்கள் கட்சி பெயர் சொல்ல ஒரு சீட்டை மட்டும்தான் வாங்க முடிந்ததே தவிர கொள்கை வருகின்ற பாராளுமன்ற தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல காயல் வாசிகளே.

இந்திய வளர்ச்சிக்கான தேர்தல். ஊழல் ஆட்சியை உதறிவிட்டு ஊழலற்ற மக்களாட்சி அமையவும், 2ஜி ஸ்பெக்டரம் மூலம் கோடிகளில் ஊழல் செய்தவர்களை தூக்கியெறியவும், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு மகத்தான அதிக இடத்தை தாருங்கள்.

மத்திய வலுவான ஆட்சி அமைய புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் கரத்தை வலுப்படுத்துங்கள். 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற அதிமுகவுக்கு வாக்களியுங்கள் உங்கள் சின்னம் இரட்டை இல்லை.உங்கள் வேட்பாளர் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி அடிபடியில் கூடுதலாக 2வது சீட்டு வாங்க முடியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [17 March 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33773

அஸ்ஸலாமு அலைக்கும்,

யார் கரத்தை யார் வேண்டுமானாலும் வலுப்படுத்துங்கள் ஆனால் அவர்களின் கரங்கள் பள்ளிவாசலை உடைக்க பயன் படாமல் இருந்தால் போதும் . அது போன்ற கரங்களை இனம் கண்டு கொள்ளனும் நம் சமுதாயம் .

இந்த முறை தேர்தலி கட்சிகளை நம் சமுதாயம் பார்க்காமல் நம் சமுதாயத்துக்கு நன்மை கிடைக்கும் அளவுக்கு நம் முடிவுகள் அமைய வேண்டும் மோடியும் அம்மாவும் ஒன்றுதான் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும் .

ஆ . தி . மு . க மற்றும் பிஜேபி க்கு மாற்றாக உள்ள வலுவான அணியைதான் நம் மக்கள் ஆதரிக்கனும் அந்த வரிசையில் தி . மு .க கூட்டணிதான் இருக்கிறது.

முஸ்லிம் லீக் அல்லது மற்ற நம் முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் அமைப்புகள் போன்றவற்றை நம் முஸ்லிம் சமுதாயம் பெரிதாக நினைத்து வாக்குவாதம் புரிய தேவை இல்லை நம் ஓட்டுகளை சிதறாமல் நம் சமுதாய வேட்பாளர்களுக்கும் இரண்டு நபர்கள் நம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் போட்டி போடு தொகுதிகளில் ( குறிப்பாக ராம்நாடு ) தி . மு . க கூட்டனிக்கு உட்பட்ட வேட்பாளருக்கு நம் ஓட்டினை நாம் அளிக்க வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. லேடி மோடி.......
posted by kavimagan (doha-qatar) [18 March 2014]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 33779

நண்பர் பி.எஸ்.அப்துல் காதர் சரியான தமாஷ் பேர்வழி! அதனால்தான் ஊழலை ஒழிக்க இரட்டை இலைக்கு வாக்கு கேட்கிறார்...

அவர் குறிப்பிடுகின்ற வழக்குகளில், ஆ.ராசா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்குகளை எதிர் கொண்டனர்.... அவ்வளவு ஏன்? சிறைச்சாலையையும் சந்தித்து விட்டனர்.... ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் அம்மாவின் நிலை? நாடே காறித் துப்புகிறது.... இந்த லட்சணத்தில் எலியை ஒழித்திட பெருச்சாளிக்கு ஆதரவளிக்க வேண்டுமாம்...

மு.லீக், ம.ம.க. மற்றும் தி.மு.க.உட்பட, அந்தக் கூட்டணியில் நான்கு முஸ்லிம்கள் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை மோசடியாக மறைத்து விட்டு, ஒரே ஒரு முஸ்லிமுக்கு மட்டும் போட்டியிட வாய்ப்பை தந்துள்ள அம்மா தி.மு.க.வினர், மு.லீக்கிற்கு ஒரு சீட்தான் கிடைத்துள்ளது என்ற உலுத்துப் போன வாதத்தை கை விட வேண்டும்...

ஒரு சில லெட்டெர் பேட் இயக்கங்களைத் தவிர்த்து, அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஆதரிக்கக் கூடிய, தி.மு.க.கூட்டணிக்கு வாக்களித்து, இறைவனின் அருளால் நரேந்திர மோடியிடமிருந்து தேசத்தையும், லேடி மோடியிடமிருந்து தமிழகத்தையும் காப்பாற்றுவோம்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Rilwan (TX) [18 March 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 33780

ஆம் ஆத்மி கட்சி இந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்துமானால் அனைத்து முஸ்லிம் கட்சிகளையும் மீறி ஆம் ஆத்மிக்கு ஓட்டுப்போடுங்கள் ... இந்த வேட்பாளரின் தந்தையை பற்றி அனைவருக்கும் தெரியும் . மோசமான அரசியல் வாதிக்கு ஒரு இலக்கணம் வேண்டும் என்றால் இவரின் தந்தையாகத்தான் இருக்க முடியும் . அப்பேற்பட்ட தந்தையின் செல்வாக்கால் இப்போது இவர் வேட்பாளர் .

இஸ்லாத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதாகவே படுகிறது . கருணாநிதியும் ஜெயலலிதாவும் நல்லாட்சி தருவார்கள் என்று எவ்வளவு காலம் ஊரை ஏமாற்ற போகிறீர்கள் ? என் மரியாதைக்குரிய mega போன்ற அமைப்புகள் ஆம் ஆத்மிக்கு களப்பணியாற்ற கொள்கிறேன் ..

சிறு சிறு லாபத்திற்கு ஆசைப்பட்டு மோசமானவர்களுடன் கூட்டணி வைப்பவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது ..

முஸ்லிம்களை பிற்படுதபட்டவர்கள கிலோவுக்கு என்ன விலை என விர்ப்பதில் ஜெயாவும் கருணாநிதியும் சளைத்தவர்கள் அல்ல .....

உண்மையை பேசுபவர்களுக்கு ஒட்டு போடுங்கள் ... பொய்யர்களுக்கும் ரவுடிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் ஒட்டு கேட்பவர்கள் எப்படி முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருக்க முடியும்?

முசாபர் நகர் மற்றும் வாரணாசி முஸ்லிம்கள் ஆம் ஆத்மி சொல்லி விட்டார்கள் ... நல்லவர்களோடு கூட்டணி வையுங்கள் ..... மக்கள் மதிப்பார்கள் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Rilwan (TX) [18 March 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 33804

சகோதரர் கவிமகன் .. .உங்கள் பதிவுகள் மீது மிகுந்த மரியாதை உண்டு ... கொள்கைகள் காற்றில் பறந்து விட்டனவா? அதென்ன மோடி பூச்சாண்டி ? இந்த பூச்சாண்டியை வைத்து வியாபாரம் நடக்கிறது புரியவில்லையா ? அய்யா மூன்று சீட்டு தந்துவிட்டால் முஸ்லிம்களின் பாதுகாவலரா ?

முஸ்லிம்கள் நூறு சதவிகிதம் ஒட்டு போட்டால் கருணாநிதிக்கு லாபம் ... முஸ்லிம்களை வைத்து வியாபாரம் செய்யும் முஸ்லிம் பெயர் தாங்கி அரசியல் வியாபாரிகளுக்கு laabam.

சாரி ... முஸ்லிம் திமுகாவிற்கு ஒட்டு போட்டால் அதை விட சரித்திர குளறுபடி எதுவும் இருக்க முடியாது .

வலை தல நாகரீகத்திர்க்காக நாகரீகமாக சொல்கிறேன் - மோடியால் ஒன்னும் செய்ய முடியாது ... நாம் நியாயத்தின் அடிப்படையில் செயல்படுபவர்கள் பின்னால் நிற்கும்போது ... கருணாநிதி போன்றவர்கள் முஸ்லிம்களை விற்று விடுவார்கள. இதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை .

தயவு செய்து முஸ்லிம்களை கோழைகளாக , சிறு சிறு தேவைகளுக்காக மற்றவர்களிடம் சரணாகதி அடைபவர்களாக காட்டாதீர்கள் ..

உண்மையின் பக்கம் நில்லுங்கள் .. நேர்மையின் பக்கம் நில்லுங்கள் Don't give into the pressure. It is time to defeat deception . It is time to drive criminals to prison - not to assembly.

IT is only Mr. Pushparayan the deserving candidate

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அந்த 49 நாட்கள்!  (17/3/2014) [Views - 2708; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved