Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:54:17 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13274
#KOTW13274
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 17, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: பொய்களைச் சொல்லி வாக்கு கேட்பதை ஜெயலலிதா நிறுத்த வேண்டும்! காயல்பட்டினத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3990 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக பொருளாளரும், தமிழக முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

காயல்பட்டினம் வருகை:

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனை ஆதரித்து இன்று அவர் தொகுதி முழுக்க பரப்புரை செய்து வருகிறார். இன்று மாலை 05.30 மணியளவில், திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம் வழியாக காயல்பட்டினம் பிரதான வீதியை வந்தடைந்தார்.







பெரிய சதுக்கை அருகில் உரை:

அங்கிருந்து, ஆறாம்பள்ளித் தெரு, சதுக்கைத் தெரு வழியாக பெரிய சதுக்கையைச் சென்றடைந்து, அங்கே கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார்.







பேருந்து நிலையம் அருகில் உரை:

பின்னர், சேதுராஜா தெரு, குத்துக்கல் தெரு, காட்டு தைக்கா தெரு, தைக்கா தெரு வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்து, அங்கே கூடியிருந்த மக்கள் முன்னிலையில் உரையாற்றினார்.









பெரிய சதுக்கை, பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலும் அவர் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-



வரவேற்பில் மகிழ்ச்சி:

காயல்பட்டினம் கலைஞர் பட்டினம்தான் என்பதை இங்குள்ள இஸ்லாமிய மக்கள் தொடர்ந்து நிரூபித்து வருகிறீர்கள் என்பதை, நான் வந்த வழியெல்லாம் நீங்கள் அளித்த வரவேற்பைப் பார்த்து மீண்டும் அறிந்துகொண்டேன்.

ஏதோ ஓட்டுக்காக மட்டும் இந்த ஊருக்கு நாங்கள் வருவதில்லை. மாறாக, சிறுபான்மை மக்கள் மீது - குறிப்பாக காயல்பட்டினம் மக்கள் மீது தலைவர் கலைஞர் அவர்களுக்கு என்றுமே பாசம் மிகுதியாக உள்ளது.

கூட்டணிக் கட்சிகளின் வரவேற்பு:

மணமகனை ஊர்வலமாக அழைத்து வந்தது போல வழிநெடுகிலும் நீங்கள் சாலைகளின் இரு புறங்களிலும் நின்று வரவேற்றதும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் நான் செல்லுமிடங்களிலெ்லாம் வரவேற்பளித்து வருவதும் என்னைப் பெரிதும் மகிழச் செய்துள்ளது.

ஜெயலலிதாவிற்கு மறுப்பு:

சிறுபான்மை மக்களுக்கு திமுக ஒன்றுமே செய்யவில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தூத்துக்குடியில் பேசியிருக்கிறார்.

முஸ்லிம்களை சிறுபான்மையினர் பிரிவில் இணைத்தவர் கலைஞர். உருது முஸ்லிம்களையும் அப்பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை செவிமடுத்து அவர்களையும் சிறுபான்மையினர் பட்டியலில் இணைத்தார்.

நீதிபதி ஜனார்த்தன் கமிட்டியை அமைத்து, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியக் கூறுகளை தீர ஆய்வு செய்த பின், 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கினார்.

ஒருபுறத்தில் கலைஞர் சிறுபான்மையினருக்கும், அனைத்து சமுதாய மக்களுக்கும் நல்ல பல திட்டங்களைத் தந்துகொண்டிருக்க, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு குறித்து சட்டமன்றத்தில் வாயே திறக்காத ஜெயலலிதா, சிறுபான்மை மக்களுக்கு தொடர்ந்து நல்லவற்றைச் செய்து வரும் திமுகவை, அதன் தலைவர் கலைஞரை - ஒன்றுமே செய்யவில்லை என்றும், திமுகவினர் பொய் கூறுகின்றனர் என்றும் அவர் பொய்யுரைத்துச் சென்றுள்ளார்.

நாகரிகமற்ற விமர்சனம் செய்பவர் ஜெயலலிதா:

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஒரு கருத்திலிருப்போர் மாற்றுக் கருத்தில் இருப்போரை விமர்சிக்கத்தான் செய்வர். அது ஏற்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் இந்த அம்மையார் அவர்கள், திமுகவை - அதன் தலைவர் கலைஞரை அரசியல் நாகரிகமின்றி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். காங்கிரஸைத் தொடர்ந்து விமர்சித்துப் பேசுகிறார்.

பாஜகவுடன் கள்ளக் காதலா?

நான் அவருக்கு ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறேன். அதற்கான விடையை இன்று எதிர்பார்த்தேன். இதுவரை விடை கிடைக்கவில்லை. அது என்னவெனில், திமுக, காங்கிரஸ் கட்சிகளையெல்லாம் தொடர்ந்து விமர்சிக்கும் அவர் பாரதீய ஜனதா குறித்து இதுவரை வாயே திறக்காமல் இருப்பது ஏன்? அக்கட்சியுடன் கள்ளக் காதலா?

ஆதாரமின்றி பேச மாட்டோம்...

பாபரி மஸ்ஜித் உடை.க்கப்பட்டபோது, தெளிவாக கண்டனம் தெரிவித்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். ஜெயலலிதா அம்மையார் தூத்துக்குடியில் நேற்று பேசியபோது, கரசேவைக்கு தான் ஆள் அனுப்பியதாக பொய்யுரைப்பதாகக் கூறியுள்ளார்.

நாங்கள் என்றுமே பொய்யுரைப்பதுமில்லை. ஆதாரமின்றிப் பேசுவதும் இல்லை. பாபரி மஸ்ஜித் தகர்ப்பைத் தொடர்ந்து நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில், கரசேவையை ஜெயலலிதா ஆதரித்துப் பேசியது, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் பத்திரிக்கையில் செய்தியாக வந்துள்ளது. தி ஹிந்து, தினமலர் ஆகிய நாளிதழ்களிலும் இச்செய்தி வெளிவந்தது.

ஜெயலலிதா கரசேவைக்கு ஆயிரம் பேரை கர சவைக்கு அனுப்பி வைத்ததையும் மேலும் உதவிகள் செய்வதாக கூறியதையும் உத்திர பிரதேச விஸ்வஹிந்த் பரிஷத் செயலாளர் பேசியதாக பல்வேறு நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. அச்செய்திகள் அடங்கிய பிரதிகள் அனைத்தும் என் கைவசம் உள்ளன. ஆக, நாங்கள் ஆதாரத்துடன்தான் எதையும் பேசுகிறோம், பேசுவோம்.

வழக்கை சந்திக்க தயார்!

ஒருவேளை, நான் இப்போது கூறியது தவறு என்று அவர் கருதுவாரானால் என் மீது அவதூறு வழக்கு தொடரட்டும். அதைச் சந்திக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்.

திமுகவின் தேர்தல் அறிக்கை:

தலைவர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பெண்கள், இளைஞர்கள், பாட்டாளிகள், மத்திய - மாநில அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு 100 அம்ச வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பழிவாங்கும் சட்டங்களைத் திரும்பப் பெற வைப்போம்:

தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக என முன்பு தடா, பொடா சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டவர்களையெல்லாம் அச்சட்டங்களைப் பயன்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா அம்மையார். அதுபோல, இச்சட்டம் நாட்டின் பல மாநிலங்களிலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அப்பாவிகள் பாதிக்கப்பட்டதைக் கருத்திற்கொண்டு, அச்சட்டங்களைத் திரும்பப் பெற திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பலனாக, அச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன.

தற்போதுள்ள சட்டங்களைப் பயன்படுத்தி, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் (Unlawful Activities) மேற்கொள்ளப்படுவதைத் தவிர்த்திட சில திருத்தங்களைக் கொண்டு வர வேண்டுமென 2011 முதல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அச்சட்டத்தையும் திரும்பப் பெற திமுக மத்திய அரசை வலியுறுத்தும்.

வேட்பாளர்களில் 10 சதவிகிதம் முஸ்லிம்கள்:

முஸ்லிம்களுக்கு திமுக அளித்துள்ள 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அதிகரித்துத் தர கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அதைத் தருவதற்கு முன்னோட்டமாக திமுக கூட்டணியில புதுச்சேரியில் நாஜிம், இராமநாதபுரத்தில் ஜலீல் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும், வேலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் எம்.அப்துல் ரஹ்மான், மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சியின் எஸ்.ஹைதர் அலீ ஆகிய நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இது, முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடாகும்.

ஆதரிப்பீர் உதயசூரியனை!

மத்திய அரசில் உங்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்க, உங்களுக்கு நல்லவை கிடைத்திட, அல்லவை தடுக்கப்பட, நீங்கள் அனைவரும் திரு. ஜெகன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியாக வாக்குப்பதிவு செய்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டு நிறைவு செய்கிறேன்.


இவ்வாறு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முஸ்லிம் லீக் சார்பில் வரவேற்பு:

காயல்பட்டினத்தில் அவர் நகர்வலமாகச் சென்ற அனைத்து தெருக்களிலும் ஆண்கள், பெண்களும் மலர் தூவி வரவேற்பளித்தனர். சதுக்கைத் தெருவிலுள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸில் அருகில், நகர முஸ்லிம் லீக் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், மாணவரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பளித்தனர்.

மு.க.ஸ்டாலினின் காயல்பட்டினம் பரப்புரைப் பயணத்திற்கான ஏற்பாடுகளை, திமுக காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

[செய்தி திருத்தப்பட்டது @ 08:25 / 18.03.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வருவார்கள் நாகூர் ஹனிபா பாடல் போடுவார்கள்..! காரியத்தை சாதித்து விட்டு போவர்கள்..! மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் வேண்டும்..~
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [17 March 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 33776

காயல்பட்டினம் தெரு வீதிகளில் என் மீது பூக்கள் தூவினார்கள் என்று சொல்வதை விட அன்பினால் பூக்கள் கொண்டு அடித்தார்கள் என்றே சொல்வேன்..! என தளபதி ஸ்டாலின் உரையாற்றினர்..!

காயல்பட்டினம் நகர மக்களின் மிக பெரிய வாக்குகளின் பங்களிப்பை பெற்று தூத்துக்குடி தொகுதிக்கு MP யாக அனுப்பிய ஜெயதுரை (அன்பினால் பூக்கள் கொண்டு அடித்த காயல்பட்டினம்) இந்நகருக்கு வழங்கிய பங்களிப்பு என்ன என்ன..! தளபதி ஸ்டாலின் கூற முடியுமா..? ஒரு ஆண்டு அல்ல - இரு ஆண்டுகள் அல்ல ஐந்து ஆண்டுகள் முழுமையாக (தி மு க) MP யாக பதவி சுகத்தை அனுபவித்த ஜெயதுரையை என்றைக்காவது காயல்பட்டினம் நகருக்கு என்ன.. என்ன..! திட்டங்களுக்கு நீங்கள் உதவி செய்தீர் என தி மு க தலைவரோ... தளபதி ஸ்டாலினோ ஜெயதுரையிடம் உரிமையோடு கேட்டதுண்டா...?

அவரிடம் எப்படி நீங்கள் கேட்ப்பீர்கள்..! சும்மாவா அவருக்கு MP சீட் வழங்கி இருப்பீர்கள்...! அது போல தானே இப்பவும் இவருக்கும் MP சீட் வழங்கி இருப்பீர்கள்..! பின்னே அவருக்கும் - இவருக்கும் என்ன வித்தியாசம் இருக்க போகிறது..!

நீங்கள் அனைவர்களும் ஐந்து ஆண்டு காலம் நல்ல நிலையில் சுகம் அனுபவித்து தாங்கள் வளர காயல்பட்டினம் நகர மக்கள் இந்த தேர்தல் நேரத்தில் அவசிய படுகிறது என்பதே உண்மை..! என் கருத்து தவறு என்றால் பிறகு ஏன் காயல்பட்டினத்தில் கண்டன பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், இரசாயன கழிவுக்கு எதிரான கடையடைப்பு, ரயில் மறியல் போரட்ட அறிவிப்பு இவையெல்லாம் ஏன் நடக்கிறது..

சிந்தியுங்கள் நகர மக்களே.. அணைத்து திராவிட கட்சிகளும் தேர்தல் நேரத்தில் நம்மை பகடை காய்களாக பயன்படுத்துவதே தொடராகி விட்டது... இந்நேரத்தில் நம்மால் முடிந்த ஒரு மாற்றம் வேண்டும் அதை நல்ல முறையில் சிந்தித்து மக்களுக்காக உணமையாகவே குரல் கொடுக்கும் கட்சியை தேர்ந்தெடுத்து வலுபடுதுங்கள்.. வாக்களியுங்கள்..! என்பதே என் வேண்டுகோள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Cnash (Makkah) [18 March 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33778

. பொய்யும் புரட்டும் தான் இன்றைய அரசியல் கட்சிகளின் மூலதனம் அதை நிறுத்தி விட்டால் எதை கொண்டு அரசியல் செய்ய முடியும் . அப்படி நிறுத்த வேண்டும் என்றால் எல்ல அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை தான் நிறுத்தி வைக்கணும்.

அப்புறம் காயல்பட்டினம் என்றுமே காயல்பட்டினம் தான் ..கண்ணியவான்கள் வாழ்ந்த வாழும் பட்டினம், ஒரு போதும் கலைஞர் பட்டினமாவோ, அம்மா பட்டினமாவோ , அரசியல் பட்டினமாகவோ ஆகாது ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Rilwan (TX) [18 March 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 33781

அரசியல் வியாபாரி ...

ஆம் ஆத்மிக்கு ஒட்டு போடுங்கள் ... ஆம் ஆத்மி இல்லை என்றால் வேறு நல்ல மனிதருக்கு ஒட்டு போடுங்கள் ..

யாருமே நல்லவர்கள் இல்லை என்றால் தயிரியமாக NOTA விற்க்காக ஒட்டு போடுங்கள் ..

பூச்சாண்டி காட்டி ஒட்டு கேபவர்களின் யோக்கியதை நமக்கு தெரியும் .. ஊரை அடித்து உலையில் வைத்து அடுத்தவன் உழைப்பில் சுரண்டி வாழும் ஊழலில் திளைக்கும் கட்சிகள் உங்களுக்கு தெரியும் தானே ?

அப்படித்தேரிந்தும் இவர்களுக்கு ஒட்டு போட்டால் ஆறாவது அறிவு எதற்கு இருக்கிறது? அப்படி ஒட்டு போடுபவர்களுக்கும் மண்தை ஆடுகளுக்கும் என்ன வித்தியாசம் ?

நீங்கலாக மாறாதவரை உங்கள் வாழ்க்கை மாறாது .

உண்மையின் பக்கம் நில்லுங்கள் ..... அதனால் எந்த உடனடி லாபம் இல்லா விட்டால் கூட ...உங்கள் ஓட்டை மதியுங்கள் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [18 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33789

அஸ்ஸலாமு அலைக்கும்

தற்சமையம் நமது ஊரில் நேரமும் ,, காலமும் விரைந்து ஓடுகின்றன .....நல்ல கலகலப்பு ,, நேற்றைய நம் தளபதி அவர்களின் நமது ஊர் வருகையால் நம் ஊர் கலகலப்பு அதிகரித்து விட்டன ....நம் தளபதி அவர்கள் உரையில் மரியாதையும் ,,பண்பும் ,,இருந்தன ....

நல்ல வரவேற்ப்பான கூட்டம்... மக்ரிப் பாங்கு சப்பதம் கேட்டயுடனே தங்கள் உரையை சிறிது நேரம் நிறுத்திய தளபதியே ...தங்கள் பண்பே தனி தான் ....

ஆதாரத்துடன் பேசியது பாராட்டுக்குரியது .....உண்மை இருப்பின் வெற்றி உங்களுக்கே .......உண்மை உறங்குவது இல்லை ....

நமது ஊர் கலை கட்டியது என்றே கூறலாம்...அப்படி ஒரு மக்கள் கடல் அலை என்றே சொல்லலாம் ....உண்மையில் தளபதி மரியாதைக்குரியவர்கள் என்றும் கூறலாம்.....பேச்சின் தன்மை அப்படி தான் பறை சாட்டியது .....

நமது ஊருக்கு இரண்டாம் குடிநீர் திட்டம் தந்ததே அவர்கள் என்பதை நாம் முழுமையாக அறியும் போது நமக்கே பெருமையாகவும் ...மற்றற்ற மகிழ்ச்சியாகவும் இருக்கிறது ........

பொதுவாகவே சொல்ல போனால் தலைவர் கருணாநிதி அவர்களும் சரி ....அவர்களின் அருமை புதல்வன் தளபதி அவர்களும் சரி நமது ஊர் மக்கள் மீது அதிகமான '' ஒரு'' அளவற்ற பாசம் வைத்தே வருவது யாவர்களும் நன்கு அறிந்ததும் .... நம் ஊரின் மீது ஒரு நல்லதோர் பார்வை வைத்தும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது .......

நமது அருமை தளபதி ஐயா அவர்களுக்கு ஒரு மிகவும் தாழ்வானதோர் வேண்டு கோள்....தங்கள் கட்சி முன்னாள் MP அவர்கள் போன 5 வருசத்தில் எங்கள் ஊர் பக்கமே வந்ததும் இல்லை ....ஊருக்கான எந்த ஒரு நல்ல திட்டமும் செயல் படுத்தியதும் இல்லை .... அது போன்று இப்போது நீங்கள் நிப்பாட்டி உள்ள தங்கள் தற்போதைய .... MP அவர்களும் அது போன்று நடக்காமல் தாங்கள் தான் முன்னிற்று கவனிக்க வேணும் .... பொது மக்களை ஏமாற்றுபவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள் .....

MP கோட்டா பணம் 5 வருசத்தில் எங்கள் ஊருக்கு சரியாக செலவு செய்ததும் இல்லை ....காரணம் என்னவோ ......

அன்பு தளபதி அவர்களே தங்கள் கட்சி ....MLA அனிதா அண்ணாச்சி அவர்களை நாங்கள் குறை சொல்கிறோமா....இல்லையே அது போலதான் தங்களின் தற்போதைய MP அவர்களும் இருக்க வேணும் என்று நினைக்கிறோம் ....மக்கள் கூப்பிட்ட குரலுக்கு உடன் வருபவர்கள் தான் மக்களின் சிறப்பானவர்கள் .....நமது MLA அனிதா அண்ணாச்சி அவர்களுக்கு என்று ஒரு தனி செல்வாக்கு பொது மக்கள் மத்தியில் ( நெஞ்சில் ) இங்கு நெருக்கமாகவே உள்ளார்கள் ......இதையே நாங்கள் எதிர் பார்க்கிறோம் ......

வாழ்க தங்கள் நற் கொள்கை .....தங்களின் எங்கள் ஊருக்கான பாசம் தொடரட்டும் .... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. AVOID PUBLISHING LADIES PICTURES (OR) PHOTOS - THANKS
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [18 March 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 33793

ASSALAMU ALAIKUM.

HOPE THIS FINDS EVERYONE IN BEST OF HEALTH, WEALTH AND HIGH ISLAMIC SPIRIT BY THE MERCY OF ALMIGHTY ALLAH..

WE APPRECIATE KAYAPATNAM.COM FOR GIVING NEWS ON TIME IN DETAILS…

WISHING KAYALPATNAM.COM FOR THEIR MEDIA SERVICE, HOPE IT WILL BENEFIT THE COMMUNITY AND OUR TOWN PEOPLE.

A KIND REQUEST, PLEASE AVOID PUBLISHING LADIES PICTURES (OR) PHOTOS FOR THE SAKE OF ALMIGHTY ALLAH.

JAZAKALLAHU KHAIR.

MAY ALLAH GUIDE ALL OF US IN HIS RIGHT PATH AND SHOWER HIS ENDLESS BLESSINGS TOWARDS US, AMEEN.

FEE AMANILLAH.

YOUR BROTHER IN ISLAM
V.M.T.MOHAMED HASAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. திமுக கூட்டணியைத்தான் நாம் ஆதரிக்கக் வேண்டும்
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [18 March 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 33797

ஆம் ஆத்மி அது இது என்று சொல்லி முஸ்லிம்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். ஆம் ஆத்மி மட்டும் என்ன வானத்திலிருந்தா வந்தார்கள். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் .

பிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆதரிக்கும் திமுக கூட்டணியைத்தான் நாம் ஆதரிக்கக் வேண்டும். 100% முஸ்லிம்கள் ஓட்டும் ஒரே பக்கமாக விழுந்தால் அதன் தாக்கம் தனிதான் . அதோடு 100% தலித் ஓட்டும் சேர்ந்து விழும்போது திமுக கூட்டணியின் வெற்றி நிச்சயம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மொழியால் தமிழன் தேசத்தால் இந்தியன் என்று பெருமை கொள்வோம்... மதத்தை முன்னிறுத்தி அல்ல...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [18 March 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 33801

100% முஸ்லிம்கள் ஓட்டும் ஒரே பக்கமாக விழுந்தால் அதன் தாக்கம் தனிதான் .CP

அதே 100% இந்துக்கள் ஓட்டும் ஒரே பக்கமாக விழுந்தால் அதன் தாக்கமும் தனிதான்...! நினைத்து பார்க்க தவற வேண்டாம்,..

அணைத்து சகோதர சமுதாய மக்களும் முன்னேற மதவாதத்தையும், ஊழலையும் ஒழித்து உலக வங்கியில் கடனில்லா தேசத்தை உருவாக்கி தனது தாய்நாட்டை நல்ல நிலைக்கு கண்டு வர முயற்சி எடுக்கும் ஒரு சாதாரண மனிதர் தான் ஆம் ஆத்மியின் நிறுவனர்..

இசுலாமிய மத உணர்வோடு சிந்தித்து ஒரு கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் நாம் இசுலாமிய நாட்டிற்கு தான் செல்ல வேண்டும்.. அணைத்து மக்களும் ஜாதி - மதம் வேறுபாடு இன்றி நல்லாட்சி பெற்று வளமாக வாழவே அழைக்கிறது ஆம் ஆத்மி.

மொழியால் தமிழன் தேசத்தால் இந்தியன் என்று பெருமை கொள்வோம்... மதத்தை முன்னிறுத்தி அல்ல...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Rilwan (TX) [18 March 2014]
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 33802

அதென்ன பொத்தாம் பொதுவாக எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மாட்டை தான்? ஆம் ஆத்மியின் செயல் பாடுகளை பற்றி என்ன அறிந்து வைத்திருக்கிறீர்கள்? உங்களின் ஆய்ந்து அறியும் திறன் இவ்வளவு தானா?

திரு சுப்பராயனையும் திருவாளர் தூத்துக்குடி பெரியசாமியின் திருவாளர் செல்வனையும் ஒரு திராசில் வைத்து நிறுத்துப்பாருங்கள் ... இவர்களில் யார் நல்லவர என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை ..

இவர்களில் யார் உங்களுக்காக தெருவில் இறங்கி போராடுவார் என்பது அனைவரும் அறிந்தது ..

இங்கே அரசியல் வியாபாரம் நடக்கிறது . எமது மீதும் எமது ஓட்டின் மீதும் மதிப்பு இருக்கிறது ..எமது ஒட்டு தொர்ப்பவருக்கு சென்றாலும் ஒரு நல்லவனுக்கு ஒட்டு போட்டோம் என்ற நிம்மதி.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ஆம்ஆத்மி வெற்றி வாய்ப்புள்ள கட்சி அல்ல
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [18 March 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 33806

இதில் மத வாதமோ, இன வாதமோ அல்லது பிரிவினை வாதமோ இல்லை. ஒற்றுமை வாதம்தான். நாம் திமுக கூட்டணியின் "ஜகன்" என்கின்ற கிறிஸ்துவ வேட்பாளருக்குத்தான் வாக்களிக்க சொல்கிறோம். எனவே இது மத சார்பற்ற தன்மைதான். 100 % இந்துக்கள் ஒருசேர வாக்களிப்பு என்பது கற்பனைக்கு எட்டாதது. பொது வலைதளத்தில் விரிவாக விவரிக்க முடியாது. அது எதிர்மறை விளைவை உண்டுபண்ணும்.

நமக்குள்ள வாய்ப்பு, முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள், தலித்துகள் பிற நடுநிலை இந்துக்களுடன் இணைந்து ஒரே அணியாக வெற்றி வாய்ப்புள்ள திமுக அணிக்கு வாக்களிப்பதால் மதவாதிகளை தோல்வியுற செய்ய முடியும். ஆம்ஆத்மி வெற்றி வாய்ப்புள்ள கட்சி அல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அந்த 49 நாட்கள்!  (17/3/2014) [Views - 2707; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved