Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:18:26 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13496
#KOTW13496
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 14, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசிய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும்! பரப்புரை பொதுக்கூட்டத்தில், முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகள் பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3233 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்குமானால், தேசிய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும் என - திமுக தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு ஆதரவு கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், அதன் மாநில நிர்வாகிகள் பேசியுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:- இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.

பொதுக்கூட்டம்:

அவருக்கு ஆதரவு திரட்டும் நோக்குடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இம்மாதம் 11ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 19.00 மணிக்கு பரப்புரை பொதுக்கூட்டம், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் நடத்தப்பட்டது.

கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் முன்னிலை வகித்தார். காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வரவேற்றுப் பேசினார்.

திமுக சார்பில் பாலப்பா முஹம்மத் அப்துல் காதிர், ஏரல் பள்ளிவாசல் இமாம் மவ்லவீ எச்.ஷாஹுல் ஹமீத் பாக்கவீ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், திமுக காயல்பட்டினம் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர் தலைமையுரையாற்றினார்.



தேமுதிகவினர் முஸ்லிம் லீகில் இணைவு:

அதனைத் தொடர்ந்து, நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் - மதவாத சக்தியான பாஜகவுடன், விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தேமுதிக) கூட்டணி அமைத்துக் களம் காண்பதால், அக்கட்சியின் 5 உறுப்பினர்கள் அதிலிருந்து விலகுவதாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைவதாகவும் அறிவித்து, அவர்களது தேமுதிக உறுப்பினர் அட்டையையும் அளிக்க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவற்றைப் பெற்றுக்கொண்டு, அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார்.



காயல் மகபூப் உரை:

அடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் உரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-



கஃபாவில் கேட்ட பிரார்த்தனை:

அண்மையில் சஊதி அரபிய்யா சென்ற நான் அங்கு உம்றா கிரியைகளை நிறைவு செய்து விட்டு, புனித கஃபத்துல்லாஹ்வின் திரைச்சீலையைப் பிடித்தவாறு மனமுருகி துஆ பிரார்த்தனை செய்தேன். 3 கோரிக்கைகளை இறைவனிடம் முன்வைத்தேன். அவற்றில் எதுவும் எனது சொந்தக் கோரிக்கைகள் அல்ல. இந்த நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்றும், மதவாத சக்திகள் வேரறுக்கப்பட வேண்டும் என்றும், சமுதாயத்தை வழிநடத்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், அதன் நிர்வாகிகளும் நீடித்த ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும் நான் பிரார்த்தனை செய்தேன்.

நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் பல துருவங்களில் பலர் போட்டியிட்டாலும், நேரடிப் போட்டி என்பது திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் இடையில்தான். இதில் அதிமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம்.

மோடி பிரதமரானால்...

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவேளை பாஜக ஆட்சியைப் பிடித்து, மோடி பிரதமரானால், இந்த நாட்டின் தேசிய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும். அதற்கு குஜராத் கலவரங்களை அவர் அமைதியாக இருந்து வழிநடத்தியதே மிகப்பெரிய சான்று.

பாஜக ஆட்சிக்கு வந்தால், கஷ்மீர் மாநில மக்கள் பாதுகாப்பு கருதி, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள Article 370 சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் இல்லாமலாக்கப்படும். அவ்வாறு அவர்கள் செய்தால், அங்கு அமைதி கெட்டு, போர் வெடிக்கும். அது இந்தியா - பாகிஸ்தான் போராக மாறும். அதில் வெற்றி பெற்றதாகக் கூறி, மோடி தன்னை தேசிய கதாநாயகனாக முன்னிறுத்துவார். இது அவர்களின் திட்டங்களுள் ஒன்று.

குஜராத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த முஸ்லிம் தம்பதியை வழிமறித்து, 27 வயது கணவனை - அவன் தான் இந்து என உயிருக்குப் பயந்து பொய்யுரைத்த பின்னரும், அவனது கீழாடையை உருவி, ஆண் குறியில் சுன்னத் செய்யப்பட்டதை உறுதி செய்த பின், அவனது வயிற்றில் ஆயுதத்தால் குத்திக் கிழித்து, மனைவி கண் முன்னால் அவரைப் படுகொலை செய்தனர்.

அத்தோடு விட்டுவிடாமல், வெளிறிப் போயிருந்த - நிறைமாதக் கர்ப்பிணியான அந்த இளம் முஸ்லிம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, குழந்தையை வெளியில் எடுத்து, தலைக்கு மேலே தூக்கிக் காண்பித்து ஆத்திரக் கொக்கரிப்பு செய்தது மதவாதக் கும்பல்.

அதுபோல, உயிருக்கு அஞ்சி காங்கிரஸ் எம்.பி. ஒருவரின் இல்லத்தில் அடைக்கலமான 67 முஸ்லிம்களை - வீட்டிற்குள் புகுந்து மொத்தமாகப் படுகொலை செய்தனர் கலவரக்காரர்கள்.

இந்த படுபாதக வேலைகள் நடைபெறும் முன்னரே அதுகுறித்து அம்மாநில முதல்வரான நரேந்திர மோடிக்கு தகவல் அளிக்கப்பட்ட பிறகும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்குமாறு கூறியவர்தான் இன்று நாட்டை ஆளத் துடித்துக் கொண்டிருக்கிறார்.

இத்தனையையும் செய்த பின்னரும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நேரத்தில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தான் காரில் செல்கையில் ஒரு நாய்க்குட்டி அதில் அடிபட்டு இறந்தால் ஏற்படும் உணர்வு தனக்கு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். இது நாடு முழுவதும் அதிருப்தியாகப் பேசப்பட்ட பிறகும் கூட, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தான் வருந்துவதாகவும் - அதே நேரத்தில் தனக்கு குற்ற உணர்வு இல்லை என்றும் சொல்லிய செய்தியை பத்திரிக்கைகள் வெளியிட்டன.

இந்த மோடி குஜராத் கலவரத்திற்குக் காரணமானவர் என்பதற்காகவே அவருக்கு அமெரிக்கா செல்ல விசா வழங்கப்படவில்லை. அவரது செயலுக்கு, தான் வெட்கப்படுவதாக வாஜ்பாய் கூறியிருக்கிறார்.

நான் இங்கே மேடையில் கூறியிருப்பது சில நிகழ்வுகள் மட்டுமே. மொத்தத்தையும் கூற என்னாலும் இயலாது. அவற்றைப் பொறுமையாகக் கேட்க உங்களாலும் இயலாது. அவ்வளவு கொடுமை நிறைந்த நிகழ்வுகள் அவை.

அனைவரும் வருக!

இவ்வளவையும் செய்த மோடியுடன் கூட்டணி வைத்துள்ளதனால் அதிருப்தியுற்ற தேமுதிகவைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் 5 பேர் இன்று அதிலிருந்து விலகி, தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்துள்ளனர். இதுபோல, மதிமுக, பாமக போன்ற - பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளில் இருக்கும் முஸ்லிம்களும் விலகி வர வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஜெயலலிதா வேஷ்டி கட்டாத மோடி:

தமிழகத்தில் அதிமுகவுக்கு அளிக்கும் வாக்குகளும் பாஜகவுக்கு அளிக்கும் வாக்குகளும் ஒன்றே. இந்துத்துவக் கொள்கையில் மோடியும், ஜெயலலிதாவும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல. மோடி சேலை கட்டாத ஜெயலலிதா என்றால், ஜெயலலிதா வேஷ்டி கட்டாத மோடி. அவ்வளவுதான்.

உலகில் எங்கு இந்துக்கள் பாதிக்கப்பட்டாலும் இந்தியா அடைக்கலம் கொடுக்கும் என பாஜகவின் தேர்தல் அறிக்கை சொல்கிறது. இந்தியாவில் பல மதத்தினர் வாழ்ந்துகொண்டிருக்க, இந்துக்களை மட்டும் தனியாகக் குறிப்பிட்டு இவ்வாறு அறிவிப்பதன் நோக்கம், இந்த நாட்டை இந்து நாடாக மாற்றுவதற்கான முயற்சியே. அது ஒருபோதும் இந்தியாவில் நடக்காது; நடக்கவும் விட மாட்டோம்.

இந்து ராஷ்ட்டிரம்:

இந்து ராஷ்ட்டிரம் என்பது ஆர்.எஸ்.எஸ். மூளையில் உதித்த சிந்தனை. பொதுமக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அதை நடைமுறைப்படுத்திட பாஜக துடித்துக்கொண்டிருக்கிறது. அதுபோல, பாகிஸ்தான் பிரிவினை என்பது முஸ்லிம்களின் விருப்பத்தில் வந்ததல்ல. மாறாக, இந்துக்களுடன் முஸ்லிம்களை இணைத்து வைத்திருக்கக் கூடாது என்ற இந்து மகா சபையின் பன்னெடுங்காலத்துக்கு முந்தைய கொள்கையே பாகிஸ்தான் பிரிவினை என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதிமுகவும், பாஜகவும் ஒன்றே!

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவதும், அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதும் பாஜகவின் நடப்பு தேர்தல் அறிக்கையில் தெளிவாகவே இடம்பெற்றுள்ளன. அந்தக் கொள்கைக்கு ஆதரவாக சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானமே இயற்றப்பட்டுள்ளது. இன்றளவும் அத்தீர்மானம் திரும்பப் பெறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாக்குகளைச் சிதற விடாதீர்!

இந்த ஊரில் சிலர் NOTAவுக்கு வாக்களிக்கவும், வேறு சிலர் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கவும் முடிவு செய்து, அதற்கான பரப்புரையிலும் இறங்கியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியினர் நல்லவர்களா, இல்லையா என்ற ஆய்வுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், இன்றைய காலச் சூழலில் அது நமக்குப் பாதகமான விளைவையே தரும் என்பதை அவர்களுக்குச் சொல்லி, உங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, உங்கள் வாக்குகளைச் சிதறாமல் ஒருங்கிணைத்து, உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட்டு, என்.பி.ஜெகன் அவர்களை பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெறச் செய்திட உங்கள் யாவரையும் அன்புடன் வேண்டி நிறைவு செய்கிறேன்.


இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் பேசினார்.

பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரை:

நிறைவாக, அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-



முற்றிலும் மாறுபட்ட தேர்தல்:

நடைபெறவுள்ள இந்த மக்களவைத் தேர்தலுக்கும், முந்தைய தேர்தல்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்தத் தேர்தலில் தனி மனிதர் பிரதமராக முன்னிலைப்படுத்தப்படுகிறார். அதுபோல, எப்போதும் போல் அல்லாமல் இன்று 6 முனைப் போட்டியில் தேர்தல் களம் உள்ளது.

பாஜகவின் மதச்சார்பு தேர்தல் அறிக்கை:

பாஜக தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ராமர் கோயில் கட்டப்படும் என குறிப்பிட்டுள்ளது. ஒரு கோயில் அல்ல; எத்தனை கோயில்களை வேண்டுமானாலும் கட்டட்டும். ஆனால் ஒரு பள்ளியை இடித்துவிட்டு கோயில் கட்டுவதையோ, கோயிலை இடித்துவிட்டு தேவாலயம் கட்டுவதையோ, தேவாலயத்தை இடித்துவிட்டு பள்ளிவாசல் கட்டுவதையோ இந்த மதச்சார்பற்ற நாட்டில் அனுமதிக்க முடியாது.

பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அதன் தேர்தல் அறிக்கை மேலும் சொல்கிறது. அவ்வாறு கொண்டு வரப்பட்டால், முஸ்லிம்களின் திருமண தனி உரிமைகள், மண விலக்கு உரிமைகள், ஜீவனாம்சம், இறந்தவர்களை அடக்கம் செய்தல் உட்பட நம் மதம் தொடர்புடைய அனைத்து தனியார் சட்டங்களும் இல்லாமலாக்கப்படும். இதனால், இந்த மதச்சார்பற்ற நாட்டில் நமது வழிபாட்டு உரிமை பறிக்கப்படும் அதை ஒருபோதும் ஏற்க இயலாது.

ஒன்றும் செய்யாத ஜெயலலிதா:

தமிழகத்தில் ஜெயலலிதா தனது 3 ஆண்டு கால ஆட்சியில் எந்தப் புதுத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தவில்லை. முந்தைய திமுக அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களையே பெயர்களை மாற்றித் தொடர்கிறார்.

முஸ்லிம்களுக்கு மதிப்பளிக்கும் திமுக தேர்தல் அறிக்கை:

மதச்சார்பற்ற ஆட்சி, பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் உள்ள பலவீனங்களை திருத்தல் உள்ளிட்ட - முஸ்லிம்களின் பல்வேறு கோரிக்கைகள் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அதுகுறித்து ஒரு வரி கூட இல்லை.

சிறுபான்மையினர் நலன் காத்திட திமுக தனிப் பிரிவையே துவக்கியது. 3.5 சதவிகித இட ஒதுக்கீடு தந்தது கலைஞர் தலைமையிலான அரசு. அதை இன்னும் அதிகப்படுத்த நாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளையும் அது செவிமடுத்துள்ளது. அதன் முன்னோட்டமாக, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 4 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு இடமளித்ததன் மூலம், 10 சதவிகித இட ஒதுக்கீட்டையும் வழங்கியுள்ளது.

திமுகவால் முஸ்லிம்கள் பெற்ற பயன்கள்:

இட ஒதுக்கீடு தருவது குறித்து முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் கலைஞர் அறிவிப்புச் செய்தார். அதன் பலனாக, இன்று நம் சமுதாயத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல்துறை வல்லுநர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்து வருகிறது.

அதுபோல, தமிழகத்தின் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் - உலமாக்கள், பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட வேண்டுமென - அவரும் பங்கேற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, அடுத்த இரண்டு நாட்களில் அதையும் அறிவித்து நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக, இன்று தமிழகத்தின் அனைத்துப் பள்ளிவாசல்கள் - மத்ரஸாக்களில் பணிபுரியும் – பொருளாதாரத்தில் நலிவுற்ற இமாம்கள், பிலால்கள், ஆலிம்கள் பலன் பெற்று வருவதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

தற்போது, இட ஒதுக்கீட்டை நான்தான் தந்தேன் என இல்லாத ஒன்றைப் பொய்யாகக் கூறும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தான் பதவியிலிருந்த இந்த 3 ஆண்டுகளில் அதை உயர்த்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வெறுமனே ஆணையம் அமைப்பதை நம்பி, காலத்தைக் கடத்த முஸ்லிம்கள் அறிவிலிகள் இல்லை.

காயல்பட்டினத்திற்கு வேட்பாளரின் உறுதிமொழிகள்:

இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சில நாட்களில், தூத்துக்குடியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன் அவர்கள், காயல்பட்டினம் நகரின் முக்கிய கோரிக்கைகளான - கிழக்குக் கடற்கரை சாலை, ரயில் நிலைய நடைமேடைப் பணிகள் உள்ளிட்டவற்றை தான் நாடாளுமன்ற உறுப்பினரானால் நிறைவேற்றித் தருவதாக வாக்களித்துள்ளதை இங்கே நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

களத்தில் இரண்டு அணிகளே!

தமிழகத்தில், திமுக - அதிமுக என இரண்டே அணிகள்தான் உள்ளன. அவற்றுக்கிடையில்தான் போட்டி. எனவே, இவ்விரண்டில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான திமுக அணிக்கு நாம் யாவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டியது அவசியம். குழப்பமான சிந்தனைகளுக்கு இடமளிக்க வேண்டாம்.

இன்று பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்கள், நரேந்திர மோடி செய்த பாவங்களுக்குப் பொறுப்பாகி, இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டியதிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

எனவே, நமக்குப் பாதுகாப்பான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் என்.பி.ஜெகன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்களும் வாக்களிப்பதோடு, உங்களைச் சார்ந்த அனைவருக்கும் அதைப் பரப்புரை செய்ய வேண்டியவனாக எனதுரையை நிறைவு செய்கிறேன்.


இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.

முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில், முஸ்லிம் லீக் உட்பட ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.











முன்னதாக, கூட்டம் நடைபெற்ற ஏப்ரல் 11ஆம் நாளன்று மாலையில், முகவை சீனி முஹம்மத் குழுவினரின் இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.





படங்களுள் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [14 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34331

அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லிம் லீக்கை பொறுத்தவரை தன் சொந்த சின்னத்தில் நிற்பது பாராட்டுக்குரியது அது சமையம் வேலூரில் கவனமாக இருக்க வேண்டும் .

இன்ஷா அல்லாஹ் அப்துல் ரஹ்மான் வெற்றி அடைவதற்கு அதிக வாய்புகள் உள்ளது .

ஆனால் முஸ்லிம் லீகின் சின்னத்தை மக்களுக்கு சரியான முறைகளில் கொண்டு சேர்க்க வேண்டும் மாற்று மத மக்களிடம் மனதில் கூடுதலாக இந்த எனிப்படி சின்னத்தை பதிய வைக்க வேண்டும் நம் சமுதாய ஓட்டு கண்டிப்பாக சிதறாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் என் தனிப்பட்ட கணிப்பு படி அப்துல் ரஹ்மான் 35000 - 46000 ஓட்டுகள் வித்தியாசதில் வெற்றி பெற வாய்புகள் உள்ளது .

பிஜேபி இந்த தொகுதில நிற்பது முஸ்லிம் லீகுக்கு கூடுதல் வாய்பாக அமைந்துள்ளது என்றால் அது கண்டிப்பாக உண்மையான செய்தி இன்ஷா அல்லாஹ் தேர்தல் முடிவுகள் வரும் போது நாம் அதனை அறியலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இஸ்லாத்தின் வெற்றிக்கு உறுதுணையாவோமாக!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! . (yanbu) [14 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34341

காயல் மகபூப் அவர்கள் புனித கஃபத்துல்லாஹ்வில் கையேந்தி கேட்ட துவாவை வல்ல அல்லாஹ் கபூல் செய்வானாக ஆமீன்!

அன்பு இஸ்லாமிய சகோதரர்களே,அன்றைய இக்கட்டான சூழ்நிலையில் பல நிபந்தனையுடன் ப.ஜ.க விற்கு தி.மு.க ஆதரவு அளித்தது உண்மைதான்.ஆனால் அந்த பெரிய தவறு தெரிந்தோ,தெரியாமலோ நடந்து விட்டது. அதற்காக இன்றுமுதல் மனம் வருந்துகிறேன் என்று கலைஞர் பலதடவை அறிவித்தும் விட்டார்!ஏன் நமூரில் நடந்த கூட்டத்தில் கூட பகிரங்கமாக தன் தவறை ஒப்புக்கொண்டு மனம் வருந்தி பேசினார் அல்லவா?அன்று முதல் இன்றுவரை அந்த பாசிசி கட்சியுடன் எந்த நிலையிலாவது கை கோர்த்தாரா? இல்லையே!

காங்கரஸ் கூட்டணியில் கசப்புடன் இருந்தாலும் அரசுக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்காததற்கு காரணம்,இதன் மூலமாக மதவாத சத்தி ஆட்சிக்கு வந்து விடக் கூடாதே என்ற ஒரு சிறுபான்மையரின் பாதுகாப்பு கேடையமாக விளங்கிய இத் தலைவனை இன்னும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கலாமா?

மத்தியில் மோடியின் ஆட்சியமைந்தால்,ஒரு பாபர் மசூதியை இடித்தவர்கள்,இன்னும் ஓராயிரம் மசூதியை இடித்து இந்த நாட்டில் மிகப்பெரிய இனக்கலவரத்தை ஏற்படுத்தி ரதக்களரியுடைய கொடூர காட்சியாகத்தான் இந்த நாட்டைப் பார்க்க முடியும் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் கலைஞரும்,ஸ்டாலினும் திரும்ப,திரும்ப உள்ளப்பூர்வமாக சொல்லிவரும் இவர்களா வருங்காலத்தில் மோடியுடன் கை கோர்ப்பார்கள்!

சிந்திக்கவேண்டும்,தி.மு.க அணியைதவிர்த்து மற்றைய அணியின் தலைவனோ,தலைவியோ(கம்னிஸ்ட் நீங்கலாக) ப ஜ காவிற்கோ,மோடிக்கோ எதிராக ஒரு வார்த்தை சொல்கிறார்களா? அல்லது நம் முஸ்லிம் சமுதாய பாதுகாப்பிற்காக எந்த ஒரு வாககுறுதியாவது அவர்கள் வாயிலிருந்து வெளி வருகிறதா?அத்தனை பேர்களுக்கும் அதிகார வெறி,பதவிப்பித்து,எந்த இழிநிலைக்கு சென்றாலும் எனக்கு,பெட்டியும்,தொகுதியும் தந்தாலே போதும் என்று பறந்தலையும் பச்சோந்தி கூட்டம் தானே தற்போது வலம் வருகிறது!

கடைசிவரை தி.மு.க வா? பா ஜா க வா? என்று பெட்டியும்,தொகுதியும் பேரம்பேசப்பட்டு,முடிவில் எங்கே "கனம்" கூடுதலோ அங்கே சென்ற ஒரு நடிகனுக்கு தற்போது தி.மு க. கசக்கிறது. ஊழல நிறைந்த கட்சியாக தெரிகிறது. மோடிதான் மனித புனிதன் என்று இரவில் ஒருவார்த்தையும் விடிந்தபின் தெளிந்தபின் ஒரு வார்த்தையுமாக உளறுகிறார். நான் என்ன பேசினேன் என்று எனக்கே மறந்து விட்டது என்று பலகூட்டங்களில் சொல்லியும் வருகிறார்!

இன்றைக்கு தோன்றிய ஒரு சில புதிய கட்சியின் வேட்பாளர் கள் சுமார் 13 இலட்சம் வாக்காளர்களடங்கிய ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடுகிறார்கள் யார் இவர்களுக்கு ஓட்டு போடுவார்கள்? நல்லவனாக இருந்தால் மட்டும் போதுமா,வல்லவனாகவும் திறமையான் ஆளுமை ஆற்றல் நிறைதவனாக இருக்கிறானா என்பதை அறிய வேண்டுமே. அவருக்கு அந்த அனுபவம் வந்த பிறகே அவரை ஆதரிப்பதற்கு இந்த நாட்டின் சிறுபான்மையர் முதல் அனைவரும் முன்வருவார்கள்.என்னுடைய இந்த உதாரணம் ஆம் ஆத்மி கட்சிக்குதான் 100% சதவீதம் பொருந்தும்!

முதலில் பெரும்பான்மை இனத்தவர்களின் ஓட்டைப்பெற்று திறம்பட ஆட்சி செய்து,சிறுபான்மையரின் பாதுகாப்பை உறுதி செய்யட்டும்.அதன் பிறகு அவர்களை ஆதரிப்பதற்கு பரிசீலிக்கலாம்!அதை விட்டு விட்டு ஏதோ அவசர கோலத்தில்,ஆராயாமல் முடிவெடுத்து நம் வாக்கை அளிப்போமேயானால் தற்போதுள்ள நிலையில்,நம் வாக்கு வீணாகி,அவர் வெற்றியும் பறிபோகும்!

சிறுபான்மையர்களாகிய நாம் தற்போது நம்மை பயமுறுத்தும் ஒரு பூதத்தின் முன்னால் நிற்கிறோம் எந்த நேரத்திலும் நம்மை விழுங்கி விடுமோ என்ற அச்சத்தில் அல்லாஹ்விடம் அஞ்சி நடுங்கி துவா கேட்கிறோம் ,அவன் நினைத்தால் அரை நொடிகூட ஆகாது பெரிய பூததைக்கூட புஸ்வானமாக ஆக்கி விடுவான்!

ஆகவே அன்பு இஸ்லாமிய சமுதாயமே இன்று நமக்கு ஆதரவளிக்கும் ஒரே அணி ஜனநாயக முற்போக்கு கூட்டணியாகும்,வேறெந்த கட்சியும் முஸ்லிம்களுக்கு கொடுக்காத மரியாதையை,நான்கு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி அழகு பார்க்கிறது இந்த ஜனநாயக் முற்போக்கு முற்போக்கு கூட்டணி. மதவாதத்தை முறியடிப்போம் என்று சபதம் ஏற்கும் அணி எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பாக முஸ்லிம் வாழ்வுரிமைக்குறிய 3.5.சதவீத இடஒதிக்கீட்டை கொடுத்தது இந்த அணியின் தலையான கட்சி தி.மு.க. தான்!

முஸ்லிம்களுக்கு இந்த இடஒதிக்கீடு தேவையில்லை என்று அம்மையார் பகிங்கரமாக எதிர்த்தும் நம் இன மக்களுக்காக கொடுத்த அந்த நன்றிக்கடனுக்காகவாவது நாம்அனைவரும் நன்றிமறவா உண்மையான முஸ்லிம் மாந்தர்கள் என்பதற்க்கடையாளமாக நம் வாக்கை ஜனநாயக் முற்போக்கு கூட்டணிக்கு செலுத்துவோமாக!எங்கு திரும்பினும் அந்த அணிக்கு ஆதரவு அல்லாஹ்வின் உதவியால்பெருகிக்கொண்டே போகிறது அந்த முன்னோன் நாம் மகிழும் வெற்றியைத் தந்தருள்வானாக ஆமீன்!

அல்ல்ஹ் அனைத்தும் அறிந்தவன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Rilwan (TX) [14 April 2014]
IP: 198.*.*.* United States | Comment Reference Number: 34351

ஜெகன் கொடுத்த வாக்குறிதிகளை செய்வார் என்று எப்படி நம்புகிறீர்கள் - அவருடைய தந்தை காயல்பட்டினத்திர்க்கு ஒரு துரும்பை கூட எடுத்து போடா வில்லை.. அவருடைய சகோதரியும் எதுவும் செய்ததில்லை .. ஆனால் இருவரும் இன்று பெரும் பட்ட கோடீஸ்வரர்கள் .. இவர்கள் என்ன பரம்பரை பணக்காரர்களா இல்லை கடின உழைப்பாளிகளா ?

ஜெகனுடைய சாதனைகள் என்ன என்று உங்களில் யாருக்காவது தெரியுமா ? என்ன சமூக சேவைகள் இதுவரை செய்துள்ளார் ? இவர் ஆற்றிய தொண்டுகள் என்ன ?

உங்களுக்கு தேவை என்றால் , புஷ்பரயனின் தொண்டுகளை நான் எழுதுகிறேன் .. வாசிக்கும் அளவு பொறுமை இருக்கிறதா ?

ஒருவர் மக்களுக்கு தொண்டாற்றிக்கொண்டு ஒட்டு கேக்கிறார் .. மற்றவர் சொகுசாக இருந்துவிட்டு பதவி என்றது ஒட்டு கேட்டு வருகிறார் .

இருவருக்கும் நிறைய வித்தியாசங்கள் . ஜெகனுக்கு ஓட்டுபோடுவதை விட நோட்டா விற்கு போடலாம்.

DMK has no business in asking for our votes!! cheaters will always be cheats!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. தி மு க விற்கு காவடி தூக்கியது போதும்.
posted by Abdul Wahid .S (Kayalpatnam) [14 April 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34359

எந்த விதத்தில் தி மு கா விற்கு ஓட்டு போடுவது மத சார்பின்மையை நிலை நாட்டும்?

ஈழத்தமிழர்களுக்காக மெரின கடற்கரையில் நாடகம் நடத்தினர். அவ்வப்போது காங்கிரசுக்கு தேவையில்லாத பிரர்ச்சனையை ஏற்படுத்தினார். அதேயே காரணம் காட்டி ஆதரவை திரும்பப் பெற்றார். குஜராத் முஸ்லிம்களுக்காக என்னபண்ணினார்?

இலங்கையில் இராஜபக்சே அரசு பண்ணியது இனப்படுகொலை என்று கூரும் முத்தமிழ் காவலரின் அகராதியில் குஜராத்தில் மோடியின் அரசு நடத்தியது என்னவாம்?

1991 ல் தான் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. 90 களின் கடைசியிலும் 2002 லும் கூட்டனி வைத்தபோது பிஜேபி ஒரு மத வாத கட்சி என்று இவருகுத் தெரியாதா? அல்லது இந்த இடைப்பட்ட காலத்தில் பி ஜே பி தனது மதவாதக் கொள்கையை மாற்றிக் கொண்டதா?

நம் சமூகம் அல்லவா தன்மானத்தை இழந்து இவரின் காலடிகளில் வ்ழுந்து கிடக்கின்றது

கோவை கலவரம் நடந்தது இவரின் ஆட்சி காலத்தில்தானே! முஸ்லிம் சமூகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சமுதாய இளைஞ்சர்களை கொன்று குவித்ததை தி மு க வெறியர்கள் வேன்டுமானால் மறந்திருக்கலாம். நிச்சயமாக ஊண்மையான சமுதாய சிந்தனையாளர்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.

அந்த துப்பாகிச் சூடு நடத்த உத்தரவு வழங்கிய போலிஸ் அதிகாரிக்கு அவார்டு வழங்கி அழகு பார்த்தது இந்த சமுதாய காவலன் அல்லவா!

நகராட்சி தேர்தல் முடிவில் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் மருந்து இருந்தால் கேட்டு வாங்கி தயாராக வைதுக் கொள்ளவும்.

கடற்கரைச் சாலை , இரயில் நடைபாதை இன்று நம் மக்களின் பிரதான பிரச்சனை அல்ல டி சி டபுல் யு பற்றிய தி மு காவின் கொள்கை என்ன? முஸ்லிம் லீக்கினர் விளக்கம் கேட்டு தருவார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved