Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:56:46 AM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14265
#KOTW14265
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 5, 2014
ஜன்சேவா சார்பில் ஈத் மிலன் - பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி! வெளிநாடு - வெளியூர் வாழ் காயலர்கள் 125 பேர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3731 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“இந்தியாவில் வட்டியில்லா வங்கி அமைப்பதை நோக்கி” என்ற இலக்குடன் பயணித்து வரும், ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் நிறுவனத்தின் காயல்பட்டினம் கிளை அலுவலகம், கடந்த ஜூன் மாதம் 17ஆம் நாளன்று துவக்கப்பட்டது.

அந்நிறுவனத்தின் சார்பில், வெளிநாடு வாழ் காயலர்கள் பங்கேற்கும் ஈத் மிலன் - பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, இம்மாதம் 01ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 19.15 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி (தாமரை ஸ்கூல்) வளாகத்தில் நடைபெற்றது.

ஜன்சேவா காயல்பட்டினம் கிளை துணைத்தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, செயலாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், துணைச் செயலாளர்களான எஸ்.இப்னு ஸஊத், எம்.எம்.முஜாஹித் அலீ, பொருளாளர் ‘மாஷாஅல்லாஹ்’ எஸ்.ஏ.கே.தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹாஃபிழ் முஹம்மத் நூஹ் ரியாஸ் இறைமறை வசனங்களை கிராஅத்தாக ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய வாவு எஸ்.காதிர் ஸாஹிப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள - காயல்பட்டினத்தைச் சேர்ந்த மக்களின் நலன் காக்க அனைவருக்குமுள்ள பொறுப்புகள் குறித்தும், அந்நோக்கத்தில் ஜன்சேவாவால் வடிவமைக்கப்பட்ட வருங்கால செயல்திட்டங்கள் குறித்தும் அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.

‘ஜன்சேவா ஒரு கண்ணோட்டம்’ எனும் தலைப்பில், அதன் சென்னை மற்றும் காயல்பட்டினம் கிளைகளின் செயற்குழு உறுப்பினர் எஸ்.இப்னு ஸஊத் உரையாற்றினார்.

வட்டியில்லா பொருளாதாரத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் காயல்பட்டினம் உட்பட இதுவரை 21 கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் ஜன்சேவாவை, நாட்டின் அனைத்து கிராமங்கள் வரை கொண்டு செல்ல வேண்டிய அவசியமுள்ளதாகவும், தொழில் - வாகனக் கடன், சிறு சேமிப்புத் திட்டம், நிரந்தர வைப்புத் திட்டம் உள்ளிட்ட - இக்காலத்தில் பொதுமக்களுக்கு மிகவும் அவசியமான திட்டங்களை காயல்பட்டினம் கிளையில் விரைவில் அறிமுகப்படுத்த ஆவன செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தனதுரையில் கூறினார்.

அடுத்து, ஜன்சேவாவில் தொழில் கடன் வழங்கும் திட்டம் குறித்து செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. எஸ்.ஐ.புகாரீ தொழிற்கடனுக்கு விண்ணப்பிப்பவராகவும், ஜன்சேவா தென்மண்டல இயக்குநர் ஐ.அப்துர்ரஹீம், ‘மாஷாஅல்லாஹ்’ தாவூத் ஆகியோர் ஜன்சேவா சார்பில் அதன் நடைமுறைகளைச் செய்து அவருக்கு கடன் வழங்குவது போன்றும் வடிவமைக்கப்பட்டிருந்த இச்செய்முறை விளக்கம், 30 நிமிடங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து, ஜன்சேவா குறித்த - பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு எஸ்.இப்னு ஸஊத், ஐ.அப்துர்ரஹீம் ஆகியோர் ஜன்சேவா சார்பில் விளக்கமளித்தனர்.



ஜன்சேவா காயல்பட்டினம் கிளை செயலாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது. நிகழ்ச்சியின் துவக்கம் முதல் நிறைவு வரை, ஜன்சேவா காயல்பட்டினம் கிளை துணைச் செயலாளர் எம்.எம்.முஜாஹித் அலீ நெறிப்படுத்தினார்.





இந்நிகழ்ச்சியில், இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், ஜித்தா காயல் நல மன்ற இணைச் செயலாளர் ‘மக்கா’ செய்யித் இப்றாஹீம், அதன் செயற்குழு உறுப்பினர் ‘மக்கா’ ஒய்.எம்.ஸாலிஹ், துபையிலிருந்து லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம், அதன் உறுப்பினர் எஸ்.ஓ.பி.ஷக்காஃப், ஹாங்காங்கிலிருந்து ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் அப்துல் அஜீஸ், அதன் நடப்பு செயலாளர் செய்யித் அஹ்மத், விளக்கு யு.நூஹ், தம்மாம் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் இம்தியாஸ், சீனாவிலிருந்து அப்துல் அஜீஸ், எம்.ஏ.இப்றாஹீம், அமெரிக்காவிலிருந்து கே.எம்.கிதுரு முஹம்மத் அப்பாஸ் உட்பட வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் காயலர்கள் சுமார் 125 பேர் கலந்துகொண்டனர்.

காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா தலைமையில் சுமார் 15 பெண்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. பங்கேற்ற அனைவருக்கும் தேனீர் மற்றும் சிற்றுண்டி உபசரிப்பு செய்யப்பட்டதுடன், ஜன்சேவா குறித்து விளக்கும் வண்ணப் பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயல்பட்டினம் ஜன்சேவா கிளை துணைப் பொருளாளர் ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துல் ரஹ்மான், நிர்வாகிகளான எல்.டி.சித்தீக், ஏ.பி.டி. ஜாஹிர் ஹுஸைன், எல்.கே.கே.லெப்பைத்தம்பி, எல்.கே.எஸ்.இம்தியாஸ் அஹ்மத் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அபிமானிகள் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து, ஜன்சேவா தென்மண்டல இயக்குநர் ஐ.அப்துர்ரஹீம் காயல்பட்டணம்.காம் இடம் பேசுகையில் தெரிவித்ததாவது:-

வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வாழும் காயலர்களிடமிருந்து ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிதி திரட்டுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். நிதி திரட்டுவது என்றால் ஏதோ நன்கொடை திரட்டுவதாகக் கருதிவிடக் கூடாது. இது லாபம் வழங்கும் வகையிலான நிதி திரட்டல்.

பொதுவாக வெளிநாடுகள் - வெளியூர்களில் வசிக்கும் காயலர்கள் தமக்கென வங்கிக் கணக்கு வைத்து, அதில் தமது பணத்தை வைப்பில் வைத்திருப்பர். எடுத்துக்காட்டாக, ஒருவர் தனது வங்கிக் கணக்கில் 1 லட்சம் ரூபாய் வைப்பில் வைத்துள்ளார் எனில், அதற்கு வட்டியும் வரும். ஆனால் இஸ்லாமிய மார்க்க சட்டப்படி அந்த வட்டிப் பணத்தைப் பயன்படுத்த இயலாது.

இதனைத் தவிர்த்திட, அந்த வங்கிக் கணக்கிலிருந்து கனிசமான தொகையை - வட்டியில்லாத செயல்திட்டத்துடன் இயங்கும் ஜன்சேவாவில் டெபாசிட் செய்தால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் லாபக் கணக்கிலிருந்து, அவர் ஜன்சேவாவில் வைப்பு செய்த தொகைக்கேற்ப லாபம் வழங்கப்படும்.

இதுகுறித்த மேலதிக விபரங்களைப் பெற, காயல்பட்டினம் ஜன்சேவா கிளை அலுவலகத்தை - அதன் வேலை நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் தயங்காமல் அணுகலாம்.


இவ்வாறு அவர் கூறினார்.

படங்கள்:
M.S..அப்துல் அஜீஸ்
(குவாங்ஸூ - சீனா)


ஜன்சேவா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 15:01 / 05.08.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஹம்திலில்லஹ் மிக அருமையானதிட்டம்! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [05 August 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36239

ஹம்திலில்லஹ் மிக அருமையானதிட்டம்! நல்ல முறையில் வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வர வல்ல அல்லாஹ்வை வேண்டிக்கொள்வோமாக!

கடந்த சுமார் இருபது வருடங்களுக்குமுன்னால் ரியாத் காயல்நல மன்றத்தாரால் இப்படி ஒரு வட்டில்ல்லா உதவி திட்டத்தை கொண்டுவந்து நம்மூரில் வட்டியில் விழுந்து தம் வாழ்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்களை சற்று கைதூக்கி விட இத் திட்டம் பயன்படும் என்ற நோக்கத்தோடு அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் குறைந்தது பத்தாயிரம் ரூபாயை முதலீட்டு உதவியாக செலுத்தவேண்டும் என்று முடிவெடுத்து அனைவர்களின் சம்மதத்தையும் பெற்றோம். அனைவர்களும் தரவும் தயாராகினர்!

செயலாக்கும் திட்டத்தை வகுக்கும்பொழுது அதில் பல சிக்கல்களை சந்திக்க நேரிட்டது,பல ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்து கொண்டு பெரிய தொகையை பராமரிப்பது சற்று கடினமாக இருந்ததால் அந்த நல்ல உதவித்திட்ட்டம் கை கூடாமல் போய்விட்டது.

ஏழ்மையின் பளுவை நம்மால் இயன்ற வரை குறைக்க செய்கின்ற இத்திட்டத்திற்கு வசதிபடைத்தவர்கள் முதல் தங்களால் குறைந்தபட்சம் உதவித்தொகை முதலீட்டார்கள் வரை முதலீடு செய்து ஒத்துழைக்க வேண்டும்!.

எத்தனையோ குடும்பங்கள் அடுத்தவர்களிடம் உதவிக் கேட்பதை தவித்து தங்கள் குடும்ப மானம்,கௌரவம் காப்பாற்ற பட வேண்டுமே என்ற தன்மானத்தில் வட்டியில் போய் விழுகிறார்கள்.அந்த வட்டி கொஞ்சம் கொஞ்சமாக கேன்சரைவிட வேகமாக தம் முதலீட்டையே அரித்தெடுத்ததோடல்லாமல் வட்டியினாலையே தம் வாழ்க்கை மூழ்கிவிடக்கூடிய அபாயத்தின் எல்லைக் கோட்டில் இருப்பது எல்லோர்கண்களுக்கும் தெரியாத ஒரு பரிதாப பிம்பமாகும்!

புண்ணிய நோக்கத்தை குறிக்கோளாக கொண்டு இயங்க இருக்கின்ற இந்த நல்லதிட்டம் எந்த நெருக்கடியும் இல்லாமல் நடந்திட அதனால் பல வரியவர்கள் பயன்பெற, கண்ணியமிகு காயலின் நற்பெயரும் நம் வட்டார முஸ்லிம் ஊர்களால் போற்றி புகழ்ந்திட அவர்களின் ஊர்களிலும் இப்புண்ணியபணி பறந்து தழைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்திடுவானாக ஆமீன்!

நாம் ஒருவருக்கு ஒரு உதவி செய்தால் இறவன் நமக்கு பத்துபேர்களை உதவி செய்ய ஏவுவான் என்பது இறைமொழி. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved