Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:27:00 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14322
#KOTW14322
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 16, 2014
ஒரே மாதத்தில் 16 பேர் மரணம்! காயல்பட்டினம் பகுதியில் தொடரும் புற்றுநோய் பலிகள்!! கெமிக்கல் தொழிற்சாலையில் புதிய யூனிட் தொடங்க எதிர்ப்பு!!! - தினகரன் நாளிதழ் செய்தி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4438 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் சமீப காலத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்தும், DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்தும் தினகரன் நாளிதழின் திருநெல்வேலி பதிப்பு இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:

தினகரன் (நெல்லை பதிப்பு) - ஆகஸ்ட் 16, 2014

காயல்பட்டினம் பகுதியில் ஒரே மாதத்தில் 16 பேர் புற்று நோயால் இறந்ததால் அப்பகுதியில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் புதிய யூனிட் தொடங்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் உள்ள 9 ஆயிரம் வீடுகளில் கடந்த 2011ல் சர்வே நடத்தப்பட்டது. இதில் 450 பேர் 20 வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததும், ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு சுவாச கோளாறு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நோய்க்கான காரணம் குறித்து அறியும் ஆர்வம் அதிகரித்தது. அருகில் உள்ள ஆலையில் வெளியாகும் வெண்ணிற புகை நெடியுடன் நகரை சூழ்வதும், செந்நிற கழிவு கடலில் கலப்பதும் பொதுமக்களை கலக்கமடையச் செய்தது. நகரையொட்டியுள்ள சிங்கித்துறை கொம்புத்துறை மீனவக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் இவ்வித பாதிப்புகள் இருந்தன. அவர்கள் கடலில் இறங்கி வேலை செய்ததால் தோலில் அரிப்பும் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மக்கள் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை (கெப்பா) தொடங்கி அரசுக்கு மனுக்கள் அனுப்பினர். இந்நிலையில், 2011ல் அருகில் உள்ள ஆலையில் சில யூனிட்களை விரிவாக்கம் செய்யவும், புதிய யூனிட் உருவாக்கவும் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில் புதிய உருவாக்கமும், விரிவாக்கமும் கூடாது என்று காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காயல்பட்டினத்துக்கும் ஆறுமுகநேரிக்கும் நடுவே ஓடி கடலில் கலக்கும் உப்பாற்று ஓடை தண்ணீர் தொழிற்சாலைக் கழிவால் செந்நிறத்துடன் காணப்படுகிறது. இந்த மாசுபட்ட நீரால் கடற்கரையில் செழித்து வளர்ந்திருந்த சதுப்புக்காடு அழிந்துவிட்டது. அப்பகுதியில் படகுகளை நிறுத்தி தொழில் செய்த மீனவர்கள் வேறிடத்துக்கு சென்று விட்டனர். ஆண்டு முழுவதும் தேங்கிய நீரை குறிப்பிட்ட காலகட்டத்தில் மொத்தமாக திறந்து விடுவதால் பல மைல் சுற்றளவுக்கு மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இறக்கின்றன. இப்பகுதியில் இயற்கையாக வளரும் கடற்பாசியும் கருகிவிடுகிறது.

முன்பு இத்தொழிற்சாலைக்கு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வினைல் குளோரைட் மோனோமர் என்ற வேதிப்பொருள் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்பட்டது. இது கசிந்தால் அப்பகுதியில் வாழும் உயிர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவது உறுதி என்பதால் பல ஊர் மக்களும் திரண்டு தடுத்தனர். அதன்பின்பு அந்த வேதிப்பொருளை கொண்டு வருவதை நிறுத்தியதாக கூறினாலும், காற்றில் கலந்துவரும் நச்சுக்கசிவால் தங்களுக்கு இன்னமும் கண் எரிச்சல் ஏற்படுவதாக சிவன் கோயில் அருகே உள்ள மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் கூறினர்.

இது குறித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர் பஷீர் கூறுகையில், எங்கள் பகுதியில் கடலோரம் அமைந்துள்ள தொழிற்சாலையில் டிரை குளோரோ எத்தலின், பிவிசி, சிபிவிசியும் பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரி மூலம் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை இங்கிருந்து குரோமியம், காட்மியம், அயன் ஆக்சைட் உள்ளிட்ட கழிவுகள் கடலில் கலந்து விடப்படுகின்றன. இதனால் மீன் வளம் குறைந்ததோடு, கழிவை உண்ட மீன்கள் மூலம் மக்களுக்கு புற்றுநோய் வருகிறது. மேலும், கடலில் இறங்குவதால் கண் எரிச்சலும், புகையை சுவாசிப்பதால் தோல் நோயும் பரவுகின்றன. இப்பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2001 & 2002ல் காஸ்டிக் சோடா தயாரிப்பில் உருவாகும் பிரதான கழிவான குளோரின் வாயு மேகமூட்டம் போல் திரண்டு பெருவாரியானவர்களுக்கு சுவாசக்கோளாறு, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அதேபோல், முன்பு தொழிற்சாலையிலிருந்து வெளியான பாதரசக்கழிவை நிறுத்திவிட்டதாக நிர்வாகம் கூறினாலும், அதன் பாதிப்பு நீண்ட நாள் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தொழிற்சாலையின் புகைக்கூண்டுகள் உயரம் குறைவாக இருப்பதால் அதிகாலை 4, 5 மணிக்கு புகை பக்கத்து ஊர்களை சூழ்கிறது. இது குறித்து பொதுமக்கள் போராடியதன் விளைவாக 2012ல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்களே வசிக்க முடியாது

இது குறித்து தமிழன் முத்து இஸ்மாயில் கூறுகையில், புதிய திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அறிக்கையை அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு மூலம் தொழிற்சாலை தயாரிக்க வில்லை. மக்களிடம் முழுமையாக கருத்து கேட்கப்படவில்லை. ஏற்கனவே கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு நிலவுகிறது. புதிய யூனிட் தொடங்கினால் இப்பகுதியில் மக்களே வசிக்க முடியாது. எனவே தீவிரமான போராட்டத்தில் ஈடுபட அனைவரும் தயாராகி வருகின்றனர் என்றார்.

28ம் தேதி பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணை

மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நிபுணர் குழுவின் ஆய்வில் சுற்றுச்சூழல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டும் கூடுதல் உற்பத்தி மற்றும் புதிய யூனிட்களை தொடங்க அந்த தொழிற்சாலைக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் இறந்த 16 பேருக்கு புற்றுநோய் அறிகுறி இருந்துள்ளது. வரும் 28ம் தேதி பசுமை தீர்ப்பாயத்தில் நடக்கும் விசாரணையில் இந்த மருத்துவ ஆய்வறிக்கையை காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் அளிக்க உள்ளனர். காயல்பட்டினம் தவிர, பக்கத்து ஊர் உப்பளத்தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்களும் புதிய யூனிட்டை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் அனுப்பியுள்ளனர்.



Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [16 August 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36460

எங்களுடைய உணர்வுகளை உலகுக்கு எடுத்துக் கூறிய ஊடக சகோதரர்களுக்கு நன்றிகள் பல.

எங்கள் ஊரில் புற்று நோயால் பலியான எண்ணிக்கை அதிகம். பலர் தங்களுக்கு புற்றுநோய் இருப்பதையும், புற்றுநோயால் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தார் இதன் உண்மையை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர்.

மற்ற ஊர் மக்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா ... கையில் காலில் ஏதும் கட்டி வந்தாலோ, வயிறு வலித்தாலோ, மூக்கில் இருந்து இரத்தம் வடிந்தாலோ.. மற்ற மக்கள் மருந்து மாத்திரை எடுத்து இலேசாக சென்று விடுவார்கள். எங்கள் ஊர் மக்களுக்கோ இது கான்சர் கட்டியாக இருக்குமோ, குடல் புற்றுநோயாக இருக்குமோ, இரத்த புற்றுநோயாக இருக்குமோ என்று அஞ்சி அஞ்சி செத்துக்கொண்டு இருக்கின்றார்கள். காரணம் தங்களின் வீடுகளிலும், பக்கத்து வீடுகளிலும் புற்று நோயாளிகளை கண்டு கண்டு வருவதால். இப்படி அனுதினமும் பயந்து பயந்து சாவாமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா.

எங்களுடைய அழுகுரல் ஆளும் வர்க்கத்திற்கு கேட்கவில்லையா.

எப்பா.. DCW .... பல பல கோடி சம்பாதிக்கின்றியே, அதில் சில வற்றை முறையான மாசு கட்டுப்பாட்டுக்கு செலவு செய்தால் என்ன.? இப்படி சுற்றுபுறத்தில் வாழும் மக்கள், கால்நடைகள், சுற்றுக் சூழல் ஆகியவற்றை சாகடித்தா சம்பாதிக்க வேண்டும்.

இருப்பதோ, எந்த உயிர் இனத்திற்கும் தீங்கு செய்யக்கூடாது, சிறு எறும்புக்கும் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்ற ஜெயின் இனத்தில்.ஆனால் செயல்பாடோ... என்னத்தை சொல்ல..?!!

இதற்காக பாடுபடும் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை (கெப்பா) உறவுகளுக்கு நன்றிகள் என்று மட்டும் கூறி பிரிக்க விரும்பவில்லை. வல்ல அல்லாஹ் அருள் செய்யட்டும்.

வல்ல இறைவா எங்களை தீங்குகளை விட்டும் காப்பாயாக. நிம்மதியான வாழ்வை வழங்குவாயாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அல்லாஹ் நமதூர் மற்றும் நம் அண்டைய பகுதி மக்களையும் காப்பாற்றி காவால் புரிவானாக!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [17 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36473

காயல் வாசி மக்கள் மட்டுமே, மாசுகட்டுபாடு கட்டுக்கடங்க்காமல் கரைபுரண்டோட காரணமாக இருப்பதற்கு DCW முக்கியகாரணம் என்று முழுமையாக எங்களையே குறிவைத்து தாக்குகிறார்கள்.என்று நம் ஆதார குற்றச்சாட்டை குறைகூறியும் மழுப்பியும் வந்த DCW நிர்வாகம், தற்போது பல பத்திரிக்கைகள் இந்த அவலத்தை உண்மை நிலையை உலகறியவெளிச்சச்ம்போட்டு காட்டிக்கொண்டிருக் கிறார்களே, இதற்க்கு இந்த நிர்வாகம் என்ன சொல்கிறது.

ஆகவே அன்பு காயல் மக்களே இந்த நிர்வாகத்தால் பாதிப்புக்குள்ளான நமது பகுதி மக்கள் மட்டுமல்லாது பல ஊடக சக்திகளும் சேர்ந்து எதிர்த்து கொண்டே இருந்தால்தான் மிகப்பெரிய இந்த நிர்வாகத்தை ஓரளவாவது உணரவைக்க முடியும். அடிமேல் அடி அடித்தால்தான் அம்மியும் நகரும் என்கின்ற உணர்வுபூர்வமான பழமொழிக்கேற்ப நாம் அனைவர்களும் ஒரே அமைப்பான "KEPA " வின் கீழ் ஒற்றுமையாக ஒரிங்கிணைந்து தொடர்ந்து நம் எதிர்ப்பை தெரிவித்து போராடிக்கொண்டே இருப்போமாக!

வல்ல இறைவன் நம் முயற்சியை வெற்றியாக்கித்தந்து நமதூர் மற்றும் நம் அண்டைய பகுதி மக்களையும் காப்பாற்றி காவல் புரிவானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [17 August 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36484

அஸ்ஸலாமு அலைக்கும்

நாம் இன்னும் படு தீவிரமாகவே போராட வேணும் ......டிவி / பத்திரிக்கை ( மீடியாக்கள் ) மற்றும் பல இணைய தளங்களும் நமக்கு சாதகமாகவே இருந்துமா ....நம் தமிழக அரசு ...பொது மக்கள் மீது அக்கறை கொள்ளாமல் இருந்து வருகிறது ......காரணம் என்னவோ ??

நம் தமிழக அரசுக்கு நம் ஊர் மக்கள் மீது அக்கறை இல்லையா ?? என்ன ?? ( நம் ஊர் பொது மக்களின் உயிர் மீது தமிழக அரசுக்கு கொஞ்சமும் அக்கறை இல்லையோ .....)

நம் ஊர் பொது மக்களின் கை எழுத்தை வாங்கி தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கும் & கவர்னர் அவர்களுக்கும் அனுப்ப வேணும் .....இதில் பலன் உண்டா என்று பார்ப்போம் .....

நாம் இன்னும் பல அரசியல் கட்சி & மீடியாக்கள் '''மூலமாக படு தீவிரமாக களம் இறங்க வேணும் .....அப்போது தான் இது சரி பட்டு வரும் .......

இந்த நாசமா போன >>>> DCW <<<< தொழிற்சாலைக்கு கேடு எப்போது தான் வருமோ .......

வல்ல இறைவன் தான் நமக்கு முழு உறுதுணையாக இருக்க வேணும் ......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved