Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:12:38 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14360
#KOTW14360
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 23, 2014
காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ள கோவில் குறித்து பதட்டம்! ஆக்கிரமிப்பிலுள்ள கோயில், கோட்டைச் சுவரை அகற்ற இரு தரப்பினரும் ஒப்புதல்!! (இறுதிச் செய்தி)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 10005 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் கே.எம்.டி. மருத்துவமனைக்கு அருகிலுள்ள சாலையோரத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென கோவில் ஒன்று அமைக்கப்பட்டது. இது குறித்த சர்ச்சை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், இன்று நள்ளிரவு அதன் ஓலைக் கூரை கட்டுமானம் தீப்பற்றி எரிந்ததாகத் தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலையில் ஹாலோ ப்ளாக் கற்கள் கொண்டு ஒரு சிலர் உடனடியாக கோயிலைக் கட்டியுள்ளனர். தகவலறிந்து காவல்துறையினரும் நிகழ்விடம் வந்து குவிந்தனர். எனினும் கட்டிடப் பணிகள் உ.டனடியாக நிறுத்தப்படவில்லை.















இதனைக் கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட பொருளாளர் வாவு ஷம்சுத்தீன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர தலைவர் வாவு நாஸர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் ஆஸாத், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் முர்ஷித், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர நிர்வாகி ஜப்பான் சுலைமான் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



























அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.துரை நிகழ்விடத்திற்கு விரைந்து வந்தார்.



இரு தரப்பிலும் ஆறு பேர் அழைக்கப்பட்டு, திருச்செந்தூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் 11.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.துரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் மு.தமிழ்ராஜன், வட்டாட்சியர் நல்லசிவன், நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவிப் பொறியாளர் திருவேங்கட ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒரு தரப்பில், வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் பிரபு சுல்தான், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர தலைவர் ஷம்சுத்தீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர நிர்வாகி ஷம்சுத்தீன் ஆகியோரும்,

மறு தரப்பில், காயல்பட்டினம் நகர்மன்ற 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், அதன் நிர்வாகி பி.பி.சக்திவேல், ஜெயசிங், மனோகரன், மகேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

இச்சமாதானக் கூட்டத்தின் நிறைவில்,

“காயல்பட்டினம் தென்பாகம் கிராமம், புல எண் 494 நெடுஞ்சாலைத் துறை புறம்போக்கில் அமைந்துள்ள மாவு இசக்கியம்மன் கோவில் மற்றும் திரு. வாவு செய்யது அப்துல் ரஹ்மான் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள மதில் சுவரையும், நெடுஞ்சாலைத் துறை மூலம் இன்றே அகற்றிட கீழே கையொப்பமிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.”

என ஒப்பந்த வாசகம் வடிவமைக்கப்பட்டு, இரு தரப்பினரும் அதன் கீழ் கைச்சான்றிட்டனர்.







ஒப்பந்த நகல்





நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நிகழ்விடத்தில் இருந்தனர்.

பதட்டம் துவங்கியதிலிருந்து, பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை, திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டினம் வழியாக வர வேண்டிய பேருந்துகள் அனைத்தும் அடைக்கலபுரம் வழியாக திருப்பி விடப்பட்டதும், பதட்டத்திற்குட்பட்ட பகுதியைச் சுற்றி காவல்துறையினரால் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

படங்களுள் உதவி:
A.K.இம்ரான்
மற்றும் ஹாஃபிழ் S.A.ஃபைஸல்


[கூடுதல் தகவல்களும், படங்களும் இணைக்கப்பட்டன @ 19:48 / 23.08.2014]

கடைசிச் செய்தி: ஒப்பந்தப் படி, இன்று 16.00 மணிக்குத் துவங்கி, 17.15 மணி வரை, ஆக்கிரமிப்பிலுள்ள கோட்டைச் சுவர் மற்றும் கோயில் ஆகியன முற்றிலும் இடித்து அகற்றப்பட்டன. (படங்களுடன் கூடிய விபரம் தனிச்செய்தியாக வெளியிடப்படும்.)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அமைதியான அணுகுமுறை தேவை!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [23 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36562

கருத்தெழுதும் அன்பு காயல் சகோதரர்களே,தயவு செய்து முழுமையான உண்மையான செய்திகளை தெரிந்தபின் கருத்தெழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.செவிவழி செய்தியையோ அரைகுறை செய்தியையோ ஆதாரமாக கொண்டு உணர்ச்சி வசத்தால் வார்த்தைகளை சிந்தி எழுதிவிடவேண்டாம்!

இப்பிரச்சனை இரு சமூகத்தார்களின் மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிகிறது ஒருவேளை உணர்ச்சி வசத்தால் உதிரும் வார்த்தையால் கூட புது புது பிரச்னை விஷுவரூபமாக வெடித்துவிட வழிவகுக்கும்!

ஆகவே அன்பு நெஞ்சங்களே சற்று அமைதியாய் அனைத்தையும் அவதானித்து ஆக்கபூர்வமான நம் ஒத்துழைப்பை சீரிய அணுகுமுறையில் செலுத்துவொமாக!

"சீறும்பாம்பும் சாகனும் சிலம்பும் சேதமாகக்கூடாது!" அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:..காவி பயங்கரவாதம் ஒழிக...
posted by MAC.Mujahith (Mumbai) [23 August 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 36563

நாம் இதற்கென்று (KEPA அமைப்பை போல) ஒரு தனி கண்காணிப்பு மற்றும் தடுப்பு அமைப்பு,குழு ஒன்று நம் ஊரில் அமைத்து இது போல் இனி நம் ஊரில் எங்கும் எப்போதும் நிகழா வண்ணம் நாம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தால் தான் நமக்கு விடிவு காலம் கிடைக்கும்.

MAC.முஜாஹித்
மும்பை.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [23 August 2014]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 36564

முகநூலில் பலவிதமான செய்திகள் உலா வருகின்றன. உங்கள் செய்தியில் தெளிவில்லை.

நள்ளிரவில் எவ்வாறு தீப்பற்றி எரிந்தது ? தீ விபத்து பற்றி உடனடியாக காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டதா? காவல்துறை வருவதற்கு முன்பாக , அங்கு எவ்வாறு புதிய கட்டிடம் உடனடியாக எழுப்பமுடியும் ? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்?

சிலநாட்களுக்கு முன்னர்தான் 'ரத்னாபுரி கோயில்' நாசவேலை நடந்தது. அந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இது அப்பகுதியால் மத நல்லிணக்கத்திற்கு கேடுவிளைவிக்கும் செயலாகவே தெரிகிறது.

மாநில புலனாய்வு துறை போதிய விழிப்புணர்வுடன் செயல்பட்டு , அசம்பாவிதம் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் கயவர்களை கண்டறிந்து, இத்தீய செயல்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும்.

சுற்றுப்புற சூழலுக்கு கேடுவிளைவிப்பவர்களும் மத நல்லிணக்கத்திற்கு கேடுவிளைவிப்பவர்களும் கைக்கோர்க்கவண்ணம் அரசு அணைபோடவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அனைவரும் அமைதியாக வாழ வழி வகுப்போம் !
posted by K.V.A.T.HABIB (Qatar) [23 August 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 36565

காயல்பட்டணத்தில் ஒரு சிலரால் திட்டமிட்டு இரண்டு சமுதாய மக்களையும் சதி வலையில் சிக்க வைத்து , பெரும் கலவர பூமியாக்க மாற்ற நினைத்த அனைத்து செயல் களையும் கண்டுபிடித்து ,களைந்து , அமைதிக்கு வழி வகுத்து , இரண்டு தரப்பினருக்கும் சுமூகமான நல்லிணக்கத்தை உருவாக்கி தந்த அரசு தரப்பு அதிகாரிகள் , மாவட்ட நிர்வாகம் . வட்ட நிர்வாகம் , முஸ்லிம் லீக் மாநில தலைமை , அதன் பொதுச்செயலாளர் மற்றும் அவர்களோடு ஒற்றுமையாக நின்ற ஊர் பொது மக்கள் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , இறைவனுக்கும் எண்ணிலடங்கா நன்றி....அல்ஹம்துலில்லாஹ்

இணங்கி வாழ்வோம்...
இல்லாதவருக்கு வழங்கி வாழ்வோம்....
இறை ஒருவனையே வணங்கி வாழ்வோம் !!!

மகிழ்வுடன்..
கே.வீ.ஏ.டி.ஹபீப்
கத்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by mohmed younus (kayalpatnam) [23 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36566

வகுப்புவாதிகள் திட்டமிட்டு அமைதியின் இருப்பிடமாக இருக்கும் காயல்பதியை கலவர பூமியாக மாற்ற முயற்சித்த முயற்சியை முறியடித்த இறைவனுக்கே எல்லா புகழும்!.

அவர்கள் வேண்டும் என்றே திட்டமிடுகிறார்கள் என்றால் அதை முறியடிக்க அதைவிட அழகான, நாம் மார்க்கம் சொல்லும் திட்டம் நம்மிடம் இருக்க வேண்டும்,வேக உணர்சிகளுக்கு அடிபணியாமல் விவேகத்திற்கு முக்கியம் கொடுத்து செயல்படவேண்டும். இன்று பெரியோர்கள்,விவேகம் நிறைந்த அரசியல் கட்சிகள் எடுத்த சமயோசித முடிவால் வகுப்புவாதிகளின் சூழ்சிகள் முறியடிக்கப்பட்டு இருக்கின்றன.

குஜராத்தை மாடல் ஆக்கி நாடு பூராவும் குழப்பம் விளைவிக்க வகுப்புவாதிகள் அலைந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற உணர்ச்சி கொந்தளிப்பான நிகழ்வுகளில் ஒன்று பட்டு எந்தவித அசம்பா விதத்திற்கும் இடம் கொடாமல் செயல் ஆற்றினாலே போதும், வகுப்பு வாதிகள் அடங்கி ஒடுங்கி விடுவர்.

உற்ற தோழர்களும் எதிர்த்த போதும் உத்தம நபியின் (ஸல்) உன்னத ஹுதைபியா உடன்படிக்கை தான் அன்று மக்காவை வெற்றி கொள்ள வைத்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போகமாட்டான்..
posted by mackie noohuthambi (chennai) [23 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36567

விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போக மாட்டான். கெட்டுப் போகிறவன் விட்டுக் கொடுக்க மாட்டான்.

சுமுகமான முடிவுக்கும் உடன்பாட்டுக்கும் வருவதற்கு, விட்டுக் கொடுப்பது மிக்க அவசியம். தங்களுக்கு சில இழப்புக்கள் இருந்தாலும் இருசாராரும் விட்டுக் கொடுக்க முன் வந்து சமாதான உடன்படிக்கையில் கை எழுத்து இட்டுள்ள செய்தி மகிழ்ச்சியை தருகிறது. இதில் யார் தோற்றார்கள் யார் ஜெயிச்சார்கள் என்ற சர்ச்சையில் ஈடுபட்டு அதற்கு கருத்து பதிவுகள் செய்வது மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும்.

வாவு குடும்பத்தினருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. நீயா நானா என்று போட்டுப் பார்க்க நினைத்தால் வீண் வழக்கு வம்புகள் செலவுகள் பகைகள் வளரும். அது இரு சாராருக்கும் நல்லதல்ல.

சுமுகமான உடன்பாட்டுக்கு வருவதற்கு துணை புரிந்த அல்லாஹ்வுக்கு நன்றி சொல்வோம். அதற்கு களம் அமைத்துக் கொடுத்த கோட்டாட்சியர் அவர்களுக்கும் சகோதரர் அபூபக்கர் அவர்களுக்கும் முஸ்லிம் ஐக்கிய பேரவை செயலாளர் பிரபு சுல்தான் அவர்களுக்கும் மற்றும் எல்லா பிரமுகர்களுக்கும் சமாதானம் விரும்பும் நல்லுள்ளங்களுக்கும் நமது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்வோம்.

பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம். தீராத கோபம் யாருக்கு லாபம்.

தொடர்ந்து இருசாராரும் உடனடியாக அந்த சமாதான ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஆவன செய்வதையும் அவர்கள் கண்காணித்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும்படி வேண்டிக் கொள்கிறோம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...allah is greatest of all
posted by m.n.syed ahmed sahib thamby (tuticorindist) [23 August 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36568

அல்லாஹ் மிகப் பெரியவன் ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by thanga thamby kadersahib (Saudi Riyadh) [23 August 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36569

Tamil nadu cm amma ukkum mekha nandri


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ஒற்றுமையுடைய ஒருங்கிணைப்புக்கு கிடைத்த வெற்றி!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [23 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36570

அல் ஹம்திலில்லாஹ்! நமக்குள் அரசியல் முதல் ஆன்மீகம் வரை எத்தனை வகையான இரு கருத்துக்கள் இருந்தாலும் அது எப்படிப்பட்ட தீவிரத்தன்மையுடன் சில நேரங்களில் கொழுந்துவிட்டு எரிந்தாலும் அத்தனையும் நமதூருக்குள், நம்மின மக்களுக்குள் நடக்கின்ற மனமாட்ச்சரிய சம்பவங்கள் தான். அந்த தற்காலிக கருத்து வேற்றுமை காலமெல்லாம் நீருபூத்த நெருப்பாய் நிலைத்து நிற்கும் என்று தப்புக்கணக்குப் போட்ட சதிகார எண்ணமுடையவர்களுக்கெல்லாம் சம்மட்டி அடியாக அனைத்து காயல் சகோதரர்களும் கைகோர்த்து களத்தில் நின்ற காட்சி!

இந்த ஒற்றுமைபோதும் நமதூரைக்காக்க, நம் மக்களுக்கு வரவிருக்கின்ற அபாயத்தை நீக்க,,எந்த நேரத்திலும் நாங்களனைவர்களும் ஒருதாய்ப்பெற்ற பிள்ளைகளாய் ஒன்றுசேர்ந்திடுவோம் என்பதை இவ் உலகிற்கு பறைசாற்றி விட்டோம் .இந்த ஒற்றுமை உணர்வை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உணர்த்திய வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்!

காயல்மா நகரத்தில் இப்படியொரு கட்டுப்பாடான ஒற்றுமையா?புற்றீசல்கள் போல் எங்கிருந்துதான் பறந்து வந்ததோ இந்த படை என்று பேசாமடந்தையாய் பிரமித்து நின்றார்களாம் வெளியூர் சகோதரர்களும், காவலுக்கு நின்ற காவலர்களும்,என்கின்ற செய்திகள் தேனாராய் எங்கள் இதயத்தில் பாய்ந்து இனித்தெடுத்து விட்டது..மாஷா அல்லாஹ்!.

இப்படை பலத்தால் இனி எந்த கவலையும் கொள்ளாதே இனிய காயல் சகோதரா. உனக்கொரு அநியாயம் என்றால் ஓராயிரம் கைகள் உதவிக்கு ஓடோடிவரும் இனி நம்மூரைக் காக்க நாம் எடுக்கும் எந்த ஒரு நடுநிலை செயலுக்கும் எப்போதும் வெற்றி,வெற்றி வெற்றிதான்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. UNITY
posted by JAHIR HUSSAIN VENA (Bahrain) [23 August 2014]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 36572

அல்ஹம்து லில்லாஹ்

Thanks to all those involved to back to normal.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. எது ஆக்கிரமிப்பு...?
posted by shuaib (jeddah) [23 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36573

அங்கே ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டது கோயிலா அல்லது கோட்டைச்சுவரா...?

வாவு வீட்டு இடத்தை ஆக்கிரமித்துதானே அப்பொழுது கோயில் கட்டினதாக அறிந்து வைத்துள்ளோம். அப்படியிருக்க ஆக்கிரமிப்பு கோட்டைச்சுவர் என்ற சொல் ஏன்...?

விவரம் தேவை...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. வீண் பதட்டம் வேண்டாம்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [23 August 2014]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 36574

அம்மனின் மேற்கூரை அடிக்கடி பற்றிக் கொள்வதும் (அதுவும் நள்ளிரவில் மட்டுமே) அப்புறமா காலையில் புதுப்பொலிவுடன் சற்று விசாலமான புதுக்கூரை வேய்வதும் வாடிக்கையான ஒன்றே!

எப்படியும் முட்டி மோதிக்கொள்ளவேண்டும் என்பதில் நம் மக்களுக்கு உடன்பாடு இல்லை! அதை வழிபடுவோர் புறம்போக்கு நிலம் என்பதால் சற்று வழி விட்டு சாதகமான இடத்தில் கற்கூரை அமைத்து அதனுள் அம்மனை இருத்தி அழகுபார்க்கட்டும். அதுபோல நில உரிமையாளரும் ஆக்கிரமிப்பு பகுதியை விடுத்து அவருக்குரிய நிலத்தில் கோட்டை கட்டிக்கொள்ளட்டும். இனி இதை ஊதிப் பெரிதாக்கி ஊருக்கு பங்கம் விளைவிக்க வேண்டாம்.

இத்தனை நாட்கள் இல்லாத தைரியமும், வேகமும், திடீர் ஹாலோ பிளாக்கும், சிமெண்ட், மணல் என ஒருசாரார் கோவில் கட்டத் துணிந்தது மத்தியில் தமக்கு சாதகமான ஆட்சி என்பதால் கூட இருக்குமோ எனும் சந்தேகம் நடுநிலையாளர்கள் மனதில் எழுந்துள்ளது.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [23 August 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36575

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஊரில் பல காலம் தொட்டு அனைத்து மதத்தினர்களும் ஒற்றுமையுடன் சந்தோசமாகவே இணைத்து வாழ்ந்து வரும் இவ் வேலையில் இப்படி பட்ட நாசகார வேலை செய்பவர்களை சட்டம் சும்மா விடவே கூடாது ..... பிடித்து சரியான தண்டனை தான் ......இது போன்ற மத நல்லிணக்க வேலைகளை ஒற்றுமையான ஊர்களில் செய்ய பயப்படுவார்கள் .......

இது சதி வேலை என்றே கூறலாம்....காரணம் எப்படி தன்னால் தீப்பற்றி கொள்ளும்.....

இப்போது ஒற்றுமையாக இணைத்து பேசி முடிவு எடுத்தது போன்று .....இந்த நல்ல முடிவை மிகவும் துரிதமாக செயலாற்ற வேணும் .

நமது ஊரில் மத நல்லிணக்க ஒற்றுமை தான் முக்கியம் ......இதை கேடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் ...மன்னிக்கவும் கூடாது ...விடவும் கூடாது ......

இடை காலதில் இரத்தன புரியில் இது போன்ற கேடு செய்ல செய்தார்கள் ...அவர்களை நம் மரியாதைக்குரிய காவல் துறை அவர்கள் கண்டு பிடித்து இருக்கலாம் .... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...நன்றி
posted by Wavoo. SAR. Ahmed Ishaque (Kayalpatnam) [23 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36576

Assalamu Alaikum..

Alhamdulillah, Thanks to the Almighty Allah first.

On behalf of my father Haji. Wavoo. Seyed Abdur Rahman and our family, we would like to express our gratitude and thanks to all our Jamath, various movements and Kayal public, who stood by us and supported us during the event happened today. Jazakallah!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [23 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36584

கயவர்களின் எண்ணம் கைகூடாமல் நம் நீண்ட நாள் கோரிக்கையும் நிறைவேற்றி தந்த வல்ல நாயனுக்கே எல்லாப்புகழும் அல்ஹம்துலில்லாஹ்.

இனியும் இது போன்ற திடீர் சூழ்சிகள் மூலம் நமதூரில் ஒற்றுமையை சீர்குலைக்க பல சம்பவங்களை பகைவர்கள் அரங்கேற்ற முயற்சிக்கலாம். அதை தடுப்பதற்கு இப்போதே உரிய ஏற்பாடுகளை ஒற்றுமையுடன் செய்ய வேண்டும். வல்ல நாயன் துணை நிற்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. புரியாத புதிர்!
posted by Hameed Rifai (jeddah ksa) [23 August 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36586

என் மனதில் எழும் சில கேள்விகளை இங்கே வெளிப்படுத்த விரும்புகிறேன்...

(1) நள்ளிரவில் கோயில் தீக்கிரையானதாகக் கூறப்படுகிறது. அதிகாலையில் அதைக் கண்டறிந்ததாகக் கூறும் கோயில் தரப்பினர், காவல்துறையிடம் உடனடியாக புகார் அல்லவா அளித்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு, கூரையால் வேயப்பட்ட கோயில் (?) எரிந்ததற்காக கல்லால் ஏன் கட்ட வேண்டும்?

(2) அதிகாலை 6 மணிக்கே ஹாலோ பிளாக் கல், மண், பிளாஸ்டிக் டேங்கில் தண்ணீர் எல்லாம் வந்து சேர்ந்திருக்கிறது. ஊர் மக்களெல்லாம் கண் விழிப்பதற்கு முன்பே இந்த ஊரில் அப்படி யார் கடை திறந்து வைத்து, இப்பொருட்களை விற்பனை செய்தது?

(3) இல்லையில்லை... நாங்க முன்னாடியே பொருட்களை வாங்கி விட்டோம் என்றால், கூரைக் கோயில் எரிக்கப்படுவது அவர்களுக்கு முன்பே தெரியுமா???

இவ்வளவும் இருந்தபோதிலும், விரும்பத்தகாத எந்த நிகழ்வுகளும் நடக்காத நிலையில் பிரச்சினையை முடிவுக்குக்கொண்டு வந்த அரசு அதிகாரிகள், அதற்கு ஒத்துழைத்த இரு தரப்பினருக்கும், இந்த மண்ணின் மைந்தன் என்ற தார்மிக உரிமையில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. நல் உள்ளம் கொண்டோருக்கு என்றும் காயல்பதியில் இடமுண்டு...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [24 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36590

தீய காவி கூட்டங்களுக்கு காயல்பதியில் இடமில்லை...!

தக்கதருணத்தில் நகரில் அமைதியை விரும்பும் அணைத்து பொதுநல அமைப்புக்கள் - சமூக சிந்தனை ஆர்வலர்கள் மற்றும் நகரின் அணைத்து சமய சகோதரர்கள் பொது மக்கள் அனைவர்களும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலோடு பிரச்சனைக்குரிய ஒரு தீய கூட்டத்தின் நடவடிக்கையை எதிர்த்து சாலையில் களமிறங்கி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.துரை அவர்களின் கவனத்திற்க்கும் பார்வைக்கும் எடுத்துரைத்து மா.துரை அவர்களின் அதிரடியான ஆலோசனையில் - நியாயமான அணுகுமுறையில் அமைதியை விரும்பும் நகர மக்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கபெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது..

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. மா.துரை அவர்களுக்கும் அவர்களின் கீழ் பணிபுரியும் அணைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி... நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Muthu Magdoom (Jeddah) [24 August 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36596

KIndly disable Comment Section for this kind of news.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by H.I.Rugnudeen Buhary (Kerala) [25 August 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 36626

கயவர்களின் எண்ணம் கைகூடாமல் நம் நீண்ட நாள் கோரிக்கையும் நிறைவேற்றி தந்த வல்ல நாயனுக்கே எல்லாப்புகழும் அல்ஹம்துலில்லாஹ்.

இனியும் இது போன்ற திடீர் சூழ்சிகள் மூலம் நமதூரில் ஒற்றுமையை சீர்குலைக்க பல சம்பவங்களை பகைவர்கள் அரங்கேற்ற முயற்சிக்கலாம். அதை தடுப்பதற்கு இப்போதே உரிய ஏற்பாடுகளை ஒற்றுமையுடன் செய்ய வேண்டும். வல்ல நாயன் துணை நிற்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. ஊர் ஒற்றுமை இப்படித்தான் இருக்க வேண்டும்
posted by ஹத்தாத் (திரிச்சுர்) [26 August 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 36756

பெருநாள் மார்க்க அடிப்படயில் பல தினங்களில் ஆனாலும்....... ஊர் ஒற்றுமை இப்படித்தான் இருக்க வேண்டும் அல்ஹம்துலில்லாஹ்... ஹத்தாத்...திரிச்சுர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved