இவ்வாண்டின் வடக்கிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது. கடந்த சில வாரங்களாக காயல்பட்டினத்தில் பெய்து வரும் மழையே சமீப கால மழைகளோடு ஒப்பிடும்போது மிக அதிகம் என பலர் கூறுகின்றனர். நகரின் பல பகுதிகள் வெள்ளமாக காட்சி தருகிறது.
அருகில் உள்ள கடலினை சென்றடையாமல், மழை நீர் தேங்குவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக - நகரில் இயற்கையாக அமைந்திருந்த குளங்கள் பல தற்போது குடித்தனங்களாக மாறியது என வலுவான கருத்து எடுத்து வைக்கப்படுகிறது.
நகரில் 50க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. காயல்பட்டினத்தில் எங்கெல்லாம் குளங்கள் இருந்தன?
காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் காயல்பட்டினம் தென் பாக கிராமத்தின் முழு வரைப்படம் - நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது 1986ம் ஆண்டு வெளிவந்த வரைப்படம் ஆகும்.
அதில் - சர்வே எண்களுடன், குளங்கள் உட்பட பல வகையான நீர் தேக்கங்கள் குறியிடப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன், காயல்பட்டினத்தில் குளங்கள் இருந்த / இருக்கும் இடங்களை அடையாளம் காணலாம்.
1. Re:...தடம் தேடும் தண்ணீர் posted byசாளை பஷீர் (சென்னை)[22 November 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38217
மழை என்பது உயிர் நீர், அது ஒரு அருட்கொடை. ஆனால் நமது பேராசைகளினாலும் கண்மூடித்தனத்தினாலும் அதை துயரமாக மாற்றி விட்டோம்.
ஒரு மாதத்திற்கு முன்னர் குடிசைகளை தேடி வந்த மழை நீர் இன்று பொது வெளிகளையும் நிறைத்து கல் வீடுகளின் வாசல்படி வரை வந்துள்ளது. இனி அடுத்து அது நம் கல் வீடுகளுக்குள் நுழைய ரொம்ப நேரம் ஆகாது.
ரியல் எஸ்டேட் கும்பல்களின் லாப வெறி , பொது மக்களின் வரைமுறையற்ற வீடு கட்டும் போக்கு ஆகியவைகளில் மாற்றம் எற்பட்டால்தான் மழை நீர் தனது எல்லையை மீறாது.
2. Re:...தொடரட்டும் உங்கள் கருத்து யுத்தம் posted byA.R.Refaye (ABUDHABI)[22 November 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38220
இயற்கையின் சீற்றத்தால் சிக்கிண்டு போய்க்கிடக்கும் எம் ஊரையும்,எம் மக்களையும் காணும் போது எங்கள் கண்கள் எல்லாம் குளமாகிறது, ஊரெங்கும் நீர் தேக்கம் உருவாகியுள்ளது. காட்டாற்று வெள்ளமாய் கரை புரண்டோடும் வெள்ளத்தால் மக்கள் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர்.
வான் மழை பொழியவேண்டும் என்று வல்லோனிடம் கேட்ட பள்ளிவாயில் எல்லாம் மழைநீர் துயில் கொள்கிறது போதும்,போதும் உன் மழை ரஹ்மத் இனி வறண்ட,வறச்சி பகுதிகளை நனைப்பாய் என்று மக்கள் குறிப்பாக பெண்கள் மனதுரைக்க கேட்கும் துஆக்கள் இறையருளாள் கபுளாகியேவேண்டும் இல்லையேல் இன்னும் தத்தளித்து கழிவு நீர் கலந்து மென்மேலும் மக்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ,கொசு பெருக்கம் போன்ற இதர தீமைகள் ஏற்படாமல் வல்லவனே நீயே காப்பு.
இந்த நேரத்தில் நகராச்சி, வருவாய்த் துறை , நெடுஞ்சாலைத் துறை மற்றும் அதிகாரிளை குறைசொல்லி என்ன பயன்,கழிவு நீர் ஒரு பகுதிலிருந்து மறு பகுதிக்கு மாற்றும் போது ஏற்படும் ஒற்றுமையின்மை ,பொதுமக்களின் ஆவேசத்தாள் ஏற்படும் முறையட்ற வாக்குவாதம், நகராச்சியின் வலிமையில்லா செயல்பாடுகளை எல்லாம் தற்போது பார்க்கும் பொது இதற்கான நிரந்தர தீர்வு நாம் எல்லாம் ஒட்டு மொத்தமாக எதிர்த்த பாதாள சாக்கடை திட்டம் ஒன்றே எதிர்கால மழைவெள்ளத்தை கட்டுபடுத்தும் என்பது என் தனி பட்ட கருத்து .
பல ஊர்களில் முறைப்படி பாதாள சாக்கடை திட்டம் வெற்றி அடைந்திருப்பதால் நாமும் அதை முன்னோக்கி செல்லவேண்டும் அதை விடுத்து குளத்தை ,குட்டையை காணோம் என்று அங்கலாய்ப்பது எந்தவிதத்தில் சரியாகும் , நம் பெண் மக்களுக்கு வீடு கொடுக்கும் பழக்கம் வாழையடி வாழையாக தொடர்வதால் இனி அகண்ட காயல்பதி உருவாக்கும் காலத்தின் கட்டாயம் ,
எனவே தயவுகூர்ந்து இப்பாதாள திட்டம் ஆரம்பத்தில் சிரமத்தை தந்தாலும் இதுவே வருங்கால இது போன்ற மழைவெள்ளத்திற்கு நிரந்தர தீர்வாய் அமையும் அதற்க்கான படித்தரங்களை முனைப்போடு இப்போதே எடுத்தாகவேண்டும்.
இந்த இணையதளைதில் ஒரு கருத்து வோட்டு பெட்டியை பாதாள சாக்கடை திட்டம் வேண்டுமா? வேண்டாமா: என ஒரு கேள்விக்கனை தொடுக்க ஆயுத்தம் செய்யலாமே.
உம்------ எனது இந்த வேண்டுகோளை எத்தனை பேர் யுத்தம் செய்கிறார்கள், குத்தம் சொல்கிறார்கள் பார்ப்போம்.
4. Re:... posted bySalih (Chennai)[23 November 2014] IP: 182.*.*.* India | Comment Reference Number: 38258
56 சர்வே எண்களில் குளங்கள் உள்ளதாக / இருந்ததாக வரைப்படங்கள் தெரிவிக்கின்றன. ஒரு சர்வே எண்ணில் பல குளங்கள் காணப்படுகிறது. இவைகளில் பெருவாரியானவை தனியார் நிலங்கள். இது 1986ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வரைப்படம்.
5. தனியார் நிலத்தில் குளங்கள் posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி)[23 November 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38265
சகோதரர் ஸாலிஹ் அவர்களின் தகவலை பார்த்தால், இது நாள் வரை இருந்த குளங்களில் (56) நான்கு நிலங்கள் மட்டுமே அரசு புறம்போக்கு நிலங்கள். இந்த நான்கும் கூட முழுவதுமாக அரசு நிலங்கள் இல்லை.
அந்த நான்கு புறம்போக்கு குளங்களுக்கு போகுமிடம் தனியார் நிலமாக இருக்கும்பட்சத்தில் அங்கும் மழை நீரை வெட்டி விட வழி வகை இல்லை.
தனியார், தங்களது நிலங்களை ஏன் அடைத்தீர்கள் என்று நாம் கேள்வி கேட்க முடியாது. அது அவர்களின் உரிமை.
இப்படியான சூழலில், மழை நீரை கடலுக்குள் விட, நமதூருக்கு தோதுவாக, திட்டம் அமைக்கபட நகராட்சி பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி மேல் குளத்தை காணோம் என்று கூப்பாடு போட்டு பிரயோஜனம் இல்லை. நடக்க வேண்டிய காரியங்களை பார்க்க வேண்டியது தான்.
6. Re:... posted bySalih (Chennai)[23 November 2014] IP: 182.*.*.* India | Comment Reference Number: 38266
தனியார் நிலம் குளமாக இருந்தால் நகராட்சியால் ஒன்றும் செய்ய முடியாது என்று கிடையாது.
THE TAMIL NADU MUNICIPALITIES BUILDING RULES, 1972 சட்டத்தின் படி - மழை நீர் வழிந்தோட ஏற்பாடு செய்யாமல், அங்கு கட்டிடம் கட்ட மறுக்கவும் நகராட்சிக்கு அதிகாரம் உண்டு.
THE TAMIL NADU MUNICIPALITIES BUILDING RULES, 1972
6 (2) No site, which would admit storm-water draining into it, owing to its level or location, shall be used for the construction of a building, unless arrangements are made to prevent effectively the flooding of the site, either by draining into a storm water course, if one is available, or by raising the level of the site to an adequate height by the deposit of
layers of sound and non-perishable material.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross