Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:10:22 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14903
#KOTW14903
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 21, 2014
தொடர் கனமழை: சுயநலம் தவிர்த்து, நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்! சிறிய குத்பா பள்ளியில் ஜும்ஆ உரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3994 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினத்தில் நவம்பர் 20 அன்று (நேற்று) 16.30 மணி துவங்கி, இன்று (நவம்பர் 21) 11.00 மணி வரை தொடர் கனமழை பெய்தது. நகரின் அனைத்து சாலைகளிலும் மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நேற்று துவங்கி, இன்று வரை பெய்துள்ள தொடர் கனமழை காரணமாக, காயல்பட்டினம் பெரும்பாலும் மழை நீரால் நிறைந்துள்ளது. எங்கு பார்த்தாலும், மழை நீர் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது.

காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு முன் உரை நிகழ்த்தப்பட்டது. மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுதலை பெற, சுயநலம் தவிர்த்து - நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் உரை நிகழ்த்தினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-

1977ஆம் ஆண்டில் நமதூரில் மிகப்பெரிய அளவில் மழை பெய்தது. தற்போது பெய்து வரும் மழையை விட அது மிகவும் கூடுதல். ஆனாலும், அந்நாளில், நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட குளங்களும், நீரோடைகளும் நிறைவாக இருந்தன. காலப்போக்கில் அவை காணாமல் போய்விட்டது.

நகரில் இன்று வீடுகள் தாழ்வாகவும், சாலைகள் உயர்ந்தும் அமையப்பெற்றுள்ளது. இதனால், ஓரளவுக்கு மழை பெய்தால் கூட, பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கும் நிலையுள்ளது.

ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டிருக்காமல், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்றத்தினர், நகரின் பொதுநல அமைப்பினர் இணைந்தமர்ந்து ஆராய்ந்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வாய்ப்பு கிடைக்கும்.

நமதூரில், பள்ளிவாசல்களோடு இணைந்தே சங்கங்கள் அமையப்பெற்றுள்ளன. அந்தந்த மஹல்லா பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகளின்போது, இளைஞர்கள் வேகமாகக் களமிறங்கிப் பணியாற்றிட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவ்வாறு முன்னோர்கள் ஏற்படுத்தினர். அந்நோக்கம் மறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்று ஜும்ஆ தொழுகைக்காக நான் பள்ளிவாசலை நோக்கி வந்தபோது, வழியில் ஒரு பிரச்சினையைக் கண்ணுற்றேன். தேங்கிய மழை நீரை ஒரு பகுதி வழியாக வெட்டி விடும் முனைப்பில் ஒரு சாராரும், தம் பகுதி வழியே வெட்டி விடக்கூடாது என்று மறுப்பில் மற்றொரு சாராரும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

இதுபோன்ற சுயநலப் போக்குகள் தவிர்க்கப்பட்டு, ஒருங்கிணைந்து செயல்பட்டால், நிச்சயம் நிரந்தரத் தீர்வுக்கு வழி பிறக்கும்.


இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது.

தகவல்:
S.A.முஹ்யித்தீன்


காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...பெருந்தன்மைமிக்க பேருரை
posted by mackie noohuthmbi (kayalpaattinam) [22 November 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38218

கதீப் அஹ்மத் அப்துல் கதர் ஆலிம் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

அவர்கள் சொன்ன செய்தியை உண்மைபடுத்தும் விதமாக இப்போது எனக்கு சென்னையில் இருந்து ஒரு தொலைபேசி வந்தது.

அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக் கூடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் அதை வெளியேற்ற ஆவன செய்யுங்கள் என்று ஒரு சமூக ஆர்வலரிடம் அந்த பள்ளியின் தலைவி முறையிட்டார்களாம். உடனே அவர்கள் நமது நகர் மன்ற தலைவி ஆபிதா அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார்களாம்.

தலைவி அவர்கள் சொன்ன பதில்: மாமா இந்த தேங்கிய நீரை வெட்டி விட ஏற்பாடுகள் செய்யும்போது எங்க தெரு வழியாக வெட்டி விடக் கூடாது, எங்க வீட்டு வழியாக வெட்டி விடக் கூடாது என்று தகராறு செய்கிறார்கள். அப்படியானால் எந்த வழியாகத்தான் வெட்டி விடுவது எப்படி தண்ணீர் வெளியேறும் என்று சொன்னார்களாம்.

இந்த உண்மையை ஆலிம் அவர்கள் தங்கள் குத்பா உரையில் சொல்லியிருக்கிறார்கள். அல்ஹம்து லில்லாஹ்.

விட்டுக் கொடுக்காமல் - வெட்டி விட வழி கொடுக்காமால் வழி மறித்துக் கொண்டு நகராட்சியை குறை சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. தனிப் பட்ட சுயநல லாபங்களை எடை போடும் நேரமா இது. ஊர் கூடி தீர்வு காண வேண்டிய அவசரமான விஷயம் இது.

ஆலிம் அவர்கள் சொன்னதுபோல் அல்லாஹ்வுக்காக விட்டுக் கொடுத்து நகராட்சி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டு இருந்தால் எப்போது இந்த பிரச்சினை தீரும். .

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.
கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [22 November 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38222

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் மரியாதைக்குரிய ஜனாப் .ஆலிம் அவர்களின் ஜும்மா'' உரை முற்றிலும் நியாயம் ஆனாதே ......அல்லாஹ் இந்த சிறப்பான ஒரு உரையின் அருளால் நம் ஊருக்கு இந்த ஒரு விசயத்தில் நல்ல தீர்வு கிடைக்குமா ..?? என்று பார்ப்போம் ...ஆனால் பொது மக்கள் ... இந்த விசையத்தில் ,,,இந்த நேரத்தில் ....பொருத்து இருந்து பார்க்க நேரம் மில்லை .....

நம் அருமை சகோதரர் அவர்கள் இடம் ஒருவர் தொலை பேசியில் சொன்ன வாசகம் ....நம் யாவர்களின் மனதையும் வெகுவாக புண்பட வைக்கிறது .....

மரியாதைக்குரிய ஒரு சிறப்பான பதவியில் இருக்க கூடிய நபர் இப்படி தரம் அற்று பேசுவதா ( சொல்வதா ) ?? அதான் நம் யாவர்களுக்கும் மன வருத்தமே .....அல்லாஹ் யாவர்களுக்கும் நற் குணங்களை தரனும் ......ஆமீன்,,

ஆனால் இந்த நேரம் யாருமே பிரச்சனை பண்ணாமல் ....ஒற்றுமையாக இருந்து நம் ஊர் அனைத்து பகுதிகளிலும் தேவைக்கற்ற மழை நீரை வெளியேற்ற துரிதமான நடவடிக்கை எடுத்தால் நல்லது .....

நம் நகராச்சி மிகவும் துரிதமான செயல் பாட்டில் வேகமாகவே இறங்குவது தான் நல்லது ....நம் நகராச்சி கவனம் செயலுத்துமா......

நம் நகராச்சி மக்களின் நலனில் இந்த நேரத்தில் அக்கறை கொள்வது தான் நல்லது .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [22 November 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38223

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

நீர் எந்நிலையிலும் ஏற்றதாழ்வுபார்ப்பதில்லை சமநிலையையே நாடும் அதன் இறையாண்மைஅப்படி மனிதர்களாகிய நமக்குள் மட்டுமேநிலவும் வன்மஎண்ணங்கள் நம்மையறியாமலே அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கிறது எல்லாம்சுயநலத்தின் பிரதிபலன்கள்.பஞ்சபூதங்களைப்பற்றி நமக்கு இன்னும் சரியான விழிப்புணர்வுவரவில்லை. ஒருஇடத்தில் நெருப்புபற்றிக்கொண்டால் அதைச்சுற்றியுள்ள இடத்தை நீர்பாய்ச்சி ஈரப்படுத்திவிடவேண்டும். இந்தவிஷயத்தில் மட்டும் எச்சரிக்கையாக இருக்கும்நாம் நீரின்தன்மையைப்பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை.

நீர் சுதந்திராமாக ஓட நாம்வழிவிடாது தந்திரமாகநடந்துகொண்டால் அதுவும்தந்திரமாக வெளியேறும்.

அதாவது ஒருஇடத்தில் நீர்தேங்கிவிட்டால் அதற்குவடிகால் இல்லையென்றாலோ சூரியஒளி சரியாகக்கிடைக்காவிட்டாலோ பூமிதேவையானமட்டுமே வாங்கிக்கொள்ளும் மற்றவைதானாக்வேகசிந்து கொஞ்சம்கொஞ்சமாக இடம்பெயர்ந்துவிடும். ஒருவேளை நம்வீட்டுக்கோட்டைவழியாகவெளியேற விடவில்லையென்றால் அதுதானாகவேகசிந்து கோட்டையையு, நம்வீட்டு அஸ்திவாரத்தையும் அசைத்துவிட்டுச்சென்றுவிடும் அதோடு நாம்கட்டிய மனக்கோட்டையான தானென்ற அகந்தையையும் ஒருகைபார்த்துவிட்டுப்போய்விடும் .

அதோடுமட்டுமல்லாது தொற்றுநோயகளென்பது ஆள்,குலம்,கோத்திரம்பார்த்துவருவதில்லை, அதனால் ஒன்றுபட்டுநாமென்ற எண்ணத்தோடு உடல்பொருள்னலத்திற்காகவும்,ஊர்நலனுக்காகவும் எல்லோரும் இணைந்து நல்லமுடிவுஎடுப்போம்.

பருவமழையில்லையென்று பலகாலமாகஏங்கிய நமக்கு பலனாக நல்லமழையைத்தந்திருக்கிறான் அதற்கு வல்லஇறைவனுக்கு அல்ஹம்துலில்லாஹ்சொல்வதோடு அந்தமழை நீரைசரியாகப்பயன்படுத்துவோம். வல்லஅல்லாஹ் அதற்கான ஹிதாயத்தைத்தந்தருள்வானாக ஆமீன்.

"ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு"

"ஒற்றுமையெனும் கயிற்றைப்பற்றிக்கொள்ளுங்க்கள்"

"அவனுக்கு நன்றிகெட்டால் என்றும் தாழ்வு"

"அவன் சூழ்ச்சிதாரிக்கெல்லாம் பெரிய சூழ்ச்சிதாரி."

குறிப்பு:

இனியேனும் ஊர்நலன்கருதி நகராட்சி தாழ்வான பகுதிகள், நீரோடும் ,தேங்கும் பகுதிகளை துண்டுபோட்டுவிற்கவோ வாங்கவோ கூடாதென்று முடிவெடுத்து அம்மாதிரி நிலங்களை ஊர்னலனுக்காக கொள்வரவுசெய்துகொள்ளவேண்டும் என்றுமே அது ஊர்பொதுச்சொத்தாகவே இருக்கவேண்டும். தனவந்தர்கள் மனமுவந்துதானாகவந்துகொடுக்கலாம் இல்லாதவர்களிடம் சரியானவிலைகொடுத்துவாங்கிக்கொள்ளலாம்

சரியான வேளையில் அறிவுரைதந்த குத்பாபெரிய,சிறியபள்ளி கதீப் அஹ்மத் அப்துல்காதிர் ஆலிம் மஹ்ழரி வர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாகஆமீன்.

ஜஜாக்கல்லாஹ் க்ஹைரன்லகும்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை ,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved