Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:35:14 AM
ஞாயிறு | 2 பிப்ரவரி 2025 | துல்ஹஜ் 2012, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:2312:3615:5818:3019:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:38Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்09:34
மறைவு18:24மறைவு22:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:2605:5106:16
உச்சி
12:31
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4619:1119:36
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14913
#KOTW14913
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 25, 2014
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கே.வி.ஏ.டீ.புகாரீ ஹாஜி அறக்கட்டளை சார்பில் உணவுதவி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2732 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழையால் பாதிக்கப்பட்டுள்ள 14ஆம் வார்டுக்குட்பட்ட பகுதிகளான கீழ லெட்சுமிபுரம், மேல லெட்சுமிபுரம், எல்.ஆர்.நகர், பாஸ் நகர், அழகாபுரி ஆகிய பகுதிகளில், நவம்பர் 24 செவ்வாய்க்கிழமையன்று காய்கறி பிரியாண உணவுப் பொட்டலங்கள் 700 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளை நிர்வாகி கே.வி.ஜெய்னப் ரஹ்மத், 04ஆவது வார்டு நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், உறுப்பினர்களான ஏ.டீ.முத்து ஹாஜரா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ஏ.பாக்கியஷீலா, ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் மற்றும் கே.வி.ஏ.டீ. குடும்பத்தினர் உணவுப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.







தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்


கே.வி.ஏ.டீ. புகாரீ ஹாஜி அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [25 November 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38279

அஸ்ஸலாமு அலைக்கும்

வரவேற்கத்தக்க நல்லதோர் செயல் என்றே கூறி போற்றி ...மனதாரவே அனைத்து நபர்களும் பாராட்டுவார்கள் .......இது போன்ற தங்களின் நல்ல செயல்கள் தொடரட்டும் .....வாழ்த்துக்கள் ....... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mackie noohuthambi (kayalpaattinam) [25 November 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38280

ஏழைகளுக்கு உணவு அழிப்பது பற்றி அதன் நன்மைகள் பற்றி திருமறையிலும் திருநபி வழி முறையிலும் நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. தமிழிலே இது பற்றி ஒரு சுவையான செய்தி உண்டு.

கொடை வள்ளல் கர்ணன் இவ்வுலகில் பொன்னையும் பொருளையும் மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தவன். "என்ன கொடுப்பான் ஏது கொடுப்பான் என்று எண்ணும் முன்னே பொன்னைக் கொடுப்பான் பொருளைக் கொடுப்பான் - போதாது போதாது என்றால் இன்னும் கொடுப்பான் தன்னையே தான் கொடுப்பான் கர்ண மன்னன்" என்று அவன் புகழ் பாடுவார்கள். அப்படிப்பட்ட கர்ணன் வானுலகத்துக்கு போகிறான். அவன் சுவர்க்கத்தை நோக்கி போகும்போது தங்கமும் வெள்ளியும் பாதை நெடுக குவிந்து இருந்து அவனை வரவேற்கிறது. அப்படியே நடந்து போகும்போது அவனுக்கு பசி ஏற்படுகிறது.தின்பதற்கு ஏதாவது தாருங்கள் என்று அமரர்களிடம் கேட்கிறான்.

நீ உலகில் தான தருமமாக கொடுத்த தங்கம் வெள்ளிதான் இங்கு இருக்கிறது. நீ யாருக்கும் உணவளித்ததாக உன் நன்மை பட்டியலில் இல்லை. எனவே நீ கொடுத்த தங்கம் வெள்ளியை தவிர உனக்கு உணவு வேண்டுமானால் அதோ தெரிகிறதே அந்த குடிசை வீட்டுக்கு போ.அங்கே ஒரு கிழவி இருப்பாள் அவள் உலகின் இருக்கும் காலத்தில் ஏழைகளுக்கு உணவு அளித்தாள். அப்படி அளிக்க முடியாமல் இருந்தாலும் உணவு அளிக்கும் அடுத்த வீட்டுக்கு போகும்படி விரலை காட்டுவாள். அதனால் ஏழைகள் பசி நீங்கி சந்தோசப்பட்டார்கள். அதன் காரணமாக இங்கு மேல் உலகில் அவளுக்கு கடவுள் உணவு அளிக்கிறார் என்று அமரர்கள் பதில் சொல்வார்கள். கர்ணன் அந்த கிழவியிடம் போய் உணவு கேட்டு உண்டு மகிழ்ந்தான். இது மகா பாரதத்தில் வரும் செய்தி.

இது கற்பனை என்றாலும் ஒரு படிப்பினை அதில் உள்ளது. தர்மங்களில் சிறந்த தர்மம் ஏழைகளுக்கு உணவளிப்பதுதான்.

நமக்கு ஏதாவது காரியம் நல்லபடி நடக்க வேண்டும் என்றாலும் நாம் அடி எடுத்து வைக்கும் விஷயங்கள் வெற்றியாக அமைய வேண்டும் என்றாலும் ஏழைகளுக்கு மிஸ்கீன்களுக்கு உணவளிப்பேன் என்று நிய்யத் செய்து கொள்வது நமது வழக்கம். அதையும் உடனே கொடுத்துவிட்டு அல்லாஹ்விடம் து ஆ கேட்பது இன்னும் சிறப்பு என்று உலமாக்கள் நமக்கு சொல்லிக் காட்டுவார்கள். எனவே இந்த உணவளித்தலை செய்து வரும் எல்லோருக்கும் அல்லாஹ் ரஹ்மத்து செய்வானாக. அதற்கான முயற்சிகள் செய்பவர்கள் உடல் உழைப்பை வழங்குபவர்கள் எல்லோருக்கும் அதன் முழுமையான நன்மையை அல்லாஹ் வழங்குவானாக.

KVAT குடும்பத்தினர்போல் பொருளாதார வசதி உள்ளவர்கள் எல்லோரும் பணத்தை தர்மமாக கொடுப்பதை விட இப்படி ஏழைகளுக்கு உணவு அளிக்கும் ஒரு சிறந்த வழிமுறையை பின்பற்றுவார்களாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. துஆ செய்கிறோம் :...
posted by M.Z.SIDDIQ. (KAYALPATNAM.) [26 November 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38286

.கே.வி.எ.டி.ஹபீப் காக்கா அவர்கள் நம் ஊரில் ஒரு ஸ்கூல்க்கு வந்த போது மாணவ,மாணவிகள்,காலில் செருப்பு போடாமல் வந்து இருப்பதை பார்த்த உடன் மனதில் வேதனை அடைந்து,உடனே அவருடைய மச்சான் மொகுதும் காக்கா விடம் ஏற்பாடு செய்து எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் செருப்பு வாங்கி கொடுத்தார்கள்,அப்படியாபட்ட இவர்கள் இந்த சூழ்நிலைஇல் இந்த நற்காரியத்தை செய்து இருப்பது அவர்களின் நல் எண்ணத்தை காட்டுகிறது.அல்லாஹ் அவர்களுக்கு பரக்கத்தை செய்வானாக ஆமின்.

m.z .siddiq .kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2025. The Kayal First Trust. All Rights Reserved