Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:24:16 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14918
#KOTW14918
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 25, 2014
நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு கோரி இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், அனைத்துக் கட்சிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! திரளானோர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3084 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழையால் நகரே மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதுபோன்ற பிரச்சினை எழுவதால், போர்க்கால அடிப்படையில் தற்காலிகத் தீர்வும், பின்னர் நிரந்தரத் தீர்வும் கோரியும், நிவாரணப் பணிகளை திருப்திகரமாகச் செய்யத் தவறியதாக, காயல்பட்டினம் நகராட்சியைக் கண்டித்தும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், இம்மாதம் 22ஆம் நாள் சனிக்கிழமை காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைத் தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் நகர துணைச் செயலாளர் எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், கண்டன முழக்கங்களை முன்மொழிய, பங்கேற்றோர் வழிமொழிந்தனர். பின்னர் அவர் அறிமுகவுரையாற்றினார்.









அரிமா சங்கம் காயல்பட்டினம் கிளை சார்பில் எம்.எல்.ஷேக்னா லெப்பை, சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் அப்துல் அஜீஸ், அஹ்மத் நெய்னார் பள்ளி சார்பில் என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், திமுக சார்பில் அதன் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஹஸன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் எஸ்.எம்.பாக்கர், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் அதன் நகர செயலாளர் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ், வஞ்சிக்கப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் அலீ அக்பர், இந்திய தேசிய லீக் சார்பில் அப்பாஸ், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் நகர செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.



நடப்பு தொடர்மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் கோரியும், தேங்கிய மழை நீரை போர்க்கால அடிப்படையில் கடலுக்கு வெட்டி விடுமாறும், நிவாரணப் பணிகளில் மெத்தமாகச் செயல்படும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் அவர்களது உரைகள் அமைந்திருந்தன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நன்றி கூறினார்.



ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1:

மழைக்காலங்களின்போது தேங்கும் மழை நீர் வழிந்தோட முறையான வடிகால்கள் இல்லாத காரணத்தால், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்குள்ளாகின்றனர்.

தற்போது தொடர்ச்சியாகப் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் பெருமளவில் தேங்கி, நகர மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளதோடு, சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அவல நிலையைப் போக்கிட, காயல்பட்டினம் நகராட்சி இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என இக்கூட்டம் கருதுகிறது. எனவே, இது விஷயத்தில் நகராட்சி அதிகாரிகளும், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளும் இன்னும் அதிக கவனம் செலுத்தி, தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றிடவும், இனியும் தேங்காவண்ணம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இக்குறையைப் போக்கிட வழிவகைகளைக் கண்டறியவும், பின்னர் நிரந்தரத் தீர்வு காண அரசை வலியுறுத்தவும் நகராட்சி மன்றம் ஆவன செய்ய வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 2:

தொடராகப் பெய்து வரும் நடப்பு வடகிழக்குப் பருவமழை காரணமாக, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரில் உருவாகும் கிருமிகளால், நகரில் பல்வேறு தொற்றுநோய்கள் பரவி, குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் பாதித்து வருகிறது.

இந்த நோய்க்கிருமிகளை அழிக்க, தேங்கிய மழை நீரில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல், ப்ளீச்சிங் பவுடர் தூவுதல், கொசு விரட்டும் புகையடித்தல் ஆகிய பணிகள் தற்போது நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டாலும் அவை போதுமானதாக இல்லை.

நகரின் பரப்பளவு, மொத்த மக்கள் தொகை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இன்னும் அதிக பணியாளர்களைப் பயன்படுத்தி, தேவையான கருவிகளை வாங்கி, மேற்படி பணிகளை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் திருப்திகரமாகச் செய்திட நகராட்சியை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3:

மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகள், நிரந்தர செயல்திட்டம் வகுத்து நடவடிக்கை மேற்கொள்ளல் ஆகியவற்றில் இனியும் மெத்தனப்போக்கு தொடருமாயின், போராட்டததை இன்னும் வலிமையாக நடத்தப்படும் என்பதை இக்கூட்டம் அரசுக்குத் தெரிவிக்கிறது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கணிப்பதில். காயல்நெஞ்சங்கள் குறைந்தவர்கள் அல்ல
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [26 November 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38281

இந்த ஆர்ப்பாட்டத்தின் உள் அர்த்தம் தெரிந்ததால் அலைமோதி வழிந்து, வழிந்து வீதியெங்கும் வியாபித்து விரிந்திருக்கும் கூட்டம்!

உள்ளார்ந்த உண்மை நிலையை கணிப்பதில் காயல்பதி கண்ணியமிகு நிநிலை நெஞ்சங்கள் என்றைக்கும் கிஞ்சிற்றும் குறைந்தவர்கள் அல்ல!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:... ஆர்ப்பாட்டம் - வாழ்த்துக்கள்
posted by GEM Theebi (Kayalpatnam) [26 November 2014]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38283

ஊரே நாரிக் கிடக்கிறது? இதில் என்ன உள் அர்த்தம் வேண்டிக்கிடக்கிறது?

உள்ளார்ந்த உண்மை நிலையை கணிப்பதில் காயல்பதி கண்ணியமிகு நிநிலை நெஞ்சங்கள் என்றைக்கும் கிஞ்சிற்றும் குறைந்தவர்கள் அல்ல! அது முற்றிலும் உண்மைதான்.

ஆனாலும்,

காலை 10:00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடக்குமா என்ற அளவுக்கு கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. அதையும் தாண்டி திரளாக, மக்கள் அலை கடலென திரண்டு வரவில்லைதான். ஆனாலும், சிறு துறும்பும் பல் குத்த உதவும் என்ற அடிப்படையிலாவது, தங்கள் உணர்வுகளைப் பதிவு செய்ய வந்தவர்களையும் அவர்களைக் கொண்டு பொறுப்போடு ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்துக் கட்சி, ஜமாஅத், பொதுநல அமைப்புக்கள், இவர்களை ஒருங்கிணைத்த முஸ்லிம் லீக் ஆகியோர்களை மனதார, நெஞ்சாரப் பாராட்டுகிறேன். அவர்கள் பனி சிறக்க வாழ்த்துகிறேன்.

இந்தச் சி(சீ)றிய ஆர்ப்பாட்டம் நடை பெற்ற பிறகுதான் அரசு இயந்திரம் விழித்துக்கொண்டது. அமைச்சர் ஓடி வந்தார். கலெக்டர் பாய்ந்து வந்தார்.

அல்லாஹ் அனைத்தும் மட்டுமல்ல, எல்லாவற்றையுமே அறிந்தவன்!

என்றும் ஊரின் நலனை மட்டுமே நாடும்,
"ஜெம்" தீபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அது வேற வாய்! இது........???
posted by Hameed Rifai (Jeddah (ksa)) [26 November 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 38284

இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் எதிர்பார்த்தது போலவே முழுக்க முழுக்க தலைவி எதிர்ப்பு புராணம்தான்! எதிர்க்கவே கூடாது என்பதல்ல எனது கருத்து. உண்மையைச் சொல்லி எதிர்க்க வேண்டும். கண்ணியமாகப் பேச வேண்டும்.

திமுகவுடன் இருந்த நீண்ட கால உறவை அறுத்து, அதிமுகவுடன் முஸ்லிம் லீக் கூட்டணி கண்ட காலகட்டத்தில், திமுக தலைவர் கலைஞரைக் குறித்து அப்துஸ்ஸமது ஸாஹிப் அவர்கள் தான் பேசிய உரைகளிலெல்லாம் மிகக் கண்ணியமான வாசகங்களையே பயன்படுத்தினார்கள். அவர்களது பாரம்பரியத்தில் வந்தவர்கள் என்று சொல்ல சிறிதும் தகுதியற்ற சிலர்தான் இன்று காயல்பட்டினத்தில் தாய்ச்சபையைக் கைக்குள் வைத்துக்கொண்டிருக்கிறார்களோ என்று கருதத் தோன்றுகிறது எனக்கு.

இந்த மழைக்காலத்தில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சுகாதார இயக்குநர், நகராட்சி நிர்வாக மண்டல அலுவலர் என பல்வேறு அரசு உயரதிகாரிகளையும், அமைச்சர்களையும் (உங்கள் ஆர்ப்பாட்ட அறிவிப்புக்கெல்லாம் முன்பாகவே) தொடர்புகொண்டு, இந்த ஊருக்குத் தேவையானவற்றையெல்லாம் கோரிக்கையாக வைத்துக்கொண்டிருக்கிறார் நகர்மன்றத் தலைவி அவர்கள் என்பதை நான் விசாரித்து அறிந்துள்ளேன். அதன் விளைவாக, அண்மையில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் வருவாய் அதிகாரி ஆகியோர் ஊருக்கு வந்து ஆய்வு பாதிப்புகளைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

அப்படியிருக்க, ‘தலைவி எதுவுமே செய்யவில்லை’ என மல்லுக்கட்டிக்கொண்டு கூற முனைவதன் நோக்கமென்ன? ஏதோ எதிர்பார்ப்பில் இருந்தவர்கள் ஏமாற்றம் கண்டதால் ஏற்பட்டுள்ள கோபம் என்று இதை எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது.

“22-11-2014 சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. எவரையும் கண்டிக்கும் போராட்டம் என்று அறிவிக்கப்படவில்லை.” (C & P)

இது நண்பர் மக்கி அவர்கள் தெரிவித்த வாசகம். அவரது இந்த உறுதிமொழியையெல்லாம் தாண்டி ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டதற்கு அவரது விளக்கம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

ஆண்டவரால் ‘புனிதர்’ பட்டம் வழங்கப்பட்டவர்களெல்லாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, அவரது வழமையான பாணியில் மிகவும் கண்ணியமாக (?) பேச தாய்ச்சபை தங்கங்கள் களம் அமைத்துக் கொடுத்துள்ளதை அறியும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.

நமதூரில் 28 பள்ளிவாசல்கள் உள்ளன என்று நான் அறிந்துள்ளேன். ஆனால், அஹ்மது நெய்னார் பள்ளி சார்பில் மட்டும் ஒருவர் பேசியிருக்கிறார். புதுப்பள்ளி, கொடிமர பள்ளி, குருவித்துறைப் பள்ளி, மகுதூம் பள்ளி ஜமாஅத்தார்களெல்லாம் பேசவில்லையே ஏன்?

இந்த ஊரிலேயே அலுவலகம் அமைத்து பல அமைப்புகள் இயங்கிக்கொண்டிருக்க, நோட்டீஸ் விடுவதற்காக மட்டுமே இயங்கும் ஒருநபர் அமைப்பு எல்லாம் அழைக்கப்பட்டு, முகவரியுடன் இயங்கும் பெரும்பாலான அமைப்புகள் கண்டுகொள்ளப்படாதது ஏன்?

எந்தெந்த ஜமாஅத், பொதுநல அமைப்புகளுக்கு எல்லாம் அழைப்பு அனுப்பப்பட்டது? அவர்களில் யாரெல்லாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்கள் என்பதையும் அறிய ஆவல்.

உங்கள் விளக்கத்தைப் பார்த்த பிறகு, தேவைப்பட்டால் தொடர்கிறேன்......

ஒரு சிறிய வேண்டுகோள்: இந்தக் கருத்துப் பதிவைப் பார்த்த பிறகு, என் பெற்றோரிடம் எச்சரிக்கை விடுக்க புதிதாக இருவரை அனுப்பி வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். (ஏற்கனவே அனுப்பியவர்கள் வேண்டாம், ப்ளீஸ்...)

இப்படிக்கு,
வஞ்சிக்கப்பட்ட வாலிபன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வஞ்சிக்கப்பட்ட வாலிபனுக்கு ...
posted by GEM Theebi (Kayalpatnam) [26 November 2014]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38287

எத்தனை பதில் தந்தாலும், உனக்கு - அதை ஏற்க மனமிருக்காது என்பதுதான் சரியான கணக்கு.

ஒவ்வொரு பதிலிலிருந்தும் எடுப்பாய் ஒரு தொடுப்பு.
இதுதான் உனது தனிச் சிறப்பு!

போதுமப்பா உன் கருத்துக் கணிப்பு!
நல்லது ஏதாவது நடக்க விடு அப்பு!
எதற்கெடுத்தாலும் வைக்காதே ஆப்பு!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...கருத்துப் பதிந்தால் நாடு கடத்தப்படும்
posted by GEM Theebi (Kayalpatnam) [26 November 2014]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38290

அன்பின் அட்மின் அவர்களே!

நான் கருத்துப் பதிவில்புதியவன் என்பதால் எனது சுய முகவரியை/விபரத்தைக் கேட்டு எனது மின்னஞ்சலுக்கு கடிதம் அனுப்பி இருந்தீர்கள். உடனே நானும் அனுப்பி வைத்தேன். அதை சரியாகப் பார்க்கவில்லையா?

நான் வசிப்பது இந்தியாவில்.

ஆனால், நான் ஜப்பானிலிருந்து கருத்துப் பதிந்தது போல் எனது முகவரி வருகிறதே. ஏன்?

கருத்துப் பதிந்தால் நாடு கடத்திவிடுவீர்களா? பயமாகத்தான் இருக்கிறது.

[Administrator: நீங்கள் உபயோகப்படுத்தும் INTERNET SERVICE PROVIDER வழங்கும் IP ADDRESS முன்னர் ஜப்பான் நாட்டிற்கு ஒதுக்கப்பட்டதாக இருக்கும். தற்போது MTS நிறுவனம் பயன்படுத்துகிறது]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. உள்குத்து,வெளிகுத்து
posted by NIZAR (kayalpatnam) [27 November 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 38291

முஸ்லீம் லீக் தலைமையில் நடந்த இந்த அணைத்து கட்சி மற்றும் பொதுநல அமைப்புகளின் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் மக்கள் என்ன உள்குத்து,வெளி குத்துக்களை கணிச்சாங்க,என்னேவேன்றே புரியவில்லை ஏதாவது புரிந்தால் சொல்லுங்கன்னே,சொல்லுங்க.ஊரே வெள்ளத்தில் மிதந்தது,யாரை கூப்பிட என்ன செய்ய என்று விழி பிதுங்கி நின்ற வேலையில் முஸ்லீம் லீக் தன் அலுவலகத்தை வெள்ள நிவாரண அலுவலமாக மாற்றியது.தண்ணீரில் மிதக்கும் மக்களை காப்பாற்ற உடனடியாக அணைத்து கட்சி மற்றும் பொதுநல அமைப்புகளை கூட்டியது.அனைவரின் ஏகோபித்த முடிவாக கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்தது.காற்று மழை என்ற கடுமையான சூழ்நிலையிலும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள்.போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் எதிர் திசையிலும் நின்றார்கள்.ஆர்ப்பாட்டத்தின் விளைவு மாவட்ட நிரவாகத்தின் கவனம் காயல் பக்கம் திரும்பியது. நெடுஞ்சாலை துறை அனுமதியுடன் ரோடுகள் வெட்டப்பட்டு நிலைமை கட்டுக்குள் வந்தன.தெரு தெருவாக பொக்லைன் மூலம் ரோடுகளின் ஓரங்கள் வெட்டப்பட்டு தண்ணீர் ஓடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மிகவும் பாதிக்க பட்ட இடங்களில் அன்றே லயன்ஸ் கிளப் மூலம் உணவுகள் வழங்கப்பட்டன.அதை தொடர்ந்து தனியார்களின் உதவியில் லயன்ஸ் கிளப் புஹாரி ஹாஜியார்,மற்றும் துளிர் சேகனா ஹாஜி தலைமையில் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டது.கடுமையான வானிலை சூழ்நிலையிலும் மலையிலும் நனைந்து கொண்டே சில கவுன்சிலர்கள், பொதுநல ஊழியர்கள்,மாற்று மத சகோதரர்கள் என அனைவரும் வெள்ள நிவாரண பணியில் உழைத்து மிகவும் பெருமைக்குரிய விசயமாக அமைந்தது.அடிக்கடி முஸ்லீம் அலுவலகத்தில் நிலைமை பற்றி ஆய்வுகூட்டங்கள் நடத்தப்பட்டது.இப்படி இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லீம் லீக்கும்,லயன்ஸ் க்ளப் மற்றும் பொதுநல அமைப்புகள் அணைத்து ஜமாத்துகள் நடத்திய இந்த பொதுசேவை யை உள்ளார்ந்த நோக்கம் என்று சொல்வது நியாமாகுமா?அப்படி என்ன நோக்கம் என்று வெளிப்படுத்தலாமே?உண்மையில் இந்த வெள்ள நிவாரண பணியில் தங்களை அர்ப்பணித்து கொண்ட அனைவருக்கும் லயன்ஸ் க்ளப் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெர்வித்து கொள்கிறேன்.இதை போன்ற இயற்கை இன்னல்கள் இருந்து இறைவன் நம் ஊரை காப்பானாக,,,,,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved