Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:24:25 AM
சனி | 4 மே 2024 | துல்ஹஜ் 1738, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்02:45
மறைவு18:28மறைவு15:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1305:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:41
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19992
#KOTW19992
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 7, 2017
காயல் குப்பை அரசியல் (பாகம் 12): “உ.சகாயம் IASஐ நகர்மன்றத் தலைவர் சந்தித்ததைத் தொடர்ந்து – குப்பை கொட்ட இடம் வழங்கிட சம்மதம் தெரிவித்த பனை பொருள் துறை!” ‘நடப்பது என்ன?’ குழுமம் விளக்க அறிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1821 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது. “உ.சகாயம் IASஐ நகர்மன்றத் தலைவர் சந்தித்ததைத் தொடர்ந்து – குப்பை கொட்ட இடம் வழங்கிட சம்மதம் தெரிவித்த பனை பொருள் துறை!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 12ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-

பிப்ரவரி 2013 முதல் வாரத்தில் இரு முறை காயல்பட்டினம் வந்தார் அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஷ் குமார். தனது இரு வருகைகளின் போதும் - இத்திட்டங்களுக்கு தேவையான இடங்களை பார்த்து சென்றார்.

அவரின் ஆலோசனை பெயரில் தமிழ்நாடு மாநில பனை வெள்ள கூட்டுறவு சம்மேளனத்திற்கு பாத்தியப்பட்ட 8.5 ஏக்கர் இடத்தினை பெறும் முயற்சியில் காயல்பட்டினம் நகராட்சி தலைவர் ஐ.ஆபிதா சேக் இறங்கினார். இந்த நிலம் குறித்த வருவாய்த்துறை ஆவணங்கள், பனைப்பொருள் துறை ஆவணங்களை சேகரிக்க அதிகாரிகளை சந்தித்தார்.

இப்பணிகளில் நகர்மன்றத்தலைவர் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, அதே வேளையில் - மறு பக்கம் - காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பெருவாரியானோர் - மற்றொரு முக்கிய பணியில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தார்கள்.

அதுதான் - காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டுவருவதற்கான திட்டம்!

மார்ச் 8 அன்று - 17 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட, ஆதாரங்கள் எதுவும் இல்லாத - 11 குற்றச்சாட்டுக்கள், திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரிடம் - உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டு, தலைவி மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர கோரப்பட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரமுடியாது; அவர் - மக்களின் நம்பிக்கையை பெற்று தலைவரானவர்; உறுப்பினர்களின் தயவால் அல்ல என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் அந்த கடிதம் - உறுப்பினர்களால் - அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

அதிகாரிகளுக்கு அனுப்பிய புகாரின் நகலை நகர்மன்றத் தலைவருக்கும் உறுப்பினர்கள் - பதிவு தபாலில் - அனுப்பினார்கள்.

அந்த கடிதத்தை நகர்மன்றத்தலைவருக்கு கொடுக்கவந்த போஸ்ட்மேன் - இரு கடிதங்களை, நகர்மன்றத் தலைவரிடம் கொடுக்கிறார்.

போஸ்ட்மேன் கொடுத்த ஒரு கடிதம் நம்பிக்கை இல்லா தீர்மானம் சம்பந்தமான உறுப்பினர்கள் கடிதம்!

போஸ்ட்மேன் கொடுத்த மற்றொரு கடிதம் - அமெரிக்க அரசின் சிறப்பு விருந்தினராக, அமெரிக்கா செல்ல நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் அவர்களை தேர்வு செய்து, அமெரிக்க தூதரகம் அவருக்கு அனுப்பியிருந்த அழைப்பு கடிதம்!!

யாரை கௌரவிக்கவேண்டும், யாரை கெளரவம் இழக்க செய்யவேண்டும் என நிர்ணயம் செய்பவன் இறைவன் ஒருவனே என்பதற்கு இதுவே மிகப்பெரிய அத்தாச்சியாக இருந்தது என்றால் அது மிகையாகாது!

உறுப்பினர்கள் வைத்த குற்றச்சாட்டுகளை கண்டு நகர்மன்றத்தலைவர் - துவண்டுபோகவில்லை. சீதக்காதி திடலில் - நூற்றுக்கணக்கான மக்கள் முன்பு - தனது விளக்கத்தை வழங்குகிறார் (மார்ச் 17, 2013)



மார்ச் 22, 2013 அன்று - நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான தேதி முடிவு செய்து - நகர்மன்றத் தலைவருக்கு தபால் கொடுக்க வருகிறார்கள். அவர் சென்னையில் இருந்ததால் வீடு மூடியிருக்கிறது.

லஞ்சம், ஊழலை எதிர்த்துக்கேட்டதாலும், நேர்மையான நிர்வாகம், ஆதிக்கதவாதிகளின் தலையீடு இல்லாத நிர்வாகம் வழங்க வேண்டும் என விரும்பிய ஒரே காரணத்திற்காக அவரை அவமானம் படுத்தவேண்டும் என்று - நகராட்சி அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி ஆகியோர் புடைசூழ - நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் அவர்களின் வீட்டுவாசல் கதவில் - நம்பிக்கை இல்லா தீர்மான நோடீஸை ஒட்டி செல்கிறார்கள். அவர்களின் சந்தோசம் - 15 நாட்கள் கூட நீடிக்காது என்று அப்போது அவர்களுக்கு தெரியாது.



நம்பிக்கை இல்லாத்தீர்மானத்திற்கான தேதி குறிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 5, 2013.

பெரிதாக அதனை நகர்மன்றத்தலைவர் சட்டைசெய்யவில்லை.

ஏப்ரல் முதல் வாரத்தில் - பட்ஜெட் அறிவிப்புகள் வர இருப்பதால், நகராட்சிக்கான புதிய கட்டிடம் நிதி அறிவிப்பு - இந்த அறிவிப்பில் இடம்பெறவேண்டும் என்பதை உறுதி செய்ய அதிகாரிகளை, சென்னையில் சந்திக்கிறார். அடுத்த வாரம் முதல்வர் சட்டசபையில் அதையும், பயோ காஸ் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவிக்க இருக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கான நாள் நெருங்குகிறது.

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு ஒன்றினை இது சம்பந்தமாக தொடருகிறார். அந்த வழக்கு ஏப்ரல் 1 அன்று விசாரணைக்கு வருகிறது. நகர்மன்றத் தலைவர் சார்பாக மூத்த வழக்கறிஞர் எம். அஜ்மல் கான் ஆஜராகிறார். அரசிடம் சில விளக்கங்கள் கோரி - வழக்கினை ஏப்ரல் 3 தேதிக்கு ஒத்திவைக்கிறார் நீதிபதி.

வழக்கு - மீண்டும் ஏப்ரல் 3 அன்று விசாரணைக்கு வருகிறது. இல்லாத ஒரு சட்டப்பிரிவை (அதாவது செப்டம்பர் 2011 இல் நீக்கப்பட்ட ஒரு சட்டப்பிரிவை) மேற்கோள்காட்டி - உறுப்பினர்களும், அதிகாரிகளும் - நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏப்ரல் 5, 2013 அன்று நகர்மன்றத்தலைவர் மீது கொண்டு வந்துள்ளார்கள் என்பதை வழக்கறிஞர் எடுத்துக் கூற - ஏப்ரல் 5, 2013 அன்று நடக்க இருந்த நம்பிக்கை இல்லாத்தீர்மான கூட்டத்திற்கு தடை விதிக்கிறார் நீதிபதி கே.கே.சசிதரன்.

சூழ்ச்சிகாரர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன் யார் என்று அன்று நிரூபணம் ஆகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நகரின் அதிகாரவர்க்கமும், ஆதிக்கசக்திகளும், நிலப்பிரபுத்துவவாதிகளும், ஊழல் வாதிகளும் பெருத்த ஏமாற்றம் அடைகிறார்கள்.

ஏப்ரல் 4, 2013. இடைக்காலத் தடை பெற்றதற்கு அடுத்த நாள். சென்னை தலைமை செயலகத்தில், பனைப்பொருள் இலாகாவிற்கு சொந்தமான இடத்தினை பப்பரப்பள்ளிக்கு மாற்றாக குப்பைக்கொட்ட இடம் கோரி - கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலர் திரு சந்தானம் IAS அவர்களை, நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் - நேரில் சந்தித்து, கடிதம் கொடுக்கிறார்.

விபரங்களை கேட்டறிந்த அவர் - இத்துறையை நேரடியாக இயக்கும் Khadi and Village Industries Board அமைப்புடைய - தலைமை செயல் அலுவலர் (CEO) திரு உ.சகாயம் IAS அவர்களை சந்திக்க அறிவுறுத்துகிறார். உ.சகாயம் IAS அவர்களை உடனடியாக - சென்னை குறளகத்தில் இருந்த அவரின் அலுவலகத்தில் சந்திக்கிறார் காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக்.

எவ்வளவு நிலம், எதற்காக நிலம் கேட்கப்படுகிறது போன்ற விபரங்களை கேட்ட உ.சகாயம் IAS - இது சம்பந்தமான பிரிவு அலுவலகம் திருநெல்வேலியில் உள்ளது; அவர்களிடம் அறிக்கை கேட்கிறேன்; முடிந்தால் சந்தை விலைக்கு வழங்க ஆவனம் செய்கிறேன் என்ற உறுதி வழங்கி நகர்மன்றத்தலைவரை வழி அனுப்புகிறார் அவர்.

ஏப்ரல் 10, 2013 அன்று - சட்டசபையில், காயல்பட்டினம் நகராட்சிக்கு - புதிய அலுவலக கட்டிடம் கட்டவும், பயோ காஸ் திட்டம் அமைத்திடவும் - நிதி ஒதுக்கி, அறிவிப்பு வெளியிடுகிறார் அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா.

அந்த சந்திப்புக்கு பிறகு - மூன்று வாரத்தில் - அதாவது ஏப்ரல் 22, 2013 தேதிய கடிதம் மூலமாக - பப்பரப்பள்ளிக்கு மாற்றாக குப்பைக்கொட்ட இடம்கோரி நகர்மன்றத்தலைவர் வைத்த கோரிக்கையை ஏற்று - சந்தை விலைக்கு, அரசு விதிமுறைகள்படி அந்நிலத்தை வழங்கிட - தமிழ்நாடு மாநில பனை வெல்லம் (ம) தும்பு விற்பனைக் கூட்டுறவு இணையம் - நகராட்சிக்கு கடிதம் அனுப்புகிறது [ந.க.எண் 703/அ 2/02 (22.04.2013)].

இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: டிசம்பர் 5, 2017; 12:30 pm]
[#NEPR/2017120501]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved