Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:53:54 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21152
#KOTW21152
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 5, 2018
காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு? “நடப்பது என்ன?” குழுமம் தகவலறிக்கை!! (பாகம் 2)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 989 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }

காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் எவ்வளவு பணத்தை விட்டுச் சென்றுள்ளார் என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-

அக்டோபர் 2011 - உள்ளாட்சி தேர்தலில், அமோக வெற்றிபெற்ற திருமதி ஐ.ஆபிதா சேக் - காயல்பட்டினம் நகராட்சி தலைவியாக, பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற காலகட்டத்தில் (2011), காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் எவ்வளவு தொகை இருந்தது, அவரின் ஐந்தாண்டு பதவி காலத்தில் (2011 - 2016) எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது, அவரின் பதவிக்காலம் நிறைவில் (2016) - காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் எவ்வளவு தொகை இருந்தது போன்ற விபரங்களை பார்ப்பதற்கு முன்பு - அவர் கையில் வந்த காயல்பட்டினம் நகராட்சி, எந்த நிலையில் வந்தடைந்தது என பார்க்கலாம்.

2006 ஆம் ஆண்டு, தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வுக்கு பின்னர் நடந்த திரைமறைவு காட்சிகள், பேரங்கள் - முகநூல், வாட்சப் போன்ற சமூக ஊடகங்கள் இல்லாத காலகட்டம் என்பதால் - பலருக்கு தெரியாது.

2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காயல்பட்டினம் நகராட்சியின் தலைவராக ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் - பொறுப்புக்கு வந்தார். இவர் மக்களால், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டவர்.

நகரை சார்ந்த ஒரு அமைப்புக்கும், ஒரு தனி நபருக்கும் இடையே நடந்த அதிகாரப்போட்டியில் பொறுப்புகள் பங்களிக்கப்பட்டது.

தமிழகத்திலேயே எங்கும் காணாத அவலம் - ஒருவர் 2.5 ஆண்டு பதவியில் இருப்பார்; மற்றொருவர் - மீதி 2.5 ஆண்டு இருப்பார் என துணைத்தலைவர் பதவி, இருவருக்கு கூறுபோடப்பட்டது.

இந்த ஏற்பாடு நீண்ட நாட்கள் - சுமூகமாக நிலைக்கவில்லை.

நவம்பர் 27, 2007 அன்று, தான் பதவிக்கு வந்த ஒரே ஆண்டில், ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் ராஜினாமா செய்தார். நகரின் அனைத்து ஜமாஅத்துகளுக்கும், பொது நல அமைப்புகளுக்கும் அவர் அனுப்பிய தன்னிலை விளக்கம் கீழே வழங்கப்படுகிறது.

==============================

27-11-2007 அன்று என் தலைமையில் நடைபெற்ற நகராட்சிக்கூட்டத்தில் உறுப்பினர் சொளுக்கு அவர்கள் தனது வார்டில் சாலை போடுவது பற்றி ஏன் அஜண்டாவில் இடம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டை எழுப்பினார்.

எல்லா இடங்களிலிருந்தும் சாலைப்பணிகள் பற்றிய மனுக்கள் அதிக அளவில் வந்துள்ளது. நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே அங்கீகரித்த தீர்மான சம்பந்தப்பட்ட சாலைப்பணிகள் மட்டும் இக்கூட்ட அஜண்டாவில் சேர்ப்பது என்றும், மற்ற புதிய சாலைப்பணிகளை அடுத்த கூட்டத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்றும் நானும் நிர்வாக அதிகாரியும் முடிவு செய்ததை நான் விளக்கினேன். அதன் பிறகும் என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத உறுப்பினர் சொளுக்கு அவர்கள், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டடார்.

அவரோடு காசிராஜன் என்ற உறுப்பினரும் மற்றும் சில உறுப்பினர்களும் கூச்சல் குழப்பம் செய்தார்கள். மிகவும் தரக்குறைவாக என்னை விமர்சனம் செய்து பேசினார்கள். பதவி விலகும்படியாக கூச்சலிட்டார்கள். தொடர்ந்து கூட்டத்தை நடத்த விடாமல் குழப்பம் விளைவித்தார்கள்.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, நான் எனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு ஆளாக்கப்பட்டு பதவி விலகல் கடிதத்தை நிர்வாக அதிகாரி அவர்களிடம் கொடுத்து விட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினேன். எனது பதவி விலகலை கேள்வியுற்ற ஐக்கியப் பேரவை பொறுப்பாளர்கள் மற்றும் சர்வ கட்சியினர்கள் என்னை சந்தித்து ராஜினாமாவை திரும்பப் பெற கேட்டுக் கொண்டதின் பேரில் நான் அன்றே, எனது பதவி விலகல் கடிதத்தை நிர்வாக அதிகாரி அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டேன்.

என்னை எப்படியாவது பதவியிலிருந்து இறக்கம் செய்தால் தான் தங்களது நோக்கம் நிறைவேறும் என்ற எண்ணம் கொண்ட சில உறுப்பினர்கள் இதனை பெரிதுபடுத்தி மிகைப்படுத்தி ஊடகங்களுக்கு பொய்யான செய்திகளை கொடுத்துள்ளார்கள்.

நமதூர் அனைத்து ஜமாஅத், பொது நல அமைப்புக்களின் கூட்டமைப்பான காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் வேண்டுதலை ஏற்று நமதூருக்கு நன்மையாக காரியங்களைச் செய்யலாம் என்ற தூய்மையான எண்ணத்தோடு நான் நகராட்சி தலைவராக சம்மதித்தேனே தவிர பதவி ஆசை எனக்கு துளியும் இருந்ததில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான நிர்வாகம் நடைபெறுவதற்கு ஊர் மக்கள் உறுதுணையாக இருக்கும்படியான அன்புடன் வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
தலைவர், மூன்றாம் நிலை நகராட்சி,
காயல்பட்டணம்.





படங்கள்: கோப்பு

===============

இந்த தன்னிலை விளக்கத்தில் இருந்து நாம் அறிய முடிவது என்ன?

ஊரின் அனைத்து ஜமாஅத்துகளின் ஆதரவும், பொது நல அமைப்புகளின் ஆதரவும், பண பலமும் இருந்தாலும், மன தைரியம், திறமை இருந்தால் மட்டுமே - நகர்மன்றத்தலைவர் பொறுப்பில், ஊழல் / மோசடி செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கில் நகராட்சிக்குள் நுழைந்தவர்கள் மத்தியில், நேர்மையாக நிலைக்க முடியும் என்பதே ஆகும்.

முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் சந்தித்த பிரச்சனைகளை விட, ஊழல்/மோசடி புரியவேண்டும் என்ற ஒரே நோக்கில் நகராட்சிக்குள் நுழைந்திருந்த பெருவாரியான உறுப்பினர்கள் / அதிகாரிகள் மூலம் - பல மடங்கு அதிக நெருக்கடிகளை சந்தித்த திருமதி ஐ.ஆபிதா சேக், ராஜினாமா செய்யவில்லை; அந்த நெருக்கடிக்கு பின்னால் இருந்த நகரின் ஜனநாயக விரோத அமைப்புகளிடமும், நகரின் ஆதிக்க சக்திகளிடமும், நிலப்பிரபுத்துவவாதிகளிடமும், ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளிடமும் சரண் அடையவில்லை; மாறாக எதிர்த்து போராடினார்.

2011 - 2016 ஆபிதா சேக் பதவிக்காலத்தை பொதுமக்கள் மீள் பார்வை செய்யும் போது, இந்த பின்னணியையும், நாட்டின் உள்ளாட்சி மன்றங்களில் நிலவும் சூழல்களையும் அறிந்திருந்தால் மட்டுமே - முழுமையான பார்வையை பெற முடியும் என்பதற்காகவே - இந்த வரலாற்று சுவடு - இங்கு நினைவு கூறப்படுகிறது.

[தொடரும்]

இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: டிசம்பர் 2, 2018; 6:30 pm]
[#NEPR/2018120202]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved