Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:09:13 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21740
#KOTW21740
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 5, 2020
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை விளக்கி ஐக்கியப் பேரவை சார்பில் பொதுக்கூட்டம்! நகர பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1497 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள – குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து இந்தியா முழுக்கவும் பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் - கண்டன ஆர்ப்பாட்டம், கண்டனப் பேரணி, எதிர்ப்பு அடையாள அட்டை அணிதல், பள்ளிவாசல்களில் சிறப்புப் பிரார்த்தனை என தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்படும் எதிர்ப்பின் வரிசையில், கடந்த 29.01.2020. புதன்கிழமையன்று 19.00 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் குடியுரிமைத் திருத்தச் சட்ட விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.





ஐக்கியப் பேரவை தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



ஐக்கியப் பேரவை துணைச் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்த்துரையாற்றினார். “குடியுரிமைத் திருத்தச் சட்டமும், அதன் விளைவுகளும்” எனும் தலைப்பில் - தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன், “இந்தியாவின் உருவாக்கத்தில் முஸ்லிம்களின் பங்கு” எனும் தலைப்பில் – இந்திய தேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.





இதில், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்குத் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.















முன்னதாக அன்று காலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் – காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவில் உள்ள ஐக்கியப் பேரவை அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து உரையாற்றிச் சென்றார். அதில் நகரப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mohamed noohu (dubai) [05 February 2020]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46479

வேறு சில போட்டோக்களும் இணைந்துருக்கிறது . சரி பார்க்கவும்

Moderator: தொடர்பில்லாத படங்கள் அகற்றப்பட்டன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Mohamed Mohideen Syed Bajee (Riyadh) [06 February 2020]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46480

செய்திக்கு தொடர்பில்லாத புகைப்படங்கள் பதியப்பட்டுள்ளது.

Moderator: தொடர்பில்லாத படங்கள் அகற்றப்பட்டன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...வரலாற்று சிறப்பு மிக்க ஓர் பொதுக் கூட்டம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [07 February 2020]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46482

காயல்பட்டணம் வரலாற்றில் மட்டுமல்ல முஸ்லீம் ஐக்கிய பேரவை வரலாற்றிலும் ஒரு மைல்கல்லாக இந்த பொதுக் கூட்டத்தை நான் பார்க்கிறேன்

மேடையிலே அமர்ந்திருக்கின்ற பழைய முகங்களை விட ஒரு வித்தியாசமான முகங்கள் இந்த கூட்டத்தை வசீகரிக்கின்றன.

உலக நாடுகளில் ''மஹ்லரி'' என்ற சிறப்பு பெயருடன் வலம் வரும் அஹமது அப்துல் காதிர் ஆலிம் அவர்கள், அதே மஹ்லறாவில் தனது மார்க்க ஞானத்தை வளர்த்துக் கொண்டு மஹ்லரி என்ற பட்டத்தையும் பெற்று மக்களிடம் செல்வாக்கு மிக்க சொல்வாக்கு மிக்க ஆலிமாக திகழும் அப்துல் மஜீத் ஆலிம் அவர்கள், 150 ஆண்டுகளை தாண்டி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஷாதுலிய்யா தரீக்காவின் தலைமை பீடமான ஜாவியாவின் முது பெரும் முதல்வர் சாதாரண தோற்றத்துடன் வலம் வரும் முஹம்மது பாரூக் ஆலிம் பாஸி அவர்களும் ஒரே மேடையில் எல்லோருடைய கண்களும் வியக்கும் வண்ணம் அமர்ந்திருக்கும் ஒரு அற்புதமான காட்சியை படமாக்கி இங்கு வெளியிட்டிருப்பதையும் நிதர்சன உண்மையையும் நான் கண்டு புளகாங்கிதம் அடைந்தேன்.

ஆயத்துல் குர்ஸி என்ற அற்புத மாமருந்தை அல்லாஹ் திருமறையில் அருளியிருந்தாலும் அதை நபி தோழர் ஒருவருக்கு சொல்லிக் கொடுத்தவன் அபுல் ஹிக்கம் என்று அழைக்கப்பட்டு பின்னர் ஷைத்தான் என்று அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட ஒருவன்தான் என்று உலமாக்கள் சொல்லிக் காட்டுவார்கள். அப்படிப் பட்ட ஒரு ஷைத்தானின் வழி தோன்றலான அல்லது மறுபதிப்பான நரேந்திர மோடி இந்த அற்புதத்தை நிகழ்த்தி காட்டி இருக்கிறார்.

மந்தரையின் சூழ்ச்சியினால் மனம் மாறி கைகேயி மஞ்சள் குங்குமம் இழந்தால். வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள் பஞ்ச பாண்டவரை பகைத்து மாண்டார்கள். என்று இதிகாசங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அந்த வழியில் அமித்ஷாவின் சூழ்ச்சியால் நரேந்திர மோடி தறி கெட்டு ஆவணம் தலைக்கேறி இன்று முஸ்லிம்களுக்கு எதிரான தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். முத்தலாக் சட்டம், அயோத்தியில் பாபர் மசூதியை தரைமட்டமாக்கி விட்டு நீதி மன்றம் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பு என்று தொடர்ந்து அவர் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு தற்காலிக வெற்றியை பெற்றிருப்பதாலும் தமிழக ஆட்சியாளர்கள் புரட்சி தலைவி அவர்களின் போர்க்குணத்தை புறந்தள்ளி விட்டு மோடி அரசின் தமிழக கிளையாக இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதால் இன்று சட்டமாகியுள்ள அந்த போராட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளதாக மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார். ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்கள் பாஷையில் சொல்வதானால் ''விநாச காலே விபரீத புத்தி'' என்றுதான் இதை சொல்லவேண்டும். ஒரு மனிதனின் ஆணவத்துக்கு முடிவு காலம் நெருங்குவதையே இது காட்டுகிறது. அதே நேரம் பிரிந்து கிடக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை ஒரே குடைக்குள் கீழ் கொண்டு வந்திருக்கும் ஓர் அற்புதமான செயலும் இங்கே அரங்கேறி இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்.

இந்த ஒற்றுமை தொடரட்டும்.
இந்தியா எங்கள் தாய்நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு
என்ற தாரக மந்திரம் திக்கெட்டும் முழங்கட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. புகைப்படம் சம்பந்தமாக..
posted by Ibrahim Ibn Nowshad (Singapore) [09 February 2020]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 46483

செய்திக்கு தொடர்பல்லாத இரண்டு KWAB பழைய புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளதே..

Moderator: தொடர்பில்லாத படங்கள் அகற்றப்பட்டன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved