Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:53:22 PM
ஞாயிறு | 1 செப்டம்பர் 2024 | துல்ஹஜ் 1858, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:2215:2518:3119:41
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்04:40
மறைவு18:26மறைவு17:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:48
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4719:1119:36
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5387
#KOTW5387
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 2, 2011
முடிவுக்கு வருகிறது கல்யாண சீசன்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 7747 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம், கீழக்கரை உள்ளிட்ட முஸ்லிம்கள் செறிவாக வசிக்கும் ஊர்களில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதங்களிலும், மே மாதங்களிலும் திருமண நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறும்.

காயல்பட்டினத்தில் இவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 30 தம்பதியருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திருமண நிகழ்ச்சி நடைமுறைகள்:-

மணமேடை:

பெரும்பாலும் மணமக்களின் இல்லங்களையொட்டிய தெருப்பகுதிதான் திருமண மேடையாக இருக்கும். எனினும், நகரின் கனிசமான மக்கள் பள்ளிவாசல்களிலும், திருமண மண்டபங்களிலும், மத்ரஸா, சங்கங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் தமது இல்லத் திருமணங்களை நடத்தும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாலை அழைப்பு (Reception) நிகழ்ச்சி:

நகரின் பெரும்பான்மையோர் திருமணத்தையொட்டி அழைப்பு (reception) நிகழ்ச்சி நடத்துவர். இரவு திருமண நிகழ்ச்சியெனில் அன்றிரவிலோ, பகல் திருமணம் எனில் மறுநாள் காலையிலோ திருமண நிகழ்ச்சி நடைபெறும். திருமண நிகழ்ச்சியில்போது, வந்தோரை வரவேற்பது சிரமமென்று கருதியே, முந்திய மாலையில் அழைப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் வழமை நடைமுறையில் உள்ளது.



அழைப்பு நிகழ்ச்சிக்கு வருவோருக்கு பன்னீர் தெளித்து, மலர் - கற்கண்டு கொடுத்து, சாக்லேட் போன்ற இனிப்பு மிட்டாய்களை, புத்தாடை அணிந்த சிறுவர்கள் கொண்டுவந்து கொடுப்பர். சில இடங்களில் குளிர்பானம் வழங்கப்படுவதுமுண்டு.

மணமகன் நகர்வலம்:

திருமணங்களில் மணமகனுக்கு மாலை அணிவிக்கப்பட்டிருக்கும். அரபி கீதங்கள் பாடப்பட்டு அவர்கள் தம் வீடுகளிலிருந்து, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கிலோ அல்லது கால்நடையாகவோ, முக்கிய தெருக்கள் வழியாக நகர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, திருமண நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு அழைத்து வரப்படுவர். மணமகனுடன், அவர் வீட்டிலும், மணமகள் வீட்டிலுமுள்ள சிறுவர்களுக்கு சிறிய அளவிலான மாலை அணிவிக்கப்பட்டு, மணமகனுடன் கைகோர்த்த குட்டி மாப்பிள்ளைகளாக அவர்களும் இந்நகர்வலத்தில் உடன் வருவர். மற்றொரு சாராரிடம் இந்த மாலை அணியும் வழக்கம் கிடையாது.







மணமேடை நிகழ்ச்சிகள்:

இருமண வீடுகளிலுள்ள முக்கிய ஆண் உறவினர்கள் சூழ அமர்ந்திருக்க, மேடையின் நடுவில் மணமகன் அமர்ந்திருப்பார்.

ஹாஃபிழ்கள் நிறைந்த காயல்பட்டினத்தில், திருமண நிகழ்ச்சியைத் துவக்குவதற்காக மணவீட்டைச் சார்ந்த ஒருவர் திருமறை குர்ஆன் வசனங்களிலிருந்து கிராஅத் ஓதுவார்.

பின்னர் வரவேற்புரை நிகழ்த்தப்படும். தொடர்ந்து வாழ்த்துரை, அரபி மொழியில் குத்பா பேருரை, ஈஜாப் கபூல் எனும் வாழ்க்கை ஒப்பந்தம் ஆகியன மார்க்க அறிஞர்களால் நடத்தப்படும். நன்றியுரைக்குப் பின் ஒரு மார்க்க அறிஞர் துஆ கூட்டுப் பிரார்த்தனை செய்வார்.





நகரின் மற்றொரு சாராரது திருமண நிகழ்ச்சியில், திருமண உரை ஒன்றை மார்க்க அறிஞர் தமிழில் வழங்குவார். அதனைத் தொடர்ந்து மணப்பெண்ணின் வலீ - பொறுப்பாளர் மணமகனிடம் வாழ்க்கை ஒப்பந்த வாக்குமூலம் பெற்றுக்கொள்வார். நன்றியுரைக்குப் பின், “ஸுப்ஹானகல்லாஹும்ம...” எனத் துவங்கும் கஃப்ஃபாரா துஆ ஓதி அமர்வு நிறைவுறும்.

இணைக்கப்பட்ட கூடுதல் படம்...



இவ்வாறாக, திருமண மேடை நிகழ்ச்சிகள் நிறைவுற்றதும், நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டவர்கள் மணமகன், இருமண வீடுகளின் முக்கிய அங்கத்தினருடன் முஸாஃபஹா (கைலாகு) செய்து, வாழ்த்து தெரிவிப்பர்.



மணப்பெண்ணைச் சந்தித்தல்:

மறுபுறம், மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு பெண்கள் பகுதியில் மேடையில் அமர்த்தப்பட்டிருப்பார். திருமண வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி முடிவுற்றதும், மணமகன் அம்மேடைக்கு வந்து மணமகளின் முன்னெற்றி முடியைப் பிடித்தவாறு சிறிது நேரம் நிற்பார். பின்னர் மார்க்க அறிஞர் ஒருவர் துஆ - பிரார்த்தனை ஓத, அனைவரும் “ஆமீன்” கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்வர்.

(மற்றொரு சாரார் இதே நிகழ்ச்சியை பெண்ணின் “மஹ்ரமான” (திருமண உறவுக்குத் தடை செய்யப்பட்ட தந்தை, தாய்மாமன், சகோதரன், மாமனார் உள்ளிட்ட) ஆண்களும், ஆணுக்கு “மஹ்ரமான“ (திருமண உறவுக்குத் தடை செய்யப்பட்ட தாய், தந்தை-தாயுடன் பிறந்த சகோதரிகள், உடன்பிறந்த சகோதரிகள் உள்ளிட்ட) பெண்களும் இருக்க, நபிகளார் கற்பித்த துஆ ஒன்றை மட்டும் மணமகன் சொல்லிப் பிரார்த்தித்து, பெண்ணின் முன்னெற்றி முடியைப் பிடித்திருப்பார்.)

மஹர் எனும் மணக்கொடை:

பின்னர், மணமகளுக்கு மணமகன் மணக்கொடையாக “மஹர்” கொடுப்பார். அது பணமாகவோ, தங்கமாகவோ, தங்க நகையாகவோ, இதர விலைமதிப்புள்ளவையாகவோ இருக்கும்.

மணமக்களிடையே விளையாட்டுகள்:

முற்காலங்களில் திருமண உறவு குறித்து மணமக்களுக்கு போதிய அறிவு இருக்காது என்பதைக் கருத்தில் கொண்டு, திருமணம் முடிந்த இரவில் மணமகன் - மணப்பெண்ணுக்கிடையில் பல்லாங்குழி, ஒருவர் கையிலிருந்து மற்றவர் வெற்றிலையைப் பிடுங்குதல் உள்ளிட்ட - மண உறவை உணர்த்தும் ஏற்படுத்தும் விளையாட்டுகள் விளையாடச் செய்யப்படும். இருமணவீட்டு பெண்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருக்க, மணமகன்-மணமகளுக்கிடையில் இந்த விளையாட்டுகள் அரங்கேற்றப்படும். தற்காலத்தில் அது நகரில் பெரும்பாலும் குறைந்திருந்தாலும், இன்றளவும் பல இல்லங்களில் அவ்விளையாட்டுகள் அரங்கேற்றப்படுகிறது.

விருந்து ஏற்பாடுகள்:

அழைப்பு முடிந்த அன்றிரவு ஒரு விருந்து நடைபெறும். அவ்விருந்தில் வட்டார உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருப்பர். திருமண நிகழ்ச்சி முடிந்து நடத்தப்படும் மதிய விருந்தில், சொந்தங்கள், தூரத்து உறவினர்கள், நண்பர்கள், உடன் படித்தவர்கள், ஊரில் பொதுநலப் பணிகளிலிருப்போர், நகரப் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் அழைக்கப்பட்டு விருந்து கொடுத்து உபசரிக்கப்படுவர். எனினும், இந்த விருந்தின் அளவு அவரவர் வசதிக்கேற்ப கூடுதலாகவோ, குறைவாகவோ அமையும்.

நகரின் மற்றொரு சாரார் நடத்தும் திருமணம் இந்த நடைமுறையிலிருந்து பெரும்பாலும் வேறுபட்டிருக்கும். அதாவது, மாலையில் நடத்தப்படும் அழைப்பு நிகழ்ச்சிகள் தேவையற்றது என்று கருதி அதே மாலையிலேயே திருமண நிகழ்ச்சியை நடத்துவோரும் உண்டு. அல்லது அழைப்பு நிகழ்ச்சி இல்லை என்ற நிலையுடன் அன்றிரவோ அல்லது மறுநாள் காலையிலோ திருமண நிகழ்ச்சி நடத்தப்படும். திருமண நிகழ்ச்சி நிறைவுற்றதும் மேற்சொன்ன அடிப்படையில் நகர மக்கள் அழைக்கப்பட்டு, விருந்து கொடுக்கப்படுவர்.

விருந்து பதார்த்தங்கள்:

விருந்து என்பது பெரும்பாலும் வெறும் சோறு, களறி கறி, கத்திரிக்காய் பருப்பு, புளியாணம் (ரசம்) ஆகிய பதார்த்தங்களைக் கொண்டிருக்கும். வெறும் சோற்றுக்கு பதில் நெய்ச்சோறு சமைக்கப்பட்டால் புளியாணம் அதில் இடம்பெறாது.

சில நேரங்களில், பிரியாணி பரிமாறப்படும். காயல்பட்டினம் முறைப்படி பிரியாணி சமைப்பது பாரம்பரிய பழக்கமாக இருந்தாலும், சுவைமிக்க அந்த உணவுப் பதார்த்தம் கூடுதலாக உட்கொள்ள இயலாது என்பதால் சிலர் ஆம்பூர் பிரியாணி சமைப்பர். காயல்பட்டினம் பிரியாணியில் காரம் குறைவாகவும், முந்திரி பருப்பு உள்ளிட்ட மேவா பொருட்கள் அதிகமாகவும் இருக்கும். ஆம்பூர் பிரியாணி உள்ளிட்ட இதர பிரியாணி வகைகளில் காரம் சற்று தூக்கலாகவும், மேவா பொருட்கள் இல்லாமலும் இருக்கும்.

எத்தனை உணவு வகைகள் இருந்தபோதிலும், காயல்பட்டினம் நகர மக்கள் பெரும்பாலும் விரும்புவது, வெறும் சோறு, இறைச்சி, கத்திரிக்காய் பருப்பு, புளியாணம் கொண்ட களறி சாப்பாட்டைத்தான்.

உண்ணும் முறை:

பெரும்பாலும் ஒரே தட்டில் பலர் சாப்பிடும் வகையில் உண்ணும் முறை இருக்கும். உண்ணும் உணவைக் கொண்ட தட்டு சஹன் அல்லது தாலம் என்றழைக்கப்படும். ஆண்களெனில் ஒரு சஹனுக்கு இருவரும், பெண்களெனில் ஒரு சஹனுக்கு மூவர் அல்லது நால்வரும் ஒன்றாக அமர்ந்து, ஒரே தட்டில் உண்ணுவர். சில நேரங்களில் ஒரு சஹனுக்கு இரண்டு பெண்கள் அமர்வதும் உண்டு.



உணவுத்தட்டு அமைப்பு:

தட்டில் சோறு பரத்தப்பட்டிருக்கும். அதன் மேல் இரண்டு கிண்ணங்களில் இறைச்சியும், ஒரு கிண்ணத்தில் கத்திரிக்காய் பருப்பும், மற்றொரு கிண்ணத்தில் புளியாணமும் வைக்கப்பட்டிருக்கும். சில வருடங்களுக்கு முன்பு வரை இக்கிண்ணங்கள் சிட்டி என்றழைக்கப்படும் மண் கிண்ணங்களாக இருந்தன. சஹன் - தாலங்கள் செம்பாலானதாக இருந்தன. நாளடைவில் தாலங்கள், கிண்ணங்கள் அனைத்தும் சில்வர் பாத்திரங்களாக முற்றிலும் மாறிவிட்டன. அதுபோல தண்ணீர் மண் கலசங்களில் பரிமாறப்படும். தற்போது பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தண்ணீர் தாலத்துடன் வைக்கப்படுகிறது.

ஒரே சஹனில் சாப்பிடும் வழக்கமில்லாத - முஸ்லிமல்லாத விருந்தினர்கள் மற்றும் வெளியூர் விருந்தாளிகளுக்கு தனித்தனி தட்டில் அல்லது வாழை இலையில் விருந்து உபசரிப்பு நடைபெறும்.

திருமணத்திற்கு பொதுவாகவும், விருந்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் பொதுமக்கள் அழைக்கப்படுவர்.

கத்னா - விருத்தசேதன நிகழ்ச்சிகள்:

முற்காலங்களில், திருமண நிகழ்ச்சிகளையொட்டி திருமணம் முடிந்த இரண்டு அல்லது மூன்று தினங்கள் கழித்து, மணவீட்டாரின் இல்லங்களிலிருக்கும் சிறுவர்களுக்கு கத்னா (விருத்தசேதனம்) செய்வர். இதையொட்டி, அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அரபி கீதங்கள் பாடப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்திலோ அல்லது கால்நடையாகவோ நகர்வலமாக அழைத்துச் செல்லப்படுவர். பின்னர், கைதேர்ந்த நாவிதர் ஒருவர் அச்சிறுவனுக்கு விருத்தசேதனம் செய்வார்.





ஆனால், குழந்தை பிறந்த சில தினங்களிலேயே விருத்த சேதனம் செய்யும் வழக்கம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் காயல்பட்டினத்தில் பழக்கமாகிப் போனதையடுத்து, சிறுவர்களாக இருக்கும் நிலையில் கத்னா செய்வது மிகவும் குறைந்து, தற்காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டும் நடைபெறுகிறது.

மேற்குறிப்பிடப்பட்ட வழமைகள் விரிவையஞ்சி குறைந்தளவுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Really grateடா
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia) [03 January 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1978

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

நண்பா ஸாலிஹ் !

எப்படி உனக்கு மட்டும் இந்த மாதிரியான யோசனைகள் தோன்றுகிறது. Really grateடா!

நாங்கள் இங்கு ( Foreign ல் ) இருந்தாலும் நமது ஊரில் ஒரு கல்யாணத்தில் கலந்து சோறு,களறி கறி, கத்தரிக்கா, புளியானம் சாப்பிட்டது போல ஒரு திருப்தி ஏற்பட்டு விட்டது. அல்ஹம்து லில்லாஹ்.

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Marriage in kayal
posted by vsm ali (kangxi, jiangmen, china) [03 January 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 1984

mahmood syed காக்கா , சாப்பாட்டுல மட்டும்தான் திருப்தி உணர்வா ? குதிரைக்கு பின்னாலையும் , பல்லக்கு பின்னாலையும் சுத்துன உணர்வு வரலயாக்கும் ?

Salih kaka , இரு சாரார் திருமணத்தைப்பற்றி சொன்ன நீங்கள் , இன்னொரு பிரிவினரை மறந்து விட்டீர்களே ! " சினிமாப்பாட்டு , வான வேடிக்கை " . அல்லாஹ் காப்பாத்தனும் , குத்தாட்டம் மட்டும்தான் நமதூர் கல்யாணத்துக்கு இன்னும் வரவில்லை.

" பல் உள்ளவன் பக்கோடா சாப்பிடுறான், பல்லு போனவன் பஞ்சு மெத்தைய சப்புறான். கல்யாண காரியங்கள் அவரவர் வசதிக்கேற்ப செய்கிறார்கள் .

சமீபத்தில் திருமணம் நடந்தேறிய அத்தனை தம்பதிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் , துஆவும் என்றென்றும் உண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பார்வையை தாழ்த்திக்கொள்ளுங்கள் -குர்ஆன். / முதல் பார்வை உங்களுடையது, இரண்டாம் பார்வை ஷைத்தானுடையது -நபி(ஸல்).
posted by Mustafa (Saudiarabia) [03 January 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1990

Administrator: Message edited prior to approval

சவூதியில் என்னோடு பணிபுரியும் காயல் நண்பனின் மூலம் இந்த செய்தியை படித்தேன். எல்லாம் அருமையான ஏற்பாடுகள். அல்ஹம்துலில்லாஹ்.. ஒவ்வொரு விஷயத்திலும், உங்கள் ஊரின் இருசாரார்களும் கடைபிடிக்கும் நடைமுறைகள் விளக்கப்பட்டிருக்கிறது. அதில் மணப்பெண்ணைச் சந்தித்தல் எனும் பகுதியை படித்ததும் எனக்கு ‘பகீர்’ என்றாகிவிட்டது. தமிழகத்தில் கடந்த சில தலைமுறைகளுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவிய இஸ்லாமிய மக்கள் வாழும் ஊர்களிலெல்லாம் ஓரளவு தீனில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், கிட்டத்தட்ட ஆயிரமாண்டுகாலமாக இஸ்லாத்தை வாரிசுரிமையாக பெற்று வரும் காயலிலா இப்படி ஒரு சமுதாய சீர்கேடு என ஆச்சரியப்பட்டேன்.

இப்பகுதியில் 2-வது சாராரைப்பற்றி சொல்லும்போது,

மற்றொரு சாரார் இதே நிகழ்ச்சியை பெண்ணின் “மஹ்ரமான” (திருமண உறவுக்குத் தடை செய்யப்பட்ட தந்தை, தாய்மாமன், சகோதரன், மாமனார் உள்ளிட்ட) ஆண்களும், ஆணுக்கு “மஹ்ரமான“ (திருமண உறவுக்குத் தடை செய்யப்பட்ட தாய், தந்தை-தாயுடன் பிறந்த சகோதரிகள், உடன்பிறந்த சகோதரிகள் உள்ளிட்ட) பெண்களும் இருக்க.....

இதில் கவணிக்கத்தக்கது, மணமக்களின் மஹ்ரமானவர்கள் மட்டும்தான் கலந்துகொள்கிறார்கள் என்பது சரியான செயல் தான் என்றாலும் முழுமை பெற்றுவிடாது. ஏனெனில் இங்கு மஹ்ரமானவர்கள், மணமக்களுக்கு மட்டும்தான்..கூடியிருக்கும் எல்லோருக்கும் அல்ல. உதாரணமாக, மணமகளின் சகோதரன் மணமகனின் சகோதரியை பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது,..etc. குர்ஆனோ,சுன்னாவோ இதற்கு இடம் தராது. ஆக இதன் வட்டத்தை இன்னும் சுருக்கி, தேவையான ஒருசிலர் மட்டும் இதில் கலந்து கொள்வதே சரி.

இதில் வேதனையான விஷயம், 2-வது சாரார் தான் இப்படி கூட நடந்து கொள்கிறார்களாம். அப்படியெனில், முதல் சாராரின் நிலைமை...

மணப்பெண்ணின் அலங்காரம், மண ஆணுக்குத்தான். சொந்தபந்த ஆண்களுக்கல்ல. மணப்பெண்ணை சந்திக்க வேண்டியவர்(கள்) மட்டும் சந்தித்தால் போதுமானது. மற்றவர்கள், மற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, மணமக்களுக்கு துஆ செய்ய வேண்டியது. பெண்களுக்கும் அதே சட்டம் தான். மேடையில் மணமகளின் முன்னெற்றியை பிடிக்கும் மணமகன், மணமகளுக்கு மட்டும் தான் சொந்தமே தவிர கூடியிருக்கும் பெண்களுக்கல்ல. மணமகனை பார்க்கக்கூடிய மஹ்ரமில்லா பெண்கள், மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், தான் செய்வது விபச்சாரம் என்று. அது கண்களின் விபச்சாரம். இதை நான் சொல்லவில்லை, ‘திருமணம் என்னுடைய வழிமுறை’ எனச்சொன்ன நம் உயிரினும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைச் சொல்.

... குறிப்பிட்ட இவ்விஷயம் உங்கள் ஊரின் அதிகாரப்பூர்வ வெப்தளத்தில் வெளியாகியிருப்பதால், இதற்கு பின்னூட்டமிடுகிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நம்ம ஊரு நம்ம ஊருதான்...
posted by M.Sajith (Dubai) [03 January 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1995

கல்யாண சீசனை முடிந்த கையோடு ஒரு சர்ச்சைய துவங்கிவைத்த ஸாலிஹ் காக்காக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் முஸ்தபா குறிப்பிட்டது தவிர இது போல இன்னமும் நிறைய பழக்கங்கள் நாற்பட நடப்பதால் சமுதாயதில் அங்கீகரிக்கப்பட்டு விடுகிறது.

சிகரட் புகைக்கும் சிறுவனைப்பார்த்து "இந்த வயதிலேயே சிகரட்டா?" என ஏதோ பெரியவயதில் சரி என்பது போலவும், வயது தான் பிரச்சினை புகை இல்லை என்பது போலவும் கேட்கும் வழக்கம் இன்னமும் நம்மில் இருக்கதான் செய்கிறது.

இதுபோலத்தான் அநேக விசயங்களில் நம் அனுகுமுறைகளும் உள்ளது. என்ன சொல்கிறார் என்பதைவிட யார் சொல்கிறார் என்பதுதான் முக்கியத்துவம் பெறுகிறது.

நல்லதை சொல்லும் நன்பர்களும், நமக்கும் இது பொருந்தும், உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல நமக்கும்தான் என உணர்ந்து செயல்படும் வரை இது மாறப்போதும் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சாரார் என்பது கொள்கை அடிப்படையிலல்ல!
posted by SKS, Daruttibyan Network (Kayalpatnam) [04 January 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 1996

அன்பின் காயலர்களே! நமதூரின் சில பழக்கவழக்கங்களைப் பதிவு செய்யவே இந்த செய்தி வெளியிடப்பட்டது.

இச்செய்தியில் “ஒரு சாரார்”, “மற்றொரு சாரார்” என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருப்பது கொள்கை அடிப்படையில் அல்ல! திருமண மேடை நிகழ்வுகள் தவிர அதில் இடம்பெறும் மற்ற அனைத்து நடைமுறைகளும் அனைத்து கொள்கைவாதிகளின் நிகழ்ச்சிகளிலும் நடைமுறையில் உள்ளது. (ஆட்சேபனையற்றதும், ஆட்சேபனையுற்றதும்...)

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு செய்தியை அணுகினால் சரியான பொருள் கிடைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. New Topic
posted by Abu Mahmood (Riyadh) [04 January 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2012

Let's pray for the unity of our Home Town. Brother's please no more Comments regarding this subject.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved