Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:09:42 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6025
#KOTW6025
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 22, 2011
தேர்தல் 2011: திருச்செந்தூர் தொகுதி முடிவுகள் - வரலாற்று பார்வை (1952) - பாகம் 2!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3301 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இத்தொடரின் பாகம் 1 இல் 1977 ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டசபைக்கான தேர்தல் குறித்த தகவலை கண்டோம். 1980 மற்றும் அதற்கு பிறகு நடந்த தேர்தல்கள் குறித்த தகவல்களை காணும் முன் - இந்திய சுதந்திரத்திற்கு பின், 1952, 1957, 1962, 1969, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள் பற்றி காண்போம்.

சுதந்திர இந்தியாவின் முதல் மாநில தேர்தல்கள் - அப்போதைய மெட்ராஸ் மாநிலத்தில், 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் - 9 நாட்களாக நடந்தது. ஜனவரி 2, ஜனவரி 5, ஜனவரி 8, ஜனவரி 9, ஜனவரி 11, ஜனவரி 12, ஜனவரி 16, ஜனவரி 21 மற்றும் ஜனவரி 25 ஆகிய தேதிகளில் நடந்த தேர்தலில், 309 தொகுதிகளில் 375 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தொகுதிகளை விட உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்ததற்கான காரணம் - 309 தொகுதிகளில், 66 தொகுதிகள் இரு உறுப்பினர்களை தேர்வு செய்தது. அத்தொகுதிகளின் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம். திருச்செந்தூர் தொகுதியும் இரு உறுப்பினர்களை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

1674 வேட்பாளர்கள் போட்டியிட்ட இத்தேர்தலில், மொத்த சுமார் 2 கோடியே, 69 லட்ச வாக்காளர்களில் - 54.75 சதவீத வாக்காளர்கள், தங்கள் வாக்கினை அளித்தனர்.

திருசெந்தூர் தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 154,748. இதில் 106,475 வாக்காளர்கள் (68.81 சதவீதம்) தங்கள் வாக்கினை அளித்தனர்.

கிசான் மஜ்தூர் பிரஜா கட்சியின் ஆதித்தன் 25,030 வாக்குகள் பெற்று முதலாவதாக வந்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் வீ.ஆறுமுகம் 22,341 வாக்குகள் பெற்று இரண்டாவதாக வந்தார். இருவரும் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மற்றொரு காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரமணிய ஆதித்தன் 21,224 வாக்குகளும்,

சோசியலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிச்சு 9,177 வாக்குகளும்,

சுயேச்சை வேட்பாளர்கள்

- சண்முகம் 4,850 வாக்குகளும்,
- முத்து 4,791 வாக்குகளும்,
- முத்தையா 4,691 வாக்குகளும்,
- அண்ணல் ஜாபியத் 3,886 வாக்குகளும்,
- வீ.அழகப்பன் 3,127 வாக்குகளும்,
- சீனி குடும்பன் 2,696 வாக்குகளும்,
- என்.வேலுநாரயணன் 1,834 வாக்குகளும்,
- தங்கவேலு 1,458 வாக்குகளும்,
- எபர் குலசேகர ராஜ் 1,370 வாக்குகளும்

பெற்றனர்.

மாநிலத்தில் 375 இடங்களில் காங்கிரஸ் 152 இடங்கள் வென்றது. சி.பி.ஐ. கட்சி 62 இடங்களை பெற்றது. கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி 35 இடமும், Tamil Nadu Toilers கட்சி 19 இடமும், சோசியலிஸ்ட் கட்சி 13 இடமும், க்ரிஷிகர் லோக் கட்சி 15 இடமும், Commonweal கட்சி 16 இடமும், மெட்ராஸ் மாநில முஸ்லிம் லீக் 5 இடமும், பார்வர்ட் பிளாக் (மார்சிஸ்ட்) 3 இடமும், அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு 2 இடமும், நீதிக்கட்சி 1 இடமும், சுயேட்சைகள் 62 இடமும் வென்றனர்.

எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காத சூழலில், ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் கட்சி - பிற கட்சிகளின் ஆதரவோடு, ஏப்ரல் 1, 1952 அன்று ஆட்சிக்கு வந்தது.

அப்போதைய மெட்ராஸ் மாநிலம் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசும் பல பகுதிகளை கொண்டிருந்தது. 1953 ஆம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக அப்பகுதிகள் ஆந்திரா மற்றும் மைசூர் மாநிலங்களுக்கு மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மெட்ராஸ் சட்டசபையின் 140 உறுப்பினர்கள் ஆந்திர மாநிலத்திற்கும், 5 உறுப்பினர்கள் மைசூர் மாநிலத்திற்கும் சென்றனர். மெட்ராஸ் சட்டசபையின் உறுப்பினர் எண்ணிக்கை 230 ஆக குறைந்தது.

இத்தருணத்தில் காங்கிரஸ் அரசாங்கம் அறிமுகப்படுத்த முயற்சி செய்த குலக் கல்வித் திட்டத்தினை எதிர்த்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

இவைகளின் பின்னணியில் மார்ச் 31, 1954 அன்று - காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை பொறுப்பில் இருந்து ராஜாஜி நீக்கப்பட்டு, அப்பொறுப்புக்கு காமராஜர் தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 13 அன்று காமராஜர் மெட்ராஸ் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

1917 ஆம் ஆண்டு நீதிக்கட்சி மெட்ராஸ் மாநிலத்தில் உருவாகியிருந்தது. 1920 - 1937 காலகட்டத்தில் நீதிக்கட்சி மெட்ராஸ் மாகாணத்தின் பிரதான கட்சியாக திகழந்தது. பெரியாரால் 1925 ஆம் ஆண்டு சுய மரியாதை இயக்கம் துவக்கப்பட்டிருந்தது. 1937 ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு நீதிக்கட்சியின் செல்வாக்கு சரிய துவங்கியது. நீதிக்கட்சியில் பெரியாரின் சுய மரியாதை இயக்கம் இணைந்தப்பிறகு, 1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகம் என நீதிக்கட்சி பெயர் மாற்றப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத சிலர் நீதிக்கட்சி என்ற பெயரில் கட்சியினை தொடர்ந்தனர்.

1949 ஆம் ஆண்டு பெரியாருடன் இருந்து விலகி, அறிஞர் அண்ணா - திராவிட முன்னேற்ற கழக கட்சியை துவக்கினர்.

1952 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை என்றாலும் அக்கட்சி வன்னியர்களின் கட்சிகளான - Tamil Nadu Toilers கட்சி, Commonweal கட்சி ஆகியவைகளையும், சில சுயேட்சைகளையும் ஆதரித்தது. திராவிட கழக கட்சியும் தேர்தலில் போட்டியிடவில்லை. திராவிட கழக கட்சி கம்யூனிஸ்டுகளை ஆதரித்தது. நீதிக்கட்சி ஒன்பது இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில வெற்றிப்பெற்றது.

[பாகம் 1] [பாகம் 2] [பாகம் 3] [பாகம் 4] [பாகம் 5] [பாகம் 6]

[தொடரும்]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved