கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல விடுதிகளில் தங்குவதற்கான சேர்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல விடுதிகளில் ஒவ்வோர் ஆண்டும் மாணவ-மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
நடப்பு கல்வியாண்டிலும் (2011-2012) விடுதிகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவ-மாணவியர் சேர்க்கப்படவுள்ளனர்.
விடுதிகளில் சேர விரும்பும் மாணவ-மாணவியரது பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருத்தல் வேண்டும்...
விடுதிக்கும், வசிக்குமிடத்திற்கும் இடையேயுள்ள தொலைவு சுமார் ஐந்து கிலோ மீட்டர் இருத்தல் வேண்டும்... குறிப்பாக, மாணவியருக்கு இந்த தூரம் குறித்த நிபந்தனை கிடையாது.
தகுதியுடைய மாணவ-மாணவியர், தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினிகளிடம் நேரில் அணுகி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளும்படியும்,
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பள்ளி மாணவ-மாணவியர் 30.06.2011 தேதிக்குள்ளும்,
அரசு கல்லூரி விடுதிகளில் சேர விரும்பும் மாணவ-மாணவியர் 03.08.2011 தேதிக்குள்ளும் தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடம் அளிக்கலாம்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |