Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:04:18 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6301
#KOTW6301
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 26, 2011
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நடத்திய - மூன் தொலைக்காட்சியின் புனித கிராஅத்துல் குர்ஆன் போட்டி! முதல் மூன்று பரிசுகளையும் காயலர்கள் தட்டிச் சென்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4267 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னை கண்ணாடி வாப்பா ஹமீதிய்யா அரபிக்கல்லூரி, அல்ஹாஜ் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் ஆகியோருடன் இணைந்து காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் நடத்திய - மூன் தொலைக்காட்சியின் புனித கிராஅத்துல் குர்ஆன் முதற்கட்ட இறுதிப்போட்டிகள் வாவு வஜீஹா கல்லூரி கேளரங்கில் அமைக்கப்பட்டிருந்த பலவண்ண அலங்கார மேடையில் 14.05.2011 முதல் 17.05.2011 வரை நடைபெற்றது.

கடந்த பல மாதங்களாக மூன் தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சி மூலம் தொலைபேசி வாயிலாக நடத்தப்பட்ட கிராஅத்துல் குர்ஆன் போட்டியில் தேர்வானவர்கள் இந்த இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கான முதற்கட்ட இறுதிப்போட்டி வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி கேளரங்கில் 14.05.2011 முதல் 17.05.2011 வரை ஆண்கள், பெண்கள், சிறுவர் ஆகியோருக்கு தனித்தனி நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டன.

14.05.2011 அன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிகளுக்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். ஹாஜி வாவு சித்தீக், ஹாஜி எஸ்.எம்.பி.சித்தீக், ஹாஜி எம்.கே.ஷேக் சிந்தா மதார் என்ற அரஃபாத் சிந்தா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கடைசியாக நடைபெற்ற போட்டிக்கு தமிழகத்தின் தலைசிறந்த காரீகளான மவ்லவீ காரீ முஹம்மத் இஸ்ஹாக், மவ்லவீ காரீ சித்தீக் அலீ பாக்கவீ, இலங்கையின் தலைசிறந்த காரீ மவ்லவீ அப்துல் ஹலீம் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

பின்னர், 17.05.2011 அன்று மாலை 05.00 மணிக்குத் துவங்கிய பரிசளிப்பு விழாவிற்கு இ.டி.ஏ. அஸ்கான் மேலாண்மை இயக்குனர் ஸெய்யித் எம்.ஸலாஹுத்தீனின் சகோதரரான செய்யித் அப்துல் காதிர் என்ற சீனா தானா தலைமை தாங்கினார். ஹாஃபிழ் காரீ கிழ்ரு முஹம்மத் ஆஷிக் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார்.

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் துணைச் செயலாளர் மவ்லவீ ஹாஃபிழ் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் அஸ்ஹரீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, முன்னிலை வகித்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் பரிசுபெறத் தேர்வான மற்றும் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களையும், மூன் தொலைக்காட்சியையும் வாழ்த்திப் பேசினார். பின்னர், மவ்லவீ ஷேக் அப்துல்லாஹ் ஜமாலீ வாழ்த்துரை வழங்கினார்.





இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களை திருக்குர்ஆனை ஓதச் செய்து அதை விரும்பிக் கேட்ட நிகழ்வுகள், இனிமையாக திருமறை குர்ஆனை ஓதுபவருக்கு அவர்கள் வழங்கிய தகுதிகள், இவ்வுலகம் - மறுவுலகத்தில் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் நற்பாக்கியங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ விளக்கிப் பேசினார்.



அடுத்து உரையாற்றிய காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ, திருக்குர்ஆனை இனிய குரல், அழகிய தொனியில் ஓதுவதன் மகத்துவம் குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.



குர்ஆனை இனிமையாக ஓதுவதற்கான சட்டதிட்டங்கள் அடங்கிய தஜ்வீத் அடிப்படையில் ஓதுவது தனி கலைதான் என்றாலும் கூட, அது விரும்பினால் கற்கப்பட வேண்டிய ஒன்றல்ல... மாறாக, குர்ஆனை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கத் துவங்கும்போதே தஜ்வீத் முறையுடன்தான் கற்றுக்கொடுக்க வேண்டும்...

இன்று பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் குர்ஆனைத் துவக்கமாக கற்றுக்கொடுக்கும்போது தஜ்வீதின்றி கற்றுக்கொடுப்பதால், பிற்காலத்தில் அவர்கள் தஜ்வீதுடன் ஓதவேண்டிய நிலை வரும்போது மிகவும் சிரமம் ஏற்படுகிறது... துவக்கத்திலேயே தஜ்வீதுடன் கற்றுக்கொண்டால் இச்சிரமம் தேவையற்றதாகிவிடும்...

எனினும், மலேஷியா, இந்தோனேஷியா உள்ளிட்ட சில நாடுகளில் குர்ஆனை இனிமையாக ஓதும் இந்த தஜ்வீத் கலைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது...


இவ்வாறு தனதுரையில் தெரிவித்த அவர், குர்ஆனை தஜ்வீதுடன் ஓதுவது குறித்த விழிப்புணர்வை மூன் டிவி நிர்வாகம் அவசியம் செய்திட வேண்டுமென்றும், தகவல் தொடர்புகள் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில் இச்செயலைச் செய்திட மூன் டிவி மிகப்பொருத்தமான ஊடகம் என்றும் தெரிவித்தார்.

பின்னர், ஆண்கள் - பெண்கள் - சிறுவருக்கான புனித கிராஅத்துல் குர்ஆன் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு நடைபெற்றது. 30 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான முதற்கட்ட இறுதிப்போட்டியில், காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சார்ந்த காரீ ஏ.டி.முஹம்மத் அப்துல் காதிர் என்பவரின் மக்களான ஹாஃபிழ் எம்.ஏ.சி.அஹ்மத் தாஹிர், ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஜாஹித் ஆகியோர் முதலிரண்டு பரிசுகளையும், காயல்பட்டினம் ஆஸாத் தெருவைச் சார்ந்த ஷாஹுல் ஹமீத் என்பவரின் மகன் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றனர். சிறுவர்களுக்கான போட்டியில் கிழுறு முஹம்மத் ஆஷிக் என்பவரின் மகன் கே.எம்.ஏ.முஹம்மத் அப்துல் காதர் முதல் பரிசு பெற்றார். அவர்களுக்கு பணப்பரிசும், கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டன. பெண்களுக்கு பெண்கள் பகுதியிலேயே பரிசுகள் வழங்கப்பட்டன.







இந்த இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவை நடத்திய வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நிர்வாகத்தைப் பாராட்டி, அதன் நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மானுக்கு கேடயம் வழங்கப்பட்டது. பரிசுகள் மற்றும் கேடங்களை ஹாஜி செய்யித் அப்துல் காதிர் என்ற சீனா தானா வழங்கினார்.



அதனைத் தொடர்ந்து, இறுதிப்போட்டிக்கு நடுவர்களாகப் பணியாற்றிய இலங்கையைச் சார்ந்த மவ்லவீ ஹாஃபிழ் காரீ அப்துல் ஹலீம், தமிழகத்தைச் சார்ந்த மவ்லவீ ஹாஃபிழ் காரீ சித்தீக் அலீ பாக்கவீ ஆகியோர் தமதினிய குரல்களில் திருமறை குர்ஆனை கிராஅத்தாக அழகுற ஓதி, பார்வைகளை வெகுவாகக் கவர்ந்தனர். காரீ சித்தீக் அலீ பாக்கவீ - திருமறை குர்ஆனை ஏழு வகைகளில் ஓதும் கலையான ஸபஉ கிராஅத் முறையில் ஓதினார்.





முதற்பரிசு பெற்ற மாணவர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஜாஹித் அலீயும் கிராஅத் ஓதினார்.



பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை மூன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களான ஆஸிஃப் அஹ்மத் குரைஷி, ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் தொகுத்தளித்தனர். மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை துஆவுடன் விழா நிறைவுற்றது.

விழாவில், காயல்பட்டினம் மற்றும் வெளியூர்களைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.



நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மூன் டிவி அங்கத்தினருடன் இணைந்து வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் செய்திருந்தார்.

வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மூன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. விழா வெற்றியுடன் நடத்தியமைக்கு நல வாழ்த்துக்கள்
posted by T.M.RAHMATHULLAH (kayalpatnam TEL. 043692808526) [26 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4710

அஸ்ஸலாமு அலைக்கும்!

பெற்றோர்கள் மக்களுக்கும், மக்கள் பெற்றோர்களுக்கும் கேட்கும் துஆ இறைவன் இடம் சென்றடைய தடை ஏதும் இல்லை எனும நாயக வாக்கியம் இநநிகழ்சிகளை உண்மை படுத்திவிட்டது. அல்ஹம்து லில்லாஹ்.

வெற்றி பெற்று பரிசுகள் வாங்கிய ஹாவ்பிழீன்கள் மூவருக்கும் மற்றும் போட்டியில் பங்கு பற்றிய அனைத்து மக்களுக்கும் நல வாழ்த்துக்கள் மர்ஹபா மர்ஹபா அஹ்லன் வ சஹ்லன்.

இம்மாபெரும் நிகழ்சிகளை நடத்தி, நமதூருக்கும், தங்களுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்த மூன் டிவி, வாவு வ. வ. கல்லூரி, நிறுவனங்கள் மற்றும் பங்கு பற்றிய அனைவருக்கும் எங்கள் அன்பான மனமார்ந்த நல வாழ்த்துக்கள்.

/T.M.Rahmthullah,
8122407211.... 280852 phn.
KPM 26-5-2011 th 22=6=1432

Moderator:Br.T.M.Rahmathullah, pls avoid sending same comment more than one time...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அனைவர்களுக்கும் நன்றிகள்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [26 May 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4713

மாஷாஹ் அல்லாஹ்... இந்த நிகழ்வை பார்க்க, படிக்க சந்தோசம்.

அதிலும் மூன்று பரிசுகளும் காயலருக்கே என்றதும் மிக்க சந்தோசம்.

அதிலும் முதல் இரண்டு பரிசுகள் A.T மாமாவின் இரட்டை குழந்தைகள் தட்டி சென்றது மிக மிக சந்தோசம்.

இந்த மாதிரி பிள்ளைகளை பாராட்ட தகுதி வேனும், எனக்கு இல்லை. ஆகவே நன்றிகள், பெருமை சேர்த்த உங்களுக்கு.

இந்த நல்ல நிகழ்வை நடத்திய அனைவர்களுக்கும் நன்றிகள்.

கூடவே நம் பிள்ளைகளை ஹாபிழ் ஆக ஆக்கவும், ஆலிம்களாக ஆக்கவும் முயற்சி செய்யுங்க.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பதித்த பதிவை இங்கு மீண்டும் பதிப்பது நல்லது என்றே நம்புகிறேன்.
_________________________________
கொஞ்சம் மதரசாக்களில் பார்த்தால் புரியும், நம் பிள்ளைகள் எத்தனை பேர் ஹாபிழ், ஆலிம் ஆக பயலுகிறார்கள் என்று.

சாதரணமாக வழமை போல குரான் ஓத பள்ளிக்கு அனுப்புவதில் எத்தனை பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

டியூஷன்க்கு நேரம் ஆகிவிட்டது, சார் சப்தம் போடுவார், நாளைக்கு பள்ளிக்கு ஓத போகலாம் என்ற வசனத்தை அடிக்கடி வீடுகளில் கேட்கலாம். மாற்றி கேட்டது உண்டா?

பள்ளிக்கு ஓத நேரம் ஆகிவிட்டது, பள்ளிக்கு போ, நாளை டியூஷன்க்கு செல்லலாம், என்று.

இன்னும் ஒன்றை சிந்தித்து பாருங்கள், ஜும்மாவிற்க்கு ஜும்மாஹ் நடத்த நம் ஆலிம் வரவில்லை என்றால், வேறு ஊரில் இருந்துதான் ஆலிமை கொண்டு வர வேண்டியது உள்ளது. இவ்வளவு பெரிய ஊரில் ஆலிமுக்கு பஞ்சம்.. இது கொடுமை இல்லையா.

சிந்திப்பவர்கள் சிந்தியுங்கள், என்னையும் கூடதான்.
______________________________________
ஆகவே முயற்சி செய்தால் வல்ல ரஹ்மான் உதவி செய்ய மாட்டானா? முயற்சி செய்யுங்க..அதிக ஆலிம்களை உருவாக்குங்க...இன்ஷாஹ் அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாழ்த்துக்கள்.
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [26 May 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4719

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ்! மிஹவும் அருமையஹா உள்ளது. வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நமதூரின் பாரம்பரியம் மீண்டும் கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்)
posted by A.W.Md Abdul Cader Aalim bukhari (Mumbai) [26 May 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 4720

நமதூரில் பல்லாயிரக்கனக்கான ஹாஃபிழ்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றனர் அல்ஹம்துலில்லாஹ். ஆனால் ஆலிம்கள் மற்றும் காரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே செல்கின்றது. இவ்வாறே இந்த அவல நிலை நீடிக்குமானால் நமதூருக்கு தொழ வைப்பதர்க்கும் ஓதிக் கொடுப்பதர்க்கும் மற்ற ஊரில் இருந்து ஆலிம்கள் மற்றும் காரிகளையும் அழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதுமட்டுமல்லமல் நமதூரில் பல நூற்றாண்டுக்களாக நடைப்பெற்றுவரும் பாரம்பரிய மார்க்க கல்வி பாடசாலைகளை இழக்க நேரிடும்.

எனவே அனைத்து காயல் நல மன்றங்களும் உலக கல்விக்காக எப்படி நீங்கள் பல்வேறு சேவைகளை ஆற்றுகின்றீர்களோ அதைப்போல் ஈருலக கல்வியாகிய மார்க்க கல்விக்காகவும் நீங்கள் நமதூர் மக்கள் மத்தியில் மார்க்க சம்பந்தமான போட்டிகளையும் விழிப்புனர்ச்சிப் போன்ற சேவைகளை செய்வதன் மூலம் நமதூரின் பாரம்பரியம் மீண்டும் கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்) நல்ல எண்ணத்திலும் நீங்கள் இதற்க்கான உடனடி நடவடிக்கைகளை செய்வீர்கள் என்ற நன்னோக்கத்திலும் எழுதுகின்றோம். அல்லாஹ் நம் நல்லெண்ணங்களை கபூல் செய்வானாக... ஆமீன்.

இவன்,
அல் ஹாஃபிழ் A.W.அப்துல் காதர் புஹாரி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வெற்றிவாகை சூடி
posted by Hafil M.K.Abdur Rahman (Mumbai) [26 May 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 4723

அஸ்ஸலாமு அலைக்கும் வெற்றிவாகை சூடி நமதூருக்கு பெருமை சேர்த்து தந்த காரிகளுக்கு என்னுடைய மனமார்நத நல்வாழ்த்துக்கள்.

மேலும் சாளை ஜியாவுத்தீன் காக்காவின் கருத்து அருமையானது. இங்கு என்னுடைய கருத்து என்னவெனில் ஏன் நமதூரின் ஏதேனும் நலமன்றங்களோ அல்லது செல்வந்தர்களோ இதைப்போன்று மாநில அளவில் நடத்தலாமே என்கின்ற அவாவில் இதை நான் எழுதுகின்றேன்.

இன்ஷா அல்லாஹ் நம்முடைய நல்ல எண்ணங்களை அல்லாஹ் கபூல் செய்வானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. A.T. KAKA U R VERY GREAT
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [26 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4724

அஸ்ஸலாமு அழைக்கும். வரஹ்மதுல்லாஹ். மாஷால்லாஹ், நீங்கள் காயல் மானகரத்திர்க்கே ஒரு அழகிய முன்மாதிரி. தாங்கள் துபாயில் பட்ட கஷ்ட்டங்களுக்கு அல்லாஹ் மாபெரும் பொக்கிஷத்தை தங்களுக்கு தந்துள்ளதை பார்த்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.தாங்களும் தங்கள் மக்களும் என் மக்களுக்கும் இதுபோன்ற இழ்மை கொடுத்து எங்களை கண்ணியபடுத்த துஹா செய்யவும்.

NEWS MODERATER

தாங்கள் வெப்சைட்டை மிக அழஹா வடிவமைத்து எனது வாழ்வில் நான் முதல் முறையாக தமிழில் டைப் செய்து அனுப்ப உதவியதுக்கு மிக்க நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Correction
posted by Mohamed Hussain (Chennai) [26 May 2011]
IP: 65.*.*.* United States | Comment Reference Number: 4735

Please change the name of my friend mujaith his name is M.A.C. Mujahith Alim Buhari not Mujahith Ali


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வாழ்த்துக்கள்.
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [26 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4737

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

புனித கிராஅத்துல் குர்ஃஆன் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இன்று இது மாதிரி மார்க்க சம்பந்தமான போட்டிகளை வைத்து மக்களை மார்க்கத்தின் பால் நினைவுப் படுத்தக் கூடிய காலச்சூழலில் இருக்கிறோம். இன்றைய மக்கள் இம்மை சம்பந்தமான காரியங்களுக்கு கொடுக்கக் கூடிய முன்னுரிமை மறுமையை மறக்கச் செய்துவிடுகிறது.

ஆகையால் நம் சமுதாய மக்கள் மார்க்க சம்பந்தமான போட்டிகளை அதிகமதிகம் வைத்து , மறுமையை நினைவு படுத்திக்கொள்வது நல்லது.

"இம்மையை துறக்காதே! - மறுமையை மறக்காதே!! என்பதை நினைவுக் கொண்டு செயல்படுவோமாக.

எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் அனைவரையும் குர்ஃஆன் வழியில் நடந்திட கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Alhamdulillah
posted by M.A.C. AHAMED THAHIR (Kayalpatnam) [26 May 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 4738

Assalamu Alaikum

Thanks for all the wishes from our Kayal Brothers. With out ALMIGHTY ALLAH this has never happened. and Bro Mohideen Abdul Cader has mentioned my paternal uncle Chinna A.T Hajiar in comment no:6.Once Again we thank ALMIGHTY and our Teachers and all who have prayed and wished for our success .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Alhamdulillah
posted by Mohamed Hussain (Chennai) [26 May 2011]
IP: 65.*.*.* United States | Comment Reference Number: 4740

Assalamu Alaikum

It is happy to hear that the state level Qiraath competition was held successfully in our kayal and to add further happiness in that our kayal brothers has brought laurel to our town by sweeping all the three Position especially My friends Ahamed thair and Mujahid has secured first two position .By saying in terms of IPL now they have won the league and now they are qualified for the champions league(All India Level Qiraath Competition) and Hope our Friends Mujahid and ahamed thahir will make our town pride there also ,Insha ALLAH.

This type of islamic competition surely increases the level of interest in islamic education in the future and we could also plan to have annual islamic education festival(as we have it in our college(cresent)) in kayal by inviting other schools and arabic colleges to participate as we do for other sports events like football and we can publish the magazine or a pamphlet which contains the islamic works of our students and we can distribute that in jumma so that the interest in islamic education may be grown in the minds of young kayalites

Finally Congratulations to all the winners and may ALLAH bless them here and hereafter


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Correction
posted by M.A.C.AHAMED THAHIR (Kayalpatnam) [26 May 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 4742

Correction to my last comment: Chinna A.T haji is my Maternal uncle. unfortunately, while typing i made this mistake.Moderator Pls edit it out or publish that comment.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. வாழ்துக்கள்
posted by Refai (Dar Es Salaam, Tanzania) [26 May 2011]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 4745

அல்ஹம்துலில்லாஹ், வாழ்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. சிறுவர்கள் பிரிவில் நடந்த இளம் சிரார்கள்
posted by M.A.C.AHAMED THAHIR (KAYALPATNAM) [26 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4752

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்.

இந்த கிராத் போட்டி நிகழ்வுகளை முழுவதையும் பார்த்து எங்கள் யாவருக்கும் மிக்க மகிழ்ச்சி. மாஷா அல்லாஹ்.

ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள். சிறுவர்கள் பிரிவில் நடந்த இளம் சிரார்கள் பங்கு கொண்ட விவரங்களை தாங்கள் எதுவும் குறிப்பிடாமல் இருந்தது எங்களுக்கு சின்ன நெருடலாக உள்ளது. எனவே எங்கள் வேண்டுகோள் என்னவென்றால் எங்கள் மருமகன் சிரார்கள் பிரிவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். தாங்கள் அவரின் புகை படத்தை மட்டும் போட்டுள்ளீர்கள். அவரின் பெயரையும் சேர்த்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். எனவே தயவுகூர்ந்து அவரின் பெயரையும் சேர்த்து கொண்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

அவரின் பெயர் ஜனாப் அல்-ஹாபிள் கிதுறு முஹம்மத் ஆஷிக் அவர்களின் மகனார் K.M.A. முஹம்மத் அப்துல் காதர். இப்படிக்கு துஆ ஸலாமுடன்.

Moderator:News corrected as suggested!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved