மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவாக காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) மைதானத்தில் ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
46ஆம் ஆண்டு அகில இந்திய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் கடந்த 09.05.2011 அன்று துவங்கியது.
24.05.2011 அன்று நடைபெற்ற போட்டியில் சென்னை Food Corporation of India அணியை எதிர்த்து, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி களம் கண்டது. இப்போட்டியில், துவக்கத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. பின்னர், ஐக்கிய விளையாட்டு சங்க அணி சுதாரிக்குமுன், கண்ணிமைக்கும் நேரத்தில் சென்னை அணி இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. இதன்மூலம் 1-3 என்ற கோல் கணக்கில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி போராடி தோற்றது.
![](/newsimg/275201133666.jpg)
![](/newsimg/275201133681.jpg)
![](/newsimg/275201133693.jpg)
இப்போட்டியில், டி.சி.டபிள்யு. நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் ஸ்ரீநிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில் பொன்னாடை போர்த்தப்பட்டு, ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
![](/newsimg/275201133540.jpg)
போட்டியின்போது பதிவு செய்யப்பட்ட பார்வையாளர் காட்சிகள் பின்வருமாறு:-
![](/newsimg/275201133586.jpg)
![](/newsimg/275201133606.jpg)
![](/newsimg/275201133620.jpg)
![](/newsimg/275201133638.jpg)
![](/newsimg/275201133653.jpg) |