Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:10:19 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6339
#KOTW6339
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 30, 2011
சிறுபான்மையினர் பிரச்சினைகளை சட்டப்பேரவையில் சுதந்திரமாக எடுத்துரைப்போம்! ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3569 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடைபெற்று முடிந்துள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வென்றுள்ளோம்... சிறுபான்மையினர் பிரச்சினைகளை சட்டப்பேரவையில் சுதந்திரமாக எடுத்துரைப்போம் என 28.05.2011 அன்று காயல்பட்டினம் வந்திருந்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 28.05.2011 அன்று மாலை 05.30 மணிக்கு மாவட்டத் தலைவர் ஆஸாத் தலைமையில் நடைபெற்றது. தலைமையுரையைத் தொடர்ந்து, மாநில பேச்சாளர் இப்னு தைமிய்யா துவக்கவுரையாற்றினார்.



பின்னர் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் உரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்ற செய்திகள் பின்வருமாறு:-



மக்கள் சேவையில் தமுமுக:
1995இல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - தமுமுக என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போதைய சூழலில் மனித ஒழுக்கத்தை நிலைநிறுத்த தமுமுக முயன்றது. காலபோக்கில் மனிதாபிமான செயல்களை அடிப்படையாகக் கொண்டு விரிவான செயல்திட்டத்தோடு, அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்தது.

சென்னை முதல் குமரி வரை உள்ளவர்களுக்கு 98 ஆம்பலென்ஸ்களை அர்ப்பணித்து சமய சார்பாற்ற முறையில் மக்களுக்காக சேவை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இவ்வளவு அதிகமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் மக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது வேறெங்குமில்லை. அதேபோல் ரத்ததான இயக்கம் துவங்கி அதிக அளவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ரத்ததானம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆழிப்பேரலை - சுனாமி தாக்கியபோது, தமிழக கடலோர மாவட்டங்களில் தமுமுகவினர் தீவிர களப்பணியாற்றினர்.

மனிதநேய மக்கள் கட்சி துவக்கம்:
நம் நாட்டில் அரசியல் என்பது மிக மோசமான காலகட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது மக்களுக்கு சேவை செய்வதற்காக 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதியன்று மனித நேய மக்கள் கட்சியைத் துவக்கினோம். அரசியல் கட்சிகளின் மத்தியில் வித்தியாசமான வகையில் சேவையாற்றும் வகையில் எமது செயல்பாடுகளை அமைத்துகொண்டோம்.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 4 தொகுதியில் தனித்து போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளை பெற்றோம். அதன்பிறகு 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து 3 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஒரு தொகுதியில் தோல்வியடைந்தாலும், அத்தொகுதி மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றோம்.

தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி:
இத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தனிசின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். சட்டசபையில் முன் வரிசையில் அமரும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறுப்பான்மை மக்களின் கருத்துக்களை சட்டசபையில் ஒலிக்க செய்யமுடியும்.

சமச்சீர் கல்வித் திட்டம்:
கடந்த திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் ஏராளமான கோளாறுகள் உள்ளன. சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து அப்போதைய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, 109 பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது முத்துக்குமார் தலைமையிலான நிபுணர் குழு. ஆனால் அக்குழுவின் பரிந்துரைகள் எதையும் கண்டுகொள்ளமாலேயே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கடந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு இத்திட்டத்தை வல்லுனர் குழுவைக் கொண்டு முறையாக ஆய்வு செய்து செயல்படுத்தும் வகையில் ஓராண்டுக்கு ஒத்தி வைத்துள்ளது சரியான முடிவுதான்.

சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் அரபி, உர்தூ உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட மனித நேய மக்கள் கட்சி கோரும்.

சட்டப்பேரவை வளாக இடமாற்றம்:
போதிய வசதிகள் எதுவும் முறையாகச் செய்யப்படாத நிலையில் அவசர கதியில் திறந்துவைக்கப்பட்ட புதிய சட்டப்பேரவை வளாகத்தைத் தவிர்த்துவிட்டு, பழைய சட்டப்பேரவை வளாகத்தில் செயல்பட அதிமுக அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

காயல்பட்டினத்தை உள்ளடக்கி கிழக்கு கடற்கரை சாலை:
முஸ்லிம் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வாழும் காயல்பட்டினத்தைத் தொட்டுச் செல்லும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையை அமைக்கப்பட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சிறுப்பான்மை கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும்போது தற்காலிகமாக 3 ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் என்று இல்லாமல், நிரந்தர கல்வி நிறுவனமாக அங்கீகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.


இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், அதிமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாது என்ற கருத்து குறித்து செய்தியாளர்கள் விளக்கம் கேட்டபோது,

அப்படி எதுவும் நடக்கப்போவதில்லை... மரியம் பிச்சை என்ற ஒரு முஸ்லிமுக்கு அமைச்சர் பொறுப்பளித்தது இந்த அரசு. ஆனால் அவர் இறைநாட்டப்படி விபத்தில் காலமாகிவிட்டார். அக்குறை விரைவில் போக்கப்படும் என்று நம்புவோம்... என்றார்.

கூட்டத்தில் மமக மாவட்ட துணைத் தலைவர் காஜா முகைதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் நொலாஸ்கோ, யூசுப், மாவட்டப் பொருளாளர் முகம்மது நெய்னா, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முகம்மது கிதுரு, மாவட்ட தொண்டரணி செயலாளர் புஹாரி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் தமிழ் தங்கவாப்பா, தூத்துக்குடி மாநாகர தலைவர் அபூபக்கர் சீத்திக், மாநாகர செயலாளர் மீராசாமிப், காயல் நகர தலைவர் ஜாஹீர் ஹுஸைன், காயல் ரத்ததான கழக துணைத் தலைவர் முர்ஷித் முஹ்ஸின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. செவிடன் காதில் சங்கூதின கதை......
posted by s.s.md meera sahib (riyadh) [30 May 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4868

அஸ்ஸலாமு அலைக்கும். எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களே.... சிறுபான்மையினர் பிரச்சினைகளை சட்டப்பேரவையில் சுதந்திரமாக எடுத்துரைப்போம் என்று கூறி இருப்பது சந்தோசம். ஆனால் நீங்கள் எடுத்துரைக்கும் அன்று அம்மாக்கு காதடைப்பு இல்லாமல் இருக்குதாண்டு பார்த்து கொள்ளவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னும் solvar
posted by Abdul Majeed (Mumbai) [30 May 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 4879

Innum silavatrai solla maranthu vittar

1.Sirupanmai makkalin vaakai petra jaya manidaneya manikkam modiyai padaviyetpu vilakku virundinaraga alaithadu sarithan.

2.Duglak vilakku MODI vanda poludu aarpattam nadathiya MMK, padaviyepu vilakku vandapoludu varavetpu kodukkadadu (?) sarithan.

3.Mundiya aatchiyil avasarapattu kodutha 3.5 sadavikida ida odukkidu kuraivanadu andhra arasu vin mosamana munnudaranathai thodarndadu enbadhal adai muluvadum neekinaal sarithan.

4.kaalam kalamaga muslimku vaipalitha vaaniyampadi tokudiyil vadiveluvai nirythiyadu pol mariyampichaiku maatraga yaarai niruthinalum sarithan..

ippadi adukki konde pogalam

Moderator:Dear Abdul Majeed, pls send your Tamil comments directly in Tamil by using the provided option. Pls avoid transliterating in future to approve your comments.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இடஒதுக்கீடு
posted by Lebbai (Riyadh) [31 May 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4893

அப்துல் மஜீத் அவர்கள் சொல்லுவதுபோல், இடஒதுக்கீடு 5 % வளருமா அல்லது தேய்ந்து அண்டாவாக ஆகுமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved