Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:20:01 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6336
#KOTW6336
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 30, 2011
புதிய தலைமைச் செயலகம் என்னவாகும்? முதல்வர் தலைமையில் இன்று கேபினட் ஆலோசனை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2534 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான, புதிய அரசின் இரண்டாவது அமைச்சரவை (கேபினட்) கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு, கோட்டையில் நடக்கிறது. கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய தலைமைச் செயலகத்தை எவ்வாறு பயன்படுத்துவது, தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவது போன்றவை குறித்த முக்கிய முடிவு இக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். முதல்வர் மற்றும் புதிய அமைச்சர்கள், கடந்த 16ம் தேதி சென்னை பல்கலை நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்றனர். அதன்பின், கடந்த 23ம் தேதி புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, 27ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடந்தது.

வரும் 3ம் தேதி கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவையின், முதல் கூட்டம் கடந்த 22ம் தேதி நடந்தது. இதில், மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடும் தேதி அறிவிக்கப்பட்டது. சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் தரமாக இல்லாததால், இந்த ஆண்டு நிறுத்தி வைக்கவும், பள்ளிகள், பழைய பாடங்களையே பின்பற்றவும் முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, இரண்டாவது அமைச்சரவை (கேபினட்) கூட்டம், இன்று காலை 9.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கோட்டையில் நடக்கிறது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இலவச அரிசி திட்டம், திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு இலவச தங்கம் உள்ளிட்ட திட்டங்களை மக்களுக்கு சேரும் வகையில் அமல்படுத்துவது குறித்து அமைச்சர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வான மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் வழங்குதல், தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயம் தொடர்பான பிரச்னை, கவர்னர் உரையில் இடம் பெறும் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.

புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 1,200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தை, கோட்டைக்கு மீண்டும் மாற்றுவதற்கு அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகளும், ம.தி.மு.க.,வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேலும், புதிய தலைமைச் செயலக வளாகத்துடன் இணைப்பு வளாகமாக, அதனருகில் பல அடுக்கு கட்டடங்களை கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பணியை தொடருவதா அல்லது நிறுத்தி வைப்பதா என்பது பற்றியும் அரசு முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

"புதிய தலைமைச் செயலக கட்டடத்தை என்ன செய்ய போகிறீர்கள்' என, கடந்த வாரம் முதல்வரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "அமைச்சரவை கூடி முடிவு செய்யும்' என, பதிலளித்து இருந்தார். இதன்படி, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், புதிய தலைமைச் செயலக கட்டடம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.அமைச்சரவையின் முடிவும், கோர்ட்டில் தெரிவிக்கப்பட உள்ளது. புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் முறைகேடுகள் நடந்ததா என்பது பற்றி விசாரிக்க உத்தரவிடுவது பற்றியும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுமென தெரிகிறது.

தவிரவும் மின்சார பற்றாக்குறையை தவிர்க்க நீண்ட கால அணுகுமுறை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அரசு தன் பாதையை தெளிவுபடுத்தும் வகையில் இந்த ஆலோசனைகள் இருக்கும். உயர் அதிகாரிகள் பதவிமாற்றங்கள் முடிந்த நிலையில், அமைச்சர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்வதற்கு வசதியாக இந்த முடிவுகள் உதவிடும் என்று கூறப்படுகிறது.

நன்றி:
தினமலர் (29.05.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. புதிய கட்டிடம்
posted by SEYED ALI (ABUDHABI) [30 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4875

புதிய கட்டிடத்தில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்துவிட்டு அதை பயன்படுத்துவதுதான் முறை. இப்போது உள்ள புனித ஜார்ஜ் கோட்டை மத்திய அரசுக்கு சொந்தமானதென்றும் அதற்கு கோடிக்கணக்கான ரூபாய் ஆண்டுதோறும் வாடகை செலுத்த வேண்டியதிருக்கிரதென்றும், வசதியாக இல்லை, கட்டிடம் பல இடங்களில் ஓட்டை ஒழுகளுடன் இருக்கிறதென்றும் ஜெயலலிதாவே கூறி வேறு இடத்தில் புதிய கட்டிடம் கட்ட முயற்சித்தார். அதற்கு தேவையில்லாமல் திமுக இடைஞ்சல் செய்தது உண்மை.

அதற்கு மக்கள் தேர்தலில் சரியான படம் கொடுத்தாகிவிட்டது. இனியும் காழ்ப்புணர்ச்சியுடன் முதலமைச்சர் கட்டிடத்தை புறக்கணித்தால் அது தேர்ந்தெடுத்த மக்களை நஷ்டப்படுத்துவதாகும். மக்களின் பணம் அது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved