Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:21:45 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7475
#KOTW7475
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 2, 2011
காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்க நிலம்: ஒரு பார்வை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4978 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் பல ஆண்டு காலங்களாக குறைந்தழுத்த மின்சார விநியோக பிரச்சனை (Low Voltage) உள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக - கடந்த டிசம்பர் மாதம், காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



அவ்வேளையில் - காயல்பட்டினத்தில் புதிய 33/11 KV துணை மின் நிலையம் அமைக்க மின்சார வாரியம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதற்காக நிலம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிலம் விரைவாக பெறப்படாத பட்சத்தில் - திட்டம் ஆத்தூருக்கு மாற்றப்படும் என்றும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பார்க்கவும் செய்தி எண் 5337.

இது குறித்து - காயல்பட்டணம்.காம், தகவல் அறியும் சட்டத்தின் கீழ், மின்சார வாரியத்திடம் வினவியிருந்தது. அதற்கு - கடந்த மார்ச் மாதம் - பதில் அளித்த திருச்செந்தூர் செயற்பொறியாளர் த.மேரிராணி மலர்விழி, துணை மின் நிலையத்திற்கான 1 ஏக்கர் நிலம் - LF ரோடு பகுதியில் துளிர் பள்ளிக்கூடத்திற்கு அருகில் அல்லது திருச்செந்தூர் நெடுஞ்சாலை பகுதியில் தேவைப்படுவதாக தெரிவித்திருந்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் லிமிடெட் மூலமாக இலவசமாக நிலத்தினை கையகப்படுத்தும் முறை தற்போது இல்லை என்றும் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் நிறுவனத்திடம் தற்பொழுது ஆத்தூர் பகுதியில் புதிதாக 33/11 கேவி துணை மின் நிலையம் அமைக்கும் நோக்கில் திட்ட வரைவு ஏதும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். பார்க்கவும் செய்தி எண் 5853.





ஜூலை மாதத்தில் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பாக - பொது மக்களிடம் நிலம் கையகப்படுத்தும் வகைக்காக நிதி உதவி கோரி விண்ணப்பம் வைக்கப்பட்டது. அவ்வேளையில் - மின்சார வாரியத்திடம் இருந்து மார்ச் மாதம் காயல்பட்டணம்.காம் இணையதளத்தால் பெறப்பட்ட தகவல் - ஐக்கியப் பேரவையின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய ஐக்கியப் பேரவையின் நிர்வாகிகளில் ஒருவர் - மிக குறைந்த தொகையினையே நிலத்திற்காக மின்சார வாரியம் வழங்கும் எனவும், ஆகவே தனியாரிடம் நிலம் வாங்கப்பட்டு - அதற்கான குறைந்த கிரையத்தை மின்சார வாரியத்திடம் பெற்று, துணை மின் நிலையத்திற்கான நிலம் - மின்சார வாரியத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சுமார் 23 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டதாக - செப்டம்பர் 8 அன்று நடந்த ஐக்கிய பேரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.



மேலும் துணை மின் நிலையத்திற்கான நிலம் - LF சாலையில், துளிர் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் வழியில் (சாலையின் மேற்கு புறமாக) - வாங்கப்பட்டு, செப்டம்பர் 2 (வெள்ளிக்கிழமை) அன்று - சென்ட் ஒன்றுக்கு 100 ரூபாய் என்ற மதிப்பில், சுமார் 9000 ரூபாய் பெறப்பட்டு - மின்சார வாரியம் பெயரில், ஐக்கிய பேரவை சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்க்கவும் செய்தி எண் 7204.

செப்டம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட நிலம் - அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 22 அன்று காயல்பட்டினம் மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. பார்க்கவும் செய்தி எண் 7425.



விரைவில் பணிகள் துவங்கி நகரில் புதிய மின்சார துணை மின் நிலையம் அமையும் பட்சத்தில் - நகரில் மின்சார விநியோகம் பெரிய அளவில் முன்னேற்றம் காணும் என்பது நிஜம். திட்டத்தினை அறிவித்த சில மாதங்களில் - நிதியினை திரட்டி, தேவைப்படும் நிலத்தினையும் கையகப்படுத்தி, முறையாக மின்சார வாரியத்திடம் தற்போது வழங்கியுள்ளது காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை. பல ஆயிர மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய இத்திட்டம் நகர வரலாற்றில் - முதல் குடிநீர் விநியோகத்திட்டம் போன்று - ஒரு குறிப்பிடும்படியான நிகழ்வாகும்.

மின்சார வாரியத்திடம் வழங்கப்பட்டுள்ள நிலத்திற்கான தொகை பெயரளவில் (Nominal) பெறப்பட்ட தொகை ஆகும். கூடுதலாக இத்தொகைதான் பெறமுடியும் என்ற சிலரின் ஆலோசனையின் பெயரிலேயே ஐக்கியப் பேரவை - இவ்விசயத்தில் - செயல்பட்டுள்ளது என தெரிகிறது.

இது குறித்து தமிழ் நாடு மின்சார வாரியத்தின் தலைமையகத்தில் - காயல்பட்டணம்.காம் தகவல் அறியும் சட்டம் மூலம் வினவியிருந்தது. அதற்கு ஆகஸ்ட் 25 தேதியிட்ட கடிதம் மூலம் - பதில் அளித்த மின்சார வாரிய அதிகாரி - பொதுவாக துணை மின் நிலையத்திற்கான நிலத்தினை சந்தை விலை (Market Value) அல்லது குறியீட்டு விலை (Guideline Value) - இதில் எது குறைவோ அத்தொகைக்கு மின்சார வாரியம் தனியாரிடம் இருந்து பெறும் என்றும், அரசு நிலத்திற்கும் மின்சார வாரியம் - அரசு நிர்ணையிக்கும் தொகையினை வழங்கியே நிலத்தினை பெறும் என்றும் தெரிவித்திருந்தார்.





மேலும் கடந்த சில ஆண்டுகளில் - துணை மின் நிலையம் அமைப்பதற்காக தனியாரிடம் இருந்து எந்த தொகைகளில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன என காயல்பட்டணம்.காம் வினவியிருந்தது. இதற்கான விரிவான பதிலை வழங்க தமிழகத்தில் உள்ள அனைத்து மின்சார விநியோக மையங்களுக்கும் தமிழ் நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டிருந்தது. இதுவரை சுமார் 22 மின்சார விநியோக மையங்களில் இருந்து பதில்கள் பெறப்பட்டுள்ளன.

இலவசமாக நிலங்கள் பெறப்பட்ட திட்டங்கள் குறித்தும் விபரங்கள் வந்துள்ளன. பார்க்கவும் கீழே ...



கோயம்புத்தூர் பகுதியில் மின்சார வாரியம் 1.38 கோடி ரூபாய்க்கு துணை மின் நிலையம் அமைக்க நிலம் வாங்கிய விபரம். பார்க்கவும் கீழே ...



நாகர்கோயில் பகுதியில் மின்சார வாரியம் 65 லட்ச ரூபாய்க்கு துணை மின் நிலையம் அமைக்க நிலம் வாங்கிய விபரம். பார்க்கவும் கீழே ...



சில நிலங்கள் இலவசமாகவும், சில நிலங்கள் சில ஆயிரம் ரூபாய்க்காகவும், சில நிலங்கள் பல லட்ச ரூபாய் ரூபாய்க்காகவும் மின்சார வாரியத்தால் - கடந்த சில ஆண்டுகளாக - வாங்கப்பட்டுள்ளது தெரிகிறது.

காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைவது - வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும் - நிலத்திற்கு கூடுதல் விலை கிடைக்க வழியுள்ளது என்ற பட்சத்தில் - நிலத்தினை மிகக் குறைந்த விலை பெற்றுக்கொண்டு மின்சார வாரியத்திற்கு - காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை - விற்றுள்ளது தவறான ஆலோசனையின் பெயரில் தான் என்றே தெரிகிறது.

[செய்தி திருத்தப்பட்டது]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஆரம்பிச்சிட்டாங்கப்பா எண்ணைய ஊத்துற வேலைய்ய......................????????????????
posted by Habeeb Nasrudeen (Doha - Qatar) [02 November 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 12825

ஆரம்பிச்சிட்டீங்ககலா எண்ணைய ஊத்துற வேலைய்ய Admin அவர்களே ரொம்ப சந்தோசம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by OMER ANAS (DOHA QATAR.) [02 November 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 12826

அஸ்ஸலாமு அழைக்கும். ஐக்கிய பேரவை மக்களிடம்,வசூல் பண்ணி இது போல் செய்ய வில்லை. பெரியோர்கள் போட்ட காசு! போனா போகட்டும் போருமைய்யா! கிளப்பி விட்டாச்சு. எத்துனை கருத்து இனி வாய் கூசாமல் வருமோ? பார்க்கலாம்!

தம்பி ஸாலிஹ் தினமும் ஒரு முறை பஞ்சாயத்து பக்கம் போய் அங்கு நடக்கும் நல்ல சேதி, குளறுபடி இருந்தால் தாருங்கள். ஒற்றுமையா தட்டிக் கேட்ப்போம்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by Administrator (Chennai) [03 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12831

சகோதரர் நசுருத்தீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

செய்திகளை - செய்திகளாகவே - இணையதளம் வழங்குகிறது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எண்ணத்தில் அல்ல. துணை மின் நிலையத்திற்கான நில விஷயம் - இணையதளத்தால் கடந்த 10 மாதங்களாக, கவனிக்கப்பட்டு, உரிய அதிகாரிகளிடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்கள் பெறப்பட்டு - தகவல்கள் கிடைக்கும் போது - அவ்வப்போது செய்திகளாக - வெளியிடப்பட்டும் வருகின்றன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள செய்தியும் அதுபோன்றதே. இதன் நோக்கம் எந்த பொதுநல அமைப்பையும் குறை கூறுவது அல்ல. அரசு சலுகைகள், விதிமுறைகள் - அனைவராலும் - சரியாக புரிந்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:இதிலுமா அரசியல்? தொடரட்டும் மூன்றாம் சுற்று
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [03 November 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 12832

Comment Reference Number: 12831

பார்க்க :
"காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைவது - வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும் - நிலத்திற்கு கூடுதல் விலை கிடைக்க வழியுள்ளது என்ற பட்சத்தில் - நிலத்தினை மிகக் குறைந்த விலை பெற்றுக்கொண்டு மின்சார வாரியத்திற்கு - காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை - விற்றுள்ளது தவறான ஆலோசனையின் பெயரில் தான் என்றே தெரிகிறது. "------------- - இது உங்கள் செய்தி.

நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் செய்திகள்தான் என்றாலும் கடைசியாக உள்ள இந்த வரிகள் மட்டும் விமர்சனத்தையும் உங்கள் விஷமத்தனத்தையுமே காட்டுகிறது.

ஊருக்கு செய்யும் நல்ல செயலிலுமா உங்கள் அரசியல் ? இதில் ஏதாவது ஊழலால் நடைபெற்றதா விமர்சனம் செய்வதற்கு?

உங்களின் செய்திகளின்படியே பல இடங்களில் இலவசமாக அரசுக்கு நிலத்தை வழங்கியதும் தெரியவருகிறது. எந்த அரசு குறைந்த செலவிதான் திட்டங்களை நிறைவேற்ற முன்வரும்.. உங்களின் வாதப்படி, நாம் அதிக விலை கேட்டால், அதன் விளைவாக திட்டம் ஆத்தூருக்கு சென்றால், பிறகு அதற்கும் ஐக்கிய பேரவைமீதுதான் சேற்றை வாரி வீசுவீர்கள். அதற்கும் தனி விமர்சனம் செய்வீர்கள்.

அப்படியானால் லாப நோக்கில் அரசுக்கு நிலத்தை விற்க சொல்கிறீர்களா? அதற்கும் ஒரு விமர்சனம் வரும்.

ஏன் இந்த விரோதம் ? ஏன் இந்த அரசியல் ? எத்துனை நாளைக்கு இது? நீங்களும் கைவிட மாட்டீர்கள்! அவர்களும் கைவிட மாட்டார்கள்!

உங்களின் விரோதம்தான் நகரமன்ற தேர்தலில் எதிரொலித்தது. முதல் சுற்றில் உங்களுக்கு வெற்றி. இரண்டாம் சுற்றில் அவர்களுக்கு வெற்றி. இன்னும் விடுவதாக இல்லை. இப்போது மூன்றாம் சுற்றுக்கு அழைப்பு விடுக்கிறீர்கள்.

மொத்தத்தில் நம் ஊர் அழிவுப்பதையில்தான் சென்றுகொண்டு இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by Vilack SMA (Siacun) [03 November 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 12833

[ பல ஆயிர மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய இத்திட்டம் நகர வரலாற்றில் - முதல் குடிநீர் விநியோகத்திட்டம் போன்று - ஒரு குறிப்பிடும்படியான நிகழ்வாகும். ] இது , kayalpatnam .com சொன்னது .

கிடைக்க இருக்கும் இந்த நல்ல திட்டத்தை நினைத்து சந்தோசப்படுங்களேன் . எதுக்கு வீணான பிரச்சினை ?

( salih காக்கா , விரைவில் ஊர் வரலாம்னு இருக்கேன் . வீட்டு பக்கத்துல மழை தண்ணீர் இன்னும் வெளியேறாமல் கடல்போல இருக்காம் . வீடு வந்து சேர " taxy " க்கு சொல்லவா , " boat " க்கு சொல்லவா ன்னு ஆத்துக்காரி கேட்குறா .சீட்டு குலுக்கி போட்டு , எது வருதோ அதை அனுப்புன்னு சொல்லிட்டேன் . காக்கா , ஊர்ல இதுபோல பல பிரச்சினைகள் இருக்க , புதுசா ஒரு பிரச்சினையை கையில் எடுத்து ஊரை நாறடிப்பானேன் ! )

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by Administrator (Chennai) [03 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12834

சகோதரர் சதக் தம்பி அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

வெளியிடப்பட்டுள்ள செய்தியில் எந்த முறைக்கேடு குற்றச்சாட்டும் இணையதளம் வைக்கவில்லை. அரசின் சட்ட விதிகளை அனைவரும் உணர்ந்து செயல்புரியவேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான நோக்கிலேயே இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தனியார் நிலங்களுக்கு அரசு சந்தை விலை தராது என்று ஐக்கியப் பேரவைக்கு ஒரு சிலரால் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. சந்தை விலை / குறியீட்டு விலையில் எது குறைவு - அதில் 150 சதவீதம் வரை அரசு வழங்கும் என அரசாங்க விதிகள் கூறுகின்றன. அதாவது சந்தை விலையிலும் நிலத்தினை மின்சார வாரியம் கையகப்படுத்தும் என்ற தகவல் ஐக்கியப் பேரவைக்கு - அதன் ஆலோசகர்களால் - வழங்கப்படவில்லை. பேரவைக்கு இவ்விசயம் குறித்து ஆலோசனை வழங்கியவர்கள் இந்த விதிமுறையினை அறிந்திருக்கவில்லை என்றே இச்செய்தி சுட்டிக்காட்டுகிறது.

இலவசமாக நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உண்மை. அந்த ஆவணங்களையும் இச்செய்தியில் வெளியிட்டுள்ளோம். மேலும் 1 கோடி ரூபாய்க்கு மேலான கிரையதிற்க்கும் நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வித்தியாசத்திற்கான காரணம் - அரசின் விதிமுறைகளை அறிந்து கொண்டு, அரசு துறைகளிடம் - சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் - சந்தை தொகை பெற்றிருக்கலாம் என்பதே இச்செய்தியின் சாராம்சம்.

மேலும் - காயல்பட்டினத்தில் நிலம் வழங்கப்படவில்லை என்றால் திட்டம் ஆத்தூருக்கு கொண்டுச்செல்லப்படும் என்றும் கூறப்பட்டது. அதனை மின்சார வாரியம் மறுத்துள்ளது. அந்த ஆவணமும் இச்செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by Moosa Sahib (Abu Dhabi) [03 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12836

தாங்கள் (அட்மின்) குறிப்பிட்ட படி ... (துணை மின் நிலையத்திற்கான நில விஷயம் - இணையதளத்தால் கடந்த 10 மாதங்களாக, கவனிக்கப்பட்டு, உரிய அதிகாரிகளிடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்கள் பெறப்பட்டு - தகவல்கள் கிடைக்கும் போது - அவ்வப்போது செய்திகளாக - வெளியிடப்பட்டும் வருகின்றன).

இதை நீங்கள் ஐக்கிய பேரவை பெரியவர்களிடம் சொல்லி இருக்கலாமே. எல்லாம் முடிந்த பிறகு சொல்லி என்ன பயன்.

உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சனை?.இப்போது தான் எல்லாம் முடிந்து இருக்கிறது. திரும்பவும் அடுத்த பிரச்சனை ஆரம்பித்து விட்டார்கள்.

எதை செய்தாலும் குறை. ஊருக்கு போகவே பிடிக்கவில்லை. ஊரு அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது... fasadகளில்.

Administrator: சகோதரர் மூஸா சாஹிப் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும், இந்த தகவல் - ஜூலை மாதம் நேரடியாக ஐக்கியப் பேரவை அலுவலகத்தில் - அதன் செயலாளரிடம் - இணையதளத்தின் செய்தியாளர் எஸ்.கே. ஸாலிஹ் அவர்களால் - வழங்கப்பட்டது. இதனை இச்செய்தியிலும் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். மேலும் - அப்போது அதற்கு - ஐக்கியப் பேரவை சார்பாக - கொடுக்கப்பட்ட விளக்கமும் இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. நடுநிலையோடு வாசர்கர்கள் அனைவர்களும் படித்து ஆராய்ந்தால் எதிர் கருத்துக்கு வழி ஏது..!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [03 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12840

அட்மின் அவர்கள் ஐக்கிய பேரவை பெரியோர்களின் செலவை கட்டுபடுத்தி இருக்கலாமே என்ற நல்ல செய்தியை தானே செய்தியாக போட்டு இருக்கிறார். இதில் அட்மின் அவரின் தவறு என்ன இருக்கிறது.. செய்திய படிக்கும் நாம் அனைவர்களும் நடுநிலையான கண்ணோட்டத்தில் செய்தியை படித்தாலே போதுமானது.. ஐக்கிய பேரவைக்கு இந்த அட்மின் பல சிரமத்துக்கு மத்தியில் பல அரசு துறைகளின் தகவல்களை திரட்டி கொடுத்து அவர்களுக்கு உதவி புரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடுநிலையோடு வாசர்கர்கள் அனைவர்களும் படித்து ஆராய்ந்தால் எதிர் கருத்துக்கு வழி ஏது..!

அட்மின் அவர்கள் எனது அபிமானியும் அல்ல..! ஐக்கிய பேரவை எனது எதிரியும் அல்ல...!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Kayal.com Improve Quality not Quantity.
posted by Aarif O.L.M (Lanka) [03 November 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12841

"காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைவது - வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என்றாலும் - நிலத்திற்கு கூடுதல் விலை கிடைக்க வழியுள்ளது என்ற பட்சத்தில் - நிலத்தினை மிகக் குறைந்த விலை பெற்றுக்கொண்டு மின்சார வாரியத்திற்கு - காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை - விற்றுள்ளது தவறான ஆலோசனையின் பெயரில் தான் என்றே தெரிகிறது."

" இட்டுக்கட்டு " இதுதான் Kayalpatnam.com ன் " GIVE AND TAKE " policy போலிருக்கிறது

சிலவு செய்த யாவும் ஹலாலாக பேரவை தற்போதைய பெரியோர்களால் சம்பாதித்த பணம் அதனால் எவ்வளவு குறைவான விலைக்கு கொடுக்கிறார்களோ அதில் பல மடங்கு தவாப் சம்பாதிக்கிறார்கள் ( யாவரின் துஆ பாரகத்தினால் )..

முழு ஊருக்கும் நன்மை கிடைக்கட்டும் என்ற நல்லேன்னதிலேயே செய்கிறார்கள்( சுயநலம் இல்லாமல் ). பொருள் ஆசை பிடித்தவர்கள் இல்லை ( சிலரைப் போல ).

I 'm sure this is not salih's news. இவ்வளவு மட்டமான ஐடியா !!! ஓவரா படித்தவர்களுக்கு மட்டும் தான் வரும்.

நல்ல செய்திய தாருங்களேன்.

ஆபிதாதான் மேயரா வந்துட்டவே இன்னும் என்ன ???

காயல்.கம quantity கூடிட்டு quality குறைந்து விட்டது.

பார்க்கலாம் !!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by இப்னு சாகிப் (Dammam, Saudi Arabia) [03 November 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12846

மின்சார வாரியத்திற்கு வழங்கிய நிலம் யாரிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் நல்லது.

மேலும், நம் பெரியவர்களின் ஹலால் ஆக சம்பாதித்த பணம் வீணாகவோ அல்லது தேவைக்கு அதிகமாகவே செலவழிப்பதை தடுக்கும் முகமாக இச்செய்தியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி. குறைந்தபட்சம், வரும் காலங்களில் இப்படிப்பட்ட நற்காரியங்களுக்கு செலவழிக்கும் போது சட்டதிட்டங்களை தெரிந்து செலவழித்தால் மிகவும் நல்லது.

எப்படியாயினும், இந்நிலத்திற்காக பணம் வழங்கிய நல்லவர்களுக்கு, அல்லாஹ்வின் அருள் நிறைவாக கிடைக்கட்டுமாக! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by Administrator (Chennai) [03 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12848

சகோதரர் ஆரிப் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தாங்கள் -

சிலவு செய்த யாவும் ஹலாலாக பேரவை தற்போதைய பெரியோர்களால் சம்பாதித்த பணம் அதனால் எவ்வளவு குறைவான விலைக்கு கொடுக்கிறார்களோ அதில் பல மடங்கு தவாப் சம்பாதிக்கிறார்கள் ( யாவரின் துஆ பாரகத்தினால் )..

என எழுதியுள்ளீர்கள். அது மிகவும் சரியே.

மின் நிலைய திட்டத்திற்காக நிலம் வாங்க முயற்சி எடுக்கும் பொழுது - துவக்கத்திலேயே - அரசு முழு பணம் தரும்; இருப்பினும் - அதனால் கால தாமதம் ஆகலாம். ஆகவே நாமே நிலத்தினை வாங்கி கொடுத்து விடுவோம் என கூறியிருந்தால் - இது போன்ற விளக்கத்தினை காயல்பட்டணம்.காம் மின் வாரியத்திடம் இருந்து கோரியிருக்காது.

சென்டுக்கு 100 ரூபாய் தான் மின்சார வாரியம் வழங்கும் என்றும், சுமார் 90 சென்டுக்கு 9000 ரூபாய் தான் மின்சார வாரியத்தால் வழங்கப்படும் என்று ஐக்கியப் பேரவையிடம் சிலர் ஆலோசனை வழங்கினார்கள் என தெரிவிக்கப்பட்டதால் தான் - தகவல் அறியும் சட்டம் மூலம் - இச்செய்தியில் வெளியிடப்பட்ட தகவல்கள் மின்வாரியத்திடம் இருந்து பெறப்பட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [03 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12849

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என உம்மம்மா மார் அடிக்கடி பழமொழி சொல்வார்கள்.

தற்போது kayalpatnam.com இந்த வேளையை செய்ய ஆரம்பித்துள்ளது. தேவையற்ற புது குழப்பங்களை வாலிபர்களுக்கு, அனுபவமற்ற இளைஞர் களுக்கு மத்தியில் விதைக்க வேண்டாம்.

இதில் ஈடு பட்ட பெரியவர்களுக்கு இது தெரியாமல் இருக்காது. அப்படி ஒரு வேலை அது நடக்க வேண்டும் என்றால் கியமத்தாகி விடும். நமக்கு உரியதை இழக்க வேண்டியதாகிவிடும்.

எப்படியாவது புதிதாக நமக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரி செய்யும்படியான செய்திகளை தேடிபிடித்து வெளியிடுங்கள். அதை விட்டு புதிதாக பிளவுகளை ஏற்படுத்த வழி வகுக்காதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by Vilack SMA (Kangxi) [03 November 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 12850

OLM arif காக்காவின் கருத்து மிக நன்று. இந்த திட்டத்திற்காக உழைத்தவர்கள் , பணம் அளித்தவர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் பலமடங்கு நன்மைகளை அளிக்க போதுமானவன் .

[ மின் நிலைய திட்டத்திற்காக நிலம் வாங்க முயற்சி எடுக்கும் பொழுது - துவக்கத்திலேயே - அரசு முழு பணம் தரும்; இருப்பினும் - அதனால் கால தாமதம் ஆகலாம். ஆகவே நாமே நிலத்தினை வாங்கி கொடுத்து விடுவோம் என கூறியிருந்தால் - இது போன்ற விளக்கத்தினை காயல்பட்டணம்.காம் மின் வாரியத்திடம் இருந்து கோரியிருக்காது. ]

இதுவும் சரிதான் . அதுனால , எனது கண்ணியத்திற்கு உரிய உவைஸ் அப்பா அவர்களே ! இனிமேல நீங்க எது செய்ய நினைத்தாலும் kayalpatnam .com க்கு ஒரு தகவல் சொல்லிட்டு செய்யுங்க . நீங்க சொல்லாததுனாலதானே அவங்க இப்படி பண்ணிட்டாங்களாம் . சொல்லி இருந்தா அவங்க இப்படியெல்லாம் செய்திருக்க மாட்டாங்களாம் . ( வேறு ஏதாவது வழியில் குடைச்சல் கொடுத்து , அதற்கு வேறு காரணங்கள் வரும் . )

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [03 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12851

இலங்கையில் இருந்து சகோதரர் ஆரிப் அவர்கள் “ஆபிதாதான் மேயரா வந்துட்டவே இன்னும் என்ன ???” என்று செய்திக்கு துளியும் சம்பந்தம் இல்லாத வரிகளை இணைத்துள்ளார்?

ஐக்கிய பேரவை செய்தியில் ஏன் ஆபிதா லாத்தவை இழுக்கின்றீர்கள்?

மீண்டும் குழப்பத்தை உண்டாக்க முயற்சியோ? ஐக்கியம் பேசுபவர்கள் புரிந்தால் சரி......

“மேயர்” பதவிக்கும் “நகர்மன்ற தலைவர்” பதவிக்கும் வித்யாசம் தெரியலையோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Land for Substation
posted by Zainul Abdeen (Dubai) [03 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12852

காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை இனி நமது ஊரில் எந்த நல்ல விசயம் செய்ய முற்பட்டாலும் அது KAYALPATNAM .com நிர்வாகிகளிடம் கலந்து யோசனை பெற்றபின்தான் செய்ய வேண்டும் என்பதுதான் அவங்களோட ஆதங்கம் என்று தோனுகிறது.

சில ஊருகளில் free of cost (இலவசகமாக) வும் அளித்துள்ளார்கள். இங்கு அவர்கள் குறைந்த விலையில் கொடுத்துள்ளர்கள் . இதில் என்ன தப்பு இருக்கு கண்டுபிடிக்க. அப்படியே அவங்க தவறான ஆலோசனையின் பெயரில் செய்து இருந்தாலும் இது எங்களுக்கு தப்பா தெரிய வில்லை. இதில் பல ஆயிரம் நகர வாசிகள் உங்களையும் சேர்த்துதான் உபயோகம் பெறுவார்கள்.

நீங்கள் அவர்கள் செய்த இந்த மாபெரும் உதவிக்கு மேடை போட்டு பாராட்டாவிட்டாலும் பரவா இல்லை. அவர்கள் செய்த இந்த நன்மையை கொச்சை படுத்தாமல் இருத்தல் நன்று.

எதுக்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடப்பது ஊரு நலனுக்கு நல்லதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. உணரவே மாட்டார்களா?
posted by Seyed Ibrahim (Kayalpatnam) [03 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12856

அன்பிற்குரிய சகோதரர்களே, இச்செய்தியில் அப்படி என்ன தவறு உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை.

என்னைப் பொருத்த வரை, பலரைப் போல கண்ணை மூடிக்கொண்டு யாரையும் ஆதரிக்கவும் மாட்டேன். எதிர்க்கவும் மாட்டேன்.

ஐக்கியப் பேரவை சார்பில், துணை மின் நிலையத்திற்கு நிலம் வாங்குதவற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டபோதே அதன் அறியாமையை ஒரு பொறுப்புள்ள மீடியாவாக காயல்பட்டணம்.காம் அவர்களிடமே உணர்த்தியிருக்கிறது.

ஒரு மாதத்திற்குள் நிலம் வாங்கிக் கொடுக்கப்படாவிட்டால், துணை மின் நிலையம் ஆத்தூருக்கு மாற்றப்படும் என மின் வாரியத்தால் தெரிவிக்கப்பட்டதாக ஐக்கியப் பேரவை தெரிவித்துள்ளதைக் கேள்வியுற்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் காயல்பட்டணம்.காம் எழுதிக்கேட்டு அறிந்ததில் என்ன தப்பு? இலவசமாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் இல்லை என்றும் மின்வாரியம் பதில் தந்துள்ளது.

உண்மையிலேயே பெரியவர்களை அவமதிக்கும் எண்ணம் காயல்பட்டணம்.காமுககு இருந்து இருந்தால், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலை ஐக்கியப் பேரவை அலுவலகத்தில் நேரில் சென்று, அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல தேவையே இல்லையே? அப்போதே பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டிருக்கலாமே??

தெரிந்த விபரங்களை யாரும் எடுத்துச்சொல்லலாம். அதில் எந்தத் தப்பும் இல்லை. அது காயல்பட்டணம்.காம் ஆக இருக்கட்டும் அல்லது ஒரு அடிமட்ட காயலனாக இருக்கட்டும்! தனக்குத் தெரிந்த தகவலை, ஊர் நன்மை கருதி சரியான தருணத்தில் காயல்பட்டணம்.காம் பேரவையிடம் தெரிவிக்காமல், இதுபோன்ற செய்தியை வெளியிட்டிருந்தால், சில சகோதரர்கள் இன்னும் பக்கம் பக்கமாக கருத்து வெளியிட்டு கரித்து கொட்டியிருப்பார்கள்.

ஒரு செண்ட் நிலத்திற்கு நூறு ரூபாய்தான் தருவாங்களாம் என்று யாரோ சொன்னதை நம்பி, பேரவையின் கண்ணியத்திற்குரிய நிர்வாகிகள் தமது பணத்தையும் போட்டு, இதர தனவந்தர்களிடமும் சுமார் இருபத்தைந்து லட்சம் ரூபாய் திரட்டி இந்த வேலையைச் செய்யும்போது, அதற்கு அவசியமே இல்லை... இவ்வளவு சிரமப்பட்டு பணம் சேர்த்து செய்வதை விட, இலகுவாகவே நாம் செய்துகொள்ளலாம் என்று காயல்பட்டணம்.காம் சொன்னது தப்பு, பெரியவர்களுக்கு அவமரியாதை, பேரவைக்கு எதிர்ப்பு என்றால், பின்னே ஊர் நன்மைக்கு என்னதான் சொல்ல வேண்டுமாம்?

காயல்பட்டணம்.காம் நிர்வாகிகளுக்கு எனது தனிப்பட்ட வேண்டுகோள்! நீங்கள் விருப்பு - வெறுப்பின்றி இப்படி செய்திகளை வெளியிடுவதானால் இதுபோன்ற விமர்சனங்களையும், வெறுப்புக்களையும் நீங்கள் சந்தித்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை!!! ஆனால் படைத்த இறைவனிடம் உங்களுக்கு நிச்சயம் நற்கூலி உண்டு. எனவே பொறுமையுடன் களப்பணி செய்யுங்கள்!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by kudack buhari (qatar) [03 November 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12859

எரிகிற தீ இல் நீங்கள் என்னை ஊற்றவில்லை பெட்ரோல் தான் டின் டின்ணாக ஊற்றுகிறீர்கள்,ரொம்பவே சந்தோசம்

தாங்கள் பேரவையை ஆதரிக்காவிட்டாலும் பரவாஇல்லை அவர்கள் செய்யும் நல்லதை நீங்கள் கொச்சைபடுத்த வேண்டாம்,

குசும்பு புதுசு (version 3 )
------------------------------------
இருக்குறவ அல்லிமுடியுரா கொண்டையை
இல்லாதவங்கதான் சிண்டு முடியுறான் சண்டையை
*************************

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by சாளை ஷேக் சலீம் (Dubai) [03 November 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12862

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

எனபது எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒரு குறள்.

யார் என்ன சொன்னாலும் நாங்கள் கேட்கமாட்டோம் எனபது ஊரில் உள்ள இயக்கத்தின் புது விதி.

சரி ஒருத்தன் ஒரு தகவலை தருகிறானே, அதனை சரிபார்க்கலமே என்று என்றாவது ஐக்கிய பேரவை நினைத்ததுண்டா ? பெரியவர்கள் என்பதால் எல்லாம் தெரிந்தவர்கள் என்று ஒரு அர்த்தம் ஆகி விடாது. (உடனே அதே நாலு பேர் என்னுடன் போர் தொடுக்க ஆயத்தமாகிவிட வேண்டாம்). நான் சொல்வது நல்ல விஷயம் உபயோகம் தரும் விஷயங்கள் எந்த தரப்பிலிருந்து வந்தாலும் அதை ஏற்று மறு பரிசீலனை செய்யவேண்டியது பொறுப்பிளுள்ளவர்களின் தார்மீக கடமை. இன்றைய இளைஞர்கள் எல்லா தகவல்களையும் அறிவையும் பெற்றவர்களாகவே உள்ளார்கள். அவர்களை நாம் இளைஞர் என்பதாலேயே ஒதுக்கி வைக்க முடியாது.

இதை செய்ய தவறியதால்தான் அடுத்தபடி தார்மீக கடமை பொறுப்பில் உள்ள ஊடகங்கள் செய்தி நிறுவனங்கள் தங்கள் நிலைபாட்டை பொது மக்களுக்கு எடுத்துச்செல்லும். இந்த தார்மீக கடமையைத்தானே நமது இணையதளம் செய்துள்ளது. இதை ஏன் ஏதோ ஒரு கொலைக்குற்றம் போல் பார்க்கிறீர்கள் எனபது இன்னமும் எனக்கு புரியாத புதிராக உள்ளது காணரம் நான் உங்களின் கலர் கண்ணாடியை அணியவில்லை - எதையும் கொஞ்சம் நடுநிலையாக சிந்தியுங்கள். எத்தனை பேர்கள் NDTV பார்க்கிறீர்கள் - அவர்களிடம் போய் ஏன் எல்லா ஊழல் / குற்றங்கள் எல்லாவற்றையும் அம்பலப்படுத்துகிறீர்கள் என்று கேட்டால் என்ன பதில் கிடைக்குமோ, அதே பதில் தான் நமது இணையதளத்திலும் கிடைக்கும்.

கொடுக்கப்பட்ட தொகை ஐக்கியபேரவையின் சொந்த காசு கிடையாது - நிறைய காயலர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை - இருந்தபோதிலும் பொதுவுடமையை கையாளும்போது ஒரு அளவுகோல் வேண்டாமா? தார் ரோடு போடுவதற்கு ஆயிரமும் ஆகலாம் லட்சமும் ஆகலாம். ஆகலாமா இல்லையா? அப்போ நாம் தானே கவனமாக இருக்க வேண்டும். நாம் நமது சொந்த வீடு கட்டும் போது ஒரு செங்கல் வெளியில் கிடந்தாலும் வீட்டிற்குள்ளே எடுத்து போடும் ஒரு நல்ல பண்பு போது வாழ்விலும் வேண்டும். (அதற்காக அந்த நால்வர் நான் பெரியவர்களை பண்பு கெட்டவர்கள் என்று சொன்னதாக என்னோடு போர் தொடுக்க வேண்டாம்.) நான் சொல்ல வருகிற கருத்துக்கள் புரிந்தால் சரி.

MORAL

தயவு செய்து உண்மையிலேயே தவறுகள் அல்லது தவறான வழிமுறைகள் பின் பற்றப்படும் போது அவற்றை ஓன்று நீங்கள் சுற்றிக்காட்டுங்கள் அல்லது சுற்றிக்காட்டுபவர்களை குறைகூறாதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [03 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12869

இந்த செய்தியை நான் சில மாதங்களுக்கு முன்பு வேறு வலைதளத்தில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். உடனே சில சகோதரர்கள் லபோ.. திபோ.. என்று குதித்து, இதற்க்கு ஆதாரம் உண்டா, பொய் சொல்லலாமா என்று பல கண்டன மெயில்கள்.

இப்போது ஆதாரத்துடன் கட்டுரை வந்துள்ளதே... kayalpatnam.com க்கு ஒன்பது ஆயிரம் வாழ்த்துக்கள்.

ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் சகோதரர்களே...

யாரும் ஐக்கிய பேரவையில் இருக்கும் நம் பெரியவர்களை ஊழல் செய்தார்கள் என்றோ, பணம் கையாடல் செய்தார்கள் என்றோ சொல்லவும் மாட்டார்கள், சந்தேகமும் படமாட்டார்கள். அனைவர்களும் அல்லாஹ்வின் அருளால் பல கோடிகளை கண்டும், அனுபவித்தும், பலருக்கு கொடுத்ததும் மகிழ்ந்தவர்கள்.

"ஐக்கிய பேரவை சுனாமிக்கு என்று பல லட்சங்கள் வசூலிதார்களே..அதை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்களா, அல்லது அந்த பணம் அப்படியே உள்ளதா அல்லது அதை வேறு நல திட்டங்களுக்கு பயன் படுத்தினார்களா? " இதைப்பற்றி இதுவரை யாரும் கேள்வி எழுப்பியது இல்லை. ஏன் என்றால் இவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டவர்கள் அல்ல. அதனால் தான் யாரும் இதை கண்டுக்கொள்ளவில்லை.

ஆகவே, சுட்டிக்காட்டுவது என்பது வேறு, சந்தேகம் கொள்வது வேறு. இந்த துணை மின் நிலையம் அமைக்க நிலம் கொடுத்தவகைக்கு அரசாங்கம் ஒரு சில லட்சம் கொடுத்தால் அதை வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாமே என்ற ஆதங்கம் தானே தவிர, வேறு நோக்கம் யாருக்கும் இல்லை.

நான் முன்பே கூறிய மாதிரி...

------------------------------------

நமக்கு எல்லாம் இருக்கும் ஒரே ஆசை, நம் ஐக்கிய பேரவை மிகவும் வலுவான அமைப்பாக மாறனும். அதற்கு ஒவ்வொரு ஜமாத்தும் வலுவானதாக அமையனும். அவர்கள் ஒருவரை கை காட்டினால் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கனும். அப்படி ஒரு நிலைமை வரனும் என்றால் நம் ஐக்கிய பேரவை அதன் நன்பகத்தன்மையை உறுதிப்படுத்தனும், கொள்கை வெறி இருக்கக்கூடாது, தனி நபர் ஆதிக்கம் இருக்கக் கூடாது,ஆக மொத்தம் வல்ல ரஹ்மானுக்கு பயந்து மக்களுக்கு சேவை செய்யணும்.

------------------------------------

இந்த நிலை வர வல்ல ரஹ்மானை இறைஞ்சுகிறோம்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by Salai. Mohamed Mohideen (USA) [03 November 2011]
IP: 64.*.*.* United States | Comment Reference Number: 12876

நமக்கு தெரியாத மற்றும் நாம் எவரும் அறிந்திட கூட முயற்சி செய்யாத ஒரு விசயத்தை இந்த இணையதளம் வழக்கம் போல் நமக்கு சேகரித்து...அறிய தந்துள்ளது என்று தான் எனக்கு நினைக்க தோனுகிறது. இதில் பேரவையை குறை சொல்வதற்கான முயற்சி அல்லது எண்ணம் இருப்பது போல் தோணவில்லை.

சம்பந்த பட்டவர்கள் இதை கவனிக்க/நடைமுறை படுத்த தவறியது ஒரு பக்கம் இருந்தாலும் அட்லீஸ்ட் இனிவரும் காலங்களில் இதை நாம் ஒரு படிப்பினையாக (அதாவது ஒரு சிலர் சொன்னார்கள் என்பதற்க்காக இல்லாமல், ஊர் சம்பந்த பட்ட நல்லவிசயங்களை நமக்கு வழங்க பட்டு இருக்கும் தகவல் அறியும் சட்டம் மூலம் மிக நன்றாக அறிந்து ஆராய்ந்து) நாம் எடுத்துக்கொண்டு செயல்படலாம். அதையே நாம் தவறு/குறை என்று கூறினால் எப்படி?

ஒரு வேளை, இதே விசயத்தை நம்மில் எவரும் (ஏன்...இங்கே குறை கூறும் அன்பர்கள் உட்பட்டு) இந்த விபரங்களை சேகரித்தாலும் சமுக அக்கறையுடன் இதே அணுகுமுறைதானே கடைபிடித்து/தெரிய படுத்தி இருப்போம்.

மீடியா தன் நடுநிலமையான பணியை செய்யும்போது , எந்த ஒரு அமைப்பின் தவறுகளை சுட்டிக்காட்ட வர வேண்டியது வரும். அதற்காக மீடியாவும் அந்த ஒரு அமைப்பும் எதிரிகள் என்று அர்த்தம் இல்லையே. ஒரு வேளை இதை நமது மக்கள் சேவா கரங்கள் தலைவர் ஜலாலி காக்கா செய்து இருந்தால் பாராட்டி இருப்போம், காயல்.காம் செய்ததினால் குறை கூறுகிறோமோ என்னவோ.

பேரவையின் நல்ல விஷயங்களை பாராட்டும் நம்மில் நிறையபேர் அதன் தவறான ஒரு சில அணுகுமுறைகளை/முடிவுகளை சுட்டிக்காட்ட முயலும்போது, ஒரு சில "குறிப்பிட்ட அன்பர்கள்" ...ஏதோ நாம் அனைவரும் பேரவையின் மீது அக்கறையற்றவர்கள் போல தவறாக புரிந்து கொண்டு, பேரவையின் எந்த ஒரு செயல்பாட்டையும் எப்படியாவது நியாயபடுத்துவதில் காட்டும் ஆர்வத்தை, நம் பேரவையை ஆக்கமான முறையில், எல்லோரையும் எந்த ஒரு பாகுபட்ச்சமின்றி அரவனைத்து செல்வதில் மற்றும் அதை வலுபடுத்துவதில் காட்டினால் மிக நன்றாக இருக்கும். அதற்கான முயற்ச்சியில் நாம் அனைவரும் ஈடுபடுவோம்.

நாம் எல்லோரும் பலமுறை சொல்லிவரும் கருத்தும்/ஆசையும் & ஜியாவூதீன் காக்கா சொன்னது போல்..

"நம் ஐக்கிய பேரவை மிகவும் வலுவான அமைப்பாக மாறனும்/மாற்றப்படவேண்டும். அதற்கு ஒவ்வொரு ஜமாத்தும் வலுவானதாக அமையனும். எல்லா ஜமாத்தினர் மற்றும் கொள்கை உள்ளவர்கள் பிரநிதித்துவம் இருக்க வேண்டும். அவர்கள் ஒருவரை கை காட்டினால் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கனும். அப்படி ஒரு நிலைமை வரனும் என்றால் நம் ஐக்கிய பேரவை அதன் நன்பகத்தன்மையை உறுதிப்படுத்தனும், கொள்கை வெறி இருக்கக்கூடாது, தனி நபர்/வாட்டார வழி ஆதிக்கம் இருக்கக் கூடாது,ஆக மொத்தம் வல்ல ரஹ்மானுக்கு பயந்து மக்களுக்கு சேவை செய்யணும்"

இன்ஷா அல்லாஹ் அதை நிறைவேற்ற பாடுபடுவோமாக!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by Vilack SMA (Siacun) [04 November 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 12885

அஸ்ஸலாமு அழைக்கும் .

போதும் விடுங்களேன் இந்த பிரச்சினையை . எல்லோரும் ஹஜ்ஜு பெருநாளைக்கு தயாராவோம் .

Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. யா அல்லாஹ் யாவருக்கும் புரிந்துணர்வை தா...
posted by Shaik Dawood (Hong Kong) [04 November 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 12896

அன்பின் சகோதரர்களே...

என் கருத்து என்னவெனில்...

நிலம் வாங்கி முடித்து... EB கையில் ஒப்படைத்தும் விட்டபின்... இந்த "ஒரு பார்வை" செய்தி தொகுப்பு தேவை இல்லையே என்பதுதான்...

தாங்கள் நல்லெண்ணத்தில் இதற்கு முன்னரே செய்திகளின் மூலமாக நல்ல பல தகவல்களை வெளியிட்டு இருக்கின்றீர்கள்... மேலும் ஐக்கிய பேரவைக்கும் தெரிவிதிருக்கிண்றீர்கள்... அதற்கு தங்களுக்கு பல நன்றிகள்... எனினும் இப்பொழுது இது தேவை இல்லையே... அதனால்தான் பல அன்பர்கள் நெருப்பு... எண்ணெய்... பெட்ரோல்... என்றெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள்... என்று தோன்றுகிறது.

பல சிரமங்களுக்கும் வேலை பளுகளுக்கும் மத்தியில் தாங்கள் செய்யும் சேவையில் இவ்வாறான கருத்துகள் மனசஞ்சலத்தை ஏற்படுத்தவே செய்யும் என்பதை என்னாலும் உணர முடிகிறது... என் இந்த கருத்தும் மற்றவர்களின் கருத்துகளும் காயப்படுத்தி இருந்தால் என் சார்பாகவும் அவர்களின் சார்பாகவும் மன்னிப்பு கேட்கிறேன்...

வல்ல அல்லாஹ் தங்களின் நல்லெண்ணத்திற்கு நற்கூலியை நிறைவாக தந்தருள் பிரிந்து... நம் அனைவருக்கும் நல்ல சிந்தனைகள் ஏற்பட தவஃபீக் செய்வானாக... ஆமீன்

அன்பின் அட்மினுக்கும் வாசகர்கள் அனைவருக்கும் ஈதுல் அள்ஹா நல்வாழ்த்துக்கள்...

அன்பின்
தாவூது பின் ஷாபிஈ
ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [04 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12897

அரசு நடைமுறை திட்டங்களில் நாம் அறிந்து கொள்ளவேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்பதையே இத்தகவல் சுட்டி நிற்கிறது.

ஆன்னல் நமது பொறுப்புள்ள பெரியவர்கள் பணத்தை அப்படி வீணாக்கி இருக்கமாட்டார்கள் என்பதே நமது நம்பிக்கையும். சரியான புரிதல் இன்றியோ அல்லது தகுந்த வழிகாட்டுதல் இன்றியோ இது நடந்திருக்கலாம்.

அது மட்டுமில்லாமல் அரசு ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு அளவுகோலையும் பின்பற்றுகிறது. இது அரசு நிர்வாகத்தோடு அன்றாட உறவு வைத்திருப்பவர்களுக்கு தெரியும். அதிகாரிகளை கேட்டால் மேலிடத்து உத்தரவு என்று முடித்துக்கொள்வார்கள்.

ஆனால் இது சம்பந்தமாக எல்லா விபரங்களும் தெரியவந்த பிறகும் பேரவையினர் இதுபோன்று நடந்திருந்தால் அது நிச்சயம் தவறுதான். நமது பணத்தை இன்னொருவருக்கு தூக்கி கொடுப்பதில் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும்?

எனவே இது சரியான வழி காட்டுதல் இன்றி நடந்த ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

தவறுகள் நடக்கும் போது அதை சுட்டிக்காட்டுவதுதான் ஊடக தர்மம். எனவே இதை பேரவைக்கு எதிரான செயல் என்று மட்டும் பாராமல் ஒரு பொதுநலன் கருதிய ஊடக செயல்பாடு என்று மட்டும் பார்த்தால் இதில் எந்த மனமாச்சரியங்களுக்கும் இடமில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [04 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12902

“கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தானாம்” என்ற பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by Musthafa.MIN (chennai) [06 November 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 12995

அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர்களே ...................

இந்த செய்தியை இதோடு முடித்து கொள்ளுங்கள் ......இந்த செய்தியை வெளி இட்ட காயல்பட்டினம் .கம இடமோ ....பேரவை உறுபினர்கள் இடமோ எந்த தவறும் தெரிய வில்லை .... காயல்பட்டினம்.கம அவர்களுடைய வேலையை சரியாக செய்துள்ளார்கள்.....பேரவை தலைவர்கள் ஊர் மக்கள் நலன் பெற வேண்டும் என்ற ஒரே குறிகோளில் எந்த சுய ஆதாரமும் இல்லாமல் நடந்துள்ளர்கள்...இந்த விசயத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லை என்பதே உணர்த்து கின்றது .....தவறுகள் எனபது மனிதனின் இயல்பு......

காயல்பட்டினம்.கம தங்களுடைய சேவை உதவிகரமாக உள்ளது......ஏதேனும் அரசு நலத்திட்டங்கள், அரசு துறை சார்ந்த நடவடிக்கை கல் பற்றிய செய்தி வரும் பொழுது ....அதனை பற்றிய விவரங்களை அரசு தகவல் அறியும் சட்டம் மூலம் பெற்று மக்களுக்கு தெரிய படுத்துவது மட்டும் அல்லாமல்...ஐக்கிய பேரவைக்கும் தெரிய படுத்துங்கள் .....இது என்னுடைய வேண்டுகோள்........நன்றி

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மீண்டும் ‘செங்கடல்‘ !  (1/11/2011) [Views - 5061; Comments - 14]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved