Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:45:42 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7502
#KOTW7502
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 6, 2011
44வது தேசிய நூலக வார விழா!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 3161 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக.....‎

பாரம்பரியமிக்க கலாச்சாரம், பலதரப்பட்ட கல்வியாளர்கள் மற்றும் பக்குவப்பட்ட ‎ஆன்மீகம் போன்ற பல்வேறு சிறப்புக்களை உள்ளடக்கியது நமதூர் காயல்பட்டினம். ‎போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல்வேறு சாதனைகள் ‎புரிந்து வரும் நமதூர் மாணவ, மாணவிகளின் கல்வியறிவு பள்ளிக்கூட அறைகளையும் ‎தாண்டி மேலும் சிறந்து விளங்குவதற்கு உலகின் பல்வேறு நிகழ்வுகளையும், ‎விஷயங்களையும் சப்தமில்லாமல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் நமதூர் பள்ளிகள், ‎கல்லூரிகளின் பணி மகத்தானது. அதற்கு உறுதுணையாக இருந்து வரும் நமதூர் அரசு ‎பொது நூலகத்தின் பணிகள் சிறப்பானது.‎

பல்வேறு ஊடகங்கள் பெருகி விட்ட இக்காலங்களில் மாணவ, மாணவிகளின் வாசிக்கும் ‎பழக்கத்தை அதிகரிக்கச் செய்யவும், நூலகங்களின் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ‎ஏற்படுத்தவும் கடந்த ஆண்டுகளைப் போலவே எதிர்வரும் நவம்பர் இரண்டாவது வாரம் ‎காயல்பட்டணம் அரசு பொது நூலக வாசகர் வட்டம், காயல்பட்டணம் காக்கும் கரங்கள் ‎அமைப்பு, காயல்பட்டணம் அரிமா சங்கம் மற்றும் K.V.A.T.அறக்கட்டளை இணைந்து ‎நடத்தும் 44வது தேசிய நூலக வார விழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. ‎‎இவ்விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ‎மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகள் மற்றும் நூலக விழிப்புணர்வு வாசகப் ‎போட்டிகள் கீழக்கண்ட விதிமுறைகளின் படி நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் ‎பள்ளி மாணவ, மாணவிகளை அதிகளவு பங்கு பெறச் செய்து ஊக்கமளிக்குமாறு ‎வேண்டுகிறோம். ‎

‎'வாசிக்கும் பழக்கத்தை நேசிப்போம்!‎

சுவாசிப்பை போலவே வாசிப்போம்!‎

வாசிப்பும், சுவாசிப்பும் தொடரட்டும்!‎

வாழ்வினில் இன்பம் படரட்டும்'‎

I கட்டுரைப் போட்டிகள் ‎

வகுப்பு

தலைப்பு

‎6,7,8‎

மாணவனின் மாண்பும், நூலகத்தின் பங்கும்‎

‎9,10 ‎

சமுதாய வளர்ச்சியில் பொது ‎நூலகங்களின் பங்கு

‎11,12‎

வாசிக்க வாசிக்க வானமும் வசப்படும்‎

‎இளநிலை

புத்தகம் பேசுது...‎

‎'மானிட வாழ்க்கையில் புத்தகம் பேசுது'‎

முதுநிலை

கற்றனைத்தூறும் அறிவு

விதிமுறைகள் ‎

‎1)‎ கட்டுரைகள் A4 அளவு தாளில் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ‎

‎2)‎ கட்டுரைகள் தங்களது சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும். ‎

‎3)‎ பரிசு பெறும் சிறந்த கட்டுரை விழா மேடையில் வாசிக்க அனுமதிக்கப்படும். ‎

‎4)‎ கட்டுரைகள் பள்ளி தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வர் கையொப்பம் மற்றும் ‎முத்திரையிடப்பட்டிருக்க வேண்டும். ‎

‎5)‎ கட்டுரைகள் அனைத்தும் நவம்பர் 14,2011 மாலை 6 மணிக்குள் காயல்பட்டணம் ‎அரசு பொது நூலகத்தில் நூலகர் வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது ‎அனுப்பப்பட வேண்டும். ‎

‎6)‎ நடுவர் குழு முடிவே இறுதியானது. ‎

II 6ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான நூலக விழிப்புணர்வு ‎வாசகங்கள் எழுதும் போட்டி விதிமுறைகள் :‎

‎1)‎ நூலகங்கள் பற்றியும், நூல் படித்தம் பற்றியும் இருக்க வேண்டும். ‎

‎2)‎ A4 அளவு தாளில் ஐந்து வாசகங்கள் எழுத வேண்டும்‎

‎3)‎ ஒவ்வொரு வாசகமும் இரண்டு வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்‎

‎4)‎ வாசகங்கள் தமது சொந்த படைப்பாக இருத்தல் வேண்டும். ‎

‎5)‎ வாசகங்கள் நவம்பர் 14,2011 மாலை 6 மணிக்குள் காயல்பட்டணம் அரசு பொது ‎நூலகத்தில் நூலகர் வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது அனுப்பப்பட ‎வேண்டும். ‎

‎6)‎ நடுவர் குழு முடிவே இறுதியானது. ‎

கட்டுரைகள் மற்றும் விழப்புணர்வு வாசகங்கள் அனுப்ப வேண்டிய முகவரி ‎

நூலகர் ‎

அரசு பொது நூலகம் ‎

புதிய பேருந்து நிலையம் ‎

காயல்பட்டணம் - 628204. ‎

தகவல் : ஆசிரியர் மு. அப்துல் ரசாக்
துணைத்தலைவர், வாசகர் வட்டம் ‎
அரசு பொது நூலகம் ‎
காயல்பட்டணம். ‎‎


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கல்லாமை இல்லாமை ஆக்குவோம். வீட்டிற்கொரு நூலகம் அமைப்போம். வாசிப்போம்; வளம் பெறுவோம்.
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [06 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12943

“அறிவு அற்றம் காக்கும் கருவி செருவார்க்கு உள்ளழிக்க லாகா அரண்” என்பதை உணர்ந்து நூலகர்கள் தம் அறிவையும் நிர்வாகத் திறமையையும் பெருக்கி கற்றோர் மெச்ச தம் கல்வித் தொண்டை தொடர்ந்து கடமையாற்ற வேண்டும்.

கல்லாமை இல்லாமை ஆக்குவோம். வீட்டிற்கொரு நூலகம் அமைப்போம். வாசிப்போம்; வளம் பெறுவோம்.

நட்புடன் - அண்ணன் தொல் திருமா வழி
தமிழன் - முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:44வது தேசிய நூலக வார விழா...
posted by M.S.M சம்சுதீன் - 13வது வார்டு உறுப்பினர். (காயல்பட்டினம்) [06 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12945

அஸ்ஸலாமு அழைக்கும்..

சமுதாயத்தில் நிலவிவரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் நல்ல தரமான நூலக சேவை மூலம் நிவர்த்தி செய்யலாம்.

புத்தகங்களால் தங்களது வாழ்க்கையை மாற்றி கொண்டவர்கள், உயர்த்தி கொண்டவர் பல லட்சக்கணக்கானோர் உண்டு. எனவே நம் இளம் தலைமுறையினர் இளமையிலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதானது வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும்; வளம் பெறச்செய்யும் என்பது உண்மை.

M.S.M சம்சுதீன்
13வது வார்டு உறுப்பினர்
காயல்பட்டிணம் நகர்மன்றம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:44வது தேசிய நூலக வார விழா...
posted by salih (bangkok) [06 November 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 12967

சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற, மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியோடு நூலகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நீதியைத்தேடி... தலைப்பிலான ஐந்து நூல்களைப் படியுங்கள்!

உற்றார், உறவினர் நண்பர்கள், அக்கம் பக்கத்தார் என அனைவருக்கும் சொல்லுங்கள்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:44வது தேசிய நூலக வார விழா...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [06 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12970

"ஒரு நூல் திறக்கப்படும் போது ஒரு சிறைக்கதவு மூடப்படுகிறது" என்பார்கள். சிறந்த நூல்கள் இந்த உலகை நாம் உற்று நோக்கும் ஜன்னல்கள். நூற்கள் வழி உலகை அறிபவர்கள் தங்கள் அனுபவத்தின் வழி இந்த உலக சிக்கல்களை மிக எளிதாக எதிர் கொள்வார்கள்.

எனவே மாணவ கண்மணிகள் தங்கள் பள்ளிக்கு வெளியேயும் கற்க வேண்டும். தேசிய நூலக வார விழா சிறக்க எனது நல வாழ்த்துக்கள்....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. தேசிய நூலக வார விழா .....
posted by சாளை பஷீர் (காயல்பட்டினம்) [06 November 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 12996

மனங்குளிரும்படியான செய்தி! கணினியும், தொலைக்காட்சியும் அறிமுகமாகாத 1990 ஆம் ஆண்டுகளுக்கு முன் வரை மெயின் ரோட்டில் இயங்கி வந்த அரசு பொது நூலகத்தின் பங்களிப்பை மறக்கவியலாது.

பொழுதை உருப்படியே கழிக்க நூல் வாசிப்பிற்கிணையில்லை. இது பற்றிய விழிப்புணர்விற்காக களத்தில் இறங்கியுள்ள அரிமா சங்கம், கே.வி.ஏ.டி.அறக்கட்டளை, காக்கும் கரங்கள் போன்ற தன்னார்வ தொண்டு அமைப்புகளின் இந்த அரிய சேவையை மனமார பாராட்டும் அதே வேளையில் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மாணவர்களை மட்டுமல்ல பொதுமக்களையும் இந்த வாசிப்பு பழக்கம் வந்து சேரும் வகையில் வீதி வீதியான இயக்கம் ஒன்றை முன்னெடுத்தால் மிக்க உதவியாக இருக்கும். பெருநாளை ஒட்டி நமது கடற்கரையில் இந்த இயக்கத்தை முன்னெடுக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved