Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:19:22 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7510
#KOTW7510
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 6, 2011
‘இப்போதும் சொல்கிறோம்... எப்போதும் காயல்பட்டினம் கலைஞர் பட்டினமே!‘ -திமுக செயலாளர் அறிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5108 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (33) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

‘காயல்பட்டினம் என்றும் கலைஞர் பட்டினமே‘ என திராவிட முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

நகராட்சி துணைத்தலைவர் தேர்வு பற்றி திமுக வெளியிட்ட அறிக்கைக்கு, இணையதளத்தில் வெளிவந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து காயல்பட்டணம் நகர திமுக செயலாளர் மு.த.ஜெய்னுதீன் ஆகிய நான் வெளியிடும் அறிக்கை...

காயல்பட்டணம் நகராட்சி துணைத்தலைவர் தேர்தலில் நகர திமுக துணைச் செயலாளர் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நகர திமுக வெளியிட்ட அறிக்கை பற்றி சிலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். திமுக அறிக்கையை சரியாகப் புரிந்து கொள்ளும் சக்தி அவர்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை.

திமுக ஆதரவளித்தும் தலைவர் வேட்பாளர் ஏன் தோற்றார் என்று கேட்டிருக்கிறார்கள். நமதூர் வழமைப்படி தலைவர் தேர்தலில் கட்சிகள் போட்டியிடுவதில்லை என்பதாலும், ஊர் ஒற்றுமையை கருதியும் திமுக தேர்தலில் போட்டியிடவில்லை. போட்டியிட்டு இருந்தால் எங்கள் தேர்தல் வேலை வேறு மாதிரி இருந்திருக்கும். வெற்றி பெற்றிருப்போம்.

ஊர் வழமைப்படி தலைவர் வேட்பாளர் தேர்வோடு இந்த விஷயம் முடிந்து விடும். ஆனால் தற்போது தேர்தல் வரை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதற்குண்டான ஏற்பாட்டிலும் யாரும் தயாராக இல்லை. தேர்தல் நிச்சயம் என்று ஏற்கனவே தெரிந்திருந்தால், ஊர் வேட்பாளருக்கு ஆதரவு அளித்த திமுக மற்றும் அனைத்து கட்சிகளின் வியூகமும், வேலைகளும் வேறுமாதிரி அமைந்திருக்கும்.

ஏற்கனவே திட்டமிட்டு, எவருக்கும் தெரியாமல் சதி செய்து, வஞ்சகமாக சிலர் போட்டியினை உருவாக்கிவிட்டனர். புறநகர் மக்களிடம் அந்த சிலர் முஸ்லீம் ஜமாத்துகளை தவறாக காட்டிக் கொடுத்தார்கள். அவர்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்தார்கள்.

புறநகர் மக்களுக்கு தேர்தல் நேரத்தில் ஊர் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டி, மதுபானம் வழங்கியதாக பிரச்சாரம் செய்தார்கள். இந்த பொய் பிரச்சாரத்தை முஸ்லீம்களிடத்தில் மட்டும் கெட்டிக்காரத்தனமாக செய்தார்கள். இதில் அவர்கள் இறைவனுக்கு அஞ்சவில்லை. இதன் மூலம் அந்த சிலர் புறநகர் பகுதி மக்களை கேவலப்படுத்தினார்கள். சொந்த சமுதாயத்தில் பிளவை உண்டாக்கினார்கள்.

இவ்வாறெல்லாம் வஞ்சகமாக, அனைவரையும் ஏமாற்றி தங்கள் ஆதரவு வேட்பாளரை வெற்றி பெறச் செய்தார்கள். இந்த தேர்தல் எல்லோருக்கும் ஒரு புதிய அனுபவம். என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டு பதிலடி கொடுக்க போதிய காலம் இல்லை. அதற்குள் தேர்தல் நெருங்கி விட்டது. இதுதான் உண்மை.

உதயசூரியன் சின்னத்தில் வார்டுகளில் திமுக வெற்றி பெற்றதா என்று கேட்கிறார்கள். இல்லைதான். காரணம் இத்தேர்தலில் வார்டுகளிலும் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டாம் என ஊர் பெரியோர்கள் கேட்டுக் கொண்டதால் இந்த நிலை ஏற்பட்டது. ஆனால் கட்சி சின்னத்தில் வார்டுகளில் நாங்கள் நின்றிருந்தால் ஒரு வேளை இன்னும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.

அரசியல் கட்சிகள் ஊர் வழமையை மதித்தன. ஆனால் கட்சிகளை குறை சொல்வோர் ஊர் வழமையை மதிக்கவில்லை. எனவே இவர்களுக்கு கட்சிகளை குறை சொல்ல யோக்கியதை இல்லை.

தங்கள் ஆதரவு வேட்பாளர் வெற்றிபெற ஊர் ஒற்றுமையை இவர்கள் குலைத்தார்கள். எனவே, துணைத்தலைவர் தேர்தலிலாவது இவர்களின் ஆட்டத்தை அடக்க வேண்டுமென திமுக முடிவு செய்து போட்டியிட்டது. இதுதான் உண்மை.

மேலும், தற்போது நோட்டீஸ் மூலமும், பொதுக் கூட்டத்திலும் சிலர் திமுகவை தாக்குகிறார்கள். அதற்குரிய பதிலடி விரைவில் தரப்படும்.

எந்த எதிர்ப்புக்கும், மிரட்டலுக்கும் திமுக பயப்படாது. இதுதான் கடந்த கால வரலாறு. வருங்காலத்திலும் அது தொடரும். திமுகவை சிலர் சீண்டிப் பார்க்கின்றனர்.

இப்போதும் சொல்கிறோம். காயல்பட்டணம் எப்போதும் கலைஞர் பட்டணமே!


இவ்வாறு திமுக காயல்பட்டினம் நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by mohmedyounus (Trivandram) [06 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 12986

இப்போது சொல்கிறோம்,

கடந்த நகராட்சி தேர்தலில் சகோதரி ஆபிதவை எதிர்த்து உங்கள் 89 வயது கலைஞ்சர் நின்றாலும் சரிதான். அவர் கண்டிப்பாக டெபாசிட் இழந்து இருப்பார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by sulaiman (manama) [06 November 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 12988

WE JUST READ THE HEADLINE OF THIS NEWS,, WE DIDNT READ THE WHOLE NEWS ARTICLE....

BECAUSE ITS WASTE OF TIME,, WE (YOUTH FROM KAYAL) DOESNT CARE

நீங்க சொல்லுங்கோ சொல்லாம போங்கோ கலைகர் பட்டினம் நு

WE TOTALLY DONT CARE,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by Seyed Mohamed Seyna (Bangkok Thailand ) [06 November 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 12990

அஸ்ஸலாமு அழைக்கும் ,

ஒன்னுமே புரியலை ஊருக்குள்ள

திமுக செயலாளர் இவ்வாறு அறிக்கை குடுத்து இருகிறார்கள் எமது அன்பு நண்பர் கோபால் சொன்னது அப்போ பொய்யா,

மொதல்ல இவங்க கிட்ட சொல்லுறதை எல்லாம் நிறுத்தி விட்டு , உங்களுக்குள்ள இருக்கும் கருத்து வேறுபாட்டை நிவர்த்தி பண்ணுக ,

என்னை போன்ற கழகத்தின் உடன் பிறப்பை குலபாதிங்க,

நான் கழகத்தின் உடன் பிறப்பு தான் , ஆனால் என்னுடைய ஊரை விட்டு குடுக்க மாடேன் , காயல்பட்டினம் , காயல்பட்டினம் தான்,

இது உங்களுடைய தனி பாட்ட ஊரு இல்லை ஊரில் இத்தனை ஆயிரம் மக்கள் வாழுகிறார்கள் , அதை எல்லாம் விட்டு விட்டு தனிநபராக இருந்து காயல்பட்டினம் எப்போதும் கலைஞர் பட்டினமே! என்று சொல்லுவது அழகு அல்ல, இன்று நீங்கள் தி.மு.க வில் இருக்கலாம் நாளையும் தி.மு.க வில் இருப்பீர்கள் என்று நிச்சயம் கிடையாது ,

உங்களுடைய அரசியல் விளையடுகாக ஊரை விட்டு கொடுக்காதீர்கள் ,
காயல்பட்டினம் , காயல்பட்டினமகவே இருக்கட்டும் தவறு செய்தவர்களுக்கு வல்ல இறைவன் தகுந்த தண்டனை குடுபானாக ஆமீன் ,

என்னுடைய துஆ யாஅல்லாஹ தவறு செய்தவர்களை நீ கடுமையாக இவ்வுலகிலேயே எங்களுடைய கண்ணனுக்கு முன்னாலையே தண்டிபாயாக

இவர்களுக்கு குடுக்கும் தண்டனை மூலகம மற்றவர்கள் தவறு செய்யாமல் இருக்க வேண்டும்,

இதுக்கு தான் என்னுடைய துஆ இப்படி இருக்கும். மாசலம்

இப்படிக்கு
Seyed Mohamed (Seyna)
Kayal Ikiya Mandram Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by D.SEYED ISMAIL (HONGKONG) [06 November 2011]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 12994

ஹலோ - இவ்வளவு சீக்கிரத்தில் மீண்டும் அரசியல் கருத்துப் போர் தொடர்ச்சியா ?

எல்லோரின் பெருநாட்களும் முடிந்த பின்னர் சகோதரர் சாலிஹு இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கலாமே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by ahamed.s.i. (colombo) [06 November 2011]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12998

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்லவேண்டும் .இவர்போல யார் எண்டு ஊர் சொல்ல வேண்டும் அண்டு . MGR பாடினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by hyder ali (colombo) [06 November 2011]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13000

அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிட உடமையடா....................காயலை காப்பது கடமையடா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பாவம் அவங்களும் ஏதாவது செஞ்சாங்கன்னு இருக்கட்டும்...
posted by M Sajith (DUBAI) [06 November 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13007

தமிழ் தத்தாவோட தலைவலியே வேறு.. இப்படி பந்தலுக்கு வந்தது பந்திக்கு வராம போச்சேன்னு அங்க 'கை' குடுக்கறதா இல்லையான்னு கைய பிசஞ்சிகிட்டு தில்லிக்கும் திஹாருக்கும் சென்னைக்குமா சுத்தி சுத்தியே ஓஞ்சி போய் இருக்காங்க..!!

இங்க இவங்க காயல்பட்டணம் யாரு பட்டணம் என்று வரிந்து கட்டிகிறாங்க...

சரி விடுங்க.. புண்பட்ட நெஞ்ச எதையாவது தடவி ஆத்திக்றாங்க போல...
----------------------------------------------------
Quote "மேலும், தற்போது நோட்டீஸ் மூலமும், பொதுக் கூட்டத்திலும் சிலர் திமுகவை தாக்குகிறார்கள். அதற்குரிய பதிலடி விரைவில் தரப்படும்."

ஜெய்நுதீன் பாய் ஒன்னும் அவசரம் இல்ல மெதுவா பதில் கொடுங்க..

இப்படி கஷ்டப்பட்டு அறிக்கை மேல அறிக்கையா வெளியிட்டுகிட்டே இருங்க - அப்பத்தான் மக்கள் உங்க சமுதாய சேவையை மறக்காம இருப்பாங்க...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by M.N Refai (Dar Es Salaam) [06 November 2011]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 13010

அஸ்ஸலாமு அழைக்கும்

மதிப்புகுரிய தி.மு.க செயலாளர் அவர்களுக்கு

உங்களது அறிக்கைலையே அதிகாரம் தெரிகிறது. உங்க அறிக்கை படிக்கும் போது சிரிப்புதான் வருகிறது.

நீங்கள் dmk சின்னத்தில் தேர்தல் சந்தித்து இருந்தாலும் தோல்விதான் இது அல்லாஹ்வின் முடிவு.

admk ஆட்சி வந்த அப்புறம் கோபாலபுரமே ஆடிகிட்டு இருக்கு அந்த ஆட்டமே இன்னும் நிக்கல நமக்கு எதுக்கு இந்த விளம்பரம்?

‘நாங்களும் இப்போதும் சொல்கிறோம்... எப்போதும் காயல்பட்டினம் காயல் பட்டினமே!‘

உங்கள் பிரச்சனையை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு ஊரு நலனுக்காக பாடுபடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:‘இப்போதும் சொல்கிறோம் உங்கள் போஸ்ட்டர்,????????????... ...
posted by OMER ANAS (DOHA QATAR.) [06 November 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 13011

பசி பட்டினியோடு கிடக்கும் காட்டு ராசா சிங்கம் கூட கூட்டமாத்தான் வேட்டையாடும்!
ஆனா அசிங்கமான அரசியல் சிங்கங்கள் பசி இன்றி கூட, தங்களை தாமே வேட்டையாடும் அவலங்களை பார்த்தால், நமக்கு நாமே இன வெறி, மொழி வெறி, ஏன் மத வெறியை விட கேவலமான அரசியல் வெறியில் ஆழ்ந்துள்ளோம் என்பது விளங்குகிறது!

எத்துனை நில புரோக்கர்கள் தோன்றினாலும், என் காயல் மா பட்டினத்தை எந்த ****** பட்டினம் என்று கூற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்!

ஒன்று மட்டும் சொல்கிறோம் அரசியல் சாணக்கியர்களே, உங்களின் சித்து வேலைகளை உங்கள் வால போஸ்டர் ஓட்டும் வேலையோடு வைத்துக் கொள்ளுங்கள்! எவ்வளவு உத்தமர்கள் பிறந்த மண்ணினை ஒருவருக்கு தாரை வார்த்து கொடுக்க நினைக்கும் மன்னனே, ஒரு வருடம் உமக்கு அவகாசம் தருகிறோம். உம்மால் முடிந்தால் காயல்பட்டினமா? கலைஞ்சர் பட்டினமா? நிரூபி! TAKE YOUR OWN TIME!

இது எல்லா அரசியல் மேதாவிகளுக்கும் சாரும்! நான் முன்பு சொன்னது போல் உங்கள் அரசியலான் போஸ்ட்டர் எல்லாமே சாணம் அடிக்க தகுதியானவையே! இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் அரசியல் வாதிகளே! தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஒழுங்காக செயல் பட வோடுங்கள்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by Meera Sahib (kayalpatnam) [07 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13013

நாங்கள் நின்றிருந்தால் எங்கள் வியுகம் வேறுமாதிரி அமைந்திருக்கும் ..............????

நிச்சையமாக ....!

நமது ஊரில் பல மழைகள் பெய்திருக்கும் !

நாங்களும் பண மழையிலும், (கள்ள) ஓட்டு மழையிலும் நனைந்திருக்கலாம் !

உங்கள் அறிக்கையில் ஒரு விரக்தியும் கோபம் தெரிகிறது! அரசியலில் விமரிசனங்கள் வருவது இயற்கை ! அதை மிகவும் இலகுவாக எடுக்க வேண்டும் . உங்கள் கலைஞ்சரிடமே பாடம் கேட்டு கொள்ளுங்கள் .

தயவு செய்து உங்கள் விலாசத்துக்கு கலைஞர் பட்டினம் என்று எழுதி ஒரு கடிதம் எழுதி தபாலில் போட்டு வீட்டுக்கு வருகிறதா என்று பாருங்கள்.

எங்கள் பிறந்த மண்ணை யாருக்கும் விட்டு கொடுக்க தயாராக இல்லை ! எங்கள் ஈமானையும் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அளிக்க மாட்டோம் .

மொத்தத்தில் அரசியல் முதிர்ச்சியற்ற அறிக்கை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. அறிக்கை சூப்பர்...(?)
posted by Mohamed Buhary (Kayalpattinam) [07 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13014

நகர திமுக செயலாளரின் அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல்.

காயல்பட்டினம் கலைஞர் பட்டினம் என்பதெல்லாம் மலையேறிப்போச்சு. இன்னும் இந்தக் காயத்ரி மந்திரத்தைக் கூறி ஊரை ஏமாற்ற முடியாது. இப்பேதெல்லாம் நகர மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். யார் நேர்மையானவர், யார் நேர்மையற்றவர் என்பதில் கூர்மையாகவே உள்ளனர். எனவே, புதிதாக ஏதாவது ஆக வேண்டிய வேலையைப் பாருங்கள். உங்களைப் போன்ற அரசியலை வைத்துப் பிழைப்பு தேடுபவர்கள் பாவம். உங்களலால் சமூகத்திற்கு எந்தப் பலனும் இல்லை என்பதை எப்போதே உணர்ந்துவிட்டோம்.

உங்கள் தலைவர் காலத்திற்கும் ஒரு டயலாக்கை மேடைதோறும் பேசிவந்தார். நான் பிறைக்கொடியை கையில் ஏந்தி திருவாரூர் வீதிகளில் உலா வந்தேன். காயிதே மில்லத் தனது இறுதித் தறுவாயில் சமூகத்தை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும். காயிதே மில்லத்தை கப்றிலிருந்து எழுப்பிக் கேட்க இயலாது. இப்படி பொய் பேசுவதிலும் முதுகில் குத்துவதில் உங்கள் தலைவர் வல்லவர். இடஒதுக்கீடு விவகாரத்தில் அவரது நயவஞ்சகத்தை கண்கூடாகப் பார்த்துவிட்டோம். தி.மு.க.வால் முஸ்லிம் சமூகத்திற்கு எவ்விதப் பலனும் இல்லை.

குடும்ப ஆட்சியை நடத்திவிட்டு அதன் பலனை இன்று அனுபவித்துக்கொண்டு அல்லல் படுவதை தினந்தோறும் நேரடியாகவே சென்னையில் கண்டுவருகிறோம். எனவே, தலைவருக்கு விசுவாசத்தைக் காட்டுகிறோம் என்ற பெயரில் தேவையற்ற அறிக்கைகள் விடுவதை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் பொய்களை புனையாதீர்கள்.

என்ன அறிக்கை விட்டுள்ளோம் என்பதை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள். திருத்த முடியாத கழகத்தைவிட்டு வெளியேறுங்கள். உண்மையான காயல் நகர குடிமகனாக இருந்து நகருக்குத் தொண்டு செய்ய முன்வாருங்கள். இது நகர மக்களிடமும் இறைவனிடமும் திருப்தியை ஏற்படுத்தித் தரும். அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்களை செய்யுங்கள்.

இது அம்மாப்பட்டிணமும் அல்ல; கலைஞர் பட்டிணமும் அல்ல. காயல்பட்டினமே!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by TAM UMER (Hong Kong) [07 November 2011]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 13015

இப்போதும் சொல்கிறோம்... எப்போதும் காயல்பட்டினம் காயல்பட்டினமே!

நம் சமுதாயத்திற்கும், நம் ஊருக்கும் துரோகமிளைதிற்கும் கலைஞர் பெயரா!... த்தூ... வெட்கமில்லை! நாடே காரிதுப்பும் திமுக வையும், திமுக தலைவரின் வாரிசின் நிலைமை இதோ பார்.....

தி.மு.க., தமாஷ்: மூன்றெழுத்தின் தலையெழுத்து! கி.கண்ணன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த, உள்ளாட்சித் தேர்தலின் போது, தி.மு.க., பிரசாரத்தில்,
"அண்ணா' என்பது மூன்றெழுத்து,
"அறிவு' என்பது மூன்றெழுத்து'
என்ற கேசட்டை ஒலிபரப்பியதை கேட்டேன். அதையும், கட்சியின் இன்றைய நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

எப்படியெல்லாம் பேசி, வளர்ந்த கட்சி? இன்றோ,
"உறவு' என்ற மூன்றெழுத்தில் சிக்கி,
"ஆட்சி' என்ற மூன்றெழுத்தில் ஏறி,
"ஊழல்' என்ற மூன்றெழுத் தில் விழுந்து,
"பணம்' என்ற மூன்றெழுத்தை வாரிக் குவித்தது.

பின், "ஜெயில்' என்ற மூன்றெழுத்தில் சிக்கி,
"கம்பி' என்ற மூன்றெழுத் தை எண்ணி,
"பெயில்' என்ற மூன்றெழுத்துக்காக ஏங்கி,
"டில்லி' என்ற மூன்றெழுத்தில் தங்கி,
"சோனியா' என்ற மூன்றெழுத்தை சந்தித்து,
"கருணை' என்ற மூன்றெழுத்து மனு போடும்படி

ஆகிவிட்ட நிலையை எண்ணி, வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. எப்படி இருந்த தி.மு.க., இன்று கடைசியாக,

"குஷ்பு' என்ற மூன்றெழுத்தை
நம்பவேண்டிய நிலையை கண்டு, தி.மு.க., உறுப்பினராக இல்லாத எனக்கே இவ்வளவு துக்கமென்றால், உண்மையான தி.மு.க.,வினரின் மனநிலை எப்படி இருக்கும்?

அப்படி இருந்தும் இது எப்படி!.... நினைத்து பார் கோவையிலும் அதன் பின் சென்னையிலும் நம் சமுதாய மக்களுக்கு இளைத்த இன்னல்களை....

நானும் தி.மு.க. பிரியர்தான... ஹ ஹாஹ ஹா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by hyder ali (colombo) [07 November 2011]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13018

அச்சம் என்பது மடமை.அஞ்சாமை திராவிட உடமை .ஆறிலும் சாவு நூறிலும் சாவு. காயலை காப்பது கடமை.தலைவரை காப்பது அல்ல. தமிழ்நாட்டில் மற்ற இடங்கள் என்ன ஆனது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by Moosa Sahib (Abu Dhabi) [07 November 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13019

ஏன் இந்த ஆவேசம் உங்களுக்கு. காயல்பட்டினம் காயல் பட்டினமே!‘ . கலைஞர் மாதிரி ஊழல்வாதிகளுக்கு இங்கே இடம் இல்லை. தலைவர் குடும்பமே சிறையில் உள்ளது. உங்கள் கட்சி போட்டிஇருந்தால், ஒரு வார்ட் கூட வின் பண்ணுமா, சந்தேகம்தான்

அரசியல் வாதிகள்தான் இப்படி கீழ் தரமாக பேசுவார்கள். ஒரு உண்மையான முஸ்லிம் இப்படி பேச மாட்டான். அரசியல் என்பது ஒரு சாக்கடை என்பதை நிருபித்து இருக்குகிரீகள்.

(எந்த எதிர்ப்புக்கும், மிரட்டலுக்கும் திமுக பயப்படாது. இதுதான் கடந்த கால வரலாறு.) சிபிஐ பாத்தாலே உங்கள் தலைவர் பயந்து சாகிறார் .. சூப்பர் காமெடி பாஸ்... உங்களிடம் இருந்து நெறைய அறிக்கை எதிர்பார்கிறேன்.

தலைவரோட காமெடி அறிக்கைகள் தினமும் dinmalar web site பாக்கவும் ..

what a funny guys !!!!!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. ‘இப்போதும்
posted by Noohu T (Maana Paana) [07 November 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 13020

யாரும் டென்ஷன் ஆகா வேண்டாம் ....

எனக்கென்னமோ மு.த.ஜெய்னுதீன் பாய், திமுக இருந்துகொன்று அம்மா உக்காக செயல்பட்டு இன்சுரன்சை claim பண்ணுகின்ற வேலை மாத்ரி இருக்கு.

அதனால் கழக உடன்பிறப்புகளே, இதை யாரும் பெரியதாக எடுதுக்கொன்று நம் உடம்பை மாயிதுக்கொல்லாமல் காமடி பண்ணி கலாயிக்கலம்.

எல்லோருக்கும் பொதுவாக இப்போ அம்மா ஆட்சி நடப்பதால் " அம்மா பட்டணம்" என்றும் கருணாநிதி வரும் பொழுது "கலைஞர் பட்டணம்" என்றும் விஜயகாந்த ஆட்சி வந்தால் " விஜய பட்டணம்" என்றும் வைக்கலாமே ?

நாலு பேரு நல்ல இருக்க என்ன வேண்டுமல்லும் பண்ணலாம்

வஸ்ஸலாம்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [07 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13021

***** அடிச்சானாம் பல் போச்சாம்.

ஊர் ஒற்றுமையை கருதியும் திமுக தேர்தலில் போட்டியிடவில்லை. போட்டியிட்டு இருந்தால் எங்கள் தேர்தல் வேலை வேறு மாதிரி இருந்திருக்கும். வெற்றி பெற்றிருப்போம்.
(Copy & Paste)

கடந்த 2006 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 6 ம் வார்டில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட உங்களது தலைமை பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவருடைய நிலை என்னானது?

ஒரு சுயேட்சை வேட்பாளரிடம் தோற்றார். நீங்கள் மறந்து போயிருக்கலாம், ஆனால் ஊர் மறக்காது.

அதனால் இந்த "கலைஞர் பட்டினம்" , "கத்தரிக்காய் பட்டினம்" என்கிற கதையெல்லாம் வேண்டாம். மக்களெல்லாம் "உஜாலாவுக்கு" மாறிட்டாங்க. துணைத்தலைவர் தேர்தலில் உங்கள் கட்சி உறுப்பினர் வெற்றிபெற்றதனால் ஊர் ஒற்றுமை ஒன்றும் கூடவில்லை. ஒருவேளை அவர் தோற்று இருந்தால் ஊர் ஒற்றுமை ஒன்றும் குறையப்போவதில்லை. ஊர் ஒற்றுமை எப்பொழுதும் போலத்தான் இருக்கிறது.

Let Kayalpatnam be Kayalpatnam.

என்ன.. துணைத்தலைவர் தேர்தலுக்குப் பின், நகர்மன்றத் தலைவர் தேர்தலுக்காக வாங்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. நமது நகர்மன்றத்தில் லஞ்சமே இருக்ககூடாது என்று மக்கள் விருப்பபட்டார்கள். இல்லை இல்லை லஞ்சம் வாங்கிட்டுதான் நாற்காலிகளில் அமருவோம் என்று சொல்லி சில பேரு லட்சத்திற்கு அதிபதியாகிவிட்டார்கள்.

ஆமாம். அவர்கள் லஞ்சம் வாங்கமாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார்கள். மக்களிடம் வாங்க மாட்டோம் என்றுதான் அதன் பொருள் போலிருக்கிறது. மன்னரிடம் வாங்க மாட்டோம் என்று பொருள் கொள்ளக் கூடாது என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம். அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். Thanks to the producer.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [07 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13025

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை உடைய தவிப்பு சப்தம் மாதிரி இருக்கின்றது இந்த அறிக்கை.

அவரின் அறிக்கையில் திரும்ப திரும்ப குறிப்பிடும் "வேலை வேறு மாதிரி இருந்திருக்கும்" என்பதற்கு என்ன அர்த்தம் என்றே புரியவில்லை.

மத்திய மந்திரி, ஐயாவின் மகன், தென் மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தி, அஞ்சா நெஞ்சன், ஐயா. அழகிரி அவர்கள் மதுரையில் குடியிருக்கும் சத்யசாயி நகர் வார்டில் கூட ஜெயிக்க முடியாத நீங்கள், " போட்டியிட்டு இருந்தால் எங்கள் தேர்தல் வேலை வேறு மாதிரி இருந்திருக்கும். வெற்றி பெற்றிருப்போம் " என்று கூறியதை படித்து சிரிப்பதா அல்லது ஒப்பாரி வைப்பதா என்று தெரியவில்லை.

யப்பா.. தலைவர் (f )பென்சில் ஓடும் ஓணானை வேஷ்டிக்குள் விட்டுவிட்டு, வெளியெடுக்க முடியாமால் சென்னைக்கும், திஹாருக்கும் ஓடிக்கொண்டு இருக்கின்றார், நீங்க என்னன்னா அந்தப்பட்டினம், இந்தப்பட்டினம் என்று அறிக்கை கொடுத்துக்கிட்டு..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by SHOLUKKU.AJ (Dubai, U.A.E.) [07 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13026

SALAAM 2 ALL.

அன்பின் நகர DMK செயலாளர் ஜைனுதீன் அவர்களே காயல்பட்டினம் என்றும் கற்றுனந்த உலமாக்களின் பட்டினம் என்று கூறுவோமே? அதே நேரம் ஒரு உண்மை செய்தியை பதிவு செய்து உள்ளீர்கள்.

புறநகர் மக்களுக்கு தேர்தல் நேரத்தில் ஊர் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டி, மதுபானம் வழங்கியதாக பிரச்சாரம் செய்தார்கள். இந்த பொய் பிரச்சாரத்தை முஸ்லீம்களிடத்தில் மட்டும் கெட்டிக்காரத்தனமாக செய்தார்கள். இதில் அவர்கள் இறைவனுக்கு அஞ்சவில்லை. இதன் மூலம் அந்த சிலர் புறநகர் பகுதி மக்களை கேவலப்படுத்தினார்கள். சொந்த சமுதாயத்தில் பிளவை உண்டாக்கினார்கள். copy @பேஸ்ட்

இது நம் மக்களின் தரத்தை மறுபரிசோதனை செய்யும் நிலையில் உள்ளது. ஜைனுதீன் அவர்களே மக்களுக்காக தங்களின் சேவையை தொடருங்கள் .விளக்கங்கள் போதும் என்று நினைக்கின்றேன். வெற்றியும் தோல்வியும் சரிசமமாக பார்போம் . நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by uvais zul karani (srilanka) [07 November 2011]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 13030

வாப்பா ஈரக்குலைகளா... முதல்ல ஊருக்கு குடிதண்ணீர் பிரச்சினை!

ஒவ்வொரு இடத்திலும் மரங்களை வெட்டி ப்ளாட் போடுகிறார்கள். இதையெல்லாம் முதலில் சிந்தித்து செய்யுங்கள். அல்லாஹ்தான் நமக்கு பாதுகாப்பு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by M.N.ABDUL CADER (chennai) [07 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13032

நீங்கள் புதிய இடத்தில் கலைஞர்பட்டினம் உருவாக்குங்கல். நமது ஊரை நல்ல முறையில் முன்னேற்றம் அடைய உங்கள் உடைய அரசியல் விளையாட்டை நமது நகராட்சியில் விளையாடதிர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. சூனியத்தின் ஒரு முடிச்சி அவிழ்க்கப்பட்டது.....
posted by zubair (riyadh) [07 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13033

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் வாசிகளே...... திமுக செயலாளர் அறிக்கையில் சூனியத்தின் ஒரு முடிச்சி அவிழ்க்கப்பட்டது..... பல, பல முடிச்சிகள் இருக்கிறது.

ஆபிதா அவர்கள் வென்றதும் நாங்கள் அல்லாஹ்வுக்காக வாய் மூடி இருந்தோம். இந்த இடத்தில் மிஸ்ரியா அவர்கள் வெற்றி பெற்று இருந்தால்........ இவர்களின் கூப்பாடுகளை (காயலை களங்கப்படுத்தி) போட்டு இருப்பார்கள் அல்லாஹ் காப்பாற்றினான் வெற்றியை அவர்களுக்கு கொடுத்து சோதனைகாலத்தை துடங்கி உள்ளான்.

ஜைனுதீன் காக்கா உண்மையை அறிக்கை விட்டதுக்கு நன்றி என்றாலும் காயலை கலைஞர் பட்டணம் என்று சொல்லாமல் உலமாக்கள் பட்டணம் என்று சொல்லவும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. தேர்தலில் வாக்காளர்களுக்கு எதோ கொடுத்தாங்களே அது இவருக்கும் கிடைத்ததோ ?... ...
posted by K M SHAFEER ALI (CHENNAI) [07 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13039

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு நகர செயலாளரே ! உங்கள் அறிக்கையின் நிலை இதோ !

உள் குத்து வேலை:
---------------------------
உங்கள் கட்சியின் முன்னாள் மந்திரிகள் பல பேர் நில மோசடியில் ஜெயிலில் இருக்கும் இந்த நேரத்தில் "கலைஞ்சர் பட்டினம் " என்று சொல்லுறீங்களே இதை "அம்மா " பார்த்தா உங்கள் தலைவரையும் நில மோசடியில் ( காயல்பட்டினத்தை கலைஞ்சர் பட்டா போட்டு வாங்கிட்டதாக நினைத்து ) புடிச்சி உள்ள போடா நீங்க உள் குத்து வேலை செய்றீங்களா ?

கம்பு வெட்டி போடுற வேலை
--------------------------------------------
DMK காரன்தான் நகரின் துணை தலைவர் என்று சொன்னால் "அம்மா"விடம் இருந்து ஒன்றும் (ஊருக்கு தேவையானது ) வராது ,அதை வைத்து ஊர் தலைவி ஊருக்கு ஒன்றும் செய்யவில்லை என்று (நீங்க நினைத்த தலைவி வரவில்லை என்ற (வைத்தெரிச்சலில்) கம்பு வெட்டி போடுறீங்களா?

சுய விளம்பரம் தேவையோ ?
-------------------------------------------
உங்களுக்கு சுய விளம்பரம் தேவை என்றால் ஊருக்கு ஏதாவது நல்லது (முடிந்தால்/மனமிருந்தால் ) செய்து விளம்பரம் தேடுங்கள் அதை விட்டு அந்த பட்ணம் இந்த பட்ணம் என்ற படம் காட்டும் வேலையெல்லாம் இங்க வேண்டாம்

பொறுமை இல்லாத பொறுப்பு
--------------------------------------------
பொது வாழ்வில் / பொறுப்பில் இருந்தால் விமர்சனங்கள் வரும் அதை பொறுத்து கொள்ளத்தான் வேண்டும் அதை விட்டுட்டு இப்படி பொங்ககூடாது. பொறுமை இல்லையென்றால் பொறுப்பு எதற்கு ?

காட்டி கொடுக்கும் வேலை
-----------------------------------
போட்டி போட்டு இருந்தால் எங்கள் அணுகுமுறை வேறுமாதிரி என்று சொல்லுறீங்களே
எது மாதிரி இடைதேர்தலில் "அண்ணாச்சி" ஜெயிச்சாரே அந்த மாதிரியா?

உண்மையான அரசியல்வாதி
-------------------------------------------
ஜெயிச்ச பிறகு முடிவை தனக்கு சாதகமாக மாற்றுறவன் தான் உண்மையான அரசியல்வாதி .அதை நீங்கள் நிரூபிச்சிட்டீங்க ஆமாம் துணை தலைவர் தேர்தலுக்கு முன்பு DMK நிக்கும் என்று ஒன்றும் சொல்லாமல் ஜெயிச்ச பிறகு .DMK அமோக வெற்றி என்று மார்தட்டுறீங்க வெக்கமா இல்லை ?

இதோட விட்டுறுங்க (இது பயம் இல்லை எங்களுக்கு வேலை நிறைய இருக்கு) இந்த அறிக்கைக்கு பதில் அறிக்கை என்று மறுபடியும் கிளம்பிடாதீங்க

வஸ்ஸலாம்
K M SHAFEER ALI
CHENNAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:‘இப்பமும் சொல்கிறோம்
posted by P.S.ABDUL KADER (jeddah) [07 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13041

அஸ்ஸலாமு அழைக்கும்

காயல்நகர தி.மு.க செயலாளர் அவர்களுக்கு ‘நாங்க இப்போதும் சொல்கிறோம்... எப்போதும் காயல்பட்டினம் காயல் மக்களின் பட்டினமே! தவிர கலைஞர்பட்டினம் அல்ல.

தங்களுக்கு வேண்டும் என்றல் நீங்கள் புதிய இடத்தில் (வெளி நகரில்) கலைஞர்பட்டினம் என்று பிளாட் உருவாக்கி பாருங்கள், இன்றைய அரசு கலைஞர் பெயரில் துவங்க இருக்கும் அனைத்துக்கும் முதல் முக்கியதுவம் கொடுக்கிறது

.உங்கள் தி.மு.க அரசியல் விளையாட்டை நமது நகராட்சியில் இந்த 5 ஆண்டுக்கு மட்டும் திணிக்காதீர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by M.S.SABDULAZEEZ (Guangzhou) [08 November 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 13057

நலதமாசு........ அயோயோ..... இதுவும் ஒரு பொலப்பு...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. சொல்லவே இல்லை........
posted by musthak ahamed (mumbai) [08 November 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 13082

ஜைனுதீன் காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பாரக்கதுஹு ,

உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

ஏன் இந்த பதட்டம். ...ஏன் இத்தனை கோபம்.... ரியல் எஸ்டேட் வியாபாரி என்பது தெரியும். ஆனால் ரீல் எஸ்டேட் வியாபாரி என்பதை உங்கள் அறிக்கை மூலம் நிரூபித்து விட்டீர்கள். உங்கள் தலைவர் அறிக்கையெல்லாம் படிக்கின்றீர்கள இல்லையா ........அவருடைய சாணக்கியத்தனம் கொஞ்சம் கூட இல்லையே........

இன்னும் கொஞ்சம் உங்கள் தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். அல்லது நல்ல அறிக்கை விடத்தெரிந்தவர்களை கொண்டாவது அறிக்கை விடுங்கள்.

இந்த அறிக்கையை உங்கள் தலைவர் படித்து விட்டு அல்லது உங்கள் தலைவருக்கு படித்துக்காட்டி உங்கள் பதவிக்கே வெட்டு வைத்துவிட போகிறார்கள். உங்கள் மேல் உள்ள பாசத்தில் சொல்கிறேன்.

உலமாக்களும் ஆலிம்களும் கல்வியாளர்களும் நிறைந்த சிறு மக்கமான காயல் மா நகரத்தோடு தொடர்பு உடையவர் என்பதால் உங்கள் கலைஞருக்குத்தான் பெருமையே தவிர காயல்பட்டினத்திர்க்கல்ல.....

வேறு எங்காவது நிலம் சல்லிசு விலைக்கு கிடைத்தால் சொல்லுங்கள்.... கலைஞர் பட்டினம் என்று பெயரிடுங்கள்.... அப்படியே நமக்கும் ஒரு பிளாட் ஒதுக்குங்கள்.......

உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் அன்பும் கொண்ட
முஸ்தாக் அஹ்மத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by Seyed Ibrahim (kayalpatnam) [08 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13091

திமுக காயல்பட்டினம் நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் அவர்களே

இங்கே திட்டமிட்டு ஒரு உண்மையை பொய்யாக்கி இருக்கிறீர்கள் (புறநகர் மக்களுக்கு தேர்தல் நேரத்தில் ஊர் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டி, மதுபானம் வழங்கியதாக பிரச்சாரம் செய்தார்கள். இந்த பொய் பிரச்சாரத்தை முஸ்லீம்களிடத்தில் மட்டும் கெட்டிக்காரத்தனமாக செய்தார்கள். இதில் அவர்கள் இறைவனுக்கு அஞ்சவில்லை.) Copy Paste

மதுபானம் வழங்கியது பொய்யல்ல நிஜம் மது பானம் மட்டும் அல்ல பணம் விநியோகம் செய்தது பிரியாணி விநியோகித்து அனைத்தும் சத்தியமான உண்மை!

சகோதரி ஆபிதா அவர்கள் வாக்கு சேகரிக்க புறநகர் சென்று வந்ததை எப்படி எப்படியெல்லாம் கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்தார்கள் உடன்பிறப்புகள்.

பாவம், பெரியவர்கள் அடங்கிய ஐக்கியப் பேரவையை அடமானம் எடுத்துக்கொண்டு, உடன்பிறப்புகள் அவ்வளவு அயோக்கிய தனத்தையும் அரங்கேற்றிவிட்டு ‘காயல்பட்டினம் என்றும் கலைஞர் பட்டினமே‘ என்று கூற உள்ளூர் உடன்பிறப்புகளுக்கு வேண்டுமானால் வெட்கம் இல்லாமலிருக்கலாம். திமுக அனுதாபியான நாங்கள் வெட்கபடுகிறோம் வேதனை அடைகிறோம்.

பாரம்பரிய மிக்க கட்சியை யாரோ ஒரு பணக்காரருக்கு அடகு வைத்தீர்களே திமுக அனுதாபியான நாங்கள் வெட்கபடுகிறோம் வேதனை அடைகிறோம்.

இப்போதெல்லாம் பணத்தை மட்டுமே குடுத்து வாக்களர்களையும் கவுன்சிலர்களையும் சிலருக்கு விலைக்கு வாங்க முடிகிறது.

உங்களது பெயரையோ, உங்கள் வீட்டின் பெயரையோ வேண்டுமானால் உங்கள் தானைத்தலைவரின் பெயரை வைத்து ரசியுங்கள்.

இதோடு உங்கள் அறிக்கை நிறுத்தப்படுமானால், எங்கள் கருத்துக்களையும் நிறுத்திக்கொள்கிறோம். தொடர்ந்தால் நகராட்சி துணை தலைவர் தேர்தலில் நாங்கள் கண்ட பல தில்லுமுல்லுகள் “ஆதாரங்களுடன்” ஒவ்வொன்றாக வெளியே வரும்.

நாங்கள் ஒன்றும் பாவாடை கட்டிய ஆண்மகன் அல்ல! (அட்மின் அவர்களே! இதை கத்தரி போட்டு விடாதீர்கள்! இது சாட்சாத் திமுக நகர செயலாளர் பெருந்தகை அவர்கள் நகரப் பிரமுகர்கள் முன்னிலையில் ஐக்கியப் பேரவை மேடையில் மேடையில் உதிர்த்த நாகரிகமான சொற்கள்தான்!)

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:‘மந்தியாட்டம் வேணாம்!... ...
posted by OMER ANAS (DOHA QATAR.) [08 November 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 13109

அஸ்ஸலாமு அழைக்கும். அட்மின் ஒரே கருத்து மீண்டும் என்பதை திரும்ப படித்து எழுத்து பிழை முதல் கருத்தில் இருந்ததால், இரண்டாம் கருத்தை வெளி இடவும்.

அப்புறமாக காயல் பட்டினமா? கலைஞ்சர் பட்டினமா என்பதற்கு, பொதுவாக எல்லோரும் காயல்பட்டினம்தான் என்று விளக்கம் கூறி விட்டார்கள். நான் ஒருபடி மேல் போய் ஒரு வருடம் TIME தருகிறோம் நிறுபி, என்றும் சொல்லி விட்டேன். இது நம் அனைவரின் கருத்து! போட்டி என்றால், நிச்சயம் கலைஞ்சர் பட்டினத்தார் டெப்பா சீட்தான்.

ஆனாலும், கருத்து சொல்கிறோம் என்ற சாக்கில், ஒரு கறுப்பாடு ஐக்கிய பேரவையினை கருத்துக்கு சம்பந்தம் இல்லாமல் இழுத்து உள்ளது. வீணான மந்தியாட்டம் வேணாம். இதை அட்மின் ஊர் ஒற்றுமை என்றால் நாங்கள் வரவேற்கின்றோம்! இதற்கும் ஐக்கிய பேரவைக்கும் சம்பந்தம் இல்லை என போன்றோருக்கு சொல்லி வைக்கவும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by K.D.N.MOHAMED LEBBAI (Jeddah) [08 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13115

அன்பு தம்பி நீ கூறி உள்ள இந்த வாசகம் தப்பு.>>>> தப்பு.>>>> தப்பு.>>>>> தான். வயதுக்கு ( உங்கள் 89 வயது கலைஞ்சர் நின்றாலும் சரிதான் ) நாம் மரியாதை கொடுக்க வேணும் .

கலைஞ்சர் டெபாசிட் இழந்து இருப்பார். என்று சொல்வது தவறு . நிச்சயம் கலைஞ்சர் நின்றால் கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெறுவார் இது நிச்சயம் .

( இப்போது சொல்கிறோம்,
கடந்த நகராட்சி தேர்தலில் சகோதரி ஆபிதவை எதிர்த்து உங்கள் 89 வயது கலைஞ்சர் நின்றாலும் சரிதான். அவர் கண்டிப்பாக டெபாசிட் இழந்து இருப்பார். ) வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by k.seyed ismail presidential flight (abu dhabi) [08 November 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13117

அஸ்ஸலாமு அழைக்கும் ஜைனுதீன் காக்கா எங்களுக்கு கலைசர் பட்டணம் என்பது பெருமை இல்லை குரான் & ஹதீஸ் பட்டணம்தான் பெருமை இன்ஷா அல்லாஹ் விரைவில் ஏற்ப்படும் அல்லாஹ் ஏற்படுத்துவான் ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by Khaja Nijamudeen ( Makkal Aatchi) (Chennai) [09 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13143

ஓட்டு எண்ணிக்கை அன்று காலை கலைஞர் தொலைகாட்சியில், காயல்பட்டினம் எந்த ஒரு கட்சியையும் சாராமல் சுயேட்சையாக போட்டியிடும், வாக்காளர்கள் ஜமாத் மூலமாக ஒரு மனதாக போட்டியிடுவார்கள் என்று கலைஞர் தொலைகாட்சியின் நெல்லை மாவட்ட செய்தி தொடர்பாளர் பேசினார். ஆனால் இவர்களின் அறிக்கை அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

காயல்பட்டினம் " கலைஞர் பட்டினம் " என்பது உண்மை என்றால் தி.மூ.க. மூத்த தலைவர் காயல்பட்டினத்தில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும் பார்க்கலாம்? அண்ணாச்சி அனிதாவிற்குத்தான் வாக்குகள். தி.மூ.க.விற்கு இல்லை என்பதையும், அனிதா சுயேட்சையாக நின்றால்குட அவர்தான் வெற்றிபெறுவார். இதை தி.மூ.க. புரிந்துகொள்ளவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATNAM) [09 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13149

"காயல்பட்டினமா? கலைஞ்சர் பட்டினமா?" என்ற விவாதம் தேவையற்றது. யாரோ ஒருவர் கலைஞ்சர் பட்டினம் என்று சொல்வதால் காயல்பட்டினம் கலைஞ்சர் பட்டினம் ஆகிவிடப்போவதில்லை.

பொதுவாக அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியையும் தங்களது தலைமையையும் அளவுக்கு மீறி புகழ்வது இயல்புதான். அ .தி.மு.க வினர் ஜெயலலிதாவை "அம்மா" "தாயே" 'தாய்க்கு தாயே" "உலக ரட்சகி.." என்று புகழ்வதும் அதுபோலே தி.மு.க வினர் கருணாநிதியை "வாழும் தமிழே" வீசும் புயலே.." "எண்பத்து ஒன்பது வயது எழுச்சியே.." (அவனவனுக்கு நாற்பதிலேயே தடுமாரிகிறது. இவருக்கு மட்டும் எட்டு ஒன்பதில் என்ன எழுச்சியோ தெரியவில்லை) என்று புகழ்வதும் தினமும் நாம் காணக்கூடிய ஒன்றுதான்.

ஒரு வகையில் பார்த்தால் இதில் தி.மு.க வினரை மட்டும் இன்று குறை சொல்லி பயனில்லை. ஒரு காலத்தில் நமதூரும் அந்த நிலையில்தான் இருந்தது. "காயல்பட்டினம் என்றால் அது கலைஞ்சர் பட்டினம்தான்" என்று சொல்லி புளங்காகிதம் அடையும் சில பெரிய மண்டைகள் அன்றும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. இது ஒரு விதமான "கட்சி வெறி' என்று விட்டு விட்டு போகவேண்டியதுதான். இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்ப்பட்டுவிடப்போவதில்லை.

இன்றைய நவீன சிந்தனையுள்ள இளைன்சர்கள் படித்தவர்கள் இது போன்ற அற்ப புகழ்ச்சிகளை வெறிக் கூச்சல்களை ஆதரிப்பதுமில்லை. அங்கீகரிப்பதுமில்லை.

இங்கு எழுதியுள்ள பலரும் இந்த இளைய தலைமுறையை சார்ந்தவர்கள்தான் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவே ஜைனுதீன் போன்றவர்களின் வெற்று அறிக்கை அறைக் காசுக்குக் கூட பயன் பெறாது. அவரது அறிக்கையில் உள்ளு வேறு பல பொய்களை இங்கு நிறைய பேர் தோலுரித்துவிட்டார்கள். எனவே இந்த அளவில் என் எழுத்து நிறைவடைகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:‘இப்போதும் சொல்கிறோம்... ...
posted by Farook (Jeddah) [09 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13178

காயல் பட்டினம் கலைஞர் பட்டினம்னா எத்தனை கமெண்ட்ஸ்.. அரசு கேசட்டில மாத்திவிட்டார்கள். சும்மா வேலை வெட்டி இல்லாம கமெண்ட்ஸ்.. யப்பா

திமுக விக்கு மிக அதிகமா ஒட்டுவிலும் என்பதில் எந்த சந்த்கமுமில்லை. அதை வைத்து சொல்லுவதால் ஊரு பெயரை மாத்தினதா அருத்தம் இல்லை. ஜுபைர் நண்பர் சொல்லுவது சரிதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. நமதூர் அரிசியில் வேண்டுமானால் கல் இருக்கட்டும்
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [10 November 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13189

பெருநாள் விடுமுறையில் மக்காவில் உமராஹ் செய்து விட்டு, இப்பொழுதான் நம் குட்டி மக்கா (காயல் பட்டினம் ) செய்தியை படிக்கலாம்னு இணையதளத்தை திறந்தாள் இங்கு ஒரு பெரும் காமெடி கச்சேரியே அரங்கேறியுள்ளது.

தயவு செய்து நமதூர் குட்டி மக்காவாகவே இருந்துட்டு போகட்டும் குட்டி சுவராக ஆக்கி விடாதீர்கள். அறிவாலயமே அங்கு திகாருக்கும், புழலுக்கும் ரன் எடுத்து ரணமாய் போய் கிடக்கின்றார்கள். இதில் நம் மக்களையும் இந்த பந்தயத்தில் சேர்த்து விடாதீர்கள்.

நமதூர் அரிசியில் வேண்டுமானால் கல் இருக்கட்டும் அரசியல் வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
44வது தேசிய நூலக வார விழா!  (6/11/2011) [Views - 3171; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved