Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:05:22 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7574
#KOTW7574
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 16, 2011
ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் நிச்சயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்! நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து ‘மெகா‘ கூட்டத்தில் விழிப்புணர்வுரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4285 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகர்மன்றத்தின் வரவு - செலவு, அன்றாட நடவடிக்கைகள் என அனைத்து அம்சங்கள் குறித்தும் நகரின் அனைத்து ஜமாஅத்துகளும், பொதுநல அமைப்புகளும், பொதுமக்களும் முழுமையாக அறிந்து, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென, 10.11.2011 அன்று ‘மெகா‘ நடத்திய கூட்டத்தில், அதன் உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாமித் ரிஃபாய் உரையாற்றுகையில் கேட்டுக்கொண்டார்.

துவக்கமாக, ‘மெகா‘வின் செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் உரையாற்றினார்.



அண்மையில் ‘மெகா‘வினரை அழைத்துப் பேசிய காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் அவர்கள், ஐக்கியப் பேரவையின் நடவடிக்கைகளிலுள்ள குறைகள் களையப்பட வேண்டுமென்றும், அதன் நிர்வாகத்தை மறுசீரமைக்கலாம் என்றும் விரும்புவதாக தெரிவித்ததாகக் கூறினார்.

பின்னர், பேரவையின் இன்றிருக்கும் நிர்வாகம் அதற்குத் தொடர்பில்லாத சிலரால் இயக்கப்படுவதாகவும், அது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

காயல்பட்டினத்திற்கு புதிய பெயர் எதுவும் தேவையில்லை என்றும், “அது கலைஞர் பட்டினமுமல்ல! அம்மா பட்டினமுமல்ல! என்றும் காயல்பட்டினம்தான்” என்றும் அவர் தனதுரையில் கூறினார்.

செல்வந்தர்களின் செல்வங்கள் இந்நகர் நலனுக்கு நிச்சயம் தேவை என்றும், சமூக அக்கறை இல்லாதவர்களை கண்ணியமிக்க செல்வந்தர்கள் தம்முடன் வைத்திருப்பதைத் தவிர்த்தால்தான் அவர்களது சிந்தனை நகர்நலன் மீது விழும் என்று தெரிவித்த அவர், தரம் தாழ்ந்த பொழுதுபோக்குகளில் செல்வந்தர்கள் ஒருபோதும் ஈடுபடாமல் கண்ணியம் காக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அடுத்து ‘மெகா‘ உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் உரையாற்றினார்.



காயல்பட்டினம் நகர்மன்றத்தின் பணிகள், அன்றாட நடவடிக்கைகள், வரவு-செலவு குறித்த விபரங்கள், நடைபெறுவதாக அறியப்படும் முறைகேடுகள், அனைவரின் கடமைகள் என பல அம்சங்கள் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.

அவரது உரை பின்வருமாறு:-

நகராட்சியின் முக்கிய பணிகள்:
ஓர் உள்ளாட்சியின் அன்றாட முக்கியப் பணிகள் குப்பைகளை அகற்றல், சாலை பராமரிப்பு, தெரு விளக்குகள் பராமரிப்பு, குடிநீர் வினியோகம் இவையே! அந்த அடிப்படையில் நமது காயல்பட்டினம் நகராட்சியின் பிரதான பணிகளாக இவை அமைந்திருக்கிறது.



குப்பை சேகரிப்பு:
துவக்கமாக குப்பை அகற்றும் பணி குறித்து பார்வையிடுவோம்...

காயல்பட்டினம் நகரிலிருந்து தினமும் 8 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று தவணைகளில் லாரிகள் மூலம் அள்ளிச் செல்லப்பட்டு, பல்வேறு போராட்டங்களுக்கிடையில் எல்.எஃப். வீதியிலுள்ள ஒரு தனியார் இடத்தில் கொட்டப்படுகிறது.

நகராட்சியால் சேகரிக்கப்படும் இக்குப்பைகளைக் கொட்டுவதற்காக துவக்கத்தில், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் கடையக்குடியிலுள்ள தனக்குச் சொந்தமான நிலத்தைக் கொடுத்திருந்தார். எனினும், அவ்விடத்தில் குப்பைகளைக் கொட்டும் விஷயத்தில் சட்ட சிக்கல்கள் உள்ளது. உடனடியாக இந்த சட்ட சிக்கல் சரிசெய்யப்பட்டு, அவ்விடத்தில் குப்பைகள் கொட்டப்பட புதிய நகராட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.





அத்துடன், சேகரித்து கொட்டப்படும் இக்குப்பைகளை மறுசுழற்சி செய்து, அவற்றை இயற்கை உரமாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.

குப்பை சேகரிப்பதற்கென நமது நகராட்சிக்குச் சொந்தமாக 3 லாரிகள் உள்ளன. அவற்றில் இரண்டுதான் தற்பொழுது இயக்கத்தில் உள்ளது. FCக்கு விடப்பட்ட எஞ்சிய ஒரு லாரி, அதற்கான பணம் செலுத்தப்படாத நிலையில், கடந்த 4 அல்லது 5 மாதங்களுக்கும் மேலாக இன்னும் இயக்கத்திற்கு வராமலேயே உள்ளது.

நமதூர் மக்கள் தொகை அடிப்படையில் 45 துப்புரவுப் பணியாளர்கள் தேவை. ஆனால் 32 பணியிடங்களுக்கு மட்டுமே பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 27 பேர் மட்டுமே இயக்கத்தில் உள்ளனர். இவர்களும் துப்புரவுப் பணியல்லாத வேறு பணிகளுக்கும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் செய்யப்பட வேண்டிய துப்புரவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.





சாலை பராமரிப்பு:
நமதூர் முழுவதும் 32 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் உள்ளன. அவை தார் சாலை, சிமெண்ட் சாலை, செம்மண் சாலை என பலவகை சாலைகளாக உள்ளன.

தற்போது நகரெங்கும் பெரும்பாலும் சிமெண்ட் சாலைகள் போடப்படுகின்றன. அவசர கோலத்தில் போடப்படும் இச்சாலைகள் பொதுமக்கள் பலரது இன்னல்களுக்கு பெருங்காரணமாக உள்ளன.

ஒரு சாலையில் ஆயுட்காலம் என்பது 5 வருடங்கள் கொண்டது. ஆனால் அதன் ஆயுட்காலம் முடிவதற்குள்ளாகவே அடுத்தடுத்து அதே இடத்தில் தேவையின்றி புதிய சாலைகளைப் போட்டு, அதன் மூலம் நமது வரிப்பணமாகிய நகராட்சி பொது நிதி வீணடிக்கப்படுகிறது.

இனி வருங்காலங்களில், அந்தந்த பகுதி மக்களின் தேவைகளை அதிகாரப்பூர்வமாக கேட்டறிந்த அவர்கள் விருப்பத்தின்படி தார் சாலைகளைப் போடுவதை இப்புதிய நகராட்சி தனது கடமையாக்கிக் கொள்ள வேண்டும். தேவையில்லாத இடங்களில் வீணாக புதிய சாலைகள் போடுவதை நிறுத்த வேண்டும்.





தெரு விளக்குகள் பராமரிப்பு:
நமதூரிலுள்ள அனைத்து தெருக்களிலுமுள்ள மின் கம்பங்களில், சோடியம் விளக்குகள், குழல் விளக்குகள் என பல வகைகளில் மொத்தமாக சுமார் 1,200 தெரு விளக்குகள் உள்ளன. இவ்விளக்குகளை எரியச் செய்வதற்காக நகராட்சியின் சார்பில் மின் வாரியத்திற்கு மாதம் ஒன்றுக்கு சுமார் 85,000 ரூபாய் கட்டணம் செலுத்தப்படுகிறது.

இவ்விளக்குகளில் பல விளக்குகள் பல நாட்களாகவும், சில விளக்குகள் பல மாதங்களாகவும் எரியாமலேயே உள்ளன. இதனால் அப்பகுதிகள் இருளடைந்து, அதன்மூலம் பாதசாரிகளுக்கு பிரச்சினையாகவும், குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்குக் காரணமாகவும் அமைந்து விடுகின்றன.

ஒவ்வொரு விளக்கிற்கும், அவற்றின் உதிரி பாகங்களுக்கும் ஆறு மாதம், ஒரு வருடம் என ஆயுட்காலம் உள்ளது. அந்த ஆயுட்காலம் முடிவதற்குள் அவை பழுதாகி விடுகின்றபோதிலும், மேற்படி ஆயுட்காலத்தை அடிப்படையாகக் கொண்டு, அப்பொருளை பழுது நீக்கிப் பெறவோ அல்லது மாற்றுப் பொருள் பெறவோ நகராட்சி எந்த முயற்சியும் இதுவரை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.





இவை ஒருபுறமிருக்க, பழுதான ஒரு தெரு விளக்கை சரிசெய்யும் பொருட்டு, மின் கம்பத்தில் ஏறிப் பார்ப்பதற்கென விளக்கொன்றுக்கு ரூ.2 வீதம் நகராட்சியிலிருந்து மின் வாரிய அலுவலகத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நியதி உள்ளது. ஆனால், இச்சிறிய கட்டணம் கூட நீண்ட காலமாக சரிவர செலுத்தப்படாத நிலையில், இது ஒன்றுக்காகவே பல ஆயிரக்கணக்கான ரூபாய் தொகை பாக்கி உள்ளது. அதன் காரணமாக, பழுதான மின் விளக்குகள் சரிவர மின் வாரியத்தால் பராமரிக்கப்படுவதில்லை. இக்குறையை போர்க்கால அடிப்படையில் இப்புதிய நகராட்சி சரி செய்ய வேண்டும்.





குடிநீர் வினியோகம்:
நமதூரில் அதிகாரப்பூர்வமாக சுமார் 8,000 குடிநீர் இணைப்புகள் உள்ளன.

அதைத் தாண்டி, சட்டத்திற்குப் புறம்பாக 1,000க்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் திருட்டுத்தனமாக கொடுக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இந்த இணைப்புகளுக்காக குடிநீர் கட்டணம் பெறப்படாததால், நம் நகராட்சிக்கு மிகப்பெரிய அளவில் வருமான இழப்பு உள்ளது.

ஓர் இணைப்புக்கு மாதம் ரூ.50 குடிநீர் கட்டணமாகும். ஆனால், இந்த சிறு தொகையைக் கூட பலர் கட்டாமல், அதுவே சுமார் 50 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு வர வேண்டிய வருமானம் நிலுவையிலுள்ளது.





தற்போது, ஆத்தூரிலிருந்து தினமும் 23 லட்சம் லிட்டர் தண்ணீரை 17 மணி நேரம் பம்ப் செய்து நமதூரிலுள்ள 14 நீர்த்தேக்கத் தொட்டிகளில் அவற்றை சேகரித்து, குடிநீர் வினியோகம் செய்யப்படும் வழமை உள்ளது. இந்த பம்பிங் வகைக்காக மட்டும் ஆத்தூருக்கு சுமார் ரூ.52 லட்சத்திற்கும் அதிகமான தொகை செலுத்தப்படாமல் நிலுவையிலுள்ளது. இதை உடனடியாக செலுத்தினாலே, நமதூருக்குத் தேவையான தண்ணீர் ஓரளவுக்கு சீராக கிடைக்க வாய்ப்புள்ளது.

தற்போது ஆத்தூரிலிருந்து பெறப்படும் தண்ணீரையே Over flow ஆக்காமல், வீண் விரயம் செய்யாமல் அந்தந்த நேரங்களில் முறையாகப் பார்வையிட்டு சேகரித்து வைத்தாலே ஒருநாள் விட்டு ஒருநாள் தட்டுப்பாடின்றி நகர் முழுக்க தண்ணீர் வினியோகம் செய்ய இயலும் என ஆத்தூர் நீரேற்றும் நிலையத்திலுள்ள மேலதிகாரிகள் நம் நகர்மன்றத் தலைவரிடம் நேரில் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது பைப் லைன் திட்டம்:
காயல்பட்டினத்தின் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்குவதற்காக பொன்னன்குறிச்சியிலிருந்து தனிக்குழாய் மூலம் நீர் பெற்று நிறைவேற்றப்படவுள்ள புதிய திட்டம்தான் இரண்டாவது பைப் லைன் திட்டம்.

இதற்கு ரூ.30 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையில்

மத்திய அரசு 80 சதவிகித தொகையை - அதாவது சுமார் ரூ.24 கோடியை மானியமாகத் தருகிறது.

மாநில அரசு 10 சதவிகித தொகையை - அதாவது சுமார் ரூ.3 கோடியை மானியமாகத் தருகிறது.

எஞ்சிய 10 சதவிகித தொகையை - அதாவது சுமார் ரூ.3 கோடியை நம் நகராட்சி செலுத்த வேண்டும். இத்திட்டத்திற்குத் தேவைப்படும் தொகையில் ரூ.50 லட்சத்தை, நமது நகர்மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் அவர்கள் நன்கொடையாகத் தரவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்கள். இதற்காக அவர்களுக்கு இக்கூட்டத்தின் மூலம் மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, நமதூரிலுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை முழுமையாகப் போக்கிட ஆவன செய்யுமாறு புதிய நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட அங்கத்தினரை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

சுத்தமான குடிநீர்...
நமதூரில் குடிநீருக்காக வினியோகிக்கப்படும் குடிநீர் சுத்தமானதுதானா என்பதையும் நாம் முக்கியமாக கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

நமதூரிலுள்ள குடிநீர் தேக்கத் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை நன்கு சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு முறையாக சுத்தப்ப்டுத்தப்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.



இனியாவது, அந்தந்த பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள், பொதுநல அமைப்புகள், ஜமாஅத்துகள், அந்தந்த வார்டு உறுப்பினர்கள், தமது பகுதியிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் உரிய காலத்தில் சுத்தம் செய்யப்படுவதைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டும். வினியோகத்தின் மூலம் பெறப்படும் அந்த நீரையும் அவ்வப்போது பரிசோதனை செய்து அதன் தன்மைகளை அறிய வேண்டும்.

இந்த ஒன்றை முறைப்படி செய்துவிட்டாலே நகரில் உள்ள பாதி நோய்கள் குணமாகும் என்பதை மட்டும் நம்மால் உறுதியாக சொல்ல முடியும்.

வரவு-செலவு:

(அ) வரவு (ஆண்டு ஒன்றுக்கு)
குடிநீர் கட்டணம் மூலம் - சுமார் ரூ.50 லட்சத்திற்கும் மேல்...

சொத்து வரி மூலம் - சுமார் ரூ.40 லட்சத்திற்கும் மேல்...

வீடுகட்ட வரைபட ஒப்புதல் மூலம் - சுமார் ரூ.20 லட்சத்திற்கும் மேல்...

லைசென்ஸ் உள்ளிட்ட உரிமக் கட்டணங்கள் மூலம் - சுமார் ரூ.50 ஆயிரம்...

நகராட்சி நிர்வாகத்திற்காக மாநில அரசு தரும் தொகை - சுமார் 2¼ கோடி...

ஆக, நகராட்சியின் மொத்த வருமானம் - ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.3.60 கோடிக்கும் மேல்...

இவை போக, ஆடறுப்பு டெப்போ, சைக்கிள் ஸ்டாண்ட், கடை வாடகை, கிணறு உள்ளிட்டவற்றிலிருந்து கிடைக்கும் இதர வருமானங்கள் தனி.

(ஆ) செலவு (ஆண்டு ஒன்றுக்கு)
அலுவலர் சம்பளம் - சுமார் ரூ.36 லட்சம்...

மின் கட்டணம் - சுமார் ரூ.10 லட்சம்...

குடிநீர் வினியோகத்திற்காக - சுமார் ரூ.48 லட்சம்...

இதர செலவுகள் - சுமார் ரூ.15 லட்சம்...

ஆக மொத்தம் - சுமார் ரூ.1.10 கோடி தொகை ஓராண்டு செலவாகும்.

நகராட்சியால் பெறப்படும் ஆண்டு வருமானத்திலிருந்து, ஆண்டு செலவினங்களைக் கழித்து, ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.2.50 கோடி கையிருப்பு உள்ளது. இத்தொகைதான் நமது நகராட்சியின் பொது நிதியாகும்.

திட்டங்களை நன்கு ஆய்ந்தறிந்து, முறைப்படி இப்பணத்தை செலவு செய்தாலே எவ்வளவோ நல்ல திட்டங்களை நம் நகருக்கு நிறைவேற்றலாம். ஆனால், இதுவரை இத்தொகை பெரும்பாலும் திரும்பத் திரும்ப புதிய சாலைகள் போடுவதற்கே செலவிடப்படுவது வேதனைக்குரிய உண்மையாகும்.

இனியாவது, நகர பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து, அவர்களின் தேவைகளை நல்ல முறையில் பூர்த்தி செய்திட இத்தொகையை செலவழிக்க இப்புதிய நகர்மன்றம் உறுதியெடுக்க வேண்டும்.



முறைகேடுகளைத் தடுப்பதெப்படி?
நல்ல வருமானம் இருந்தும், நம் நகர்மன்றத்தில் பலவேறு குறைபாடுகளும், முறைகேடுகளும் நிரந்தரமாகவே உள்ளதை அறிய முடிகிறது. அவற்றுக்கு மிக முக்கிய காரணங்கள:-

நேர்மையின்மை...
மக்கள் கருத்துக்களை மதியாமை...
தொலைநோக்குச் சிந்தனையின்மை...
வெளிப்படையான நிர்வாகமின்மை...
நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வின்மை...

முறைகேடுகளுக்கு சில உதாரணங்கள்: அநியாயமாக குடியேற்றப்படும் மக்களுக்கு சுனாமி குடியிருப்பு என்ற பெயரில் புதிய வீடுகள் நமதூரில் அரசாங்கத்தால் கட்டிக்கொடுக்கப்படுவதைக் கண்டித்து, நமதூரில் கடந்த ஜனவரி மாதம் மாபெரும் ஆர்ப்பாட்டம் நகரளவில் நடத்தப்பட்டது.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் முயற்சியில் நடத்தப்பட்ட இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், நகரின் அனைத்து வணிகர்களும் தமது கடைகளை அடைத்துவிட்டு வந்து கலந்துகொண்டனர்... பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்காக நமது நேரம், பொருள், சக்தி என பலவும் செலவழிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு உணர்வுப்பூர்வமாக நாம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறோம். ஆனால் வேடிக்கை என்ன தெரியுமா...?

கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அன்றைய நமது நகராட்சி மன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 198ஆம் எண் கொண்ட தீர்மானத்தில், மேற்படி சுனாமி குடியிருப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி நடந்தது? நமக்கெல்லாம் ஆச்சரியமாக இல்லையா?

அடுத்த சான்று: ரோசா ஆண்கள் சுய உதவிக்குழு என்ற பெயரில், 14 பேர் குளச்சல் ஒரே ஊரிலிருந்து, தனி நபர் ஆதிக்கத்தின் அடிப்படையில் தற்காலிக பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டு, மாதம் ரூ.56,000 வீதம் ஆண்டுக்கு சுமார் ரூ.6.50 லட்சம் என சுமார் 4 வருடங்களாக நமது வரிப்பணத்திலிருந்து வழங்கப்பட்டு வருவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்...?

ஒவ்வொரு முறையும் நமது நகர்மன்றக் கணக்குகள் தணிக்கை (ஆடிட்டிங்) செய்யப்பட்டு பெறப்படும்போது, அதில் இவ்வாறு மக்கள் பணத்திலிருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்கக் கூடாது என்றே தணிக்கை செய்த அதிகாரிகளால் எழுதி பெறப்பட்டிருந்தும் மீண்டும் மீண்டும் நமது பணத்தில் சம்பளம் வழங்கப்படுவது எப்படி...? இதை யார் கேட்பது...?? நமக்கு உரிமையில்லையா...???

இன்னும் வேடிக்கை என்னவென்றால், இந்த 14 பேரில் இரண்டு அல்லது மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் பணிக்கே வருவதில்லை என்ற உண்மை யாருக்காவது தெரியுமா...? பணிக்கு வராமலேயே சம்பளத்தை மொத்தமாகப் பெறுவது இங்குதான் நடைபெறுகிறது என்று சொல்லலாம்.

இதற்கு மேலும் வேடிக்கை என்ன தெரியுமா? நமது வரிப்பணத்தில் இப்படி சம்பளம் பெறும் ஒருவர் நகராட்சியில் சரியாகப் பணி செய்யவில்லை என்பது மட்டுமின்றி, நமதூரிலுள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் தினமும் காலையிலும், மாலையிலும் வேன் ஓட்டி அங்கும் சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கிறார்... இது எப்படி...???

இவ்வாறு பணியமர்த்தப்பட்ட இவர்கள் முறைப்படி வேலைவாப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்து பதிவு மூப்பு அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டார்களா என்றால் இல்லை...

சரி அது போகட்டும்! அரசின் நேரடி நியமனப்படியாவது நியமிக்கப்பட்டார்களா என்றால் அதுவுமில்லை...

அப்படியென்றால் இவர்கள் நியமிக்கப்பட்டது எப்படி...? எப்படி தெரியுமா...?? தனியொரு நகர்மன்ற உறுப்பினரின் ஆதிக்கத்தில், ஒரேயொரு தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இத்தனை பெரிய அவலம் நமது நகர்மன்றத்தில் இன்றளவும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதே...? இதை யார் கேட்பது...? நமக்கு உரிமையில்லையா...???

கண்ணியமிக்க காயல்வாசிகளே... நன்றாகக் கூர்ந்து கவனியுங்கள்... அடுத்து நான் சொல்லப்போகும் சான்று மிக முக்கியமானது...

நமது நகராட்சியால் பெறப்படும் குடிநீர் கட்டணம், வீடு வரைபட கட்டணம், வீட்டுத் தீர்வை என அன்றாடம் பெறப்படும் தொகை சுமார் ரூ.80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை... இத்தொகையை அன்றன்றைக்கே வங்கியில் செலுத்திவிட வேண்டும்.

ஆனால், இத்தொகை ஒருநாள் தாமதிக்கப்பட்டு, சிட்டை வட்டிக்கு விடப்பட்டு, மறுநாள் பெறப்படும் தொகையை முதல் நாள் கணக்கு அளவுக்கு வங்கியில் செலுத்தி வரும் நடவடிக்கை பல காலமாக நடைபெற்று வருவதாக அறிய முடிகிறது. ஒருவேளை முதல் செலுத்த வேண்டிய தொகை அதிகமாக இருந்து, இன்றைய வருமானம் குறைவாக உள்ளது என்றால், அந்நேரத்தில் மட்டும் தம் கைக்காசைப் போட்டு அப்பணத்தை வங்கியில் செலுத்துவதாக அறிய முடிகிறது. அரசு விடுமுறை நாட்கள், வார விடுமுறை நாட்கள் என்றால் இதே தொகை ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களுக்கு வட்டிக்கு விடப்படுவதையும் அறிய முடிகிறது.

நமது இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது, அனுமதிக்கப்படாத என்று ஹராம் - ஹலால் பார்த்து, அவ்வப்போது நாம் செலுத்தும் பணம், இங்கு எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது பார்த்தீர்களா...?



தகவல் அறியும் உரிமை சட்டம்:
தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது, அரசின் அந்தந்த துறைகளில் தேவையான விளக்கங்களைக் கேட்டு நாம் அனுப்பும் கடிதம்.

இச்சட்டத்தின் மூலம், நம் நாட்டின் இராணுவ இரகசியங்கள் தவிர இதர அனைத்தையும் கேட்டறிந்துகொள்ள நமது அரசு நமக்கு முழு உரிமை வழங்கியுள்ளது.

நமக்குத் தேவையான விளக்கத்தை இச்சட்டத்தின் கீழ் அந்தந்த அரசு அலுவலகங்களில் கேட்க முடியும். நாம் கேட்பவற்றுக்கு 30 நாட்களுக்குள் பதில் கடிதம் மூலம் விளக்கமளிக்க வேண்டியது அவர்களின் கடமையாகும். அவ்வாறு குறித்த காலத்திற்குள் விளக்கமளிக்கத் தவறினால் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் தொகை அபராதமாக விதிக்கப்படும்.

இவ்வளவு சக்தி வாய்ந்த சட்டத்தைக் கொண்டு நமது நகராட்சியில் நடைபெறுவதாக நாம் சந்தேகிக்கும் எந்த ஒன்று குறித்தும் விளக்கம் பெற்றுக்கொள்ளலாம். இதை நமது பொதுமக்களும், பொதுநல அமைப்புகளும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

நாம் செய்ய வேண்டியதென்ன?
அன்பான பொதுமக்களே, தாய்மார்களே... நகராட்சிக்கு நாம் செலுத்த வேண்டிய கட்டணங்களை குறித்த காலத்தில் செலுத்த பழகிக்கொள்ள வேண்டும்...

புது வீடுகள் கட்டப்படும்போது, அவற்றை முறைப்படி அதிகாரிகளை அளக்கச் செய்து, அவற்றுக்கான சரியான வீட்டுத் தீர்வைகளைக் கட்ட வேண்டும்... முறைகேடாக தீர்வையைக் குறைத்துக் கட்டுவதால் நமக்கு சில நூறு ரூபாய்கள் மிச்சப்படலாம். ஆனால் அது நம் மார்க்கப்படியும் கூடாது என்பது மட்டுமின்றி, அதுவே நமது உரிமைகளைக் கேட்டுப் பெற தடைக்கல்லாக அமைந்துவிடும்.

லஞ்சம் வாங்குவது மட்டும் தவறல்ல... லஞ்சம் கொடுப்பது அதை விட கொடுமையான தவறு! எனவே, எந்தத் தேவைக்காகவும் யாருக்கும் ஒரு பைசாவும் லஞ்சமாகக் கொடுக்காதீர்கள்!

இவை நாம் நமக்குள் செய்துகொள்ள வேண்டிய சுயதிருத்தங்கள்.

அடுத்து, நமது நகராட்சியின் அனைத்து கூட்டங்களிலும் நம்மில் விவரமறிந்தவர்கள் அவசியம் தவறாமல் கலந்துகொண்டு அங்கு பேசப்படுபவை, தீர்மானிக்கப்படுபவை குறித்து கவனமெடுக்க வேண்டும். கூட்டத்தில் கருத்து சொல்ல நமக்கு உரிமை இல்லையே தவிர, பார்வையாளராக கூட்டத்தை அவதானிக்க நமக்கு எந்தத் தடையுமில்லை.

மேற்படி நகர்மன்றக் கூட்டத்தின் தீர்மான முன்வடிவுகளை முறைப்படி அறிந்துகொண்டு, அதிலுள்ள முக்கியமான அம்சங்கள் குறித்து நமக்குள் கலந்தாலோசித்து முடிவெடுத்து, அம்முடிவுகளை நமது நகர்மன்ற உறுப்பினர்கள் மூலம் நிறைவேற்றச் செய்ய வேண்டும்.

இது விஷயத்தில் நம் நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல சங்கங்கள், தனி நபர்கள் என அனைவரும் அக்கறை எடுத்து செயல்பட வேண்டியது நமது தார்மீக கடமையாகும்.

இறுதியாக, எனது வேண்டுகோளை புதுக்கவிதை வடிவில் முன்வைத்து விடைபெறுகிறேன்...

நகர்மன்றத் தலைவி அவர்களே...!
காலத்தால் சிறந்த அவசிய மாற்றம்...
காயல் மக்கள் தந்த ‘மெகா‘ மாற்றம்...
இது அல்லாஹ் விரும்பிய அழகிய மாற்றம்...

வெற்றி என்பது வெறும் எண்ணிக்கைகளால் மட்டுமானதல்ல!
கொள்கைகளால்... செயல்திட்டங்களால்... எதிர்பார்ப்புகளால்...
என்ற நம்பிக்கைகளால் ஆனது!!

திட்டமிடுங்கள்!
திடமாய் நில்லுங்கள்!!
இலவசமாய்ப் பெற வேண்டியதை
போராடியாவது பெற்றிடுங்கள்!!!
ஊருக்கு வரவேண்டிய திட்டங்களை
ஊருக்கே கிடைக்க உதவுங்கள்!

பெற்றவர்களுக்கு பிள்ளை அமானிதம்...
செல்வந்தர்களுக்கு செல்வம் அமானிதம்...
உங்களுக்கு இந்த ஊரே அமானிதம்...

மாதம் ஒருமுறை மக்களை சந்தியுங்கள்!
குறை கேட்க ஒருநாள் ஒதுக்குங்கள்!!
குறை தீர்க்க சில நாள் ஒதுக்குங்கள்!!!

உங்கள் உள்ளத்தையும்
உள்ளங்கைகளையும்
சுத்தமாய் வையுங்கள்!
அல்லாஹ் எங்கள் அனைவரையும்
உங்கள் பக்கமாய் வைப்பான்!!

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை
ஒவ்வொரு விதமாய்
பாடம் சொல்லிக்கொண்டேதானிருக்கிறது...
உணர்ந்தவர்கள் உத்தமர்களாகின்றனர்...
உணர மறுத்தவர்கள் உதாசினமடைகின்றனர்...

செல்வந்தர்களே...!
நீங்கள் எதையெல்லாம் விலைக்கு வாங்குவீர்கள்...?

காற்றை...
தண்ணீரை...
ஆகாயத்தை...
இன்னும் பூமியை...

ஆனால்...
நீங்கள் விலை நிர்ணயிக்க முடியாத
நிதர்சனங்கள் நிறைய உண்டு...

வெறும் ‘காயல்‘ என்னும் அடைமொழிகளை
அடைய முடிந்த உங்களால்
காயல் மக்களின் மனங்களை
அடைய முடிவதெப்போது...?

நமது முன்னோர்களை
நாம் இன்றும் முன்னிறுத்துவது
அவர்களின் செல்வங்களுக்காக அல்ல!
சேவைகளுக்காக மட்டுமே!!

கனிவோடு கேட்கிறோம்...
இந்த ஊருக்கு
நீங்கள் தேவை...

இந்த ஊர் முன்னேற்றத்திற்கு
உங்கள் செல்வம் தேவை...

இந்த ஊர் மேன்மைக்கு
உங்கள் சேவை தேவை...

இது புரிந்தால் புண்ணியம்!
புரியாவிட்டால்....???

மேன்மை பொருந்திய எங்கள் காயலுக்கு
இன்னொரு பெயர் தேவையில்லை...
காயல்பட்டினம்
என்றும் காயல்பட்டினமே!

என்றும் நீங்கள் காயலின் சொந்தங்கள் என்பதை
காலம் உங்கள் காதுகளில் சொல்லிக்கொண்டே இருக்கும்!

நமதூருக்கு செய்ய வேண்டிய
நல்ல பணிகள் பல நமக்குண்டு...
தோள் கொடுங்கள் தோழர்களே...!

நகர்மன்ற அங்கத்தினரே...!
நகரின் தலைமை என்ற கிரீடத்தில்
பதினெட்டு வைரங்கள்...
சேர்ந்து ஜொலிக்கட்டும்!

இனி எங்கள் ஊர்
என்றென்றும் ஜெயிக்கட்டும்!!

காஹிர் ஃபதன் என்னும் காயல்பட்டினம்
கல்வியால் சிறந்தது...
அறிஞர்களால் சிறந்தது...
ஒழுக்கத்தால் சிறந்தது...
ஆன்மிகத்தால் சிறந்தது...
ஆனால்.....
அரசியல்வாதிகளால்.....?????


இவ்வாறு, ‘மெகா‘ உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பினை காண இங்கு அழுத்தவும்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்...
posted by Zubair Rahman (Doha-Qatar) [16 November 2011]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 13444

சென்றமுறை அடுத்தவர் மனம் புன்படுவதுபோல கூர்வாள் கருத்துக்களைப்பதிந்தவர்களுக்கு , மெகா மேடையில் கூறப்பட்ட "கடந்த நகராட்சியின் லட்சணங்கள் " அதிர்ச்சியை கொடுத்திருக்கும். கூறப்பட்ட அனைத்தும் நிதர்சனமான உண்மைகளே.

இனி வரும் காலங்களில் நமதூரின் நன்மைக்காகவேண்டி நாம் அனைவரும் ஒருசேர நின்று பாடுபடுவோம். நமக்கு ஊர் நலத்தில் எந்த குறை இருந்தாலும், தனது அறிக்கையில் சொன்னவாறு தலைவியை நேரில் கண்டு நிவர்த்தி செய்வோம் .

காதர் காக்கா அவர்களின் கருத்துப்படி செல்வந்தர்களின் ஒத்துழைப்பு என்றுமே நமது "'புனித மகான்களின் காயல்பதிக்கு"" தேவை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்...
posted by M.N Refai (Dar Es Salaam ) [16 November 2011]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 13448

அஸ்ஸலாமு அழைக்கும்

முதலில் மெகா நண்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...

உங்கள் சேவை தொடர கருணையுள்ள ரஹ்மான் துணை நிப்பானாக .. ஆமீன்

எங்க இருந்து இவளோ விஷயங்கள் நமக்கு வந்தது என்று ஆச்சரியமாக இருக்கு .. நன்றி ஹாமித் refai அவர்களே ..

மாதம் ஒரு முறை இந்த மாதிரி மீட்டிங் போட்டால் நன்றாக இருக்கும்.

அதில் குறை நிறை அனைதும் சுட்டிக்காட்டபடவேண்டும்.

இன்ஷா அல்லாஹ் பசுமையான காயல் உருவாக இருப்பது மிக அருகில் உள்ளது என்பதை இந்த புள்ளி விபரங்கள் காட்டுகிறது.

சிந்திக்க வைக்கிறது உங்களது அறிக்கை , வாழ்துக்கள்...

காயலின் முரசொலி மெகா ஆரம்பம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நகராட்சி
posted by M.S.Kaja Mahlari. (Singapore.) [16 November 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 13450

மிகவும் அருமையான அதே நேரத்தில் காயல் நகர மக்கள் நமது கடமை என்ன? நாம் நமது ஊர் முன்னேற என்ன செய்ய வேண்டும்? நமது நகராட்சி வருமானங்கள் எப்படியெல்லாம் செலவழிக்கப் படுகிறது என்பது போன்ற பலவிசயங்கள் இக்கூட்டத்தின் வாயிலாக சொல்லப்ப் பட்டுள்ளது.

ஆகவே நாம் ஒவ்வருவரும் கடமை அறிந்து செயல்படுவது நம் ஒவ்வருவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். நமக்கென்ன என இருந்துவிட்டால் அதன்மூலம் ஏற்படும் இழப்பும், பாதிப்பும் நமக்கே திரும்பிவந்து சேரும். திருட்டுத்தனமாக இணைக்கப்பட்ட குடிநீர் இணைப்பை ஒன்று துண்டிக்கவோ, அல்லது அபராதம் விதிக்கப்பட்டு அவைகளை சட்டப்பிரகாரமாகவோ ஆக்க வேண்டும்.

மின்சார மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சிவது அறிந்து அதன் இணைப்பை துண்டிக்கவேண்டும். இதுவும் ஒரு திருட்டுத்தனமே ! குடிநீர் விநியோகத்தின் போது மின்சாரம் கட் பண்ணுவது ஒரு நல்ல யோசனையே ! அவைகளை தொடரவேண்டும்.

அடுத்து நமது ஊரை "காஹிர்பதன்" எனும் அழகிய வரலாற்றுசிரப்பான "காயல் பட்டணம்"என்றே நாம் அனைவரும் அழைக்கவேண்டும். அதனை விட்டு விட்டு சாக்கடை அரசியல் வாதிகளின் பெயர்களோடு தொடர்ப்பு படுத்தி அழைக்கும் அவல நிலையை நாம் அனைவரும் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

அழகிய நகருக்கு வோர் அழகிய திருநாமம் இருக்கும் போது, அதனை ஒரு அழுக்கான பெயர்கொண்டு அழைக்க அவசியம் நமக்கு என்ன வந்து விட்டது? அரசியலை அரசியலாக வைக்கவேண்டுமே தவிர அதனை மார்க்கதோடும்,நமது கலாச்சாரத்தோடும் இணைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

மொத்தத்தில் இந்த கூட்டம் வாயிலாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் நமது ஊர் நலத்தின் மீது அக்கறை கொண்டு தேரிவிக்கப்பட்டுள்ளடாகவே அறியப்படுகிறது. அவசியம் இதனை அனைவரும் அறிந்து செயல் படுவோமாக ! அல்லாஹ் அதற்கு நல்லருள் புரிவானாக ! ஆமீன்! வஸ்ஸலாம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்...
posted by Vilack SMA (Siacun) [17 November 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 13451

ஜமாத்துகள் , பொதுநல அமைப்புகள் , பொதுமக்கள் ( இவர்கள் ஜமாத்துகள் , பொதுநல அமைப்புகளில் சேராதவர்களா என்று தெரியவில்லை ) அனைவரும் விளிப்புனர்வோடுதானே இருக்கிறார்கள் . அதனால் வந்தவர்தானே நமது புதிய " தலைவி " . பின் எதற்கு மீண்டும் , மீண்டும் " விழிப்புணர்வு " . அதிகம் விழித்திருந்தாலும் ஆபத்தில் முடியலாம் .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்...
posted by சாளை நவாஸ் (singapore) [17 November 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 13456

9,500 பேர் விழித்திருந்து புதிய தலைவியை தேர்ந்தெடுத்தார்கள் என்றால், அப்போ மற்ற 4,500 பேரும் விழித்திருக்கவில்லையே? ஆகா மொத்தம் 14,000 பேருக்கும் சேர்த்துதான் விழிப்புணர்வு.

கண்டதையெல்லாம் சொல்லி பால் போன்று இருக்கும் கால் மக்களின் மனதில் நஞ்சை ஊற்றாதீர்கள்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சாக்கடை இருக்கும் இடத்தில் சனியன்கள் (கட்டை கால்கள்) இருக்கத்தானே... செய்யும்?
posted by zubair (riyadh) [17 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13457

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு மெகா அங்கத்தினரே..... தாங்கள் நடத்திய விழிப்புணர்வு கூட்டத்தில் சொன்ன எல்லாமே..... உண்மையிலும் உண்மையே...... நீங்கள் கோடிட்டு கூறிய பல விசயம்கள் நூற்றில் முப்பது நபருக்கு தெரிந்திருந்ததே.........

எனது சிறிய பருவத்தில் பஞ்சாயத் குப்பை அல்லும் மாட்டுக்கு போட்ட தீவனம் மாதம் பல லட்சம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டதும்.... அந்த மாடுகள் காயல் ஸ்பெசல் ஹல்வாவா தீவனம் கொடுத்தீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டதும் எனக்கு ஞபகத்தில் வருவதுண்டு.

நம் முன்னாள் தலைவரின் கை சுத்தமா..... இருந்தும் கையை கட்டப்பட்டு இருந்தது காரணம் சாக்கடை (அரசியல்). பூனைக்கு யார் மணிக்கட்டுவது என்று இருந்ததுதான் உண்மை.

சுத்தமான, பொருளாதாரம் படைத்த தலைவர் இருக்கும் போது உள்ளே.... சனியன்கள் இருந்தன. லஞ்சப்பணம் நீங்கள் வாங்காவிட்டாலும் எங்களையாவது வாங்க விடுங்கள் என்றனர்.

இப்பொழுது உள்ள தலைவருக்கும் இந்த வார்த்தைகள் ஒளிக்காமல் இருக்காது..... பொறுத்திருங்கள். மெகாவை முதலில் ஆதரித்த நான்..... பின்பு தாங்களின் கொள்கையில் சின்ன தடுமாற்றத்தினால் தாங்களுக்கு உணர்த்த கமாண்டு பதிக்க நேரிட்டது.

நம் பெரியவர்கள், பண பலம் படைத்தவர்களை, அறிவு கூர்மை உடையவர்களை கையில் வைத்து காயை நகர்த்துங்கள் வெற்றி நிச்சயம். நம்மூரில் சாக்கடையை நீக்கி விட்டதால் சனியன்கள் குறைத்திருக்கும் ஆனால் சனியன்கள் மேலிடத்தில் இருப்பதால்..... நான் மேலே... குறிப்பிட்டவர்களின் உதவிகள் கண்டிப்பாக உங்களுக்கு தேவை. விழிப்புணர்வுரை சூப்பர் வாழ்த்துக்கள். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்...
posted by soofi hussain (jeddah) [17 November 2011]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13466

நியூஸ் படிக்கவே கண்ண கட்டுது இத்தனை பக்கத்துக்கு விளக்கமா

ரமணா படத்தில் ஹீரோ பேசிய டயலாக் மாதிரி உங்க டயலாக் (புள்ளி விவரம்) இருந்தது. தொடரட்டும் உங்கள் பனி அறிக்கையில் அல்ல மக்கள் சேவையில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Live and let live.
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [17 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13467

Ref: Comment # 4

"ஜமாத்துகள் , பொதுநல அமைப்புகள் , பொதுமக்கள் ( இவர்கள் ஜமாத்துகள் , பொதுநல அமைப்புகளில் சேராதவர்களா என்று தெரியவில்லை ) " - Copy & Paste.

(ஜமா-அத்களிலிருந்தும், பொதுநல அமைப்புகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவிர) 25 பேர்கள் உள்-தேர்தலுக்காக தேர்ந்தேடுக்கப்பட்டார்களே அந்த நேரத்தில் (2 மாதங்களுக்கு முன்) கேட்கப்பட்டிருக்க வேண்டிய கேள்வி. ஒருவேளை பலர் இந்த கேள்வியை அந்த நேரத்தில் கேட்டதால் இப்போது இதைக் கேட்பவருக்கு அந்த நேரத்தில் கேட்கத்தோன்றவில்லை போலும்.

காசு வாங்கினாலும் பரவாயில்லை எங்கள் கவுன்சிலர் எங்கள் வார்டுக்கு நன்றாக வேலை செய்தார் என்ற எண்ணம் மக்கள் பலரிடம் பரவலாக இருக்கிறது. அந்த எண்ணம் சுத்தமாக அகற்றப்பட வேண்டும். இந்த எண்ணமே எலிகளை பெருச்சாளிகளாக மாற்றுகிறது. இன்ஷா-அல்லாஹ், இந்த எண்ணத்தை மாற்றுவதற்க்காகவும் வருங்காலங்களில் "மெகா"வின் செயல்பாடு (விழிப்புணர்வைத் தூண்டும் கூட்டங்கள்) தொடரும்.
----------
Ref: Comment # 6

"சாக்கடை இருக்கும் இடத்தில் சனியன்கள் (கட்டை கால்கள்) இருக்கத்தானே... செய்யும்? " - Copy & Paste.

பன்றிகளை பன்றிகள் என்றே கூறுங்கள். அதில் தவறில்லை. அது ஒரு Tamil Dictionary word. இதை சொல்வதனால் வாய் ஒன்றும் அசுத்தமாகிவிடாது, (Type செய்வதனால் Keyboard / Monitor அசிங்கமாகிவிடாது). பன்றிகளைவிட கேடுகேட்டவர்கள்தான் இலஞ்சம் வாங்கக்கூடியவர்கள். இந்த கேடுகேட்டவர்களை பணம் படைத்தவர்களில் சிலர்தானே உருவாக்குகிறார்கள். சுருக்கமாகக் சொல்வதானால் வேலியாய் இருப்பவர்களில் சிலர் பயிரை மேய்கிறார்கள்.

இவர்கள் திருந்தவேண்டும். இல்லையேல், இன்ஷா -அல்லாஹ் திருத்தப்படுவார்கள்.

No one can do EVERYTHING; but everyone can do SOMETHING and if everyone join together, they can do MANY THINGS. Therefore , "Live and let live"
------------------------
"மெகா" ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் அழைப்புகள் கொடுக்கப்பட்டும் சில கவுன்சிலர்கள் வரவில்லை. அவர்களுக்கு தவிர்க்கமுடியாத பல / சில அலுவல்கள் இருந்திருக்கலாம். அல்லது நகர்மன்றம் பற்றிய விழிப்புணர்வு நிறைய இவர்களுக்கு இருந்திருக்கலாம். இந்த கூட்டத்திற்கு வராததை மட்டும் வைத்து அவர்களை குறை கூற இயலாது.

சகோதரி ஆபிதா அவர்கள் துளிர் அரங்கில் ஏற்பாடு செய்த "Get to gather" நிகழ்ச்சியிலும் வராத, KWT ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொள்ளாத கவுன்சிலர்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ஆனால் "மடியில் கணம் இருப்பதனால்தான் வழியில் பயம் இருக்கிறது" என்று பலர் கூறுவது என் காதிலும் விழுந்தது.

"குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும்" என்று சொல்லுவார்களே அதுதான் இதற்கு அர்த்தமோ?
--------- END ----------


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [17 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13468

MEGA உடைய இந்த விழிப்புணர்வு வீடியோவை இங்குள்ள நம் மக்கள் பார்த்து வியப்புடன் கூடிய ஆச்சரியம்.

என்னுடன் ஒன்றாக பார்த்துக்கொண்டு இருந்த அனைத்து நம்மவர்களுக்கும் விழிப்புணர்வை உண்டு பண்ணியதை மறுக்கமுடியாது.

இன்னும் பல நகராட்சி அவலங்களை சொல்லவோ, எழுதவோ கூச்சப்படும் அளவு நடந்துள்ளது.

- AC யுடன் கூடிய கம்ப்யூட்டர் அறை எதற்கு பயன்பட்டது

- இரண்டு நிரந்தர பணியாளர்கள் உடனடியாக வேறு ஊருக்கு பந்தாடப்பட்டார்கள், எதற்கு??????????????????????????
போன்ற பல அவலங்கள் உள்ளன.

MEGA தொடரட்டும் உங்களின் மக்கள் பணி. அடிக்கடி இது மாதிரியான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துங்கள். மற்றவர்களின் மாசுபட்ட விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள். காய்த்து, பழுத்த மரம்தான் கல்லடி படும்.

அவர்களும் உங்களை நேசிப்பவர்கள்தான், ஆனால் அந்த நேசத்தை காட்டத் தெரியவில்லை, அவ்வளவுதான். அவர்களின் கருத்துக்களிலும் நல்லவைகள் இருந்தால், அதையும் கவனத்தில் கொண்டுவாருங்கள்.

ஆக மொத்தம், அனைவர்களும் விரும்புவது ஒரே பழம் தான்.

சகோ. அஹ்மத் ரிபாய் அவர்களுக்கு ஒரு ஐந்து நட்சதிர பாராட்டுக்கள். தொடரட்டும்..தொடரட்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. வேலையை தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடமே இந்த பெரிய வேலை ஒப்பந்தத்தை நாம் கொடுப்பதே மிகவும் நல்லது...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [17 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13469

நான் பல மாதங்களுக்கு முன் நகரமன்றத்தின் சில முறைகேடுகளை காதோரம் கேள்வி பட்டதை ‘மெகா‘ உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஹாமித் ரிஃபாய் அவர்கள் மேடையில் மெய்படுத்தி காட்டிவிட்டார்.. மெகாவின் பொதுமக்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் இதன் மூலம் பல ஆயிரம் நபர்கள் நம் நகரமன்ற அவலங்களை ( நமது வரி பணம் வட்டி வியாபாரம் செய்யபடுவது - வேலைக்கு வராமலேயே ஊதியமாக நமது வரி பணம் வீண் போகுதல்) இப்படி பல தகவல்கள் உண்மைதான் என அறிய முடிந்தது..

குறிப்பு:-

இரண்டாவது பைப் லைன் திட்டம் நிறைவேற்றப்பட அரசாங்கத்தின் ஒப்புதல் வந்துவிட்டால் அதை நமது ஊருக்கு பொன்னன்குறிச்சியிலிருந்து தனிக்குழாய் மூலம் நீர் கொண்டு வரும் வேலைகளை இங்குள்ள சில்லறை ஒப்பந்தகாரர்களிடம் இந்த வேலை ஒப்பந்தத்தை கொடுக்காமல் இந்த மிக பெரிய (பொன்னன்குறிச்சியிலிருந்து தனிக்குழாய் மூலம் நீர் கொண்டு வருதல்) வேலையை தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடமே இந்த பெரிய வேலை ஒப்பந்தத்தை நாம் கொடுப்பதே மிகவும் நல்லது.

காரணம் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் அவர்களின் வேலைகள் சரியானதாகவும் மிக துல்லியமாகவும் அமையும்.. பல கோடி மதிப்புள்ள இத்திட்டம் இதை இங்குள்ள சில்லறை ஒப்பந்தகாரர்களிடம் நாம் அதை எதிர்பார்க்க முடியாது... இது சொந்த கருத்து...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. ஒரு துளி விஷம் ...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [17 November 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13471

மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான ஒரு நிகழ்ச்சி ........

இது எல்லாம் நமதூரில் நடதிருக்கின்றது என்பதை கேள்விபடும் பொழுது தலை சுற்றுகின்றது ...

ஒவ்வொருவரின் உரையிலும் உண்மை இருந்தது ... அநீதிற்கு எதிராக பேச கூடிய தைரியம் இருந்தது .. மாஷா அல்லாஹ்

கருத்து எழுதும் நண்பர்களே, தயவு செய்து இது போன்று நற்பணி செய்பவர்களோடு நாம் கை கோர்க்காவிட்டலும் பரவில்லை நம் கருத்து என்னும் கையை கொண்டு அவர்களது குரல் வலையை நெரிக்க வேண்டாம்.

நாம் படித்திருக்கின்றோம் , விழிப்புணர்வுடன் இருக்கின்றோம் , வெளி நாட்டில் வேலை செய்து கை நிறைய சம்பாதிக்கின்றோம் என்ற எண்ணம் நமக்குள் இருக்கலாம் ஆனால் அணைத்து காயலர்களும் உங்கள் போல் இல்லை ..... ஒருகுடம் பாலில் ஒரு துளி விஷம் விழுந்தாலும் மொத்த பாலும் நாசம் . அந்த ஒரு துளி , நீங்களாக இருக்கக்கூடாது என்பதுதான் எனது ஆசை .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. ஒரு துளி விஷம் ...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [17 November 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13471

மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான ஒரு நிகழ்ச்சி ........

இது எல்லாம் நமதூரில் நடதிருக்கின்றது என்பதை கேள்விபடும் பொழுது தலை சுற்றுகின்றது ...

ஒவ்வொருவரின் உரையிலும் உண்மை இருந்தது ... அநீதிற்கு எதிராக பேச கூடிய தைரியம் இருந்தது .. மாஷா அல்லாஹ்

கருத்து எழுதும் நண்பர்களே, தயவு செய்து இது போன்று நற்பணி செய்பவர்களோடு நாம் கை கோர்க்காவிட்டலும் பரவில்லை நம் கருத்து என்னும் கையை கொண்டு அவர்களது குரல் வலையை நெரிக்க வேண்டாம்.

நாம் படித்திருக்கின்றோம் , விழிப்புணர்வுடன் இருக்கின்றோம் , வெளி நாட்டில் வேலை செய்து கை நிறைய சம்பாதிக்கின்றோம் என்ற எண்ணம் நமக்குள் இருக்கலாம் ஆனால் அணைத்து காயலர்களும் உங்கள் போல் இல்லை ..... ஒருகுடம் பாலில் ஒரு துளி விஷம் விழுந்தாலும் மொத்த பாலும் நாசம் . அந்த ஒரு துளி , நீங்களாக இருக்கக்கூடாது என்பதுதான் எனது ஆசை .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்...
posted by mackie noohuthambi (KAYALPATNAM) [17 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13472

நண்பர் ரிபாயி அவர்கள் பேச்சை ஒரு CD யாக வெளியிடும்படி ஏற்கெனவே ஏன் யோசனையை தெரிவித்திருந்தேன். இனையதளத்தையே எல்லோரும் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது, எல்லோருக்கும் அது சாத்தியமுமில்லை.

குறைந்த கட்டணத்தில் அது எல்லோர் கையிலும் கிடைக்க செய்யுங்கள். வெளிநாடிலுள்ளவர்கள் அவர்கள் வேலை நேரம்போக மீதி நேரங்களில் போட்டுக் கேட்க வசதியாக இருக்கும்.

மக்கி நூஹுதம்பி
9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்...
posted by M Sajith (DUBAI) [17 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13477

மெகாவுக்கு அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.. சகோதரர் ரிபாயி செய்துள்ள 'ஹோம் வொர்க்' பாரட்டுக்குறியது. சில தகவல்கள் ஆச்சர்யப் படவைத்தது..!! தொடருங்கள்.. இறைவன் துணைசெய்வான்.
-----------------------------------------------
கவிமகன் பேசியதில்,

பேரவையின் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் அவர்கள், ஐக்கியப் பேரவையின் நடவடிக்கைகளிலுள்ள குறைகள் களையப்பட வேண்டுமென்றும், அதன் நிர்வாகத்தை மறுசீரமைக்கலாம் என்றும் விரும்புவதாக தெரிவித்ததாகக் கூறினார்.

பின்னர், பேரவையின் இன்றிருக்கும் நிர்வாகம் அதற்குத் தொடர்பில்லாத சிலரால் இயக்கப்படுவதாகவும், அது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இதைத்தான் ஆரம்பம் முதலே எழுதினோம், அதற்குத்தான் ஒற்றுமைக்கு கேடு என்றும் பெரியவர்களை அவமதிப்பதாகவும் விரிந்து கட்டி விமர்சனம் செய்தனர் நம் சகோதரர்கள் பலர்..

இன்று அது உணரப்பட்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. பேரவையின் நிலை சீர் செய்யப்படும் காலம் விரைவில் வரவும், நல்ல விசயங்களில் ஒன்றாக செயல்படவும் இறைவனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்...
posted by Sabeer (Mumbai) [17 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13481

மெகாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசப்பட்ட அத்துணை ‎செய்திகளையும் ‎எழுத்து வடிவில் செய்திகள் தந்தமைக்கு முதற்கண் நன்றி.

‎ஊடகத்தின் வாயிலாக நாம் ‎கருத்துப்போர் செய்து வருவது ஒரு பக்கம் ‎இருந்தாலும் ஒரு சிலர், கூறப்பட்டுள்ள ‎விசயம் என்னவென்று சிந்திக்காமலே ‎‎“எல்லாரும் விழிப்புணர்வுடன்தானே இருந்து ‎வருகிறோம். பின்னர் எதற்கு ‎இந்த கூட்டம்” என்ற ரீதியில் கேள்விக் கணை தொடுத்துக் ‎கொண்டே ‎இருக்கிறார்கள். ஊர் நலனில் அக்கறை கொண்டுள்ள யாருக்கும் சரி இந்த ‎‎‎கூட்டம் அவசியமான ஒன்றாகத்தான் தெரியும்.

இது போன்றதொரு ‎விழிப்புணர்வு கூட்டம் ‎அடிக்கடி நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது ‎நகர்மன்றத்தில் நடைபெறும் ‎நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்து உள்ளுர் ‎தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும், அதையே ‎பதிவேற்றம் செய்து ‎இணையதளத்தில் வெளியிடவும் ஏற்பாடு செய்தால் பொதுமக்களும் ‎மற்றும் ‎கடல் கடந்து வாழும் காயல்வாசிகளும் நகர்மன்றத்தில் என்ன நடக்கின்றது ‎‎என்பதை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

அவ்வாறு ஒளிபரப்ப வேண்டும் ‎என்றால் ‎அதற்கு எத்தகைய முறையை கையாள வேண்டும். அட்மின் தயவு ‎செய்து விளக்கம் ‎தரவும். ‎முறையாக நியமனம் செய்யப்படாத பணியாளர்கள் ‎தங்கள் பணியை நிரந்தரம் செய்ய ‎வேண்டும் என்ற கோரிக்கையை ‎ஊடகத்திற்கு செய்தியாக கொடுத்துள்ளதை கீழ்க்காணும் ‎‎இணையதளத்தில் ‎காணவும். இது பற்றிய செய்தி காயல் இணையதளத்தில் இடம் ‎பெற்றது ‎என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.dinamalar.com/News_Detail.asp? Id=292599&Print=1‎

‎http://kayalpatnam.com/m/shownews.asp?id=6914‎
நமது காயல்பட்டணம் நகராட்சி பற்றிய மேலதிக விபரங்களை காண ‎

http://municipality.tn.gov.in/kayalpattinam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்...
posted by Umar Rizwan Jamali (Singapore) [17 November 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 13488

அஸ்ஸலாமு அலைக்கும்

ஊரின் நலனில் அக்கறை எடுப்பது ஊர் மக்கள் அனைவரின் மீதும் கடமை.

அதை உணர்த்துவது அவ்வூரின் தகவல்களை அறிந்தோர் மீது கடமை.

அத்தகவல்கள்; சிதறல்களாக பரிமாரப்பட்டுக்கொண்டிருந்ததை மறுக்கமுடியாத அதே வேளையில், அனைவரிடமும் அத்தகவல்கள் சென்றடையாதமை வருத்தத்திற்குரியதே.

அதை பலர் அறிய நிறை குறைகளை விளக்கப்படுத்திய இச்செயல் பொது ஆர்வலர்கள் பார்வையில் பாராட்டுக்குரியதே.

கருத்து வேற்றுமை கலைந்து காயலை காப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. BROADCASTING OF KAYALPATNAM MUNICIPALITY MEETINGS
posted by Muhammad Abubacker (Kayalpatnam) [17 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13494

Jazakallah & Wishes for the MEGA Team for their efforts on the welfare of kayal. Quantitative report submitted by Mr. M.W. Hamid Refai is very informative & useful.

Hope the important point / aim of this meeting is to wake up the kayalties who are not aware of the happenings at Kayalpatnam municipality such as their activities, cash flows, aims, vision, mission etc.,

My kind request is to broadcast the events at municipality in a website / local TV channel such as meetings of members, officers, resolutions etc., so that the people staying at home or residing in abroad knows the events as and when its happened. And can judge who work for the welfare & good and who are not.

Hope www.kayalpatnam.com admin publish my this comment at least.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்...
posted by lion bilal m shaduly (chennai) [17 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13515

பஞ்சாயத்து பேச்சு விடிஞ்சா போச்சு என்று இருக்காமல் இனியும் கண்ணைக்கட்டி கொள்ளாமல்

1 அங்கீகாரம் பெற்ற நிருபர் ( பிரஸ் , டிவி ,இ மீடியா )

2 மன்றநிகழ்ச்சி இன் போது டிவி லைவ் டெலிகாஸ்ட் பண்ணுவது

3 வார்டு மெம்பர்கள் பண்ணிய உன்னத சேவைக்கு அவரை பாராட்டி ஊக்குவிப்பது best Councillor of the month award கொடுப்பது

4 best cleaner of the month awardee க்கு அந்தந்த கவுன்செலர் பரிசு + கேப் கொடுத்து ஊக்குவிப்பது

இதுபோன்ற செயல்பாடுகளை மன்றத்தில் செயல்படுதலமே ?

lion bilal m shaduly
8939353253


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. நல்ல தொடக்கம்..........
posted by musthak ahamed (mumbai) [17 November 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 13518

மெகாவின் அனைத்து சகோதரர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்....

உண்மையிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தகூடிய நிறைய கருத்துக்கள் பரிமாரப்பட்டுள்ளது.

திரைக்கு முன்னால் இருந்து செயல்படும் மெகா சகோதரகளுக்கும் திரைக்கு பின்னால் இருந்து செயல் படும் அனைத்து மெகா சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இந்த முக்கிய நிகழ்வில் கலந்துகொள்ளாமல் போன அனைத்து மன்ற உறுப்பினர்களும் எப்படியாவது இதில் பரிமாறப்பட்ட விஷயங்களை விருப்பு வெறுப்பின்றி தெரிந்து கொள்ளுங்கள் . இதில் வெட்கப்பட எதுவும் இல்லை.

1 - ம் வார்டு உறுப்பினர் மதிப்பிற்குரிய லுக்மான் ஹாஜி அவர்கள் குறிப்பெடுப்பது மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது............

நண்பர் ஹாமித் ரிபாய்.................தகவல்கள் நிறைந்த உங்களின் பேச்சு மிகவும் அருமை. இந்த தேர்தலில் நின்ற போட்டியாளர்களை விட நிறைய காயங்கள்.......கிண்டல்கள்....மனக்கீரல்கள் மிரட்டல்களுக்கு ஆளானது நீங்களாய் தான் இருக்கும் என்றுநினைக்கிறேன் . அந்த காயங்கள் தான் இதுவரை சாதரணமாய் அறியப்பட்ட ஹாமித்ரிபாயை "மெகா ஹாமித்ரிபாய் " என்று துணிவுடன் வெளிப்படுத்தி ullathu என்று நம்புகிறேன்..வரும் காலங்களில் தாங்கள் சந்திக்கப்போகும் நிகழ்வுகளுக்கு, நிதர்சனங்களுக்கு இந்த அனுபவங்கள் பாடமாய், பாலமாய் இருக்கும். இன்ஷா அல்லாஹ்.

கவிமகனாரின் கற்பூர பேச்சு.............அவர் கையாண்ட மேடை நாகரிகம் அருமை.......... இங்கே வேண்டாதார் எவருமிலர்............எல்லோரின் எண்ணங்களும் ஊரின் நலனை குறித்த ஒற்றை புள்ளியில் நிலைக்க வேண்டுமே என்ற தீராத ஆவல் உள்ளமெங்கும் துஆவாய் நிறைந்து நிற்கிறது.......

இந்த நிலை இடைவிடாது தொடரும் பட்சத்தில்.......நாம் கனவு கண்ட நமதூர் நம் கண் முன்னே விரியும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.............

நல்லெண்ணங்களின் வழியெங்கும் எப்போதும் அல்லாஹ்வின் ஒளி நிறைந்திருக்கும்.............

மெகா வாழ்த்துக்கள்................ முக்கியமாய் காயல்பட்டினம்.காம். தங்களின் தொடர்ந்த சேவை தொடரட்டும்.....அநியாயங்கள் அகற்ற நியாயத்தின் பக்கம் நின்றே தான் ஆகவேண்டும்............தொடருங்கள்.............எப்போதும் அல்லாஹ் துணை இருப்பான்.............

முஸ்தாக் அஹ்மத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்...
posted by Sabeer (Mumbai) [17 November 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 13522

Dear Admin,

Kindly correct the Link (First two links) mentioned in my previous comment (Comment Reference Number: 13481) and post it. Thanks.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:ஜமாஅத்துகள், பொதுநல அமைப்...
posted by M.I.மூஸா நெய்னா (மதினா முனவ்வரா) [17 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13523

முதற்கண் மெகா அமைப்புக்கு எனது நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அளவுக்கு நகர் மன்றத்தில் அசிங்கங்கள் முந்தைய காலங்களில், இப்பொழுதும் தொடர்கின்றது என்பதை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. உங்களது ஒவ்வொரு statement ம் ஒவ்வொரு சம்மட்டி அடியாக உள்ளது. உங்கள் பணி தொடர வேண்டும்.

தேர்தல் நேரத்தில் உங்கள் நிலைப்பாட்டில் குறை கண்டவர்களில் நானும் ஒருவன். ஆனால் , இப்பொழுது நீங்கள் செய்திருக்கும் விழிப்புணர்வு சேவை மிகவும் உன்னதமானது. அதற்குண்டான கூலி அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக உங்கள் அனைவர்களுக்கும் உண்டு. ஆமீன்.

இதனை இத்தோடு விட்டுவிடாமல் நீங்கள் சொன்ன எல்லா விஷயத்தையும் ஒரு மனுவாக நகர்மன்ற தலைவியிடம் கொடுத்து அவைகளை போர்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம்.

மேலும், உங்களில் நன்கு விஷயம் தெரிந்த ஒருவரை நகர்மன்ற கண்காணிப்பு பிரதிநிதியாக தெரிவு செய்து, அவர் மூலமாக அவ்வப்போது அறிக்கையாக நோட்டீஸ் மூலமாகவோ,இனையதளம் மூலமாகவோ மக்களுக்கு தெரியபடுத்தலாம். அப்படி செய்தால் தான் நம்மை கண்காணிக்க ஆட்கள் உண்டு என்ற பயம் மன்ற உறுப்பினர்களுக்கும் (தலைவி உட்பட), அலுவலர்களுக்கும் உண்டாகும்.

அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருக்கும் பயந்தோ, சாதகமாகவோ செயல்பட வேண்டாம் என்பதை தெரிவித்து, மீண்டும் ஒரு முறை நன்றியையும் பாரட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. நம் நகராட்சியின் குடிநீர் சேமிப்பு தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகிறதா?
posted by Muthu Magdoom VSH (Kayalpatnam) [18 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13534

"இனியாவது, அந்தந்த பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள், பொதுநல அமைப்புகள், ஜமாஅத்துகள், அந்தந்த வார்டு உறுப்பினர்கள், தமது பகுதியிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் உரிய காலத்தில் சுத்தம் செய்யப்படுவதைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டும். வினியோகத்தின் மூலம் பெறப்படும் அந்த நீரையும் அவ்வப்போது பரிசோதனை செய்து அதன் தன்மைகளை அறிய வேண்டும்.
------------------------------------------
இதைத்தானே நாங்க November 29, 2010 அன்றே சொன்னோம்.

(Comment Reference Number: 1318 )
-----------------------------------------
"நம் நகராட்சியின் குடிநீர் சேமிப்பு தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகிறதா? அவை சுத்தமாகத்தான் உள்ளதா???."

நடவடிக்கை எடுப்பது யார்?

posted by Muthu Magdoom VSH (Jeddah) [Monday, November 29, 2010] IP: 188.*.*.* SAUDI ARABIA | Comment Reference Number: 1318 -----------------------------------------
செய்வார்களா??????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சிறுமழை!  (18/11/2011) [Views - 3303; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved