Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:27:32 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7575
#KOTW7575
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 16, 2011
துளிர் பள்ளியில் குழந்தைகள் தினம் சிறப்பு நிகழ்ச்சி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3706 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. அது குறித்து - இந்நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-

காயல்பட்டினம் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியில் குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தன்னார்வலர் ஜனாபா மும்தாஜ் தலைமை தாங்கினார். துளிர் பெற்றோர் மன்ற தலைவர் ஜனாபா ஆய்ஷா சாஹிப் தம்பி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.





துளிர் அறங்காவலர்கள் குழு உறுப்பினரும், துளிர் பள்ளி செயலருமான ஜனாப் M.L. செய்க்னா லெப்பை அவர்கள் கல்வி உரிமை பற்றி உரையாற்றினர்.

தொடர்ந்து துளிர் சிறப்பு குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடை பெற்றது . குழந்தைகள் தினத்திற்காக நடத்தப்பட்ட மாறுவேட போட்டியில் கலந்துக்கொண்டு சிறந்த மாறுவேடம் அணிந்த 20 குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .





இதற்கான பரிசுகளை ஆறுமுகநேரி ரத்னா பஸ் உரிமையாளரின் துணைவியார் திருமதி . சுப சுரேஷ் அவர்கள் தனது சொந்த செலவில் வழங்கினார்கள்.. துளிருக்கு தனவந்தர்களிடம் நிதி வசூலித்து தரும் 3 தன்னார்வ பெண் தொண்டர்கள் - ஜைனம்பு நாச்சி , கதீஜா, மரியம் ஆகியோர் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





இந்நிகழ்ச்சியில் திருசெந்தூர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி கல்வியின் முதல்வர் திருமதி மரியா செசிலி M.A., M.Phil., M.Ed., சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் . துளிர் குழந்தைகளின் பெற்றோரும் திரளாக கலந்துக்கொண்டனர்.

துளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் Z. சித்தி ரம்ஜான் நன்றி உரையாற்றினர் . இவ்விழா ஏற்பாடுகளை துளிர் நிறுவனர் வழக்கறிஞர் அஹ்மத் அவர்களின் ஆலோசனையின் பெயரில் சிறப்பாசிரியர்கள் ஹலீமா, வசுமதி மற்றும் பாரதி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர் . பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:துளிர் பள்ளியில் குழந்தைக...
posted by Ruknudeen Sahib (China) [17 November 2011]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 13459

யா அல்லாஹ் இந்த குழந்தைகளின் வாழ்விலும் எங்கள் வசதியிலும் நல்ல முன்னேற்றத்தை தந்தருள்வாயாக அந்த வசதியே கொண்டு இது போன்ற நிர்வாகங்களுக்கு உதவ கூடிய நல்ல மனதை தருவாயாக!

இந்த குழந்தைகளை பெற்றவர்களுக்கும் இவர்களுக்கு உடலாலும் பொருளாலும் உதவுபவர்களுக்கும் இவ்வுலகத்திலும் மருவுலகத்திலும் நல்ல நஷீபை தந்தருள்வாயாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:துளிர் பள்ளியில் குழந்தைக...
posted by M.S.ABDULAZEEZ (H K ) [17 November 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 13460

யா அல்லாஹு இந்த குழந்தைகள் வாழ்வில் சிறப்பை தந்தருள்வாயாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:துளிர் பள்ளியில் குழந்தைக...
posted by fathima (kayalpatnam) [17 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13463

அஸ்ஸலாமு அழைக்கும்

மிகவும் சந்தோஷ படவேண்டிய விஷயம் இந்த நிகழ்சிக்கு என்னால் கலந்து கொள்ள முடியவில்லையே என்று என் மனம் மிகவும் வேதனை படுகிறது..

இது போன்ற நிர்வனக்களில் நானும் சேவை செய்ய மிகவும் ஆசைபடுவேன் என் சூழ்நிலையின் காரணமாக என்னால் செய்யல பட முடியவில்லை..

யா அல்லாஹ் இந்த நிறவனத்தின் அறைவனைப்பால் இந்த குழந்தைகளை நல்ல மாதுரியான குழந்தைகளாக ஆக்குவாயாக. இந்த நிறவனத்திற்கு மென்மேலும் பரக்கத்தை கொடுத்து ஒரு நல்ல நேர்மையான சேவையை புரியசெய்வயாக.

இந்த மாதுரி குழந்தைகளை ஒரு குழந்தையை பார்ப்பது என்றால் மிகவும் கடினமான ஒன்று ஆனா நிறைய குழந்தைகளை இவர்கள் கவனிப்பது நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. யா அல்லாஹ் இங்க பனி புரியும் ஆசிரியர்களுக்கு நல்ல பொறுமையும் நல்ல மனதையும் கொடுத்த வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லணும். யா அல்லாஹ் இந்த குழந்தையின் நலனை பாதுகாப்பாயாக ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:துளிர் பள்ளியில் குழந்தைக...
posted by சாளை S.I. ஜியாவுதீன் (அல்கோபார்) [17 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13474

இந்த துளிர் பள்ளியுடைய செய்திக்கு கமெண்ட்ஸ் தட்டுவதாக இருந்தால், எனக்கு சிறிய பதட்டம் வந்துவிடும்.

அந்த பள்ளியில் அவர்கள் செய்யும் சேவைகளை நாம் பாராட்டனும் என்றால், அதற்க்கு ஒரு சிறிய தகுதியாவது நமக்கு இருக்கணும்.

வயதுக்கு வந்த, மனநிலை பாதித்த, உடல் ஊனமுற்ற ஒரு குழந்தைக்கு உச்சா, கக்கா வந்து, அவர்களுக்கு உதவி செய்து பாருங்கள், அதனுடைய அருமை புரியும்.

(சிறிய அளவில் உடல் ஊனமுற்ற என் மகனுக்கு இந்த வேளைகளை நாங்கள் செய்ய படும் அவஸ்தை, வேறு யாருக்கும் வரக்கூடாது, இறைவா.)

ஆனால் அவர்களோ, அனைத்து குழந்தைகளையும் அரவனைத்து, முகம் சுளிக்காமால், தாய்மை உணர்வுடன் செய்யும் சேவைகளை என்ன என்று கூறுவது..

உங்களின் ஈமான் இன்னும் ஸ்ட்ராங் ஆகனும் என்றால், கொஞ்சம் துளிருக்கு சென்று வாருங்கள். கூடவே உங்களின் துஆக்களில் இவர்களையும் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளுங்களேன்...

இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்து, குழந்தைகளுக்கு கொடுக்கும் பரிசுகளை தானே கொண்டுவந்து கொடுத்து, தானும் மகிழ்ந்து, மற்றவர்களையும் மகிழ்வித்த, ரத்னா பஸ் உரிமையாளரின் துணைவியார் திருமதி.சகோதரி. சுப சுரேஷ் அவர்களுக்கு பல கோடி பாராட்டுக்கள்.

சாளை S.I. ஜியாவுதீன்
(துளிர் முன்னாள் மாணவன் ஐதுரூஸ் உடைய தந்தை),
அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:துளிர் பள்ளியில் குழந்தைக...
posted by T.M.RAHMATHULLAH (72) 17-11-2011 (KAYALPATNAM 04639 280852) [17 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13482

யாஸலாமு அலைக்கும்!

யா அல்லாஹ் இந்த குழந்தைகளின் வாழ்விலும்,இக்குழ ந்தயின் பெற்றோர்கள் வளர்க்கும்,ஆசிரியைகள் நிர்வாகத்தினர்கள் வாழ்வுகளிலும் எங்கள் வசதியிலும் நல்ல முன்னேற்றத்தை தந்தருள்வாயாக அந்த வசதியை கொண்டு இது போன்ற நிர்வாகங்களுக்கு உதவ கூடிய நல்ல மனதையும் சந்தர்ப்பத்தையும் தருவாயாக!

இந்த குழந்தைகளை பெற்றவர்களுக்கும் இவர்களுக்கு உடலாலும் பொருளாலும் உதவுபவர்களுக்கும் இரூ உல கத்திலும் நல்ல ஈடேற்றத்தை தந்தருள்வாயாக ஆமீன்.மற்றும் cmnts of, ,Br.S.I.Z No. 4 ID 13474 is verimuch apreciated and I also follow. tnx.

நானும் பலமுறை துளிர் சென்று வந்தேன். போவது எதோ கையில் சிறுவர்களுக்கு பண்டங்களுடன் வரும்போது கண்னில் கண்ணீருடன். ஏனெனில் இவற்றிற்கெல்லாம் காரணங்களில் ஒன்று பிள்ளைகளின் பெற்றோர்களின் மார்க்கப்படி வாழும் முறை தெரியாமை இரண்டு சமூகத்தால் விளையும் மகாப்பெரும் கோளாறு அவற்றில் ஒன்று ஒலிமாசு........

அதுதான் கர்ண கொடூரமாக ஊர் முழுக்க இயக்கம் செய்யும் லவட் ஸ்பீக்கர் தொல்லையால் ஏற்படும் கர்ப்பத்தில் ஏற்படும் தாக்குதலின் விளைவு.. உங்களுக்குதெரியுமோ தெரியாதோ காயலில் ஒரு வருடத்தில் சுமார் ௦௦ 100 ஸ்பீக்கர்கள் சுமார் பத்தாயிரம் மணி நேரம் இயக்கப்படுகிறது. இதெற்கென ஒரு விழிப்புணர்வு கூட்டம் ஏற்பாடு செய்தால் உண்மை விளங்கும். இது யதார்த்தம். பற்பல கூடங்களிலும் ரேடியோம் ட்டி வீ மூலமும் அறிவிப்புக்கள் செய்தாச்சு.எ ன்ன செய்வது ஈமானின் பலஹீனம்.. வாஸ்சலாம்.

T.M.Rahmathullah,
Phn-280852.
Email rahmathullahtm38@hotmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:படைத்த அல்லாஹ்வின் பார்வை...
posted by OMER ANAS (DOHA QATAR.) [17 November 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 13505

அஸ்ஸலாமு அழைக்கும்.

நம்மை படைத்து, பறிபாளிக்கும் வல்ல ரஹ்மானின் கிருபை இவர்கள் மேல் உண்டாகட்டும்!

.என்ன காரணத்தினாலோ அல்லாஹ் இவர்களுக்கு,சோதனையை தந்துள்ளான்.ஆனாலும்,சோதனையை சாதனை ஆக்கும் இவர்களுக்கு, நம்மை குறை இன்றி படைத்த அல்லாஹ்வின் நற்ப்பார்வை கிடைத்திட துஆ செய்வோம். கூடவே ஜியா தம்பியின் மகன் ஐதுருசுக்கும். துஆச் செய்வோம்! அவர் தமாஷாக கருத்தை பதிந்ததாக என்ன வேண்டாம். எப்படி கஷ்ட்டங்களை அவர் அனுபவித்து உள்ளார் என்பதை உண்மையில் மனம் திறந்து சொல்லி உள்ளார்.!

அது மற்றும் இன்றி இந் நிகழ்ச்சிக்கு ஆர்வமுடன் தானே முன் வந்து உதவி செய்த ரத்னா பஸ் உரிமையாளர் மனைவியாருக்கும்,மற்றும், எந்த பிரதி பலனும் பாராது இதை சேவையாகவே செய்து வரும் துளிர் சேகனா காக்கா, மற்றும்,நல்லோர் அனைவர்களுக்கும், நன்றி நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. அங்கக்குறை இருப்பினும்,தரம் குறையாத தங்கம் தான் நீங்கள்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [17 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13512

என் இனிய நண்பன், சாளை-ஜியாவுத்தீனுக்கு, கமெண்ட்ஸ்லேயே கமெண்ட் அடிக்கிற உனக்கு கனமான ஓர் இதயம் இருப்பது எனக்குத் தெரியும், துள்ளி விளையாடும் பருவத்தில், துவண்டு கிடக்கும் உன் வாரிசைக் கண்டு துடித்திருக்கின்றேன், தொடர்ச்சியாக, உம் கருத்தின் வரிகள் கத்தி முனையாய்க் குத்திக் கிழிக்கின்றது எம் நெஞ்சத்தை “ (சிறிய அளவில் உடல் ஊனமுற்ற என் மகனுக்கு இந்த வேளைகளை நாங்கள் செய்ய படும் அவஸ்தை, வேறு யாருக்கும் வரக்கூடாது, இறைவா.)”-பொருத்துக் கொள்க! உமக்கு வல்லோன் துனை நிற்பான்!!!துளிரின் தளிர்களுக்கு இந்த எளியவனின் சமர்ப்பனம், இதோ...!!!

பெற்றால்தான் பிள்ளையா?
பெறாவிடிவும் யாம் நும் பெற்றோரே!
யாதாகி நின்றாலும் தோதாகி உன் உருவைத் தாயாகி யாம்
கண்டுத் தழுவிடத் துனிவு பெற்றேன்.

அங்கத்தில் குறையிருந்தென்ன?
பசுந்தங்கம் போல் மின்னுகின்றீர்.

வெண்ணிலவே கிழிறங்கி
வேடம் பூண்டு நின்றதைப்போல்
கண்ட, என் கண்படக் கூடுமம்மா!
கலைத்துவிடு உன் உருவை!

பூந்தளிரே! புதுத்துளிரே!
புவிவந்தப் பொற்குடமே!
எக்குறையும் யாமறியோம் நிறைகுடமாய் நிற்கின்றீர்.

உனை ஈன்றோர்க்கு நீ பாரமில்லை!
உன் விடியல் வெகு தூரமில்லை!
துளிர் காட்டும் கருனையினால்
இப்புவி ஆளப்போகின்றீர்.

மாற்றுத்திறன் உமக்கெதற்கு?
இவ்வுலகையே மாற்றும் திறன் உம் கையிலன்றோ?
தளராது தளிர்த்து எழு!
தாயாக உனத் தாங்கி நிற்க துளிர் உள்ளவரை.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. அல்லாஹ்வே ஆதரவு
posted by musthak ahamed (mumbai) [18 November 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 13535

என்ன சொல்ல என்று தெரியவில்லை. மனம் எல்லாம் கனத்து கிடக்கிறது. ஒரே வீட்டில் ஓடியாடும் குழந்தைகள்.........மறுபுறம் அதே பருவம் நிறைந்த எதிலுமே கலந்து கொள்ள முடியாத கண்மணிகள்......

அந்த பெற்றோர்களின் இதயம் என்ன பாடுபடும்............அந்த சுவனத்து குழந்தைகளை பொருந்தி கொண்ட பெற்றோர்களுக்கு அல்லாஹ்வே அதற்கான கூலியை கொடுக்கட்டும்.இன்னும் வரும் காலங்களிலும் அந்த பூக்களால் ஏற்படும் காயங்களை,வலிகளை தாங்கிக்கொள்ளும் மன தைரியத்தையும் பொறுமையையும் அல்லாஹ் வழங்கட்டும் . ஆமீன்.

இந்த சிறப்பான குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட சிறப்பான விழா.....அதில் கலந்து கொண்ட குழந்தைகள் தான் எத்தனை அழகு.........

இந்த சந்தோசத்தை அளித்த அனைத்து நல் இதயங்களுக்கும் பாராட்டுக்கள். குறிப்பாக துளிர் நிறுவனர் அருமை சகோதரர் வழக்கறிஞர் அஹ்மத் அவர்கள் உள்ளிட்ட அதன் அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

முஸ்தாக் அஹ்மத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:துளிர் பள்ளியில் குழந்தைக...
posted by M.சுல்தான் (சூடான்) [18 November 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 13548

யா அல்லாஹ் இக்குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை தந்தருள்வாயக.... சகோதரர் ஜியாவுதீன் அவர்களின் அன்பு புதல்வர் ஐதருஸ் குனமடைய எல்லாம் வள்ள அல்லாஹ்விடம் துஆ செய்வோம்...

M.சுல்தான்.......... சூடான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சிறுமழை!  (18/11/2011) [Views - 3303; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved