Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:20:51 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7579
#KOTW7579
Increase Font Size Decrease Font Size
வியாழன், நவம்பர் 17, 2011
புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் நவ.15இல் அவசர கூட்டமாக நடைபெற்றது! 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 7774 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (40) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 10)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் அவசரக் கூட்டம் 15.11.2011 செவ்வாய்க்கிழமையன்று காலை 11.30 மணிக்கு, நகர்மன்ற கூட்ட அரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா தலைமையில் நடைபெற்றது.



நகர்மன்ற ஆணையாளர் (பொறுப்பு) கண்ணையா, துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் எண் : 1
* எந்த ஒரு பிளாஸ்டிக் தூக்குப்பையும் அளவில் 8 இஞ்ச் X 12 இஞ்ச் அளவுக்கு குறைவில்லாததாகவும், தடிமனில் 20 மைக்ரான் அளவிற்குகுறைவில்லாததாகவும் இருத்தல் வேண்டும்.

(குறிப்பு : இதற்கு விளக்கமாக,மேற்கண்ட 8 இஞ்ச் அகலம் மற்றும் 12 இஞ்ச் உயரம் கொண்ட 50தூக்குப்பைகளின் எடையானது 105 கிராமாகவோ அல்லது அதில் 5 % கூடுதலாகவோ அல்லது 5 % குறைவாகவோ மட்டுமே இருக்க வேண்டும்.

* எந்தவொரு விற்பனையாளரும், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்அல்லது பிளாஸ்டிக் கவர்களில் அல்லது பிளாஸ்டிக் கொள்கலனில் (Container)உணவுப்பொருட்களை சேமிக்கவோ, கொண்டு செல்லவோ, விற்பனைசெய்யவோ அல்லது கட்டிக்கொடுக்கவோ கூடாது.

* மேலும் தேநீர் மற்றும் பிற சூடான மற்றும் சாதாரண அல்லது குளிரானபானங்களை 'ஒருமுறை பயன்படுத்தப்பட்டு பின்பு தூக்கி எறியப்படும்பிளாஸ்டிக் கொப்பைகள் அல்லது பிளாஸ்டிக் கப்புகள் அல்லது பிளாஸ்டிக்கொள்கலனை மொத்தமாக விற்பனை செய்வதோ அல்லது உபயோகிப்பதோகூடாது.

* உணவுப்பொருட்கள் மற்றும் சிற்றுண்டிகளை கட்டுவதற்கோ அல்லதுபரிமாறவதற்கோ புதிய அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்ஸ்தட்டுக்களையோ அல்லது பிளாஸ்டிக் விரிப்பகளையோ மொத்தமாகவிற்பனை செய்யவோ அல்லது சில்லறையாக விற்பனை செய்வதோ அல்லதுஉபயோகிப்பதோ கூடாது.

* ஒவ்வொரு தனிநபர் அல்லது வீடு அல்லது நிறுவனம், தாங்கள் உருவாக்கும்திடக்கழிவுகளிலுள்ள பிளாஸ்டிக்ஸ் கழிவுகளை தனியாகப் பிரித்துகாயல்பட்டணம் நகராட்சி ஆணையர் அவர்களால் அறிவிக்கப்பட்ட நேரத்தில்சுகாதாரப் பணியாளரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.

* 1920 ஆம் வருடத்திய தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் பிரிவு 306உட்பிரிவு 29 இன் கீழ் உள்ள அதிகாரங்கள் அடிப்படையில் காயல்பட்டணம்நகராட்சியில் மேற்கண்ட நடவடிக்கைகள் பொது மக்களின் நலன் கருதிசெயல்படுத்த தீர்மானித்தல்.

மேலம் மேற்கண்ட நிபந்தனைகளை மீறி காயல்பட்டணம் நகராட்சிஎல்லைக்குள் பிளாஸ்டிக்ஸ் தூக்குப்பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக்ஸ்விரிப்புகள் முதலியவற்றை மொத்தமாக அல்லது சில்லறையாக விற்பனைசெய்பவருக்கும் அவற்றை உபயோகிப்பவர்களுக்கம், பிளாஸ்டிக்ஸ் கழிவுகளைதனியாக பிரித்தெடுத்து ஒப்படைக்காத தனிநபர் அல்லது வீடு அல்லதுநிறுவனத்திற்கு கீழ்கண்டவாறு அபராதம் விதிக்கப்படுவதுடன் அந்தவியாபாரியிடம் உள்ள அனைத்து பிளாஸ்டிக்ஸ் பைகளும் பறிமுதல்செய்யப்படும். இவ்வுத்தரவு உடனடியாக நடைமுறைப்படுத்தபடும்.கீழ்கண்டவாறு அபராதம் விதிக்கவும் தீர்மானிக்க பட்டுள்ளது.

* மொத்த விற்பனையாளருக்கு அபராதம் - ரூபாய். 1000

* சில்லறை வியாபாரிகளுக்கு அபராதம் - ரூபாய். 500

* உபயோகிப்பவர்களுக்கு அபராதம் - ரூபாய். 100

* பியாஸ்டிக் கழிவுகளை பிரித்து ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு - ரூபாய். 100

* பியாஸ்டிக் கழிவுகளை பிரித்து ஒப்படைக்காத தனி நபர் / வீடுகள் - ரூபாய். 25

வசூலிக்கப்படும் அபராதத் தொகை காயல்பட்டணம் நகராட்சி பொதுநிதிககணக்கில் வரவு வைக்கப்படும்.

பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக்ஸ் பைகள் உடனடியாக வெட்டப்பட்டோஅல்லது கிழிக்கப்பட்டோ காயல்பட்டணம் நகராட்சி அலுவலகத்திலோ அல்லதுதிடக்கழிவு மேலாண்மை உரக்கிடஙகிலோ சேமிக்கப்பட்டு இறுதியாக சிமெணட்ஆலைகளில் ஊடு எரிபொருளாக பயன்படுத்த அனுப்பி வைக்கவும்தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீர்மானம் எண் : 2
காயல்பட்டணம் நகராட்சியில் மக்கள் தொகை 40542 (2011-ன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) ஆகும். தற்போது இந்நகருக்கு தாமிரபரணியாற்றினை குடிநீர் ஆதாரமாகக் கொண்டு காயல்பட்டணம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பாராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் ஆத்தூர் நீரேற்று நிலையத்திலிருந்து தினமும் 23 இலட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 57 லிட்டர் வீதம் 4 நாட்களுக்கு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை தினசரி வினியோகிக்கவும், அனைத்து பகுதிகளுக்கும் முறையாக தொடர்ந்து விநியோகம் செய்ய ஏதுவாகவும், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நீர் ஆதாரத்தினை பெருக்கவும் வேண்டியுள்ளது.

எனவே காயல்பட்டணம் நகராட்சிக்கு புதிதாக குடிநீர் திட்டத்தினை செயல்படுத்த நகராட்சி நிர்வாக இயக்குனர் சென்னை அவர்கள் மூலம் M/S.வேப்காஸ் லிமிடெட், சென்னை என்ற நிறுவனத்தாரை கலந்தாலோசகராக நியமனம் செய்து விரிவான திட்ட மதீப்பீடு ரூ.2967 இலட்சத்திற்கு தயார் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி புதிய காயல்பட்டணம் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு தயார் செய்யப்பட்டுள்ள மதீப்பீட்டுத் தொகை ரூ.2967 இலட்சத்திற்கு S.L.S.C. (State Level Sanctioning Committee) குழுவினரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குடிநீர் திட்டத்திற்காக விரிவான திட்ட மதிப்பீடு ரூ.2967 இலட்சத்தில் 80 சதவீத தொகையான ரூ.2373.60 இலட்சத்தை மத்திய அரசின் மானியமாக பெறவும், 10 சதவீத தொகையான ரூ.296.70 இலட்சத்தை மாநில அரசின் மானியமாக பெறவும் மேலும் மீதமுள்ள 10 சதவீத தொகையான ரூ.296.70 இலட்சத்தை இந்நகராட்சி பொது நிதியிலிருந்து செலுத்தவும் மேற்படி திட்டத்தினை நகராட்சி மூலம் செயல்படுத்தவும் மன்றம் அனுமதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவது தீர்மானமான 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சி மூலமே செயல்படுத்தும் விஷயத்தில் தேவைப்படும் பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற்றே நிறைவேற்றிடவும், அவ்வாறு பெறப்படாதபட்சத்தில், அத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யலாம் எனவும் அனைத்து உறுப்பினர்களும் - நகர்மன்ற தலைவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க - எழுத்துப்பூர்வமாக இசைவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அவசரக் கூட்டத்தின் முக்கிய பொருள்களான இவ்விரு அம்சங்கள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், 18 வார்டுகளைச் சார்ந்த உறுப்பினர்களும் தமது வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய நலத்திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.



அவற்றைக் கேட்டறிந்த நகர்மன்றத் தலைவர் ஆபிதா, நகராட்சியின் உண்மையான நிதிநிலை அறிக்கை முறைப்படி கேட்கப்பட்டுள்ளதாகவும், அது கிடைக்கப்பெற்ற பின்னர், நிதிநிலையைக் கவனத்திற்கொண்டு, அனைத்து வார்டுகளுக்கும் சம அளவில் நிதியொதுக்கீடு செய்து நலத்திட்டப் பணிகளை நிறைவேற்றலாம் என்றும், பணிகளின் அவசர நிலையைக் கவனத்திற்கொண்டு முன் பின் என வரிசைப்படுத்தி செய்துகொள்ளலாம் என்றும், அதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொண்டார்.



உறுப்பினர்கள் அதற்கு ஏகமனதாக இசைவு தெரிவித்ததையடுத்து, மதியம் 03.30 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், காயல்பட்டினத்தின் 18 வார்டுகளைச் சார்ந்த நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். பொதுமக்கள் பலரும் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.







கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியைச் சார்ந்த ஒரு மாணவரை அப்பள்ளி தலைமையாசிரியர் செண்பகவல்லி அழைத்து வந்து, அவர் புதிதாக போடப்பட்டுள்ள சாலையில் கீழே விழுந்துவிட்டதாகவும், எனவே, பள்ளிக்கூடத்திற்கருகில் துரிதமாக வேகத்தடை அமைத்துத் தருமாறும் கோரினார்.



அதுகுறித்து, அது தொடர்புடைய அதிகாரிகளுக்கு தாம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் ஆவன செய்யப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் அப்போது தெரிவித்தார்.

கூட்டத்தின் சில காட்சிகள் பின்வருமாறு:-







[செய்தி திருத்தப்பட்டது - November 17,2011 - 16:25]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by Shaik Sadakathullah (Hyderabad) [17 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13489

Welldone,

Congrats to our municipal chairman and councilors for making a Historic Resolution. We hope this will definitely help to make Green Kayalpatnam...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by MOHAMMED ALI (DAMMAM) [17 November 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13492

MY BEST SALAM TO KAYAL WEB SITE. WE ARE GETTING UPDATED NEWS DAY BY DAY FROM OUR KAYAL WEBSITE. THANK YOU VERY MUCH FOR YOUR SERVICE.

MY HUMBLE REQUEST PLEASE AVOID LADIES PHOTOS. BECAUSE IT IS NOT OUR ISLAMIC CULTURE.

THANK YOU VERY MUCH FOR YOUR UNDERSTANDING.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [17 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13493

நடந்து முடிந்த புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டத்திற்கு வாழ்த்துக்கள்.

இந்த மாதிரி வெளிப்படையான நிகழ்வுகளை தான் அனைத்து மக்களும் விரும்புகிறார்கள். அங்கு என்ன நடக்கின்றது என்பது தெரிகின்றது அல்லவா.

அனைவர்களுக்கும் நன்றிகள், குறிப்பாக வலைதள அன்பர்களுக்கு

சென்ட்ரல் பள்ளிக்கு அருகில் ஒரு வேகத்தடை முறையான அளவில் அமைப்பது அவசியமே. இந்த வேண்டுகோளை நகராட்சிக்கே சென்று முறையிட்ட "முதல்வர் அம்மா" அவர்களுக்கு நன்றிகள். (இவங்களும் "முதல்வர் அம்மா" தான்..).

அம்மா, உங்களுக்கும் ஒரு விண்ணப்பம், உங்களின் பள்ளி வேன்கள் கடமையை முடித்ததும், பள்ளிக்கு அருகிலே நிறுத்தி விடுகிறார்கள். ஆட்டோவில், பைக்கில் மாணவர்களை அழைத்து வருபவர்கள், நடுரோட்டில் தான் நின்று,சிரமத்துடன் பிள்ளைகளை ஏற்றி, இறக்க வேண்டியது உள்ளது.

அந்த இரண்டு வேன்களை நகராட்சி குறுக்கு ரோட்டில் நிறுத்தினால் நலமாகவும், மக்களுக்கு வசதியாகவும் இருக்குமே.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by BASHEER MARICAR (KAYALPATTINAM) [17 November 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 13495

காயல்பட்டணம் நகர்மன்ற தலைவி ஆபிதா அவர்களே. உங்கள் தலைமையில் நடைபெற்ற முதல் நகர்மன்ற கூட்டத்தில் இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கு மொத்த திட்ட மதிப்பீடில் 80 சதவிதம் மத்தியரசும், 10 சதவிதம் மாநிலரசும், 10 சதவிதம் நகராட்சி பொது நிதியிலிருந்தும் நிறைவேற்றிடவும், முக்கியமாக இத்திட்டத்தை காயல்பட்டணம் நகராட்சியே இத்திட்டப்பணியாவையும் செய்து முடிக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள்.

தயவுசெய்து இந்நகராட்சியே இத்திட்டப்;பணியிணை செய்திட அனுமதி வேண்டி நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானத்தை மறுபரீசிலனை செய்ய வேண்டுகிறோம். ஏனெனில் எந்தஒரு புதிய குடிநீர் திட்டத்தையும் தமிழகரசின் 95 சதவிகித உள்ளாட்சி (ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) அமைப்புகளுக்கு தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் மூலமாகவே எந்தஒரு புதிய குடிநீர் திட்டத்தையும், பணிகள் செய்து முடித்து, செயல்பாட்டிற்கு கொண்டுவந்து, அவர்களே ஒருவருடத்திற்கு அத்திட்டத்தை (Maintenance) செயல்படுத்தி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைப்பார்கள். இவ்வாறு முடிக்கப்பட்ட புதியகுடிநீர் திட்டங்களே மக்களுக்கு அக்குடிநீர் திட்ட ஆயட்காலத்திற்கும் பயன்னடைய வாய்புள்ளது.

ஆனால் இப்பணியினை அந்தந்த நகராட்சியால் புதிய குடிநீர் திட்டத்தை முழுமையாக முடித்து செயல்படுத்த நகராட்சியமைப்பில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் மிக மிக குறைவு. இரண்டாம் குடிநீர் திட்டம் காயல்பட்டணம் மக்களின் கனவு, கானல்நீராகிவிடக்கூடாது. ஆகவே தாங்கள் இத்தீர்மானத்தை நகராட்சி தலைமையகத்திற்கு அனுப்புமுன் முன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (Project)அதிகரிகளிடம் இத்திட்டம் பற்றிய (DPR) முழுவிபரங்கள் தெரிவித்து ஆலோசனை பெற்று நம்நகராட்சியால் இப்புதியதிட்டத்தை பணிமுடித்து செயல்படுத்த முடியுமா என எல்லா சாத்தியகூர்களையும் ஆராய்ந்து முடிவுசெய்தபின் இத்தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டுகிறோம்.

ஒருவேலை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் ஆலோசனையில் இத்திட்டத்தை நம்நகராட்சியால் முழுமையாக செயல்படுத்தவது இயலாதது எனதெரிவித்தால் தாங்கள் உடனே நகர்மன்றத்தில் அவசரகூட்டத்திற்கு ஏற்பாடு செய்து நகர்மன்ற உறுப்பினர் அனைவர்களுக்கும் நம்நகராட்சியால் இத்திட்டத்தினை செயல்படுத்தமுடியாத சாத்தியகூர்களை அவர்களிடம் எடுத்துகூறி அக்கூட்டத்திலேயே இத்திட்டத்தினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாகவே செயல்படுத்திதர வேண்டி திர்மனம் நிறைவேற்றிட வேண்டுகிறோம்.

மு.அ.பஷீர் மரைக்கார்.
காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [17 November 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13497

நமது ஊரு மக்களுக்கு தேவையான அணைத்து நல்ல திட்டங்களை நம் நகரமன்ற உறுப்பினர்கள் அனைவர்களும் ஓன்று இணைந்து ஒற்றுமையுடன் செயல் படுத்துங்கள். நமது காயல் மாநகரை நல்ல வளமான, நலமான வெற்றி பாதையில் நீங்கள் எல்லோரும் கொண்டு செல்ல எனது வாழ்த்துக்கள். வல்ல நாயன் அதற்க்கு அருள் புரிவானாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by SHAIKSALAHUDEEN (dubai) [17 November 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13498

ஆபிதா மேடம்&எல்லா உருப்பினர்ஹளுக்கும் வாழ்த்துக்கள்.நம்ம ஊரின் முக்கிய தேவைகள் அனைத்தையும் கண்டறிந்து துரிதமாஹா நிறைவேற்றிட வேண்டுகிறேன்.கடற்கரையே சுத்தபடுத்த கேட்டு கொள்கிறேன்.அல்லாஹ் தவக்கல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. முதல் கூட்ட துடரே கான்சரின் காரணிகளில் ஒன்றான ப்ளாஸ்டிக்கை நீக்கி மக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கும் அடிபடையான குடிநீருக்கும் ....வாழ்த்துக்கள்.
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHBAI) [17 November 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13500

அஸ்ஸலாமு அழைக்கும்.

முதல் கூட்ட துடரே கான்சரின் காரணிகளில் ஒன்றான ப்ளாஸ்டிக்கை நீக்கி மக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கும் அடிபடையான குடிநீருக்கும் ....வாழ்த்துக்கள்.
குடிநீர் திட்டத்தினை நிறைவேற்றும் முன் அதின் முழுமையான செயல் திட்டங்கள், EXCUTION PLANNING, SHEDULE, PYPE ROOTE, CAPACITY OF WATTER TRAVEL ON EACH AREA, PRESSURE, EMERGENCY HANDLING METHODS, BILL OF QUANTITY [ B.O.Q.] MAKE, MADE, WARANTTY PERIOD, AVAILABILITY OF SPARE ,MAITANENANCE METHOD AND ALL COMPLETE STRATEGY நல்ல திறமையான EXAMPLE ஹாஜி ராவன்ன அவர்கள் போன்ற தலை சிறந்த பொறியாளர்களின் ஆலோசனைகளை தலைவி குறிப்பெடுத்து மிக கவனமாக எந்த அமைப்பையும் நீதமான முறையில் CLOSED TENDER மூலம் தகுதியான திறமையான முன் ANUPAVAM உள்ள நிறுவனங்களை தேர்ந்தெடுத்து மக்களுக்கும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

தீர்மானம் 1 போல் குப்பைகளை திறந்தவெலில் கொட்டுபவருக்கும் தகுந்த அபராதங்கள் விதிக்க வேண்டும். வஸ்ஸலாம்.

இவன்
முகியதீன் அப்துல் காதிர்
ஐக்கிய அரபு அமீரக பாராளுமன்றம்,
அபுதாபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by smart Abdul cader (chennai) [17 November 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 13501

வெரி குட் பெகிநிங்.

மாச அல்லா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by Zubair Rahman (Doha-Qatar) [17 November 2011]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 13502

நல்ல திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதனை கூடியிருந்த உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றி முதல் கூட்டத்தையே சிறப்பாக முடித்த நகராட்சி தலைவி மற்றும் நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துக்கள். நகர்மன்றம் நிறைவேற்றும் அனைத்து நல்ல திட்டங்களையும் மக்கள் பயன் பெறக்கூடியதாக ஆக்கி விரைவில் செவ்வெனே நிறைவற்றித்தர வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன் .

"நகராட்சி தலைவிக்கு எனது பணிவான வேண்டுகோள் "

வரும் காலங்களில் நகர்மன்ற கூட்டம் நடைபெறும் அரங்கை விரிவுபடுத்தி பார்வையாளர்கள் அமர (ஆண் மற்றும் பெண்களும் கலந்துகொள்ள) வசதி ஏற்ப்படுத்தி தருமாறு வேண்டுகிறேன். ஒருசில திட்டங்களை மன்றத்தில் நிறைவேற்றும்முன் மக்களின் நலத்திற்க்காக மக்களின் கலந்துரையாடலுடன் அதனைப்பற்றிய நல்ல ஆலோசனைகளைப்பெற்று நிறைவேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

(இரண்டாம் பைப் லைன் திட்டத்தில் முன்னாள் தலைவரின் ஆலோசனையும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பது என் அவா )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. ஒப்பந்தக்காரர் தரும் சிறு அன்பளிப்புக்காக அனுபவம் இல்லாத ஒப்பந்தகாரர்களிடம் இந்த பல கோடி திட்டம் போகாமல் தடுக்க பட வேண்டும்...!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [17 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13506

இந்த திட்டத்தினால் தானும் பயன் பெற அணைத்து சமூகமும் பயன் பெற இத்திட்டத்திற்குத் தேவைப்படும் தொகையில் ரூ.50 லட்சத்தை நமது நகர்மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் அவர்கள் நன்கொடையாக கொடுத்திருப்பது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது முதலில் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

சகோதரர் மு.அ.பஷீர் மரைக்கார் அவர்களின் கருத்து 100 சதவீதம் சரியானதே... இவ்வளவு பெரிய தூர அளவு திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாகவே செயல் படுத்துவது சிறந்தது... ஊரில் ரோடு போடுபவர், சிறிய தொட்டியில் இருந்து குழாய் அமைத்து கொடுபவர்கள் இவர்களுக்கு இந்த பல கோடி மதிப்புடைய ஒப்பந்தத்தை கொடுப்பது குரங்கின் கையில் பூமாலையை கொடுப்பதாகவே அமையும்.. உதாரணம் நமதூரில் சிமென்ட் ரோடு போட்டு அதன் இன்றைய நிலைமை நமக்கு ஒரு முன் மாதிரி அறிவோம்..

ஒப்பந்தக்காரர் தரும் சிறு அன்பளிப்புக்காக அனுபவம் இல்லாத ஒப்பந்தகாரர்களிடம் இந்த பல கோடி திட்டம் போகாமல் தடுக்க பட வேண்டும்...!

இந்த விசியத்தில் அணைத்து ஜமாஅத், பொதுநல சங்கங்கள், புறநகர் ஊர் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவர்களும் இந்த பல கோடி ரூபாய் மதிப்புடைய 2ஆவது பைப்லைன் திட்டத்தில் மிக அக்கறை செலுத்த படவேண்டும் சும்மா எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் தலைவர், துணை தலைவர், அணைத்து வார்டு உறுப்பினர்கள் எல்லோரையும் ஒரு பொது இடத்தில் அழைத்து அணைத்து ஜமாஅத், பொதுநல சங்கங்கள், புறநகர் ஊர் தலைவர்கள் இப்படி பிரதிநிதிகள் அமைத்து பேசி (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாகவே இத்திட்டத்தை செயல் படுத்த) நல்ல தீர்வுக்கு முயற்சி செய்ய வேண்டும்...!!

தேர்தல் நேர கசப்புகளை மறந்து அனைவர்களும் ஊர் குடிநீர் விசியத்தில் அக்கறை செலுத்துமாறு மிக தாழ்மையுடன் உங்களை கேட்டு கொள்கிறேன்...

இதை படிக்கும் அணைத்து வாசகர்களும் உங்களின் யோசனையில் படும் கருத்துகளை பதிவு செய்து ஊர் நலனுக்கு உதவுமாறு எனது தாழ்மையான வேண்டுகோள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [17 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13508

நகராட்சிலெ நடக்கிற முதல் கூட்டத்தையும்,தீர்மானத்தையும்,முதன்முதலா பார்க்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு!இது ஒரு நல்ல தொடக்கம்!முன்பெல்லாம் நகராட்சின்னாலே ஏதோ அலிபாபா குகை மாதிரியும்,சிதம்பர ரகசியம் மாதிரியும் தான் தோனிச்சு! போனவங்க(மெம்பர்ஸ்) புதையல் எடுக்காமெ வர மாட்டாங்க, தப்பித் தவறி நாம நொழஞ்சாத் தொலைஞ்சோம்!பூதகரமான பூதங்கள் நம்மை விழுங்கிவிடும்!இப்பொ ஏதோ கும்பமும்,குடித்தனமும் இருக்கிற மாதிரி ஒரு நல்ல சூழல் தெரியுது!!! வாழ்த்துக்கள்...!!! எப்போவோ நான் எழுதின கருத்து இப்பொ நினைவுக்கு வருது!

"புதிய வெளிச்சம் பிறந்தது! மாயப் புழுதிப் புயல் மறைந்தது! நம் நகர் மன்றத்தைத் தூர்வாரி தூய தெளிநீர் ஊற்றெடுக்க, ஆழமாய்ப் புதைந்துள்ள ஊழல் அழுக்குதனை ஆழ்குழாய்த் துளையிட்டு, அனைத்தையும் வெளியேற்றிட, மண்டிக்கிடக்கும் மனித குப்பைகளை அகற்றிட, அரசியலை அண்டவிடாமல் அதிகாரப் பொறுப்பேற்று சதிகாரக் கும்பல்தனை விதி மாற்றம் செய்திடவே அணிதிரண்ட நல்லோரே! நும் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்! புறப்படுங்கள்.... புதியதோர் உலகம் செய்வோம்...!!!அதில் புனிதர்களைப் பொறுப்பேற்கச் சொல்வோம்...!!! பசுமைக் காயலை உருவாக்கப் பாடுபடுவோம்…!!!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [17 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13509

இரண்டாம் பைப்லைன் திட்டம் நகராட்சியாலேயே எடுத்து நடத்தப்படும் என்ற நகராட்சியின் தீர்மானம் வரவேற்க்கத்தக்கது. கீழே எழுதியுள்ள வாசகர் அ.மு. பஷீர் மரைக்காயரின் யோசனையையும் நகராட்சி நிர்வாகத்தினர் கவனத்தில் எடுக்கவேண்டும்.

ஒரு மிகப்பெரும் திட்டத்தை நமது நகராட்சி நிறைவேற்றும் அளவுக்கு முதலில் அதற்க்கு நிர்வாக அனுபவம் உள்ளதா? அரசு மேற்கொள்ளும் திட்டங்களே அரைகுறையாக விடப்படுகின்றன. ஒரு நகராட்சி அதன் குறுகிய அதிகார எல்லைக்குள் இதுபோன்ற பெருந்திட்டங்களை ஏற்று நிறைவேற்றுவது அனுபவ்சாத்தியம்தானா.. என்பதை யோசிக்குமாறு வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by suaidiya buhari (chennai) [17 November 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 13511

assalamualikam

இதை தான் நாங்கள் எதிர் பார்த்தோம் (வெளி படையான மீட்டிங்)இந்த போட்டோவை பார்க்கும் பொழுது,

(மக்கள் +ஷேர்மென் +வார்டு மெம்பெர்)

அனைவரும் உள்ளனர்.

எல்லா மெம்பெர்ரும், அவர்கள் ஏரியா குறை களை சொல்வது நன்டு. நிறைய மெம்பெர் அமைதியாக இருப்பதை போண்டு உள்ளது, next மீட்டிங் இல் கண்டிப்பாக நிறை & குறைகளை பேசவும்.

மக்கள் ஆகிய நாங்கள் எங்கள் ஏரியா memeber என்ன குறை & நிறைகளை தலைவி முன் முறை இட்டார்கள், என்பதை நாங்கள் கண்டீப்பாக மீடியா மூலம் watch பன்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by M.N.Sulaiman (Bangalore) [17 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13513

நகர் மன்றத்தின் முதல் கூட்டத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!

குறிப்பாக, பிளாஸ்டிக் பைகள் உபயோகத்திற்கு விதித்திர்க்கும் கெடுபிடிக்கு சபாஷ்...! இன்றைய நடைமுறைக்கு மிகவும் தேவையானது.

அதேபோல, நகராட்சி குப்பைதொட்டி அல்லாத கண்ட இடங்களில் எல்லாம் குப்பை கொட்டுவதை கண்டறிந்து அதற்கு நகராட்சி சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறந்ததோர் சுற்றுசுழலை உருவாக்குவது நம் கடமைதானே..!

அட்மின் அவர்களே, அந்த 4 ஆம் வார்டு குப்பைமேடு விசயத்தில் ஏதும் முயற்சிகள் உண்டா...? அறியத்தரவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by A.Lukman (kayalpatnam) [17 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13514

அஸ்ஸலாமு அழைக்கும்.

இரண்டாம் பைப் லைன் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் மூலம் நிறைவேட்டுவதர்க்கு பெரும்பாலான வுருப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி நகராச்சிமன்றமே நிறைவேட்டுவதற்க்கு நீண்ட யோசனைக்கு பிறகு தலைவி ஒப்புக்கொண்டார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. It may leads to shady deal(s)
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [17 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13516

சகோ., லுக்மான் எழுதியதைத்தான் நானும் கேள்விபட்டேன். சகோதரி ஆபிதாவிற்கு எதிரான வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.

தீர்மானம் எண்:1 இல் இவர்களுக்கு வரும்படி கிடையாது. இவர்கள் இழக்கப்போவது ஒன்றும் இல்லை.

தீர்மானம் எண்: 2 .இல் இவர்களுக்கு வரும்படி உள்ளது.

தீர்மானம் எண்: 2 ஐ VETO செய்வதற்கு தலைவிக்கு அதிகாரம் இருந்தால் அதை மறு பரிசீலனை செய்வது சாலச்சிறந்தது. இது அவசர, அவசரமாக கடைசி நேரத்தில் (கூட்டத்திற்கு முந்திய இரவு) Agenda வில் ஏற்றப்பட்டதாக அறிகிறேன்.

மேலும் இந்த (இவ்வளவு பெரிய) திட்டத்தை இதற்க்கு முன் நம் நகராட்சி எடுத்து செய்த அனுபவம் ( Experience & Expertise) கிடையாது. அதே நேரத்தில், தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் இதைவிட பெரிய (பல) Project ஐ செய்துள்ளது. ஆதலால் இதிலுள்ள Pro and cons ஐ தெரிந்து நிதானமாக தீர்மானம் நிறைவேற்றினால் நகருக்கு நல்லது. (சில நகரமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுமானால் இழப்பாக இருக்கலாம்)

Urgent / instant decision on Resolution # 2 sounds fishy and it may or will leads to shady deal(s).

Dear bro., Lukman (1st ward member), I count on you.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. தமிழ் நாடு குடிநீர் வாரியத்தை எதிர்ப்பது ஏன்! அனுபவம் இல்லா நகர்மன்றமே எடுத்து நடத்த என்ன அவசரம்! சூல்சிகான மர்மம் நீடிக்கிறது!! தலைவியே உசார்!!! வலை விரிப்பு ஆரம்பம்.
posted by MOHIDEEN ABDUL KADER (Abudhabi) [17 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13519

அஸ்ஸலாமு அழைக்கும்.

தமிழ் நாடு குடிநீர் வாரியத்தை எதிர்ப்பது ஏன்! அனுபவம் இல்லா நகர்மன்றமே எடுத்து நடத்த என்ன அவசரம்! சூல்சிகான மர்மம் நீடிக்கிறது!! தலைவியே உசார்!!! வலை விரிப்பு ஆரம்பம்.

தனியாக பல லட்ச மதிப்பிலான இக்குடிநீர்த்திட்டதை நகர்மன்றம் நிறைவேற்ற அடிப்படையான கட்டமைப்புகள், திறமையான ஊழியர்கள், பொறியாளர்கள் இல்லாத பட்சத்தில் மிகவும் கஷ்ட்டப்பட்டு வரும் இந்த நல்ல திட்டத்தை அனுபவம் இல்லாமல் வீண் அடித்து விடாதீர்கள்.

தனியாக நிர்வகிக்கும் திறமை இருந்தால் பல பெரிய திட்டங்களை முடிக்கும் தமிநாடு குடிநீர் வாரியதிடம் கொடுத்து அதை கண்காணிக்க ஏன் இயலாது.

தலைவியே! சிந்திபீர் செயல்படுவீர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. You are being watched
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [17 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13520

Continuation of comment # 16 .

தீர்மானம் :2 விவாதத்திற்கு வந்தபோது, தலைவி அவர்கள், " இது பற்றி யோசித்து முடிவெடுப்போம், அவசரப்படவேண்டாம் என்று கையெழுத்திட ஆரம்பத்தில் மறுத்துள்ளார். (சகோ., லுக்மான் அவர்கள் எழுதியதுபோல - see comment # 15 )

அதற்க்கு ஒரு உறுப்பினர், "நீங்கள் கையெழுத்து போட மறுத்தால் நாங்கள் Majority - minority பார்ப்போம் என்று வீர(ப்பா) வசனம் பெசியிறுகிறார்.

மற்றொரு உறுப்பினர் , கையெழுத்து போடவில்லை என்றால் நீங்கள் வெளியே போங்கள், நாங்கள் துணைத்தலைவரை கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று தெனாவெட்டாக பேசியிருக்கிறார்

(அங்கிருந்தோர்களுக்கு நடிகர் வடிவேலு comedy நினைவிற்கு வந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை)

வேறொரு உறுப்பினர் பார்வையாளர்களை, "வெளியே போங்கள் என்று விரட்டியிருக்கிறார். நகர் மன்றம் மக்களின் சொத்து, அவர்களுக்கு அங்குள்ள நடவடிக்கைகளை பார்ப்பதற்கு முழு உரிமை இருக்கிறது என்பது கூடத் தெரியாது போலிருக்கிறது.

(மெகா வின் விழிப்புணர்வு கூட்டத்திற்கு வந்திருந்தால் இவருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும்)

இன்னொரு உறுப்பினர், "நீங்கள் (தலைவியைப் பார்த்து௦) கூட்டத்தை நடத்துங்கள், நான் வெளியேறுகிறேன்" என்று தான் சீரியஸ் ஆனா நபர் என்பதைக் காட்ட Built-up பண்ணியிருக்கிறார்.

நான் கேள்விபட்டவைகளில் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இவைகள் உண்மையாக இருக்குமேயானால், இவர்களுக்கு ஒன்று மட்டும் இப்பொழுதைக்கு சொல்ல விரும்புகிறேன்.

மக்கள் முன்போல இல்லை மாறிவிட்டார்கள் (உஜாலாவுக்கு). உங்களையும் உங்கள் செயல்பாடுகளையும் கவனித்திக் கொண்டிருக்கிறார்கள்.

Therefore Behave. You are being watched.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by Vilack SMA (Siacun) [18 November 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 13524

சகோதரர் AWS சொன்னதுபோல , அங்கே சகோதரிக்கு " எதிரான " வேலைகள் ஒன்றும் ஆரம்பிக்கவில்லை . அனைவரும் " எதிரெதிரே " அமர்ந்துதான் பேசிக்கொண்டனர் .

அடுத்து , சகோதரர் எண்ணப்படி , நம் நகராட்சியில் experience and expertise இல்லைதான் . அதேசமயம் இவை இரண்டும் உள்ள தமிழ்நாடு குடிநீர் வாரியத்திற்கு இந்த வாய்ப்பை வழங்கலாம் . அனால் அங்கும் ஊழல் இருக்குமே ! ஆக , ஊழல் என்பதை அதிகம் பேசாமல் , காக்கா சொன்னதுபோல் experience & expertise எங்கு இருக்கிறதோ அவர்களை அணுகுவதே மேல்.

மேலும் , நகராட்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த வேளையில் expertise இல்லாதபோது , தலைவி இதை மறுபரிசீலனை செய்யலாம் என்று அனைவரும் ஒத்துக்கொண்டது வரவேற்கத்தக்கது .

பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய விழிப்புணர்ச்சி இன்னும் வேண்டும் . இதை உபயோகிப்பவருக்கு விதிக்கும் அபராதத்தை விட , இதை விற்பனை செய்பவருக்கு அபராதம் போடுவதுதான் சிறந்தது .

ஊரில் இருக்கும் திருமண மண்டபங்கள் , சமுதாய அரங்குகளில் , திருமணம் , விருந்துகள் முடிந்த பிறகு , அந்த பகுதியில் தெருக்களில் குப்பை கூளங்களை பார்க்க வேண்டுமே . கண்கொள்ளா காட்சி . நகர் மன்றம் , இவற்றை சுத்தம் செய்ய சம்பத்தப்பட்ட திருமண வீட்டாரிடம் ஒரு சிறிய தொகையினை பெறலாம் . ( கோபப்படாதீர்கள் , நீங்கள் செய்யும் பல லட்சம் செலவில் , இது சில நூறு ரூபாய் தான் வரும் )

அடுத்து , செண்பகவல்லி அம்மா , இவ்வளவு நாளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? சென்ற முறை , உங்கள் பள்ளி நிர்வாகத்தின் உறவினர்தானே ஆட்சியில் இருந்தார் . அப்போது முறையிட்டிருக்கலாமே ? சுபைதா பள்ளிக்கு அருகில் தடுப்புச்சுவர் கட்டியது போல் ( மாணவிகளை காப்பாற்றி , பலரை மருத்துவ செலவுக்கு ஆளாக்கி இருக்கிறது இந்த speed breaker என்ற தடுப்பு சுவர் ) இங்கும் கட்டி இருக்கலாமே ? நகர் மன்றத்தில் ஏற்கனவே இதை சொல்லியாகி விட்டது . கொஞ்சம் பொறுத்திருங்கள் . உங்கள் பள்ளிக்கும் இந்த தடுப்பு சுவர் கிடைக்கும் . உங்கள் பள்ளி மாணவர்கள் , bicycle ஐ தெருவில் நிறுத்துகிரார்களே , இது போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளதே , இதற்கு நீங்கள் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய கூடாதா ?

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. நகர் மன்றத்தில் ஒன்றுமை வேண்டும்
posted by Salai Sheikh Saleem (Dubai) [18 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13526

எதிரே அமர்ந்து பேசினால் சதிகார கும்பலாக இருக்கமுடியாது எனபது அறியாமையின் வெளிப்பாடே. எல்லா எதிரிகளும் நேருக்கு நேர் தான் மோதிக்கொள்வார்கள், சில துரோகிகளைதவிர. நகர் மன்ற கூட்டத்தின் செயல்பாடுகளிலிருந்து கீழ்க்கண்டவைகள் தெளிவாகின்றன:

* நகர் மன்ற தலைவி பெண் தானே எப்படியும் மிரட்டிக்கொள்ளலாம்

* எவன் அப்பன் வீட்டு சொத்தும் எப்படியும் போகட்டும், ஆனால் நகர் மன்ற தலைவிக்கு கெட்ட பெயர் வர வேண்டும். இப்படியே நெருக்கடி கொடுத்துவந்தால் அவர்களாகவே நகர சபையை விட்டு ஓட வேண்டும்.

இப்படி கனவு கண்டுகொண்டிருக்கும் குள்ள நரிக்கூட்டங்களை தோலுரிக்க பொதுமக்களிற்கு அடையாளம் காட்ட வேண்டும். எஜமான் போடும் சில எச்சி முட்களிர்க்காக ஒரு ஊரையே அழிவுப்பாதையில் கொண்டு செல்வது எனபது எவருக்கும் எற்ப்புடையது அல்ல.

தலைவியே, மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்! நீங்கள் என்று தலைவி ஆணீர்களோ, அன்றே சதிகார கூட்டம் ஒன்றும் அணிவகுத்து விட்டது. எந்த முடிவையும் மன்றத்தின் கூட்டத்தில் கொடுக்கும் அழுத்தத்தினால் எடுக்கவேண்டாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வல்லுனர்களின் ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக்கொள்ளுங்கள். இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும் உங்களுக்கு இந்த பதவி உங்களின் கைவண்ணத்தில் செழிக்கும் வரை. இன்ஷா அல்லாஹ், ஊர் நலத்திற்க்காக நியாய அநியாயங்களின் அடிப்படையில், மனசாட்சியின் படி, மனுதர்மத்தின் படி அல்லாஹ்விற்கு அச்சப்பட்டு எடுக்கும் முடிவுகள் என்றம் சோடை போவதில்லை.

எனவே, இவ்வளவு பெரிய திட்டத்தை கண்டிப்பாக நம்மால் நிறைவேற்ற முடியாது என்றிருந்தால், தயவுசெய்து மாற்றி யோசியுங்கள்.

அன்புள்ள அட்மின் அவர்களே, நகரசபையில் இன்று என்ற ஒரு தொடர் கட்டுரையை நீங்கள் வெளியிட முடியுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. கையூட்டு பெறும் கயவர்களை கலையேடுப்போம் !
posted by Firdous (Colombo) [18 November 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13531

அன்பிற்கினிய காயல் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்.

நகரமன்ற கூட்ட நிகழ்வுகளை ஊடகத்தின் மூலம் காண்பதற்கு மட்டற்ற மகிழ்ச்சி. (Thanks KOTW. May Almighty Allah supports and guides you all in the team!)

ஒவ்வொரு ஜாமத்தும், அதற்கு உட்பட்ட பொது மக்களும் அவர்களின் கவுன்சிலர்கலை கேள்வி கேட்க வேண்டும்.

ஊருக்கு நல்ல திட்டங்களை செயல்படுதுவர்க்கு முட்டுகட்டையாக இருக்கும் கவுன்சிலர்களை இனம் காண வேண்டும்.

மேலும் நகராட்சி கூட்டம் நடை பெரும்பொழுது ஊரில் இருக்கும் ஒவ்வொரு ஜமாஅத் உறுப்பினர்களில் ஒருவரை அனுப்பி கூட்ட நிகழ்வுகளை அவதானிக்க வேண்டும். அப்பொழுதான் கவுன்சிலர்களும் தங்களை பொதுமக்கள் கண்கானிகிறார்கள் என்று தவறான செயல்களில் ஈடுபடுவது குறைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் பொது நல அமைப்புகளும், ஊடகங்களும் அவதானிக்க வேண்டும். ஏதும் தடம் புரளும் செயல்கள் நடப்பின் பொது கூட்டம் மற்றும் notice வாயிலாக மக்களுக்கு தெரிய படுத்தவும்.

ஊழலுக்கு எதிராக களம் கண்டிருக்கும் சகோதரர்கள் லுக்மான் காக்காவும், நண்பர் ஜகாங்கீர் மற்றும் இன்னும் சில உறுப்பினர்கள் தலைவருக்கு உறுதுணையாக இருந்து நல்ல திட்டங்கள் நடந்தேற பாடுபடவேண்டும். பத்ரு சம்பவத்தை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். நன்மைக்காக பாடு படும் உங்களுக்கு இறைவனின் துணை உண்டு. எங்களது ஆதரவும் உண்டு. தயக்கம் வேண்டாம்.
-------------------------------------------------
கவுன்சிலர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

பதவி பிரமாணத்தின் பொது இறைவன் மீது ஆணையிட்டு சத்தியம் செய்துள்ளீர்கள்! ஞாபகம் இருக்கட்டும். லஞ்சத்தின் பக்கம் நெருங்க வேண்டாம்! இறைவனும் கண்கநிகிறான்! நாங்களும் பார்த்துகொண்டு இருக்கிறோம்! எச்சரிக்கை! இனம் காட்ட படுவீர்!
----------------------------------------------
Appeal to Admin!

Dear Admin, please create form to write letter to Chairman of our Municipality. So that we can post our greetings, encouraging letters and grievance.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by Vilack SMA (Siacun) [18 November 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 13532

எதிரே இருப்பவர்கள் சதிகாரர்கள் என்று தெரிந்தால் , இந்த திட்டத்திற்கு தலைவி ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியமே இல்லை . மன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்களின் ஆதரவோடு இதை செய்து கொள்வார்கள் . இந்த சூழ்நிலையில்தான் , தலைவி நல்லவர் , மற்றவர்கள் சதிகாரர்கள் என்பது ஊர் மக்களுக்கு தெரிய வரும் . எந்த பிரச்சினையும் இல்லாததால்தான் தலைவி ஒப்புதல் அளித்துள்ளார்கள் . எதை செய்ய வேண்டும் , எதை செய்ய கூடாது என்பதை தலைவி பார்த்துக்கொள்வார்கள் . இவர் என்ன வெளியில் இருந்துகொண்டு , மற்றவர்களை சதிகாரர் என்று சொல்வது ? ஊருக்கே விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டேன் என்று சொல்பவர் , முதலில் தன்னை விழிப்பாக்கி கொள்ள வேண்டும் .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. First step ?
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [18 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13533

Bro., Vilack SMA (Siacun)

Now you are really talking, in fact writing. Keep it up, I appreciate your enthusiasm towards well being / welfare of our hometown. I guess you are in a right track .Keep it up.

Being in a foreign land, do not dare to think that you know everything which is going on in our Municipality. Mere words are not enough to show to those officials and councilors that we care for our hometown. We must put it in our deeds.

---------------------------

As far as the second Resolution is concerned, my question is why the hell some councilors were adamant on passing the resolution immediately without proper consultation, consideration ?.

What people like "Snake Babu" know the magnitude of this project ?

Entrusting the 2nd pipeline project with TWAD board instead of our Municipality is not going to eliminate the corruption. Nobody in his right mind believes so. Corruption is part and parcel of our lives and we can not change it overnight. But the quality of the project will be better if it is awarded to TWAD Board as it has the experience and expertise. At the same time some of our men will loose their share.

All our councilors have their right to voice their opinion on any proposal put forward in-front of them. They have every right to support or reject it. But the words some of them allegedly uttered were something to worry about. Probably the reason(s) for passing the resolution despite being objected by the chairman and few councilors were

1) Part of a conspiracy against the chairman (see the note under)

2) Takers will take something at the end of the day.

Note: A Conspiracy was hatched with the blessing of "The Financier" during vice-chairman election to put pressure on her in order to get her quit and face the re-election. Part of the conspiracy discussed was to go against her decision on everything and or anything on whatever way possible without being sensed by public lest they be met by the wrath of the public. (Passing of this resolution sounded like the first step towards it ?)

"ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" அடித்துவிட்டோம் என்று நினைப்பவர்களே, think twice before you ink. You are being watched.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. இரட்டை மாட்டு வண்டியில் பொட்டமாடும்... கொட்டமாடும்.
posted by zubair (riyadh) [18 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13537

ஹலோ.... மெகா சலீம் பாய்...... ஆத்திரப்பட்டு புரோஜனம் இல்லை. பிளட்d பிரச்சர்தான் கூடும் ஜனநாயக நாடு இது.... தலைவிமட்டும் நினைப்பதை செய்ய முடியாது என்பது இரண்டு அமைப்புக்கு தலைவரா இருக்கும் உங்களுக்கு தெரியாதா? தலைவர் நினைப்பதை செய்வதாக இருந்தால்.... வார்டு மென்பர்கள் எதுக்கு? நகர்மன்றத்தில் குப்பை கூட்டவா.......?

இந்த காரணத்தினால் தான் ஊர் ஒற்றுமையான பொது தலைவருக்கு ஆதரவுக்கு கமாண்டு அடித்தோம். இப்பம் தெரியுதா? நீங்கள் எதிர்ப்பது போல்தான் 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சியே நிறைவேற்றிட தீர்மானம். மறு பரிசீலனை பண்ணனும் என்பதுதான் என்னுடைய அவாவும். ஆகையால் தாங்கள் எவரின் மீதும் சாடி வெறுப்பை தேடாமல் வார்டு மென்பர்களை புரிய வைக்க முயற்ச்சி செய்யுங்கள். அன்புக்கு அடிபணியும்... அடாவடிக்கு யாரும் அடிபணிய மாட்டார்கள்.

இதான்.... இரட்டை மாட்டு வண்டியில் பொட்டமாடும்... கொட்டமாடும் இருந்தால் பிரச்சனைதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. பந்தாட நினைத்தால் பந்தாடப்படுவார்கள்.
posted by Salih (Haryana) [18 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13543

சகோ., zubair (riyadh) எழுதுவதை பார்த்தால், கடந்த பேரூராட்சி நல்ல முறையில் நடந்த மாதிரி ஒரு Image ஐ ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியது போலத்தெரிகிறது.

ஐக்கியபேரவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த காலத் தலைவரை ( சகோ., Zubair உடைய பாசையில் சொல்வதானால் ஊர் ஒன்றுபட்டு தேர்ந்தெடுத்த தலைவரை) முன்னாள் உறுப்பினர்கள் எப்படி பந்தாடினார்கள் எனபது ஊருக்குத் தெரியும். பாவம் முன்னாள் Chairman pressure தாங்க இயலாமல் இராஜினாமா கடிதம் கொடுத்த கதை இவருக்குத் தெரியாது போலிருக்கிறது.

முன்னாள் தலைவருக்கும் இந்நாள் தலைவருக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால் முன்னால் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. இந்நாள் தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரை சில உறுப்பினர்கள் பந்தாட நினைத்தால், தேர்ந்தெடுத்த மக்கள் இவர்களை பந்தாடிவிடுவார்கள்.

அதனால் நகருக்கு எது நல்லதோ அதை செய்வதில் உறுப்பினர்கள் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு பதிலாக Financier யிடம் கை நீட்டி வாங்கிவிட்டோம், அவருக்கு நன்றி கடன்பட்டுள்ளோம், அதனால் அவர் சொல்லுபடிதான் கேட்போம் என்றால் மேலே ஒரு Super Financier பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால், ஒரு நரம்பை "கட்" பண்ணினால், இந்த Financier யிடம் இருந்து பெற்ற லட்சங்கள் பத்தாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [18 November 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13554

அஸ்ஸலாமு அலைக்கும்

சேர்மன் அவர்களுக்கும்.& கவுன்சிலர் அவர்களுக்கும் . உங்கள் முதல் கூட்டத்துக்கு எங்கள் நல் வாழ்த்துகள் .நம் ஊருக்கு வரகூடிய 2 -ம் பைப் லைன் திட்டம் நமது ஊருக்கு உடனே அவசியம் தான்.....ப்ளீஸ் >>>.ப்ளீஸ் >>>. உடனே செயல் படுத்தவும் .நல்ல திட்டம் .

NOTES -

ஒவ்வொரு தனிநபர் அல்லது வீடு அல்லது நிறுவனம், தாங்கள் உருவாக்கும்திடக்கழிவுகளிலுள்ள பிளாஸ்டிக்ஸ் கழிவுகளை தனியாகப் பிரித்துகாயல்பட்டணம் நகராட்சி ஆணையர் அவர்களால் அறிவிக்கப்பட்ட நேரத்தில்சுகாதாரப் பணியாளரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும். PLEASE >>>> ப்ளீஸ்>>>>> இதுவும் நல்ல திட்டம் தான் .நடைமுறையில் வந்தால் வர வேற்க தக்கது தான். ஊர் மக்களும் ஒத்து உழைத்தல் நல்லது .

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. நேரடி ஒளிபரப்பு
posted by பாளையம் M.S.சதக்கத்துல்லாஹ் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia) [18 November 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13557

ஒவ்வொரு நகராட்சி கூட்டத்தையும் நம்மூர் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சாத்தியக்கூறுகள் உண்டா? குறைந்தபட்சம் கூட்டத்தொடரை வீடியோ எடுத்து காயல் வெப்சைட்களிலும், சேனல்களிலும் போட்டால் நகர்மன்ற உறுப்பினர் முதல் அதிகாரிகளில் செயல்பாடுகளை பொதுமக்கள் அறிய ஏதுவாக இருக்கும். இதற்கான செலவுகளை உலக காயல் நலமன்றங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சட்டத்தில் இதற்கு இடமிருக்கிறதா? என்பதை யாராகிலும் தெரிந்தால் சொல்லுங்களேன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by Mohiadeen (Phoenix) [18 November 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 13558

இந்த பிரச்சனைக்கு தீர்வு நகர் மன்றம் கூட்டதை வீடியோ யடுத்து web site upload பண்ண வேண்டும் and broadcast in television.

Dear Admin

Please take this suggestion for the sake of our people welfare.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. vilack SMA அவர்களுக்கு...
posted by Mrs M. Shenbagavalli (Kayalpatnam) [19 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13574

நீங்கள் எங்கள் பள்ளி அருகில் உள்ள வேகத்தடை அமைவது குறித்து விமர்சித்ததற்கு ஒரு பள்ளி தலைமை ஆசிரியை ஆக கூறும் பதில்..

முதலில் எங்கள் பள்ளி அருகில் உள்ள சாலையில் தார் சாலை இருந்த பொழுது வேகத்தடை இருந்தது. தார் சாலையை மாற்றி சிமென்ட் சாலையாக மாற்றும் பொழுது பழைய வேகத்தடையை அகற்றிவிட்டார்கள். மேலும் சிமென்ட் சாலை அமைப்பு பணி தாமதமாகவே முடிந்தது. அதன் பிறகு, சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி, சென்ட்ரல் துவக்கப் பள்ளி, சென்ட்ரல் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, இப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வேகத்தடை அமைத்து தரும்படி நகராட்சி தலைவருக்கும், மற்றும் அலுவலக அதிகாரிக்கும் விண்ணப்பித்தோம்.

சிமென்ட் சாலை பணி நடைப்பெற்று கொண்டிருக்கும் போதும், அதன் மேற்பார்வையாளர், பொறியாளரிடம் பல முறை முறையீடு செய்தோம். இதற்கிடையில் எங்கள் பள்ளி மாணவர்களை அழைத்து வருபவருக்கும், எம் பள்ளி மாணவருக்கும், ஆயா அம்மாவுக்கும் இரு சக்கர வாகனத்தால் பல முறை விபத்து நடந்தது, துன்பத்தை அனுபவித்ததால் துரிதமாக வேகத்தடை அமைத்து தரும் படி கேட்டுக்கொண்டோம்.

சிமென்ட் சாலை என்பதால் இரு சக்கர வாகனங்கள் வேகமாக செல்லுகின்றன. மேலும் நீங்கள் கூறிய பள்ளியிலும் தார் சாலை இருக்கும் பகுதிகளில் மட்டும் தான் வேகத்தடை அமைந்துள்ளது.

குறிப்பு: நம் ஊரில் உள்ள குழந்தைகளின் நலனுக்காகத் தான், "அவர்களும் என் குழந்தைகள் போல் தான்" என்ற நோக்கத்தில் ஒரு பள்ளி முதல்வராக துரிதமாக வேகத்தடை வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by NOOHU SAHIB (DUBAI) [19 November 2011]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13577

புதிய நகரமன்றத்தின் கூட்ட நடவடிக்கைஹல் மிகவும் அருமை. ஒவ்வொரு உறுப்பினரும் அவர்களின் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது. ஆனால் ஒவ்வொரு கருத்தும் ஊர் நலனில் அக்கறை உள்ளதஹா இருப்பது அவசியம் .மிரட்டல் போக்கை கடை பிடிப்பது நல்லதல்ல. பொதுமக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் .

இரண்டாவது பைப் லைன் திட்டத்தை அனுபவம் மிக்க நிறுவனத்திடம் ஒப்படைப்பது மிஹவும் நன்று


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. தீர்மானம் எண் : 2 சாதக பாதகங்கள் ......
posted by N.S.E. மஹ்மூது (KAYALPATNAM) [19 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13579

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

புதிய நகர்மன்றத்தின் முதல் கூட்டம் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் - கூட்டங்கள் கூடி கலைந்திடுவதில் பயனில்லை.

கூட்டப்படக்கூடியக் கூட்டங்கள் பயனுள்ளதாக - பண்பாடுள்ளதாக இருக்க வேண்டும்.

கருத்துக்கள் நிறைவாக கலந்துரையாடப்பட்டு - காரியங்கள் நிறைவேறவேண்டும்.
---------------------------------------------------
தீர்மானம் எண் : 2 சாதக பாதகங்கள் :

2ஆவது பைப்லைன் திட்டம் நமது நகருக்கு அவசியம் வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான் அதிலே கருத்து வேறுபாடு இல்லை.

ஆனால் அதை நடைமுறைக்கு கொண்டு வரக்கூடிய வழிமுறைகள் / விதிமுறைகள் சரியான கோணத்தில் செயல்பட வேண்டும்.

இதிலே வெளியே இருக்கக் கூடிய பொது மக்களைவிட நகர் மன்றத்திலே இருந்து செயல்படக்கூடிய மக்களின் பிரதிநிதியாகிய மன்ற அங்கத்தினர்கள்தான் கண்ணும் கருத்துமாக இருந்து செயலாற்ற வேண்டும்.

தலைவர் மற்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் மன்றத்திற்கு புதியவர்களாக இருப்பதாலும் - மேலும் இந்த திட்டம் மிகப்பெரும் தொகையாக ( கிட்டத்தட்ட 30 கோடியாக ) இருப்பதாலும் - அதை நடைமுறைக்கு மாற்றமாக அதாவது குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இல்லாமல் நமது நகராட்சி மூலமே செயல்படுத்த இருப்பதாலும் எதிலும் அவசரம் இல்லாமல் தீர விவாதித்து தேவையான ஆலோசனைகளைப் பெற்று முடிவு செய்யுங்கள்.

நமது நகராட்சியே இந்த திட்டத்தை எடுத்து செயல்படுத்தினால் நமக்கு நிறைய வசதிகள் ஏற்படும் என்பது உண்மைதான் என்றாலும் நகராட்சியே முன்னின்று செய்வதில் ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை நன்றாய் ஆய்ந்துணர்ந்து செயல்படுங்கள்.

காரணம் இந்த திட்டத்திற்கான முழுப்பணமும் நகராட்சியின் பணமல்ல - 80 % மத்திய அரசு நிதியும், 10 % மாநில அரசு நிதியும் போக மீதி 10 % தான் நம் நகராட்சி பொது நிதியில் இருந்து செலவு செய்ய உள்ளது.

ஆகையால் மத்திய அரசும், மாநில அரசும் குறித்த நேரத்தில் நிதியை தாமதமின்றி தருவதற்கு சாத்தியக் கூறுகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் - உங்களுக்குள் ஒற்றுமையும் - நேர்மையான எண்ணமும் இருந்தால் இன்ஷா அல்லாஹ்! இந்த திட்டம் நம் நகராட்சியாலேயே செயல்படுத்தப்படும்.
----------------------------------------------
மன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் :

இந்த செய்திக்கு பதிந்திருக்கும் கருத்துக்களையும் - வெளியில் கேள்விப்பட்டதையும் வைத்துப் பார்க்கும்போது நகர்மன்ற கூட்டத்தில் சில வேண்டப்படாத நிகழ்வுகள் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.

ஒரு வேளை அப்படி எதுவும் வேண்டப்படாத நிகழ்வுகள் ஏற்பட்டிருக்குமானால் தயவு செய்து நகர் மன்ற அங்கத்தினர்களாகிய நீங்கள் அவைகளை இத்தோடு மறந்து ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டியது.

நீங்கள் அனைவரும் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் என்பதை நினைவில் கொண்டு செயலாற்றுங்கள் - மறந்துவிடாதீர்கள்.

நகர்மன்ற மரபுகள் மாறக்கூடாது - மாற்றப்படக்கூடாது - மன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.
-------------------------------------------------
அங்கத்தினர்களே!

நீங்கள் எல்லோரும் நகராட்சியின் சட்டத்திட்டங்களை (திருத்தப்பட்ட பதிப்பு ) வாங்கி படித்து அதன்படி உங்கள் அணுகுமுறைகளை வைத்துக்கொள்வது நல்லது.

மக்களுக்கு சேவை செய்வதாக வாக்கு கொடுத்து இருக்கிறீர்கள் - அந்த வாக்கை காப்பாற்றிக்கொள்ளுங்கள் இறைவனின் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by P.S.ABDUL KADER (jeddah) [19 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13580

அஸ்ஸலாமு அழைக்கும்.

இரண்டாம் பைப் லைன் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் மூலம் நிறைவேட்ட குறிப்பிட்ட வார்டு நபர்களின் மிரட்டல் எதிர்ப்புக்கு பயந்து வேறு வழியின்றி நகராச்சிமன்றமே நிறைவேட்டுவதற்க்கு நீண்ட யோசனைக்கு பிறகு தலைவி ஆபிதா ஒப்புக்கொண்டது கண்டனடக்குரியது.

இந்த தீர்மானத்தை கால அவஹாசம் கண்டு ஒத்தி வைத்து இருக்கலாம். நம் நகராட்சியில் தலைவி முதல் எல்லா வார்டு உறுப்பினர்க்கும் அனுபவம் இல்லை. வரும் திர்மணகளில் அனுபவம் கண்டு நல்ல முடிவு எடுக்கவும்.

பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய விழிப்புணர்ச்சி இன்னும் வேண்டும் . இதை உபயோகிப்பவருக்கு விதிக்கும் அபராதத்தை விட , இதை நகரில் விற்பனை செய்ய விடாமல் தடுக்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. தீர்மானம் எண் : 1 விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும் :
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [19 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13585

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதையும் / உபயோகிப்பதையும் பற்றிய விதிமுறைகள் அதற்கு மாற்றமாக நடப்பவர்களுக்குரிய தண்டனை சட்டங்கள் பற்றி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்கள்.

இந்த தீர்மானம் கொண்டு வர காரணம் என்ன ? மத்திய / மாநில அரசுகளின் கட்டளையா ? அல்லது மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளா ? என்பதை பற்றி எல்லாம் ஆராய்ச்சி பண்ண விரும்ப வில்லை.
------------------------------------------------
தடை அவசியம் :

இந்த பிளாஸ்டிக் உபயோக தடை அவசியம் என்பதை மக்கள் உணரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை - இதன் பாதிப்பை மக்கள் அறிந்தால் நிச்சயம் தடைக்கு ஆதரவு தருவார்கள் காரணம் ........

* இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பூமியை மாசுபடுத்துவதுடன் இதில் பயன்படுத்தப்படும் பிஸ்பினால் 'எ' எனும் அமிலம் மூளையின் செயல்பாடுகளையும், மன நிலையையும் பாதிக்கலாம் என்பதாக சில வருடங்களுக்கு முன்பு ஏல் பல்கலைக்கழகம் ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டிருந்த செய்தியை படித்திருக்கலாம்.

மேலும்
* பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது அதனால் பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.

* பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் ஹைட்ரோகார்பன் மற்றும் பியூரான் போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன - அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.

* குப்பை கழிவுகளுடன் மண்ணில் பிளாஸ்டிக் பைகளை புதைப்பதால், அவை நெடுங்காலத்துக்கு மண்ணில் மக்கிப்போகாமல் தாவரங்களின் வேர்கள் ஊடுருவ முடியாமலும், மழைநீர் மண்ணுக்குள் செல்வதைத் தடுக்கவும் செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய காரணமாக அமைகின்றன.

இவ்வளவு பெரிய தீமையை விளைவிக்க கூடிய இந்த பிளாஸ்டிக் பொருளை மக்கள் அனைவருமே சர்வ சாதாரணமாக உபயோகித்து வருகிறோம்.

இதை தடுப்பதற்காக அரசாங்கமும் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் முறையான செயல் திட்டங்கள் இல்லாமையால் வெற்றி பெறமுடியவில்லை.

கேரளாவிலே ஓரளவு பரவலாக கட்டுப்படுத்தியிருக்கிறதாக தெரிகிறது.

ஆனால் தமிழ் நாட்டிலே பெரும்பாலும் தோல்வியே என்றாலும் கன்னியாகுமரி மாவட்டத்திலே ஓரளவு நடை முறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியே.

நாகர்கோவிலில் உணவகங்களில் பிளாஸ்டிக் பையை பயன் படுத்துவதில்லை அலுமினியம் ஃபாயில் கவர்களிலும் , புரவுன் பேப்பர் கவர்களிலும் தான் உணவுகளை கட்டித் தருகிறார்கள்.
-------------------------------------------
விழிப்புணர்வு முகாமை நடத்துவது நல்லது :

இந்த பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்திற்கு நிச்சயமாக 90 சதவிகிதம், மக்களிடம் நேரிடையாக தடையை பெற முடியாது - இதற்கு முதலில் தடையை ஏற்படுத்த வேண்டியது உற்பத்தியாகும் இடத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.

உற்பத்தியை குறைத்தால் எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் - இந்த உற்பத்தி என்பது நமது நகராட்சி எல்லைக்குள் இருந்ததால்...........!!!!!! நமது நகராட்சி அதை தடை செய்யலாமே!.

அடுத்தது விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தி அதை தடை செய்யலாம்! விற்பதால்தானே! மக்கள் அதை வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள் எனவே அங்கிருந்து இந்த தடைகள் ஆரம்பம் ஆகவேண்டும்.

மேலும் நகரில் உள்ள உணவகங்கள் - கடைகள் போன்ற இடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் நேரிடையாக எழுத்துப்பூர்வமாக அறிக்கைகளை கொடுத்து அவர்களுக்கு ஒரு தவணையையும் கொடுத்தால் இந்த தடையை நமது நகரிலே கடைபிடிக்க முடியும்.

மேலும் மக்களுக்கும் இந்த பிளாஸ்டிக் உபயோகம் பற்றிய விழிப்புணர்வு முகாமை நடத்துவது நல்லது - இப்படி செய்தால் நமது நகர் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட நகராக திகழும்.
----------------------------------------------------
நகர்மன்ற அங்கத்தினர்களே!

தலைவர் / ஆணையாளர் முதல் நகர்மன்றத்தில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர் வரை பிளாஸ்டிக் பொருள் தடையை பற்றிய விதி முறைகளை அறிந்து / தெரிந்து வைத்திருப்பது நல்லது - மேலும் நகர்மன்ற வளாகத்திலே இந்த தடையை கண்டிப்புடன் நடைமுறைப் படுத்துங்கள்.

இப்படி எழுதுவதால் தவறாக எண்ண வேண்டாம் - உலகம் அப்படிதான் அதற்கு நமது நகர்மன்றம் விதி விலக்கல்ல.

நகர்மன்றத்துடன் நகர மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க இறைவனை வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. To . Mrs . Shenbagavalli , Central School
posted by Vilack SMA (Jiangmen City) [19 November 2011]
IP: 27.*.*.* China | Comment Reference Number: 13586

நானும் இந்த பள்ளியின் முன்னாள் மாணவன்தான் . ( VSM ) உங்களது கோரிக்கையில் நியாயம் இருப்பினும் , நீங்கள் உங்கள் மாணவரை இப்படி தடாலடியாக நகர்மன்றத்திற்கே நேரில் அழைத்து வருவது நியாயமா ? இது மன்ற உறுப்பினர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாதா ? சுபைதா பள்ளியின் speed breaker இல் விழுந்து அடிபட்டவர்கள் , உங்கள் நிர்வாகத்திடம் வந்து முறையிட்டால் உங்களுக்கு தர்ம சங்கடமாக இருக்காதா ? இங்குள்ள அத்தனை மாணவ , மாணவியரையும் என்னுடைய மக்களை போலத்தான் பார்க்கிறேன் . யாருக்கும் எந்த தீங்கும் வரக்கூடாது என்பதுதான் நம் அனைவரின் எண்ணமும் கூட.

உங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேறும் , ( ஏனெனில் நீங்களும் , தற்போதைய நகரமன்ற தலைவியும் ஒரே தொழில் செய்பவர்கள் , நிச்சயம் கருணை காட்டுவார்கள் ) சற்று பொறுத்திருக்கவும் .

அப்புறம் மேடம் , இந்த சைக்கிள் நிறுத்துவது பற்றி எழுதி இருந்தேனே . அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் பேசவில்லையே !

Vilack SMA ( 1982 sslc batch , central high school )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. ரூபாய் 50 லட்சம் நன்கொடை இவர்கள் ஆளாளுக்கு பங்கு போடுவதற்க்கு அல்ல..!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [19 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13590

ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், பொது மக்கள் நிச்சயம் 2ஆவது பைப்லைன் திட்டத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்... ! நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் அந்த ஜமாஅத்துக்கு உட்பட்ட ஏரியா வார்டு உறுப்பினரை கூப்பிட்டு ஜமாஅத்தில் கூட்டம் போட்டு இந்த மிக பெரிய (ரூபாய் - 30 கோடி) குடிநீர் திட்டத்தை நல்ல திறம்பட செய்யக்கூடிய அனுபவம் மிகுந்த தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமே செய்ய பட வேண்டும் என நகர்மன்ற உறுப்பினரை ஜமாஅத் வலியுறுத்தி நல்ல தீர்வு ஏற்பட வழி செய்ய வேண்டும்... அப்போது தான் சரியான முறையில் இந்த பல கோடி திட்டம் நல்ல தரம் மிகுந்ததாக அமையும்...

இல்லையெனில் உறுப்பினர்கள் இங்குள்ள தனியார் ஒப்பந்தகாரர்களின் அன்பளிப்பை வாங்கி பங்கு போட்டு கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள் என்பதில் சிறு அளவும் சந்தேகமில்லை...

ஊரின் குடிநீர் நலனுக்காகவே நமது நகர்மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் அவர்கள் ரூபாய் 50 லட்சம் நன்கொடையாக கொடுக்கிறார்கள்.. இவர்கள் ஆளாளுக்கு பங்கு போடுவதற்க்கு அல்ல..!

நமது பல வருட குடிநீர் கனவு வீண் போய்விடாமல் (ஜமாஅத்) நாம் இதில் தீவிர அக்கறை செலுத்த வேண்டும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. பட்டிமன்றம் நடத்த முடியாது .நகர் மன்றம்தான் தீர்மானிக்க முடியும்..இதில் ஒருமித்த கருத்து இல்லையெனில் பெரும்பான்மை பலம்தான் தீர்வு.
posted by V.D.SADAK THAMBY (Guangzhou (China)) [20 November 2011]
IP: 219.*.*.* China | Comment Reference Number: 13596

இரண்டாம் குடிநீர் திட்டம் எவ்வாறு நிறைவேற்றுவது? நகராட்சியே நேரடியாகவா? அல்லது தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் மூலமா ?

நாம் இதை வலைதளங்களின் வாயிலாக பட்டிமன்றம் நடத்தி தீர்மானிக்க முடியாது. இதை முடிவு செய்யும் இடம் நகர்மன்றம்தான் .நகர் மன்றத்தில் ஒருமித்த கருத்துடன் இதை முடிவு செய்வதுதான் ஏற்புடையது. ஒருமனதாக முடியாவிட்டால் பெரும்பன்மைதான். வேறுவழியில்லை.

ஒவ்வொரு விஷயத்திற்கும் சர்ச்சையை உண்டாக்குவதால் , அது நடைபெறாமல் போகும் சாத்தியம் உள்ளது.

வலைதளங்களில் நாம் கருத்து தெரிவிக்கலாமே ஒழிய நம் கருத்தை திணிக்க முயற்சிக்கக்க்கூடாது .

எவ்வழியில் செயல்பட்டாலும் ஊழல் எப்படியும் இருக்கும்.இதில் பாகுபாடு இருக்க முடியாது.

நம் நகர்மன்றம்/தலைவி இப்போது ஒரு வழிகாட்டுதலின்றி தவிப்பதுபோல தெரிகிறது. முன்பு ஐக்கியபேரவை போன்று ஒரு பலமான அமைப்பு வழிகாட்டியது. இப்போது அது சற்றே விலகி இருந்து நிலைமைகளை அவதானிக்கிறது (விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டாம் என்பதற்காக).

எனது கருத்தின்படி, நகர் மன்ற தலைவர் மீண்டும் ஐக்கிய பேரவையின் ஆலோசனையை பெற்றால் (அல்லது) ஐக்கிய பேரவை மீண்டும் முன்போல ஊர்நல திட்டங்களுக்கு நகரமன்ற தலைவருக்கு வழிகாட்டுதல் செய்தால் , இதுபோன்ற மாபெரும் திட்டங்கள் சிறப்பாக செயல்படும்.

முக்கியமாக , நகர் மன்ற தலைவருக்கும் தீய சக்திகளின் தொல்லைகளிலிருந்து இதன்மூலம் ஒரு பாதுகாப்பு கிடைக்கும்..

நகர் மன்ற தலைவரும், ஐக்கிய பேரவையும் பொது நன்மையை கருதி இணைந்து செயல்படலாம். நகர் மன்றதலைவி வயதில் இளையவராக இருப்பதால் , அவரே முதலில் ஐக்கிய பேரவையின் உதவியை நாடலாம். இருதரப்பினரும் egoism பார்க்கக்கூடாது.

இதுதான் சிறந்த வழி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by A.Lukman.B.A., (kayalpatnam) [20 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13597

நட்புடன் தமிழன் முத்து இஸ்மாயில் அவர்களுக்கு

ஒட்டு மொத்த வுருப்பினர்களையும் லஞ்சம் வாங்குபவர்களாக கருத வேண்டாம்.

எ.லுக்மான்.
1 வது வார்டு கவுன்சிலர் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [20 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13601

ஒட்டு மொத்த வுருப்பினர்களையும் லஞ்சம் வாங்குபவர்களாக கருத வேண்டாம்.

எ.லுக்மான்.
1 வது வார்டு கவுன்சிலர்
------------------------------------------
ஹாஜி லுக்குமான் அவர்களுக்கு... அஸ்ஸலாமு அழைக்கும்..

மன்னிக்கவும் ஹாஜி லுக்குமான் அவர்களே.. ஒரு சிலர்கள் என்று திருத்தி நினைத்து (படித்து) கொள்ளவும்... கருத்து பிழைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by ahamed.s.i. (colombo) [20 November 2011]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13605

வாஹித மேடம்முடன் ஒரு சமயம் பேசும்போது, தன் பதவி காலம் முடியும் போதுதான் தலைவருக்கு என்ன என்ன அதிகாரம் உண்டு என்பது தனக்கு மாவட்ட ஆட்சி அலுவலகம் முலம் தெரிய வந்ததாக சொன்னார்கள்.இப்போது தலைவர் மக்களால் தேர்த்து எடுக்கும் நிலையல் இன்னும் சட்டங்கள் நிச்யம் மாற்றி இருக்கும் .உறுப்பெனர்கள் எதெற்கும் நிலையல் தலைவருக்கு விட்டோ பவர் கூட இருக்கலாம் மீண்டும் சட்டங்களை புரட்டிபக்கும்.or வாஹித மடமுடன் கலந்து ஆலோசிக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:புதிய நகர்மன்றத்தின் முதல...
posted by P.S.ABDUL KADER (jeddah) [21 November 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13643

வரும் நகரமன்ற பார்வையாளர்க்கு இருக்கை வசதி அமைத்து கொடுக்க நகர தலைவி,வார்டு உறுப்பினர்க்கு கோரிக்கை வைக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சிறுமழை!  (18/11/2011) [Views - 3291; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved