Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:58:19 PM
ஞாயிறு | 6 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1893, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:35
மறைவு18:06மறைவு20:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7589
#KOTW7589
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 20, 2011
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் தேசிய நூலக 44ஆவது வார விழா! எல்.கே.மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3271 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் சார்பில், தேசிய நூலக 44ஆவது வார விழா, 18.11.2011 அன்று மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

காயல்பட்டினம் அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமை தாங்கினார். காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை செயலாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, அரசு நூலக புரவலர்களான காயல் கருப்பசாமி, ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன், ஜுவெல் ஜங்ஷன் அப்துர்ரஹ்மான், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காயல்பட்டினம் அரசு பொது நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நூலகர் அ.முஜீப் அனைவரையும் வரவேற்றார்.

காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், அரசு நூலக புரவலர் ஆசிரியர் சுலைமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நாசரேத் அரசு மேனிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சுவாமிதாசன் சிறப்புரையாற்றியதோடு, ‘குழந்தை உளவியல்‘ என்ற நூலை நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.





எழுத்தாளர் ரஹீமா, கே.ஏ.மேனிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் கே.கே.குமரகுரு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



அதனைத் தொடர்ந்து, இவ்விழாவையொட்டி, நூலக வாசகர் வட்டம் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட பள்ளி - கல்லூரி மாணவ-மாணவியருக்கான கட்டுரைப் போட்டிகளில் வென்றவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும், கலந்துகொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.





பின்னர், கட்டுரைப்போட்டி நடுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



பின்னர், காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் ஓய்வுபெற்ற நூலகர் செண்பகம், தற்போதைய நூலகர் அ.முஜீபுக்கு பரிசு வழங்கினார்.



நூலக வாசகர் வட்ட உறுப்பினர் மவ்லவீ ஸலாஹுத்தீன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.



இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் மும்பை முகைதீன், உறுப்பினர்களான லுக்மான், சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.



விழாவை, அரசு பொது நூலகத்தின் காயல்பட்டினம் கிளை நூலக வாசகர் வட்டம், காயல்பட்டினம் அரிமா சங்கம், கே.வி.ஏ.டி. அறக்கட்டளை, காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின.

தகவல்:
ஆசிரியர் மு.அப்துல் ரசாக்,
துணைத்தலைவர்,
வாசகர் வட்டம், அரசு பொது நூலகம், காயல்பட்டினம் கிளை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பொது அறிவு நூல்களை படிக்கும் பழக்கத்தை ........
posted by N.S.E. மஹ்மூது (KAYALPATNAM ) [20 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13607

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தேசிய நூலக 44ஆவது வார விழா சிறப்பாக நடைபெற்றதுக்கு வாழ்த்துக்கள் - விழாவுக்கு அழைக்கப்பட்டும் அதில் கலந்து கொள்ளமுடியாமல் போனது வருத்தமே.

விழா நிகழ்ச்சிகளை இந்த செய்தியின் மூலம் படங்களுடன் பார்க்கும்போது ஆனந்தமே! விழாவில் கலந்துக்கொண்டவர்கள் , உரையாற்றியவர்கள் , பரிசுபெற்றவர்கள் என்று எல்லோரையும் படம் பிடித்துக்காட்டியிருப்பது நிகழ்ச்சியை நேரில் பார்த்த மகிழ்ச்சியை தருகிறது.

நிகழ்ச்சிக்கு மக்கள் ஆர்வமாக வந்து கலந்திருக்கிறார்கள் - வருங்காலங்களில் இன்னும் அதிகமான மக்கள் கலந்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

------------------------------------------------

மாணவமணிகளே!

கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்ட மாணவமணிகளுக்கும் - பரிசுகள் பெற்ற மாணவமணிகளுக்கும் வாழ்த்துக்கள்.

பரிசுகள் பெரும் மாணவமணிகளை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது - வரும் காலங்களிலும் பல போட்டிகளில் கலந்து மென்மேலும் பரிசுகளை பெற வாழ்த்துக்கள்.

மாணவர்களே!

விடுமுறை நாட்களிலும் , ஒய்வு கிடைக்கும்போதும் நூலகங்களுக்கு சென்று பொது அறிவு நூல்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

நூலகங்களுக்கு சென்று அறிவு சார்ந்த நூல்களை மிக ஆர்வமாக படிக்கும்போது இன்ஷா அல்லாஹ்! நீங்கள் I.A.S. மற்றும் I.P.S. படிப்பதற்கு விருப்பம் உண்டாகும்.

ஆகவே மாணவர்கள் நேரம் கிடைக்கும்போது வாய்ப்புகளை தவறவிட வேண்டாம் - நம் மாணவ மணிகள் வாழ்வில் மேன்மையடைய வல்ல அல்லாஹ்! அருள் செய்வான் ஆமீன்.

வஸ்ஸலாம்.
அன்புடன் " மஹ்மூது மாமா "


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:தமிழ்நாடு அரசு பொது நூலகத...
posted by K.V.A.T.KABEER (DOHA) [20 November 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 13608

இது ஒரு நல்ல முயற்சி.நூல்களை வாசிக்க வாசிக்க அறிவு வளரும்.வெற்றி பெற்ற கே.வி.ஏ.டி.ஹம்ஜா சதக்கதுல்லா, ஹரீஸ்,K .V . M .M .அப்துல் காதர் மற்றும் அனைத்து மாணவர்களையும் வாழ்த்து கிறோம் .

கே.வி.ஏ.டி. கபீர்,கத்தார் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:தமிழ்நாடு அரசு பொது நூலகத...
posted by SUAIDIYA BUHARI (CHENNAIa) [20 November 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 13610

assalamualaikum

வாழ்த்துகள்.

இது ஒரு நல்ல தொரு students programe, இதை போன்று எல்லா வருடங்களும் நடத்த அல்லாஹுதாள. அருள் புரிவான் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தமிழ்நாடு அரசு பொது நூலகத...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [20 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13613

மிகவும் ரம்மியமான சூழலில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

மாணவ கண்மணிகளுக்கு நூற்களின் மீதுள்ள ஆர்வத்தை இதுபோன்ற விழாக்களின் மூலம் தூண்ட முடியும். மேலும் பள்ளியில் சிறந்த நூலகத்தையும் அமைக்கவேண்டியது பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பு.

மாணவர்கள் என்பதால் ஒரு குறிப்பிட்ட வட்டத்தை சார்ந்த நூற்களை மட்டுமே வாசிக்கவேண்டும் எனபது போன்ற பழைய சித்தாந்தத்தை எல்லாம் தூக்கி கடாசிவிட்டு எல்ல நூற்களையும் எல்லோரும் வாசிக்கலாம் வாசிக்கவேண்டும் என்பதை ஒரு பிரகடனமாகவே ஆசிரியர்கள் அறியத்தரவேண்டும்.

தமிழகத்தின் பல இடங்களிலும் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து செல்லவேண்டும். அங்கேயே கூட புத்தகங்களை கொள்முதல் செய்யலாம். பள்ளி பாடபுத்தகங்கள் என்ற கிணற்றுக்கு வெளியே மாணவ சமுதாயத்தை இழுத்து கொண்டுவருவது நம் அனைவரின் பொறுப்புமாகும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நகரமன்ற தலைவர் திருமதி ஆபிதா அவர்களை நீங்கள் நடத்தும் இவ்விழாவில் பங்கு பெற செய்யாமல் இருந்ததின் உங்கள் உள் நோக்கம் என்ன..?
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [21 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13630

நூலக வாசகர் வட்டத்தின் மேல் உள்ள அனைவர்களின் நன்மதிப்பும் போய்விட்டது என்றே கருதுகிறேன்.. சில சுய நல வாதிகளின் சுய வட்டத்துக்குள் நூலக வாசகர் வட்டம் செயல் பட்டதினால்..!

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் தேசிய நூலக 44ஆவது வார விழா..! தனியார் நடத்தும் நூலக விழா அல்ல...!

நகர்மன்ற தலைவர் ஆபிதாவின் தந்தை பாளையம் இப்ராஹீம் அவர்கள் பல வருடம் முன் காயல்பட்டின கிளை நூலக வாசகர் வட்டத்தை நிறுவியவர் (நிறுவனர்) மேலும் நூலக வாசகர் வட்டத்தின் (தலைவர்) தலைவரும் ஆவார் சில மாதமாக அவர் உடல் நல குறைவால் வீட்டில் ஓய்வில் இருக்கிறார் அவரால் இவ்விழாவில் கலந்து கொள்ள முடியாமல் இருக்கலாம் ஆனால் ஓய்வில் இருக்கும் நூலக வாசகர் வட்ட தலைவரின் மகள் சமூக சேவகி இந்நாள் நகரமன்ற தலைவர் திருமதி ஆபிதா அவர்களை நீங்கள் நடத்தும் இவ்விழாவில் பங்கு பெற செய்யாமல் இருந்ததின் உங்கள் உள் நோக்கம் என்ன..?

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் பழையதை (நூலக வாசகர் வட்டத்தை நிறுவியவரை) மறந்து இன்று புதியதாக காட்சி தரும் சுய நல செல்வந்தர்கள் பின்னால் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள்... இந்த செயல் வாசகர்கள் அனைவர்களுக்கும் வருத்தத்தை அளிக்கிறது...

நூலக வாசகர் வட்ட நிறுவனர் மற்றும் அதன் தலைவர் ஜனாப் பாளையம் இப்ராகிம் அவர்களின் மகள் திருமதி ஆபிதா அவர்களை இவ்விழாவில் பங்கு பெற செய்யாமல் இருந்ததில் உங்கள் காரணங்கள் மற்றும் கருத்துக்களை இங்கே பதிவு செய்து விளக்கம் தர முடியுமா ? என வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆசிரியர் அப்துல் ரஸாக் அவர்களையும் மற்றும் அரசு நூலகர் அன்பு தம்பி முஜீப் அவர்களையும் மிக தாழ்மையாக கேட்டு கொள்கிறேன்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் மிதமழை!  (20/11/2011) [Views - 3368; Comments - 1]
நள்ளிரவில் சிறுமழை!  (18/11/2011) [Views - 3372; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved